Showing posts with label NonSense. Show all posts
Showing posts with label NonSense. Show all posts

Jul 16, 2013

Nonsense Talking - இந்தியா ரேப்புகிறது


"எழுதி தான் பிழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாத வரை, என் எழுத்து எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்" - Katz


 
சை அங்கிங்கெனாதபடி எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கிறது. அது சாதாரண போஸ்டரிலும் கூட இருக்கிறது. 

தட்டி எழுப்ப வேண்டியது நாம் தான்.


அப்போது இரவு 11 மணி ஆக, 11 நிமிடம் இருந்திருக்கலாம். சென்னைக்கு சென்று கொண்டிருந்த SRM ஸ்லீப்பர் பேருந்தில் சுக உறக்கத்தில் இருந்த எனக்கு நம்பர் ஒன் பிரச்சினை தலை தூக்க, சட்டென விழிப்பு வந்தது.

பஸ் எங்கேயாவது நிற்குமா? என ஜன்னல் திரையை விலக்கி பார்த்துக் கொண்டே வந்தேன். டிரைவரிடம் நிறுத்த சொன்னால், அதிகம் ரூல்ஸ் பேசுவான் என பயம். அதை விட்டால், வழக்கமான ஓட்டலில் தான் நிறுத்துவார்கள். அங்கே கட்டண கழிப்பறையில் இரண்டு ரூபாய் கொடுத்து, ஒரு கையில் மூக்கை பிடித்துக் கொண்டு, மற்றொரு கையில்..........பிடித்து  மற்றவர்கள் பக்கத்தில் நின்று அடிக்க சங்கோஜமாய் இருக்கும். திறந்த வெளியில் விடவும் முடியாது. அவ்வாறு விட முயற்சிப்பவர்களை, பெரிய கம்பை வைத்து மிரட்டுவதற்கென்றே, சால்வை போர்த்திக் கொண்டு 'செந்தூர பூவே' விஜயகாந்த் கெட்டபில், ஒரு ஆள் இருப்பான். அது பலனளிக்காத பட்சத்தில் வரிசையாய் கெட்ட வார்த்தை கவிதைகள் வாசிப்பான். அதற்கும் சிலர் அசைந்து கொடுக்காமல், கருமமே கண்ணாய் அடிப்பார்கள்.

ஆனால் ஹோட்டல் வரை என்னால் அடக்க முடியாது என்று என்  அடி மனது சொன்னது. தொலைதூர மற்றும் மலை பகுதிகளில் பயணிக்கும் பேருந்துகளில் ஒரு சின்ன பிளாஸ்டிக் பேக் கொடுப்பார்கள். வாந்தி வந்தால் அதில் எடுத்து விட்டு, ஜன்னல் வழியே டூ வீலர்களில் வருபவர்களின் மீது தூக்கி எறிந்து விடலாம். இங்கு அதற்கும் வழி இல்லை. என்ன செய்வது? என்று அவஸ்தையில் யோசித்து கொண்டிருக்கும் போதே, ஒரு பிரதான சாலையில் பஸ் நின்றது. அவசரமாய் எழுந்து சென்று பேருந்தின் உள் கதவை திறந்தேன். அப்போது கண்டக்டர்,

"என்னப்பா?"...

"அண்ணா, ஒன் பாத்ரூம் போகணும்"...

"இங்கே விடமுடியாதுப்பா"...(இங்க இல்லண்ணா , கீழே இறங்கி போய் விடறேன்)

அப்போது டிரைவர் கண்டக்டரிடம் குறுக்கிட்டு, "லேடிஸா?, ஜென்ஸா?"...

"ஜென்ஸ்"...(இது கண்டக்டர்)


"எறக்கி விடு, போயிட்டு வரட்டும்"... 

"கடவுள் சார்... நீங்க!" என டிரைவரை மனசுக்குள் வாழ்த்தி விட்டு, சந்தோசமாய் இறங்கி சென்றேன்.  


ஜன நடமாட்டம் அதிகம் இல்லை. நாளெல்லாம் பிச்சை எடுத்த அசதியில், பிச்சைக்காரர்கள் கடைகளுக்கு முன் போர்வை விரித்து படுக்க தயாராகி கொண்டிருந்தனர்.

பத்தடி தூரம் நடந்து சென்றேன். மறைவான இடம் கிடைக்கவில்லை. கொஞ்சம் தள்ளி ஓரமாய் என் மானசீக கட்சி தலைவரின் போஸ்டர் சாய்த்து வைக்கப் பட்டிருந்தது. அருகில் சக தொண்டர்கள் யாரும் இருந்து விடக் கூடாது என்று மனதில் வேண்டிய பின், "மடை திறந்து தாவும் நதியலை நான்" என்று சந்தோசமாய் ஹம்மிங் செய்த படியே மெதுவாய் ஆரம்பித்து,  உச்சஸ்தாயி வரை ராகம் இழுத்து இசையுடன் கைகோர்த்து சென்று முடித்தேன். முடித்தவுடன் சிறுத்த நிம்மதி ஏற்பட்டது.

உன்னை வாழ்த்த வயதில்லை தலைவா! வணங்குகிறேன்.

கடவுள் கொடுத்த வசதி என, இப்படி  எங்கு வேண்டுமானாலும் கூச்சமின்றி ஜிப்பை சர்ரென்று இழுத்து, சகஜமாய் போகும் அளவுக்கு சுதந்திரத்தை வகுத்து கொண்ட ஆண்கள், பெண்களுக்கு வழங்கியிருக்கும்  சுதந்திரம், இடை, தொடை, மற்றும் இன்னும் பிற தெரியாமல் கவர் செய்து நடை செய்ய வேண்டும். இன்னும் சில பெண்களுக்கு, வெளியே எட்டி பார்க்க அவர்கள் கண்கள் மட்டுமே விசா வாங்கியுள்ளது.


'முகமூடி' என்ற தமிழ் சினிமாவில், அவ்வாறு பொது வெளியில் உச்சா போகும் ஹீரோவின் லுல்லாவை பார்த்த ஹீரோயினுக்கு உடனே காதல் பற்றி கொள்கிறதாம்.

What a Love!!!... ஆச்சர்யத்தில் ஆழ்த்த வைக்கும் முன்னோக்கிய--> சிந்தனை!!

இங்கு எனக்கு காரணமே இல்லாமல், சந்தானம் ஒரு படத்தில் சொல்லும் வசனம் நியாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. 

"ஏன்டா லூஸ்மோஷன் மாதிரி பின்னாடி போகணும்ன்னு நினைகிறீங்க?. யூரின் மாதிரி  முன்னாடி போகணும்ன்னு நினைங்கடா!"


தொண்ணூறுகளின் சினிமாக்களில் நிறைய ரேப் சீன்கள் இருந்தது. கல்லூரிக்கோ, கடைக்கோ சென்று திரும்பி கொண்டிருக்கும் ஹீரோவின் தங்கச்சியை, வில்லன் ஒரு ஆம்னி வேனுக்குள் தூக்கி சென்று கதற கதற கற்பழிப்பான். சிறு வயதில் அதை கொஞ்சம் பரிதாபத்தோடும், அதிக பரிதவிப்புடனும் பார்த்த நியாபகம். அதற்கு அந்த நடிகைகளின் தத்ரூபமான நடிப்பும் ஒரு காரணம். இப்போது நம் இயல்பு வாழ்க்கையில் ரேப் அதிகமாய் நடந்து கொண்டிருக்கிறது. வானிலை அறிக்கை போல, தினமும் தவறாமல் ரேப் நியுஸ் இடம் பெறுகிறது.

Women raped in moving bus இல் ஆரம்பித்து moving car, moving auto என இந்திய வரலாற்றில், மூவ் ஆகி கொண்டிருக்கும் சகல வாகனங்களிலும் ரேப் அரங்கேறியிருக்கிறது. வழக்கமாய் பரபரப்பான நிகழ்வை மையமாய் வைத்து படமெடுத்து காசு பார்க்கும்,  ராம் கோபால் வர்மா இன்னும் ஏன் டெல்லி ரேப்பை படம் எடுக்கவில்லை? ஒருவேளை அவர் அதற்கு திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கலாம்.

நம் சமூகத்தில் ஆண்களுக்கான உணர்சிகள் மட்டுமே வெளிப்படையாக அங்கீகரிக்கப் படுகிறது. பதின்ம வயது எட்டியவர்கள், செக்ஸை பற்றி அறிந்து கொள்ளவும் தங்கள் உணர்ச்சியை தனித்துக் கொள்ள கொஞ்சமாயேனும் உதவியாய் இருந்த, செக்ஸ் புத்தகங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. ஆண்களுக்கு மட்டுமே சொந்தமாயிருந்த பிட்டு படங்களும், தியேட்டர்களும் கலாச்சார மாற்றத்தில் காணாமல் போய் விட்டன. இப்போது இருக்கும் ஒன்றிரண்டு மோசமான டென்ட்டு கொட்டகைகளில் வரும் படங்களும், கதையம்சம் மட்டுமே உள்ள படங்களாக இருக்கின்றன. மருந்துக்கு கூட பிட்டு இருப்பதில்லை என்பது பெரும் சோகம்.

செக்ஸ் புத்தகங்களும், பலான படங்களும் பரிணாம வளர்ச்சி அடைந்து, செல்போன்களிலும், கம்ப்யூட்டர்களிலும் தங்களை புதுப்பித்து கொண்டு விட்டன. கம்ப்யூட்டரை கொஞ்சம் நோண்ட தெரிந்த பையனுக்கு, பத்து ரூபாயுடன் பிரவ்சிங் செண்டர் சென்றால் போதும். எல்லாமே கிடைக்கிறது. ரியல் லைப் வீடியோவிலிருந்து வகை வகையாக பார்க்கலாம். ஒண்ணுமே தெரியாத படிப்ஸ் பையனையும், வெப்சைட்டின் சைடில் வரும் விளம்பரமே கையை பிடித்து கூட்டி சென்று விடும்.

கம்ப்யூட்டர், செல்போன் போன்ற இத்யாதிகள் இல்லாத காலத்தில் பலான புத்தகம் படிக்காமல், அட்லீஸ்ட் பொம்மையாவது பார்க்காமல் நம் அடல்ட் ஏஜ்ஜை கடந்து வந்திருக்க மாட்டோம். ஆனால் இப்போது இருக்கும் பையன்களிடம் எதையும் பார்க்காதே என்று சொன்னால், நியாயமாரே! 

செல்போன்களில் நியுட் வீடியோக்கள் வைத்திருக்கும் பையன்களை, இன்ஸ்பெக்டர் ரோட்டில் தோப்பு கரணம் போட வைக்கும் சினிமா (வழக்கு எண்) காட்சியை பார்த்து கை கொட்டி சிரிக்கிறோம். இது, ஒரு சின்ன பையனின் டிரவுசரை கழட்டி விட்டு அதை பார்த்து 'ஹேய், அம்மணம்' என்று சொல்லி சிரிப்பதற்கு நிகரான காமெடி. 

எத்தனை firewall வைத்தாலும் இப்போது இருக்கும் பையன்களுக்கும் பெண்களுக்கும் கடிவாளம் போட முடியாது. எட்டாவது படிக்கும் பையனுக்கு கையில் ஸ்மார்ட் போனையும் கொடுத்து, டூ வீலரையும் கொடுத்து 'சும்மா இருடா தங்கம்' என்றால் சும்மா இருப்பானா? இது எதுவுமே பயன்படுத்த முடியாத / தெரியாதவர்களின் பிரச்சினை பற்றி மட்டும் யாரும் கண்டு கொள்வதில்லை. ஒரு சாராருக்கு எல்லாம் கிடைக்கும் போது, எதுவுமே கிடைக்காதவன், மூவ் ஆகி கொண்டிருக்கும் வண்டி நிற்கும் வரை எதையும் செய்யலாம் என்று துணிகிறான்.

என்னதான் நமக்குள் Upper, Middle, Low கிளாஸ் என வித்தியாசம் இருந்தாலும், ஆட்டோ டிரைவர், கால் சென்டர் Cab ஓட்டும் ட்ரைவர் என இயல்பு வாழ்க்கையில் லோ கிளாசை சந்திக்காமல், மிடில், அப்பர் கிளாசால் தப்பிக்கவே முடியாது. ஒரு அப்பர் கிளாசுக்கு, இன்னொரு அப்பர் கிளாஸ் கார் ஒட்டவும் முடியாது.

இயல்பாய் நடக்க வேண்டிய விஷயங்கள் மறுக்கப்படும் போது தான், தவறான விஷயங்கள் நடக்கின்றன. வாட்டர் பைப் உடைந்து விட்டால், வால்வை நிறுத்தாமல் துணியை வைத்து அடைக்கும் வேலையை தான் எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். எது தடுத்தாலும் அதன் விளைவுகளோடு சமூகம் தன்னை தானே தகவமைத்துக் கொண்டே இருக்கும்.

Trivia: இப்போது இலவசமாய் வழங்கப் பட்டிருக்கும் அம்மா மடிக்கணினி, படிப்பில் திக்கு தெரியாமல் திண்டாடும் மாணவர்களுக்கு கல்வியில் கலங்கரை விளக்காய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.


                                                                                                          நான்சென்ஸ் தொடரும்...


Aug 24, 2012

குப்பை கொட்டுவது இப்படி - 1

இதை படிப்பதற்கு முன், இதை படித்து விட்டு வாருங்கள்.

Nonsense Talking 3 - குப்பை Planet


நீங்கள் புதிதாய் பிளாக் எழுத வந்துள்ள அப்பிராணியா? நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? அப்படியெனில்,

நீங்கள் என்னென்ன செய்தால் இங்கு குப்பை கொட்ட முடியும்?
அதை எப்படி செய்வது?

வாருங்கள் கற்று கொள்வோம்!!

குப்பை தான் நம்முடைய வாழ்வாதாரம். குப்பையை நீங்கள் அருவருப்பாக பார்த்தால் இங்கு பிழைத்திருப்பது கடினம்.

சாலையில் நடந்து செல்லும் போது குப்பை அள்ளும் வண்டியை கடந்து செல்ல நேரிட்டாலோ, ட்ராபிக்கில் குப்பை வண்டிக்கு அருகில் நிற்க நேரிட்டாலோ, மூக்கை பொத்திக் கொண்டு அல்லது மூச்சை கட்டுபடுத்தி கொண்டு அவஸ்தை படுகிறீர்களா?

உங்களுக்கெல்லாம் ஒரு உன்னத அட்வைஸ்.

7 ஜி ரவி கிருஷ்ணா நடித்த "பொன்னியின் செல்வன்" என்ற படத்தில் ஒரு காட்சி வரும். குப்பை அள்ளும் வேலைக்கு புதிதாய் சேர்ந்த ரவி கிருஷ்ணாவிற்கு, குப்பையின் நாற்றத்தில் குமட்டி கொண்டு வரும். அப்போது கூட வேலை செய்யும் ஒரு சீனியர் சொல்வார் "அந்த குப்பையை ஒரு முறை நன்கு மூச்சு இழுத்து முகர்ந்து விடு. அப்புறம் அதன் நாற்றம் உனக்கு தெரியாது. ப்ரீயா வேலை செய்யலாம்" 

அதனால் ஏற்கனவே இணையத்தில் ஏராளமாய் கொட்டி கிடக்கும் குப்பைகளை வாசித்து, நுகர்ந்து குப்பையோடு குப்பையாய் கலந்து மக்கி விடுங்கள். உங்களுக்கு அதன் நாற்றம் பழகி விட்டால் அதன் பின் எந்த அருவருப்பும் உண்டாகாது.


OK. Lesson Starts... 

சினிமா செய்திகள், விமர்சனங்கள் தான் மிக சரியான மனித கழிவு. வருபவர்கள் ஈ மாதிரி மொய்க்க ஆரம்பித்து விடுவார்கள். 

உங்களுக்கு கதைக்கும் திரைகதைக்கும் வித்தியாசம் தெரியாது இருக்கலாம். ஆனாலும் கேமரா வொர்க், CG, லைட்டிங், மேக்கிங் போன்ற டெக்னிகல் விசயங்களை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். செய்த தவறை அடுத்த படத்தில் திருத்தி கொள்ள இயக்குனருக்கு அட்வைஸ் மற்றும் பாராட்டுகள், முக்கியமாய்  நீங்கள் எந்த தியேட்டரில் படம் பார்த்தீர்கள் என்று குறிப்பிட வேண்டியது அவசியம். அந்த செய்தி நாளைய வரலாற்றில் இடம் பெறும். IMDb-யில் கூட இல்லாத அளவுக்கு, படத்தின் Casting, Writers போன்ற இதர விசயங்களை குறிப்பிட வேண்டும்.

தமிழை தவிர இந்தி, தெலுகு, மலையாளம், ஒரிசா, மராட்டி என பிராந்திய மொழிகளில் வரும் அனைத்து படங்களையும் பார்த்து, டயலாக் புரியவில்லை என்றால் கூட பக்கத்தில் இருப்பவரையாவது கெஞ்சி கேட்டு நோட் செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் அதிகம் வரலாம். ஆனாலும் எழுதும்போது  Lifco டிக்சனரியை பயன்படுத்தி நடுநடுவே "அமேசிங்", "மாடுலேஷன்", "இன்ஸ்பயர்", "டெம்ப்ளட்" "ட்விஸ்ட் அண்ட் ட்ர்ன்" போன்ற ஆங்கில வார்த்தைகளை அப்படியே டமிலில் மாற்றி அங்கங்கே நுழைத்து படிப்போருக்கு வயிற்றுபோக்கை வர வழைக்க வேண்டும். அது பிற்காலத்தில் தனி ஸ்டைலாக உருவெடுக்கும். அதை உருவாக்கிய உங்களுக்கு உத்திர பிரதேசத்தின் சாலையோரத்தில் நூற்றுகணக்கில் சிலை வைக்கப் படும்.

நீங்கள் அந்த படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, பாதியிலேயே குறட்டை விட்டு தூங்கி இருக்கலாம். ஆனாலும் அந்த படத்தை மறுபடியும் பார்த்து அதற்கு விமர்சனம் எழுதியே ஆக வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. "மொக்கை படம் தானே! இதற்கு ஏன் விமர்சனம் எழுத வேண்டும்?" என்று உங்கள் மனசாட்சியிடம் கூட கேள்வி கேட்க கூடாது. 

விமர்சனம் தவிர நடிகர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் காலையில் எழுந்து பல் துலக்கியது முதல் பிரியாணி செய்து போட்டது வரை அவர்களது அன்றாட செயல்களை பதிக்க வேண்டும். அன்னா ஹசாரே பற்றிய பதிவிலும், நடிகைகளின் கவர்ச்சி வால்பேப்பர் படங்களை ஒவ்வொரு பத்திக்கும் இடையில் சொருகி, படிக்கும் வாசகனின் மூடை கன்னாபின்னா வென்று ஏற்றி விட வேண்டும். 

படத்தின் இயக்குனர் யோசித்திருக்காத கோணத்தில், நாம் யோசித்து அதை கூறு போட்டு விமர்சனம் செய்வது தனி கலை. அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும். உங்கள் விமர்சனத்திற்கு உலகமே காத்துக் கொண்டிருப்பதாக பல பில்டப்களை உருவாக்க வேண்டும்.

இந்த பகுதியையும், இனி வரும் தொடர் பகுதிகளையையும் தொகுத்து "குப்பை கொட்டுவது இப்படி" என்ற தலைப்பில் இதை ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்று இருக்கிறேன். இதற்கு, குப்பை கொட்டும் கலைக்கு ஆசானாக விளங்கும் குட் பீல்ட் அவர்கள் ஆங்கிலத்தில் முன்னுரை எழுத சம்மதத்திருக்கிறார். அவருக்கு தமிழ் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.


                                                                                             -இன்னும் கொட்டுவோம்.






Jul 25, 2012

குப்பை Planet - Nonsense Talking 3


முன் எச்சரிக்கை: Blog வட்டத்திற்குள் உள்ளவர்கள் இதை படிக்க வேண்டாம். மீறி படித்தால் அதற்கு உங்கள் இன்டர்நெட் கனெக்சன் மற்றும் நீங்களுமே பொறுப்பு.



"நான் தொடர்ந்து எழுதுவது ஏன்?" என்று நிறைய பேர் நினைக்கலாம். கோபமும் படலாம். அதற்கு எனக்கே விடை தெரியவில்லை.

ஆனால், "ஏன் நான் தொடர்ந்து எழுத வேண்டும்?" என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

நான் எப்படி எழுதினாலும் "the good stranger blogspot" என்று கூகுளில் தேடி, எதிர்பார்த்து எனது பிளாகிற்கு வருகை தந்து ஏமாறும் உள்ளங்களுக்குக்காகவே, எழுத வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன்.

இரண்டு மூன்று மாதங்கள் எழுதாமல் இடைவெளி விட்டாலே, என் சுவாசம் நின்று ரத்தம் உறைந்து இறக்கும் நிலைக்கு சென்று விடுகிறேன். ஆனால் எழுத ஆரம்பித்தவுடன், நான் டைப் செய்யும் ஒவ்வொரு வார்த்தையும் தேவையில்லாத ஆணியாகவே தோன்றுகிறது. நான் இந்த உலகத்தில் பிறந்ததே, ப்ளாகர் அவதாரம் எடுத்து படிக்கும் அனைவரையும் துன்ப கடலில் மூழ்கடித்து நரகத்திற்கு அனுப்புவதற்க்காவோ என்னவோ!

Blog என்பது பொது ஜனத்துக்கு பரிட்சயம் ஆகாத ஒரு தனி உலகம். அவனுக்கு .com, .in என முடியும் எல்லாமே வெப் சைட் தான். பிளாகிற்கும் வெப் சைட்டிற்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவியாகவே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

பதிவு, வலைப்பூ, பின்னூட்டம் என்ற சொற்கள், ஜப்பான் கொரிய மொழிகளில் எதோ ஒன்றாக இருக்கும் என இவர்களால் நம்ப படுகிறது. 0.000000000001 % மக்களுக்கே பிரபல பதிவர்கள் என இங்கு சொல்லி கொள்ளப் படும் நபர்களை தெரியலாம்.

அப்போ, என்னை!!...அதற்கு % கணக்கிட, ஜீரோக்களை உலக வங்கியில் கடன் வாங்க வேண்டியிருக்கும். 

பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களில் நின்று கொண்டிருக்கும் போது, "சார்!, நீங்கள் தான் அந்த பிளாகரா?" என்று முகம் தெரியாத யாராவது  நம்மிடம் கேட்டு மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்து, ஒரு டீயையும் வாங்கி கொடுப்பார்கள் என நினைத்தால், அது கழகங்கள் எல்லாமே மக்களின் முன்னேற்றதிற்க்காகவே இருக்கின்றன என்று திடமாக நம்புவதற்கு நிகரானது.

98% மக்கள் பிளாக் பற்றி தெரியாமல் நிம்மதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நானும் பிளாக் தொடங்கி புது மாப்பிளையாய் வலம் வந்து கொண்டிருந்த போது பார்க்கும் நண்பர்கள், பிகர்களிடம் எல்லாம் "நான் ஒரு பிளாக் எழுதிகிட்டு இருக்கேன். டைம் இருந்தா படிச்சு பாருங்க" என்று சொல்லி URL கொடுத்து மார்க்கெட்டிங் பண்ணும் போதெல்லாம் "பிளாகா? அப்படின்னா?" என்று இரண்டே கேள்விகளில் உலக பிரபலமாக முயற்சிக்கும் நம் நம்பிக்கையை பஞ்சராக்கி விடுவார்கள். நாமலே வேண்டுமானால் கமலை போன்று "உலக" என்ற அடைமொழியை நமக்கென்று ஒரு பட்டம் வைத்து அதற்கு முன்னால் சேர்த்துக் கொள்ளலாம்.

இருந்தாலும் அதிக கமெண்ட்டும் வராமல், விசிட்டும் வராமல் நாமே எழுதி நாமே ரசித்து பரவசம் அடையும் நிலையே பிளாக் உலகின் "ஞான நிலை". லட்ச கணக்கில் பிளாக் எழுதுபவர்களின் எண்ணிக்கை இருந்தாலும், இந்த நிலையை நிறைய பேர் அடைவதில்லை. அதை அடைந்த "ஆயிரத்தில் நான் ஒருவன்".

ப்ளாக்லோகம் என்பது பிளாக்கில் நுழைந்து அதிலேயே லயித்து கிடப்போர்கள் இருக்குமிடம். கமென்ட்டிற்கும், ஹிட்டிற்க்கும் குழாயடி சண்டையை விட மோசமான சண்டைகள் நடை பெறும். இங்கு குப்பைகளை உற்பத்தி செய்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது தான் பிரதான தொழில். அன்றைய காலை தினசரி காலண்டரில் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் என போட்டிருந்தால், அந்த குப்பைகளை கிளரும் போது நல்லது ஏதாவது கிடைக்கலாம். 

இந்த குப்பைகளை காண்ட்ராக்ட் போடாமல் அள்ளும் வேலையைத்தான் திரட்டிகள் எனப்படும் Aggregator சைட்டுகள் செய்கின்றன. ஆனால் இவை ஏதும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து எடுப்பதில்லை. இந்த குப்பைகள் ஏற்படுத்தும் pollution -கள், பிளாஸ்டிக் ஏற்படுத்துவதை விட பல மடங்கு மோசமானது. பிளாஸ்டிக் அந்த வகையில் சாது.

உங்கள் பிளாக் குப்பை என்று உங்களுக்கே தோன்றும் பட்சத்தில் நீங்கள் என்னிடம் சண்டைக்கு வரலாம். என்னுடையதும் குப்பை தான். யாருடைய குப்பை உசத்தி என்று போட்டி வைத்துக் கொள்ளலாம். ஜெயிப்பவருக்கு மகுடம் உண்டு. kuppai-planet என்று உண்மையிலேயே limited access உள்ள ஒரு ப்ளாக் இருக்கிறது. அதில் என்னுடைய பிளாகிற்கு லிங்க் கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். என்னுடையது குப்பை என்பதை இதிலிருந்தே உறுதி செய்து கொள்ளலாம். குப்பை ப்ளாக்கின் ஓனர் அவர்களே, எனக்கும் அந்த பிளாக் படிப்பதற்கு access கொடுங்கப்பா! நானும் அதை படித்து குப்பை சங்கத்தின் உறுப்பினராகிறேன்.

நான் என்னுடைய குப்பைகளை, வலிந்து தூக்கி சென்று எங்கும் கொட்ட விரும்பவில்லை. இது தான் நான் திரட்டிகளில் இணைக்காத காரணம். ஆனால் விரும்பி நீங்கள் share பண்ணி மற்றவர்களை இம்சித்தால், நான் பொறுப்பாக மாட்டேன். நான் மெயில் அனுப்பி நீக்க சொல்லியும், அதை கண்டு கொள்ளாத திரட்டிகளை பற்றி என்னால் கவலை பட முடியாது.

"சிறப்பாக குப்பை கொட்டுவது இப்படி" என்று வார இறுதிகளில் வகுப்பு எடுக்கலாம் என இருக்கிறேன். கற்று கொள்ள விரும்பும் கத்துக்குட்டிகள் பெருங்குடி குப்பை மேட்டில் சனிக்கிழமை சாயுங்காலம் 6 மணி அளவில் கூடுங்கள். இதை நான் ஒரு சமூக சேவையாக மட்டுமே செய்கிறேன். கட்டணம் இல்லை. இடையில் சமோசாவும் டீயும் வழங்கப் படும். இரவு கேம்ப் பயர் நிகழ்ச்சியும் உண்டு. தமிழ் செய்தி சேனல்கள் இதை கவர் செய்ய போவதாய் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு முக்கிய வேண்டுகோள். கிளாஸ் முடித்து போகும் போது யாரும், அங்கிருக்கும் குப்பையை அள்ளி செல்ல கூடாது. முடிந்தால் வீட்டிற்கு சென்று உங்களின் தனி திறமையில் கிரியேடிவாக, வித்தியாச வித்தியாசமான Versatile குப்பைகளை படைக்கலாம். குப்பைகளின் தரம் மெருகேற, நெடுநாட்கள் Draft -இல் வைத்திருந்து ஒயின் போல பதப்படுத்தி பின் வெளியிட்டால் அதை நுகர்வோருக்கு இன்ப மயக்கம் தான். இதில் நன்கு கற்று தேர்ந்த பின், மெரீனா பீச்சில் போய் நீங்கள் அந்த குப்பையை கொட்டலாம். அது நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு பயனுள்ளதாய் இருக்கும். அவர்கள் தான் நாம் போடும் குப்பைகளை அவ்வப்போது பொறுக்குகிறார்கள்.

நீங்கள் சிறப்பாக குப்பை போடும் பட்சத்தில் தமிழ் சினிமா வாய்ப்புகளும் உங்கள் கதவை தட்டும். மற்ற ஊடக துறையிலும் நுழையலாம். உங்கள் பிளாகின் URL-யை டைப் செய்து Enter பட்டனை தட்டியவுடனே, சிட்டி குப்பை லாரி அருகில் வந்தது போல் நறுமணம் வரவேண்டும். அப்போது தான் உங்களுக்கு Versatile blogger அவார்ட் கொடுப்போம். அதை உங்கள் பிளாக்கின் சைடில் எச்சையை தொட்டு ஒட்டி கொள்ளலாம்.

Blogger தான், மிக மோசமாக உபயோகிக்க படும் கூகுளின் ஒரு சிறந்த இலவச Product.


Dec 20, 2011

Nonsense Talking 1

நீங்கள் இந்தியாவின் இன்றைய இளைய தலைமுறையினரா?

இந்த நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் என்ன செய்யலாம்?

  • அப்துல் கலாம் சொன்னது போல் கனவு கண்டு புதிதாக ஏதாவது கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்கி நாட்டிற்கு பெருமை சேர்க்கலாம்.
  • ஏழை, அநாதை மக்களுக்கு உதவி செய்து அவர்கள் வாழ்வை வளம்பெற செய்யலாம்.
  • ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்க்காக உயிரை கொடுக்காலாம்.  




இப்படி எல்லாம் மிகவும் கஷ்டப் பட்டு யோசித்து காமெடி பண்ணாதிர்கள்.

உங்களால் மிக எளிதாய் செய்ய முடிகிற, நாட்டிற்கு பயன்படக் கூடிய காரியம் என்னவென்றால், நீங்கள் திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ளாமல் இருப்பதே!

எதுவும் தெரியாத, சரியாக பேசி கூட பழகாத குழந்தையிடம் போய்
"உனக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சி பாப்பா வேணுமா?" என்று கேட்பார்கள்.

பாவம் அந்த குழந்தை.

எந்த ஒரு குழந்தையும் தனக்கு தம்பி பாப்பாவோ, தங்கச்சி பாப்பாவோ வேண்டுமென்று கேட்பதில்லை. அதற்கு தேவை விளையாட தேவையான பொம்மைகள் மட்டுமே.

Pollution, Corruption போன்ற நாட்டை பாதிக்கும் எந்த ஒரு பிரச்சினைக்கும் மக்கள் தொகை மட்டுமே மூலக் காரணம். அதை கட்டுபடுத்தாமல் "Save Plastic Bags", "Save Water" "Save Petrol" "Save Paper Save Tree" என்பது போன்ற வெட்டி campaign கள் உண்மையில் உருப்படியானது அல்ல.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல ஆயிரம் பேர் சேர்ந்து சேமிக்கும் பிளாஸ்டிக், தண்ணீர், பெட்ரோல் போன்றவற்றை பயன்படுத்துகிறான்.
 

பிச்சைக்காரர்களுக்கு இரண்டு ரூபாய்க்கு குறைவாக பிச்சை போட கூச்சப்படும் நாம், ஒரு ரூபாய் போட்டு பிளாஸ்டிக் பையை கூச்சப் படாமல் வாங்குவோம். இருக்கும் மரங்களை வெட்டி ஐ.டி. பார்க் போன்ற பெரிய கட்டிடங்களை கட்டிவிட்டு ஆபிசில் Go Green Day நிகழ்ச்சி நடத்துவோம்.

ஜனத்தொகையை கட்டுபடுத்த ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள் எதுவும் செய்ய மாட்டார்கள். நாம் கட்டுகடாங்கா எண்ணிக்கையில் இருக்கும் வரையில் தான் அவர்களுக்கு நல்லது. அரசின் "நாமிருவர் நமக்கொருவர்" எனும் விழிப்புணர்வு பலகைகளை கூட எங்கேயும் பார்க்க முடிவதில்லை.

சிலர் ஆண் குழந்தைகளுக்காக முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் என்ன மன்னர் குடும்பமா? உங்கள் வம்சம் தொடர்ந்து வர வேண்டும் என்பதற்கு.

மனிதர்கள் Waste bags போன்றவர்கள். அவர்களால் எதுவும் இந்த உலகிற்கு பிரயோஜனம் இல்லை. மனித விலங்கு மட்டும் இல்லாமல் இருந்தால் இந்த உலகம் நன்றாக இருக்கும். இயற்கை பேரழிவுகள் அவ்வப்போது  நிகழ்வது எப்போதும் நன்மையே. இந்த 2012 மாயன் காலண்டர் படி உலகம் அழிந்தால் நன்றாக இருக்கும். 

Save Waste bags.



நான் ஏன் ப்ளாக் எழுதி கொண்டிருக்கிறேன்? எழுதுவது சிலசமயம் அசிங்கமாய் தோன்றுகிறது. ஐ.டி துறையில் வேலை செய்யும் எல்லோரும் வெளிநாடு சென்று அதிகம் பணம் சம்பாதிக்கும் போது நான் வெட்டியாய் இங்கே பொழுதை கழிக்கிறேன்.

எனக்கு இலக்கியம், இலக்கியவாதிகள், இலக்கிய கூட்டங்கள் என்றாலே மிக அலர்ஜி. அதிகம் எழுதி எழுதி நானும் எழுத்தாளர் ஆகி விடுவேனோ என்று பயம்.

எழுத்தாளர்களின் வாழ்க்கை அவ்வளவு நார்மல் ஆக இருக்காது. ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு தனி வட்டத்தில் வாழ்வார்கள். கிட்டதட்ட நம்முடைய பிளாகர்களை போலத்தான். எனக்கு எழுத்தாளர்களின் பெயர்கள் தெரியும். யாரையும் அதிகம் படித்ததில்லை. படிப்பதிலும் விருப்பம் இல்லை. எழுத்தாளன் ஆக வேண்டும் என்றால் அதிகம் படிக்க வேண்டும் அல்லது அதிகம் ஊர் சுற்ற வேண்டும்.

எவன் ஒருவன் தன்னுடைய எழுத்துக்கு புகழ் தேடாதவனாக, தன் எழுத்தின் மேல் கர்வம்/விருப்பம் கொள்ளாதவனாக இருக்கிறானோ அவனுக்கு தான் நன்றாய் எழுத வரும் என்று எங்கேயோ படித்தது. நம்மால் அதுபோல இருப்பது கஷ்டம்.

இணையத்தில் நன்றாய் எழுதுபவர்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாய் இருக்கிறது. அதிகம் அறியப்படாமல் அருமையாய் எழுதிகொண்டிருக்கும் பிளாகர்களை எனக்கு யாராவது அறிமுகம் செய்யுங்கள் ப்ளீஸ்.

நான் தமிழ் Aggregator சைட்டுகளில் இனி எனது பதிவுகளை இணைக்கப் போவதில்லை. சினிமா பதிவுகள் விதிவிலக்கு ஆகலாம். தனியாய் எழுதும் போது எந்த கட்டுப்பாடும் இல்லாமல், எதைப் பற்றியும் கவலை இல்லாமல் சுதந்திரமாய் எழுதலாம். என் எழுத்து இனி எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நான் எழுதுவது உங்களுக்கு பிடித்திருந்தால் படியுங்கள். நான் பிரபலமாக விரும்பவில்லை. இப்படி எழுதுவதால் நான் உருப்படி இல்லாமல் தான் போய்க் கொண்டிருக்கிறேன்.
 


நீங்கள் புத்திசாலிதனமாய் யோசிப்பவர் என்று உலகுக்கு காட்ட வேண்டுமா?

சிறந்த ஒரு வழி.

ஊழலுக்கு எதிராய் போராடும் அன்னாஹசாரேவைப் பற்றியோ அல்லது  கூடங்குளம் பிரச்சினையில் தன் நீண்ட மூக்கை நுழைத்த அப்துல்கலாமை பற்றியோ அவர்கள் சாகும் வரை திட்டி எழுதிக் கொண்டே இருங்கள். ஆனால் இருவருக்கும் அதிகம் வயசாகி விட்டது. அதனால் சீக்கிரம் உங்கள் பிரதிக்கு(பதிவுக்கு) முந்துங்கள்.

மாதிரி தலைப்புக்கள்.

முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரே!
படித்த முட்டாள் அப்துல்கலாம்!

ஆனா பாருங்கள் இந்த ரெண்டு பேருமே, குழந்தை குட்டின்னு ஏதும் வைத்துக் கொள்ளாமல், இந்த நாட்டு மக்களை ஏமாற்றி தங்களை இந்த உலகை காக்க வந்த கடவுள்களாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். என்ன ஒரு அந்நியாயம்?

பிகர் பின்னாடி சுற்றி, சைட் அடித்து, (கல்யாணம் பண்ணி) ஜாலியாய் மேட்டர் செய்து, குடும்பமாய் வாழும் நம்மை அவர்கள் இருவரும் அவ்வளவு எளிதாய் ஏமாற்ற முடியுமா என்ன? Bloody Bachelors.

குற்றம் சொல்வதற்கென்றே சிலர் வாழ்கிறார்கள். நக்கீரர்களாம். பிடரி கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சொல்லுபவர்கள்.