Jul 16, 2013

Nonsense Talking - இந்தியா ரேப்புகிறது


"எழுதி தான் பிழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாத வரை, என் எழுத்து எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்" - Katz


 
சை அங்கிங்கெனாதபடி எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கிறது. அது சாதாரண போஸ்டரிலும் கூட இருக்கிறது. 

தட்டி எழுப்ப வேண்டியது நாம் தான்.


அப்போது இரவு 11 மணி ஆக, 11 நிமிடம் இருந்திருக்கலாம். சென்னைக்கு சென்று கொண்டிருந்த SRM ஸ்லீப்பர் பேருந்தில் சுக உறக்கத்தில் இருந்த எனக்கு நம்பர் ஒன் பிரச்சினை தலை தூக்க, சட்டென விழிப்பு வந்தது.

பஸ் எங்கேயாவது நிற்குமா? என ஜன்னல் திரையை விலக்கி பார்த்துக் கொண்டே வந்தேன். டிரைவரிடம் நிறுத்த சொன்னால், அதிகம் ரூல்ஸ் பேசுவான் என பயம். அதை விட்டால், வழக்கமான ஓட்டலில் தான் நிறுத்துவார்கள். அங்கே கட்டண கழிப்பறையில் இரண்டு ரூபாய் கொடுத்து, ஒரு கையில் மூக்கை பிடித்துக் கொண்டு, மற்றொரு கையில்..........பிடித்து  மற்றவர்கள் பக்கத்தில் நின்று அடிக்க சங்கோஜமாய் இருக்கும். திறந்த வெளியில் விடவும் முடியாது. அவ்வாறு விட முயற்சிப்பவர்களை, பெரிய கம்பை வைத்து மிரட்டுவதற்கென்றே, சால்வை போர்த்திக் கொண்டு 'செந்தூர பூவே' விஜயகாந்த் கெட்டபில், ஒரு ஆள் இருப்பான். அது பலனளிக்காத பட்சத்தில் வரிசையாய் கெட்ட வார்த்தை கவிதைகள் வாசிப்பான். அதற்கும் சிலர் அசைந்து கொடுக்காமல், கருமமே கண்ணாய் அடிப்பார்கள்.

ஆனால் ஹோட்டல் வரை என்னால் அடக்க முடியாது என்று என்  அடி மனது சொன்னது. தொலைதூர மற்றும் மலை பகுதிகளில் பயணிக்கும் பேருந்துகளில் ஒரு சின்ன பிளாஸ்டிக் பேக் கொடுப்பார்கள். வாந்தி வந்தால் அதில் எடுத்து விட்டு, ஜன்னல் வழியே டூ வீலர்களில் வருபவர்களின் மீது தூக்கி எறிந்து விடலாம். இங்கு அதற்கும் வழி இல்லை. என்ன செய்வது? என்று அவஸ்தையில் யோசித்து கொண்டிருக்கும் போதே, ஒரு பிரதான சாலையில் பஸ் நின்றது. அவசரமாய் எழுந்து சென்று பேருந்தின் உள் கதவை திறந்தேன். அப்போது கண்டக்டர்,

"என்னப்பா?"...

"அண்ணா, ஒன் பாத்ரூம் போகணும்"...

"இங்கே விடமுடியாதுப்பா"...(இங்க இல்லண்ணா , கீழே இறங்கி போய் விடறேன்)

அப்போது டிரைவர் கண்டக்டரிடம் குறுக்கிட்டு, "லேடிஸா?, ஜென்ஸா?"...

"ஜென்ஸ்"...(இது கண்டக்டர்)


"எறக்கி விடு, போயிட்டு வரட்டும்"... 

"கடவுள் சார்... நீங்க!" என டிரைவரை மனசுக்குள் வாழ்த்தி விட்டு, சந்தோசமாய் இறங்கி சென்றேன்.  


ஜன நடமாட்டம் அதிகம் இல்லை. நாளெல்லாம் பிச்சை எடுத்த அசதியில், பிச்சைக்காரர்கள் கடைகளுக்கு முன் போர்வை விரித்து படுக்க தயாராகி கொண்டிருந்தனர்.

பத்தடி தூரம் நடந்து சென்றேன். மறைவான இடம் கிடைக்கவில்லை. கொஞ்சம் தள்ளி ஓரமாய் என் மானசீக கட்சி தலைவரின் போஸ்டர் சாய்த்து வைக்கப் பட்டிருந்தது. அருகில் சக தொண்டர்கள் யாரும் இருந்து விடக் கூடாது என்று மனதில் வேண்டிய பின், "மடை திறந்து தாவும் நதியலை நான்" என்று சந்தோசமாய் ஹம்மிங் செய்த படியே மெதுவாய் ஆரம்பித்து,  உச்சஸ்தாயி வரை ராகம் இழுத்து இசையுடன் கைகோர்த்து சென்று முடித்தேன். முடித்தவுடன் சிறுத்த நிம்மதி ஏற்பட்டது.

உன்னை வாழ்த்த வயதில்லை தலைவா! வணங்குகிறேன்.

கடவுள் கொடுத்த வசதி என, இப்படி  எங்கு வேண்டுமானாலும் கூச்சமின்றி ஜிப்பை சர்ரென்று இழுத்து, சகஜமாய் போகும் அளவுக்கு சுதந்திரத்தை வகுத்து கொண்ட ஆண்கள், பெண்களுக்கு வழங்கியிருக்கும்  சுதந்திரம், இடை, தொடை, மற்றும் இன்னும் பிற தெரியாமல் கவர் செய்து நடை செய்ய வேண்டும். இன்னும் சில பெண்களுக்கு, வெளியே எட்டி பார்க்க அவர்கள் கண்கள் மட்டுமே விசா வாங்கியுள்ளது.


'முகமூடி' என்ற தமிழ் சினிமாவில், அவ்வாறு பொது வெளியில் உச்சா போகும் ஹீரோவின் லுல்லாவை பார்த்த ஹீரோயினுக்கு உடனே காதல் பற்றி கொள்கிறதாம்.

What a Love!!!... ஆச்சர்யத்தில் ஆழ்த்த வைக்கும் முன்னோக்கிய--> சிந்தனை!!

இங்கு எனக்கு காரணமே இல்லாமல், சந்தானம் ஒரு படத்தில் சொல்லும் வசனம் நியாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. 

"ஏன்டா லூஸ்மோஷன் மாதிரி பின்னாடி போகணும்ன்னு நினைகிறீங்க?. யூரின் மாதிரி  முன்னாடி போகணும்ன்னு நினைங்கடா!"


தொண்ணூறுகளின் சினிமாக்களில் நிறைய ரேப் சீன்கள் இருந்தது. கல்லூரிக்கோ, கடைக்கோ சென்று திரும்பி கொண்டிருக்கும் ஹீரோவின் தங்கச்சியை, வில்லன் ஒரு ஆம்னி வேனுக்குள் தூக்கி சென்று கதற கதற கற்பழிப்பான். சிறு வயதில் அதை கொஞ்சம் பரிதாபத்தோடும், அதிக பரிதவிப்புடனும் பார்த்த நியாபகம். அதற்கு அந்த நடிகைகளின் தத்ரூபமான நடிப்பும் ஒரு காரணம். இப்போது நம் இயல்பு வாழ்க்கையில் ரேப் அதிகமாய் நடந்து கொண்டிருக்கிறது. வானிலை அறிக்கை போல, தினமும் தவறாமல் ரேப் நியுஸ் இடம் பெறுகிறது.

Women raped in moving bus இல் ஆரம்பித்து moving car, moving auto என இந்திய வரலாற்றில், மூவ் ஆகி கொண்டிருக்கும் சகல வாகனங்களிலும் ரேப் அரங்கேறியிருக்கிறது. வழக்கமாய் பரபரப்பான நிகழ்வை மையமாய் வைத்து படமெடுத்து காசு பார்க்கும்,  ராம் கோபால் வர்மா இன்னும் ஏன் டெல்லி ரேப்பை படம் எடுக்கவில்லை? ஒருவேளை அவர் அதற்கு திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கலாம்.

நம் சமூகத்தில் ஆண்களுக்கான உணர்சிகள் மட்டுமே வெளிப்படையாக அங்கீகரிக்கப் படுகிறது. பதின்ம வயது எட்டியவர்கள், செக்ஸை பற்றி அறிந்து கொள்ளவும் தங்கள் உணர்ச்சியை தனித்துக் கொள்ள கொஞ்சமாயேனும் உதவியாய் இருந்த, செக்ஸ் புத்தகங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. ஆண்களுக்கு மட்டுமே சொந்தமாயிருந்த பிட்டு படங்களும், தியேட்டர்களும் கலாச்சார மாற்றத்தில் காணாமல் போய் விட்டன. இப்போது இருக்கும் ஒன்றிரண்டு மோசமான டென்ட்டு கொட்டகைகளில் வரும் படங்களும், கதையம்சம் மட்டுமே உள்ள படங்களாக இருக்கின்றன. மருந்துக்கு கூட பிட்டு இருப்பதில்லை என்பது பெரும் சோகம்.

செக்ஸ் புத்தகங்களும், பலான படங்களும் பரிணாம வளர்ச்சி அடைந்து, செல்போன்களிலும், கம்ப்யூட்டர்களிலும் தங்களை புதுப்பித்து கொண்டு விட்டன. கம்ப்யூட்டரை கொஞ்சம் நோண்ட தெரிந்த பையனுக்கு, பத்து ரூபாயுடன் பிரவ்சிங் செண்டர் சென்றால் போதும். எல்லாமே கிடைக்கிறது. ரியல் லைப் வீடியோவிலிருந்து வகை வகையாக பார்க்கலாம். ஒண்ணுமே தெரியாத படிப்ஸ் பையனையும், வெப்சைட்டின் சைடில் வரும் விளம்பரமே கையை பிடித்து கூட்டி சென்று விடும்.

கம்ப்யூட்டர், செல்போன் போன்ற இத்யாதிகள் இல்லாத காலத்தில் பலான புத்தகம் படிக்காமல், அட்லீஸ்ட் பொம்மையாவது பார்க்காமல் நம் அடல்ட் ஏஜ்ஜை கடந்து வந்திருக்க மாட்டோம். ஆனால் இப்போது இருக்கும் பையன்களிடம் எதையும் பார்க்காதே என்று சொன்னால், நியாயமாரே! 

செல்போன்களில் நியுட் வீடியோக்கள் வைத்திருக்கும் பையன்களை, இன்ஸ்பெக்டர் ரோட்டில் தோப்பு கரணம் போட வைக்கும் சினிமா (வழக்கு எண்) காட்சியை பார்த்து கை கொட்டி சிரிக்கிறோம். இது, ஒரு சின்ன பையனின் டிரவுசரை கழட்டி விட்டு அதை பார்த்து 'ஹேய், அம்மணம்' என்று சொல்லி சிரிப்பதற்கு நிகரான காமெடி. 

எத்தனை firewall வைத்தாலும் இப்போது இருக்கும் பையன்களுக்கும் பெண்களுக்கும் கடிவாளம் போட முடியாது. எட்டாவது படிக்கும் பையனுக்கு கையில் ஸ்மார்ட் போனையும் கொடுத்து, டூ வீலரையும் கொடுத்து 'சும்மா இருடா தங்கம்' என்றால் சும்மா இருப்பானா? இது எதுவுமே பயன்படுத்த முடியாத / தெரியாதவர்களின் பிரச்சினை பற்றி மட்டும் யாரும் கண்டு கொள்வதில்லை. ஒரு சாராருக்கு எல்லாம் கிடைக்கும் போது, எதுவுமே கிடைக்காதவன், மூவ் ஆகி கொண்டிருக்கும் வண்டி நிற்கும் வரை எதையும் செய்யலாம் என்று துணிகிறான்.

என்னதான் நமக்குள் Upper, Middle, Low கிளாஸ் என வித்தியாசம் இருந்தாலும், ஆட்டோ டிரைவர், கால் சென்டர் Cab ஓட்டும் ட்ரைவர் என இயல்பு வாழ்க்கையில் லோ கிளாசை சந்திக்காமல், மிடில், அப்பர் கிளாசால் தப்பிக்கவே முடியாது. ஒரு அப்பர் கிளாசுக்கு, இன்னொரு அப்பர் கிளாஸ் கார் ஒட்டவும் முடியாது.

இயல்பாய் நடக்க வேண்டிய விஷயங்கள் மறுக்கப்படும் போது தான், தவறான விஷயங்கள் நடக்கின்றன. வாட்டர் பைப் உடைந்து விட்டால், வால்வை நிறுத்தாமல் துணியை வைத்து அடைக்கும் வேலையை தான் எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். எது தடுத்தாலும் அதன் விளைவுகளோடு சமூகம் தன்னை தானே தகவமைத்துக் கொண்டே இருக்கும்.

Trivia: இப்போது இலவசமாய் வழங்கப் பட்டிருக்கும் அம்மா மடிக்கணினி, படிப்பில் திக்கு தெரியாமல் திண்டாடும் மாணவர்களுக்கு கல்வியில் கலங்கரை விளக்காய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.


                                                                                                          நான்சென்ஸ் தொடரும்...


No comments: