Dec 28, 2011

Your Highness - ஹாலிவுட் சினிமா விமர்சனம் (18+)

2012. புது வருடம் வரப் போகிறது.

இந்த நியூ Year-ஐ எப்படி கொண்டாடலாம்ன்னு பரபரன்னு நகத்தை கடிச்சிகிட்டு சந்தோசமாய் காத்திருக்கீங்களா?

"நியூ இயர்ன்னா என்ன புதுசாக இருக்க போகுது? எப்பவும் போல அடுத்த நாள் காலையில் எந்திரிச்சு பல் விலக்கி தான் ஆகணும்" அப்படின்னு வாழ்க்கையையே போராக பீல் பண்ணி பேசி சோகமாக இருக்கீங்களா?

எப்படி இருந்தாலும், நீங்கள் பார்க்க வேண்டிய படம் இது. 


 
ராஜா, ராணி மற்றும் பயங்கரமான மந்திரவாதி போன்ற கேரக்டர்களை வைத்து சீரியசாய் எடுக்கப்பட்ட பேண்டசி படங்களை கொடுமையாய் கலாய்ப்பதற்கென்றே வந்த goofy வகை படம்.

இதை போல தமிழில், சிம்பு தேவனால் எடுக்கப்பட்ட ஒரு மோசமான முயற்சி "இம்சை அரசன் 23 -ஆம் புலிகேசி"

படத்தின் கதை,

ஒரு வயதான அரசன். அவனுக்கு பிறந்த இரண்டு இளவரசர்கள். மூத்தவன் Fabious வீர தீரங்களில் சாகசம் புரிந்து, அடிக்கடி நிறைய quest களை வெற்றிகரமாக முடித்து நாட்டு மக்களின் அன்பை பெறுகிறான். ஆனால் இளையவன் Thadeous, ஒரு திறமையும் இல்லாமல் ஊரை சுற்றி, பொழுதை கழிக்கும் உதவாக்கரை இளவரசன்.

ஒருமுறை இளவரசன் ஒரு மந்திரவாதியிடம் சிக்கி கொண்டிருந்த ஒரு அழகான Virgin (கற்பு கலையாத) பெண்ணை காப்பாற்றி கொண்டு வந்து திருமணம் செய்து கொள்ள இருக்கையில் மீண்டும் அந்த மந்திரவாதி வந்து அந்த பெண்ணை தூக்கி கொண்டு போய் விடுகிறான். இரண்டு நிலவுகள் சங்கமிக்கும் நேரத்தில் அவளை புணர்ந்து, அதனால் பிறக்க போகும் ஒரு டிராகன் மூலம் உலகையே ஆட்டி படைக்கலாம் என்பது மந்திரவாதியின் திட்டம்.

இந்த முறை உதவாக்கரை இளவரசனும், அவனுடைய அண்ணனுடன் இந்த quest-ற்கு வலுக்காட்டாயமாய் அனுப்பி வைக்கப் படுகிறான். இருவரும் வெற்றிகரமாய் சென்று மந்திரவாதியை அழித்து, அந்த Virgin பெண்ணை காப்பாற்றி கூட்டி வந்தார்களா? அவள் தன் virginity -யை யாரிடம் இழந்தாள்? என்பதே படம்.


படம் முழுதும் வாய் வலிக்க சிரித்து கொண்டே இருக்க வைக்கிறார்கள். இதில் burst out laughing சீன்கள் அதிகம். fuck என்ற வார்த்தையை Thadeous அடிக்கடி மந்திரம் போல அசால்ட்டாய் உச்சரிக்கிறான். 

சில vulgar ஆன காட்சிகளும், நிறைய வசனங்களும் இருப்பதால் வயதுக்கு வராத ஆண்களும், பெண்களும் இதை தவிர்த்து விட்டு, பேஸ்புக்கில் போய் Angry Birds விளையாடுங்கள்.  

Its Definitely for Matured

ஒய் திஸ் கொலைவெறி டி? பாடலைப் போல, இந்த படம் வெளிவந்த போது சீப்பான படம், மொக்கை காமெடி என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை மீடியாக்கள் வைத்தன. ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் இதை பாருங்கள், சில மணிநேரம் இனிமையாய் கழியும். 

Be Ready to ROFL ...



டோர்ரன்ட் டவுன்லோட் லிங்க்

http://extratorrent.com/torrent/2471463/Your+Highness%5B2011%5DUNRATED+BRRip+XviD-ExtraTorrentRG.html



Dec 20, 2011

Nonsense Talking 1

நீங்கள் இந்தியாவின் இன்றைய இளைய தலைமுறையினரா?

இந்த நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் என்ன செய்யலாம்?

  • அப்துல் கலாம் சொன்னது போல் கனவு கண்டு புதிதாக ஏதாவது கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்கி நாட்டிற்கு பெருமை சேர்க்கலாம்.
  • ஏழை, அநாதை மக்களுக்கு உதவி செய்து அவர்கள் வாழ்வை வளம்பெற செய்யலாம்.
  • ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்க்காக உயிரை கொடுக்காலாம்.  




இப்படி எல்லாம் மிகவும் கஷ்டப் பட்டு யோசித்து காமெடி பண்ணாதிர்கள்.

உங்களால் மிக எளிதாய் செய்ய முடிகிற, நாட்டிற்கு பயன்படக் கூடிய காரியம் என்னவென்றால், நீங்கள் திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ளாமல் இருப்பதே!

எதுவும் தெரியாத, சரியாக பேசி கூட பழகாத குழந்தையிடம் போய்
"உனக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சி பாப்பா வேணுமா?" என்று கேட்பார்கள்.

பாவம் அந்த குழந்தை.

எந்த ஒரு குழந்தையும் தனக்கு தம்பி பாப்பாவோ, தங்கச்சி பாப்பாவோ வேண்டுமென்று கேட்பதில்லை. அதற்கு தேவை விளையாட தேவையான பொம்மைகள் மட்டுமே.

Pollution, Corruption போன்ற நாட்டை பாதிக்கும் எந்த ஒரு பிரச்சினைக்கும் மக்கள் தொகை மட்டுமே மூலக் காரணம். அதை கட்டுபடுத்தாமல் "Save Plastic Bags", "Save Water" "Save Petrol" "Save Paper Save Tree" என்பது போன்ற வெட்டி campaign கள் உண்மையில் உருப்படியானது அல்ல.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல ஆயிரம் பேர் சேர்ந்து சேமிக்கும் பிளாஸ்டிக், தண்ணீர், பெட்ரோல் போன்றவற்றை பயன்படுத்துகிறான்.
 

பிச்சைக்காரர்களுக்கு இரண்டு ரூபாய்க்கு குறைவாக பிச்சை போட கூச்சப்படும் நாம், ஒரு ரூபாய் போட்டு பிளாஸ்டிக் பையை கூச்சப் படாமல் வாங்குவோம். இருக்கும் மரங்களை வெட்டி ஐ.டி. பார்க் போன்ற பெரிய கட்டிடங்களை கட்டிவிட்டு ஆபிசில் Go Green Day நிகழ்ச்சி நடத்துவோம்.

ஜனத்தொகையை கட்டுபடுத்த ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள் எதுவும் செய்ய மாட்டார்கள். நாம் கட்டுகடாங்கா எண்ணிக்கையில் இருக்கும் வரையில் தான் அவர்களுக்கு நல்லது. அரசின் "நாமிருவர் நமக்கொருவர்" எனும் விழிப்புணர்வு பலகைகளை கூட எங்கேயும் பார்க்க முடிவதில்லை.

சிலர் ஆண் குழந்தைகளுக்காக முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் என்ன மன்னர் குடும்பமா? உங்கள் வம்சம் தொடர்ந்து வர வேண்டும் என்பதற்கு.

மனிதர்கள் Waste bags போன்றவர்கள். அவர்களால் எதுவும் இந்த உலகிற்கு பிரயோஜனம் இல்லை. மனித விலங்கு மட்டும் இல்லாமல் இருந்தால் இந்த உலகம் நன்றாக இருக்கும். இயற்கை பேரழிவுகள் அவ்வப்போது  நிகழ்வது எப்போதும் நன்மையே. இந்த 2012 மாயன் காலண்டர் படி உலகம் அழிந்தால் நன்றாக இருக்கும். 

Save Waste bags.



நான் ஏன் ப்ளாக் எழுதி கொண்டிருக்கிறேன்? எழுதுவது சிலசமயம் அசிங்கமாய் தோன்றுகிறது. ஐ.டி துறையில் வேலை செய்யும் எல்லோரும் வெளிநாடு சென்று அதிகம் பணம் சம்பாதிக்கும் போது நான் வெட்டியாய் இங்கே பொழுதை கழிக்கிறேன்.

எனக்கு இலக்கியம், இலக்கியவாதிகள், இலக்கிய கூட்டங்கள் என்றாலே மிக அலர்ஜி. அதிகம் எழுதி எழுதி நானும் எழுத்தாளர் ஆகி விடுவேனோ என்று பயம்.

எழுத்தாளர்களின் வாழ்க்கை அவ்வளவு நார்மல் ஆக இருக்காது. ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு தனி வட்டத்தில் வாழ்வார்கள். கிட்டதட்ட நம்முடைய பிளாகர்களை போலத்தான். எனக்கு எழுத்தாளர்களின் பெயர்கள் தெரியும். யாரையும் அதிகம் படித்ததில்லை. படிப்பதிலும் விருப்பம் இல்லை. எழுத்தாளன் ஆக வேண்டும் என்றால் அதிகம் படிக்க வேண்டும் அல்லது அதிகம் ஊர் சுற்ற வேண்டும்.

எவன் ஒருவன் தன்னுடைய எழுத்துக்கு புகழ் தேடாதவனாக, தன் எழுத்தின் மேல் கர்வம்/விருப்பம் கொள்ளாதவனாக இருக்கிறானோ அவனுக்கு தான் நன்றாய் எழுத வரும் என்று எங்கேயோ படித்தது. நம்மால் அதுபோல இருப்பது கஷ்டம்.

இணையத்தில் நன்றாய் எழுதுபவர்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாய் இருக்கிறது. அதிகம் அறியப்படாமல் அருமையாய் எழுதிகொண்டிருக்கும் பிளாகர்களை எனக்கு யாராவது அறிமுகம் செய்யுங்கள் ப்ளீஸ்.

நான் தமிழ் Aggregator சைட்டுகளில் இனி எனது பதிவுகளை இணைக்கப் போவதில்லை. சினிமா பதிவுகள் விதிவிலக்கு ஆகலாம். தனியாய் எழுதும் போது எந்த கட்டுப்பாடும் இல்லாமல், எதைப் பற்றியும் கவலை இல்லாமல் சுதந்திரமாய் எழுதலாம். என் எழுத்து இனி எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நான் எழுதுவது உங்களுக்கு பிடித்திருந்தால் படியுங்கள். நான் பிரபலமாக விரும்பவில்லை. இப்படி எழுதுவதால் நான் உருப்படி இல்லாமல் தான் போய்க் கொண்டிருக்கிறேன்.
 


நீங்கள் புத்திசாலிதனமாய் யோசிப்பவர் என்று உலகுக்கு காட்ட வேண்டுமா?

சிறந்த ஒரு வழி.

ஊழலுக்கு எதிராய் போராடும் அன்னாஹசாரேவைப் பற்றியோ அல்லது  கூடங்குளம் பிரச்சினையில் தன் நீண்ட மூக்கை நுழைத்த அப்துல்கலாமை பற்றியோ அவர்கள் சாகும் வரை திட்டி எழுதிக் கொண்டே இருங்கள். ஆனால் இருவருக்கும் அதிகம் வயசாகி விட்டது. அதனால் சீக்கிரம் உங்கள் பிரதிக்கு(பதிவுக்கு) முந்துங்கள்.

மாதிரி தலைப்புக்கள்.

முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரே!
படித்த முட்டாள் அப்துல்கலாம்!

ஆனா பாருங்கள் இந்த ரெண்டு பேருமே, குழந்தை குட்டின்னு ஏதும் வைத்துக் கொள்ளாமல், இந்த நாட்டு மக்களை ஏமாற்றி தங்களை இந்த உலகை காக்க வந்த கடவுள்களாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். என்ன ஒரு அந்நியாயம்?

பிகர் பின்னாடி சுற்றி, சைட் அடித்து, (கல்யாணம் பண்ணி) ஜாலியாய் மேட்டர் செய்து, குடும்பமாய் வாழும் நம்மை அவர்கள் இருவரும் அவ்வளவு எளிதாய் ஏமாற்ற முடியுமா என்ன? Bloody Bachelors.

குற்றம் சொல்வதற்கென்றே சிலர் வாழ்கிறார்கள். நக்கீரர்களாம். பிடரி கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சொல்லுபவர்கள்.



Dec 8, 2011

லிட்டில் Mark Zuckerberg - ஆபாயில் (அப்படியே சாப்பிடுங்க)




ற்போதைய ஜெனரேசனில் பிறக்கும் குழந்தைகள் எளிதாய் டெக்னாலஜிகளை கற்றுக் கொள்கின்றனர். முன்பெல்லாம் கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் தங்கள் குழந்தைகள் நல்ல புத்திசாலியாய் பிறக்க நல்ல விசயங்களை பற்றி படித்துக் கொண்டோ, கேட்டுக் கொண்டோ இருப்பார்கள்.

"அர்ஜூனனின் மகன் அபிமன்யூ, அவரது தாயின் வயிற்றில் இருந்தபோது அர்ஜூனன் அவரது தாய் சுபத்ராவிற்கு சக்கரவியூகம் ஏற்பாடுகளைப் பற்றிக் கூறியபோது கேட்டதால், அவனுக்கு சக்கரவியூகம் பற்றி பகுதியளவு தெரியும். சுபத்ரா முதல் பகுதிய விளக்கங்களைக் கூறும்போது மட்டுமே விழிப்புடன் இருந்தார் அதன் பின்னர் அவர் தூங்கிவிட்டார். எனவே அபிமன்யூவிற்கு அந்த அமைப்பிற்குள் நுழைவது எவ்வாறு என்பது மட்டுமே தெரியும். ஆனால் அதிலிருந்து தான் எவ்வாறு வெளிவருவது என்பது தெரியாது. " Read full story here.


தாய் சாப்பிடும் உணவு தன் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு கடத்தப்படுவது போல அவர்களுடைய செயல்பாடுகளின் நுணுக்கங்களும் கடத்தப் படலாம்.

என் அக்கா கர்ப்பமாய் இருந்த நேரத்தில், சீனாவில் இருக்கும் என் மாமாவுடன் தினமும் போனிலும் Skype சாட்டிலும் பேசிக்கொண்டிருப்பாள். என் அக்கா மகன் நகுலன் அவனுக்கு இரண்டு, இரண்டரை வயதான போதே, அவனாகவே இந்தியாவில் இருக்கும் எனக்கு மொபைல் மூலம் போன் செய்து விடுவான். கம்ப்யுட்டரை ஆன் செய்து உள்ளே சென்று தனக்கு பிடித்த பாடல்களை கேட்பது முதல், தன் அப்பாவுக்கு ஆன்லைன் மூலம் போன் செய்வது முதல் எல்லாம் அத்துபடி.

இத்தனைக்கும் அவனுக்கு ABCD கொஞ்சம் கொஞ்சம் சொல்ல தெரிந்தாலும், எழுத்தை recognize பண்ண சுத்தமாக தெரியாது. தமிழில் பேசச் சொன்னால் வேற்று கிரகவாசி போல ஏதோ உளறுவான். அவனை கேமராவில் போட்டோ எடுக்கும் போதெல்லாம் ஒன், டூ, த்ரீ cheese என்று அழகாய் சீன மொழியில் சொல்லுவான். இரண்டு வருடம் சீனாவில் இருந்ததால் அங்கிருக்கும் சீன மக்களோடு பேசி பேசி என் அக்காவை விட அதிகம் சீன மொழியில் புலமை பெற்று விட்டான்.

சிலநாள் நான் ஆபிசில் வேலை செய்து கொண்டிருக்கும் போது டொய்ங் டொய்ங்கென்று சத்தத்துடன், ஜிமெயில் சாட் பாக்ஸில் மெசேஜ் Blink ஆகும். 

sfsdflksjdslkfsdfddddddd[]dddddddddddddsdgnldfgdfgggggg
3333333333sdfsnfgoiurtnyrtyrty34343446343erereeyeeertekrt;erke;
erbmvmbpmmmmmmmmmmmmerttttttttttttttdvfghgdnoiyldfkds kiiiiiiiiiiiiiiiiiidfgdfdnflknkljoooooooooooooefdsfgdfgdfdfsdfsd[]w
4r34534sdf678979 /*dfgsgdfhdghdsghdfsgsdfgrt65ergefgdfgdfg

அவன் அனுப்பிய இந்த Encrypted மெசேஜ்ஜை யாராவது Decrypt பண்ணி கொடுத்தால் நல்லது. டெக்னிகல் ப்ளாக் வைத்திருக்கும் ப்ளாகர்களுக்கு கடுமையான சவால்.


நகுலன் என்றொரு அழகன்


மார்க் ஜுகர்பெர்க்கின் வாழ்கையை பற்றிய திரைப் படமான The Social Network படம் போரடிக்காமல் விறுவிறுப்பாகவே சென்றது. அந்த படம் பார்த்தப் பிறகு எனக்கு பேஸ்புக் தளத்தை Hack செய்யும் ஆசை வந்தது. சைபர் க்ரைமில் மாட்டிக் கொள்வேன் என்று பயந்து விட்டு விட்டேன். ;-)





புது டெக்னாலஜிகள் எல்லாம் நமக்கு ஒரு வகையில் பயனுள்ளதாக இருந்தாலும், மற்றொரு வகையில் நம்மை சோம்பேறிகளாகவும், முட்டாள்களாகவும் வளர்க்க போட்டி போட்டுக் கொண்டு கண்டுபிடிக்கப் படுகின்றன.

நான் என்னுடைய மொபைல் நம்பரை தவிர யாருடைய நம்பரையும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டேன். எத்தனை நம்பர் மாத்தினாலும் கடைசி நம்பர் மட்டுமே நினைவில் இருக்கும். ஒவ்வொரு முறையும் நம்பர் மாற்றும் போதும், 

"6969696969 இனி என் நம்பர்"

என்று Uninor விளம்பரத்தில் வருவது போல நான் பெருமையாக பிறரிடம் சொல்லி கொள்வேன்.

தினசரியிலோ, புத்தகத்திலோ ஒரு வார்த்தையை தேட வேண்டிய சந்தர்பம் வரும் போது, Ctrl + F -இன் ஞாபகம் வந்து தொலைக்கிறது.

எங்கள் ரூமில் நான் நுழைந்தாலே டிவியில் சன், கே, விஜய், அல்லது ஒரு இசை சேனலோ, காமெடி சேனலோ தான் ஓடி கொண்டிருக்கும். ஒரு செய்தி சேனலுக்கோ, டிஸ்கவரி சேனலுக்கோ தப்பி தவறி கூட போக மாட்டார்கள். அப்படியே சேனல் தவறி சென்று விட்டாலும், "சாமி தெரியாம பண்ணிபுட்டோம். எங்கள மன்னிச்சுடு" என்று உடனே கடவுளிடம் மன்னிப்பு கேட்டு தோப்பு கரணம் போட்டு விடுவார்கள்.

ஒரு மணிநேரம் செல்போன் சார்ஜ் இல்லை என்றால் நம் உடலில் ரத்தம் ஓடுவது நின்று பிணமாகி விட்டது போல ஒரு உணர்வு வந்து விடுகிறது.

செயற்கை கருவிகள் நம் உடலில் தங்கத்தை போன்று ஒரு அங்கமாக மாறி விட்டது. நம் உடலிலே நட்டு, போல்டு, செயற்கை இதயம் எல்லாம் வைக்க ஆரம்பித்து வெகு ஆண்டுகள் ஆகிவிட்டது.  A-,AB+ போன்ற அரிய ரத்த வகை ஆபரேசன்கள் செய்வதற்கு பயன்படுத்த செயற்கை ரத்தத்தையும் கண்டுபிடித்து விட்டார்களாம்.

இன்னும் சில வருடங்களில் உங்கள் மூளையை கழட்டி விட்டு இன்டெல் Processor வைத்து தேவையான அனைத்து சாப்ட்வேர்களையும் load செய்து விடுவார்கள். சயின்டிஸ்டுகள், சிந்திக்கும் ரோபட்களை கண்டுபிடிப்பதற்கு பதிலாக நம்மையே ரோபட்டாக மாற்றி விடவும் வாய்ப்புண்டு. ஒவ்வொரு முறை processor அல்லது சாப்ட்வேர் அப்கிரேட் (Upgrade) செய்யும் பொழுது எந்திரன் சிட்டி ரஜினி போல, ஐ ஆம் நாராயணசாமி  Upgraded வெர்சன் 2.0 என்று சொல்லி கொள்ளலாம்.

மூன்று வருடங்கள் வேளச்சேரியின் சகதியில் படுத்து உருண்டு விட்டு (வசித்துவிட்டு), பரங்கிமலை பகுதியில் என் நண்பன் ரூமுக்கு மாறியுள்ளேன். வேளச்சேரியை விட்டு வரும் போது பெரும் நிம்மதி ஏற்படுகிறது. சுற்றி சுற்றி ஏரிகள் அதிகம் இருந்தாலும் ரொம்பவும் வறட்சியான ஏரியா. ஏரி இருப்பதால் வேளச்சேரி என்று பெயர் வந்ததா? என்று தெரியவில்லை.

மழைகாலத்தில் மட்டும் வேளச்சேரி சாக்கடையால் நிரம்பி வழியும். பொதுவாக வெள்ளப் பகுதிகளை பெரிய பூட்ஸ் போட்டு கொண்டு பார்வை இட  வரும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வேளச்சேரியில் மட்டும் தங்கள் பொற்பாதங்களை வைப்பதில்லை.

நாம் பேருந்தில் செல்லும் போது சாக்கடையோரம் வசிக்கும் குடிசை வாழ் மக்களை பார்த்து பரிதாப்பட்டு விட்டு கடந்து செல்லுவோம். ஆனால் மழைக்காலம் வந்து விட்டால், நம்மை பார்த்து நாமே பரிதாப்பட்டுக் கொள்ள வேண்டும்.

மடிப்பாக்கம் பக்கம் வீடு பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் மடிப்பாக்கம் ரோட்டின் நடுவில் நின்று வாலை நீட்டி, பைக்கில் செல்லும் நம்மிடம்  லிப்ட் கேட்கும் மாடுகளை நினைத்ததும் அந்த எண்ணம் கைவிடப் பட்டது. மடிப்பாக்கத்திற்கு மாடுப்பாக்கம் என்றே பெயர் வைத்திருக்கலாம். ஜெயலலிதாவிடம் சொன்னால் ஒரு Flow வில் அதையும் மாற்றி இருப்பார்.

பரங்கி மலையில் உள்ள சர்ச்சில் இருந்தோ, மசூதியில் இருந்தோ எதோ ஒரு பாட்டு பாடிக் கொண்டிருக்கும். நான் கூடிய சீக்கிரம் மதம் மாற வாய்ப்புண்டு.

ஹாலிவுட் படங்களில் மூச்சு விடாமல் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்க்கையில் நம் காதில் புகை வரும். அதேபோல் புது ரூமில் உள்ள ஒரு நண்பன் தமிழை மூச்சு விடாமல் பேசுகிறான். நான்கைந்து தடவை திரும்ப திரும்ப கேட்க வேண்டி உள்ளது. தமிழ் மொழி மற்றும் அதன் காலாச்சாரம் மீது காதல் கொண்டு தமிழை கற்க விரும்பும் வெளிநாட்டு பெண் எவளாவது இவன் பேசுவதை கேட்டால், Why This Kolaveri? என்று கேட்டுவிட்டு தன் நாட்டிற்கு அடுத்த பிளைட் பிடித்து விடுவாள்.

தென் இந்தியாவின் புகழ் மிக்க திரையரங்கான பரங்கிமலை ஜோதியை இன்னும் சென்று பார்வையிடவில்லை. பிட்டுக்கு பெயர்போன இத்திரையரங்கில், பிட்டு துணி அணிந்து நடிப்பதற்கு பெயர்போன ஷகிலா ஆண்டியின் படங்கள் போடுவது எப்போதோ நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது ஆபாசம் இல்லாத (??) சுத்தமான தமிழ் படங்கள் மட்டுமே திரையிடப் படுகின்றன.

அதனால் தற்போது ஐயப்ப சாமி பக்தர்கள் சபரி மலை ஜோதியை கண்டு பக்தியில் பரவசம் அடைவது போல, நான் இந்த பரங்கிமலை ஜோதிக்கு சென்று பரவசம் அடையமுடியாதது மிகப் பெரிய துரதிஷ்டம்.




மிழ் நாட்டின் அடுத்த முதல்வர்..
தமிழ்நாட்டின் ஜான்சி ராணி..
தமிழ்நாட்டின் விடிவெள்ளி..
தமிழ்நாட்டின் கவிமங்கை..
தமிழ்நாட்டின் தியாகச் செம்மல்

ஸ்ஸ்... மூச்சு வாங்குது.

திருமதி. கனிமொழி அவர்கள் திகாரில் களி தின்னதை மறக்கடிக்க சென்னை ஏர்போர்ட்டில் கொடுத்த வரவேற்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த வரவேற்ப்பை திகாரிலிருந்து டெல்லி ஏர்போர்ட் வரை ஏன் கொடுக்கவில்லை? ஆங்கில நியூஸ் சேனல்கள் கவர் ஸ்டோரி போட்டு அலங்கரித்து விடுவார்கள்.

ஆனால் இதே வரவேற்ப்பை கனிமொழி டெல்லி செல்லும் போது கொடுத்திருந்தால், தமிழ்நாட்டிற்கு இன்னும் நிறைய செல்வங்களை அள்ளி வந்திருப்பார்.
 
கனிமொழி சென்னை திரும்பிய பிறகு, திமுக வின் பழைய ரத்தம் எல்லாம் எடுக்கப் பட்டு புது ரத்தம் பாய்ச்சப்பட்டதால் அதன் தலைவர்களும் உறுப்பினர்களும் தெம்பாக கட்சி வேலைகளை செய்கின்றதாக தகவல். வலையுலக தி.மு.க அனுதாபிகளும் சுறுசுறுப்பாக ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் போடுவதாக தெரிகிறது.


ற்போது ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் படு மொக்கையாக இருப்பது கடும் அயர்ச்சியை தருகிறது. போராளி சூப்பராக இருக்கிறது என்ற விமர்சனத்தை படித்து விட்டு போய் பார்த்தால் சன்டிவியின் காமெடி சீரியல் போல் படு அமெச்சூர் (amateur)  தனமாய் இருக்கிறது. இசையும் பாடலும் காதுக்குள் வண்டு புகுந்த பீலிங்கை ஏற்படுத்துகின்றன.

மந்திரப் புன்னகை கரு பழனியப்பனுக்கு அடுத்து சசிகுமார் தான் ரொம்ப புத்திசாலிதனமாய் வசனம் பேசுகிறார். இவரும் நாயகியும் சித்தப்பாவும் மகளும் போல இருப்பது படத்திற்கு பலம்.




Nov 23, 2011

Seducing Mr Perfect - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)


தலைப்பை வைத்து இந்த படம் கொஞ்சம் கில்மாவாக இருக்கும் என்று என்று ஆசைப் பட வேண்டாம். அழகான காதல் + நகைச்சுவை கலந்த அட்டகாசமான கதை. கொரியன் மூவி lovers மிஸ் பண்ணவே முடியாத/கூடாத படம்.

சாதரணமாய் கொரியன் பட வசனங்களில் நீங்கள் கொஞ்சமான ஆங்கில வார்த்தைகளை கூட கேட்பது கடினம். "Hello", "Thank You" என்பதற்கு கூட அவர்கள் ஆங்கிலத்தை பயன்படுத்துவதில்லை. கொரியன் மக்களுக்குக்கும் ஆங்கிலத்துக்கும் அதிக பட்ச தூரம். இதை வைத்து 2003-இல் "Please Teach Me English" என்ற சுமாரான காமெடி படம் கூட வந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

안녕 = An nyoung = Hello, informal
안녕하세요 = An nyoung ha seh yo = Hello, formal
여보세요 = yaw bo seh yo = Hello on a telephone

கொரியன் மொழியை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், ஒரு முறைக்கு முந்நூறு முறை யோசியுங்கள். இந்த மொழியை பேச முயற்சி செய்தால் உங்கள் வாயும், எழுத முயற்சி செய்தால் உங்கள் கைகளும் சுளுக்க கூடும்.

அவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிக்க நீங்கள் அதிகம் பொறுமையை வளர்த்து கொள்வது அவசியம். அவர்கள் பேசுவதை கேட்பது சிலருக்கு (எனக்கு) இன்பத்தையும், சிலருக்கு (என் நண்பனுக்கு) வெறுப்பையும் கொடுக்கும்.

ஆனால் இந்த படத்தில் நாயகனுக்கு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த கேரக்டர் என்பதால், அவருக்கு கொரியன் மொழி புரிந்தாலும் பேசத் தெரியாது. அதனால் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். இந்த படம் வெளியான போது கொரியன் மக்கள் ஆங்கில வசனத்தை புரிந்து கொள்ள அதிகம் கஷ்டப் பட்டிருக்கிறார்கள்.

இனி படத்தின் கதை.

நாயகி (Min-Joon) -க்கு உண்மையான காதல் மீது அபார நம்பிக்கை. தன் காதலனுக்கு Gifts, Greetings Card என்று கொடுத்து தன் உண்மையான அன்பை பலவாறு வெளிப்படுத்தும் கேரக்டர். ஆனால் அவளுக்கு அமையும் ஒவ்வொரு காதலர்கள் அவளை dump செய்து விட்டு கழட்டி விட, அவள் உண்மையான காதலை தேடி தேடி அலைகிறாள்.

நாயகன் (Robin Heiden) நாயகிக்கு முற்றிலும் மாறான, உண்மையான காதல் என்பதில் துளியும் நம்பிக்கை இல்லாமல் "Its a Game. It has more Rules" என்று பேசும் கேரக்டர்.

இவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். நாயகி காதல் தெய்வீகமானது என்று சொல்வதை நாயகன் மறுக்கிறார். நாயகி, உண்மையான காதல் கண்டிப்பாக இருக்கிறது என்று விடா பிடியாய் சொல்ல, நாயகன் அப்போது "வேண்டுமானால் என்னை, நீ காதலிக்க வைத்து விடு" என்று கேட்க, நாயகி நாயகனை Seduce செய்ய நிறைய டெக்னிக்குகளை கையாள்கிறார்.

அதில் நாயகி வெற்றி பெற்று, நாயகனுக்கு உண்மையான காதலை மண்டையில் அடித்து புரிய வைத்தாரா? அல்லது தோற்று விட்டு தாடி வளர்க்க முடியாமல் கஷ்டப் பட்டாரா?

விடையை கீழேயுள்ள torrent -யை டவுன்லோட் செய்து பாருங்கள்.

முதல் லிங்க்:  (1.37 GB) - You have to register
இரண்டாவது லிங்க்: (1.65 GB)

நாயகி சுமாரான பிகர் என்றாலும், நடிப்பில் அவ்வளவு கியூட். Hero is a very Handsome guy. படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி பெட்ரோல் குண்டு போல பற்றி கொண்டு எரியும்.


நமீதா டச்: Seducing Mr Perfect - Get Seduced

டிரைலர் இங்கே.





Disclaimer:  இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. வெறும் ஹிட்சுக்காக மட்டுமே நமீதாவின் பெயர் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.

Related Posts:

My Tutor Friend - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)

My Little Bride - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)




Nov 15, 2011

My Tutor Friend - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)

கொரியன் சினிமாக்களில் ரொமாண்டிக் காமெடி வகையாறா(Genre) படங்களை அடிச்சுக்கவே முடியாது. அதிலும் இந்த படம் கொஞ்சம் அதிரடியான ரொமாண்டிக் காமெடி வகை.

இது முதல் பார்ட். இதன் இரண்டாம் பாகம் பெரிய அளவுக்கு இருக்காது. இந்த படத்தை நிறைய பேர் பார்த்திருக்கலாம். இந்த விமர்சனம் ரொம்ப நாளாக என் Draft-ல் கும்பகர்ண தூக்கம் தூங்கி கொண்டிருந்தது. இப்போது தான் தட்டி எழுப்பி விட்டுள்ளேன்.

கொரியன் படங்களில் "My" என்று ஆரம்பிக்கும் நிறைய படங்கள் பெரிய ஹிட் படங்களாகவே அமைந்திருக்கிறது.

My Sassy Girl
My Wife is a Gangster Series
My Boss My Teacher
My Girl and I

என்று இன்னும் நிறைய.



Tutor என்றால் வீட்டுக்கே வந்து பாடம் சொல்லி தருகிறவர்கள். உங்களுக்கே தெரியும் பணக்காரங்க மட்டும் தான் Tutor -யை "வச்சுக்க" முடியும். 

நாயகன் ஒரு பணக்கார வீட்டு பையன். ஹை ஸ்கூலில் படிக்கும் இவருக்கு அட்டகாசமாய் fight செய்ய வரும். இவரின் அதிரடியான fast மூவ்மேன்டினால் எதிரிகளை அழகாய் பந்தாடுபவர்.

ஸ்கூலில் உள்ள இன்னொரு கேங்குடன் (Gang) அடிக்கடி fight செய்து பொண்ணுகளை கவர்வதில் வல்லவரான இவரை பாடங்கள் மட்டும் ஏனோ கவருவதில்லை. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒரே வகுப்பில் படித்து சாதனை படைத்தது கொண்டிருக்கிறார் நம் நாயகன்.

நாயகி, யுனிவெர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஏழை குடும்பத்து பெண். இவருடைய அம்மா சிக்கனை fry பண்ணி விற்கும் தொழில் செய்கிறார். நாயகி அருகில் உள்ள சின்ன பசங்களுக்கு டியூசன் எடுத்து சம்பாதித்து அந்த வருமானம் மூலம் படிக்கிறார்.

அந்த பசங்க செய்யும் குறும்புகளுக்காக அவர்களை அடித்து விடுவதால் அடிக்கடி டியூசன் வேலையும் போய்விடுகிறது.

படத்தின் முதல் சீனிலேயே, பிஞ்சிலே பழுத்த இரண்டு குட்டி பசங்க, ஹீரோயின் உட்கார்ந்திருக்கும் டெஸ்க்குக்கு கீழே டார்ச் அடித்து அவர் போட்டிருக்கும் பாண்டீஸ்சின் (Panties) கலர் என்ன என்று ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி செய்தால் யார் தான் அடிக்க மாட்டார்கள்?

நாயகியின் அம்மாவுக்கு ஒரு பணக்கார நண்பி இருக்காங்க. அவர் தான் நாயகனின் அம்மா. நாயகனுக்கும் நாயகிக்கும் ஒரே வயசு தான்.

நாயகன் நன்றாக படித்து பாஸ் ஆக வேண்டும் என்று தன் பணக்கார நண்பி கேட்டு கொள்வதால் நாயகனுக்கு பாடம் சொல்லி தர நாயகியின் அம்மா நாயகியிடம் சொல்கிறாள். அப்படி சென்றால் அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தன் செமெஸ்டர் பீஸை கட்டிவிடலாம் என அவளும் சம்மதிக்கிறாள்.

நாயகன் ஒழுங்காக கையையும் காலையும் கட்டிக்கொண்டு நாயகியிடம் பாடம் கற்றாரா? இல்லை நாயகிக்கு நாயகன் ரொமான்ஸ் பாடம் கற்று கொடுத்தாரா? டியூசனில் என்னென்ன கூத்து நடக்கிறது?

டோர்ரென்ட் டவுன்லோட் செய்து கண்டு மகிழுங்கள். நிச்சயமாய் உங்களுக்கு பிடிக்கும்.

முதல் லிங்க்    (1.37  GB)
இரண்டாவது லிங்க் (700 MB)

நமீதா டச்:   My Tutor Friend , Lovely.

ட்ரைலர் இங்கே:



Disclaimer:  இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. வெறும் ஹிட்சுக்காக மட்டுமே நமீதாவின் பெயர் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.




Nov 1, 2011

சென்னையில் ஒரு மழைக்காலம் - ஆபாயில் (அப்படியே சாப்பிடுங்க)



சென்னை பெங்களூருவாக மாறி விட்டது.

இங்கிருக்கிற பொண்ணுங்க எல்லாம் ரொம்ப அழகாவும், மாடர்ன் ஆகவும் மாறிவிட்டார்கள் என்று அர்த்தம் இல்லை.

அதிகமாய் மழை பெய்வதால், பகலிலேயே குளிர்கிறது.

வெய்யில் காலத்திலேயே சாயங்காலம் வெளியே சென்று சூடாய் நாலு பஜ்ஜியை உள்ளே தள்ளி, தண்ணியை குடிக்கும் நம்ம ஆட்களுக்கு இப்போது சொல்லவே வேண்டாம்.

இந்த குளிரில் ஆபிஸ் போகவே தோன்றவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

பாதை எல்லாம் பள்ளமாக மாறி பருவ பெண்ணை பார்க்கும் வயசு பையனை போல அசிங்கமாக பல்லிளிக்கிறது. மழை காலம் முடிந்த பிறகு அம்மாவிடம் மனு போட்டு, இன்னொரு உள்ளாட்சி தேர்தல் நடத்த சொல்ல வேண்டும்.

Shoe போட்டு கொண்டு ஆபிஸ் செல்பவர்களின் நிலைமை படு திண்டாட்டம். சில இடங்களில் முட்டியளவு தண்ணீர் நிற்கிறது. பாவாடை அணிந்திருந்தால் எளிதாய் தூக்கி பிடித்துக்கொண்டு கடந்து விடலாம்.

இந்த மாதிரி நேரங்களில், நமது அரசு கிரியேடிவ் ஆன போட்டிகள் நிறைய வைத்து பரிசு கொடுத்து மக்களை குஷி படுத்தலாம்.

  • ஒரு பள்ளத்தில் கூட விடாமல் வண்டியை ஓட்டுவது.
  • ரோட்டில் உள்ள பள்ளத்தை தாண்டும் Long Jump. 
  • தேங்கி உள்ள நீரில் நீச்சல் போட்டி மற்றும் படகு போட்டி.

இன்னும் என்ன மாதிரி போட்டி வைக்கலாம்? என நீங்களும் கமெண்டில் சொல்லலாம்.

நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சென்னையில் வாழ முடியும்.

ஆனால் இந்த கொட்டும் மழையில், சிட்டியில் சில பேர் மட்டுமே சந்தோசமாய்  வண்டியோட்டி செல்ல முடியும்.

அவர்கள் ஆட்டோகாரர்கள்.



தமிழ் சினிமாவில் பாட்டே இல்லாமலும், ஒரே ஒரு பாட்டுடனும் நிறைய படங்கள் வந்து விட்டது.

தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டு வர தம் கட்டி முக்கி கொண்டிருக்கும் இயக்குனர்களாக அறியப் படும் செல்வராகவன், முருகதாஸ் போன்றோர் ஏன் இன்னும் தயங்குகிறார்கள்?

இன்னும் எத்தனை நாளுக்கு தான் கூடுவாஞ்சேரியில் கனவு கண்டு நியூயார்க்கில் போய் டூயட் பாடுவது? பின்னால் வெள்ளையர்களை சேர்த்து கொண்டு ஆடும் பாலிவுட் காய்ச்சல் இன்னும் "விடாது கருப்பாய்" கோலிவுட்டை தொடர்கிறது.

சமீப காலங்களில் திரையரங்கில் பாடல் வரும் போதெல்லாம், "ஐயோ பாட்டு போட்றாதிங்க" என்று மக்கள் அலறும் சத்தம் அதிகரித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் நம் இயக்குனர்கள் இதை கேட்காமல் ஜடமாக இருப்பது ஆச்சர்யம் இல்லை. பாட்டு ஷூட் செய்வதற்கு  பின்னால் எக்கச்சக்க சௌகரியங்கள் இருக்கின்றன. இதை விட்டு கொடுத்தால், அடுத்தவன் பைசாவில் ஆம்லெட் சாப்பிட முடியாது அல்லவா!

படம் முடிந்தவுடன் பாடல்களை தனியாய் போடலாம். இஷ்டம் உள்ளவர்கள் பார்க்கட்டும். மற்றவர்கள் தம் அடிக்கட்டும்.



டெக்னாலஜி வளர்ந்த நாடுகள் எடுக்கும் Sci-Fi படங்களை மட்டுமே நம்மால் நம்ப முடிகிறது. அமெரிக்காவில் 4G, Automatic driving, வீடுகளில் உள்ள செக்யூரிட்டி கன்ட்ரோல் என்று பல விதங்களில் அவர்கள் நமக்கு ஒரு decade முன்னதாக போய் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் இன்னும் 2G ஊழலே முடியவில்லை.

நம் நாட்டில் தற்போது என்ன காலாச்சாரம், டெக்னாலஜி உள்ளது என்று அறிந்து அதை வைத்து படம் எடுத்தால் தான் ஒரிஜினலாக இருக்கும்.

நம்மூரில் முக்கால்வாசி ட்ராபிக் சிக்னல்கள் Manual ஆகத்தான் Operate செய்யப் படுகின்றன. அப்படி இருக்கையில் நம் நாட்டில் உள்ள ட்ராபிக் சிக்னல்களை ஒரு லேப்டாப் வைத்துக் கொண்டு ஹாக் (Hack) செய்வது போன்று படத்தில் காண்பிப்பதை பார்க்கையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு தான் சிரிக்க தோன்றுகிறது. திரையரங்கில் பார்க்கையில் அப்படி செய்ய முடியாது என்பதும் வருத்தம்.



நம் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள். சயின்ஸ் வளர்ந்த பிறகு Sci-Fi  படங்களை எடுங்கள். அதுவரை உங்கள் அறிவு திறமைகளை எங்கேயாவது பரணில் ஒளித்து வையுங்கள். அல்லது மதுரையை சுற்றியோ அல்லது தென்காசியை சுற்றியோ பனைமரத்தடியில் கேமராவை தூக்கி சென்று படம் எடுத்து கொண்டிருங்கள்.

தான் நினைத்த கதைக்கு சரியான டெக்னாலஜி இல்லை என்ற காரணத்தினால் பத்து வருடத்திற்கு மேலாக காத்திருந்தாரே அவதார் இயக்குனர் ஜேம்ஸ் காமருன், அவர் என்ன முட்டாளா?

சும்மா மொக்கையாக எதோ எழுதி, ஹிட்ஸ் வரவேண்டும் என்ற காரணத்திற்க்காக, அந்த பதிவை உடனடியாக வெளியிடும் என்னை போலவே, நம் இயக்குனர்களும் இருக்கிறார்கள்.




எங்கள் வீட்டில் பெண் தேடும் படலம் மும்முரமாய் போய் கொண்டிருக்கிறது என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். அஷ்டம சனி அந்த சனி இந்த சனி என்று என் அப்பா கோவில் கோவிலாய் என்னை அலைகழிக்கும் போதெல்லாம் எனக்கு கடவுளின் மேல் வெறுப்பு அதிகரிக்கிறது.

போன வாரம் என் அப்பா எனக்கு கால் செய்து "ஒரு பெண் ஜாதகம் வந்திருக்கு. பொண்ணு எஸ்.ஐ ஆக வேலை பார்க்குது. ஓகே வா?" அப்படின்னு கேட்டார்.

எனக்கு "ராமன் தேடிய சீதை" படத்தோட கிளைமாக்ஸ் ஞாபகம் வந்தது.

"வேண்டாம்ப்பா அதெல்லாம் நமக்கு ஒத்து வராது" என்று சொல்லிவிட்டேன்.

இப்போது தமிழ் நாட்டில் ஏகப்பட்ட ராமன்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். சீதையை கண்டுபிடிப்பதற்குள் அவர்களுக்கு நடிகர் சேரனின் வயசு ஆகிவிடுகிறது. எங்கள் ரூமில் நாங்கள் மூன்று ராமன்கள்.

என்னுடைய சீதை எங்கே இருக்கிறாளோ? தெர்ல.



இங்கிருந்து Onsite செல்லும் நம் IT யில் பணி புரியும் ஆண்கள் சில பேர் அங்கு சென்றதும் பெண்களாகி விடுகிறார்கள். கிட்டதட்ட Onsite என்பது அவர்களுக்கு புதுசாக கல்யாணம் ஆகி செல்லும் மாமியார் வீடு போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அது அவர்களுக்கு சந்தோசத்தையும் பயத்தையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது.

அவர்கள் பொதுவாய் செய்யும் வேலைகள் சில, 
  • சாப்பாடு செய்வது, பாத்திரம் கழுவுவது
  • அழுகை சீரியல், தமிழ் மொக்கை படங்கள் ஒன்று விடாமல் பார்ப்பது.
  • இந்தியாவில் இருக்கும் நண்பர்களிடம் கால் செய்து, கதற கதற மொக்கை போடுவது
  • அடிக்கடி குடும்பத்தினருக்கு கால் செய்து, குசலம் விசாரிப்பது.

வாசல் தெளித்து கோலம் மட்டும் போட முடியாது அவர்களால்.



Oct 12, 2011

Blogger's Life - ஆபாயில்






ன்போசிஸ் நாராயணமூர்த்தி IIT மாணவர்களில் 80% பேர்கள் திறமையானவர்கள் இல்லை என்று சொல்லியதிற்கு, முன்னாள் IIT மாணவரான சேத்தன் பகத், இன்போசிஸ் கம்பெனி ஒரு Body Shop கம்பெனி என்று பதிலடி கொடுத்துள்ளார். அந்த 80% இல் தானும் ஒருவர் என்ற குற்ற உணர்ச்சியாக இருக்கலாம். 

ஆனால் இந்தியாவின் 90% மேலான .டி கம்பனிகள் body shop வேலைகளை தான் செய்கின்றன. இதில் செய்யப் படும் வேலைகளை என்ட்ரி லெவல் என்ஜினியர்களே செய்ய முடியும். Geeks தேவையில்லை. இருவர்கள் சொன்னதும் உண்மை. 

காலேஜ் இறுதி ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியுவில் செலக்ட் செய்ய வரும் சில முன்னணி .டி நிறுவனங்கள் அழகான பெண்களை அள்ளி சென்று விடுவார்கள். திறமை என்பது தேவை இல்லை. எங்கள் காலேஜில் ஒரு பெண் தனக்கு எதுவும் தெரியாது என்று இன்டர்வியு செய்தவரின் தலையிலேயே சூடம் ஏத்தி சத்தியம் செய்த பிறகும், அந்த அறிஞர் பெருந்தகை அப்பெண்ணை செலக்ட் செய்தார். Of course she had good academic records. 

அவர் அப்படி செய்தது அந்த பெண்ணை கரெக்ட் செய்யலாம் என்ற சுயநலம் இல்லை. அழகான பெண்கள் கம்பெனியில் இருந்தால் தான் பையன்கள் சரியாய் வேலை செய்கிறார்கள். திங்கட்கிழமை கஷ்டப்பட்டு ஆபிஸ் வருகிறார்கள் என்றால் அது நல்ல பிகர்களிடம் பேசி மொக்கை போடலாம் என்பதற்காகத்தான். 

நான் தினசரி சாப்பிட செல்லும் உணவகத்தில் ஒருநாள் நியூ Recruit ஆக ஒரு பெண்ணை சேர்த்திருந்தார்கள். இதற்கு முன்னே மெதுவாய் சுரத்தை இல்லாமல் வேலை செய்துகொண்டிருந்த சர்வர்கள் சந்தோசமாய் சிரித்து பேசி கொண்டு அரக்க பரக்க ஓடி, வேலை செய்து கொண்டிருந்தார்கள். 

ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண்கள் இருக்கிறார்கள். எப்போதும் இருப்பார்கள்.



பி ளாக்(blog) எழுதும் நிறைய பேர் தங்கள் பிளாகை தன் காதலியை போலவோ, பொண்டாட்டியை போலவோ எண்ணி புலம்புவதை அதிகம் காணலாம். அப்படி பார்த்தால் எனக்கு நிறைய பொண்டாட்டிகள். 

பிளாகும் மனைவியும் ஒன்றுதான். ஒன்றுக்கு மேல் கட்டி மேய்ப்பது சிரமம். பிளாகர்களின் வாழ்கையும் சொல்லமுடியா துயரமானது.
  • சரியாய் வேலை செய்யாமல் மனைவியிடம் திட்டு வாங்கி தூக்கம் கெட்டு பதிவு எழுதுவது.
  • கமெண்ட் வந்திருக்கான்னு பார்க்க, refresh பட்டனை தொடர்ந்து அழுத்தி செயலிழக்க வைப்பது.
  • காலைல எந்திருச்சு followers யாராவது add ஆகி இருக்காங்களா? என்று பார்த்து விட்டு பல் விலக்க செல்வது.
  • பார்க்கிறவங்க கிட்டே எல்லாம் ப்ளாகை படிக்கச் சொல்லி தற்கொலை செய்து கொள்ள வற்புறுத்துவது.
இக்காலத்தில் பிளாகராக இருப்பவர்கள் முற்காலத்தில் எதோ ஒரு முனிவரின் தவத்தை கலைத்து கடும் சாபத்திற்கு உள்ளாகி இருக்கலாம். 

"அடுத்த ஜென்மத்திலும் நீ பிளாகராக பிறக்க" என்று யாரும் என்னை சபித்து விடாதிர்கள்.




"ர்டெல் சூப்பர் சிங்கர் பட்டம் இவருக்கு தான் கொடுத்திருக்கணும் இவருக்கு கொடுத்திருக்க கூடாது" என்று மக்கள் கொஞ்ச நாள் முன்னே அடித்துக் கொண்டு இருந்தார்கள். அதில் தரப் படும் பரிசு தான் முக்கியம். பட்டம் முக்கியம் இல்லை. 

போன வருடம் பட்டம் வாங்கிய அஜீஸ் கோவா படத்தில் "முதல் முறை உண்டான உணர்விது" பாடலை தவிர வேறு எந்த பாடலையும் பாடியதாக எனக்கு தெரியவில்லை. ஏன்? அந்த பாடலை நம்ம தனுஷையோ செல்வராகவனையோ கூட பாட வைத்திருப்பார்கள். 

நம் தமிழ் சினிமாவில் காலங்காலமாய் ஒரு சீன் வைத்திருப்பார்கள். ஒரு கைதியிடம் அல்லது சாட்சியிடம் விசாரணை செய்யும் போது, மேஜை மீது தண்ணீர் வைத்திருப்பார்கள். அவர்கள் பயந்து திக்கி திணறி பேசும் போது, "மெதுவா தண்ணி சாப்டுட்டு பதட்டப் படாம பேசுங்க" என்று சொல்வார்கள். அதுபோல இன்று தண்ணி குடித்து விட்டு நிறுத்தி நிறுத்தி பாடும் அளவுக்கு டெக்னாலஜி முன்னேறி உள்ளது. 

உன்னி கிருஷ்ணன் குரல் மட்டும் இனிமை இல்லை. "உம்மேல ஆசதான்" என்ற தனுஷின் குரல் கூட கேட்க இனிமையாகத்தான் இருக்கிறது. சில சமயம் இரைச்சல் கூட இசையாகிவிடும். வகுப்பறையில் லெக்சர் முடிந்து வெளியே கேட்கும் மக்களின் பேச்சு சலசலப்பு கூட நமக்கு இனிமையாக கேட்கிறது. 

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் "உள்ள ஜெஸி ஜெஸின்னு சொல்லுதா?" என்று சரியாக அலைவரிசை செட் ஆகாத AM சேனல் போல ஒருவர் பேசியதும் ஹிட் ஆகவில்லையா?




வெகுநாள் கழித்து ஒரு அருமையான படம் பார்த்த அனுபவம் "வாகை சூட வா" படத்தின் மூலம் கிடைத்தது. இரண்டாவது முறை அந்த படத்திற்கு செல்ல எண்ணியிருக்கிறேன். 

அதில் வரும் பாடல்கள் எல்லாம் அருமை. "செங்க சூளக்காரா" பாட்டில் ஒரு வரி வரும். 

"சொரண கேட்ட சாமி, சோத்த தான கேட்டோம்."

நச் வரிகள் பாடல் முழுதும். 

நாம் ஒவ்வொருவரும் என்னென்ன வேண்டுகிறோம் சாமியிடம்.
  • ஸ்கூலில் பர்ஸ்ட் ரேங் எடுக்கணும். (அதுக்கு நீ படிக்கணும்)
  • பையனுக்கு கல்யாணம் ஆகணும். (இப்போதெல்லாம் பொண்ணுங்களுக்கு எளிதாய் கல்யாணம் ஆகி விடுகிறது)
  • Weekend ஜாலியாக ஊர் சுற்ற ஒரு பிகர்
  • ஒரு "சின்ன வீடு" கட்டனும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை.





விஜயகாந்த இப்போது தான் உண்மையான எதிர்க்கட்சி தலைவராக மாறி உள்ளார். அதையும் தங்கத் தாரகை ஜெயலலிதாவே செய்ய வேண்டியுள்ளது. இவரை இன்னும் கூட்டணியில் வைத்திருந்தால் பிடித்து வைத்த களிமண் பிள்ளையாரைப் போல கம்மென்றே இருந்திருப்பார்.

உள்ளாட்சி தேர்தலில் தனியே கழட்டி விட்ட பின்தான் தலைவரின் தன்மானம் துடி துடித்து எழுந்துள்ளது.




துவரை பேருந்தில் சந்தோசமாக தொலைதூர பயணம் செய்து  கொண்டிருந்த வெகுஜன மக்களுக்கு இன்னுமொரு ஆப்பு. 

SETC அரசு பஸ் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை கொண்டு வந்துவிட்டது தமிழக அரசு. பேருந்தின் பாதி இருக்கைகள் மட்டும் ரிசர்வேசனுக்கு என்றாலாவது பரவாயில்லை. டிரைவர் சீட்டை தவிர அத்தனையும் புக் செய்யலாம்.

இனி IT துறை மக்கள் இதிலும் தங்கள் தனித்திறமையை காண்பிப்பார்கள்.