Jan 3, 2012

கொலைகார வாசகன் - ஆபாயில்


2012 ஆம் வருடம் பிறந்து விட்டது.

ஒரு ரூபாயை மிச்சபடுத்தி உங்களுக்கு ஒரு நாள் முன்பாகவே அட்வான்ஸ்டு புத்தாண்டு வாழ்த்துக்களை, உங்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நண்பர்கள் SMS மூலம் வாழ்த்தி  இருப்பார்கள்.

நீங்களும் அடுத்த நூற்றாண்டின் மாமனிதர் விருது வாங்கி விடுவீர்கள். மக்கள் எல்லோரும் நல்லவர்கள் ஆகி விடுவார்கள். நாடே சுபிட்சம் அடைந்து விடும்.

இவ்வருடம் உலகம் அழிந்து விடும் என்று மாயன்ஸ் மக்கான்ஸ் சொல்லுகிறார்கள். பயமாய் இருக்கிறது. என்னுடைய மொபைலும் Virgin நானும் Virgin.

சரி, ஏன் Virgin மொபைல் என்று பெயர் வைத்தார்கள்?

எல்லா மொபைலும் Virgin ஆக தான் இருக்கின்றன. அதிக நேரம் கொஞ்சி கொஞ்சி பேசி, பின் முத்தம் கொடுத்து அதை சூடேற்றி விட்டு தன் வேலையை பார்க்க போய் விடுகிறார்கள்.



போன வருடம் வந்த மொக்கை படங்களை வரிசை படுத்தி தொலைகாட்சிகள் எல்லாம் இம்சை படுத்த, "எனக்கு பிடித்த பத்து படங்கள்", "எங்க ஆயாவுக்கு பிடித்த பத்து படங்கள்" என ஒவ்வொரு பிலாகர்களும் அதற்கு மேலும் புண்ணை கிளற, புத்தாண்டு எனக்கு இனிமையாய் கழிந்தது.



ரு நாள் காலை எப்போதும் போல முகம் கழுவாமல் என் பிளாக்கை திறந்து பார்த்த போது, என் பிளாக்கில் ஒரு கமெண்ட் போடபட்டிருந்தது. தான் ஒரு கொலைகாரனாக இருந்ததாகவும், என் பிளாகை படித்து திருந்தி விட்டதாகவும் எழுதியிருந்தான். இப்படி திருந்திய வரிசையில் அரசியல்வாதி, ரேப்பிஸ்ட் என நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது சம்பந்தம் இல்லாத விஷயம்.

என் எழுத்தின் மேல் பற்று கொண்டு அவன் நிறைய போலி ப்ரோபைல்கள் உருவாக்கி என் எல்லா பதிவுகளுக்கும் ஒட்டு போட்டு தமிழ் மணத்தின் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகளின் வரிசையின் உள்ளே நுழைத்து, எனக்கு மணி மகுடம் வாங்கி கொடுப்பதில் குறியாக இருக்கிறான்.

அந்த மகுடத்தில் மணி இருக்குமா? இருக்காதா?

தமிழ் தெரியாத என்னுடைய பிரெண்டு ஒருவன் தமிழ்மணம் (Tamilmanam) என்பதை எப்போதும் தமிழ்மானம் என்றே படித்து மானம் வாங்குவான். அவனை சாகடிக்கலாம் என்றிருக்கிறேன்.

1330 குறள் எழுதி வைத்துவிட்டு கடலுக்குள் போய் தனியாக நின்று தவம் செய்து கொண்டிருக்கும் திருவள்ளுவருக்கே தெரியாது எத்தனை பேர் அதை படித்து உத்தமனாய் மாறி இருக்கான் என்று. பத்து குறள் மனப்பாடம் பண்ணுவதற்கே நாக்கு தள்ளும். பனிரெண்டாம் வகுப்பு பப்ளிக் எக்சாமிலே மினி பிட் எடுத்துட்டு போய் தான் நான் பாஸ் ஆனேன்.

கலைஞர் எழுதிய திருக்குறள் உரையை படித்த பின் தான் எனக்கு எல்லா குறளின் பொருளும் புரிய துவங்கியது. அந்த உரையை (தலையணை உறையல்ல) எப்போதும் தலைமாட்டிலே வைத்து தான் தூங்குவது வழக்கம். அதை நான் காசு கொடுத்து வாங்கவில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து தான் சுட்டு வந்தேன்.

நான் வழக்கமாய் செவ்வாய்கிழமை காலை சாப்பிட்ட பின் காக்காய்க்கு சோறு வைத்துவிட்டு  சரியாய் 10:00 மணிக்கெல்லாம் பதிவு போட்டு விடுவேன். அவனும் அதை ஷார்ப்பாய் போட்டவுடன் படித்து விடுவான். அதுவரை உயிரை கையில் பிடித்து வைத்துக் கொண்டு தான் காத்திருப்பான்.

ஆனால் அன்று இரண்டு நிமிடம் தாமதம் ஆகி விட்டது. அதற்கே அவனுக்கு மூச்சு விட சிரமமாக போய் விட்டது.

நல்லவேளை இரண்டு நிமிட தாமதம் அவனை காப்பாற்றி விட்டது. அதனால் அவன் உயிரோடு இருக்கிறான். இன்னும் ரெண்டு நிமிஷம் தாமதித்து போஸ்ட் போட்டிருந்தால் கூட அவன் பிழைத்திருக்க வாய்ப்பு ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும் என டாக்டர் கண்ணாடியை கழட்டி கொண்டே சொன்னார்.

செக்ஸை கலந்து, படிக்கின்றவர்களை கவர்வது போல கதை எழுத விரும்புகிறவர்கள், நேட்டிவிட்டியுடன் எழுத வேண்டும். சும்மா ஒரிஜினாலிட்டி இல்லாமல் மார்பு, உறுப்பு என்று வெறும் வார்த்தைகளை நிரப்பி போரடித்து தூக்கம் வரவைக்க கூடாது.




ழுக்காய் இருந்த என்னுடைய உலகம் Surf Excel போட்டு துவைத்ததை போல புதிதாக மாறிவிட்டது.

"பிகர் ஏதாவது செட் ஆகிடுச்சா?" ன்னு கேட்கறீங்களா?

நோ.

வேலை நேரம் மாறி விட்டது. இதுவரை மதியம் இரண்டு மணிக்கு ஆபிஸ் சென்று கொண்டிருந்த நான், இப்போது காலை ஆறு மணிக்கெல்லாம் சென்று விடுகிறேன்.

எப்பவுமே லேட்டாக எந்திருக்கிறேன் என்று வழக்கமாய் திட்டும் என் அப்பா இனி என்னை திட்ட முடியாது.  "சூரியனே எனக்கு அப்புறம் தான் எந்திரிக்குது" 

ஆனால் அதிகாலை ஐந்து மணிக்கு எழுவது சிரமமாக தான் இருக்கிறது. அதிகாலையில் வந்து மார்பில் கோலம் போடும் அனுஷ்காவையும், கழுத்தை பின்னி கட்டியணைக்கும் மோனிக்கா பெலுசியையும்  வலுகட்டாயமாய் உதறி தள்ளிவிட்டு எழுந்து வரவேண்டியதாய் இருக்கிறது. 

ஒரு சந்தேகம்.

ஏன் இந்த நடிகைகள் எல்லாம் அதிகாலை ஆரம்பித்தவுடன் தான் வருகிறார்கள்?




2 comments:

ராஜ் said...

பாஸ்,
உங்களுக்கு கமெண்ட் போடுறதே கொஞ்சம் பேஜாரா இருக்கு ...
எங்க என்னையும் சேர்த்து காலய்ச்சு எடுதிருவேங்களோன்னு ......
இருந்தாலும் எனக்கு உங்க ஸ்டைல் "Non-Sense Talking" (நீங்க வச்ச தலைப்பு) பிடிக்கும் என்பதாலும்..எனக்கு மன தைரியம் ஜாஸ்தி என்பதாலும் இந்த கமெண்டை போடுறேன்....

சமுத்ரா said...

Keep writing Katz...:)