Jan 5, 2018

தறுதலைகளின் அம்மா



சினிமாவில் தறுதலை ஹீரோக்களுக்கு ரேங் போட்டால் சிவ கார்த்திகேயன் தான் கில்லியாய் வருவார். இரண்டாம் இடம் தனுசுக்கு கிடைக்கலாம். பின் விமல், ஆர்யா, ஜீவா, சிம்பு எல்லாம் பத்து இடங்களுக்குள் வருவார்கள்.

ஆனால் வெள்ளித்திரையில் இது போல தறுதலைகளை வதவதவென்று அதிகம் பெற்ற அம்மா யார் என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். அடுத்த இடம் ஊர்வசிக்கு. இவர்கள் இருவரின் கால்ஷீட்டும் இல்லையென்றால் தான் அந்த வாய்ப்பு மற்ற நடிகைகளுக்கு போகிறது. அந்த அளவிற்கு இருவரும் அந்த கேரக்டர்களுக்கு செமத்தியாய் செட்டான அம்பாசிட்டர்கள். நாசரை போல கண்டிப்பான அப்பாக்கள் இவர்கள் நடித்த படம் என்றால் அதை பார்க்காமல் தவிர்த்து விடலாம். இவர்கள் படத்தை பார்க்கும் நிஜ தறுதலைகளின் அம்மாக்கள், படத்தில் வருவது போல தன் பிள்ளையும் ஒரு நாள் முன்னேறி வெற்றி பெறுவான் என நப்பாசை கொள்கிறார்கள். அது நிஜத்தில் நடக்காது எனினும் சந்தோசமாய் படம் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்கின்றனர். அதனாலேயே தாய்மார்களின் ஆதரவுடன் இவ்வகை படங்கள் பெரிய ஹிட் ஆகிறது. சி.கா பெரிய ஹீரோவானதே இப்படி தான். வேலை இல்லா பட்டதாரி போல நடுவே கொஞ்சம் தூக்கலாக அம்மா சென்டிமென்டை கலந்து விட்டால் அம்மாக்கள் குபு குபுவென்று கண்ணீரை கொட்டி அமோக வெற்றியை அள்ளி கொடுப்பார்கள். இப்போது அப்பா செண்டிமெண்ட் படங்களும் பெருகி வருகின்றன. இருந்தாலும் தமிழ்நாட்டில் அம்மா சென்டிமென்டுக்கு அப்புறம் தான் எல்லாம்.

VIP படத்தில் வரும் "அம்மா அம்மா" போன்ற பாடலை ரிங் டோனாக வைத்திருப்பவர்களை கவனியுங்கள் தெரியும். மொடா குடிகார்களாகவும் ஊதாரிகளாகவும் இருப்பார்கள்.

தறுதலை மகனை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும், தங்கத்தில் நகை வாங்கினால் மணப்புரம் பைனான்ஸ்க்கு சென்று விடுமென்று.


No comments: