Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sep 5, 2012

Dictator (2012) - வயது வந்தோருக்கு மட்டும்




இது ஒரு சர்வாதிகாரியின் உண்மை வாழ்க்கை வரலாற்றை பற்றி சொல்லும் படம் இல்லை. மாறாக ஒரு சர்வாதிகாரியின் செயல்களை காமெடியாக்கி வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் Satire வகை படம். You'll die laughing!!

இவரின் உண்மை பெயர் Sacha Baren Cohen. இதற்கு முன் இவர் நடித்த Ali G Indahouse, Borat, Brüno என அனைத்தும் இதே வகை படங்களே! இவரது படங்களில் அமெரிககா, ஐரோப்பியா, அரபு நாடுகள், ஹாலிவுட் நடிகர், நடிகைகள், gays என அனைத்தையும் கலாய்த்திருப்பார். Vulgar காமெடி அதிகமாய் இருக்கும். இவரது படங்களை பெண்கள் பார்க்காமல் இருக்க அறிவுறுத்துகிறேன்.

இந்த படத்தை, ஹிட்லரை போன்ற எந்த சர்வதிகாரி தன்னை கட்டுபடுத்திக் கொண்டு பார்த்தாலும் அசால்ட்டாய் சிரிக்க வைத்து விடும். ஆனால் இது லிபியா அதிபர் கடாபியை மையப் படுத்தி எடுத்ததாக சொல்லப் படுகிறது.

அலாதீன் என்ற சர்வதிகாரி "Wadia" என்ற நாட்டை சர்வதிகார ஆட்சி செய்து வருகிறார். அவருடைய பாதுகாப்புக்கு 30 பேர் கொண்ட பெண்கள் படை இருக்கிறது. அவர்கள் எல்லோரும் Virgins.

அவர் என்னவெல்லாம் செய்கிறார்?
  • அவரே சொந்தமாய் ஒரு ஒலிம்பிக்ஸ் விளையாட்டை நடத்துகிறார்.
  • வாடியா-வின் மொழியில் உள்ள சுமார் 300 வார்த்தைகளை, "அலாதீன்" என்று மாற்றுகிறார். அவற்றுள் Positive மற்றும் Negative வார்த்தைகளும் அடக்கம்.
  • மற்ற நாடுகள் தன் நாட்டின் மீது போர் செய்து ஆயில் வளங்களை கொள்ளையடிக்காமல் இருக்க Nuclear Weapon-களை உருவாக்குகிறார்.
  • சயின்டிஸ்ட் முதல் சாதாரண ஆள் வரை எதற்கெடுத்தாலும் execute செய்கிறார். 
  • ஒரு அமெரிக்க பெண்ணை லவ் செய்கிறார்.
  • ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார்.
  • உலக நாடுகளுக்கு சர்வதிகாரத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கிறார்.
  • இருந்தாலும், கடைசியில் Democracy-யை கொண்டு வருகிறார்.

ஏன் இதெல்லாம் செய்கிறார்? என்ன நடந்தது?




டவுன்லோட் லிங்க்:

 http://www.ahashare.com/torrents-details.php?id=263579

இந்த படத்திற்கு கலக்கலாய் ஒரு விமர்சனம் எழுதலாம் என நினைத்தேன் ஆனால் ரிசல்ட்= மொக்கை 

whatever, நேற்று நான் Shirin Farhad என்ற ஹிந்தி ரொமாண்டிக் காமெடி படத்தை பார்க்க நேர்ந்தது.

பாதியிலேயே நான்...

உர்ர்ர்...
உர்ர்ர்....
உர்ர்ர்...


வெகு சுமாரான ஸ்கிரிப்ட்.... வெகு சுமாரான நடிப்பு... நான் பார்த்ததும் சுமாரான பிரிண்ட்.

Totally Unrelated to comedy: 


BTW, What is Democracy?

Democracy is a hairy armpit.


Aug 31, 2012

பெண் பொம்மையின் கற்பை காப்பாற்றிய நாயகன் - Non Sense Talking

99.99 மில்லியன் ஹிட்சுகளை என் மேல் வாரி இறைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அடாசு பதிவுலக பெருமக்களுக்கும், மண்வெட்டி வாசகர்களுக்கும் கோடானு கோடி தாங்க்ஸ்!

This Post is strictly for Matured. தயவு செய்து படித்து விட்டு என்னுடன் யாரும் சண்டைக்கு வராதீர்கள்.


நேற்று இரவு, ஷாங்காய் என்ற சீட்டுக்கட்டு விளையாட்டை நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சமயத்தில், தற்செயலாய் கே.டிவி. யின் இரவு கொண்டாட்டத்தில் ஒரு தமிழ் சினிமா காட்சியை பார்க்க நேர்ந்தது. அது "கோ"மகன் ஜீவா அவர்கள் "ஆசை ஆசையாய்" நடித்த முதல் படம் (தேங்க்ஸ் டு விக்கிபீடியா).

நாயகி, ஒரு லேடிஸ் துணிக்கடையில் வேலை செய்கிறார். அப்போது அங்கு வரும் ஒரு ஆள், ஒரு பெண் பொம்மைக்கு அணிவித்திருக்கும் ஆடையை பார்த்து, அது பிடித்து போய் அதை எடுத்து கொடுக்க வேண்டி, நாயகியிடம் கேட்கிறார்.

அதற்கு, இந்திய கலாச்சாரத்தை கட்டி காக்கும் நம் நாயகி, பொம்மையின் ஆடையை அங்கேயே வைத்து கழட்டினால் பொம்மையின் கற்பும், அந்த ஆணின் மனமும் கெட்டு போய் விடும் என்ற காரணத்தால், "ஓகே. சார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. பொம்மையை மேல் மாடிக்கு எடுத்து கொண்டு போய், அதன் ஆடையை கழட்டி உங்களுக்கு பேக் செய்து தருகிறேன்" என சொல்ல,

வில்லனாக காட்டப்படும் அந்த ஆள், "இல்லை இங்கேயே வைத்து கழட்டி கொடுங்கள்" என வம்பிழுத்து அந்த பொம்மையின் ஆடையை பற்றி கிழிக்க முயற்சிக்க,

இதையெல்லாம் அங்கு ஒரு நாற்காலியில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த நம் ஆதர்ச நாயகன் ஜீவா, பொம்மைக்கு ஏற்பட போகும் அவமானத்தை தடுக்க பொங்கி எழ, அங்கே ஒரு பைட் சீன் ஆரம்பமாகிறது.

அதற்கு பிறகு கதையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான் ஷாக் ஆகி, அடுத்த சேனலுக்கு பயந்து ஓடி விட்டேன்.

அந்த சீனை தவிர, நான் படத்தை பார்த்தது இல்லை. நான் சொல்வது கொஞ்சம் மாறி இருக்கலாம். அதற்கு வருந்துகிறேன்.

அந்த பைட் சீனுக்கு பிறகு, நாயகனுக்கு நாயகியுடன் ஒரு டூயட் பாட்டு வந்திருந்திருக்கலாம். அதில் நாயகன் நாயகியின் இடுப்பில் ஊர்ந்து வாசம் பிடித்து, மேலேறி மார்பின் மேல் மையம் கொண்டிருந்திருக்கலாம்.

ஆனால் பொது ஜனத்துக்கு, ஒரு பொம்மையின் நிர்வாணத்தை பார்க்க கூட கட்டுப்பாடு உள்ளது.

இயல்பை கொஞ்சம் கூட பிரதிபலிக்காமல், அத்துமீறி காட்டப் படும் சினிமாக்கள் எல்லாமே நம்மை ஏமாற்றவே எடுக்கப் படுகின்றன. சினிமா எடுப்பவர்களுக்கு, "கவர்ச்சி", "மார்பு", "தொப்புள்" என்பவைகள் தான் பிரதானமாய் சோறு போட உதவும் விஷயங்கள்.

சுதந்திரமாய் செக்ஸ் செய்ய வழி இல்லாமல், எல்லைமீறி போய் கன்று குட்டியையும் கழுதையையும் புணர்ந்து கொண்டிருக்கும் நிலைமையில், திரையில் நடிகையின் ஒரு சாதாரண கிளிவேஜ் சீனை பார்த்தாலே, பக்கெட் பக்கெட்டாய் சலவாய் விட்டு ஏங்கி கொண்டிருக்கும் பரிதாபமான நிலைக்கு தள்ளப் படுகிறான் காமன்மேன்.

நம்மால் பண்ண முடியாததை நாயகன் பண்ணுகிறானே என்று அதை பார்த்து நாம் வியந்து கைதட்டி சந்தோசப்பட்டு கொள்கிறோம்.

மட்டன், சிக்கன் என வகை வகையாய் தின்றுவிட்டு, மிச்சமிருக்கும் எலும்பை நாய்களுக்கு போட்டு அவைகளை குதூகலப் படுத்துகிறவர்கள் தான் நம் சினிமாக்காரர்கள்.

மற்ற மீடியாக்களும் இவைகளை செய்தே, காசு பார்க்கின்றன.

தியானம் பற்றிய ஒரு செய்திக்கு, உள்ளாடையுடன் படு கவர்ச்சியாய் ஒரு பெண் உட்கார்ந்து தியானம் செய்வது போல படம் போட்டு வியாபாரம் செய்யும் "கவர்ச்சி ஆப் இந்தியா" நாளிதழ்

காசுக்காக ஒரு பெண் பல பேரை ஏமாற்றி திருமணம் செய்ததை, "செக்ஸ் வெறியில் பல பேரை ஏமாற்றி திருமணம் செய்த கேரளா பெண்" என்று மாற்றி தலைப்பு போட்டு ஆர்வத்தை தூண்டும் டினமலர்.

நமக்கெல்லாம் ஒரு சந்தோசமான செய்தி. என்னவென்றால்,

இன்னும் கொஞ்ச நாளில் ஸ்ரேயாவின் தொப்புளை, 3D-யில் பார்க்க போகிறோம்.

நடிகனுக்கு நிற்கவே முடியவில்லை என்றாலும்......

முப்பது வயது வரை ஒரு ஆண், பெண்ணை பற்றியும் செக்ஸ்சை பற்றியுமே கனவு கண்டு கொண்டிருக்கிறான். பிறகு அவனுக்கு திருமணம் ஆனவுடன், தூக்கமே வருவதில்லை. அதனால் அப்துல்கலாம் சொன்ன கனவு அவனுக்கு வர சாத்தியமே இல்லை.

நாம் இன்னும் மது அருந்தலாமா? வேண்டாமா? என்றே அடித்துக் கொண்டிருக்கிறோம். உங்களையெல்லாம் நூறு பூனம் பாண்டே வந்தாலும் திருத்த முடியாது. இந்த பழமையான கலாச்சார இந்தியாவில், பூனம் ஒரு அதிரடியான மாடர்ன் புரட்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை.

நமது  கலாச்சாரம் மாறி, செக்ஸ் என்பது சாதாரணமானவனுக்கு சாதாரணம் ஆகும் போது, அரசியல்வாதிகளோ சினிமாகாரர்களோ நம்மை அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது.

அப்போது, தொப்புள் காட்சியையும் கிளிவேஜ் சீனையும் தமிழன் துச்சமென மதித்து, தூக்கி எறிந்து விடுவான். அஞ்சலியையும், ஒவியாவையும் அரைகுறை ஆடையில் நிற்க வைத்து போட்டோ ஷூட் செய்து ஏமாற்றிய, கலகலப்பு போன்ற Third ரேட் காமெடி படங்களும் செல்லுபடியாகாது.

"உயிரின் உயிரே" பாட்டில் சில மைக்ரோ நொடிகள் மட்டும் மங்கலாய் தெரியும் ஜோதிகாவின் நிப்பிள் சிலிப்பை கூர்ந்து பார்த்து கண்டுபிடிக்காமல், புதிதாய் அறிவியலில் ஏதாவது கண்டுபிடித்து வரலாற்றில் இடம் பிடிப்பான் இந்தியன்.


Apr 30, 2012

லீலை - விமர்சனம்

போன வாரம் பார்த்த ஒரு கல் ஒரு கண்ணாடி சுத்தமாய் இம்ப்ரெஸ் செய்யவில்லை. ஆனால் சுத்தமாய் எதிர்பார்க்காமல் சென்ற இப்படம், எனக்கு ஒரு பெரிய சர்பிரைஸ்.

இந்த கதையின் ஒன் லைனரை சொல்லியிருந்தால், எந்த ஒரு தயாரிப்பாளர் மட்டும் அல்ல, நீங்களே என்னடா கதை இது? என்று சொல்லி அடித்து துரத்தி இருப்பீர்கள். ஆனால் அம்சமான திரைக்கதையும், கிளாமரான வசனங்களையும் வைத்து லீலை செய்திருக்கிறார் இயக்குனர் Andrew Louis. நிச்சயமாய் கொரியன் படத்திற்கு இணையான ரொமாண்டிக் காமெடி வகை.

சும்மாவா! இடுப்பை பார்த்ததால் பிரிந்த காதலை ட்விஸ்ட்டாக வைத்து படம் செய்து வெற்றி பெற்ற இயக்குனரிடம் வேலை செய்தவர் ஆயிற்றே! ஆம் லூயிஸ், எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராய் பணி புரிந்திருக்கிறார்.


நாயகி "கருணை மலர்". கல்லூரி படித்துக் கொண்டிருக்கையில், இவர் கருணையுடன் எச்சரித்தும், அவரது தோழிகள் ஒருவனை காதலித்து, அவனால் கழட்டி விடப்படுகிறார்கள்.

அந்த ஒருத்தன் தான், நாயகன் "கார்த்திக்". ஒரு handsome இளைஞன். நல்ல அழகான, அறிவான காதலியை தேடும் முயற்சியில், நாயகியின் தோழிகள் இருவரையும் பெயில் மார்க் போட்டு ரிஜெக்ட் செய்ய, அதனால் நாயகிக்கும் இவருக்கும் பிரச்சினை வர, முகம் தெரியாமலே போனிலியே திட்டி கொண்டு சண்டை போட்டு கொள்கிறார்கள். 

சில வருடத்திற்கு பின், நாயகி HCL சாப்ட்வேர் கம்பெனியில் HR டிபார்ட்மெண்டில் வேலைக்கு சேர, கார்த்திக் அதே கம்பெனியில் Developer ஆக இருக்கிறார். கம்பெனியில் ஒருமுறை கார்த்திக் செய்யும் போன், தவறுதலாய் மலருக்கு போய் விட, இங்கும் போனிலியே அவர்கள் விட்ட சண்டை தொடருகிறது. 

ஒருமுறை கார்த்திக் மலரை நேரில் பார்க்க, "கருணை மலர் என்ற மொக்கை பெயருடைய நாயகியும், மொக்கை பிகராய் தான் இருப்பாள்" என்று எண்ணி வந்த அவரது நினைப்பில் மண் விழ, வேறென்ன? உடனே அவருக்கு "மலர்" மேல் "உண்மையான" லவ் வருகிறது. கருணை மலர் என்ற பெயரும் இப்போது அவருக்கு அழகானதாகவே தோன்றுகிறது. பின், கார்த்திக் என்ற பெயரை மறைத்து, சுந்தர் என்ற பெயரில் நாயகியை காதலிக்கிறார். 

நாயகிக்கு சுந்தரின் உண்மையான பெயர் தெரிந்ததா? அவரது உண்மையான காதல் புரிந்ததா? மிஸ் பண்ணாமல் தியேட்டருக்கு போய் பாருங்கப்பா!



நாயகன் ஷிவ் பண்டிட். உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏர்டெல் விளம்பரத்தில் நடித்தவர்.
இந்த கேரட்டரில் நன்கு பொருந்துகிறார். பெண்களுக்கு அதிகம் பிடிக்கலாம்.




நாயகி மானசி பரேக். இவரையும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். முக்கியமாய் பெண்களுக்கு. இவர் stayfree விளம்பரத்தில் நடித்தவர். மேலும் ஒரு சிங்கர். ரியாலிட்டி ஷோவில் பட்டம் வென்றவர். லேசாய் த்ரிஷா முகஜாடை இருந்தாலும், முதல் படத்திலேயே த்ரிஷாவை விட எக்கசக்க பெர்பார்மன்ஸ். ஒவ்வொருமுறையும் நாயகனிடம் போனில் பேசி சண்டை போடும் போதெல்லாம், ரிசீவரை இரண்டு கையிலும் மாற்றி மாற்றி பேசுவது அழகு. I love her.

சந்தானம் நன்கு சிரிக்க வைக்கிறார். He is also a software engineer. கேட்கவா வேணும்?
நடுநடுவில் இந்திய சினிமாவின் சம்பிராதாயமான புல்வெளியில், கோவில்களில் ஆடும் பாடல்கள், இதெல்லாம் தவிர்த்திருக்கலாம். "ஜில்லென்று ஒரு கலவரம்" பாடல் கொள்ளை கொள்கிறது. ரிங்டோன் ஆக செட் செய்யலாம்.

இயக்குனரின் முதல் படம் நன்றாகவே செய்திருக்கிறார். ரொம்ப நீட்டான லவ் ஸ்டோரி. சின்ன சின்ன, அழகான, சுவாரஸ்யமான் ட்விஸ்ட்கள். 

"என்ன பொறுத்த வரையிலும் பசங்க ஒரு விசயத்தில மட்டும் ஒரே மாதிரி. கண்ணுக்கு அழகா தெரியிற பொண்ணுங்ககிட்ட அவங்கனால ஒரு பிரெண்டா மட்டும் பழக முடியாது. ஒன்னு லவ் பண்ணனும்ன்னு நினைப்பாங்க. இல்ல, கை வைக்கணும்ன்னு நினைப்பாங்க" என்பது போல படம் நெடுகிலும் ரசிக்கக்கூடிய நச் வசனங்கள் மற்றும் நகைச்சுவை.

படம் ஒருமுறை சூப்பராய் பார்க்கலாம். ஒரு கல் ஒரு கண்ணாடியைவிட ரொம்பவே பெட்டர். இன்னும் நன்றாக விளம்பர படுத்தினால், சூப்பர் ஹிட்டாகலாம்.




இதற்கு மேல் எழுத தோணவில்லை. தூக்கம் வருகிறது. மூன்று மணிநேரம் இந்த கோடை வெயிலின் கொடுமையில் சந்தோசமாய் ஏசியில் கரண்ட் கட் பிரச்சினை இல்லாமலும், சிரித்துக் கொண்டும் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்.

இயக்குனரின் பேட்டி:     
 





Dec 28, 2011

Your Highness - ஹாலிவுட் சினிமா விமர்சனம் (18+)

2012. புது வருடம் வரப் போகிறது.

இந்த நியூ Year-ஐ எப்படி கொண்டாடலாம்ன்னு பரபரன்னு நகத்தை கடிச்சிகிட்டு சந்தோசமாய் காத்திருக்கீங்களா?

"நியூ இயர்ன்னா என்ன புதுசாக இருக்க போகுது? எப்பவும் போல அடுத்த நாள் காலையில் எந்திரிச்சு பல் விலக்கி தான் ஆகணும்" அப்படின்னு வாழ்க்கையையே போராக பீல் பண்ணி பேசி சோகமாக இருக்கீங்களா?

எப்படி இருந்தாலும், நீங்கள் பார்க்க வேண்டிய படம் இது. 


 
ராஜா, ராணி மற்றும் பயங்கரமான மந்திரவாதி போன்ற கேரக்டர்களை வைத்து சீரியசாய் எடுக்கப்பட்ட பேண்டசி படங்களை கொடுமையாய் கலாய்ப்பதற்கென்றே வந்த goofy வகை படம்.

இதை போல தமிழில், சிம்பு தேவனால் எடுக்கப்பட்ட ஒரு மோசமான முயற்சி "இம்சை அரசன் 23 -ஆம் புலிகேசி"

படத்தின் கதை,

ஒரு வயதான அரசன். அவனுக்கு பிறந்த இரண்டு இளவரசர்கள். மூத்தவன் Fabious வீர தீரங்களில் சாகசம் புரிந்து, அடிக்கடி நிறைய quest களை வெற்றிகரமாக முடித்து நாட்டு மக்களின் அன்பை பெறுகிறான். ஆனால் இளையவன் Thadeous, ஒரு திறமையும் இல்லாமல் ஊரை சுற்றி, பொழுதை கழிக்கும் உதவாக்கரை இளவரசன்.

ஒருமுறை இளவரசன் ஒரு மந்திரவாதியிடம் சிக்கி கொண்டிருந்த ஒரு அழகான Virgin (கற்பு கலையாத) பெண்ணை காப்பாற்றி கொண்டு வந்து திருமணம் செய்து கொள்ள இருக்கையில் மீண்டும் அந்த மந்திரவாதி வந்து அந்த பெண்ணை தூக்கி கொண்டு போய் விடுகிறான். இரண்டு நிலவுகள் சங்கமிக்கும் நேரத்தில் அவளை புணர்ந்து, அதனால் பிறக்க போகும் ஒரு டிராகன் மூலம் உலகையே ஆட்டி படைக்கலாம் என்பது மந்திரவாதியின் திட்டம்.

இந்த முறை உதவாக்கரை இளவரசனும், அவனுடைய அண்ணனுடன் இந்த quest-ற்கு வலுக்காட்டாயமாய் அனுப்பி வைக்கப் படுகிறான். இருவரும் வெற்றிகரமாய் சென்று மந்திரவாதியை அழித்து, அந்த Virgin பெண்ணை காப்பாற்றி கூட்டி வந்தார்களா? அவள் தன் virginity -யை யாரிடம் இழந்தாள்? என்பதே படம்.


படம் முழுதும் வாய் வலிக்க சிரித்து கொண்டே இருக்க வைக்கிறார்கள். இதில் burst out laughing சீன்கள் அதிகம். fuck என்ற வார்த்தையை Thadeous அடிக்கடி மந்திரம் போல அசால்ட்டாய் உச்சரிக்கிறான். 

சில vulgar ஆன காட்சிகளும், நிறைய வசனங்களும் இருப்பதால் வயதுக்கு வராத ஆண்களும், பெண்களும் இதை தவிர்த்து விட்டு, பேஸ்புக்கில் போய் Angry Birds விளையாடுங்கள்.  

Its Definitely for Matured

ஒய் திஸ் கொலைவெறி டி? பாடலைப் போல, இந்த படம் வெளிவந்த போது சீப்பான படம், மொக்கை காமெடி என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை மீடியாக்கள் வைத்தன. ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் இதை பாருங்கள், சில மணிநேரம் இனிமையாய் கழியும். 

Be Ready to ROFL ...



டோர்ரன்ட் டவுன்லோட் லிங்க்

http://extratorrent.com/torrent/2471463/Your+Highness%5B2011%5DUNRATED+BRRip+XviD-ExtraTorrentRG.html



Nov 23, 2011

Seducing Mr Perfect - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)


தலைப்பை வைத்து இந்த படம் கொஞ்சம் கில்மாவாக இருக்கும் என்று என்று ஆசைப் பட வேண்டாம். அழகான காதல் + நகைச்சுவை கலந்த அட்டகாசமான கதை. கொரியன் மூவி lovers மிஸ் பண்ணவே முடியாத/கூடாத படம்.

சாதரணமாய் கொரியன் பட வசனங்களில் நீங்கள் கொஞ்சமான ஆங்கில வார்த்தைகளை கூட கேட்பது கடினம். "Hello", "Thank You" என்பதற்கு கூட அவர்கள் ஆங்கிலத்தை பயன்படுத்துவதில்லை. கொரியன் மக்களுக்குக்கும் ஆங்கிலத்துக்கும் அதிக பட்ச தூரம். இதை வைத்து 2003-இல் "Please Teach Me English" என்ற சுமாரான காமெடி படம் கூட வந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

안녕 = An nyoung = Hello, informal
안녕하세요 = An nyoung ha seh yo = Hello, formal
여보세요 = yaw bo seh yo = Hello on a telephone

கொரியன் மொழியை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், ஒரு முறைக்கு முந்நூறு முறை யோசியுங்கள். இந்த மொழியை பேச முயற்சி செய்தால் உங்கள் வாயும், எழுத முயற்சி செய்தால் உங்கள் கைகளும் சுளுக்க கூடும்.

அவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிக்க நீங்கள் அதிகம் பொறுமையை வளர்த்து கொள்வது அவசியம். அவர்கள் பேசுவதை கேட்பது சிலருக்கு (எனக்கு) இன்பத்தையும், சிலருக்கு (என் நண்பனுக்கு) வெறுப்பையும் கொடுக்கும்.

ஆனால் இந்த படத்தில் நாயகனுக்கு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த கேரக்டர் என்பதால், அவருக்கு கொரியன் மொழி புரிந்தாலும் பேசத் தெரியாது. அதனால் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். இந்த படம் வெளியான போது கொரியன் மக்கள் ஆங்கில வசனத்தை புரிந்து கொள்ள அதிகம் கஷ்டப் பட்டிருக்கிறார்கள்.

இனி படத்தின் கதை.

நாயகி (Min-Joon) -க்கு உண்மையான காதல் மீது அபார நம்பிக்கை. தன் காதலனுக்கு Gifts, Greetings Card என்று கொடுத்து தன் உண்மையான அன்பை பலவாறு வெளிப்படுத்தும் கேரக்டர். ஆனால் அவளுக்கு அமையும் ஒவ்வொரு காதலர்கள் அவளை dump செய்து விட்டு கழட்டி விட, அவள் உண்மையான காதலை தேடி தேடி அலைகிறாள்.

நாயகன் (Robin Heiden) நாயகிக்கு முற்றிலும் மாறான, உண்மையான காதல் என்பதில் துளியும் நம்பிக்கை இல்லாமல் "Its a Game. It has more Rules" என்று பேசும் கேரக்டர்.

இவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். நாயகி காதல் தெய்வீகமானது என்று சொல்வதை நாயகன் மறுக்கிறார். நாயகி, உண்மையான காதல் கண்டிப்பாக இருக்கிறது என்று விடா பிடியாய் சொல்ல, நாயகன் அப்போது "வேண்டுமானால் என்னை, நீ காதலிக்க வைத்து விடு" என்று கேட்க, நாயகி நாயகனை Seduce செய்ய நிறைய டெக்னிக்குகளை கையாள்கிறார்.

அதில் நாயகி வெற்றி பெற்று, நாயகனுக்கு உண்மையான காதலை மண்டையில் அடித்து புரிய வைத்தாரா? அல்லது தோற்று விட்டு தாடி வளர்க்க முடியாமல் கஷ்டப் பட்டாரா?

விடையை கீழேயுள்ள torrent -யை டவுன்லோட் செய்து பாருங்கள்.

முதல் லிங்க்:  (1.37 GB) - You have to register
இரண்டாவது லிங்க்: (1.65 GB)

நாயகி சுமாரான பிகர் என்றாலும், நடிப்பில் அவ்வளவு கியூட். Hero is a very Handsome guy. படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி பெட்ரோல் குண்டு போல பற்றி கொண்டு எரியும்.


நமீதா டச்: Seducing Mr Perfect - Get Seduced

டிரைலர் இங்கே.





Disclaimer:  இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. வெறும் ஹிட்சுக்காக மட்டுமே நமீதாவின் பெயர் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.

Related Posts:

My Tutor Friend - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)

My Little Bride - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)




Nov 15, 2011

My Tutor Friend - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)

கொரியன் சினிமாக்களில் ரொமாண்டிக் காமெடி வகையாறா(Genre) படங்களை அடிச்சுக்கவே முடியாது. அதிலும் இந்த படம் கொஞ்சம் அதிரடியான ரொமாண்டிக் காமெடி வகை.

இது முதல் பார்ட். இதன் இரண்டாம் பாகம் பெரிய அளவுக்கு இருக்காது. இந்த படத்தை நிறைய பேர் பார்த்திருக்கலாம். இந்த விமர்சனம் ரொம்ப நாளாக என் Draft-ல் கும்பகர்ண தூக்கம் தூங்கி கொண்டிருந்தது. இப்போது தான் தட்டி எழுப்பி விட்டுள்ளேன்.

கொரியன் படங்களில் "My" என்று ஆரம்பிக்கும் நிறைய படங்கள் பெரிய ஹிட் படங்களாகவே அமைந்திருக்கிறது.

My Sassy Girl
My Wife is a Gangster Series
My Boss My Teacher
My Girl and I

என்று இன்னும் நிறைய.



Tutor என்றால் வீட்டுக்கே வந்து பாடம் சொல்லி தருகிறவர்கள். உங்களுக்கே தெரியும் பணக்காரங்க மட்டும் தான் Tutor -யை "வச்சுக்க" முடியும். 

நாயகன் ஒரு பணக்கார வீட்டு பையன். ஹை ஸ்கூலில் படிக்கும் இவருக்கு அட்டகாசமாய் fight செய்ய வரும். இவரின் அதிரடியான fast மூவ்மேன்டினால் எதிரிகளை அழகாய் பந்தாடுபவர்.

ஸ்கூலில் உள்ள இன்னொரு கேங்குடன் (Gang) அடிக்கடி fight செய்து பொண்ணுகளை கவர்வதில் வல்லவரான இவரை பாடங்கள் மட்டும் ஏனோ கவருவதில்லை. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒரே வகுப்பில் படித்து சாதனை படைத்தது கொண்டிருக்கிறார் நம் நாயகன்.

நாயகி, யுனிவெர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஏழை குடும்பத்து பெண். இவருடைய அம்மா சிக்கனை fry பண்ணி விற்கும் தொழில் செய்கிறார். நாயகி அருகில் உள்ள சின்ன பசங்களுக்கு டியூசன் எடுத்து சம்பாதித்து அந்த வருமானம் மூலம் படிக்கிறார்.

அந்த பசங்க செய்யும் குறும்புகளுக்காக அவர்களை அடித்து விடுவதால் அடிக்கடி டியூசன் வேலையும் போய்விடுகிறது.

படத்தின் முதல் சீனிலேயே, பிஞ்சிலே பழுத்த இரண்டு குட்டி பசங்க, ஹீரோயின் உட்கார்ந்திருக்கும் டெஸ்க்குக்கு கீழே டார்ச் அடித்து அவர் போட்டிருக்கும் பாண்டீஸ்சின் (Panties) கலர் என்ன என்று ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி செய்தால் யார் தான் அடிக்க மாட்டார்கள்?

நாயகியின் அம்மாவுக்கு ஒரு பணக்கார நண்பி இருக்காங்க. அவர் தான் நாயகனின் அம்மா. நாயகனுக்கும் நாயகிக்கும் ஒரே வயசு தான்.

நாயகன் நன்றாக படித்து பாஸ் ஆக வேண்டும் என்று தன் பணக்கார நண்பி கேட்டு கொள்வதால் நாயகனுக்கு பாடம் சொல்லி தர நாயகியின் அம்மா நாயகியிடம் சொல்கிறாள். அப்படி சென்றால் அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தன் செமெஸ்டர் பீஸை கட்டிவிடலாம் என அவளும் சம்மதிக்கிறாள்.

நாயகன் ஒழுங்காக கையையும் காலையும் கட்டிக்கொண்டு நாயகியிடம் பாடம் கற்றாரா? இல்லை நாயகிக்கு நாயகன் ரொமான்ஸ் பாடம் கற்று கொடுத்தாரா? டியூசனில் என்னென்ன கூத்து நடக்கிறது?

டோர்ரென்ட் டவுன்லோட் செய்து கண்டு மகிழுங்கள். நிச்சயமாய் உங்களுக்கு பிடிக்கும்.

முதல் லிங்க்    (1.37  GB)
இரண்டாவது லிங்க் (700 MB)

நமீதா டச்:   My Tutor Friend , Lovely.

ட்ரைலர் இங்கே:



Disclaimer:  இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. வெறும் ஹிட்சுக்காக மட்டுமே நமீதாவின் பெயர் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.




Sep 24, 2011

எங்கேயும் எப்போதும் - நமீதா விமர்சனம்




"வண்டியை வேகமா ஓட்டாதிங்க"

இதுதான் கதையின் உட்கரு, வெளிக்கரு எல்லாம். தமிழ்நாடு அரசு சார்பாக தயாரித்திருக்கும் விபத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி படமாக இதை எடுத்துக் கொள்ளலாம். எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி விளம்பரத்தில் திரையுலக பிரபலங்கள் வந்து அட்வைஸ் செய்வது போல இந்த படத்தில் அஞ்சலி அனன்யா மற்றும் பலர் நடித்து அதை வலியுறுத்துகிறார்கள். ஒரு குறும்படமாய் எடுக்கவேண்டியத்தை நீட்டி பெரும் படமாய் எடுத்திருக்கிறார்.

முக்கால்வாசி கதைகள் பஸ்ஸில் நடக்கும் ஒரு படத்துக்கு, பிண்ணனி இசை என்பது பெரும் பலமாய் இருக்க வேண்டும். ஆனால் இந்த படம் முழுதும் கனாக் காலங்கள் சீரியலுக்கு போடும் இசையை போலவே இருப்பது துரதிஷ்டம். படத்தின் திரைக்கதையும் கனாகாலங்கள் சீரியலில் சிரிப்பை மூட்டுவதற்காக திணிக்கப்படும் திரைக்கதையை போலவே உள்ளது. உதாரணம், Lavazza காபி ஷாப் சீன்கள்.

இதில் இரு காதல் கதைகள். அனன்யாவுக்கும் சாராவுக்கும் உள்ள காதலாவது ஒரு வகையில் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஜெய்க்கும் அஞ்சலிக்கும் இடையேயான காதல் காட்சிகள் காமெடி ட்ராக்காக உபயோக படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஜெய் பையனுக்கு நடிக்கவே தெரியவில்லை. கிளைமேக்சில் காட்டும் பெர்பார்மன்சை படம் முழுதும் காட்டுகிறார். ". யாரோ தெரியாத்தனமாக "நீ விஜய் மாதிரி இருக்க" ன்னு சொல்லிட்டாங்க. அதை நம்பி இன்னமும் நடித்து கொண்டு இருக்கிறார் அப்பாவியாய். இவரை ஹீரோவாக நினைத்து பார்க்கவே முடியவில்லை.

படம் முழுதும் அஞ்சலி சொல்றதை எல்லாம் வாய் பொத்தி ஒழுங்கா கேட்கும் இவர், "எப்படி நடிக்கறது?" என்பதையும் அஞ்சலியிடம் கேட்டு நடித்திருக்கலாம். ஜெய்யின் பெற்றோர்கள் அவரை கூத்துப்பட்டறைக்கு ரெண்டு வருஷம் அனுப்பிவிட்டால் நலம். சரவ் மற்றும் அனன்யாவின் நடிப்பு கவருகின்றன.

அஞ்சலி பற்றி, அய்யோ என்ன சொல்வது?




அவரது கண்களும் வாயும் போட்டி போட்டு கொண்டு பேசி நடிக்கின்றன. இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுத்து பாராட்டலாம். இவரது காதாப்பாத்திரத்தை இயல்புக்கு மீறி வடிவமைத்து இருந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு ரசிக்க வைக்கின்றன. இவரை சரியாய் பயன் படுத்தினால் சிம்ரனுக்கு அடுத்து ஒரு "நடிகை" தமிழ் சினிமாவுக்கு கிடைக்கலாம்.

அங்காடிதெரு அஞ்சலிக்கு

படம் முழுதும் அங்காங்கே நாலு முழம் மல்லிகை பூவை வாங்கி நம் காதில் சுத்திவிடுகிறார் இயக்குனர். அதை பஸ்ஸில் உள்ளவர்கள் மல்லிகை பூவை வாங்கும் சீன் மூலமாக குறிப்பாய் உணர்த்தியதே இயக்குனரின் திறமை.

நமீதா டச்: எங்கேயும் எப்போதும், ஒரு கமர்சியல் சீரியல்

ஒரு இயக்குனரின் முதல் படம் என்று சொல்லுவதற்கு பெரிய அளவில் எதுவும் இல்லை. படம் முடிந்து தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே வந்து என் பைக்கை எடுத்து வேகமாய் தொண்ணூறில் விரட்டினேன் சந்தோசமாய்.

டிஸ்கி: இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. ஹிட்சுக்காக மட்டுமே உபயோக படுத்தப்பட்டுள்ளது.


Apr 27, 2011

கோ - நமீதா திரை விமர்சனம்.

சில படங்களை திரை அரங்குகளில் பார்க்க முடியாமல் போனதற்கு மிகவும் வருத்தப்படுவோம். அதே போல் சில படங்களை பார்த்துவிட்டு எதோ ஒரு காரணங்களால் விமர்சனம் எழுத முடியாமல் போனாலும் வேதனையான விஷயம். ஆனால் படத்தை பார்க்கவும் முடியாமல் விமர்சனமும் எழுத முடியாமல் போய் எனக்கு மன கஷ்டத்தை  தந்த சமீபத்திய இரு படங்கள். நமது பாசத்திற்கு உரிய தமிழ் தாத்தா உரைநடை எழுதிய மன்னிக்கவும் கதை வசனம் எழுதிய இளைஞன், பொன்னர் சங்கர்.

சரி இனி கோ.



இந்த படத்தின் கதை?...என்ன என்று கேட்பவர்களுக்கு, ஆஸ்காருக்கு நாமினேட் ஆகி இருக்கும் இந்த படத்தின் கதையை இன்னும் தெரியாமல் உலவி கொண்டு இருக்கிறீர்களா?

ஒரு மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகளாலும் அரசியல் கட்சிகளாலும் பொது மக்களும் ஊடகங்களும் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை மற்ற விசயங்களோடும் சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தில் வரும் அரசியல்வாதியும்,  அரசியல் கட்சியும் தமிழகத்தின் எந்த ஒரு அரசியல்வாதியையோ அரசியல் கட்சியையோ குறிப்பிடுபவன அல்ல என்று மட்டுமே இங்கு நாம் எடுத்து கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் இது போல நடந்து கொண்டு இருக்கலாம்.

பொதுவாக கே.வி. ஆனந்தின் பட ஹீரோக்கள் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் வரும் சூர்யாவை போல ஓவர் ஆக்டிங் செய்து வந்த வழியே திரும்பி ஓட வைப்பார்கள். அயனில் முதலில் வரும் ஏர்போர்ட் காட்சிகளில் சூர்யா காட்டும் ஆக்டிங் பார்த்த பிறகு அந்த படத்தின் கதை எனக்கு என்ன என்று தெரியாமல் போனது. இதிலும் ஜீவா அதை செவ்வனே ஒரு கேமராவோடு செய்கிறார்.

கனாகண்டேன் படம் மட்டும் விதிவிலக்கு. கனாகண்டேன் படம் போல இது ஒரு எதார்த்தமான படமாக இருக்கும் என்று நம்பி போனேன். ஆனால் முதல் சீனில் பேங்கில் கொள்ளைஅடித்து விட்டு செல்லும் நக்சல்களை ஜீவா பைக்கில் வீலிங் செய்து கொண்டே சுற்றி சுற்றி படம் எடுக்கும் காட்சியின் மூலமாக இது எதார்த்த படம் இல்லை, இது ஒரு மசாலா படம் தான் என்று சொல்லி நம் முகத்தில் சாணியை கரைத்து அடிக்கிறார் இயக்குனர்.

ஜீவா தின அஞ்சல் என்ற பத்திரிக்கையின் போட்டோகிராபர். கழுத்தில் கட்டிய சாமி தாயத்து போல எப்போதும் கேமராவை கழுத்தில் இருந்து கழட்டாமலே சுற்றுகிறார். பியாவும், கலை உலகத்திற்கு அர்பணிக்கப்பட்ட ராதாவின் வாரிசு கார்த்திகாவும் அதில் பணியாற்றும் அழகான நிருபர்கள். ஒரு தமிழ் தினசரி பத்திரிக்கை ஆபிசில் இப்படி எல்லாம் அழகாய் மாடர்னாய் நிருபர்கள் இருப்பாங்களா? என்று தினசரி பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை செய்யும் கனவான்கள் பொறாமையில் பாப்கார்னை கொறித்துக் கொண்டே படம் பார்க்கிறார்கள். பத்திரிக்கை ஆபிஸ் செட்டிங் அப்படியே நிறைய ஹாலிவுட் தரம்.

ஜீவாவின் அம்மாவும் அப்பாவாக வரும் பட்டிமன்ற பேச்சாளரான ராஜாவும் அப்படியே சங்கரின் சிவாஜி டைப் பெற்றோர்கள். ராஜா அவர்கள் பட்டிமன்றத்தில் அருமையாக பேசுவார் என எங்க தாத்தா சொல்லுவாரு.

ஜீவா எந்த பெண்ணையும் தொட்டதில்லை என்றாலும் கூட பியா இவரை தொடும் பொது எறும்பை தட்டிவிடுவது போல தட்டிவிட்டு போய்கொண்டே இருக்கிறார் ராமபிரானாக. தமிழ் கலாசாரத்தில் வாழும் இப்படி ஒரு "இளைஞனை பார்ப்பது மிகவும் கஷ்டம்".



கார்த்திகா, நூலை போல சேலை. கண்ணும் இன்ன பிறவும் அழகு. ரஜினி தாத்தாவுக்கும் கமல் தாத்தாவுக்கும் புது இளமொட்டு ரெடி. ஆனால் ரஜினியும் கமலும் பீல்டில் இருக்கிறவரைக்காவது இவர் நிலைத்திருக்க வேண்டும் என்பது எனது அவா. கார்த்திகாவின் மகள் வரும் வரை அவர்கள் பீல்டில் இருப்பார்கள் என்பது வேறு விஷயம்.

பாடல் காட்சிகளில் வரும் மலை பகுதிகளிலும், கார்த்திகாவின் இடுப்பு பிரதேசங்களிலும் மனதை லயிக்க வைக்கிறது கே.வி.யின் கேமரா.

பியா தனக்கு எவ்வளவு ரேட் வரும் என்று ஜீவாவை கேட்கும் காட்சியிலும், ஒரு சின்ன பையனிடம் சட்டையை திறந்து காட்டும் காட்சியிலும் இயக்குனரின் முற்போக்கு சிந்தனையை பாராட்டியே ஆக வேண்டும். எனக்கும் பியாவின் ரேட் இதுவரை தெரியவில்லை. ஆனால் ஜீவாவிடம் பியாவுக்கு "ஐ லவ் யு" சொல்ல மட்டும் முடியாமல் போவதற்கு பியாவின் வெட்கம் மட்டுமே காரணம் என்று இயக்குனர் அடித்து சொல்கிறார்.

பியாவுக்கு வரும் முதல் பாட்டு வரும் இடத்திலும், இரண்டாவது பாதியில் வரும் "வெண்பனியே" பாட்டு வரும் இடத்திலும் புகழ் பெற்ற எடிட்டர் கத்தரிக்கோல் கண்னழகன் ஆண்டனி தூங்கி உள்ளார் என்று தெளிவாக தெரிகிறது. வீணாய் போய்டும்ன்னு பந்தியில வச்சுட்டாங்க.

முதல் பாட்டில் பெண்களின் இடுப்பை கிராபிக்ஸால் மறைத்துவிட்டு, அடுத்த காட்சியில் சில உழைக்கும் வர்க்கத்து பெண்கள் தெருவில் ஆடும் பொது மட்டும் அவர்கள் இடுப்பை தெளிவாக காமிப்பது என்ன ஒரு பாகுபாடு? என்று என் நண்பன் குமுறி கொண்டே படம் பார்த்தான். அதுவே பின்னால் நிறைய பாடல்களில் கார்த்திகாவின் இடுப்பை பார்த்த பின்பு ஒருவாறாக அவனின் குமுறல் அடங்கியது.

இந்த படத்தை வாங்கி வெளியிட்ட ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின் ஒரு உண்மையான பிசினஸ்மேன். இவரின் தொழில் பக்தி உன்னதமானது. பொரிக்கடலை விற்பதில் லாபம் வரும் என்றால் கருணாநிதியின் குடும்பம் பொரிக்கடலை வியாபாரமும் செய்யும் என்று நடிகர் விஜயின் அப்பா கூறியாதாக எங்கேயோ படித்தது உண்மையிலே மிகையல்ல, சிறுமையாகவே தோன்றுகிறது.

ஆனால் கே.வி.ஆனந்த அவர்கள் ஒருவகையில் புத்திசாலி என்பதையும் நாம் ஒப்பு கொள்ள கடமைப் பட்டு இருக்கிறோம்.

நமிதா டச்: கோ - போடாங்கோ!

டிஸ்கி:   ஒருமுறை பார்க்க கூடிய சுமாரான இந்த படத்தின் மீதான என் கோபத்திற்கு காரணம் இயக்குனர் நமீதாவையும், அவர் செந்தமிழையும், சிறு வயதில் சிரமப்பட்டு படித்த கெமிஸ்ட்ரியையும் நக்கல் அடித்ததே.


Dec 17, 2010

மந்திர புன்னகை - நமீதா விமர்சனம்



இயக்குனர்கள், நடிகர்களாக மாறுவது தமிழ்நாட்டுல வெரி ஓல்ட் பேஷன். அதை பின்பற்றி திருபழனியப்பன், மன்னிக்கவும். 'கரு'பழனியப்பன் அவர்கள் நடித்த மந்திர புன்னகை படத்தின் போஸ்டர் பார்க்கும் போதெல்லாம் இந்த படத்தை பார்க்கும் எண்ணம் என்னை விட்டு ரொம்ப தூரம் போய் கொண்டு இருந்துச்சு. சரி விடுங்க. சாதாரண மக்கள் நம்மளுக்கே நாம ஒரு ஹீரோ அப்படிங்கற நினைப்பு அடிமனசுல ஆழமா இருக்கும். அப்படிங்கும்போது திரைத் துறைல இருக்கிற ஒரு இயக்குனர் அப்படி நினைக்கிறது தப்பு இல்ல. ஆனா மத்தவங்கள நினைக்க வைக்கருது தான் தப்பு. என்ன சொல்லவர்றேன்னு புரியலையா? (எனக்கும்தான்)

படம் ரிலீஸ் ஆகி நிறைய நாள் ஆனதுனால் படத்தோட கதை நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கும். கதை தெரியாதவர்கள் இங்கே கிளிக் செய்து படிக்கவும்.

படத்தோட ஒரிஜினல் ஹீரோ வசனம் தான். ஒவ்வொன்னும் ரசிக்க கூடியது. ஆனா அதுவே ஓவர் டோஸ் ஆக போயிடுச்சு. படத்துல வர்ற ஒவ்வொரு கேரக்டருமே "நான்  நீன்னு" போட்டி போட்டுக்கிட்டு வசனத்தை பங்கு போட்டு பேசி இருக்காங்க. தான் படத்திற்காக எழுதிய டயலாக் வேஸ்டாக போய்ட கூடாது அப்படிங்கறதுக்காக இயக்குனர் நிறைய இடங்களில் வசனங்களை கதாபத்திரங்களின் வாயில் வலிந்து திணித்து இருக்கிறார்.

படத்தோட ஹீரோ, நம்ம  கருபழனியப்பன் அவருக்கு தண்ணி அடித்து கொண்டு  குட்டியோட ஜாலியாக பொழுதுபோக்கற மாதிரி ஒரு கேரக்டர் என்பதிற்காக, படம் முழுவதும் தாடி வச்சுக்கிட்டு மூஞ்சு கழுவாம நம்ம விஜய டி. ராஜேந்தரின் தவ புதல்வன் மாதிரியே வந்து நமக்கு சரக்கு அடிக்காமலேயே வாந்தி வர்ற மாதிரி பீலிங் உண்டாக்குகிறார். டூயட் கூட தாடியோட தான் பாடுறார். இவருக்கும் ஹீரோயினுக்கும் வர்ற ரெண்டு பாட்டுக்கு பதில் கம்முன்னு ஹீரோயினுக்கு மட்டும் ரெண்டு சோலோ சாங் கொடுத்து இருக்கலாம். இவர் சொல்ற கருத்தெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா கிடைக்கறவங்களை எல்லாம் புடிச்சு கருத்து சொல்லி மிகவும் கஷ்டப் படுத்தறார். கருத்துபழனியப்பன்.

மனசில் பட்ட எதையுமே கூச்சபடாம சத்தம் போட்டு பேசுற கேரக்டர் என்பதாலும் படம் முழுவதும் கருவண்டு மாதிரி பயங்கரமா நம்ம காதுக்குள்ள வந்து கத்தி கத்தியே பேசி வலிக்க வைக்கிறார். இவருக்கு பாரதியார் கவிதை பிடிக்கும் என்பதற்காக, பேச்சு போட்டியில் சொல்கிற மாதிரி எல்லோரையும் சுத்தி உட்கார வச்சு மூச்சு விடாம கவிதைகளை ஒப்பிக்கிறார்.

இவர் நிறைய "ரேட்டு"களோடு என்ஜாய் பண்ணி இருக்கிற மாதிரி சொன்னாலும், படத்துல ஒரே ஒரு ரேட்டத்தான் (சன் மியூசிக் பிகரு) காமிக்கறாங்க. இன்னும் ரெண்டு மூணு ரேட்ட காமிச்சு இருக்கலாம். ஒருவேளை நடிக்க வைக்க ரேட்டு(சம்பளம்) பத்தலையோ என்னவோ?

விஜய் டீ.வி "நீயா? நானா?"வில் பத்து நிமிசத்துக்கு ஒரு தடவை விளம்பரம் போடுற மாதிரி இவரு குவார்ட்டர் அடிக்கறத அடிக்கடி காமிக்கிறாங்க. விஜய் டீ.வில போடுற சைனீஸ் டப்பிங் படத்தில் தண்ணி அடிக்கிற சீன் வரும் போது "மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு" அப்படின்னு கீழே ஓட விடுவாங்க. அதுமாதிரி இந்த படத்துக்கும்  போட்டங்கன்னா, படத்துக்கு வர்ற சப்டைட்டில் விட இது மிஞ்சிடும். குவார்ட்டர் பாட்டில் அல்லது பிஸ்லேரி பாட்டில் இப்படி படம் முழுவது ஏதோ ஒரு பாட்டில கைல வைச்சுகிட்டே சுத்துறாரு. முடியல!

இப்போ இவர் ஹீரோவாகவும் இனி தொடர்ந்து நடிப்பேன்னு ஊர் முழுதும் உரக்க மைக் போட்டு சொல்லிக்கிட்டு இருக்கார். நல்லதோ? கெட்டதோ? நடக்கட்டும்.


"பூனை ஒரு தடவை பாலை ருசி பார்த்துடுசுன்னா, அது மறுபடியும் மறுபடியும் பால் கலசங்களை உருட்ட ஆரம்பிச்சிடும்"



ஹீரோயின் மீனாட்சி, இவங்களுக்கு ஆப்டான ரோல். ஆனா இவங்க முகத்த பார்க்க முயற்சிக்கும் போதெல்லாம் இவங்களோட முன்னழகுதான் முன்னுக்கு வருது. இந்த படத்தின் மூலமாக இவருக்கு இன்னும் நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து சீக்கிரம் முன்னுக்கு  வரவேண்டும் என்று எம்பெருமான் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.

இசை எப்படின்னு, கரிக்டா தெரியல. டவுன்லோட் பண்ணுன பைல் சரியா இல்ல.

தனக்கு ஒரு ஓரளவு ஹிட் படத்தை கொடுத்த இயக்குநருக்காக, கெஸ்ட் ரோல்ல கொஞ்ச நேரமே வந்தாலும், நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் 'அனுபவிச்சு' நடிச்சு இருக்கார். இந்த மாதிரி கெஸ்ட் ரோலுக்கு சம்பளம் வாங்காமலே நடிக்கலாம். அதே மாதிரி சிநேகாவ கூட அந்த "ரேட்டு" ரோல்ல நடிக்க வச்சு இருக்கலாம். டைரக்டர் மிஸ் பண்ணிட்டார்.

சும்மா காமெடிக்காக படத்தை ஒட்டி எழுதி இருக்கேன். ஆனா படத்தை ஒரு தடவை பார்க்கலாம். கருபழனியப்பனோட கருந்தாடி பார்க்க பயமாக இருந்துச்சுன்னா நைட்ல பார்க்காமல், பகல்ல பாருங்க.

நமீதா டச்: மந்திர புன்னகை, மர்ம புன்னகை.


Oct 27, 2010

ரங்கூஸ்கியுடன் ஒரு ராத்திரி - ஒரு இனிய அனுபவம்



ரங்கூஸ்கியுடன் ஒரு ராத்திரி அப்படிங்கற தலைப்ப பார்த்த உடனே நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கும். அப்படி தெரியாம அவசர அவசரமா லிங்க்க கிளிக் பண்ணி உள்ள வந்திருந்திங்கன்னா, நீங்க

  • உலக படமான எந்திரனை இன்னும் பார்க்கவில்லை. (இது மட்டும் கலாநிதி மாறனுக்கு தெரிஞ்சுது, இதுக்கு தனியா உங்க மேல கேசு போட்டு லீகலா நடவடிக்கை எடுப்பார்)
(அல்லது)
  • ஆறாவது படிக்கும் போதே செக்ஸ் புக்கை தமிழ் புக்குக்கு நடுவுல வச்சு படிச்சு சங்க தமிழ் வளர்த்த சங்க பிரபுவாக இருக்கலாம். (எந்திரன் படத்தை பார்த்தும் உலக அழகி ஐஸ்வர்யாவை கடித்த ரங்கூஸ்கியையும் சுத்தமாய் மறந்து, குஜாலான மேட்டருன்னு நினைச்சு தெரியாம உள்ள பூந்துட்டிங்க)

இது ரெண்டுல எது உண்மைன்னு பின்னூட்டத்துல மரியாதையா சொல்லிடுங்க. இல்ல நானா கண்டு பிடிச்சேன், அப்புறம் ரங்கூஸ்கிய ஏவி விட்டு, கடிச்சு கடிச்சு விளையாட சொல்லுவேன்.

சரி மேட்டருக்கு வர்றேன். (ஹைய்! உண்மையாலுமே மேட்டரு தானா?)

நைட்டு ஆனா, படுத்து கண்ணா மூடினாலும் தூங்க முடியல. முழிச்சி இருந்தாலும் தூக்கம் வரல. என்னது, யாருமேலாவது லவ்வு வந்திருச்சான்னு கேட்கிறிங்களா? அதுதான் நமக்கு காலைல எந்திருச்சா வர்ற உச்சா மாதிரி அடிக்கடி வருதே. அப்புறம் வேறென்ன?

சென்னைல இந்த ரங்கூஸ்கிகளின் தொல்லை தாங்க முடியல. உலக அழகிய கடிச்சுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான. அத விட்டுட்டு நீயும் ஒரு உலக அழகன்தான் அப்படின்னு என் காதுல வந்து கொய்யுன்னு கத்திகிட்டே கடிச்சு டார்ச்சர் பண்ணுதுங்க. இதுல அடிக்கடி நீங்க ரொம்ப நல்லவர்ன்னு வேற பாராட்டு. சரி, நானும் என்னை உலக அழகன்னு சொன்னதுக்காக எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது?

பொருத்தது போதும்ன்னு பொங்கி எழுந்து போர்த்தினாலும், "சந்தோஷ் சுப்ரமணியம்" படத்துல ஜெனிலியாவுக்கு போடுறமாதிரி ஒரு பெரிய ஊசியா போட்டு மறுபடியும் ஒரே பாராட்டு தான். நானும் கலைஞர் வீட்டுக்கு வழி காமிச்சு, "அவுர போய் பாராட்டுங்க. உங்க கூட்டத்துக்குன்னு தனியா ஒரு இடம் பரிசா கொடுத்து, பட்டாவும் போட்டு கொடுப்பாரு" அப்படின்னு சொன்னாலும் காதுலையே வாங்க மாட்டேன்குதுங்க. மார்கழி மாசமே இன்னும் வரல அதுக்குள்ள தினமும் காதுல ஏகப்பட்ட பஜனை. இனிமேல் கொசுக்கடிய பத்தி இந்த மாதிரி கவிதை எல்லாம் சத்தியமா எழுத மாட்டேன்.

சரி மேல மொட்டை மாடில போய் தூங்கலாமன்னு யோசிக்கும் போது, வீட்டுல படுத்தாவே ஜன்னல் வழியா தூக்கி கீழ போட்டு கொன்னுரும். மொட்டை மாடின்னா சும்மா விடுமா? அழகா தூக்கிட்டு போய் கீழ தள்ளி முட்டைய உடைச்சு ஆபாயில் போடுற மாதிரி, மண்டைய உடைச்சு இருக்கிற எல்லா ரத்தத்தையும் குடிச்சிட்டு போயிடும்.

பகல்ல கடிக்கிற கொசுவினால் தான் சிக்கன் குனியா வருது அப்படின்னுட்டு  (அப்போ, சிக்கன் அதிகமா சாப்பிடரதனால இல்லையா?) நீ என்னை நல்லா கடிச்சுக்கோ சொல்லி காலை விரிச்சு படுக்க முடியுமா என்ன?

சென்னைல இது மழை சீசன்னு சொல்லாம, ரங்கூஸ்கி சீசன்னு சொல்லலாம். பல்லி, பாம்புன்னு வச்சு அனகோண்டா மாதிரி பெரிய பெரிய ஹாலிவுட் படமெல்லாம் எடுக்கறாங்களே, இந்த கொசுவ வச்சு யாரும் படம் எடுக்க மாட்டாங்களா? ரங்கூஸ்கி மாதிரி பெரிய சைஸ் கொசுவெல்லாம் சேர்ந்து மனுசங்கள கடிச்சு நிமிசத்துல கொல்ற மாதிரியும், கடைசியா ஹீரோ வந்து காட்ஸிலா படத்துல வர்ற மாதிரி, கொசு முட்டை இடற இடத்தை கண்டு பிடிச்சு எல்லா கொசுவையும் குட்டியோடு சேர்த்து கொல்ற மாதிரி படம் எடுத்தாலாவது நமக்கெல்லாம் கொஞ்சமாவது சந்தோசமா இருக்கும்.

அப்படி ஒரு படம் கொசுவ வச்சு மிகவும் பிருமாண்டமா கொஞ்சம் காமெடி கலந்து எடுக்க, நம்ம சங்கர தவிர எனக்கு யாரும் தெரியல. எந்திரன்ல வந்த அந்த சின்ன கொசு சீனை பார்த்த, பக்கத்துல இருந்த ஒரு மூணு வயசு குழந்தை சிரிச்சு சிரிச்சு அதுக்கு கண்ணுல தண்ணியே வந்திடுச்சு (ஒருவேளை அது அழுதுகிட்டு இருந்ததோ?).


டிஸ்கி: 
இந்த பதிவு ரங்கூஸ்கிகளின் தொல்லை தாங்காமல் இரவு இரண்டு மணிக்கு எழுந்து எழுதப்பட்டு, அனைத்து ரங்கூஸ்கிகளுக்காகவும் டெடிகேட் செய்யப்பட்டது.
இந்த பதிவு எழுதிகிட்டு இருக்கும் போது பக்கத்துல படுத்திருந்த என் பிரெண்டு கேட்டார் "ஏசி இருந்தா கொசு வராதுல?" ஆமாய்யா, கொசுக்கு குளிர் அடிச்சு போய் போர்வை போர்த்தி படுத்து தூங்கிடும். போய்யா யோய்!





Sep 10, 2010

பாஸ் (எ) பாஸ்கரன் - நமீதா திரை விமர்சனம்

என்னன்னே தெரியல இப்ப நான் போய் பார்க்கிற படமெல்லாம் ஓரளவுக்கு நல்லா இருக்கு. தமிழ் சினிமா இப்போ சிரிப்பு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமீப காலமாக நிறைய நகைச்சுவை படங்களாக வர துவங்கி இருக்கு. அந்த வரிசையில் சிவா மனசுல சக்தி படத்தோட இயக்குனரோட அடுத்த படம் "பாஸ் என்கிற பாஸ்கரன்."



ஹீரோ ஆர்யா, இவரை "பாஸ்" என்று எல்லோரும் கூப்பிட்டாலும், அரசு கலை கல்லூரில படிச்சப்ப எழுதுன நிறைய பரிட்சையில் "பாஸ்" ஆகாததனால் ஏகப்பட்ட அரியர்ஸ் வச்சுக்கிட்டு ஒவ்வொரு வருசமும் கஷ்ட(பிட்டு வச்சு) பெயிலாகி பெயிலாகி எழுதறார். (பெயில் என்கிற பெயில்கரன்).
இப்படியே எந்த வேலைக்கும் போகாம வேலை வெட்டி இல்லாம ஊரை சுத்திகிட்டு இருந்தாலும், சலூன் கடை வச்சு மத்தவங்களுக்கு முடி வெட்டி வேலை செய்து கிட்டு இருக்கிற தன்னோட நண்பன் சந்தானத்தை டார்ச்சர் பண்ணி படுத்தி எடுக்கிறார். ஆர்யாவோட அண்ணனுக்கு கல்யாணம் ஆக, அவருக்கு வர்ற பொண்டாட்டியோட தங்கையான ஹீரோயின் நயன்தாரா மேல இவருக்கு காதல் பச்சக்குன்னு வந்துடுது.

உடனே போய் தன்னோட அண்ணிகிட்ட நயனதாராவ பொண்ணு கேட்க, தண்டச்சோறா இருக்கிற உனக்கு எப்படி பொண்ணு கொடுக்க முடியும்ன்னு சொல்லி மூஞ்சில காரி துப்பாம அசிங்க படுத்திடறாங்க. தன்னோட அண்ணன், நயன்தாராவோட அப்பா, இப்படி எல்லோருமா சேர்ந்து மேலும் அவமான படுத்த, இவரும் ஆவேசத்தோட வீட்டை விட்டு வெளிய போய் அண்ணாமலை ரஜினி மாதிரி சீக்கிரம் பணக்காரனாகும் 'முடி'வோடு சந்தானதோட சலூன்ல செட்டில் ஆகிறார். என்ன பண்ணி பெரிய ஆள் ஆகலாம் அப்படின்னு யோசிக்கும் போது, தன்னை மாதிரி பிட்டு வச்சு பெயில் ஆன பத்தாம் வகுப்பு பசங்களுக்கு எல்லாம் டுடோரியல் சென்டர் ஆரம்பிச்சு அவர்களை பாஸாக்கி தானும் எப்படி வாழ்க்கைல முன்னேறுகிறார் என்பது தான் கதை.

ஆர்யா நடிப்பில் அசத்துகிறார். காமெடியும் இயல்பாய் வருகிறது. ஆனாலும் கிளைமாக்ஸ்ல வர்ற ஜீவா காமெடில இவரையும் மிஞ்சி விடுகிறார். ஹீரோயின் நயன்தாரா எப்பவும் போல ஏதோ ஒரு பவுடர மூஞ்சில பூசிகிட்டு ஏதோ நடிக்கிறார். இவங்கள பார்த்தாலும் ஏதும் மூடு வரல. இவங்கள பத்தி எழுதவும் மூடு வரல.ஆனா படத்துல ஆர்யாவில் இருந்து ஜீவா வரைக்கும் சூப்பர் பிகருன்னு அடிக்கடி சொல்றாங்க. ஒருவேளை அவங்க பிகருன்னு சொல்றது முகத்தை பார்த்து இல்லையோ?



"தலதளபதி" சந்தானத்துக்கு போஸ்டர் விளம்பரத்துல அதிகமாக முக்கியத்துவம் கொடுத்த மாதிரி படத்துலயும் ஹீரோயின விட அதிகமான காட்சிகளில் வருகிறார். நன்கு வயிறு வலிக்க  சிரிக்கவும் வைக்கிறார். கூட நடிக்கிற ஹீரோவையே பயங்கரமாக கிண்டல் பண்றது கவுண்டமணிக்கு அப்புறம் சந்தானம் தான். இவர் வர்ற சீன் எல்லாமே கைதட்டல் தான். படத்துல வர்ற அந்த கடன்காரனோட மகனா வர்ற குண்டு பையனும் நல்ல நடிச்சிருந்தான். கமல், பரத், விஜய் இப்படி படத்தில் நிறைய நடிகர்களை கிண்டல் பண்ணி இருக்காங்க.

இசை யுவன். "யார் அந்த பெண் தான்" பாட்டு மற்றும் பின்னணி ஓசை ஓகே. மத்தபடி பெரிய அளவுக்கு ஏதும் இல்ல. இது இயக்குனருக்கு ஒரு நல்ல படமாக அமைந்திருக்கலாம். யுவனுக்கு அல்ல.

படத்தோட ஆரம்பத்துல ஆர்யா அரிவால எடுத்துகிட்டு வில்லன தொறத்துவார். அதுக்கு கடைசில ஏன்னு காமிச்சு இருப்பாங்க. சான்சே இல்ல.
கண்டிப்பாக சந்தோசமா குடும்பத்தோடு போய் பார்க்கலாம்.

நமீதா டச் : பாஸ், Pass ஆகிட்டான்.




Sep 5, 2010

பலே பாண்டியா - நமீதா திரை விமர்சனம்



சரி இந்த படத்தோட விமர்சனம் பார்த்துட்டு போலாம்ன்னு பார்த்தா, நிறைய பேர் சிந்து சமவெளி படத்துக்கு தான் அதிகமா விமர்சனம் போட்டு இருந்தாங்க. நீங்க பள்ளிகூடத்துல சிந்து சமவெளி நாகரிகத்த பத்தி படிச்சு இருக்கலாம் (படிக்காதவங்க இங்க படிச்சு மனப்பாடம் பண்ணுங்க). ஆனா இந்த சினிமா சமவெளி ஒரு அநாகரிகம் என்று பரவலாக சொல்றாங்க (இந்த மாதிரி எல்லாம் படம் எடுத்து, சின்ன புள்ளைங்க மனசுல சாரி, பெரியவங்க மனசுல நஞ்சை விதைக்காதிங்க). அதனால நானும் அநாகரிகம் கருதி பலே பாண்டியா படத்துக்கு வண்டிய கிளப்பினேன்.

சரி படத்தோட ரிசல்ட் என்ன? இவரு பலே பாண்டியனா? இல்ல, பல்பு கொடுக்குற பாண்டியனா?

ஹீரோ பாண்டியன் (விஸ்ணு) எது செஞ்சாலும், துரதிஷ்டம் Vodafone dog மாதிரியே கூட பாலோவ் பண்ணிகிட்டே வருது. ஒரு கட்டத்துல வெறுத்து போய் நிறைய தடவ சாக முயற்சி பண்ணி, அதுவும் துரதிஷ்ட வசமாக முடியாம போகிறது. இதனால இவர் ஒரு பெரிய தாதாகிட்ட பத்தாயிரம் ரூபாய் கொடுத்து தன்னை கொல்ல சொல்லி வற்புறுத்துகிறார். அவரும் அதுக்கு சம்மதிச்சு பாண்டிய கொல்ல ஜாதகம் பார்த்து ஒரு நல்ல நாள் குறிச்சிடறார். இதுக்கு நடுவுல இவர் ஹீரோயின் பியாவ சந்திச்சு இவரது வாழ்க்கை மாற, இவர் செத்தாரா? இல்லையா? கடைசியா என்ன நடக்குது அப்படிங்கறத ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் காமெடியா  சொல்லி இருக்காங்க. கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்.
 

ஹீரோ விஸ்ணு இந்த கதைக்கு சரியான தேர்வு. இவ்வொரு முறையும் லக் இல்லாம இவருக்கு நடக்கிற விஷயம் எல்லாமே சிரிப்பு சர வெடிகள்.




பியா, அழகான சுருட்டை முடி குட்டி பிசாசு. குட்டி பொண்ணுக்கு குட்டை பாவாடை தான் அப்படின்னு இயக்குனர் சொல்லி இருப்பார் போல. கலைவாணர் விவேக் ஆங்கிலோ தமிழர் கேரக்டர்ல வந்து, அவர் பங்குக்கு அதகள படுத்தறார். அதுவும் அந்த ஒரு ரூபா அரிசி காமெடிக்கு தியேட்டரே அதிர்ந்தது.

ரவுடிகளாக வர்ற எல்லோருமே நல்லா பண்ணி இருந்தாங்க. படத்தில் வர்ற  அரசியல்வாதி ஒரு தடவ ஜாலியா குட்டிங்களோடு இருக்கும் போது அதை வீடியோ எடுத்து ஹீரோயினோட அப்பா வெளியிடபோறேன்னு சொல்லி மிரட்டுவாரு. அதுக்கு அந்த அரசியல்வாதி சொல்லுவாரு "பிரிண்ட் நல்லா இருந்துச்சுன்னா பார்த்துட்டு திருப்பி அனுப்பிச்சிடு. மிரட்டாத".

இசை பாடகர் தேவன் ஏகாம்பரம். மிகவும் சுமார் ரகம். என் பக்கத்துல உட்காந்திருந்த பெரியவர் ஒவ்வொரு தடவ பாட்டு போடும் போதும் என்னை பார்த்து "தம்பி பாட்டு முடிச்சவுடனே என்னை எழுப்பி விடு" அப்படின்னு சொல்லிட்டு தூங்கிகிட்டே இருந்தாரு. உண்மையாலும் பாட்டு மட்டும் இல்லைனா படம் நல்லா இருந்திருக்கும். இவர் பாடகர் அப்படிங்கறதனாலயோ என்னவோ இசையை விட பாடல் வரிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்.

இன்னும் இந்த தமிழ் சினிமால எத்தனை நாளைக்கு தான் இந்த பாட்டு வைக்கற கலாச்சாரம் இருக்குமோ தெரியல. என் பையன் பொறக்கறதுக்குள்ள பண்ணலைனாலும் பரவாயில்லை எனக்கு பேரன் பேத்தி பொறக்கறதுக்குள்ளவாவது இத நிப்பாட்டிகோங்க.

இயக்குனர் சித்தார்த் முதல் படத்துலையே நல்லா பண்ணி இருக்கார். வசனமும்
அருமை. வாழ்த்துக்கள் சித்தார்த்.

மதராசப்பட்டினம் படத்திற்கு அடுத்து, கல்பாத்தி அகோரம் சகோதரர்களின் இன்னுமொரு சிறந்த படைப்பு "பலே பாண்டியா".

நமீதா டச் : பலே பாண்டியா, கலக்கிட்ட.