Apr 20, 2011

நகுலன் என்றொரு அழகன்

என் அக்கா பையனுக்கு,



கன்னி ராசிதான்
இந்த கண்ணனுக்கு
கணக்கில்லை
பின்தொடரும் இளங் கன்னிகளுக்கு.


வேட்டையாடுவதில் மாவீரன்
இவனை கண்டாலே
நடுநடுங்கும்
சிங்கம் புலி கரடி (பொம்மை)கள்.


இவன் கை பட்டு
கவிழவே காத்திருக்கின்றன
சரியாக மூடப்படாத
பலசரக்கு டப்பாக்கள்.

நிற்கவே நேரம் இருக்காது
எந்நேரமும் இவன் பின்னாலேயே
ஓட வைத்துக் கொண்டிருப்பான்
பாட்டியையும் தாத்தாவையும்.

பார்க்கும் அநேக நேரம் 
பூனையை இவன் துரத்திக் கொண்டிருப்பான்.
சில நேரம் பூனை 
இவனை துரத்திக் கொண்டிருக்கும்.





Related post :  The Good Stranger: கார்த்திகா தீபா வாழ்த்துக்கள்

 


2 comments:

Anonymous said...

Nanraaka ullathu kavithai.....
Vetha. Elangathilakam.
Denmark.

ஜிஎஸ்ஆர் said...

ரசித்தேன் கண்ணனையும் கவிதையையும்!!

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்