உன்னை பார்த்து பழகிய நாள் முதலே
பல வண்ணங்களால்
எனது உலகையே
கலகம் செய்தாய்.
நீல நிறங்களால்
வான் நீலத்தையும் நீர்த்து போக செய்தாய்.
பச்சை நிறங்களில்
பசுமை புரட்சி செய்தாய்.
மஞ்சள் நிறத்தால்
சூரியனையும் சுருங்க வைத்தாய்.
சிவப்பு நிறத்தால்
எரிமலையை குமுற வைத்தாய்.
இன்னும் பல
பெயர் அறியபடாத நிறங்களில்
மலர்களை மதி
மயங்க வைத்தாய்.
இறுதியாக கரிய நிறத்தால்
என்னை முழுதாக
இருளில் மூழ்கடித்தாய்.
நிறங்கள் அற்று நான்.
கல்லூரி பேருந்து
உன் நிறுத்தம்
வருவதற்கு முன்பே
ஏறி அழகாய் அமர்ந்து கொள்கிறாய்
என் நினைவில்.
நீ வராத நாட்களில்
கல்லூரி பேருந்து
கரும் புகையை கக்கிக் கொண்டு
என் உடலை ஏற்றி செல்லும்
ஓர் சவ ஊர்தியாய்
உருமாற்றம் கொள்கிறது.
உனை காணும் நோக்கிலே
தினமும் கல்லூரி வருவதால்
வருடா வருடம்
தவறாமல் பெறுகிறேன்
வருகை பதிவேட்டில்
நூறு சதவிகிதம்.
நீ இருக்கும் வரை
கல்லூரி பேருந்தின்
ஜன்னலோர இருக்கைகள்
சிறிதும்
என் கவனம் ஈர்ப்பதில்லை.