Showing posts with label ஆபாயில். Show all posts
Showing posts with label ஆபாயில். Show all posts

Nov 25, 2016

செவ்வாய்க்கு ஒரு பயணம் - ஆபாயில்

ந்தியர்கள் ஏன் அமெரிக்கர்களை விட திருமணத்திற்கு அதிகம் செலவு செய்கிறார்கள்?

சிம்பிளான காரணம், நாம் வாழ் நாளில் ஒரு முறை தான் திருமணம் செய்கிறோம் அவன் அடுத்த சில கல்யாணத்துக்கும், சில ஜீவனாம்சத்திற்கும் போக, மிச்சத்தை தான் செலவு செய்கிறான். நமக்கு கல்யாணம் என்பது ஒரு வழி பாதை.

இருக்கின்ற எல்லா நகையையும், பணத்தையும் சுங்க வரியாய் கட்டி விட்டு, இல்லறத்தின் உள்ளே நுழைந்து விடுகிறோம். பின்னால் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" என்று அங்கேயே கடந்து சாக வேண்டியது தான். திரும்பி வர முடியாது. புல் அடித்து விட்டு வந்து ரவுசு பண்ணும் புருஷனை, கல்லை போட்டு கொன்று விடும் மனைவிமார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்படி இருந்தாலும் சாவு கன்பார்ம். இந்தியர்களுக்காக தான், ஆங்கிலத்தில் வெட்லாக் (Wedlock) என்று பொருள் படும் படி ஒரு வார்த்தையை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இது ஒரு வகையில், 2024 இல் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப நாசா பிளான் செய்துள்ள ஒரு வழி ராக்கெட் பயணம் போல தான். அந்த ராக்கெட்டில் அனுப்ப மொத்தமாக 100 பேரை நாசா தேர்வு செய்துள்ளது. அதில் மூன்று பேர் இந்தியர்கள். நாம் நினைத்தது போல அந்த மூன்று பேரும் பேச்சுலர் பார்ட்டிகள். இதில் செல்ல திருமணம் ஆனவர்கள் பெரிதாய் நாட்டம் கொள்ளாத காரணம், அவர்கள் அல்ரெடி அது போல ஒரு கிரகத்தில் மாட்டிக் கொண்டிருப்பது தான்.

நமக்கும் செவ்வாய்க்கும் அதிக ரத்த சம்பந்தம் இருக்கிறது. செவ்வாய் தான் நமது திருமணத்தையே முடிவு செய்கிறது.

"பையனுக்கு செவ்வாய் இருக்கா?"
"இல்லீங்க சிகரெட் குடிச்சு குடிச்சு கருப்பாக்கி வச்சிருக்கான்"
"பெண்ணுக்கு செவ்வாய் இருக்கா?"
"ஆமாங்க தினமும் லிப்ஸ்டிக் போடுறா" என்று ஜோக்கெல்லாம் அடிக்க முடியாது.

எவ்வளவு பெரிய இடம் என்றாலும் செவ்வாய் தோஷம் ஒத்து வர வில்லை என்றால், we move forward. செவ்வாய் தோஷம் தான் நமக்கு aptitude டெஸ்ட்.  அதில் பாஸ் ஆனால் தான் குரூப் டிஸ்கஷன், HR இண்டெர்வியூ எல்லாமே.

செவ்வாய்க்கு போக போட்டி போட்டு கொண்டு 39 அமெரிக்கர்கள் செலக்ட் ஆனதற்கு ஒரு காரணம் இருக்கிறது. என்னவென்றால் அவர்களுக்கு இந்தியர்களை போல ஒரு கல்யாணம் மட்டும் செய்து வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை. அனால் இங்கிருக்கும் இந்தியன் அமெரிக்கர்களை போல பல திருமணம் செய்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை படுகிறான்.

Poor Americans. :-P


டிட் பிட்ஸ்:
----------------

மெடிக்கல் அஸ்ட்ராலாஜியின் படி, ஒவ்வொரு கிரகத்திற்கும் மனிதனுடைய உடல் பாகங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அதன் படி நம்முடைய ரத்தத்திற்கும் செவ்வாய்க்கும் பெரிய சம்பந்தம் இருக்கிறதாம். நாம் அதனால் தான் திருமணத்திற்கு செவ்வாய் பொருத்தம் பார்க்கிறோம். செவ்வாய் இருந்தால் மைனஸ் ரத்தம் வகை, செவ்வாய் இல்லாதவர்களுக்கு பிளஸ் ரத்தம் வகை என்கிறார்கள். எந்த அளவுக்கு உண்மை என்று தெரிய வில்லை. ஆனால் பண்டைய காலத்திலிருந்தே நாம் பிளட் டெஸ்ட் செய்து வந்திருக்கிறோம். வேறு வேறு ரத்த வகை இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டால், குழந்தைக்கும் தாய்க்கும் உடல் ரீதியான பிரச்சனைகள் கர்ப்ப காலத்தின் போதும், டெலிவரியின் போதும் வரும் என்று சொல்வார்கள்.

நம்முடைய முன்னோர்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்திருக்கலாம் என சொல்லும்  டாகுமெண்டரி படங்கள் நிறைய யு-டியூபில் இருக்கிறது. நாமெல்லாம் பூமிக்கு வந்த ஏலியன்கள் தான். மனிதர்கள் ஏலியன்களை வெளியே தேடுகிறார்கள். ஆனால் கடவுளும் ஏலியனும் நமக்குள்ளே தான் இருக்கிறார்கள்.

http://astrobix.com/learn/411-body-parts-and-disease-related-to-different-planets.html

http://sexjothidam.blogspot.in/2016/03/manglik-astrology-what-is-mangal-dosha.html

https://www.youtube.com/watch?v=xSY6on-M9Vw



ம்சை அரசனின் அடுத்த அட்டாக்
------------------------------------------------------

அரசர் மோடி அடுத்ததாய் மிக பெரிய அதிரடி பிளானை வைத்திருக்கிறாராம். தேச பக்தர்கள் எல்லோரும் பரபரப்பாக பேசி திகில் கிளப்புகிறார்கள். அது என்னவென்று வட்ட செயலாளர் வண்டு முருகன் தமக்கு ஒற்றன் மூலம் கிடைத்த தகவலை நமக்கு முன்பே சொல்லி விட்டார். அதற்கு தான் முன்னேற்பாடாக "ஜன் தன் யோஜனா" திட்டத்தின் மூலம் எளிய மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு உருவாக்கி கொடுக்கப் பட்டு, ஜியோ சிம்மும் இலவசமாக வழங்கப் பட்டுள்ளன.

டிசம்பருக்கு பிறகு, இவர்கள் அனைவரும் "ரம்மிசர்க்கிள்.காம்" இணைந்து ஆன்லைனில் ரம்மி விளையாடலாம். இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காத இளைஞர்களுக்கும், வீட்டில் சீரியல் பார்க்கும் இல்லத்தரசிகளுக்கும், இதன் மூலம் சம்பாத்தியம் உண்டாகும். வருமான வரி TDS யில் பிடித்தம் செய்யப் பட்ட பின்தான், வங்கி கணக்குகளுக்குள் வரவு வைக்க படும்.

ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கு மானிய விலையில் ரிலையன்ஸ் கம்பனி மூலம் விற்கப் படும். ரம்மி விளையாட தெரியாதவர்களுக்கு திருபாய் அம்பானி இன்ஸ்டியூட் மூலமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப் படும். ஊருக்கு ஒதுக்கு புறம், மரத்தடியில் சாராயம் குடித்து விட்டு கவர்மெண்டை ஏமாற்றி ரம்மி விளையாடி கவர்மென்டுக்கு கப்பம் கட்டாமல் தப்பிப்பவர்களுக்கு பல வருட சிறை தண்டனை கிடைக்கும். இவர்களை பிடிப்பதற்கென்றே போலீசார் ரோந்து வாகனங்களில் சந்து பொந்துகளில் சுற்ற போகிறார்கள்.

தமிழ்நாட்டின் விளையாட்டு என்பதால்,  "மங்காத்தா" தடை செய்ய படும். அதை மீறி விளையாடுபவர்களும், "மங்காத்தாடா" என்று தேவையே இல்லாமல் அடிக்கடி சொல்பவர்களும், தேச விரோத சட்டத்தின் மூலம் சிறையில் அடைக்கப் படுவார்கள்.

ஏக் பாரத், ஏக் கேம்.

இந்தியா வல்லரசு ஆகணும்னா, உங்க மம்மி கூட, ரம்மி ஆடி தான் ஆகணும்.

மோடிடா! ரம்மிடா! ரம்பாடா! ரம்மியா கிருஷ்ணண்டா!


RJ பாலாஜாம்பி
-----------------------

ஹாலிவுட்டில் வெளி வரும் ஜாம்பி, வேம்பயர் வகை படங்களில் வருவது போல, ஜாம்பிகளை எதிர்த்து போராடி அதனை கொல்லும் கதாபாத்திரம் ஒன்று, திடீரென்று அவைகளிடம் கடிபட்டு இன்னுமொரு ஜாம்பியாக மாறி, மற்ற மனிதர்களை துரத்தி பிடித்து கடிக்க விரட்டும்.

ஆர்ஜே பாலாஜி, அப்படி கடி பட்ட ஒரு ஜாம்பி தான். இப்போது அவர் நடிக்கும் மொக்கை படங்களை எல்லாம் நம்மை பார்க்க சொல்லி தொலைக்காட்சிகளில் வந்து தொல்லை படுத்துகிறார். இப்போது அரசியல்வாதிகளுக்கு ஆதரவாய் சாமானிய மக்களுக்கு கிராஸ் டாக்கில் வந்து தேசபக்தியை வேறு தூண்டி விடுகிறார். நாட்டுக்காக கொஞ்சம் ரத்தம் கொடுப்பதில் தப்பு இல்லை என்கிறார்.

ஆனால் சினிமாக்காரர்கள், பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறார்கள். வழக்கமாய் சினிமாக்காரர்கள் தான் மற்றவர்களுக்கு பாராட்டு விழா வைப்பார்கள். இம்முறை நாம் தான் அவர்களை பாராட்ட வேண்டும். பென்டாஸ்டிக் ஜாப்!

"கடவுள் இருக்கான் குமாரும், நூத்தி இருபது ரூபாயும்" என்று நாம் எழுத வேண்டிய நிர்பந்தம் வந்து விட்டது.

Once a Joker. Always a Joker


Journey to the Mars (English version )
-------------------------

The simple reason why Indians spend more money than Americans for marriage is, we do it only one time in our life time whereas they have to keep something for the next one and for the alimony.

For most Indians, the marriage is one way road. Pay everything at the toll and go inside. If something happens wrong, just die there. That is why they invented the word 'Wedlock' for Indians.

Its like the one way trip to MARS that NASA has planned for 2024. Out of 100 people, only 3 in India got selected for the trip and as expected all 3 are single. we married people won't be interested in that as we already on one.

And importantly, the MARS (sevvai) is deciding factor in our marriages. Its an aptitude test for the selection. If you pass that only, you will go to group discussion, HR interview and all. Yes, we have blood relation to the Mars.

No wonder there are 39 Americans in that list. They just want to see how it feel to be an Indian. But every Indian want to see how it feel to be an American.

Poor Americans. :-P

Titbits:
--------

In medical astrology, all the planets represent some or the other part of your body. Mars represent human blood. That's the reason we are checking "sevvai dosha" or "manglik dosha" before doing marriage. Its blood test invented for us by our ancestors. "sevvai dosha" means a negative blood group, otherwise its a positive blood group. If different blood group couple get married, then the mom and baby will have severe health issue during pregnancy and delivery.

There are many documentary movies in You Tube which says our ancestors could have come to earth from Mars. We are all aliens from Mars as per that theory. Humans search aliens outside. But both God and Aliens are inside of us)



Mar 12, 2013

"Life of Pigs" - ஆபாயில்

1.) எது நடந்தாலும் எதுவுமே பேசாமல் (மன்மோகன் சிங் போல) அமைதியாக இருக்கலாம்.    (அல்லது)

2.) எதையாவது பேசிக் கொண்டே இருக்கலாம்.

இதில் முதல் நிலையை கடைபிடிப்பவர் ஞானி ஆகிறார். (சதா பேசி கொண்டே இருக்கும் அந்த பைஜாமா எழுத்தாளர் இல்லை.)

இரண்டாவது, சந்தேகமே இல்லாமல் "நாம்" தான்.

நம்மால் ஞானியாக ஆகவே முடியாது. நமக்கு எதை பற்றியாவது, யாரை பற்றியாவது பேசி கொண்டே இருக்க வேண்டும்.  Breaking News இல்லாத நாட்கள் சிறப்பாய் கழிவதில்லை.
 


                 நம்மள கடுப்பேத்தனும்னே இத்தனை மைக் வச்சிருக்கானுங்க.

ன்னை தொடர்ந்து எழுத சொல்லி, நிறைய கொலை மிரட்டல்களும், தற்கொலை மிரட்டல்களும் வந்த வண்ணம் உள்ளன. கொலை மிரட்டல்களை மட்டும் கருத்தில் கொண்டு, இதோ 2013 ஆம் ஆண்டின் முதல் ஆபாயில்.

கமெண்டுகளும் வருவதில்லை. Like-களும், Share-களும் படிப்படியாய் குறைந்து அலெக்ஸா ரேங் ஆழ் துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இது தமிழின் வளர்ச்சியை பிடிக்காத கர்நாடக அரசியல்வாதிகளின் கைங்கார்யமாக இருக்கலாம். சுப்ரீம் கோர்டில் 'பொது நல' வழக்கு போட உத்தேசம்.

இந்த வருத்தத்தில் இருந்த சமயம் என் நண்பன் சதிஷின் நண்பர் (என் பிளாக்கின் நெடுநாள் வாசகர்... ஹி ஹி...) என்னை முதன் முறை சந்தித்த போது, கட்டி பிடித்து தன் அன்பை வெளிப்படுத்தினார். அது எனக்கு ஆயிரம் கமெண்டுகளை அள்ளி தந்ததை போல இருந்தது. இந்த பிளாகை எழுதுவது நீங்கள் தானா!!??? என்று நம்பவே முடியாமல் கடைசிவரை கேட்டு கொண்டிருந்தார். அது ஆச்சர்ய குறியா? இல்லை கேள்வி குறியா? என்று தெரியவில்லை.

எனக்கும் அதே சந்தேகம் தான். எழுத ஆரம்பிக்கும் போது, திடீரென்று எனக்குள் ஒரு ஆவி புகுந்தது போல் ஆகி, ஒரு ஆத்ம மன நிலைக்கு சென்று விடுவேன். பிறகு என்னை அறியாமல் எனது விரல்கள் கீ-போர்டில் நடனமாட ஆரம்பித்து விடும்.

அவரல்லாமல், கட்டிபிடித்தது ஒரு பெண்ணாய் இருந்திருந்தால், அவளையே கல்யாணம் செய்து குட்டி குட்டியாய் நிறைய பப்ளிஷ் செய்ய வைத்திருப்பேன்.

இனி வண்டி வண்டியாய் எழுத போகிறேன். வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அலெக்ஸாவில் ஆயிரம் ரேங்கிற்குள் எடுப்பதாய் என் என் மேனேஜரிடம் பிராமிஸ் செய்துள்ளேன். ஆதலால், என் மயிருனும் மேலான தமிழக மக்களே தயவு செய்து தங்களது பொன்னான லைக்குகளையும், டைமண்ட் கமெண்டுகளையும், பிளாட்டின ஷேர்களையும் அள்ளி தந்து இந்த தமிழனையும், தமிழையும் வாழ வையுங்கள்.



சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில், இப்போது பேஸ்புக், ட்விட்டர்கள் மூலம் தமிழ் வளர்க்க அரும்பாடு படுகின்றனர். அமெரிக்காவில் இருந்து கொண்டு தமிழ் நாட்டு அரசியலை அலசுவது, இடையிடையே  தமிழ் பற்றிய செய்திகளை ஷேர் செய்வது என பல வகையில் கருத்து சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள்.  இதனால் பலர் சிறைக்கும் செல்ல நேரிடுகிறது.

"இந்த தம்பதியினர் காதல் வயப்பட்டுள்ளனர். ஆனால் இது நீடிக்குமா?" என்று டிஸ்கவரி சேனலை போல, எந்த ஒரு தமிழ் சேனலும் அழகாய் தமிழ் பேசுவதில்லை. அவர்களின் வசன உச்சரிப்பும், குரல் வளமும் கேட்டு கொண்டே இருக்க தோன்றும்.

டிஸ்கவரி தமிழ், கூகிள் பிளாக்கர், கூகிள் தமிழ் Transliteration, தமிழ் Translation, தமிழ் விக்கிபீடியா என வியாபார நோக்கதிற்க்காவது வெள்ளைக்காரன் தான் தமிழை வளர்க்கிறான். நமக்கு, புள்ள குட்டிகளை பெறுவதற்கும் வளர்ப்பதற்க்குமே நேரம் பற்றவில்லை. தமிழை வளர்ப்பது அடுத்த கட்ட பிரச்சனை.



வடக்கிலிருந்து தெற்கு வரை வாய் விரிய பேசும் "நீயா நானா" கப்பிநாத் கூட, "வெல்கம் பேக் டு ஆச்சி மசாலா நீயா நானா தீபாவளி ஸ்பெஷல், பிராட் யு பை எஸ்விஎஸ் சன் பிளவர் ஆயில், பவர்டு பை பட்டர்பிளை நான்-ஸ்டிக் குக்வேர்" என்று பந்தாவாய் கோட் போட்டு கொண்டு தமிழ் வளர்க்கிறார்.

ஒருமுறை "தமிழ் பேசுவது" பற்றிய தலைப்பில் ஒரு பையன் "டமில்" என்று உச்சரிததற்க்காக அவமானப் படுத்தி தன்னை தமிழ் ஆர்வலராய் உலகிற்கு அடையாளப் படுத்திக் கொண்டவர். அந்த நிகழ்ச்சிக்கு போகின்ற கெஸ்ட்களுக்கே சொம்பை கிப்ட் பேப்பரில் சுற்றி பரிசாய் கொடுப்பார்கள். சாரு தன் வீட்டில் நிறைய சொம்புகள் அடுக்கி வைத்து உள்ளதாக அவரது சொம்பு வட்டம் தெரிவிக்கிறது. அப்படியிருக்க நடு இரவுக்கு மேல் காத்திருந்து அபத்தமாய் பேசி அவமானப் படுத்தப் படும் அதீத புத்திசாலி பொது மக்களே! உங்களுக்கு ஒரு கேள்வி,

"டேய், எங்கிருந்துடா வறீங்க நீங்கெல்லாம்?"

(கடைசியில் சிறப்பாய் பேசிய அதீத முட்டாளுக்கு எல்.சி.டி. டிவியை கொடுக்கிறார்கள் என்றாலும், அது மற்ற எல்லா முட்டாள்களுக்கும் கிடைப்பதில்லை என்பது கவனிக்கப் பட வேண்டியது. அதை பார்க்கின்ற நீங்களும் முட்டாள்கள் என்பதை சொன்னால் கோபப் படுவீர்கள்!)

கப்பிநாத் அவர்களால் அவமானப் படுத்தப் பட்டு நிறைய பேர் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் விஜய், சூர்யா போன்ற சினி செலிபரெட்டிகளிடம் கப்பிநாத் குழைவதை பார்த்திருக்கிறீர்களா?

உங்கூட்டு நாய் பொறாமைப் படும்.

தமிழில் உள்ள மிக பெரிய குறையே "ர்", "ற்", "ன்" தான். நமக்கு பிடிக்காதவனை(ரை) பற்றி குறிப்பிடும் போதெல்லாம், நாகரிகமாக எழுத வேண்டிய கட்டாயமாகிறது.




புத்தகம் படிப்பது என்பதே என்னவென்று மறந்து போனதால், இப்போது வெயிலுக்கு கூட புத்தக கண்காட்சி பக்கம் ஒதுங்குவதில்லை.

கடந்த வாரம் என் நண்பன் வீட்டிற்கு சென்றிருந்த போது "புதிரா, புனிதமா?" கண்ணில் பட்டது. பையனுக்கு அடுத்த வாரம் கல்யாணம். அதனால நிறைய சந்தேகங்கள் அவனுக்கு. (காலேஜ் படிக்கும் போது, டீச்சரிடம் அவன் ஒரு டவுட்டு கூட கேட்டதில்லை). பிராக்டிகல் எக்ஸாம் முடித்து VIVA-க்காக காத்திருக்கும் மாணவன் போல படபடப்புடன் இருந்த இவனிற்கு பேருதவியாய் இருக்கிறது இந்த புத்தகம்.

ஊருக்கு செல்லும் போது, நாமும் ட்ரெயினில் படிக்கலாமே என்ற எண்ணத்தில்,

"மச்சி நான் படிச்சிட்டு தரட்டுமா?" என்று கேட்டதற்கு, முடியாது என்று கண்டிப்பாய் மறுத்து விட்டான். ஏற்கனவே முழு புத்தகத்தையும் படித்து முடித்து விட்டாலும், பைபிளை போல தினமும் இரண்டு பக்கமாவது திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இருக்கிறான்.

அப்படி இருந்தும் அவனுக்கு சில சந்தேகங்கள் தீரவில்லை. என்ன செய்வது என்று தீவிரமாய் யோசித்து விட்டு, கடைசியாய் இந்த புத்தகத்தை எழுதிய மாத்ரு பூதம் அவர்களின் ஆவியை, ஆவியிடம் பேசும் நபரை (மீடியத்தை) வைத்து கூப்பிடலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.

மிகவும் கஷ்டப்பட்டு ஆவியிடம் பேசும் நபரை கண்டு பிடித்து அவரிடம் சென்றோம். உள்ளே சென்றவுடன் கொஞ்சம் படபடப்பாகவும், பயமாகவும் இருந்தது. விளக்கை உரசிய கொஞ்ச நேரத்தில் பூதம் வந்தார். அந்த மீடியத்தின் மூலமாக பேச ஆரம்பித்தார்.

"என்னப்பா, இந்த நடு சாமத்துல என்னை கூப்பிட்டு இருக்கீங்களே! உங்களுக்கு என்ன சந்தேகம்?"

 "சார்,......."


 "சார்,.......ஒரு டவுட்டு"


 "என்னப்பா? தயங்காம கேளுங்க"


"........."

"........."

"சார், நீங்க வெறும் தாஸா? இல்ல லாடு லபக்கு தாஸா?"
 

மீடியத்தின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி கொண்டிருந்தது. நாங்கள் ஓட தயாரானோம்.

(இவரது போட்டோவை கூகுளில் தேடினால் ஒரே ஒரு போட்டோ தான் வருகிறது. அவர் புத்தகத்தையாவது "பாதுகாப்பாய்" வைத்திருங்கள். இந்த புத்தகம் வரும் தலைமுறைக்காக காக்கப் பட வேண்டும். பின்னர் 'American Pie'-யில் வருவது போல தேடிக் கொண்டிருக்கும் படி ஆகி விடக் கூடாது)



ன் சிறுவயதில் எனக்கும் டிவிக்கும் பயங்கர கள்ள காதல். வீட்டிற்கு தெரியாமல் பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று அடிக்கடி படம் பார்ப்பேன். அப்பாவிற்கு தெரிந்தால் பிரம்படி விழும் என்று தெரிந்தும், சில சமயம் பொறுமையாய் படம் பார்த்து விட்டு சென்று அடி வாங்கி கொள்வேன்.

ஆனால் இப்போது அதே டிவி தான் என்னை தினமும் எல்லா பொசிஷனிலும் வைத்து ரேப் செய்கிறது.




மக்கள் 72-inch டிவி வாங்கினாலும், பெரிய ஸ்க்ரீனில் குடும்ப தொடர்கள் மட்டுமே பார்த்து கொண்டிருக்கிறார்கள். டெக்னாலஜி மட்டுமே முன்னேறிக் கொண்டுள்ளது. அதை பயன்படுத்துபவர்களின் மூளை, யாருக்கும் பயன்படாமல் அப்படியே பிரெஷாக உள்ளது. எங்கள் ஆபிசில் ஜீன்ஸ் டி-சர்ட்டில் தினம் வரும் ஒரு மாடர்ன் மங்கை, You-tube-இல் அந்த நெடுந் தொடர்களை buffer செய்து பார்த்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு இடுப்பில் மூன்று மடிப்பிருக்கும். அவளை மடிசார் மாமி என்று குறிப்பிடுவோம்.

டிவியில் இருந்து என்னை பாதுகாத்துக் கொள்ள, எங்கே சென்றாலும் முடிந்த வரை டிவி இல்லாத பஸ் பார்த்தே ஏறுவேன். சீரியல் டைம் முடிந்த பின்பு தான் இரவு வீட்டிக்கு வருகிறேன். சனி, ஞாயிறு எங்கேயாவது வெளியே சென்று விடுகிறேன். சீக்கிரம் தனியாய் ரூம் எடுத்து போக வேண்டும்.



'நடுவுல கொஞ்சம் எதையோ காணோம்' படத்திற்கு பிறகு இனி தமிழ் படம் பார்க்க மாட்டேன் என்று எங்கள் வீட்டு பப்பி மேல் செய்த ஆணையை (நாய் மேல் ஆணை) மீறாமல் இருக்கிறேன்.

இனி "நோ" நமீதா விமர்சனம் (இப்ப சந்தோசமா?)

இதனால் என்ன பிரச்சினை என்றால் சினிமாவுக்கு கூப்பிடும் நண்பர்களிடம் 'நான் தமிழ் படம் பாக்கறதில்ல மச்சி' என்று உண்மையை சொன்னால், காண்டாமிருகம் ஆகி விடுகிறார்கள்.

தமிழ் ரசிகர்களின் ரசனை கொண்டாட பட வேண்டியது.. இங்கு துப்பாக்கி தான், ஆக்சன் கம் திரில்லர் படம். கண்ணா லட்டு தின்ன ஆசையா, முழு நீள நகைச்சுவை படம். விஸ்வரூபம், சிறந்த ஹாலிவுட் படம். தமிழ் சினிமா என்பது பெரும்பாலும் முட்டாளுக்காக முட்டாள் எடுக்கும் படமாகவே ஆகி விடுகிறது.

தமிழ் சினிமா பார்க்காமல் இருந்ததால், என் மனம் கொஞ்ச நாள் சாந்தியோடு இருந்தது. அப்புறம் நித்யாவுடன் இருந்தது.

ஆனாலும் விதி வலியது தானே!

போன வருட இறுதியில் நண்பர்களுடன் கோவா சென்றிருந்தோம். அங்கே உண்மையாக சைட் சீயிங் மட்டும் தான் போனோம். பாரின் சரக்கின் பக்கம் கூட நெருங்க வில்லை. பீச்சில் பிகினியுடன் காற்று வாங்கி கொண்டிருந்த ஒரு ரஷ்ய நாட்டு வெள்ளைக்காரியின் இடுப்பில் கை வைத்தேன். அதற்கு மேலோ கீழோ எந்த தப்பும் செய்யவில்லை.

எல்லாம் முடித்து விட்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தோம். பஸ் பெங்களூரை தாண்டி வந்து கொண்டிருந்த போது டிவிடியில், திடீரென துப்பாக்கியை காட்டி மிரள வைத்து விட்டார்கள். தவிர்க்க முடியாத அந்த தருணங்கள், எனக்குள் கடவுள் மற்றும் சாத்தான்கள் நம்பிக்கையை உண்டாக்கின. பஸ் சென்னையை வந்தடைந்த போது, ஏறக்குறைய அனைவரும் இறந்திருந்தார்கள். சப்-டைட்டிலை படித்து படம் பார்த்த இரு ஜப்பானியர்களும் அதில் அடக்கம். அவர்கள் வாயில் இரண்டு புல்லட்கள் இருந்தது. நான் குற்றுயிரும் குலை உயிருமாக கிடந்தேன்.


சாக்கடை நிலையம் 
ரில் இருக்கும் சொந்தக்கார பெருசுகள், "தம்பி எங்கப்பா வேலை செய்ற?" என்று கேட்கும் போது, "சென்னையிலங்க" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு ஓடி விடுவேன். சில பேருக்கு "மெட்ராஸ்" என்று சொல்ல வேண்டும்.

சென்னையை கண்டிறாத அந்த பெரிசுக்கோ, நான் ஒரு பெரிய சிட்டியில் கன்னியர்கள் மடியில் தவழ சொர்க்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாய் நினைப்பு.

சென்னையின் நறுமணம் பற்றி, ஒவ்வொரு வருடமும் மூக்கை பிடித்துக் கொண்டே "ஹேப்பி மெட்ராஸ் டே!" சொல்லி கொண்டாடும் சென்னை வாசிகளுக்கு மட்டும் தான் தெரியும். போன வருடம் இஞ்சினியரிங் கவுன்சலிங்கிற்காக வந்த என் சித்தி பெண், இங்கெல்லாம் எப்படியா இருக்கீங்க? என்பது போல பார்த்த பார்வையில், எனக்கு பன்றியாய் மாறி போன உணர்வு.

ஒவ்வொரு வருடமும் ப(ன்)னிரெண்டாவது வகுப்பு முடித்து, கூட்டமாய் சென்று என்ஜினீயரிங் சேரும் பன்றி குட்டிகள், நாலு வருடம் கழித்து தவறாமல் தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் சென்னையை வந்தடைகின்றன.




வெள்ளிக்கிழமை இரவு ஊருக்கு செல்ல, கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் செல்லும் அனைவருக்கும் தெரியும், அந்த நிலையம் உலக தரம் வாய்ந்தது என்று. மழை பெய்து விட்டால் சாக்கடையும் நாமும் இரண்டற கலந்து விடுவோம். ஐ.டி யில் வேலை செய்யும் நம்மை பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய சொன்னால் கூட, நமக்கெல்லாம் அது CakeWalk.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இடத்தில இருக்கும் (சாக்)கடைகளில் வாங்கும் பொருளுக்கு நான்கைந்து ரூபாய் அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டும். நம் ரயில்வே ஸ்டேசனிலும், பஸ் நிலையங்களிலும் கர்ச்சீப் வைத்து பொத்தாமல் நிற்பது அசாதாரண காரியம். 


சம்பிராதய ஜோக்:

அவருடைய நண்பனின் தந்தை தமிழக அரசை வாழ வைக்கும் பெரிய கருணை உள்ளம் கொண்ட குடிமகன். வாடகை கொடுக்காமல் டாஸ்மாக்கில் குடியிருப்பவர். நினைவு திரும்பினால் தன் சொந்த வீட்டிற்கு விசிட் செய்வார்.

ஒரு நாள் அப்படி விசிட் செய்ய வரும் போது, பாதி வழியிலேயே ரோட்டின் ஓரம் தள்ளாடி கவிழ்ந்து விட்டார். அவரது மகனுக்கு செவி வழி இந்த செய்தி வர, வண்டியை எடுத்துக் கொண்டு போய் போதையில் இருந்த தன் அப்பாவை தூக்கி கொண்டு வந்து வீட்டில் போட்டுள்ளார்.

தான் இருக்கும் இடம் மாறிவிட்டதை உணர்ந்த தந்தை, லேசாய் கண்ணை திறந்து, தன் மகனை பார்த்து,

"தம்பி, யாரு பெத்த பிள்ளையோ நீ. என்னை கொண்டு வந்து என் வீட்டுல சேர்த்துருக்க! நீ நல்லாருக்கோணும்"




Jul 6, 2012

Banana Phone - ஆபாயில்



தற்காலத்து மாடர்ன் டெக்னாலஜி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், பணம் மற்றும் அறிவு திறனோடு, நம்முடைய சொம்பேறிதனத்தையே அதிக மூலதனமாக கொண்டு, நமக்கான advanced பொருட்களை தயாரிப்பதில் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்குகின்றன. இப்போது மார்க்கெட்டில் புதிது புதிதாய் வெளிவரும் இந்த Smart Phone-கள் உங்களை ஸ்மார்ட் ஆக மாற்றுகிறது என நம்பினால்...கஷ்டம்.

பஸ் ஸ்டாண்ட், ட்ரெயின் ஸ்டேசன் என பார்க்கும் இடங்களில் எல்லாம் பொடி பையன்கள் பெரிது பெரிதாய் ஆளுக்கொரு ஸ்மார்ட் Phone வாங்கி கொண்டு Facebook-ல் Stalking செய்வது, YouTube-ல் வீடியோ பார்ப்பது என 70mm படம் காட்டுகிறார்கள். அந்த போனை காதில் வைத்துக் கொண்டு அவர்கள் பேசினால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பேசுபவரின் முகமே தெரியாது. போனை விலக்கி தான் பார்க்க வேண்டும். வீட்டிற்கு தெரியாமல் காதலனுடன் ஊர் சுற்றி கொண்டிருக்கும் பெண்கள், தெரிந்தவர்கள் கண்ணில் படாமல் இருக்க, இந்த போனை பயன்படுத்தி முகத்தை மறைத்து கொண்டு தப்பித்து கொள்கிறார்கள்.

இந்த போனில், கேர்ள் பிரெண்டுக்கு மெசேஜ் அனுப்புவது, வெள்ளிகிழமை மட்டும் ஆபிசுக்கு நேரமாய் செல்ல அலாரம் செட் பண்ணுவது, அம்மாவிடம் பேச கால் போட்டு தருவது, அருகில் இருக்கும் பியூட்டி பார்லரின் அட்ரஸ்ஸை தேடி தருவது என அனைத்திற்கும் Voice command தான். மொத்தத்தில் நீங்கள் வாயை திறந்தால் போதும், வாழை பழத்தை உரித்து உள்ளே சொருகி விடும். இதற்கு Banana Phone என்றே பெயரிட்டிருக்கிலாம்.

ஒருமுறை என் நண்பனின் ஸ்மார்ட் போனை வாங்கி பார்த்து கொண்டிருந்தேன். போனை டச் செய்தவுடன், அதன் "முன் கேமரா" ஆன் ஆகி, என் முகத்தை படம் பிடித்து ஸ்கேன் செய்து, நான் அதனின் owner இல்லை என்று "கரெக்ட்டாய்" கண்டுபிடித்தவுடன், passcode-யை டைப் பண்ண சொல்லி கேட்டது. வாவ்! என்ன ஒரு வசதி!

இந்த face unlock வசதியுள்ள ஸ்மார்ட் போன், வழக்கு எண் படத்தில் வரும் அந்த பணக்கார டீன் ஏஜ் பையனிடம் இருந்திருந்தால் அவன் அந்த ஸ்கூல் பெண்ணிடம் மாட்டியிருக்க மாட்டான். ஸ்மார்ட்டாக "வேலை" செய்திருப்பான்.

இதில் பெண்களுக்கு 'தான்' இந்த banana -வின் மீது, அதிக இஷ்டம்.

இதில் எதற்க்கெடுத்தாலும் App தான். App இல்லாமல் நீங்கள் உயிர் வாழவே முடியாது. இனி A for App தான். Apple இல்லை. டெக்னாலஜி வாழ்க்கையை மட்டுமல்ல வார்த்தையையும் சுருக்குகிறது.

இன்னும் சில வருடங்களில் ஐபோனின் Siri-யும், சாம்சங்கின் s2 voice-யும், உங்களுக்கு கடினமாக தோன்றும் வேலைகளை சுலபமாக செய்து கொடுத்து விடும்.





ஜப்பானில் வசிக்கும் பனானா சோம்பேறியை பற்றிய ஒரு பழைய 'எ' ஜோக் உள்ளது. (ஜப்பான் மக்கள் எல்லோரும் சுறுசுறுப்புடன் தானே இருப்பார்கள்? என்று கேள்வி கேட்டால் "சகுனி" படத்தை பார்த்து ரசிக்க அதன் DVD Rip-யை உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பேன்)

அவனும் அவன் காதலியும் செக்ஸ் செய்வதற்காக உடைகளை கழட்டி விட்டு கட்டிலில் படுத்து விடுவார்கள். அவன் தன் உறுப்பை, அவள் உறுப்புக்குள் உள்ளே நுழைத்து விட்டு காத்திருப்பான். சிறிது நேரத்தில் கடுப்பான காதலி "ஏன் காத்திருக்கிறீர்கள் அன்பே?" என்று கேட்பாள்.

அதற்கு அவன் "வெயிட் டார்லிங், இன்னும் கொஞ்ச நேரத்தில் பூகம்பம் வந்து விடும்" என்பான்.

அது போல இந்த டெக்னாலஜிகள், செயற்கை புவி அதிர்ச்சியை உண்டாக்கும் அளவிற்கு செல்லாமல் இருந்தால் சரி.

Wise people creates smart phone for stupid people.




ட்ராபிக் ரூல்ஸை சட்டை செய்யாமல் மீறுபவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனென்றால் அது நம் ஒவ்வொரு இந்திய குடிமகனின் DNA-விலும் ஊறிய பழக்கம்.

ஆனால் சில பேர் ரோட்டில் சட்டையே போடாமல் காற்றில் அக்குள் முடி பறக்க, பல்சர் மற்றும் அப்பாச்சி வண்டிகளில் பறக்கின்றனர். சட்டத்தை மதிக்கவில்லை என்ற போதிலும், "சட்டையை"யாவது மதிக்கலாம் இல்லையா?

இன்னும் சிலர் ஏழாம் அறிவு "போதிதர்மாவை" போல ஒரு சிறிய துண்டை மட்டும் மேலே அணிந்து கொண்டு செல்கின்றனர்.

தமிழ்நாட்டில் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்ற சட்டம் போட்டவுடன், ஊர்ப்புறங்களில் ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுபவர்களை பிடித்த ட்ராபிக் போலீசுகள், பைனை காட்டுகிறாயா? இல்லை இப்பவே காசு கொடுத்து புதிய ஹெல்மெட் வாங்கி கொள்கிறாயா? என கேட்டு மக்களிடம் ஹெல்மெட்டை விற்று போட வைத்தார்கள்.

அதுபோல, ரோட்டில் சட்டையே போடாமல் செல்லும் "அவாளை" பிடித்து Public Distraction செய்ததற்காக பைன் போட வேண்டும் அல்லது அப்போதே அவர்களிடம் காசை பிடுங்கி கொண்டு புதுசாய் ஒரு சொக்காய் மாட்டி விட வேண்டும் என்பதுதான் என் "அவா".



யாரும் பின் வரும் லிங்கை கிளிக் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன். இந்த Topic -க்கு சம்பந்தமாய் ஒரு இமேஜ் போட்டு இந்த பதிவை நிரப்பலாம் என "half naked bike riding" என்று கூகுளில் தேடினால் கலை நயத்துடன் கூடிய படங்கள் தான் வருகிறது. அதை போட்டால் தமிழ் நாட்டு பசுக்கள் மற்றும் காளையர்களின் "கற்ற்ற்ப்பு" கெட்டு விடும் என்ற காரணத்தினால் அதை போடவில்லை.

வெளிநாட்டுக்காரர்கள் போராட்டம் செய்யத்தான் half naked ஆகவும் full naked ஆகவும் bike riding செய்கிறார்கள். 

ஆனால் நம்மாள் எதற்கு போராடுகிறான்?



மொக்கை கார்னர்:

I had my hands on my pockets. She asked,

"What do you have in your pockets?"

"God Particle" I answered and smiled at her.

"Oh! then, what did physicists find last week?" she asked with a surprised look.

quickly I said,

"They found a wrong one."





Apr 25, 2012

ஆன்டி வைரஸ் - ஆபாயில் (18+)


னி நான் மொக்கை பதிவுகளை விடுத்து, இந்த சமூகத்திற்கு பயனுள்ள வகையில் சீரியஸாக எழுதலாம் என்று இருக்கிறேன்.

ப்ளீஸ்!! சிரிக்காதிங்க.



சரி, நான் சீரியஸாக இதுவரை எழுதியதில்லை என்றாலும், அந்த அளவுக்கு அசிங்கமாகவும், அசைவமாகவும் எழுதவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அவ்வபோது சில அதிரடி மச்சான்கள் "ஆன்டியை மடக்குவது எப்படி?" என்பது மாதிரியான ஏடாகூட தலைப்புகளில் கூகுளில் தேடி, நம்ம சைட்டுக்கு விசிட் அடிக்கிறார்கள். நம் போஸ்டில் எங்கேயாவது "ஆன்டி" என்று ஒரு வார்த்தை மேட்ச் ஆனால் கூட, கூகிள் நம்ம சைட்டை தேடல் வரிசையில் காண்பித்து விடுகிறது. நம்ம சைட்டோ, முட்டையை(ஆபாயில்) மட்டுமே சேர்த்து சாப்பிடும் சைவம். 

பாவம்! ஏமாற்றத்தில் கடுப்பாகி, ப்ரௌசரையே மூடி இருப்பான். எனக்கே இப்படி என்றால், கலீஜாக எழுதுபவர்களுக்கு எக்கச்சக்க ஹிட்டு வருமென்று நினைக்கிறேன். என்னுடைய இந்த போஸ்டும் சிவாஜியின் "கர்ணன்" பட அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று நினைக்கிறேன். அதற்கு காரணம் கடைசியாக வரும் ஒரு 'A' மாதிரியான ஜோக்கும் தான்.

 

.blogspot.com -லிருந்து .com -க்கு மாறி விட்டேன். இனி www.iamstranger.com தான் நம்ம சைட். நான் எழுதுவதால் ஐம்பது பைசா கூட கிடைப்பதில்லை. இந்த ஊரில் எழுத்தாளனுக்கு மதிப்பே இல்லை. எங்கு போனாலும், எது செய்தாலும் சொந்த காசையே செலவழிக்க வேண்டியுள்ளது. கேரளாவில் தான் என் எழுத்தை அதிகம் மதிக்கிறார்கள். என்னை கொண்டாடுகிறார்கள். கேரளா பெண்ணை ஒருத்தி திருமணம் செய்து அங்கேயே குடிபெயர போகிறேன். தன் சொந்த காசை செலவு செய்து, இந்த டொமைன் வாங்கி தந்த என் வாசக நண்பன் இ.வா. நடேஷ்குமாருக்கு நன்றிகள் பல.

.com -ற்கு மாற்றும் போது நாம் நினைத்த URL கிடைப்பதில்லை. ப்ளாக் URL, panty -யை போல சின்னதாகவும் பார்ப்பவர்களை Attract செய்வதாகவும் இருக்க வேண்டும். முக்கியமாய் தமிழில் இருக்கக் கூடாது. நினைவில் வைத்துக்கொள்ள, ல(la), ழ(zha) பிரச்சினைகள் வரும்.



ன் உயிரினும் மேலான தமிழ் பிளாகர்ஸ்களே! 
பிட்டு படம் பார்த்தாலும் அதை கண்ணியமாய் புட்டு லாஜிக் பார்த்து விமர்சிக்கும் சிங்கங்களே!
கில்மாவான தலைப்பு வைத்து சமூக விழிப்'புணர்ச்சி' உண்டாக்கும் சீர்திருத்த செம்மல்களே!

நடிகைகளின் செக்சியான இமேஜை உங்க பிளாக்கில் போடாதிங்க மக்களே. ஆபிசில் திறந்து படித்து ரொம்பவே அசிங்க பட வேண்டி இருக்கின்றது. அதிலும் ஒரு பெண் நம் மானிட்டரை பார்த்துவிட்டால், நம்மை "சிம்பு" ரேஞ்சுக்கு "கெட்டவனாக" பார்க்க ஆரம்பித்து விடுவாள். இந்த பதிவால் என்னுடைய பிளாகையே என்னால் கூட ஓபன் பண்ணி எத்தனை கமெண்ட்டு வந்திருக்கு என்று ஆபிசில் செக் பண்ண முடியாது என்பது தான் யதார்த்தம்.

இந்த பிளாக்கை படித்து விட்டு கேவலமாக திட்ட விரும்பினால், உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் மூலமாக அதை செய்தால் நலம். "லைக்" செய்ய வசதியாய் இருக்கும். ஜிமெயில் அக்கௌன்ட் மூலம் ஒவ்வொருவருக்கும் நன்றிகள் சொல்வதில் சோம்பேறித்தனம் தான்.



ப்போதெல்லாம் என்ன எழுதுவதே என்றே தெரியவில்லை. என்னிடம் இருக்கும் சரக்கு தீர்ந்தது போல இருக்கு. இந்த பதிவை முழுதும் படித்தாலே உங்களுக்கு புரியும். எனக்கு ஜெயமோகன், சாருவை போன்ற உலகத்தர இலக்கியவாதிகளை படிக்கவும் அறிவு இல்லை. சமூகத்தை கலாய்த்து எழுதுவதே பிழைப்பாய் மாறிவிட்டது. இந்த பிழைப்பால் யாராவது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

எழுத சரக்கு தீர்ந்து விட்டாலும், இப்போது சரக்கு அடிப்பது மட்டுமே எனக்கு ஆறுதல். சரக்கு அடித்த பின் நிறைய சித்தாந்தங்கள் தோன்றும். ஆனால் சரக்கு அடித்த பின் எழுத மாட்டேன். சரக்கு அடிச்சுட்டு கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை பார்த்தால், 3D கண்ணாடி போடாமல் 3D படம் பார்ப்பது போல இருக்கும்.

நான் வழக்கமாய் தமிழ் புத்தாண்டில் தான் சபதம் போடுவேன். இந்த புத்தாண்டுக்கு, "இனி டாஸ்மாக்கில் சரக்கை வாங்கி குடிப்பதில்லை" என்று தெளிவாக ஒரு சபதம் போட்டுள்ளேன். தமிழ் புத்தாண்டு என்றைக்கு என்பதில் ஆட்சியாளர்களுக்கு பிரச்சினை இருந்தாலும், சராசரி தமிழனுக்கு அது சப்ப மேட்டர். அவனுக்கு தேவை அன்னிக்கு லீவு, ஒரு எழவு புது ரிலீசு படம், ஒரு பாட்டில் சரக்கு. 


 


இந்த நிதியாண்டில் டாஸ்மாக் துறைக்கு அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்று தெரியவில்லை. விலைக்கு ஏற்ற தரம் இருப்பதில்லை. தரத்திற்கு ஏற்ற விலையும் இருப்பதில்லை. ISI மாதிரி சான்றிதழ் ஒன்று கொடுத்தால் தேவலை. அங்கே கொடுக்கின்ற சரக்கு எல்லாம் மட்டமாக இருக்கிறது. கூலிங் சுத்தமாக இல்லை. பாதி பாட்டில் யூரின் நிரப்பி, "அண்ணே புல் பெப்சி"னே என்று சொல்லி விற்றாலும், அங்கே தான் வாங்க வேண்டிய நிலைமை. 



இந்த அநியாயத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் நாக்கை மடித்து கேள்வி கேட்க, கிடைத்த நமக்கான ஒரு தலைவர் தான், கருப்பு எம்.ஜி.யார். சென்னையில் அங்காங்கே தே.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தலை வைத்ததற்கு பதில், நன்கு கூலிங்காக பீர் பந்தல் மலிவு விலையில் வைத்தால், அடுத்த இடை தேர்தலில் குடிமகன்களின் ஓட்டுகளை பெற்று டெபாசிட் இழக்காமல் தப்பிக்கலாம்.

முப்பது ரூபாய் போட்டு மினரல் வாட்டர் வாங்கி குடிக்கும் இந்த ஊரில், அந்த மண் பானையை ஓபன் பண்ணி யார் குடிக்க போகிறார்கள்? கற்களை நிரப்பி காக்காய்கள் குடித்தால் தான் உண்டு.

இந்த போஸ்ட்டுக்கு கமெண்டு யாரும் போட வேண்டாம். அதை வச்சு ஒரு ஊறுகாய் பாக்கெட்டு கூட வாங்க முடியாது. சென்னையில் சுமாரான விலையில் சரக்கு எந்த பாரில் வாங்கலாம் என்று சொன்னால், அந்த கர்த்தரின் அருள் உங்களுக்கு கிட்டும்.

சில பேரை பார்த்தால் அவனுடைய பேருக்கும் அவனுக்கும் சம்பந்தமே இருக்காது. பார்க்க கொக்கி குமாரு மாதிரி இருப்பான். ஆனால் அவன் பெயர் டேனியல் துரை என்று இருக்கும். ஆபிஸ் மீட்டிங்கில் வெள்ளைக்காரன் பேசும் போது ஒன்னும் புரியாமல், நயன்தாரா போல "pardon", "pardon" என்று திரும்ப திரும்ப கேட்டு, வெள்ளைக்காரனை இம்சை செய்வான்.


னக்கு தினமும் மதியம் தான் ஆபிஸ் ஆரம்பம். அன்று நான் வழக்கத்திற்கு மாறாக படு ஸ்மார்ட்டாக டிரஸ் செய்து கொண்டு கிளம்பினேன். சென்னையில் அன்று தான் பூகம்பம் வந்தது. நான் நன்கு டிரஸ் செய்து கொண்டு போனதற்கும், பூகம்பத்திற்கும், எந்த ஒரு பட்டர் பிளை எபெக்ட்டும் காரணம் இல்லையென்று நினைக்கிறேன். 

முதல் முறை அதிரும்போது நான் பைக்கில் வந்து கொண்டிருந்தேன். வழியில் நிறைய பள்ளங்கள் இருந்ததால், அப்போது எனக்கு எந்த அதிர்வும் தெரியவில்லை. சென்னையில் இன்னும் பல ரோடுகள் சரிசெய்ய படாமலே இருக்கின்றன. வேளச்சேரி தண்டீஸ்வரம் வழியாக தரமணி சாலையில் இணையும் ரோடு படு மோசம். இன்னும் மழைக்காலம் முடியவில்லையா? அடிக்கிற வெயிலில் பைக் சீட் சுட்டு, சூ** பழுத்து மருதாணி வைத்தது போல சிவந்து விடுகிறது. மேயர் இந்த பதிவை மேய்ந்து விட்டு நடவடிக்கை எடுப்பாரா? பார்ப்போம்!



இரண்டாம் முறை பூமி அதிரும் போது நான் ஆபிசில் தான் இருந்தேன். அப்போது மும்முரமாய் வேலை செய்து கொண்டிருந்தேன் என்றால் நம்பியே ஆக வேண்டும். அன்றைக்கு முழுவதும் "பில்டிங் ஆடுது" "பில்டிங் ஆடுது" என்று அனைவரும் "அலர்ட்" ஆறுமுகமாய் அடிக்கடி எழுந்து வெளியே ஓடிக் கொண்டிருந்தார்கள். மெதுவாய் பின்னே சென்று லேசாக அவர்கள் உட்கார்ந்திருக்கும் சீட்டை ஆட்டினாலே போதும், திரும்பி பார்க்காமல் பதறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். நானும் வேகமாக கீழே இறங்கி ஓடினேன். உயிருக்கு பயந்து அல்ல. பில்டிங் ஆடாமல் கையால் தாங்கி பிடிக்க. 

பூகம்பத்தை தான் உணர முடியவில்லை, சுனாமியிலாவது ஸ்விம்மிங் போடலாம் என்று மெரினாவுக்கு சென்றேன். அதுவும் ஏமாற்றிவிட்டது. பீடி பாடி தனுசும் ஸ்விம்மிங் சூட்டில் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

ஜாக்கெட் தத்துவம்:

ஜாக்கெட்டின் முதல் கொக்கியை
தவறாய் போட்டால்
பின் வரும் எல்லா கொக்கியும்
தவறாகவே இருக்கும்.

Great lines said by,

முக்கு கடை டெய்லர் "முருகன்" 


பாவாடை ஜோக்:

பாவாடையை தூக்கி 
அவள் அதை 
அவனுக்கு காட்டினாள்.
அவன் அதை பார்த்து மிரண்டு போனான்.

--
--
--
--
--
--
ஒரு பாவாடையின் விலை. Rs. 2599.90




Mar 13, 2012

டாஸ்மாக் உங்களை அன்புடன் வரவேற்கிறது - ஆபாயில்





தமிழ்நாட்டில் அவசரத்திற்கு ஜிப்பை கழட்டி ஒதுங்க, ஒரு பொது கழிப்பிடம் கண்டுபிடிப்பது சிரமம். ஆனால் தெருவுக்கு நான்கு டாஸ்மாக்குகள் உங்களை கை கூப்பி வரவேற்கும். அதன் வாசலில் என்கவுண்டரில் சுட்டு போட்டது போல், எப்போதும் நான்கைந்து பேர் மப்பில் சுயநினைவு இழந்து, உடல்கள் மட்டும் அங்கே கிடக்க, வேறு கிரகத்திற்குள் நுழைந்திருப்பார்கள். அதை கண்டு கொள்ளாமல், பெரிய கூட்டம் ஒன்று கண்ணும் கருத்துமாய் கம்பி கூண்டுக்குள்ளே கையை விட்டுக் கொண்டு, உயிர் போகும் அவசர கதியில் அலைமோதி கொண்டிருக்கும். 

தினமும் வங்கியை விட, அதிக பணம் இங்கே தான் கலெக்சன் ஆகிறது. கொள்ளை அடிப்பவர்கள் அடுத்த முறை டாஸ்மாக்குல கையை வைங்கப்பா! நம்ம கோவிந்து கூட, என்கவுண்டருக்கு  எதிராக பொங்கி ஒரு பதிவு எழுதி நிறைய கமெண்ட்டுகளை கல்லா கட்டிவிட்டான். தமிழ்நாடு காவல் துறை அதை பார்த்து பயந்து, அதற்கு வருத்தம் தெரிவித்து, அது போல் இனி ஏதும் நடக்காது என்று கமென்ட் போட்டுள்ளதை கோவிந்துக்கு கிடைத்த வெற்றியாக கருதலாம். அதனால் மறுபடியும் இன்னொரு என்கவுண்டர் கண்டிப்பாக நடக்காது என்று கோவிந்து உறுதிபட கூறுகிறான்.

தமிழ்நாட்டு பட்ஜெட்டின் வற்றாத நதி மூலமே டாஸ்மாக் தான். "இப்போது உங்கள் வசதிக்காக உங்கள் தெருவில், எங்களது புதிய கிளை ஆரம்பம்" என்று அரசு விளம்பர போர்டு கூட வைக்கலாம்.

டாஸ்மாக்கில் நுழைந்து ஒரு சரக்கு வாங்குவது அவ்வளவு அருவருப்பான விஷயம். அந்த கூட்டத்திற்குள் புகுந்து சரக்கு வாங்கி விட்டு வெளியே வரும் போது, நாம் பன்றியாய் மாறி விட்ட உணர்வு வந்து விடுகிறது. பப்ளிக் டாய்லெட் போல ரொம்ப கலீஜாக இருப்பதால், சரக்கை வாங்கி ஒரு பெக் உள்ளே விட்டால்தான் கொஞ்ச நேரமாவது அங்கு நிற்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை. அந்த ஒரு பெக்கை, கவர்மெண்ட் இலவசமாய் கொடுத்தால் நலம்.

எக்ஸ்ட்ரா பெக்: 
கூகுளில் டாஸ்மாக் என்று கூகுளில் தேடினால், முதல் பக்கத்தில் விஜயகாந்த் போட்டோ வருகிறது. :-D  





புதிய டெக்னாலஜிகள் கடவுளை போன்றது. நாம் வேண்டுவது, நமக்கு வேண்டாதது என அனைத்தையும் தரும். "God is watching you" என்று சொன்னால் கூட பயம் வருவதில்லை. "Google is watching you" என்றால் பயத்தில் டவுசர் நனைந்து விடுகிறது. ஐ.டி யில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, இன்டர்நெட் உபயோகிக்கும் அனைவருக்கும் கூகுள் தான் காட், காட்பாதர் எல்லாமே. சிறுவயதில் தப்பு செய்யும் பொழுது கடவுள் பார்த்துக் கொண்டிருப்பாரே என்று பயந்து கொண்டே தப்பு செய்வோம். கடவுள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறாரோ இல்லையோ, கூகிள் நம்மை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்னென்ன படிக்கிறீர்கள்?, யாருடன் என்னென்ன பேசினீர்கள்? என அனைத்தையும் கண்காணிக்கிறது.

இருட்டில் உட்கார்ந்து கொண்டு நீங்கள் செய்யும் தப்புகளை, சோசியல் நெட்வொர்க்குகள் உலகத்துக்கே வெளிச்சம் போட்டு படம் காட்டுகின்றன. Kumar watched "Poonam pandey's topless video" 12 seconds ago. என்று பேஸ்புக் உடனுக்குடன் உங்கள் நண்பர்களுக்கு மைக் வைத்து அறிவித்து விடும். அப்படி நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ, ஒரு செக்சி விடியோவை பார்த்து, அது உங்கள் பேஸ்புக் Wall -இல் உங்களுக்கே தெரியாமல் போஸ்ட் ஆகி விட்டால், ஒரு உண்மையான நண்பன் அதை பார்த்தால் உங்களுக்கு கால் செய்து "அலர்ட்" செய்வான்.

தன் திறமையால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கிற நபர்களுக்கு தான் "பாரத ரத்னா" விருது வழங்க படுகிறது என்றால், அதை சச்சினை விட, பூனம் பாண்டேவுக்கே கொடுப்பது பொருத்தமாய் இருக்கும். இவர் தான் முழு இந்தியாவையும் திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறார்.

கர்நாடக சட்ட மன்றத்தில் உட்கார்ந்து அமைச்சர்கள் பிட்டு வீடியோ பார்த்தது, எல்லோருக்கும் கோபத்தை வரவழைப்பதை விட, "அது என்ன வீடியோ?" என்ற ஆவலையே அதிக படுத்தியது. கூகிள் தேடலில் அந்நேரம் அதுவே ஹாட் டாப்பிக்காக இருந்திருக்கும். 

துப்பாக்கியை காட்டி மிரட்டினால் கூட பயப்படாதவர்கள், Hidden கேமராவை காட்டி Hands Up என்று சொன்னால், அச்சத்தில் உடனே கைகளை தூக்கி விடுவார்கள். இரண்டுமே shoot செய்யும் என்றாலும், தமிழன் உயிரை விட மானமே பெரிது என்று நினைப்பவன்.


நெட் கபே, எ.டி.எம் ரூம், துணிக்கடை ட்ரையல் ரூம் என இந்த ஹிட்டன் கேமிராக்களின் பிரச்சினை அதிகம். அப்படிதான் ஒரு நாள் நம்ம கொக்கி குமாரு, ஒரு பெரிய ஷோ ரூமுக்கு பேன்ட் எடுக்க போனான். அன்னிக்கு பார்த்து அவன் ஜட்டி போடவில்லை. ஆனால் குமாரு அதை பற்றி கொஞ்சமும் கவலைபடாமல், ட்ரையல் ரூமில் பொறுமையாக போட்டு பார்த்து தான் வாங்கி வந்தான். அன்று மட்டும் யாராவது அங்கு ஹிட்டன் கேமிரா செட் பண்ணி வைத்திருந்தால், பார்த்தவனுக்கு அதை விட வேறு பெரிய தண்டனை கிடைத்திருக்க முடியும்?


"ஒரு கல், ஒரு கண்ணாடி" ஊத்தாமல் ஊத்திக் கொள்ளும் என்றே தோன்றுகிறது. தொடர்ந்து தியேட்டரில் போட்டு சாகடிக்கும் பழைய ட்ரைலரை விட, தற்போது பேஸ்புக்கில் உலவிக் கொண்டிருக்கும் புது ட்ரைலர், சன்டீவி சூப்பர் டென் காமெடியை விட மட்டமாய் இருக்கிறது. நமீதா நம்பர் 2 போல இருக்கும் ஹன்சிகாவிற்கு ஏன் இத்தனை ரசிகர்கள் என்று தெரியவில்லை. 

ஆதித்யா டீவி, சிரிப்பொலி டீவியில் திரும்ப திரும்ப வரும் வடிவேலு கவுண்டமணி காமெடியை பார்த்தால் எனக்கு பீபி எகிறி விடும். ஜெயா டிவியில் இரவு பத்து மணிக்கு பிறகு போடும் அந்த கால பாடல்களில் இருக்கும் காமெடி கூட அதில் இருக்காது. சுமார் ஒரு நிமிடம் ஹீரோயினின் முகத்தையே குளோசப்பில் காட்டுவார்கள். அவளும் புருவத்தை வளைத்து நெளித்து, உதட்டை பிதுக்கி சுழித்து, லேடி சிவாஜி கணேசன் போல நவரசத்தையும் தன் முகத்தில் ஒருங்கே கொண்டு வருவாள். அவர்களது முகபாவனை, நடனம் இவற்றை ஜாலியாய் பார்த்து படுத்து உருண்டு கொண்டே சிரிக்கலாம். 

தற்போதெல்லாம் சில நொடிகள் மட்டும் ஹீரோயின் முகத்தை காண்பித்து விட்டு, கீழே இறக்கி மார்பையும், தொப்புளையும், ஷங்கர் பட பாட்டு போல நான்கைந்து கேமிராவால் சுற்றி சுற்றி காண்பிக்கிறார்கள். "யாரடி நீ மோகினி" யில் வரும் "ஓ பேபி, ஓ பேபி" பாடலின் கடைசி ஒரு நிமிடத்திற்கு, தன் இடுப்பில் நவரசத்தையும் காட்டி தன் நடிப்பால் கவர்ந்த ரகஸியா இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை என்பது காலத்தின் கோலமின்றி வேறென்ன?

ஒரு பழைய சரக்கு ஜோக்:

ஒரு ஆசிரியர், தன் மாணவர்களுக்கு, சரக்கடிப்பதால் என்ன தீமை என்று ஒரு எக்ஸ்பெரிமென்ட் செய்து விளக்குவதற்காக, ஒரு கிளாஸ் தண்ணீர், ஒரு கிளாஸ் சரக்கு, ஒரு புழுவையும் எடுத்துக் கொண்டு,

"ஸ்டூடண்ட்ஸ், கவனமா பாருங்க" என்று சொல்லி அந்த புழுவை எடுத்து தண்ணீர் கிளாசில் போடுகிறார்.  அந்த புழு தண்ணியில் ஜாலியாக நெண்டியபடி இருக்க அதற்கு எதுவும் ஆகவில்லை.

அடுத்து அந்த புழுவை மீண்டும் எடுத்து, இப்போது சரக்கு கிளாசில் போடுகிறார். இப்போது அது எரிச்சலில் துடி துடித்து இறந்து இறைவனடி சேர்ந்து விடுகிறது. 

உடனே ஆசிரியர் "இதிலிருந்து நாம் என்ன கத்துகிட்டோம்?" என்று கேட்கிறார்.

எப்பவுமே கடைசி பெஞ்சுலையே உட்கார்ந்து கவனமாய் கிளாசை (வகுப்பை) கவனிக்கும் நம்ம கொக்கி குமாரு, கையை தூக்கி புத்திசாலிதனமாக பதில் சொன்னான்.

"சரக்கு அடிச்சா, நம்ம வயித்துல இருக்கிற புழு எல்லாம் செத்து போயிடும் சார்"

அதை கேட்டு படு டென்சனான ஆசிரியர், புழுவை தூக்கி எறிந்து விட்டு அந்த சரக்கை ஒரே கல்பில் அடித்து விட்டு மட்டை ஆகிறார்.