Dec 28, 2011

Your Highness - ஹாலிவுட் சினிமா விமர்சனம் (18+)

2012. புது வருடம் வரப் போகிறது.

இந்த நியூ Year-ஐ எப்படி கொண்டாடலாம்ன்னு பரபரன்னு நகத்தை கடிச்சிகிட்டு சந்தோசமாய் காத்திருக்கீங்களா?

"நியூ இயர்ன்னா என்ன புதுசாக இருக்க போகுது? எப்பவும் போல அடுத்த நாள் காலையில் எந்திரிச்சு பல் விலக்கி தான் ஆகணும்" அப்படின்னு வாழ்க்கையையே போராக பீல் பண்ணி பேசி சோகமாக இருக்கீங்களா?

எப்படி இருந்தாலும், நீங்கள் பார்க்க வேண்டிய படம் இது. 


 
ராஜா, ராணி மற்றும் பயங்கரமான மந்திரவாதி போன்ற கேரக்டர்களை வைத்து சீரியசாய் எடுக்கப்பட்ட பேண்டசி படங்களை கொடுமையாய் கலாய்ப்பதற்கென்றே வந்த goofy வகை படம்.

இதை போல தமிழில், சிம்பு தேவனால் எடுக்கப்பட்ட ஒரு மோசமான முயற்சி "இம்சை அரசன் 23 -ஆம் புலிகேசி"

படத்தின் கதை,

ஒரு வயதான அரசன். அவனுக்கு பிறந்த இரண்டு இளவரசர்கள். மூத்தவன் Fabious வீர தீரங்களில் சாகசம் புரிந்து, அடிக்கடி நிறைய quest களை வெற்றிகரமாக முடித்து நாட்டு மக்களின் அன்பை பெறுகிறான். ஆனால் இளையவன் Thadeous, ஒரு திறமையும் இல்லாமல் ஊரை சுற்றி, பொழுதை கழிக்கும் உதவாக்கரை இளவரசன்.

ஒருமுறை இளவரசன் ஒரு மந்திரவாதியிடம் சிக்கி கொண்டிருந்த ஒரு அழகான Virgin (கற்பு கலையாத) பெண்ணை காப்பாற்றி கொண்டு வந்து திருமணம் செய்து கொள்ள இருக்கையில் மீண்டும் அந்த மந்திரவாதி வந்து அந்த பெண்ணை தூக்கி கொண்டு போய் விடுகிறான். இரண்டு நிலவுகள் சங்கமிக்கும் நேரத்தில் அவளை புணர்ந்து, அதனால் பிறக்க போகும் ஒரு டிராகன் மூலம் உலகையே ஆட்டி படைக்கலாம் என்பது மந்திரவாதியின் திட்டம்.

இந்த முறை உதவாக்கரை இளவரசனும், அவனுடைய அண்ணனுடன் இந்த quest-ற்கு வலுக்காட்டாயமாய் அனுப்பி வைக்கப் படுகிறான். இருவரும் வெற்றிகரமாய் சென்று மந்திரவாதியை அழித்து, அந்த Virgin பெண்ணை காப்பாற்றி கூட்டி வந்தார்களா? அவள் தன் virginity -யை யாரிடம் இழந்தாள்? என்பதே படம்.


படம் முழுதும் வாய் வலிக்க சிரித்து கொண்டே இருக்க வைக்கிறார்கள். இதில் burst out laughing சீன்கள் அதிகம். fuck என்ற வார்த்தையை Thadeous அடிக்கடி மந்திரம் போல அசால்ட்டாய் உச்சரிக்கிறான். 

சில vulgar ஆன காட்சிகளும், நிறைய வசனங்களும் இருப்பதால் வயதுக்கு வராத ஆண்களும், பெண்களும் இதை தவிர்த்து விட்டு, பேஸ்புக்கில் போய் Angry Birds விளையாடுங்கள்.  

Its Definitely for Matured

ஒய் திஸ் கொலைவெறி டி? பாடலைப் போல, இந்த படம் வெளிவந்த போது சீப்பான படம், மொக்கை காமெடி என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை மீடியாக்கள் வைத்தன. ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் இதை பாருங்கள், சில மணிநேரம் இனிமையாய் கழியும். 

Be Ready to ROFL ...



டோர்ரன்ட் டவுன்லோட் லிங்க்

http://extratorrent.com/torrent/2471463/Your+Highness%5B2011%5DUNRATED+BRRip+XviD-ExtraTorrentRG.html



Dec 20, 2011

Nonsense Talking 1

நீங்கள் இந்தியாவின் இன்றைய இளைய தலைமுறையினரா?

இந்த நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் என்ன செய்யலாம்?

  • அப்துல் கலாம் சொன்னது போல் கனவு கண்டு புதிதாக ஏதாவது கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்கி நாட்டிற்கு பெருமை சேர்க்கலாம்.
  • ஏழை, அநாதை மக்களுக்கு உதவி செய்து அவர்கள் வாழ்வை வளம்பெற செய்யலாம்.
  • ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்க்காக உயிரை கொடுக்காலாம்.  




இப்படி எல்லாம் மிகவும் கஷ்டப் பட்டு யோசித்து காமெடி பண்ணாதிர்கள்.

உங்களால் மிக எளிதாய் செய்ய முடிகிற, நாட்டிற்கு பயன்படக் கூடிய காரியம் என்னவென்றால், நீங்கள் திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ளாமல் இருப்பதே!

எதுவும் தெரியாத, சரியாக பேசி கூட பழகாத குழந்தையிடம் போய்
"உனக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சி பாப்பா வேணுமா?" என்று கேட்பார்கள்.

பாவம் அந்த குழந்தை.

எந்த ஒரு குழந்தையும் தனக்கு தம்பி பாப்பாவோ, தங்கச்சி பாப்பாவோ வேண்டுமென்று கேட்பதில்லை. அதற்கு தேவை விளையாட தேவையான பொம்மைகள் மட்டுமே.

Pollution, Corruption போன்ற நாட்டை பாதிக்கும் எந்த ஒரு பிரச்சினைக்கும் மக்கள் தொகை மட்டுமே மூலக் காரணம். அதை கட்டுபடுத்தாமல் "Save Plastic Bags", "Save Water" "Save Petrol" "Save Paper Save Tree" என்பது போன்ற வெட்டி campaign கள் உண்மையில் உருப்படியானது அல்ல.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல ஆயிரம் பேர் சேர்ந்து சேமிக்கும் பிளாஸ்டிக், தண்ணீர், பெட்ரோல் போன்றவற்றை பயன்படுத்துகிறான்.
 

பிச்சைக்காரர்களுக்கு இரண்டு ரூபாய்க்கு குறைவாக பிச்சை போட கூச்சப்படும் நாம், ஒரு ரூபாய் போட்டு பிளாஸ்டிக் பையை கூச்சப் படாமல் வாங்குவோம். இருக்கும் மரங்களை வெட்டி ஐ.டி. பார்க் போன்ற பெரிய கட்டிடங்களை கட்டிவிட்டு ஆபிசில் Go Green Day நிகழ்ச்சி நடத்துவோம்.

ஜனத்தொகையை கட்டுபடுத்த ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள் எதுவும் செய்ய மாட்டார்கள். நாம் கட்டுகடாங்கா எண்ணிக்கையில் இருக்கும் வரையில் தான் அவர்களுக்கு நல்லது. அரசின் "நாமிருவர் நமக்கொருவர்" எனும் விழிப்புணர்வு பலகைகளை கூட எங்கேயும் பார்க்க முடிவதில்லை.

சிலர் ஆண் குழந்தைகளுக்காக முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் என்ன மன்னர் குடும்பமா? உங்கள் வம்சம் தொடர்ந்து வர வேண்டும் என்பதற்கு.

மனிதர்கள் Waste bags போன்றவர்கள். அவர்களால் எதுவும் இந்த உலகிற்கு பிரயோஜனம் இல்லை. மனித விலங்கு மட்டும் இல்லாமல் இருந்தால் இந்த உலகம் நன்றாக இருக்கும். இயற்கை பேரழிவுகள் அவ்வப்போது  நிகழ்வது எப்போதும் நன்மையே. இந்த 2012 மாயன் காலண்டர் படி உலகம் அழிந்தால் நன்றாக இருக்கும். 

Save Waste bags.



நான் ஏன் ப்ளாக் எழுதி கொண்டிருக்கிறேன்? எழுதுவது சிலசமயம் அசிங்கமாய் தோன்றுகிறது. ஐ.டி துறையில் வேலை செய்யும் எல்லோரும் வெளிநாடு சென்று அதிகம் பணம் சம்பாதிக்கும் போது நான் வெட்டியாய் இங்கே பொழுதை கழிக்கிறேன்.

எனக்கு இலக்கியம், இலக்கியவாதிகள், இலக்கிய கூட்டங்கள் என்றாலே மிக அலர்ஜி. அதிகம் எழுதி எழுதி நானும் எழுத்தாளர் ஆகி விடுவேனோ என்று பயம்.

எழுத்தாளர்களின் வாழ்க்கை அவ்வளவு நார்மல் ஆக இருக்காது. ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு தனி வட்டத்தில் வாழ்வார்கள். கிட்டதட்ட நம்முடைய பிளாகர்களை போலத்தான். எனக்கு எழுத்தாளர்களின் பெயர்கள் தெரியும். யாரையும் அதிகம் படித்ததில்லை. படிப்பதிலும் விருப்பம் இல்லை. எழுத்தாளன் ஆக வேண்டும் என்றால் அதிகம் படிக்க வேண்டும் அல்லது அதிகம் ஊர் சுற்ற வேண்டும்.

எவன் ஒருவன் தன்னுடைய எழுத்துக்கு புகழ் தேடாதவனாக, தன் எழுத்தின் மேல் கர்வம்/விருப்பம் கொள்ளாதவனாக இருக்கிறானோ அவனுக்கு தான் நன்றாய் எழுத வரும் என்று எங்கேயோ படித்தது. நம்மால் அதுபோல இருப்பது கஷ்டம்.

இணையத்தில் நன்றாய் எழுதுபவர்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாய் இருக்கிறது. அதிகம் அறியப்படாமல் அருமையாய் எழுதிகொண்டிருக்கும் பிளாகர்களை எனக்கு யாராவது அறிமுகம் செய்யுங்கள் ப்ளீஸ்.

நான் தமிழ் Aggregator சைட்டுகளில் இனி எனது பதிவுகளை இணைக்கப் போவதில்லை. சினிமா பதிவுகள் விதிவிலக்கு ஆகலாம். தனியாய் எழுதும் போது எந்த கட்டுப்பாடும் இல்லாமல், எதைப் பற்றியும் கவலை இல்லாமல் சுதந்திரமாய் எழுதலாம். என் எழுத்து இனி எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நான் எழுதுவது உங்களுக்கு பிடித்திருந்தால் படியுங்கள். நான் பிரபலமாக விரும்பவில்லை. இப்படி எழுதுவதால் நான் உருப்படி இல்லாமல் தான் போய்க் கொண்டிருக்கிறேன்.
 


நீங்கள் புத்திசாலிதனமாய் யோசிப்பவர் என்று உலகுக்கு காட்ட வேண்டுமா?

சிறந்த ஒரு வழி.

ஊழலுக்கு எதிராய் போராடும் அன்னாஹசாரேவைப் பற்றியோ அல்லது  கூடங்குளம் பிரச்சினையில் தன் நீண்ட மூக்கை நுழைத்த அப்துல்கலாமை பற்றியோ அவர்கள் சாகும் வரை திட்டி எழுதிக் கொண்டே இருங்கள். ஆனால் இருவருக்கும் அதிகம் வயசாகி விட்டது. அதனால் சீக்கிரம் உங்கள் பிரதிக்கு(பதிவுக்கு) முந்துங்கள்.

மாதிரி தலைப்புக்கள்.

முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரே!
படித்த முட்டாள் அப்துல்கலாம்!

ஆனா பாருங்கள் இந்த ரெண்டு பேருமே, குழந்தை குட்டின்னு ஏதும் வைத்துக் கொள்ளாமல், இந்த நாட்டு மக்களை ஏமாற்றி தங்களை இந்த உலகை காக்க வந்த கடவுள்களாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். என்ன ஒரு அந்நியாயம்?

பிகர் பின்னாடி சுற்றி, சைட் அடித்து, (கல்யாணம் பண்ணி) ஜாலியாய் மேட்டர் செய்து, குடும்பமாய் வாழும் நம்மை அவர்கள் இருவரும் அவ்வளவு எளிதாய் ஏமாற்ற முடியுமா என்ன? Bloody Bachelors.

குற்றம் சொல்வதற்கென்றே சிலர் வாழ்கிறார்கள். நக்கீரர்களாம். பிடரி கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சொல்லுபவர்கள்.



Dec 8, 2011

லிட்டில் Mark Zuckerberg - ஆபாயில் (அப்படியே சாப்பிடுங்க)




ற்போதைய ஜெனரேசனில் பிறக்கும் குழந்தைகள் எளிதாய் டெக்னாலஜிகளை கற்றுக் கொள்கின்றனர். முன்பெல்லாம் கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் தங்கள் குழந்தைகள் நல்ல புத்திசாலியாய் பிறக்க நல்ல விசயங்களை பற்றி படித்துக் கொண்டோ, கேட்டுக் கொண்டோ இருப்பார்கள்.

"அர்ஜூனனின் மகன் அபிமன்யூ, அவரது தாயின் வயிற்றில் இருந்தபோது அர்ஜூனன் அவரது தாய் சுபத்ராவிற்கு சக்கரவியூகம் ஏற்பாடுகளைப் பற்றிக் கூறியபோது கேட்டதால், அவனுக்கு சக்கரவியூகம் பற்றி பகுதியளவு தெரியும். சுபத்ரா முதல் பகுதிய விளக்கங்களைக் கூறும்போது மட்டுமே விழிப்புடன் இருந்தார் அதன் பின்னர் அவர் தூங்கிவிட்டார். எனவே அபிமன்யூவிற்கு அந்த அமைப்பிற்குள் நுழைவது எவ்வாறு என்பது மட்டுமே தெரியும். ஆனால் அதிலிருந்து தான் எவ்வாறு வெளிவருவது என்பது தெரியாது. " Read full story here.


தாய் சாப்பிடும் உணவு தன் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு கடத்தப்படுவது போல அவர்களுடைய செயல்பாடுகளின் நுணுக்கங்களும் கடத்தப் படலாம்.

என் அக்கா கர்ப்பமாய் இருந்த நேரத்தில், சீனாவில் இருக்கும் என் மாமாவுடன் தினமும் போனிலும் Skype சாட்டிலும் பேசிக்கொண்டிருப்பாள். என் அக்கா மகன் நகுலன் அவனுக்கு இரண்டு, இரண்டரை வயதான போதே, அவனாகவே இந்தியாவில் இருக்கும் எனக்கு மொபைல் மூலம் போன் செய்து விடுவான். கம்ப்யுட்டரை ஆன் செய்து உள்ளே சென்று தனக்கு பிடித்த பாடல்களை கேட்பது முதல், தன் அப்பாவுக்கு ஆன்லைன் மூலம் போன் செய்வது முதல் எல்லாம் அத்துபடி.

இத்தனைக்கும் அவனுக்கு ABCD கொஞ்சம் கொஞ்சம் சொல்ல தெரிந்தாலும், எழுத்தை recognize பண்ண சுத்தமாக தெரியாது. தமிழில் பேசச் சொன்னால் வேற்று கிரகவாசி போல ஏதோ உளறுவான். அவனை கேமராவில் போட்டோ எடுக்கும் போதெல்லாம் ஒன், டூ, த்ரீ cheese என்று அழகாய் சீன மொழியில் சொல்லுவான். இரண்டு வருடம் சீனாவில் இருந்ததால் அங்கிருக்கும் சீன மக்களோடு பேசி பேசி என் அக்காவை விட அதிகம் சீன மொழியில் புலமை பெற்று விட்டான்.

சிலநாள் நான் ஆபிசில் வேலை செய்து கொண்டிருக்கும் போது டொய்ங் டொய்ங்கென்று சத்தத்துடன், ஜிமெயில் சாட் பாக்ஸில் மெசேஜ் Blink ஆகும். 

sfsdflksjdslkfsdfddddddd[]dddddddddddddsdgnldfgdfgggggg
3333333333sdfsnfgoiurtnyrtyrty34343446343erereeyeeertekrt;erke;
erbmvmbpmmmmmmmmmmmmerttttttttttttttdvfghgdnoiyldfkds kiiiiiiiiiiiiiiiiiidfgdfdnflknkljoooooooooooooefdsfgdfgdfdfsdfsd[]w
4r34534sdf678979 /*dfgsgdfhdghdsghdfsgsdfgrt65ergefgdfgdfg

அவன் அனுப்பிய இந்த Encrypted மெசேஜ்ஜை யாராவது Decrypt பண்ணி கொடுத்தால் நல்லது. டெக்னிகல் ப்ளாக் வைத்திருக்கும் ப்ளாகர்களுக்கு கடுமையான சவால்.


நகுலன் என்றொரு அழகன்


மார்க் ஜுகர்பெர்க்கின் வாழ்கையை பற்றிய திரைப் படமான The Social Network படம் போரடிக்காமல் விறுவிறுப்பாகவே சென்றது. அந்த படம் பார்த்தப் பிறகு எனக்கு பேஸ்புக் தளத்தை Hack செய்யும் ஆசை வந்தது. சைபர் க்ரைமில் மாட்டிக் கொள்வேன் என்று பயந்து விட்டு விட்டேன். ;-)





புது டெக்னாலஜிகள் எல்லாம் நமக்கு ஒரு வகையில் பயனுள்ளதாக இருந்தாலும், மற்றொரு வகையில் நம்மை சோம்பேறிகளாகவும், முட்டாள்களாகவும் வளர்க்க போட்டி போட்டுக் கொண்டு கண்டுபிடிக்கப் படுகின்றன.

நான் என்னுடைய மொபைல் நம்பரை தவிர யாருடைய நம்பரையும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டேன். எத்தனை நம்பர் மாத்தினாலும் கடைசி நம்பர் மட்டுமே நினைவில் இருக்கும். ஒவ்வொரு முறையும் நம்பர் மாற்றும் போதும், 

"6969696969 இனி என் நம்பர்"

என்று Uninor விளம்பரத்தில் வருவது போல நான் பெருமையாக பிறரிடம் சொல்லி கொள்வேன்.

தினசரியிலோ, புத்தகத்திலோ ஒரு வார்த்தையை தேட வேண்டிய சந்தர்பம் வரும் போது, Ctrl + F -இன் ஞாபகம் வந்து தொலைக்கிறது.

எங்கள் ரூமில் நான் நுழைந்தாலே டிவியில் சன், கே, விஜய், அல்லது ஒரு இசை சேனலோ, காமெடி சேனலோ தான் ஓடி கொண்டிருக்கும். ஒரு செய்தி சேனலுக்கோ, டிஸ்கவரி சேனலுக்கோ தப்பி தவறி கூட போக மாட்டார்கள். அப்படியே சேனல் தவறி சென்று விட்டாலும், "சாமி தெரியாம பண்ணிபுட்டோம். எங்கள மன்னிச்சுடு" என்று உடனே கடவுளிடம் மன்னிப்பு கேட்டு தோப்பு கரணம் போட்டு விடுவார்கள்.

ஒரு மணிநேரம் செல்போன் சார்ஜ் இல்லை என்றால் நம் உடலில் ரத்தம் ஓடுவது நின்று பிணமாகி விட்டது போல ஒரு உணர்வு வந்து விடுகிறது.

செயற்கை கருவிகள் நம் உடலில் தங்கத்தை போன்று ஒரு அங்கமாக மாறி விட்டது. நம் உடலிலே நட்டு, போல்டு, செயற்கை இதயம் எல்லாம் வைக்க ஆரம்பித்து வெகு ஆண்டுகள் ஆகிவிட்டது.  A-,AB+ போன்ற அரிய ரத்த வகை ஆபரேசன்கள் செய்வதற்கு பயன்படுத்த செயற்கை ரத்தத்தையும் கண்டுபிடித்து விட்டார்களாம்.

இன்னும் சில வருடங்களில் உங்கள் மூளையை கழட்டி விட்டு இன்டெல் Processor வைத்து தேவையான அனைத்து சாப்ட்வேர்களையும் load செய்து விடுவார்கள். சயின்டிஸ்டுகள், சிந்திக்கும் ரோபட்களை கண்டுபிடிப்பதற்கு பதிலாக நம்மையே ரோபட்டாக மாற்றி விடவும் வாய்ப்புண்டு. ஒவ்வொரு முறை processor அல்லது சாப்ட்வேர் அப்கிரேட் (Upgrade) செய்யும் பொழுது எந்திரன் சிட்டி ரஜினி போல, ஐ ஆம் நாராயணசாமி  Upgraded வெர்சன் 2.0 என்று சொல்லி கொள்ளலாம்.

மூன்று வருடங்கள் வேளச்சேரியின் சகதியில் படுத்து உருண்டு விட்டு (வசித்துவிட்டு), பரங்கிமலை பகுதியில் என் நண்பன் ரூமுக்கு மாறியுள்ளேன். வேளச்சேரியை விட்டு வரும் போது பெரும் நிம்மதி ஏற்படுகிறது. சுற்றி சுற்றி ஏரிகள் அதிகம் இருந்தாலும் ரொம்பவும் வறட்சியான ஏரியா. ஏரி இருப்பதால் வேளச்சேரி என்று பெயர் வந்ததா? என்று தெரியவில்லை.

மழைகாலத்தில் மட்டும் வேளச்சேரி சாக்கடையால் நிரம்பி வழியும். பொதுவாக வெள்ளப் பகுதிகளை பெரிய பூட்ஸ் போட்டு கொண்டு பார்வை இட  வரும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வேளச்சேரியில் மட்டும் தங்கள் பொற்பாதங்களை வைப்பதில்லை.

நாம் பேருந்தில் செல்லும் போது சாக்கடையோரம் வசிக்கும் குடிசை வாழ் மக்களை பார்த்து பரிதாப்பட்டு விட்டு கடந்து செல்லுவோம். ஆனால் மழைக்காலம் வந்து விட்டால், நம்மை பார்த்து நாமே பரிதாப்பட்டுக் கொள்ள வேண்டும்.

மடிப்பாக்கம் பக்கம் வீடு பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் மடிப்பாக்கம் ரோட்டின் நடுவில் நின்று வாலை நீட்டி, பைக்கில் செல்லும் நம்மிடம்  லிப்ட் கேட்கும் மாடுகளை நினைத்ததும் அந்த எண்ணம் கைவிடப் பட்டது. மடிப்பாக்கத்திற்கு மாடுப்பாக்கம் என்றே பெயர் வைத்திருக்கலாம். ஜெயலலிதாவிடம் சொன்னால் ஒரு Flow வில் அதையும் மாற்றி இருப்பார்.

பரங்கி மலையில் உள்ள சர்ச்சில் இருந்தோ, மசூதியில் இருந்தோ எதோ ஒரு பாட்டு பாடிக் கொண்டிருக்கும். நான் கூடிய சீக்கிரம் மதம் மாற வாய்ப்புண்டு.

ஹாலிவுட் படங்களில் மூச்சு விடாமல் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்க்கையில் நம் காதில் புகை வரும். அதேபோல் புது ரூமில் உள்ள ஒரு நண்பன் தமிழை மூச்சு விடாமல் பேசுகிறான். நான்கைந்து தடவை திரும்ப திரும்ப கேட்க வேண்டி உள்ளது. தமிழ் மொழி மற்றும் அதன் காலாச்சாரம் மீது காதல் கொண்டு தமிழை கற்க விரும்பும் வெளிநாட்டு பெண் எவளாவது இவன் பேசுவதை கேட்டால், Why This Kolaveri? என்று கேட்டுவிட்டு தன் நாட்டிற்கு அடுத்த பிளைட் பிடித்து விடுவாள்.

தென் இந்தியாவின் புகழ் மிக்க திரையரங்கான பரங்கிமலை ஜோதியை இன்னும் சென்று பார்வையிடவில்லை. பிட்டுக்கு பெயர்போன இத்திரையரங்கில், பிட்டு துணி அணிந்து நடிப்பதற்கு பெயர்போன ஷகிலா ஆண்டியின் படங்கள் போடுவது எப்போதோ நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது ஆபாசம் இல்லாத (??) சுத்தமான தமிழ் படங்கள் மட்டுமே திரையிடப் படுகின்றன.

அதனால் தற்போது ஐயப்ப சாமி பக்தர்கள் சபரி மலை ஜோதியை கண்டு பக்தியில் பரவசம் அடைவது போல, நான் இந்த பரங்கிமலை ஜோதிக்கு சென்று பரவசம் அடையமுடியாதது மிகப் பெரிய துரதிஷ்டம்.




மிழ் நாட்டின் அடுத்த முதல்வர்..
தமிழ்நாட்டின் ஜான்சி ராணி..
தமிழ்நாட்டின் விடிவெள்ளி..
தமிழ்நாட்டின் கவிமங்கை..
தமிழ்நாட்டின் தியாகச் செம்மல்

ஸ்ஸ்... மூச்சு வாங்குது.

திருமதி. கனிமொழி அவர்கள் திகாரில் களி தின்னதை மறக்கடிக்க சென்னை ஏர்போர்ட்டில் கொடுத்த வரவேற்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த வரவேற்ப்பை திகாரிலிருந்து டெல்லி ஏர்போர்ட் வரை ஏன் கொடுக்கவில்லை? ஆங்கில நியூஸ் சேனல்கள் கவர் ஸ்டோரி போட்டு அலங்கரித்து விடுவார்கள்.

ஆனால் இதே வரவேற்ப்பை கனிமொழி டெல்லி செல்லும் போது கொடுத்திருந்தால், தமிழ்நாட்டிற்கு இன்னும் நிறைய செல்வங்களை அள்ளி வந்திருப்பார்.
 
கனிமொழி சென்னை திரும்பிய பிறகு, திமுக வின் பழைய ரத்தம் எல்லாம் எடுக்கப் பட்டு புது ரத்தம் பாய்ச்சப்பட்டதால் அதன் தலைவர்களும் உறுப்பினர்களும் தெம்பாக கட்சி வேலைகளை செய்கின்றதாக தகவல். வலையுலக தி.மு.க அனுதாபிகளும் சுறுசுறுப்பாக ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் போடுவதாக தெரிகிறது.


ற்போது ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் படு மொக்கையாக இருப்பது கடும் அயர்ச்சியை தருகிறது. போராளி சூப்பராக இருக்கிறது என்ற விமர்சனத்தை படித்து விட்டு போய் பார்த்தால் சன்டிவியின் காமெடி சீரியல் போல் படு அமெச்சூர் (amateur)  தனமாய் இருக்கிறது. இசையும் பாடலும் காதுக்குள் வண்டு புகுந்த பீலிங்கை ஏற்படுத்துகின்றன.

மந்திரப் புன்னகை கரு பழனியப்பனுக்கு அடுத்து சசிகுமார் தான் ரொம்ப புத்திசாலிதனமாய் வசனம் பேசுகிறார். இவரும் நாயகியும் சித்தப்பாவும் மகளும் போல இருப்பது படத்திற்கு பலம்.