Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

May 15, 2012

நேர்மை ஜாமீனில் வந்தது.


                             பட உதவி: Faking News

நேர்மைக்கு ஜாமீன் கிடைத்து விட்டதால்,


"இனி தர்மம் வெல்லும்."


என எதிர்பார்க்கப் படுகிறது.

இது நேர்மைக்கு கிடைத்த வெற்றி என நாணயம் நாளை அறிக்கை வெளியிடும். 

ன்னியத்திற்கு(கனி) விரைவாக கிடைத்த ஜாமீன், நேர்மைக்கு லேட்டாக கிடைத்தாலும் லேட்டஸ்டாக கிடைத்துள்ளது என்பது திருவிழாவை போல இனிப்பு வெட்டி சந்தோசமாக கொண்டாட வேண்டிய விஷயம்.

இந்த திருவிழாவையொட்டி கடமைக்கும், கட்டுப்பாட்டுக்கும் நடந்து கொண்டிருக்கும் சகோதர யுத்தம், சிறிது நாளைக்கு நிறுத்தி வைக்கப்படும்.


கோர்ட் நேர்மைக்கு விதித்த நிபந்தனைகள்:

நேர்மை தன்னுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.
நேர்மை எங்கும் ஓடி விடக் கூடாது என்பதால் 20 லட்ச ரூபாயை பிணைய தொகையாக ஒப்படைக்க வேண்டும். (நேர்மையிடம் அவ்வளவு பணம் இருக்குமா?)
நேர்மை டில்லியில் தங்கியிருக்க வேண்டும்.
நேர்மை சென்னைக்கு செல்ல கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும்.

இனி நேர்மையை டில்லியில் மட்டும் தான் பார்க்க முடியும்.

ஆகவே, இன்னும் கொஞ்ச நாட்களுக்கு சென்னையில் ஆட்டோகாரர்களிடம் நேர்மையை எதிர்பார்க்காதிர்கள்!





May 10, 2012

கமெண்ட் எட்டிகுட்


"What is எட்டிகுட்?" என்று Confuse ஆகாதீர்கள். 

"Etiquette" என்பதை தமிழில் எழுதியுள்ளேன். Etiquette என்றால் தமிழில் "பண்பாடு", "நாகரிகம்", "வரைமுறை" என்றெல்லாம் சொல்லலாம்.

நம்மாட்கள் கூகுளின் Tamil Transliteration -யை ஓவராக பயன்படுத்துகிறார்கள். வழக்கத்தில் உள்ள Internet, Bus என்பவற்றை இன்டர்நெட், பஸ் என்று எழுதுவதில் தப்பில்லை. ஏனென்றால் இன்டர்நெட் என்றால் என்னவென்று, காமன்மேனுக்கு தெரியும். அட "காமன்மேன்"ன்னா கமல் இல்லப்பா! 
ஆனால் அவர்களிடம் இன்டர்நெட் என்பதற்கு தமிழில் என்ன என்று கேட்டால், "பேந்த பேந்த" முழிப்பார்கள்.

அதிகமாய் வழக்கத்தில் இல்லாத, உதாரணத்திற்கு "Flirt" என்பதை அப்படியே transliterate செய்து "ப்ளிர்ட்" என்று எழுதுவார்கள். படிக்கும் போது, டர்ச்சு ஆகி விடும். நமக்கு தெரிந்த அரைகுறை இங்கிலீசுக்கும் ஆப்பு. அவர்களுக்கு தமிழின் மீது உண்மையான பற்றா? இல்லை அவர்கள் தி.மு.க பீரங்கியா? அதை அப்படியே "Flirt" என்று எழுதினாலாவது, ஆன்லைன் டிக்ஸ்னரியை பார்த்து அர்த்தம் தெரிந்து கொள்ளலாம். முடிந்தால் முழுவதையும் தமிழில் translate செய்து எழுதுங்கள்.

போன ஆட்சியில் தி.மு.க தலைவர் கடைகளின் பெயரை எல்லாம் தமிழில் எழுத வேண்டும் என்று அசிங்கமான சட்டம் போட்டவுடன் எல்லோரும் அதை கஷ்டப்பட்டு மாற்றினார்கள். சிலது படிக்கவே பயங்கர காமெடியாய் இருந்தது. சிலது பச்சை தமிழனுக்கே புரியவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள். அவை என்னவென்று எனக்கும் மறந்து விட்டது. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

சரி சப்ஜெக்ட்டுக்கு வருவோம்.

நீங்கள் ஒரு பிளாகர். நீங்கள் இன்னொரு பிளாக்கில் சென்று கமென்ட் எழுதும் போது, எப்படி எழுத வேண்டும்?, எப்படி எழுதக்கூடாது கூடாது? என்பதற்கு சில etiquette இருக்கிறது. அதை எல்லோரும் பின்பற்றினால் blogosphere சுபிட்சமாய் இருக்கும்.

உங்களது ஒரு பதிவுக்கு இரண்டு புதிய கமெண்ட்கள் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். 

"அருமையான பதிவு. என்னுடைய வலைப்பூவுக்கும் வந்து பாருங்கள்"

"நீங்கள் சொல்வது முட்டாள்தனமாய் உள்ளது. ஒன்றுமே தெரியாமல் பிதற்றாதிர்கள்"

இரண்டில் எதை மதிப்பீர்கள்?

சந்தேகமே இல்லாமல் அது இரண்டாவது தான். ஏனென்றால் அந்த முதல் ஆள் உங்கள் பதிவை முழுதும் படித்தாரா? என்பது சந்தேகம். ஆனால் இரண்டாவது ஆள் உங்கள் பதிவை முழுதும் படித்துள்ளான். மேலும் தன்னுடைய ப்ளாகை விளம்பர படுத்த வரவில்லை.

Be Specific:

            ஒரு பதிவை படித்தால் அது உங்களுக்கு பிடித்திருக்கா? இல்லையா? காதலை சொல்வது போல் மனதில் பட்டதை பட்டென்று சொல்லுங்கள். அவர் கருத்துக்கு மாறுபடும் பட்சத்தில் எதிர் கருத்துகளை சொல்லுங்கள். அல்லது சிம்பிளாக facebook லைக் செய்து விட்டு போய்விடுங்கள். அதை விடுத்து "அருமை! பகிர்வுக்கு நன்றி!" என்று கமென்ட் போட வேண்டாம். சில பேர் படிக்காமலே வந்து கமென்ட் போடுவார்கள். Indiblogger தளத்தில் கூட இதே கதைதான். இதில் கடுப்பாகிற விஷயம் என்னவென்றால், அவன் ஹிந்தி பிளாக் வைத்துக் கொண்டு தமிழே தெரியாமல், நம்முடையதை "லைக்" செய்வான்.

Don't leave a link to your Blog:

         கமெண்டில் உங்கள் பிளாக்கின் லிங்கை விட்டு செல்வது உங்கள் மீதான மதிப்பை குறைக்கிறது. உங்கள் கமென்ட் நன்றாக இருக்கும் பட்சத்தில், வாசகர்கள் Profile வழியாக உங்கள் பிளாகிற்கு வந்து படிக்கும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் நன்றாக எழுதும் பட்சத்தில் (அ) நீங்கள் சூப்பர் பிகராக இருக்கும் பட்சத்தில், பசங்க எப்படியேனும் அட்ரஸ் கண்டுபிடித்து வந்தே தீருவார்கள். உங்ககிட்ட மேட்டர் கும்மென்று இருந்தால் போதும், வழக்கு எண்  18/9 படத்தில் வருவது போல கெமிஸ்ட்ரியில் எதோ ஒரு டவுட் என்று சொல்லியாவது உள்ளே நுழைந்து விடுவார்கள்.

அதனால், வடிவேலு பாஷையில் சொல்வதென்றால், "போ போ போகும் போது பொருள (content) விட்டுட்டு போ. உசுர (link) விட்டுட்டு போகாத".


Stay on Topic:

        பதிவில் என்ன உள்ளதோ, அதற்கு சம்பந்தமாய் கமென்ட் எழுத வேண்டும். ஒபாமாவின் அக்கா வீட்டு திருமண சம்பந்தமான பதிவில், ஒசாமா செத்து போனதை பற்றி ஒப்பேரி வைக்கக் கூடாது. ஹிமாச்சல் ட்ரெக்கிங் பற்றி எழுதிய பதிவில் நான் எழுதிய ஒரு வரியை வைத்துக் கொண்டு, ஒருத்தர் கமென்ட்டில் சண்டைக்கு வந்து விட்டார்.

Be Nice:

       கமென்ட் எழுதும் போது மோசமான வார்த்தைகள் பயன் படுத்தக் கூடாது. அனானிமஸ் option என்பது அசிங்கமாக எழுதுவதற்கு தான் இருக்கிறது என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிளாக் படிப்பவர்களில் நிறைய பேர் Rough ஆன சாப்ட்வேர் எஞ்சினியர்களாக இருக்கிறார்கள். சாப்ட்வேர் எஞ்சினியர் என்றால் படு டீசண்டாக இருப்பான் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அவனுக்குள்ளும் சாக்கடை ஓடிக் கொண்டிருக்கும்.


Keep it Brief: 

     நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை சுருக்கமாய் சொல்ல வேண்டும். பதிவு எருமையை போல இருந்தால், கமெண்டு கன்று குட்டியை போல தான் இருக்க வேண்டும். எருமையை விட பெரிதாய் இருக்க கூடாது.

சில பேர் ஒரு paragraph-யை, சிக்கன் பீஸ் போல துண்டு துண்டாக கட் பண்ணி, நாற்பது கமெண்டுகளாக போட்டிருப்பார்கள். இது என்ன ரேசன் கார்டா? எண்ணிக்கை அதிகமாக இருந்தால் சர்க்கரை அதிகமாக போடுவார்கள் என்பதற்கு.



ந்த பிரச்சினை தமிழனுக்கு மட்டும் தான் இருக்கிறது என்றில்லை, இங்கிலீஸ்காரிக்கும் இருக்கிறது. "எரிக்கா" என்ற வெள்ளரிக்கா, சாரி வெள்ளைக்காரி அக்கா புலம்புவதை கொஞ்சம் படித்து பாருங்கள். இதை தான் தமிழில் கொஞ்சம் உல்டா செய்து எழுதியுள்ளேன்.


Feb 17, 2012

"பவர் கட்" நல்லது - ஆபாயில்


சுஜாதா சுகமில்லை

சுஜாதா இறந்து போனது கலையுலகிற்கு பேரிழப்பு என்றாலும் வளரும் தமிழ் இலக்கியவாதிகளுக்கு ஒரு விதத்தில் நல்லது தான்.

என்னுடைய எழுத்து சுஜாதாவின் எழுத்தை போல் உள்ளதாக என் Die Hard வாசகர்கள் கூறுகின்றனர். சுஜாதாவின் புத்தகங்களை நான் படித்ததில்லை. அவரும் என் எழுத்தை படிக்கவில்லை.

சுஜாதா பரலோகத்தில் "நிம்மதியாய்" இருக்கட்டும்.

என் எழுத்து சுஜாதாவை போல் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? சுஜாதா சிறுவயதில் பள்ளிக்கூடம் படிக்கையில் தன் கைப்பட எழுதிய கோடு போட்ட அறிவியல் நோட்டு கால ஓட்டத்தில் என்னிடம் சேர்ந்தது. அதை பார்த்து அவரை போலவே தொடர்ந்து எழுதி விடாமுயற்சி செய்து விஸ்வரூப வெற்றி கண்டுள்ளேன்.

இந்தியாவில் கல்யாணம் செய்து புள்ளைகளை பெற்று போடுவது போல், யார் பார்த்தாலும் எதோ ஒன்றை கிறுக்கி புத்தகம் போட்டு, புத்தக கண்காட்சியில் கடை விரிக்கிறார்கள்.

அது போல உங்களில் யாருக்காவது உங்களுடைய எழுத்தை புத்தகமாய் பார்க்க வேண்டும் என்ற அல்ப ஆசை இருந்தால்,  இந்த சைட்டுக்கு போய் உங்கள் பிளாக் அட்ரஸ்ஸை கொடுத்து, உங்க புத்தகத்தின் Soft Copy யை பார்த்து பரவசம் அடைந்து, அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம். அதிக பணம் செலவழித்தால் உங்க வீட்டுக்கே Hard Copy அனுப்பி வைப்பார்கள்.


தமிழ் நாடு ஒளிர்கிறது!




சென்னையை தவிர மற்ற ஊர்களில் மின்சார தட்டுபாடு எக்கச்சக்கமாய் அதிகரித்து விட்டது. சொந்தகாரங்க வீட்டுக்கோ, நண்பர்கள் வீட்டுக்கோ போகும் முன் கரண்ட் இருக்கா? என்று கால் செய்து கேட்டு விட்டு தான் செல்ல வேண்டியிருக்கிறது. நம் முன்னோர்கள் குடும்ப கட்டுப்பாடு பண்ணாமல் விளையாடிய வினையால், ஜனத்தொகை அதிகரித்து இப்போது மின்சார தட்டுபாடு உருவாகிவிட்டது.

இதனால் மக்கள் மிகவும் கஷ்டப் படுகிறார்கள். பெண்கள் சீரியல் பார்க்க முடிவதில்லை. அதனால் சும்மாவே இருக்கும் மாமியாரும் மருமகளும் சீரியலின் அடுத்த எபிசோட்டை வீட்டில் தொடரலாம். கரண்ட் கட், கணவர்களுக்கு நிறைய பாதிப்புகளை உண்டாக்கலாம். டைவர்ஸ், கொலை போன்றவை சாதாரணமாய் நடக்கலாம். அதனால் கரண்ட் போய் விட்டால் கணவர்கள் வெளியே சென்று விடுதல் நலம்.

கரண்ட் இல்லாமல் மாணவர்கள் எக்ஸாமுக்கு முன்தினம் கூட படிக்க முடிவதில்லை. அதனால் கண்டிப்பாக பெயில் ஆகி விடுவார்கள். மாணவிகள் தினமும் படிக்க முடியாததால், அவர்களும் பெயிலாகி விடுவார்கள்.




இந்த பிரச்சினை அதிகரித்தால் நிலைமை இன்னும் மோசம் ஆகும். குறிப்பாக, வருகின்ற கோடை மாதங்களில் கல்யாண சீசன் அதிகம் இருப்பதால், திருமணம் செய்யும் ஒவ்வொரு ஜோடியும் முதலிரவு கொண்டாட வேண்டும் என்றால் ஜெனரேட்டர் வாங்கி தான் ஓட்ட வேண்டும். எப்போது கரண்ட் கட் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. பூவெல்லாம் தூவி, புது பொண்டாட்டியை அருகில் உட்கார வைத்து, தட்டு தடுமாறி ஆரம்பித்த பின், பாதியில் திடீரென்று கரண்ட் போனால் எத்தனை கஷ்டமாய் இருக்கும்? எது எங்கிருக்கிறது என்று தெரியாமல் மறுபடியும் கஷ்டப் பட்டு,....யப்பா!! நினைத்து பார்க்கவே முடியவில்லை. மாமனாரிடம் இருந்து வாங்குகின்ற வரதட்சணையில் ஒரு பெரிய பவர் ஜெனரேட்டரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கல்யாணம் செய்யப் போகும் மாப்பிள்ளைகள் கவனம் தேவை.

ஒரு விதத்தில் இந்த பவர் கட் தற்போது ஜனத்தொகை உருவாவதை கட்டுப்படுத்தும் என்பதால், இந்த பவர் கட், பல கஷ்டத்தில் ஒரு நல்லது.

"அம்மாவுக்கு ஒட்டு போட்டால் இப்படிதான்" என்று வலையுலக திமுக கண்மணிகள் வேகமாக ரன்னிங் ரேஸில் ஓடி வர வேண்டாம்.

இந்த வருடம் தாத்தாவே வென்றிருந்தால், இதே நிலைமை தான் இருந்திருக்கும். கூடவே, ஒவ்வொரு மாதமும் என் வீட்டு வாடகையை தாத்தாவிடம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும். இந்நேரம் தமிழ்நாட்டில் எல்லோருடைய நிலம், பெரிய வீடு, "சின்ன வீடு" எல்லாத்தையும் அடித்து பிடுங்கியிருப்பார்கள். மீண்டும் மன்னர் ஆட்சி மலர்ந்திருக்கும். தாத்தா தமிழ் நாட்டை மூன்றாய் பிரித்து சோழநாட்டை ஸ்டாலினுக்கும், பாண்டிய நாட்டை அழகிரிக்கும், சேர நாட்டை கனிமொழிக்கும் கொடுத்து விட்டு, நண்பன் விஜய் போல All izz Well என்று சொல்லியிருப்பார்.


பவர் கட் special தத்துவம்:

விளக்கேற்ற ஒரு பெண்ணை
தேடி அலைவதை விட,
கிடைத்த பெண்ணை வைத்து
விளக்கை அணைப்பதே
சிறந்தது.

- ஜல புல ஜங் சுவாமிகள்.




Feb 9, 2012

உங்களில் யார் அடுத்த நயன்டாரா? - ஆபாயில்

நான் தற்போது அதிகமாக எழுதாதை கண்டித்து என் வீட்டு முன்னால் மா.மு கட்சி ஆர்பாட்டம் நடத்தியது. அதனால் நான் மாதம் ஒரு போஸ்ட் எழுதலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். தினம் ஒரு போஸ்ட் போடலைன்னா உன்னால் அரசியல் செய்ய முடியாது என்று என் அப்பா சொல்கிறார். என்ன எழவோ! எனக்கு அரசியல் வரவே மாட்டேங்குது. தினம் ஒரு அறிக்கை, அரசுக்கு ஒரு கண்டனம், ஒரு புரட்சி என்று எப்படித்தான் பண்றாங்களோ?



சென்னை, திருப்பூர் கண்காட்சியை மிஸ் செய்து விட்டேன். தினமும் புத்தக கண்காட்சிக்கு சென்று போண்டா சாப்பிட்டு விட்டு மகாபாரதம் போர் போல ஒன்றாம் நாள், இரண்டாம் நாள் என்று பதிவு போடலாம் என்று நினைத்தது நடக்கவில்லை. சாரு சாபம் விட்டிருப்பார் என்று நினைக்கிறன்.

சரி, "லவாசாவில் பல ராத்திரிகள்" என்று நான் ஒரு புத்தகம் எழுதினேன். யாராவது என்னுடைய புத்தகத்தை வாங்கினீர்களா? மொத்தம் 116 பாலோவர்ஸ் இருக்கிறீர்கள். ஒருத்தர் ஒரு புத்தகம் வாங்கியிருந்தால் கூட 116 புத்தகம் வியாபாரம் ஆகியிருக்கும். 116 பேரில் எத்தனை பேர் முழிச்சிருக்காங்கன்னு தெரியல. சைடில் ஒரு vote box வச்சு எல்லோரையும் ஒரு attendance போட சொல்லணும்.

நேற்றைக்கு புத்தக பதிப்பகத்தில் இருந்து போன் செய்து அச்சடித்த ஐநூறு புத்தகத்தில் இதுவரை ஐந்து புத்தகம் மட்டும் தான் சேல்ஸ் ஆனது என்று சொன்னார்கள். அதில் இரண்டு புத்தகத்தை என்னை Encourage பண்ண என் நண்பர்கள் வாங்கியது. மிச்சம் மூன்றை கிளுகிளுப்பான தலைப்பை பார்த்து வாங்கியிருப்பார்கள். இன்றைக்கு இன்னொரு பதிப்பகம் போன் செய்து இன்னும் விக்காமல் 200 புத்தகங்கள் இருக்கிறதென்று சொன்னது கூடுதல் செய்தி.

ரஜினி இல்லையென்றாலும் அட்லீஸ்ட் கொலைவெறி நாயகனை வைத்தாவது புத்தகத்தை ரிலீஸ் செய்திருக்கலாம். கொஞ்சமாவது விற்றிருக்கும். யாருக்காவது புத்தகம் வேண்டும் என்றால், no1writter@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள்.

அடுத்த பதிவில் என் புத்தகம் பற்றிய, முந்தைய பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாயின் விமர்சனத்தை எதிர்பார்க்கலாம்.


நான் எவ்வளவு தண்ணி அடிச்சாலும் ரொம்ப ஸ்டெடியாகவே இருப்பேன். வடிவேலு மாதிரி பஸ்ஸில் கூட கம்பியை பிடிக்காமல் தான் நின்று கொண்டு போவேன். தண்ணி அடித்து விட்டு இதுவரை ஆம்லேட் போட்டதே இல்லை என்பதை என் வரலாற்றை புரட்டி பார்த்தால் அறிய முடியும்.

ஆனால் ஒரு வெப்சைட் இருக்கிறது. அதை ஓபன் பண்ணி பார்த்தாலே போதும் அந்த நாற்றத்தில் எனக்கு வாந்தி குபீரென வந்து விடும். நல்லவேளை நான் ஆணாக இருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. இதுவே ஒரு பெண்ணாக இருந்திருந்தால், "யாருக்கிட்ட போய்டி ஏமாந்த?" என்று கேட்டு அம்மா அடித்து துவைத்திருப்பாள்.

அது என்ன சைட்? அந்த "மணம்" என்ன?
அது Blog படிப்பவர்களுக்கு மட்டுமே தெரியலாம். தெரியாதவங்களுக்கு, Sorry... 


சுமார் மசாலா படமான ஒரிஜினல் 3 Idiots -யை நெட்டில் டவுன்லோட் பண்ணி பார்த்தது தப்பு தான். பகிரங்கமாய் ஒப்பு கொள்கிறேன். ஆனால் அதையே சிலவருடம் கழித்து தமிழில் பார்க்க வைத்து தண்டனை கொடுப்பது எவ்விதத்தில் நியாயம் எம்பெருமானே?

ஆனால் இதை விட ஒரு பெரிய தண்டனை இருக்கிறது தெரியுமா? அது நரகத்தில் கூட கிடைக்காது. 

"இந்த படத்தை திருட்டு டி.வி.டி வாங்கி பார்ப்பதுதான்"

தெய்வம் நின்று சாகடிக்கும். ஆனால் விஜய் நடித்து சாகடிக்கறார். முகத்தில் Expression, Syntax என்பது துளியும் இல்லை. இன்னும் நடிப்பில் சங்கவியின் முதுகில் சோப் போடும் லெவலில் தான் இருக்கிறார்.

இதில் சங்கர் படம் என்றால் பிரமாண்டமாய் இருக்குமாம். அடுத்த படத்தில் பெரிய அண்டாவுக்கு பெயின்ட் அடித்து பிரமாண்டமாய் எடுக்க இருக்கிறார்களாம்.

விஜய் சார், சங்கர் சார் எங்கேயாவது ஓடிருங்க சார்.

இவ்வளவு நாளாக நடித்து டான்ஸ் மட்டுமே ஆட வரும் என்றால், அதற்கு "உங்களில் யார் அடுத்த பெரபுதேவா?" நிகழ்ச்சியில் போய் கலந்து கொள்ளலாம். நயன்டாராவால் கழட்டி விடப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் நடன பொயல் பெரபுதேவாவிற்கு எந்த சேனலாவது நல்லது செய்ய விரும்பினால் "உங்களில் யார் அடுத்த நயன்டாரா?" என்ற நிகழ்ச்சி நடத்தி வெற்றி பெறும் மங்கையை அவருடன் வாழ வைக்கலாம். நயனமும் நடனமும் சேராதது கலையுலகின் மிகப் பெரிய இழப்பு.


காலை மற்றும் மாலை வேளைகளில் சென்னையின் சாலை ஓரங்களில் நடந்து செல்வது அசாதாரண காரியம். அதிலும் பெண்கள் தங்கள் மேனி கறுக்காமல் இருக்க ஒரு கையில் குடையையும், இன்னொரு கையில் உயிரையும் பிடித்து கொண்டு செல்ல வேண்டும்.

வாகனங்கள் செல்லும் திசையில் கையை வீசிக் கொண்டு ஹாயாக நடந்து சென்றால் உங்கள் வலது தோள்பட்டையை ஆபரேசன் செய்யாமல் அகற்றிவிடுவார்கள். இதிலிருந்து தப்பிக்க இரண்டு வழிகள் இருக்கிறது.

ஒன்று, வாகனங்கள் வரும் திசைக்கு எதிர் திசையில் நடப்பதுதான். இரண்டாவது, சைடு mirror தலையில் செட் பண்ணி கொள்வது.

பிளாட்பாரத்தில் ஏறி நடந்து சென்றாலும் பைக்கில் பின்னாலே வந்து பின்புறத்தில் இடித்து படுக்க வைத்து, உங்கள் பின்புறத்தை வேகத்தடையாக மாற்றி விடுவார்கள் (படம் கீழே).



அதேபோல் சென்னையில் பைக் ஓட்டுவதும் சவாலான விஷயம். 70 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது ரோட்டின் குறுக்கே ஸ்டைலாக Cat Walk போவார்கள். உங்களுக்கு நேரம் இருந்தால் நின்று பொறுமையாய் அந்த Cat Walk ஷோவை ரசித்து விட்டு செல்லலாம். இன்னும் சில பேர் Planet of the Aps படத்தில் பாலத்தில் இருந்து குதிக்கும் மனித குரங்குகள் போல திடீர் திடீரென ரோட்டின் நடுவே இருக்கும் டிவைடரில் ஏறி குதித்து நம்மை பயமுறுத்துவார்கள். நாமும் மனித குரங்குகள் தானே!

உங்களுக்கு முன்னாள் ஆட்டோ சென்று கொண்டிருந்தால் கவனம் தேவை. அவைகள் சாக்கடையில் இருந்து எழுந்து செல்லும் பன்றிகள் போல. பக்கவாட்டில் ஐந்து அடி distance விட்டு செல்ல வேண்டும். எந்த பக்கம் வேண்டுமானாலும் திடீரென திரும்பி நம்மை மண் சோறு சாப்பிட வைத்து விடுவார்கள்.

எனக்கு ஒரு சந்தேகம் ஆட்டோவுக்கு side indicator இருக்கா?




Jan 4, 2012

திருமணங்கள் கேரளாவில் நிச்சயிக்கப் படுகின்றன


என்னதான் கவிதை, கட்டுரை என்று நிறைய எழுதினாலும் பெண்களிடம் பேசும் போது மட்டும் எனக்கு சரியாக சிக்னல் கிடைக்காத செல்போன் மாதிரி, வார்த்தைகள் கட்டாக ஆரம்பித்து விடும். என்னுடைய எல்லா காதலும் கருமாதியிலே முடிய, கட்டாயப் படுத்தி மனதை பறிக்க நானும் கடைசியாக கல்யாண சந்தையில் தள்ளப்பட்டு விட்டேன்.

இது மாடுகள் விலை பேசப்படும் செவ்வாய் சந்தை.




தண்ணி அடித்து பெண்கள் பின்னால் அலைந்து, ஜாலியாக எதை பற்றியும் வருத்தப் படாமல் ஊர் சுற்றி கொண்டிருக்கும் வாலிப வயசு பையன்களை பார்த்து அவர்களது உறவினர்கள்,

"ஒரு கால்கட்டு கட்டி விட்டால் எல்லாம் சரியாகிடும்"
"மூக்கணாங் கயிறு போட்டால் அடங்கிடுவான்"

என்று மாடுகளையே உதாரணம் சொல்லி பேசுவார்கள். கல்யாணம் ஆவதற்கு முன் நாய் மாதிரி சுற்றி கொண்டிருக்கும் ஆண்கள், கல்யாணம் ஆகி விட்டால் மாடு மாதிரி உழைக்க வேண்டும்.

கேம்பஸ் இன்டர்வியுவிக்கே படிக்காமல் தெனாவட்டாக செல்லும் பையன்கள், பொண்ணு பார்க்க போகும் போது மட்டும் பொண்ணுகிட்ட எப்படி பதில் பேசறது என்று தனிமையில் கண்ணாடி முன் நின்று ஆஸ்கார் விருது வாங்கும் அளவுக்கு நடித்தெல்லாம் பார்ப்பார்கள்.

பெண் வீட்டார்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்கு, அன்லிமிடெட் ஆந்திரா மீல்ஸ் சாப்பிட்டு விட்டு போனால் தான் நம்மால் பதில் சொல்ல முடியும்.

மாடு என்ன படிச்சிருக்கு?
மாடு எவ்வளவு சம்பளம் வாங்குது?
மாடு அமெரிக்கா போயிட்டு வந்திருக்கா? இல்லையா?

டயர்டு ஆகி விட்டால், கொஞ்சம் தண்ணி குடித்து விட்டு பதில் சொல்லலாம்.

இதில் அமெரிக்கா சென்று வந்த மாட்டுக்கு முன்னுரிமை அதிகம்.

இப்போது ஐ.டி துறையில் வேலை செய்யும் பையன்களுக்கு சரியான வயதில் திருமணம் ஆவதே சவாலான விஷயம். அப்படி இருக்க அதிகமாய் படித்திருக்காமல் டிரைவர் மற்றும் இதர வேலைகளை செய்யும் இளம் சிங்கங்களின் நிலைமை இன்னும் மோசம். இதனால் நிறைய பேர் திருமணம் ஆகாமல், "ராமன் தேடிய சீதை" சேரன் போல முகத்தை மூடிக் கொண்டு அழுகின்றனர்.

பெண்களுக்கு Options அதிகமாய் இருக்கின்றன. பையன்களுக்கு?  

They are the Options!.

படித்து முடித்து விட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருக்கும் பசங்களிடம் வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி காசை பிடுங்குவதற்கென்றே சிட்டியில் ஒரு கும்பல் எப்போதும் நடமாடி கொண்டிருக்கும். அதுபோல திருமணம் ஆகாமல் தவித்து கொண்டிருக்கும் பையன் வீட்டார்களை ஏமாற்றி பணம் பிடுங்க ஜோசிகார கும்பல் நாட்டில் பஞ்சமில்லாமல் நிறைந்திருக்கிறது.

அவர்கள் சொல்லும் சில ஏமாற்று சடங்கு வேலைகள்.

1. வாழை மரத்திற்கு தாலி கட்டுவது

பெண்ணின் கால்களை வாழை தண்டு கால்கள் என்று  கவிஞர்கள் வர்ணித்து காதலில் மூழ்கி முத்தெடுப்பர்கள். ஆனால் இங்கு முழு வாழை மரத்தையே பெண்ணாக்கி விடுகிறார்கள். நீங்கள் வாழை மரத்திற்கு தாலிகட்டும் சடங்கை செய்து முடித்தால் உங்கள் திருமண தோஷம் விலகி திருமணம் நடந்து, முதலிரவை பஞ்சு மெத்தையில் குஜாலாய் கொண்டாடலாம் என்பது நம்பிக்கை.

இது கிட்டத்தட்ட ஒரு நிஜ திருமணம் போலவே நடக்கும். ஆற்றோர கோவில் கரையில், ஓம குண்டம் வளர்த்து, அதில் ஒரு கையால் அரிசி மற்றும் இதர வகைகளை போடுவதுடன், மற்றொரு கையில் உங்களது மணமகளை அதாவது இளம் வாழைக் கன்றை பிடித்துக் கொண்டு, அய்யர் சொல்லும் மந்திரங்களை ஒன்றும் புரியாமல் திருப்பி ஓத வேண்டும். மேளதாளம் மட்டும் இருக்காது. மிமிக்ரி தெரிந்த உங்கள் நண்பர் யாராவது இருந்தால் அதையும் அடித்து கொள்ளலாம்.

அந்த வாழை மரத்திற்கு ஒரு பெயரும் வைக்கப் படும். கடைசியில் முகூர்த்த நேரம் வரும் போது அய்யரிடம் இருந்து மஞ்சள் கயிறை வாங்கி வாழை மரத்திற்கு மூன்று முடிச்சு போடவேண்டும். அப்போது அந்த வெட்டிய வாழை மரம் தண்ணீர் (கண்ணீர்) விட்டால் கவலைப் படக் கூடாது. ஆனால் கடைசியாக முதலிரவு கூட முடியாமல் அந்த வாழை பெண்ணின் கழுத்தை அரிவாளால் வெட்டி ஆற்றில் தூக்கி வீசி விடுவார்கள் என்பது வருத்தமான விஷயம்.

இதில் மேலும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் என் வாழ்விலும் இச்சம்பவம் நடந்தேறியது. எனக்கு நடந்த திருமணத்தில் என் பொண்டாட்டியின் பெயர் காவ்யா. காவ்யா செத்து போனதில் கொஞ்ச நாள் நான் தாடி வளர்த்து கஞ்சா அடித்து "அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சல" என்று பாட்டு பாடி புலம்பி கொண்டிருந்தேன். நம்மூரில் தான் கழுதைக்கும், மரத்திற்கும் தாலி கட்டி அவைகளை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றனர்.

2.  திருமணஞ்சேரிக்கு சென்று மாலை வாங்கி வருவது.

திருமணஞ்சேரி என்பது நாகப் பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். கடவுள் சிவன், பார்வதியை இங்கு தான் திருமணம் செய்தாராம். இங்கு வந்து கடவுளை வழிபட்டு பூ மாலையை வாங்கி கொண்டு சென்றால், உங்கள் திருமணம் ஏற்படுவதில் இருக்கும் தோஷம் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. அந்த மாலையை உங்களுக்கு திருமணம் ஆகும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். திருமணம் ஆனவுடன் மணமக்களாக மீண்டும் அங்கு சென்று அந்த மாலையை திருப்பி தர வேண்டும் என்பது சம்பிரதாயம். அங்கிருக்கும் ஐயர்கள் உங்களை கட்டுத்தரையில் அடைத்து வைத்த மாடுகளை போல தான் நடத்துவார்கள்.

நீங்கள் யூகித்தது போலவே, என்னிடமும் அந்த பூ மாலை இருக்கிறது. என் பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் இதை செய்த பின், அற சீற்றம் கொண்டு எழுதிய பதிவு தான் இது. :-(




இப்படியாக ஏமாந்து கடைசி வரை சந்தையில் விலை போகாத மாடுகள் எல்லாம் கடைசியாக கேரளாவுக்கு அனுப்பபட்டு அடிமாட்டு விலைக்கு விற்கப் படும். கேராளாவில் திருமண சம்பந்தம் பிடிப்பதற்கென்றே எங்கள் ஊரில் ஒரு Specialized மேரேஜ் புரோக்கர் இருக்கிறார். நெருங்கிய சொந்தக்காரர் தான். தமிழ் நாட்டிற்கும் கேரளாவிற்கும் நிறைய broadband இணைப்புகள் கொடுத்துள்ளார்.

நம்ம ஊரு கல்யாணங்கள் போல மாப்பிள்ளை வீட்டு அழைப்பு, பெண் வீட்டு அழைப்பு, நிச்சயதார்த்தம் என்பதெல்லாம் தனித்தனியாய் இருக்காது. ஹனிமூன் செல்வது போல ஒரு வாரம், மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் கேரளா சென்று, திருமணம் முடித்து, அதன் பின் "கேரள நாட்டு முல்லை"யை எந்த பிரச்சினையும் இல்லாமல் தமிழ் நாட்டிற்கு கூட்டி வந்து 'அணை'க்கலாம்.

என் ஆபிஸ் கேரள பெண் ஒருத்தியை இளநி என்று குறிப்பிடுவோம். கேரள பெண்கள் அந்த ஊரை போலவே செழுமையாய் இருக்கிறார்கள். அந்த ஊர் இளநி பார்க்க பெரிதாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.

கேரளா சுற்றி பார்க்க அழகான இடம் என்பதால் நீங்கள் திருமணதிற்கு பின் ஹனிமூன் செல்ல அவசியம் இருக்காது.

பெண் வீட்டார்களிடம் இருந்து பெண்ணை தவிர எதையும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. மாப்பிள்ளை வீட்டார்கள் தான் பெண்ணுக்கு நகைகள் போடுவது முதல் திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் செய்து கொள்ள வேண்டியது போல் இருக்கும். அவர்களால் முடிந்தால் நீங்கள் திரும்பும் போது வழிச் செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

ஆந்திராவில் உங்களுக்கு எந்த டிகிரி, எந்த university -யில் வேண்டும் என்றாலும் பணம் கொடுத்தால் போதும் Fake certificate வாங்கி விடலாம். அதே போல் மாப்பிள்ளை வீட்டார்க்கு எந்த ஜாதியில் எந்த குலத்தில் பெண் வேண்டுமென்றாலும், அந்த Fake பெண் வீட்டார்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். உங்கள் உறவு, ஜாதி வட்டங்களுக்குள் ஒரே ஜாதி என்று புளுகி கொள்ளலாம்.

ஆனால் இன்னொரு வகையில், சாதி மத பேதம் அற்ற சமுதாயத்தினை உருவாக்கி நீங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாய் திகழ்வீர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

எனக்கு கேரளா ஜஸ்ட் மிஸ் ஆகி விட்டது. :-(



Jan 3, 2012

கொலைகார வாசகன் - ஆபாயில்


2012 ஆம் வருடம் பிறந்து விட்டது.

ஒரு ரூபாயை மிச்சபடுத்தி உங்களுக்கு ஒரு நாள் முன்பாகவே அட்வான்ஸ்டு புத்தாண்டு வாழ்த்துக்களை, உங்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நண்பர்கள் SMS மூலம் வாழ்த்தி  இருப்பார்கள்.

நீங்களும் அடுத்த நூற்றாண்டின் மாமனிதர் விருது வாங்கி விடுவீர்கள். மக்கள் எல்லோரும் நல்லவர்கள் ஆகி விடுவார்கள். நாடே சுபிட்சம் அடைந்து விடும்.

இவ்வருடம் உலகம் அழிந்து விடும் என்று மாயன்ஸ் மக்கான்ஸ் சொல்லுகிறார்கள். பயமாய் இருக்கிறது. என்னுடைய மொபைலும் Virgin நானும் Virgin.

சரி, ஏன் Virgin மொபைல் என்று பெயர் வைத்தார்கள்?

எல்லா மொபைலும் Virgin ஆக தான் இருக்கின்றன. அதிக நேரம் கொஞ்சி கொஞ்சி பேசி, பின் முத்தம் கொடுத்து அதை சூடேற்றி விட்டு தன் வேலையை பார்க்க போய் விடுகிறார்கள்.



போன வருடம் வந்த மொக்கை படங்களை வரிசை படுத்தி தொலைகாட்சிகள் எல்லாம் இம்சை படுத்த, "எனக்கு பிடித்த பத்து படங்கள்", "எங்க ஆயாவுக்கு பிடித்த பத்து படங்கள்" என ஒவ்வொரு பிலாகர்களும் அதற்கு மேலும் புண்ணை கிளற, புத்தாண்டு எனக்கு இனிமையாய் கழிந்தது.



ரு நாள் காலை எப்போதும் போல முகம் கழுவாமல் என் பிளாக்கை திறந்து பார்த்த போது, என் பிளாக்கில் ஒரு கமெண்ட் போடபட்டிருந்தது. தான் ஒரு கொலைகாரனாக இருந்ததாகவும், என் பிளாகை படித்து திருந்தி விட்டதாகவும் எழுதியிருந்தான். இப்படி திருந்திய வரிசையில் அரசியல்வாதி, ரேப்பிஸ்ட் என நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது சம்பந்தம் இல்லாத விஷயம்.

என் எழுத்தின் மேல் பற்று கொண்டு அவன் நிறைய போலி ப்ரோபைல்கள் உருவாக்கி என் எல்லா பதிவுகளுக்கும் ஒட்டு போட்டு தமிழ் மணத்தின் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகளின் வரிசையின் உள்ளே நுழைத்து, எனக்கு மணி மகுடம் வாங்கி கொடுப்பதில் குறியாக இருக்கிறான்.

அந்த மகுடத்தில் மணி இருக்குமா? இருக்காதா?

தமிழ் தெரியாத என்னுடைய பிரெண்டு ஒருவன் தமிழ்மணம் (Tamilmanam) என்பதை எப்போதும் தமிழ்மானம் என்றே படித்து மானம் வாங்குவான். அவனை சாகடிக்கலாம் என்றிருக்கிறேன்.

1330 குறள் எழுதி வைத்துவிட்டு கடலுக்குள் போய் தனியாக நின்று தவம் செய்து கொண்டிருக்கும் திருவள்ளுவருக்கே தெரியாது எத்தனை பேர் அதை படித்து உத்தமனாய் மாறி இருக்கான் என்று. பத்து குறள் மனப்பாடம் பண்ணுவதற்கே நாக்கு தள்ளும். பனிரெண்டாம் வகுப்பு பப்ளிக் எக்சாமிலே மினி பிட் எடுத்துட்டு போய் தான் நான் பாஸ் ஆனேன்.

கலைஞர் எழுதிய திருக்குறள் உரையை படித்த பின் தான் எனக்கு எல்லா குறளின் பொருளும் புரிய துவங்கியது. அந்த உரையை (தலையணை உறையல்ல) எப்போதும் தலைமாட்டிலே வைத்து தான் தூங்குவது வழக்கம். அதை நான் காசு கொடுத்து வாங்கவில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து தான் சுட்டு வந்தேன்.

நான் வழக்கமாய் செவ்வாய்கிழமை காலை சாப்பிட்ட பின் காக்காய்க்கு சோறு வைத்துவிட்டு  சரியாய் 10:00 மணிக்கெல்லாம் பதிவு போட்டு விடுவேன். அவனும் அதை ஷார்ப்பாய் போட்டவுடன் படித்து விடுவான். அதுவரை உயிரை கையில் பிடித்து வைத்துக் கொண்டு தான் காத்திருப்பான்.

ஆனால் அன்று இரண்டு நிமிடம் தாமதம் ஆகி விட்டது. அதற்கே அவனுக்கு மூச்சு விட சிரமமாக போய் விட்டது.

நல்லவேளை இரண்டு நிமிட தாமதம் அவனை காப்பாற்றி விட்டது. அதனால் அவன் உயிரோடு இருக்கிறான். இன்னும் ரெண்டு நிமிஷம் தாமதித்து போஸ்ட் போட்டிருந்தால் கூட அவன் பிழைத்திருக்க வாய்ப்பு ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும் என டாக்டர் கண்ணாடியை கழட்டி கொண்டே சொன்னார்.

செக்ஸை கலந்து, படிக்கின்றவர்களை கவர்வது போல கதை எழுத விரும்புகிறவர்கள், நேட்டிவிட்டியுடன் எழுத வேண்டும். சும்மா ஒரிஜினாலிட்டி இல்லாமல் மார்பு, உறுப்பு என்று வெறும் வார்த்தைகளை நிரப்பி போரடித்து தூக்கம் வரவைக்க கூடாது.




ழுக்காய் இருந்த என்னுடைய உலகம் Surf Excel போட்டு துவைத்ததை போல புதிதாக மாறிவிட்டது.

"பிகர் ஏதாவது செட் ஆகிடுச்சா?" ன்னு கேட்கறீங்களா?

நோ.

வேலை நேரம் மாறி விட்டது. இதுவரை மதியம் இரண்டு மணிக்கு ஆபிஸ் சென்று கொண்டிருந்த நான், இப்போது காலை ஆறு மணிக்கெல்லாம் சென்று விடுகிறேன்.

எப்பவுமே லேட்டாக எந்திருக்கிறேன் என்று வழக்கமாய் திட்டும் என் அப்பா இனி என்னை திட்ட முடியாது.  "சூரியனே எனக்கு அப்புறம் தான் எந்திரிக்குது" 

ஆனால் அதிகாலை ஐந்து மணிக்கு எழுவது சிரமமாக தான் இருக்கிறது. அதிகாலையில் வந்து மார்பில் கோலம் போடும் அனுஷ்காவையும், கழுத்தை பின்னி கட்டியணைக்கும் மோனிக்கா பெலுசியையும்  வலுகட்டாயமாய் உதறி தள்ளிவிட்டு எழுந்து வரவேண்டியதாய் இருக்கிறது. 

ஒரு சந்தேகம்.

ஏன் இந்த நடிகைகள் எல்லாம் அதிகாலை ஆரம்பித்தவுடன் தான் வருகிறார்கள்?




Nov 1, 2011

சென்னையில் ஒரு மழைக்காலம் - ஆபாயில் (அப்படியே சாப்பிடுங்க)



சென்னை பெங்களூருவாக மாறி விட்டது.

இங்கிருக்கிற பொண்ணுங்க எல்லாம் ரொம்ப அழகாவும், மாடர்ன் ஆகவும் மாறிவிட்டார்கள் என்று அர்த்தம் இல்லை.

அதிகமாய் மழை பெய்வதால், பகலிலேயே குளிர்கிறது.

வெய்யில் காலத்திலேயே சாயங்காலம் வெளியே சென்று சூடாய் நாலு பஜ்ஜியை உள்ளே தள்ளி, தண்ணியை குடிக்கும் நம்ம ஆட்களுக்கு இப்போது சொல்லவே வேண்டாம்.

இந்த குளிரில் ஆபிஸ் போகவே தோன்றவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

பாதை எல்லாம் பள்ளமாக மாறி பருவ பெண்ணை பார்க்கும் வயசு பையனை போல அசிங்கமாக பல்லிளிக்கிறது. மழை காலம் முடிந்த பிறகு அம்மாவிடம் மனு போட்டு, இன்னொரு உள்ளாட்சி தேர்தல் நடத்த சொல்ல வேண்டும்.

Shoe போட்டு கொண்டு ஆபிஸ் செல்பவர்களின் நிலைமை படு திண்டாட்டம். சில இடங்களில் முட்டியளவு தண்ணீர் நிற்கிறது. பாவாடை அணிந்திருந்தால் எளிதாய் தூக்கி பிடித்துக்கொண்டு கடந்து விடலாம்.

இந்த மாதிரி நேரங்களில், நமது அரசு கிரியேடிவ் ஆன போட்டிகள் நிறைய வைத்து பரிசு கொடுத்து மக்களை குஷி படுத்தலாம்.

  • ஒரு பள்ளத்தில் கூட விடாமல் வண்டியை ஓட்டுவது.
  • ரோட்டில் உள்ள பள்ளத்தை தாண்டும் Long Jump. 
  • தேங்கி உள்ள நீரில் நீச்சல் போட்டி மற்றும் படகு போட்டி.

இன்னும் என்ன மாதிரி போட்டி வைக்கலாம்? என நீங்களும் கமெண்டில் சொல்லலாம்.

நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சென்னையில் வாழ முடியும்.

ஆனால் இந்த கொட்டும் மழையில், சிட்டியில் சில பேர் மட்டுமே சந்தோசமாய்  வண்டியோட்டி செல்ல முடியும்.

அவர்கள் ஆட்டோகாரர்கள்.



தமிழ் சினிமாவில் பாட்டே இல்லாமலும், ஒரே ஒரு பாட்டுடனும் நிறைய படங்கள் வந்து விட்டது.

தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டு வர தம் கட்டி முக்கி கொண்டிருக்கும் இயக்குனர்களாக அறியப் படும் செல்வராகவன், முருகதாஸ் போன்றோர் ஏன் இன்னும் தயங்குகிறார்கள்?

இன்னும் எத்தனை நாளுக்கு தான் கூடுவாஞ்சேரியில் கனவு கண்டு நியூயார்க்கில் போய் டூயட் பாடுவது? பின்னால் வெள்ளையர்களை சேர்த்து கொண்டு ஆடும் பாலிவுட் காய்ச்சல் இன்னும் "விடாது கருப்பாய்" கோலிவுட்டை தொடர்கிறது.

சமீப காலங்களில் திரையரங்கில் பாடல் வரும் போதெல்லாம், "ஐயோ பாட்டு போட்றாதிங்க" என்று மக்கள் அலறும் சத்தம் அதிகரித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் நம் இயக்குனர்கள் இதை கேட்காமல் ஜடமாக இருப்பது ஆச்சர்யம் இல்லை. பாட்டு ஷூட் செய்வதற்கு  பின்னால் எக்கச்சக்க சௌகரியங்கள் இருக்கின்றன. இதை விட்டு கொடுத்தால், அடுத்தவன் பைசாவில் ஆம்லெட் சாப்பிட முடியாது அல்லவா!

படம் முடிந்தவுடன் பாடல்களை தனியாய் போடலாம். இஷ்டம் உள்ளவர்கள் பார்க்கட்டும். மற்றவர்கள் தம் அடிக்கட்டும்.



டெக்னாலஜி வளர்ந்த நாடுகள் எடுக்கும் Sci-Fi படங்களை மட்டுமே நம்மால் நம்ப முடிகிறது. அமெரிக்காவில் 4G, Automatic driving, வீடுகளில் உள்ள செக்யூரிட்டி கன்ட்ரோல் என்று பல விதங்களில் அவர்கள் நமக்கு ஒரு decade முன்னதாக போய் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் இன்னும் 2G ஊழலே முடியவில்லை.

நம் நாட்டில் தற்போது என்ன காலாச்சாரம், டெக்னாலஜி உள்ளது என்று அறிந்து அதை வைத்து படம் எடுத்தால் தான் ஒரிஜினலாக இருக்கும்.

நம்மூரில் முக்கால்வாசி ட்ராபிக் சிக்னல்கள் Manual ஆகத்தான் Operate செய்யப் படுகின்றன. அப்படி இருக்கையில் நம் நாட்டில் உள்ள ட்ராபிக் சிக்னல்களை ஒரு லேப்டாப் வைத்துக் கொண்டு ஹாக் (Hack) செய்வது போன்று படத்தில் காண்பிப்பதை பார்க்கையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு தான் சிரிக்க தோன்றுகிறது. திரையரங்கில் பார்க்கையில் அப்படி செய்ய முடியாது என்பதும் வருத்தம்.



நம் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள். சயின்ஸ் வளர்ந்த பிறகு Sci-Fi  படங்களை எடுங்கள். அதுவரை உங்கள் அறிவு திறமைகளை எங்கேயாவது பரணில் ஒளித்து வையுங்கள். அல்லது மதுரையை சுற்றியோ அல்லது தென்காசியை சுற்றியோ பனைமரத்தடியில் கேமராவை தூக்கி சென்று படம் எடுத்து கொண்டிருங்கள்.

தான் நினைத்த கதைக்கு சரியான டெக்னாலஜி இல்லை என்ற காரணத்தினால் பத்து வருடத்திற்கு மேலாக காத்திருந்தாரே அவதார் இயக்குனர் ஜேம்ஸ் காமருன், அவர் என்ன முட்டாளா?

சும்மா மொக்கையாக எதோ எழுதி, ஹிட்ஸ் வரவேண்டும் என்ற காரணத்திற்க்காக, அந்த பதிவை உடனடியாக வெளியிடும் என்னை போலவே, நம் இயக்குனர்களும் இருக்கிறார்கள்.




எங்கள் வீட்டில் பெண் தேடும் படலம் மும்முரமாய் போய் கொண்டிருக்கிறது என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். அஷ்டம சனி அந்த சனி இந்த சனி என்று என் அப்பா கோவில் கோவிலாய் என்னை அலைகழிக்கும் போதெல்லாம் எனக்கு கடவுளின் மேல் வெறுப்பு அதிகரிக்கிறது.

போன வாரம் என் அப்பா எனக்கு கால் செய்து "ஒரு பெண் ஜாதகம் வந்திருக்கு. பொண்ணு எஸ்.ஐ ஆக வேலை பார்க்குது. ஓகே வா?" அப்படின்னு கேட்டார்.

எனக்கு "ராமன் தேடிய சீதை" படத்தோட கிளைமாக்ஸ் ஞாபகம் வந்தது.

"வேண்டாம்ப்பா அதெல்லாம் நமக்கு ஒத்து வராது" என்று சொல்லிவிட்டேன்.

இப்போது தமிழ் நாட்டில் ஏகப்பட்ட ராமன்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். சீதையை கண்டுபிடிப்பதற்குள் அவர்களுக்கு நடிகர் சேரனின் வயசு ஆகிவிடுகிறது. எங்கள் ரூமில் நாங்கள் மூன்று ராமன்கள்.

என்னுடைய சீதை எங்கே இருக்கிறாளோ? தெர்ல.



இங்கிருந்து Onsite செல்லும் நம் IT யில் பணி புரியும் ஆண்கள் சில பேர் அங்கு சென்றதும் பெண்களாகி விடுகிறார்கள். கிட்டதட்ட Onsite என்பது அவர்களுக்கு புதுசாக கல்யாணம் ஆகி செல்லும் மாமியார் வீடு போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அது அவர்களுக்கு சந்தோசத்தையும் பயத்தையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது.

அவர்கள் பொதுவாய் செய்யும் வேலைகள் சில, 
  • சாப்பாடு செய்வது, பாத்திரம் கழுவுவது
  • அழுகை சீரியல், தமிழ் மொக்கை படங்கள் ஒன்று விடாமல் பார்ப்பது.
  • இந்தியாவில் இருக்கும் நண்பர்களிடம் கால் செய்து, கதற கதற மொக்கை போடுவது
  • அடிக்கடி குடும்பத்தினருக்கு கால் செய்து, குசலம் விசாரிப்பது.

வாசல் தெளித்து கோலம் மட்டும் போட முடியாது அவர்களால்.



Oct 12, 2011

Blogger's Life - ஆபாயில்






ன்போசிஸ் நாராயணமூர்த்தி IIT மாணவர்களில் 80% பேர்கள் திறமையானவர்கள் இல்லை என்று சொல்லியதிற்கு, முன்னாள் IIT மாணவரான சேத்தன் பகத், இன்போசிஸ் கம்பெனி ஒரு Body Shop கம்பெனி என்று பதிலடி கொடுத்துள்ளார். அந்த 80% இல் தானும் ஒருவர் என்ற குற்ற உணர்ச்சியாக இருக்கலாம். 

ஆனால் இந்தியாவின் 90% மேலான .டி கம்பனிகள் body shop வேலைகளை தான் செய்கின்றன. இதில் செய்யப் படும் வேலைகளை என்ட்ரி லெவல் என்ஜினியர்களே செய்ய முடியும். Geeks தேவையில்லை. இருவர்கள் சொன்னதும் உண்மை. 

காலேஜ் இறுதி ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியுவில் செலக்ட் செய்ய வரும் சில முன்னணி .டி நிறுவனங்கள் அழகான பெண்களை அள்ளி சென்று விடுவார்கள். திறமை என்பது தேவை இல்லை. எங்கள் காலேஜில் ஒரு பெண் தனக்கு எதுவும் தெரியாது என்று இன்டர்வியு செய்தவரின் தலையிலேயே சூடம் ஏத்தி சத்தியம் செய்த பிறகும், அந்த அறிஞர் பெருந்தகை அப்பெண்ணை செலக்ட் செய்தார். Of course she had good academic records. 

அவர் அப்படி செய்தது அந்த பெண்ணை கரெக்ட் செய்யலாம் என்ற சுயநலம் இல்லை. அழகான பெண்கள் கம்பெனியில் இருந்தால் தான் பையன்கள் சரியாய் வேலை செய்கிறார்கள். திங்கட்கிழமை கஷ்டப்பட்டு ஆபிஸ் வருகிறார்கள் என்றால் அது நல்ல பிகர்களிடம் பேசி மொக்கை போடலாம் என்பதற்காகத்தான். 

நான் தினசரி சாப்பிட செல்லும் உணவகத்தில் ஒருநாள் நியூ Recruit ஆக ஒரு பெண்ணை சேர்த்திருந்தார்கள். இதற்கு முன்னே மெதுவாய் சுரத்தை இல்லாமல் வேலை செய்துகொண்டிருந்த சர்வர்கள் சந்தோசமாய் சிரித்து பேசி கொண்டு அரக்க பரக்க ஓடி, வேலை செய்து கொண்டிருந்தார்கள். 

ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண்கள் இருக்கிறார்கள். எப்போதும் இருப்பார்கள்.



பி ளாக்(blog) எழுதும் நிறைய பேர் தங்கள் பிளாகை தன் காதலியை போலவோ, பொண்டாட்டியை போலவோ எண்ணி புலம்புவதை அதிகம் காணலாம். அப்படி பார்த்தால் எனக்கு நிறைய பொண்டாட்டிகள். 

பிளாகும் மனைவியும் ஒன்றுதான். ஒன்றுக்கு மேல் கட்டி மேய்ப்பது சிரமம். பிளாகர்களின் வாழ்கையும் சொல்லமுடியா துயரமானது.
  • சரியாய் வேலை செய்யாமல் மனைவியிடம் திட்டு வாங்கி தூக்கம் கெட்டு பதிவு எழுதுவது.
  • கமெண்ட் வந்திருக்கான்னு பார்க்க, refresh பட்டனை தொடர்ந்து அழுத்தி செயலிழக்க வைப்பது.
  • காலைல எந்திருச்சு followers யாராவது add ஆகி இருக்காங்களா? என்று பார்த்து விட்டு பல் விலக்க செல்வது.
  • பார்க்கிறவங்க கிட்டே எல்லாம் ப்ளாகை படிக்கச் சொல்லி தற்கொலை செய்து கொள்ள வற்புறுத்துவது.
இக்காலத்தில் பிளாகராக இருப்பவர்கள் முற்காலத்தில் எதோ ஒரு முனிவரின் தவத்தை கலைத்து கடும் சாபத்திற்கு உள்ளாகி இருக்கலாம். 

"அடுத்த ஜென்மத்திலும் நீ பிளாகராக பிறக்க" என்று யாரும் என்னை சபித்து விடாதிர்கள்.




"ர்டெல் சூப்பர் சிங்கர் பட்டம் இவருக்கு தான் கொடுத்திருக்கணும் இவருக்கு கொடுத்திருக்க கூடாது" என்று மக்கள் கொஞ்ச நாள் முன்னே அடித்துக் கொண்டு இருந்தார்கள். அதில் தரப் படும் பரிசு தான் முக்கியம். பட்டம் முக்கியம் இல்லை. 

போன வருடம் பட்டம் வாங்கிய அஜீஸ் கோவா படத்தில் "முதல் முறை உண்டான உணர்விது" பாடலை தவிர வேறு எந்த பாடலையும் பாடியதாக எனக்கு தெரியவில்லை. ஏன்? அந்த பாடலை நம்ம தனுஷையோ செல்வராகவனையோ கூட பாட வைத்திருப்பார்கள். 

நம் தமிழ் சினிமாவில் காலங்காலமாய் ஒரு சீன் வைத்திருப்பார்கள். ஒரு கைதியிடம் அல்லது சாட்சியிடம் விசாரணை செய்யும் போது, மேஜை மீது தண்ணீர் வைத்திருப்பார்கள். அவர்கள் பயந்து திக்கி திணறி பேசும் போது, "மெதுவா தண்ணி சாப்டுட்டு பதட்டப் படாம பேசுங்க" என்று சொல்வார்கள். அதுபோல இன்று தண்ணி குடித்து விட்டு நிறுத்தி நிறுத்தி பாடும் அளவுக்கு டெக்னாலஜி முன்னேறி உள்ளது. 

உன்னி கிருஷ்ணன் குரல் மட்டும் இனிமை இல்லை. "உம்மேல ஆசதான்" என்ற தனுஷின் குரல் கூட கேட்க இனிமையாகத்தான் இருக்கிறது. சில சமயம் இரைச்சல் கூட இசையாகிவிடும். வகுப்பறையில் லெக்சர் முடிந்து வெளியே கேட்கும் மக்களின் பேச்சு சலசலப்பு கூட நமக்கு இனிமையாக கேட்கிறது. 

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் "உள்ள ஜெஸி ஜெஸின்னு சொல்லுதா?" என்று சரியாக அலைவரிசை செட் ஆகாத AM சேனல் போல ஒருவர் பேசியதும் ஹிட் ஆகவில்லையா?




வெகுநாள் கழித்து ஒரு அருமையான படம் பார்த்த அனுபவம் "வாகை சூட வா" படத்தின் மூலம் கிடைத்தது. இரண்டாவது முறை அந்த படத்திற்கு செல்ல எண்ணியிருக்கிறேன். 

அதில் வரும் பாடல்கள் எல்லாம் அருமை. "செங்க சூளக்காரா" பாட்டில் ஒரு வரி வரும். 

"சொரண கேட்ட சாமி, சோத்த தான கேட்டோம்."

நச் வரிகள் பாடல் முழுதும். 

நாம் ஒவ்வொருவரும் என்னென்ன வேண்டுகிறோம் சாமியிடம்.
  • ஸ்கூலில் பர்ஸ்ட் ரேங் எடுக்கணும். (அதுக்கு நீ படிக்கணும்)
  • பையனுக்கு கல்யாணம் ஆகணும். (இப்போதெல்லாம் பொண்ணுங்களுக்கு எளிதாய் கல்யாணம் ஆகி விடுகிறது)
  • Weekend ஜாலியாக ஊர் சுற்ற ஒரு பிகர்
  • ஒரு "சின்ன வீடு" கட்டனும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை.





விஜயகாந்த இப்போது தான் உண்மையான எதிர்க்கட்சி தலைவராக மாறி உள்ளார். அதையும் தங்கத் தாரகை ஜெயலலிதாவே செய்ய வேண்டியுள்ளது. இவரை இன்னும் கூட்டணியில் வைத்திருந்தால் பிடித்து வைத்த களிமண் பிள்ளையாரைப் போல கம்மென்றே இருந்திருப்பார்.

உள்ளாட்சி தேர்தலில் தனியே கழட்டி விட்ட பின்தான் தலைவரின் தன்மானம் துடி துடித்து எழுந்துள்ளது.




துவரை பேருந்தில் சந்தோசமாக தொலைதூர பயணம் செய்து  கொண்டிருந்த வெகுஜன மக்களுக்கு இன்னுமொரு ஆப்பு. 

SETC அரசு பஸ் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை கொண்டு வந்துவிட்டது தமிழக அரசு. பேருந்தின் பாதி இருக்கைகள் மட்டும் ரிசர்வேசனுக்கு என்றாலாவது பரவாயில்லை. டிரைவர் சீட்டை தவிர அத்தனையும் புக் செய்யலாம்.

இனி IT துறை மக்கள் இதிலும் தங்கள் தனித்திறமையை காண்பிப்பார்கள்.