Mar 4, 2017

சே+அட்டை



ஒரு பேஷனுக்காக சே.குவேராவின் டீ சர்ட்டுகளை அதிகம் அணிந்து இளைஞர்கள், போராளியான அவரை ஒரு பேஷன் மாடலாகவே  மாற்றிவிட்டார்கள். துரைப்பாக்கம் டோல் கேட் அருகில் உள்ள ஒரு துணிக்கடைக்கு பெயரே "சே பேஷன்ஸ்". கம்பீரமாய் பேனரில் புகை விட்டுக் கொண்டிருக்கிறார் சே.

சே பெயரில் ஒரு சலூன் ஆரம்பித்தாலும், இளைஞர்களிடையே அமோக வரவேற்பு இருக்கும் என்று கருதுகிறேன்.

'சே' யை கூகுளில் தேடினால், அவர் புகை பிடிக்கும் போட்டோ தான் அதிகம் வருகிறது. அவரது 'தம்' நண்பர் பிடல் காஸ்ட்ரோவும் அப்படி தான். இவர்கள் இருவரும் அதிகம் புரட்சி செய்தார்களா? இல்லை புகைப்பிடித்தார்களா? எனும் அளவுக்கு நமக்கு சந்தேகம் வருகிறது.

ஸ்டைலாக புகைப்பிடிப்பது போல் இருக்கும் இவரது போட்டோ, தமிழக இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதால்,  இந்த டீசர்ட்டுகளை எதிர்த்து "ராமதாஸ் அன்ட் சன்ஸ்" கம்பெனி அறிக்கை விட முன் வர வேண்டும்.

சே குவேராவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டை படத்தில், புகை பிடிப்பது போல இருக்கும் அவரது படத்துக்கு கீழே சிறிய எழுத்தில் "புகைப் பிடிப்பது, புற்று நோயை உண்டாக்கும் " என்று போடவும் தமிழக அரசு ஆணை இட வேண்டும். செயின் ஸ்மோக்கர்கள் புத்தகம் படிக்க மாட்டார்களா?

இங்கு, சமீபத்தில் இலக்கிய உலகில் நடந்த "அட்டைப்பட" சர்ச்சையை முன் வைக்கிறேன்.

என்னை பொறுத்த வரை புத்தகத்தின் அட்டைப்படம், அதன் கருத்தாக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்

புகை பிடிப்பதற்கும், புரட்சிக்கும் என்ன சம்பந்தம்?
அது படிக்க போகும் வாசகனை திசை திருப்பாதா?
சே-வின் கையில் இருக்கும் சுருட்டை எடுத்து விட்டு, ஒரு உடை வாளையோ, குறுந்துப்பாக்கியையோ(Short Gun) கொடுப்பது தானே பொருத்தமாகும். இல்லையெனில் புரட்சி தலைவர் விஜயகாந்தைப் போல சே-வின் கண்ணை சிவக்கவாவது வைக்க வேண்டும். அட்டையை பார்க்கும் போதே, புரட்சி உணர்வு தூண்டப் பட வேண்டும்.

பள்ளிக்கூடம் படிக்கையில், எனக்கு அடுத்த வகுப்பில் படிக்கும் எனது சகோதரியின் பாட புத்தகத்தையே ஒவ்வொரு வருடமும் பயன்படுத்த நேரிடும். பெரும்பாலும் அட்டையே இருக்காது. சில முறை, பொருளடக்கமும். அதனால் அறிவியல் தேர்வுக்கு, வரலாற்று புத்தகத்தை எடுத்து சென்று பெயிலான துயர வரலாற்றுச் சம்பவங்கள் என் வாழ்வில் நடந்துள்ளன.

அதனால் தான் சொல்கிறேன், அட்டைப்படம் முக்கியம். அட்டை அதை விட முக்கியம்.


Feb 10, 2017

கிச்சன் கிங்

கீற்றுவில் வெளியான எனது பதிவு




ஆண்களில் பெரும்பாலானோர், கல்யாணத்துக்கு முன்னரே நன்கு சமைக்க கற்றுக் கொண்டு விடுகிறார்கள். வரன் தேடுகையில், சமையல் கலையை 'எக்ஸ்ட்ரா கரிக்குலர்' ஆக்டிவிட்டியில் போட்டு கொள்ளலாம். பெண் பார்க்கும் படலத்தின் போது "பையனுக்கு சமைக்கத் தெரியுமா?" என்று நேரடியாகக் கேட்க முடியாமல், "பையன் ஹோட்டல்ல 'தான்' சாப்பிடுறாரா?" என்று அழுத்திக் கேட்டு சாமார்த்தியமாய் பதில் வாங்கி விடுகிறார்கள் பெண் வீட்டார். மேலும் "எங்க பொண்ணு சமையல் கட்டுக்குள்ளே தண்ணி குடிக்க மட்டும்தான் வருவா" என்று சொல்லிவிட்டு பெருமை பொங்க சத்தமாய் சிரிக்கிறார்கள். சமையலும், 'சமையல் மந்திரமும்' ஆண்கள் தான் கற்றுத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். கொஞ்சம் தெரிந்தாலும், எதுவுமே தெரியாதது போல் தான் நடிப்பார்கள்.

வேளச்சேரி கிராண்ட் மாலுக்கு எதிரில் இருக்கும் 'அப்பா சுட்ட தோசை' என்ற ரெஸ்ட்டாரெண்டே தற்போது சூழ்நிலை மாறி விட்டது என்பதைக் கண்கூடாக உணர்த்துகிறது.

ஆனால் நான், கடலைப் பருப்புக்கும், துவரம் பருப்புக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தெரியாத அப்பாவி. சமையல் ஷோ, எனக்கு பாகற்காய். கிச்சன் சூப்பர் ஸ்டார் கூட, அதில் வரும் தக்காளி பிகர்களுக்காக தான் பார்த்திருக்கிறேன். கடைசி வரை கிரிஜாஸ்ரீக்காக 'சமையல் மந்திரம்' பார்த்த அனுபவம் மட்டுமே இருந்ததால், திருமணத்திற்குப் பிறகு என் மனைவி 'விம் பார்' யை என் கையில் கொடுத்து, இந்த கருப்பு எம்ஜியார் குண்டாவெல்லாம், வெள்ளை எம்ஜியார் போல பளபளவென்று மின்னவேண்டும் என்று சொல்லி விட்டாள். தினமும் அவள் சமைத்தவுடன், ஆபிஸ் கிளம்புவதற்குள் பாத்திரத்தை எல்லாம் கழுவி விட்டுச் செல்ல வேண்டும். எங்களுக்குள் சிறு ஊடல் வந்தால், அன்று வேண்டுமென்றே கழுவாமல் சென்று அவளுடன் 'அறப்போர்' செய்வேன். இரவு வீட்டுக்கு வந்து எண்ணையில் போட்ட கடுகாய் வெடிப்பாள். இரவு 'ஒத்துழையாமை போராட்டம்' நடத்துவாள்.

இதைத் தவிர, காய்கறி நறுக்குவது, தேங்காய் துருவித் தர சொல்வது என ஒரு மருமகளைப் போல வேலை வாங்குவாள். ஒரு பக்கம் கண்ணை கசக்கிக் கொண்டு நான் வெங்காயம் வெட்டி கொண்டிருக்கும் போது, அவள் அந்தப் பக்கம் மாமியார் கணக்காய் சீரியல் பார்த்து கண்ணு வேர்த்துக் கொண்டிருப்பாள். அவ்வப்போது குக்கர் விசில் எண்ணும் வேலையும் கொடுக்கப் படும். புத்தகம் எழுதி, புக்கர் விருது வாங்கும் கனவையெல்லாம் தேங்காயைப் போல இரண்டாய் உடைத்து விட்டாள். 'வீட்டுச் சாப்பாடு' எனும் ஒரே காரணத்திற்காக இதையெல்லாம் பொறுத்துக் கொண்டேன்.

திருமண பந்தத்தின் உன்னதமே, இருவரின் நிறை குறைகளை ஏற்றுக் கொண்டு, பரஸ்பரம் உதவி செய்து கொள்வது தான். இப்படியாக எனக்கு அவள் சமையலைக் கற்றுத் தர, அவளுக்கு நான் சமையல் மந்திரத்தைக் கற்றுத் தந்தேன்.

மந்திரம் வேலை செய்து அவள் ஊருக்குச் சென்ற பின், கற்றுக் கொண்ட வித்தையெல்லாம் மொத்தமாக இறக்க முடிவு செய்து கிச்சனுள் நுழைந்தேன். சிறு வயதில் எக்ஸாமுக்கு செல்லும் முன் சரஸ்வதி சாமியைக் கும்பிட்டு விட்டுப் போகச் சொல்வார்கள். மனப்பாடம் செய்தது மறந்து விட்டால், 'சரசு' கூட இருந்து பிட் எடுத்துக் கொடுக்கும் என்ற நம்பிக்கை. அது போல நான் தினமும் அடுப்பை ஆன்  செய்யும் முன் அந்த அன்னபூரணி தெய்வத்தை வணங்கி விட்டு தான் தொடங்குவேன். அன்னபூரணியின் அருளில் தினமும் நன்றாகவே சமைப்பதாகத் தோன்றியது. என் வீட்டு ஓனர் அவ்வப்போது எட்டிப் பார்த்து "ஏன்டி, இந்த தம்பி சமைக்கும்போது எப்புடி வாசம் வருது! நீ ஒரு நாளாவது இப்படி சமைச்சிருக்கியா?" என்று தன் மனைவியைப் பார்த்துக் கேட்பார். இந்தப் பெரிசு நம்மைக் கலாய்க்கிறதா? என்று சந்தேகமாய் இருக்கும். அதனால், ஒருநாள் சமைத்ததில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு போய் அவரிடம் கொடுத்து விட்டு வந்தேன். இப்போதெல்லாம் அந்த ஓனர் என் சமையலில் மூக்கை நுழைப்பதில்லை. சாதாரணமாய்ப் பேசும் போது கூட, ஆங்கிலப் படத்தில் வருவது போல, முகம் கொடுக்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டு "என்னப்பா ஆபிசுக்குக் கிளம்பிட்டியா?" என்று கேட்கிறார்.

தற்போது, மனைவி ஊரிலிருந்து வரட்டும் என்று காத்திருக்கிறேன்.

அடுத்த புத்தகக் கண்காட்சிக்கு, நளபாகம் தயார் ஆகிக் கொண்டிருக்கிறது. தோழர், உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.


Dec 27, 2016

S3 (பாயிலர் அலர்ட்)

இந்த பதிவு, சிங்கம் 3 டீசர் பார்த்து பார்வை மற்றும் கேட்கும் திறன் இழந்தவர்களுக்காக சமர்பிக்கப் படுகிறது.



சிங்கம் 3 வழக்கம் போல ஆக்சன் அதிரடி படம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு பெரிய சர்பிரைஸ் காத்திருக்கிறது. ஆக்சன் படமென்று மக்களை நம்ப வைப்பதற்காக, ஹரி கொஞ்சம் செலவு செய்து டீசர் வெளியிட்டிருக்கிறார். படத்தில் சூரி, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி என இத்தனை பேர் இருப்பதை வைத்தே கொஞ்சம் யூகிக்கலாம்.

ஆமாம், இது பக்கா ரொமான்டிக் காமெடி மூவி. இயக்குனர் பேரரசுவை போல, ஹரியும் படத்தின் ஆரம்பத்தில் திரையில் தோன்றி, "யாரும் நெனச்சு பாக்கலைல? கர்ச்சீப்ல கண்ணை துடைச்சு கிட்டே, குலுங்கி குலுங்கி சிரிச்சு பீல் பண்ற மாதிரி, ஒரு ரொமான்டிக் காமெடி படம் கொடுப்பேன்னு யாரும் நெனச்சு பாக்கலைல?" என்று பன்ச்சை தெறிக்க விட்ட பின் தான் டைட்டில் கார்டே வருகிறது.

இம்முறை ஸ்ருதி ஹாசனை சேர்த்து கொண்டு, முதன் முதலில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் செய்திருக்கிறார். கதையில் அனுஷ்கா, சூர்யா, ஸ்ருதி ஹாசனுக்கிடையே ஒரு அருமையான முக்கோண காதல் கதை உள்ளது.
குழந்தை பிறப்பை வழக்கம் போல தள்ளிப் போட்டு விட்டு, துரை ஸ்டேஷனில் ஓவர் டைம் பார்க்க, தினமும் பேஸ்புக்கில் காலம் கழிக்கிறார் அனுஷ்கா.

அப்போது ஃபேக் அக்கௌன்ட் வைத்து பேஸ்புக்கில் பிகர்களை மடக்கும் ஸ்ருதிஹாசனிடம் சாட்டிங்கில் மாட்டுகிறார். தனிமையில் வாடும் அனுஷ்க்காவை மெல்ல மெல்ல பேசி பேசியே வழிக்கு கொண்டு வருகிறார். அதற்கு சாருவின் சாட் ஹிஸ்டரியிலிருந்து சில குறிப்புகள் எடுத்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் Auto login ஐ தெரியாமல் ஆன் செய்து வைத்திருந்த அனுஸ்காவின் பேஸ்புக்கை தற்செயலாக பார்த்து கொண்டிருந்த துரை சிங்கத்திற்கு, ஹாசனிடமிருந்து "Hi Dear, What are you wearing now?" என்று மெசேஜ் வர, உடனே தான் அணிந்திருந்த நண்டு மார்க் லுங்கியை (விளம்பரம்) குனிந்து பார்த்து விட்டு, பின் அது தனக்கு அனுப்பிய மெசேஜ் இல்லை என்று தெரிந்து அலர்ட் ஆகிறார்.

படத்தில் ஹாசனுக்கும், அனுஷ்காவுக்கும் ஒரு மஜாவான டூயட் இருக்கிறது, ஒரு நீளமான லிப் கிஸ் உட்பட. கடைசியில் அனுஷ்கா யாருக்கு என்பதில் துரை சிங்கத்துக்கும், ஸ்ருதி ஹாசனுக்கும் இடையில் பெரிய பைட்டே உண்டு. மொத்தத்தில் கொரியன் பட தரத்தில் நிறைவான சந்தோசத்தை கொடுக்கும் பீல் குட் குடும்ப மூவி.

சிங்கம் 2 - விமர்சனம்


Nov 25, 2016

செவ்வாய்க்கு ஒரு பயணம் - ஆபாயில்

ந்தியர்கள் ஏன் அமெரிக்கர்களை விட திருமணத்திற்கு அதிகம் செலவு செய்கிறார்கள்?

சிம்பிளான காரணம், நாம் வாழ் நாளில் ஒரு முறை தான் திருமணம் செய்கிறோம் அவன் அடுத்த சில கல்யாணத்துக்கும், சில ஜீவனாம்சத்திற்கும் போக, மிச்சத்தை தான் செலவு செய்கிறான். நமக்கு கல்யாணம் என்பது ஒரு வழி பாதை.

இருக்கின்ற எல்லா நகையையும், பணத்தையும் சுங்க வரியாய் கட்டி விட்டு, இல்லறத்தின் உள்ளே நுழைந்து விடுகிறோம். பின்னால் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" என்று அங்கேயே கடந்து சாக வேண்டியது தான். திரும்பி வர முடியாது. புல் அடித்து விட்டு வந்து ரவுசு பண்ணும் புருஷனை, கல்லை போட்டு கொன்று விடும் மனைவிமார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்படி இருந்தாலும் சாவு கன்பார்ம். இந்தியர்களுக்காக தான், ஆங்கிலத்தில் வெட்லாக் (Wedlock) என்று பொருள் படும் படி ஒரு வார்த்தையை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இது ஒரு வகையில், 2024 இல் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப நாசா பிளான் செய்துள்ள ஒரு வழி ராக்கெட் பயணம் போல தான். அந்த ராக்கெட்டில் அனுப்ப மொத்தமாக 100 பேரை நாசா தேர்வு செய்துள்ளது. அதில் மூன்று பேர் இந்தியர்கள். நாம் நினைத்தது போல அந்த மூன்று பேரும் பேச்சுலர் பார்ட்டிகள். இதில் செல்ல திருமணம் ஆனவர்கள் பெரிதாய் நாட்டம் கொள்ளாத காரணம், அவர்கள் அல்ரெடி அது போல ஒரு கிரகத்தில் மாட்டிக் கொண்டிருப்பது தான்.

நமக்கும் செவ்வாய்க்கும் அதிக ரத்த சம்பந்தம் இருக்கிறது. செவ்வாய் தான் நமது திருமணத்தையே முடிவு செய்கிறது.

"பையனுக்கு செவ்வாய் இருக்கா?"
"இல்லீங்க சிகரெட் குடிச்சு குடிச்சு கருப்பாக்கி வச்சிருக்கான்"
"பெண்ணுக்கு செவ்வாய் இருக்கா?"
"ஆமாங்க தினமும் லிப்ஸ்டிக் போடுறா" என்று ஜோக்கெல்லாம் அடிக்க முடியாது.

எவ்வளவு பெரிய இடம் என்றாலும் செவ்வாய் தோஷம் ஒத்து வர வில்லை என்றால், we move forward. செவ்வாய் தோஷம் தான் நமக்கு aptitude டெஸ்ட்.  அதில் பாஸ் ஆனால் தான் குரூப் டிஸ்கஷன், HR இண்டெர்வியூ எல்லாமே.

செவ்வாய்க்கு போக போட்டி போட்டு கொண்டு 39 அமெரிக்கர்கள் செலக்ட் ஆனதற்கு ஒரு காரணம் இருக்கிறது. என்னவென்றால் அவர்களுக்கு இந்தியர்களை போல ஒரு கல்யாணம் மட்டும் செய்து வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை. அனால் இங்கிருக்கும் இந்தியன் அமெரிக்கர்களை போல பல திருமணம் செய்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை படுகிறான்.

Poor Americans. :-P


டிட் பிட்ஸ்:
----------------

மெடிக்கல் அஸ்ட்ராலாஜியின் படி, ஒவ்வொரு கிரகத்திற்கும் மனிதனுடைய உடல் பாகங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அதன் படி நம்முடைய ரத்தத்திற்கும் செவ்வாய்க்கும் பெரிய சம்பந்தம் இருக்கிறதாம். நாம் அதனால் தான் திருமணத்திற்கு செவ்வாய் பொருத்தம் பார்க்கிறோம். செவ்வாய் இருந்தால் மைனஸ் ரத்தம் வகை, செவ்வாய் இல்லாதவர்களுக்கு பிளஸ் ரத்தம் வகை என்கிறார்கள். எந்த அளவுக்கு உண்மை என்று தெரிய வில்லை. ஆனால் பண்டைய காலத்திலிருந்தே நாம் பிளட் டெஸ்ட் செய்து வந்திருக்கிறோம். வேறு வேறு ரத்த வகை இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டால், குழந்தைக்கும் தாய்க்கும் உடல் ரீதியான பிரச்சனைகள் கர்ப்ப காலத்தின் போதும், டெலிவரியின் போதும் வரும் என்று சொல்வார்கள்.

நம்முடைய முன்னோர்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்திருக்கலாம் என சொல்லும்  டாகுமெண்டரி படங்கள் நிறைய யு-டியூபில் இருக்கிறது. நாமெல்லாம் பூமிக்கு வந்த ஏலியன்கள் தான். மனிதர்கள் ஏலியன்களை வெளியே தேடுகிறார்கள். ஆனால் கடவுளும் ஏலியனும் நமக்குள்ளே தான் இருக்கிறார்கள்.

http://astrobix.com/learn/411-body-parts-and-disease-related-to-different-planets.html

http://sexjothidam.blogspot.in/2016/03/manglik-astrology-what-is-mangal-dosha.html

https://www.youtube.com/watch?v=xSY6on-M9Vw



ம்சை அரசனின் அடுத்த அட்டாக்
------------------------------------------------------

அரசர் மோடி அடுத்ததாய் மிக பெரிய அதிரடி பிளானை வைத்திருக்கிறாராம். தேச பக்தர்கள் எல்லோரும் பரபரப்பாக பேசி திகில் கிளப்புகிறார்கள். அது என்னவென்று வட்ட செயலாளர் வண்டு முருகன் தமக்கு ஒற்றன் மூலம் கிடைத்த தகவலை நமக்கு முன்பே சொல்லி விட்டார். அதற்கு தான் முன்னேற்பாடாக "ஜன் தன் யோஜனா" திட்டத்தின் மூலம் எளிய மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு உருவாக்கி கொடுக்கப் பட்டு, ஜியோ சிம்மும் இலவசமாக வழங்கப் பட்டுள்ளன.

டிசம்பருக்கு பிறகு, இவர்கள் அனைவரும் "ரம்மிசர்க்கிள்.காம்" இணைந்து ஆன்லைனில் ரம்மி விளையாடலாம். இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காத இளைஞர்களுக்கும், வீட்டில் சீரியல் பார்க்கும் இல்லத்தரசிகளுக்கும், இதன் மூலம் சம்பாத்தியம் உண்டாகும். வருமான வரி TDS யில் பிடித்தம் செய்யப் பட்ட பின்தான், வங்கி கணக்குகளுக்குள் வரவு வைக்க படும்.

ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கு மானிய விலையில் ரிலையன்ஸ் கம்பனி மூலம் விற்கப் படும். ரம்மி விளையாட தெரியாதவர்களுக்கு திருபாய் அம்பானி இன்ஸ்டியூட் மூலமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப் படும். ஊருக்கு ஒதுக்கு புறம், மரத்தடியில் சாராயம் குடித்து விட்டு கவர்மெண்டை ஏமாற்றி ரம்மி விளையாடி கவர்மென்டுக்கு கப்பம் கட்டாமல் தப்பிப்பவர்களுக்கு பல வருட சிறை தண்டனை கிடைக்கும். இவர்களை பிடிப்பதற்கென்றே போலீசார் ரோந்து வாகனங்களில் சந்து பொந்துகளில் சுற்ற போகிறார்கள்.

தமிழ்நாட்டின் விளையாட்டு என்பதால்,  "மங்காத்தா" தடை செய்ய படும். அதை மீறி விளையாடுபவர்களும், "மங்காத்தாடா" என்று தேவையே இல்லாமல் அடிக்கடி சொல்பவர்களும், தேச விரோத சட்டத்தின் மூலம் சிறையில் அடைக்கப் படுவார்கள்.

ஏக் பாரத், ஏக் கேம்.

இந்தியா வல்லரசு ஆகணும்னா, உங்க மம்மி கூட, ரம்மி ஆடி தான் ஆகணும்.

மோடிடா! ரம்மிடா! ரம்பாடா! ரம்மியா கிருஷ்ணண்டா!


RJ பாலாஜாம்பி
-----------------------

ஹாலிவுட்டில் வெளி வரும் ஜாம்பி, வேம்பயர் வகை படங்களில் வருவது போல, ஜாம்பிகளை எதிர்த்து போராடி அதனை கொல்லும் கதாபாத்திரம் ஒன்று, திடீரென்று அவைகளிடம் கடிபட்டு இன்னுமொரு ஜாம்பியாக மாறி, மற்ற மனிதர்களை துரத்தி பிடித்து கடிக்க விரட்டும்.

ஆர்ஜே பாலாஜி, அப்படி கடி பட்ட ஒரு ஜாம்பி தான். இப்போது அவர் நடிக்கும் மொக்கை படங்களை எல்லாம் நம்மை பார்க்க சொல்லி தொலைக்காட்சிகளில் வந்து தொல்லை படுத்துகிறார். இப்போது அரசியல்வாதிகளுக்கு ஆதரவாய் சாமானிய மக்களுக்கு கிராஸ் டாக்கில் வந்து தேசபக்தியை வேறு தூண்டி விடுகிறார். நாட்டுக்காக கொஞ்சம் ரத்தம் கொடுப்பதில் தப்பு இல்லை என்கிறார்.

ஆனால் சினிமாக்காரர்கள், பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறார்கள். வழக்கமாய் சினிமாக்காரர்கள் தான் மற்றவர்களுக்கு பாராட்டு விழா வைப்பார்கள். இம்முறை நாம் தான் அவர்களை பாராட்ட வேண்டும். பென்டாஸ்டிக் ஜாப்!

"கடவுள் இருக்கான் குமாரும், நூத்தி இருபது ரூபாயும்" என்று நாம் எழுத வேண்டிய நிர்பந்தம் வந்து விட்டது.

Once a Joker. Always a Joker


Journey to the Mars (English version )
-------------------------

The simple reason why Indians spend more money than Americans for marriage is, we do it only one time in our life time whereas they have to keep something for the next one and for the alimony.

For most Indians, the marriage is one way road. Pay everything at the toll and go inside. If something happens wrong, just die there. That is why they invented the word 'Wedlock' for Indians.

Its like the one way trip to MARS that NASA has planned for 2024. Out of 100 people, only 3 in India got selected for the trip and as expected all 3 are single. we married people won't be interested in that as we already on one.

And importantly, the MARS (sevvai) is deciding factor in our marriages. Its an aptitude test for the selection. If you pass that only, you will go to group discussion, HR interview and all. Yes, we have blood relation to the Mars.

No wonder there are 39 Americans in that list. They just want to see how it feel to be an Indian. But every Indian want to see how it feel to be an American.

Poor Americans. :-P

Titbits:
--------

In medical astrology, all the planets represent some or the other part of your body. Mars represent human blood. That's the reason we are checking "sevvai dosha" or "manglik dosha" before doing marriage. Its blood test invented for us by our ancestors. "sevvai dosha" means a negative blood group, otherwise its a positive blood group. If different blood group couple get married, then the mom and baby will have severe health issue during pregnancy and delivery.

There are many documentary movies in You Tube which says our ancestors could have come to earth from Mars. We are all aliens from Mars as per that theory. Humans search aliens outside. But both God and Aliens are inside of us)



Aug 7, 2016

~ இது தங்கமான உறவு ~ (18+) - ஆபாயில்

பேஸ்புக்கில் எழுதுவது என்பது செக்ஸை போல தான்.

எழுதியது கொஞ்சம் சுமாராக இருப்பது போல் தோன்றியவுடனே, இன்ஸ்டன்ட் லைக்கிற்கு ஆசைப்பட்டு, அவசரத்துடன் பதிவிட்டு விடுவது ஒருவகை. நிறைய பேருக்கு இந்த ப்ரீ எஜாகுலேஷன் (pre-ejaculation) பிரச்சனை இருக்கிறது. தினமும் ஐந்து முதல் பத்து பதிவுகள் எழுதினாலும் நமக்கும், படிப்பவர்களுக்கும் திருப்தி இருக்காது. நம் மேல் இருக்கும் அபிப்பிராயம் போய் விடும். கஸ்டமர்களையும் இழக்க வேண்டி வரும். இவர்கள் ஒரு நல்ல பேஸ்புக் எழுத்தாளரை பார்த்து சிகிச்சை பெற்று கொள்வது நல்லது.

எழுத ஆரம்பிப்பதற்கு முன் எதை பற்றி எழுத போகிறோம் என்பதை, சிறிது நேரம் செலவழித்து 'போர் பிளே' (fore play) செய்ய வேண்டும். போர் பிளேயுடன் தான் எழுதவே செல்ல வேண்டும். முக்கியமாய் விரலை கீ போர்டில் நிலை நிறுத்தவும். கீபோர்டில் வேலை செய்யும் பொழுது மவுஸின் அருகில் கை செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் விரல் 'Post' யை அமுக்கி விடும்.

எழுதிய பின் எடுத்தோம் அவிழ்த்தோம் என்று செயல் படாமல், மலையாள படங்களில் வருவது போல 'கீழிருந்து மேலும்', 'மேலிருந்து கீழும்' சிலமுறை படித்து எழுத்து பிழை, இலக்கண பிழைகளை சரி பார்த்துக் கொள்ளவும். வெளியிடும் ஆசையை அடக்கி, தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு  Stop and Start விதிகளை பயன்படுத்தி இன்னும் மெருகேற்றினால் 'கை' Image result for like icon smallமேல் அமோக பலன் கிடைக்கும்.

எழுதியது உங்களுக்கு திருப்தி இல்லாத பட்சத்தில் வரும் "ஆஹா அருமை", "சூப்பர் தல" போன்ற பொய் (Fake) பாராட்டுகளில் ஆறுதல் அடையாமல் அதை தவிர்க்க தீயாய் வேலை செய்யவும். சைஸ் முக்கியமில்லை என்று பொதுவாக சொல்லப் பட்டாலும், ஆவரேஜ் இந்தியன் சைஸாக (ஆறு  வரிகளுக்கு குறையாமல்) இருப்பது இருவருக்குமே நல்ல சுகானுபவமாக இருக்கும். இரண்டு மூன்று வரிகளில் எழுதுவது குயிக் செக்ஸ் போல. திருப்தி இருக்காது.

பதிவு எவ்வளவு பெரிதாய் இருந்தாலும், கன்டென்ட் சிறப்பாய் இருந்தால் வரவேற்பு இருக்கும். தமிழ் பிரபாவுக்கும், முரளி கண்ணனுக்கும் இருக்கும் ரசிக பட்டாளங்களை பார்த்தால் புரியும். 'நுனி' புல் மேய்ந்துவிட்டு எஸ்கேப் ஆகிறவர்களை புறந்தள்ளி விடலாம். எவ்வளவு 'பெரிதாய்' இருந்தாலும், பயப்படாமல் படிப்பவர்கள் தான் நமது இலக்கு.

அதிகபட்சமாக வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் வெளியிடுவது ஆரோக்கியமான உறவுக்கு வழி வகுக்கும். கவனித்து பாருங்கள் நல்ல திறமையான எழுத்தாளர்கள் அவ்வளவு தான் எழுதுவார்கள். வாசகர்களுக்கும் அந்த இடைவெளி தேவை. அடிக்கடி செய்தால் சர்பிரைஸ் இருக்காது.

யாருமே படிக்காமல் லைக்கே வராமல் சுயஇன்பம் செய்வது போல, நீங்கள் எழுதி நீங்கள் மட்டுமே படித்து கொண்டிருந்தாலும், அதை விடாமல் தொடருங்கள். தற்போது பலன் இல்லையென்றாலும், பின்னாளில் கண்டிப்பாக பெரிய பலன் இருக்கும். கொஞ்சம் பிடித்து விட்டால், புதையல் தோண்டி படிப்பார்கள்.

எழுது கோலை எடுங்கள், உறவை பலப் படுத்துங்கள்



பாலி படத்தின் கதை  (பாயிலர் அலர்ட்)

தங்கள் ஆதர்ச கதாநாயகன் நடித்த படத்தின் டிக்கெட் கொள்ளை விலையில் விற்க படுவதால், தலித்துகள் அப்படத்தை பார்க்க முடியாமல் கஷ்டப் படுகின்றனர். ஐ.டி துறை அரை டவுசர் பையன்களும், லெக்கின்ஸ் லேடிகளுமே முக்கால் வாசி டிக்கெட்டுக்களை புக் செய்து விடுகிறார்கள். வேறு வழியின்றி படம் பார்க்க சில நிஜ கபாலிகள், ஏடிஎம் மெஷினை உடைத்து திருடுகிறார்கள். அதை செய்ய முடியாத மற்ற கபாலிகள், ஏடிஎம் கார்டு வைத்திருப்புவர்களை மிரட்டி கொள்ளை அடிக்கின்றனர். அப்பாவிகள் சிலர், அம்மாவின் தாலியையும் பொண்டாட்டியின் தாலியையும் திருடி சென்று விற்கின்றனர்.

இந்த அநியாயத்தை எல்லாம் எதிர்த்து போராட வருகிறான், தலித் நாயகன் கபாலி. டிக்கெட் விலையை குறைக்க சொல்லி தியேட்டர் முன் தீக்குளிப்பு போராட்டம் நடத்துகிறார். பெட்ரோலை தன் மேல் ஊற்றி விட்டு தீப்பெட்டியை கையில் வைத்து கொண்டு பூச்சாண்டி காட்டுகிறார். அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் சங்க கூட்டத்தில் இருந்து ஒரு தீக்குச்சி பறந்து வருகிறது. அப்போது கபாலி கப கபவென பற்றி எரிய, "நெருப்புடா, நெருங்குடா பார்ப்போம்" பாடல் துவங்குகிறது.

பாடல் முடிந்த பின், பாதி கருகிய பாடியை ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி செல்கின்றனர். அந்த நிலைமையிலும் "வருவேன்னு சொல்லு, திரும்பி வருவேன்னு சொல்லு" என்று பன்ச் டயலாக் பேசுகிறார். கடைசியில் உயிர் பிழைத்த கபாலி, திரும்பி வந்து மீண்டும் தீக்குளிக்க பெட்ரோல் வாங்க செல்கிறார். அதற்குள் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை அதிரடியாய் ஏற்றியிருக்கிறது கண்டு, வந்த வழியே திரும்பி விடுகிறார். எதுவும் செய்ய முடியாமல் கடைசியில் "அம்மா தியேட்டருக்கு" அனைவரையும் கூட்டி சென்று படம் பார்க்க வைக்கிறான். அதன் பின் மக்களை அடுத்த தேர்தலில், அம்மாவுக்கே ஓட்டும் போட சொல்லி விட்டு இமயமலைக்கு பயணம் செய்கிறான்.