Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Nov 7, 2012

I Blog for World Peace - ஆபாயில்




னி தமிழ் படமே பார்க்க கூடாது என்று கடைபிடித்து வந்த Week end விரதத்தை பீட்சாவுக்காக சற்று தளர்த்தி விட்டு பார்த்தேன். இயக்குனரின் முதல் முயற்சியை பாராட்டலாம். சினிமா கலை இவருக்கு நன்கு கைவசப் படுகிறது. 

பேயோட்டுவதற்க்காக மலையாளத்தில் இருந்து வரவழைக்கப் பட்ட மந்திரவாதி நடிகை ரம்யா நம்பூதரி படத்தின் ஆரம்பத்தில் திகிலாய் பேசி ஹீரோவையும் நம்மையும் பயமுறுத்துகிறார். பீட்சாவை அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டு வளர்ந்ததை போல கொழுத்து  காணபடுகிறார் நம்பீசன்.

இதற்கு முன் தாண்டவம், மாற்றான் என யுனிவர்சல் வெற்றி படங்களை பார்த்து தூக்கமின்மை, மன உளைச்சல், மன பிராந்தி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படும் ரசிகர்களின் உபத்திரம் தீர சரியான மருந்து "பீட்சா".






னந்த விகடனின் வலையோசை பகுதியில் எனது பிளாக்கை ஒளிபரப்ப சொல்லி, சாரி அறிமுகப் படுத்த வேண்டி எனது வலைப்பூ, ஊர், பெயர் தகவல்களை அனுப்பிவிட்டு சோறு தண்ணி இல்லாமல் உண்ணாவிரதம் இருந்து பயங்கர எதிர்பார்ப்போடு காத்திருந்தேன்.

நான் சிறுவயதில் ஆனந்த விகடனை படித்துதான் தமிழ் கற்று கொண்டேன். படிக்கும் போது பசிக்க ஆரம்பித்தால், ஆனந்த விகடனின் பக்கங்களை கிழித்து தான் சாப்பிடுவேன். எனது நண்பர்கள் எல்லாம் செக்ஸ் புத்தகத்தை பாட புத்தகத்தில் வைத்து படித்துக் கொண்டிருக்கும் போது நான் ஆ.வி-யை உள்ளே வைத்து படித்து  இன்பமுருவேன்.

என் படுக்கையில் கூட எப்போதும் நான்கைந்து ஆ.வி புத்தகங்கள் இருக்கும். அதை கட்டியணைத்தே உறங்குவேன். மனைவியை கூட அருகில் வைத்துக் கொண்டதில்லை. ஆ.வி-யுடனான என்னுடைய பந்தத்தை பற்றி "நானும் விகடனும்" என்ற தலைப்பில் பதிவெல்லாம் எழுதி Draft-இல் வைத்திருக்கிறேன். நான் பிரபலமானவுடன் Publish செய்யலாம் என்றிருக்கிறேன்.

இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் என்னிடம், "உங்களது மட்டமான blog-யை எங்களால் அறிமுகப் படுத்த முடியாது" என திட்டவட்டமாய் கூறி மெயில் அனுப்பிவிட்டார்கள்.

வாழ்க்கைக்கு பயன்படும் நடிகைகளின் கருத்தாழமிக்க  பேட்டிகள், படிப்பவருக்கு புரியாத கவிதைகள், paid விளம்பரங்கள் போன்ற தரமான படைப்புகளை மட்டுமே தாங்கள் பிரசுரிப்பார்களாம்.


வெகு நாள் கழித்து எனது போஸ்டை படிக்கும் உங்களுக்கு தீபாவளிக்கு பம்பர் பரிசு அடித்த மகிழ்ச்சி உண்டாகியிருக்கலாம். செத்தது சனியன் என நிம்மதியாய் இருந்தவர்கள், தற்கொலைக்கு கூட முயற்சி செய்திருக்கலாம்.

ஒரு மாதம் எழுதாமல் விட்டால் உலகம் எப்படியிருக்கிறது என்று பார்க்க விரும்பினேன். Neelam, Sandy ஆகிய புயல் மற்றும் சூறாவளிகளின் சீற்றத்தால் உலகம் அவதி பட்டுவிட்டது. இனி உலகம் அமைதியாய் இயங்க வேண்டியேனும், நான் தொடர்ந்து எழுத வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டுள்ளேன். இந்த வருடம் உலக அமைதிக்கான நோபல் பரிசை ஐரோப்பிய யூனியனுக்கு கொடுத்து விட்டார்கள். அடுத்த வருடமாவது எனக்கு கொடுப்பார்களா?...

Lets Write and See...

ஒரு மாதம் எங்கே சென்றீர்கள் என்று யாரும் என்னை கேட்க வில்லையென்றால் கூட தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது.

ஒபாமா ISD போட்டு கேட்டு கொண்டதால், அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய அமெரிக்கா சென்றிருந்தேன். தினம் சோறு போடும் அமெரிக்க தேசத்திற்காக, என்னாலான ஒரு சிறு உதவி. தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியாவிற்கு அவுட் சோர்சிங் அதிகமாய் பண்ணுவதாய் வாக்குறுதி அளித்தார் என்பதும் ஒரு காரணம்.

உண்மையில் நான் எழுதாமல் இருந்ததிற்கு வேலை பளு தான் காரணம். என்னுடைய வேலை, 50 Kg, 100 Kg எடையுள்ள கம்ப்யுட்டர்களையும், மெகா சைஸ் சர்வர்களையும் ஒரு இடத்தில இருந்து, இன்னொரு இடத்தில் கொண்டு போய் வைப்பது தான். இந்த வேலையை நான் திறம்பட செய்யும் பட்சத்தில், எடையை இறக்கி வைத்த இடத்திற்கே வந்து, Spot Excellency Award எல்லாம் கொடுப்பார்கள். இதனால் நான் எனது புஜங்களை வலுவாய் வைத்துக் கொள்ள தினமும் ஜிம்மிற்கு போய், அதிக எடைகளை போட்டு Chest, Wings, Squat, Bench Press, Wrist, Abs என வரிசையாய் எல்லா எக்ஸ்சைஸ்களையும் செய்ய வேண்டியதாய் உள்ளது. இப்போதே வயிற்றில் மூன்று pack கிரியேட் ஆகிவிட்டது. நான்காவது லேசாய் உப்பி கொண்டு தெரிகிறது. அடுத்த மாதம் டெலிவரி ஆகிவிடும். அதிக பளுவை தூக்கியதால் கை தசைகள் சுளுக்கி, அதனால் ஏற்பட்ட வலியால் கீ போர்டில் டைப் செய்ய முடியவில்லை.

இதையும் நீங்கள் நம்பவில்லையெனில்,

மறுபடியும் உண்மையை சொல்கிறேன் My lord.

போன மாதம் சப்போர்ட் ப்ராஜெக்டில் இருந்து Development project-ற்கு மாற்றி விட்டார்கள். இது எனது வளர்ச்சியை பிடிக்காத பிரபல பதிவர்களின் திட்டமிட்ட சதியாய் இருக்கலாம். தற்போது Code அடிப்பதற்கே நேரம் பற்றாமல் இருப்பதால், பிளாக் எழுதுவது என்பது Mission Impossible ஆகி விட்டது. யாராவது டாலர் கணக்கில் காசு கொடுத்தால் மட்டுமே, பிளாக் எழுத உத்தேசம்.



அதனால் தினந்தினம்  பிளாகிற்கு வந்து ஏமாந்து போகாதிர்கள். நான் மறுபடியும் எழுத ஆரம்பித்தால், கண்டிப்பாக ஹிந்து ஆங்கில நாளிதழின் Front Page-இல் முழு பக்க விளம்பரம் கொடுப்பேன். அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பிரிவு எனக்கே வருத்தமாய் தான் இருக்கிறது. என்னை விட அதிகமாய் வருத்தப் படும் உங்களுக்கு, நான் எப்படி ஆறுதல் சொல்வது?

"ட்விட்டரில் ஆவது எழுதுவீர்களா?" என இந்த இக்கட்டான தருணத்தில் கேட்டால்,

இப்பதான் ரெண்டு பேரு ஜாமின்ல வெளி வந்திருக்காங்க.

ஏன் அவசரம்??

ஆனால் இந்த கைது பிரச்சனையின் பின்னணியில் இருப்பது அமெரிக்கா தான் என விக்கி லீக்சின் ஓனர், ஜூலியன் அசாஞ்சே அவர்கள் BBC-க்கு அளித்த பேட்டியில் கருத்து கூறியுள்ளார்.

நம்மை காப்பாற்ற கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்.

அல்லேலுயா!!


Jun 17, 2011

God must not be Crazy (என் ட்ரெக்கிங் அனுபவம்)

ஜூன் மாதத்தில் இமயமலை பிரதேசத்தின் குழு மணாலியின் கிழக்கே அமைந்துள்ள கசோல்(Kasol) என்ற பகுதியில் பத்து நாள்  ட்ரெக்கிங் போயிருந்தேன். என் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வாக அது அமைந்தது ஆச்சர்யமே. அது போல ஒரு அனுபவத்தை பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. 

அங்கு இருந்த பத்து நாட்களில் பேஸ் கேம்ப்பை தவிர, மற்ற இடங்களில் செல்போன் நெட்வொர்க் அதிகம் கிடைக்கததால் எல்லா நாட்களும் மகிழ்ச்சியாக கழிக்க முடிந்தது. ஒரு சில நெட்வொர்க்குகள் மட்டுமே அங்கங்கு கிடைத்தது. அந்த நாட்களில் தமிழ் நாட்டை பற்றிய எந்த ஒரு செய்தியும் தெரியவில்லை.

ரஜினி இன்னும் உயிரோடு இருக்காரா?
கனிமொழியின் கதி என்ன ஆச்சு? ஜாமீன் கிடைத்ததா?
சினிமாகாரங்க யாருக்காவது பாராட்டு விழா எடுத்தாங்களா?
தமிழ் தாத்தா கருணா லூசுத்தனமாய் ஏதாவது அறிக்கை விட்டாரா?
ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு சொர்க்கபுரியா ஆகிடுச்சா?

இப்படி எதை பற்றியும் தெரியாமலே சுற்றி கொண்டிருந்தேன்.

என் முதல் விமானப் பயணமும் அதில் தான் அமைந்தது. ஜன்னல் ஓர இருக்கை வேறு. ஏர் இந்தியா பனி பெண்கள் பனியை போன்றே வெள்ளை வெள்ளையாய் அவ்வளவு அழகாய், கண்களுக்கு காண குளிர்ச்சியாய் இருக்கிறார்கள். இந்திய காலாச்சார உடையான சேலைதான் அவர்கள் டிரஸ் கோடு. ஜன்னலுக்கு வெளியே வெள்ளை மேகங்கள். உள்ளே வெள்ளை இடுப்பு. எனக்கு எதை பார்ப்பது என்ற மிக பெரிய தடுமாற்றம் ஏற்பட்டது. இதற்கு மேல் நான் விவரித்தால் நன்றாக இருக்காது.

http://www.yhaindia.org/ என்ற அமைப்பின் மூலமாகத்தான் இந்த ட்ரெக்கிங்கிற்கு சென்றோம் நானும் என் நண்பன் தமிழ் அரசனும். அரைகுறையாய் சில ஹிந்தி வார்த்தைகள் மட்டும் தெரிந்து கொண்டு சலோ(Chalo) என்று கிளம்பிவிட்டோம். ஆட்டோகாரன் முதல், எங்களிடம் பேசும் எவரிடமும் "ஹிந்தி நஹி மாலும்" என்று சொல்லிவிட்டு தான் அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்கே தயாராவோம். நாங்கள் டெல்லியில் ஹிந்தி தெரியாமல் கஷ்டப் படுவதற்கு காரணமான தமிழக அரசியல்வாதிகளும் அதே தலைநகரில் துன்பம் அனுபவித்து கொண்டிருந்தார்கள் வேறுவகையில்.




 காலையில் டெல்லியில் தரை இறங்கியவுடன், குதுப்மினாருக்கு சென்று கோபுரத்தை மல்லாக்கப் படுத்து ஒரு போட்டோவும், அடுத்து போய் செங்கோட்டைக்கு முன்னால் கம்பீரமாய் நின்று போஸ் கொடுத்து ஒரு போட்டோவும் எடுத்து கொண்டு அன்றைய சாயுங்காலம் கசோலுக்கு பஸ் பயணம் தயாரானோம். அடுத்தநாள் காலை பேருந்து கசோலை நெருங்க மழை லேசாய் தூறியது. பார்வதி ஆற்றின் கரை ஒட்டியே சாலை பயணம். இயற்கையின் அட்டகாசங்கள் அங்கிருந்தே ஆரம்பமானது. 

முதல் நாள்:
கசோலில் உள்ள YHAI Base Camp -க்கு வந்து சேர்ந்தோம். நான் பசி தாங்கமாட்டேன் என்று தெரிந்து உடனே கூப்பிட்டு நூடுல்ஸ் சாப்பிட கொடுத்தார்கள் கேம்ப் சமையல்காரர்கள். தெய்வங்கள் அவர்கள். முதல் நாள் நம் பெயரை மெடிக்கல் சான்றிதழ் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அடுத்த இரண்டு நாள் பயிற்சிகள். நான்காவது நாள் தான் ட்ரெக்கிங்-க்கு கிளம்ப முடியும்.

நாங்கள் தமிழில் பேசி கொண்டிருக்கும் போது, நீங்கள் தமிழா? என்று கேட்டு  என்று அறிமுகம் ஆனார்கள் இரண்டு தமிழர்கள். வரிஷ்டாவும், மகியும். அப்புறம் மொத்தமாய் பத்து தமிழர்கள் சேர்ந்தோம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுதும் நடைபெறும் SARPASS எனப்படும் இந்த ட்ரெக்கிங் ப்ரோக்ராமுக்கு, ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு குழு வந்திறங்கும். ஒவ்வொரு குழுவிலும் அதிக பட்சமாய் ஐம்பது பேர் இருக்கலாம். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, கல்கத்தா, நாக்பூர் ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்தார்கள். என் இன்னொரு நண்பன் வரமுடியாததால் எங்கள் குழுவில் 49 பேர் மட்டுமே. 



முதல் நாள் பெயர் பதிவு செய்த உடன் உங்களுக்கு ஒரு கூடாரம்(Tent) ஒதுக்கி விடுவார்கள். ஒரு கூடாரத்தில் பத்து முதல் பனிரெண்டு பேர் வரை தங்க வைப்பார்கள். மாடிவீட்டு மகான்களும் வசதி பாராமல் இங்கு தான் தங்க வேண்டும். யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. அதற்கு அப்புறம் ஷாப்பிங், சாப்பிட என்று நாய் மாதிரி எங்கு வேண்டுமானாலும் சுற்றி விட்டு சாயுங்காலம் திரும்பி விட வேண்டும். இந்த பகுதியில் வெளிநாட்டுகாரர்கள் அதிகமாய் சுற்றுகிறார்கள். குறிப்பாய் இஸ்ரேல்காரர்கள் இரண்டு மூன்று மாதங்கள் இருந்து குடித்து கும்மாளம் அடித்து பின்பு நாடு திரும்புகிறார்கள்.

சாயுங்கலாம் டீ நேரம் முடிந்தவுடன்,  இரவு விரித்து, போர்த்தி தூங்க கம்பளி போர்வை இரண்டும், மலை ஏறுவதற்கு உபயோக படுத்த ஒரு BAG ஒன்றும் கொடுப்பார்கள். அந்த கம்பளியின் எடை உங்களுக்கு அடுத்த நாள் காலையில் தான் முழுமையாக தெரியும்.

இரவு டின்னர் முடிந்ததும், கேம்ப் பயர் நிகழ்ச்சி. அன்றைய தினம் SARPASS முடித்த குழு மெம்பர்களுக்கு சான்றிதழ் வழங்குவார்கள். பிறகு கலை நிகழ்ச்சிகள் நடக்கும். பாட தெரிந்தவர்கள் பாடலாம். டான்ஸ், மிமிக்க்ரி என்று எது உங்களுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் செய்யலாம். அங்கே "நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்" என்று சொல்லிக்கொண்டு இரண்டு கேம்ப் லீடர்கள் இருக்கிறார்கள். நிறைய கண்டிசன் சொல்லி பயமுறுத்துவார்கள்.

நோ ஸ்மோகிங். 
நோ டிரிங்கிங். 
அப்புறம் பசங்க டெண்டுக்குள்ள  பொண்ணுங்க ஆரும் போககூடாது. பொண்ணுங்க டெண்டுக்குள்ள பசங்க ஆரும் போக கூடாது

என்று நாட்டாமை விஜயகுமார் மாதிரி மிகவும் கண்டிப்புடன் சொன்னார் ஒருவர். முக்கிய விஷயமான சாப்பாட்டை பற்றி சொல்ல வேண்டும்.

  1. காலை எழுந்தவுடன் காபி வித் பிஸ்கட். 
  2. எட்டு மணிக்கு பிரேக் பாஸ்ட். 
  3. மதியம் ஒரு மணிக்கு லஞ்ச். 
  4. சாயுங்காலம் ஐந்து மணிக்கு டீ வித் பிஸ்கட். 
  5. இரவு 7:30 க்கு டின்னர். 
  6. படுக்க போகும் முன் போன்விட்டா.
 சாப்பாட்டை சேர்த்து மொத்தமாய் பதினோரு நாளைக்கும் சேர்த்து அவர்கள் வாங்கும் கட்டணம் வெறும் மூவாயிரத்து இருநூறு மட்டுமே.

இந்த ட்ரிப் முடித்து வந்ததும் என் நண்பன் என்னிடம் கேட்டான்,

ஏன்டா? பசங்களையும் பொண்ணுங்களையும் அவங்க ஒரே டெண்டல தங்க வைக்கல?

நான்: "அப்புறம் டென்ட் உடைஞ்சு விழுந்துடும் கண்ணா!"

இரண்டாம் நாள்:

"அடடே! இந்த ட்ரிப் ரொம்ப ஜாலியா இருக்கே!" என்று சந்தோஷத்தில் தலையோடு இழுத்து போர்த்தி குப்புறப் படுத்து குறட்டை விட்டு தூங்கி விடாதிர்கள். அடுத்த நாள் காலை காபி குடித்தவுடன் உடற்பயிற்சி செய்யும் இடத்துக்கு ஓட விடுவார்கள். ஷு வைத்திருக்காத காரணத்தால் சிலரை YHAI உள்ளே உள்ள இடத்திலே மூன்று ரவுண்டு ஓட விட்டார்கள். ஓடி போனதிலே குளிர் எல்லாம் போய் வியர்வை வழிய ஆரம்பித்து விடும். கஷ்டப்படட்டு உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் கடைசியில் ஹா! ஹா! ஹா! என்று சத்தம் போட்டு அந்த வலியிலும் சிரிக்க வேறு சொல்வார்கள்.

எல்லாம் முடிந்து காலை சாப்பிட்டவுடன் அன்றைக்கு (பனி) போருக்கு, ஐ மீன் ட்ரெக்கிங் செல்லும் குழுவை வழியனுப்பி வைக்க வேண்டும். அடுத்து உங்களது இரண்டு மொத்த கம்பளி போர்வையை எடுத்து அவர்கள் கொடுத்த Bag இல் அடைத்து மாட்டி கொண்டு அருகில் உள்ள மலை பகுதியில் ஏற வேண்டும். இது உங்கள் எடையுள்ள பையை தூக்கி கொண்டு மலை மீது ஏறி நடக்க பழகும் ஒரு பயிற்சிதான்.





மூன்றாம் நாள்:

அடுத்த நாள் காலை உடற்பயிற்சி, உணவு எல்லாம் முடிந்த பின், பாறை ஏறுதல் பயிற்சி. இது பார்க்க நல்ல காமெடியான நிகழ்ச்சியும் கூட. உங்கள் இடுப்பில் கயிறை கட்டி விடுவார்கள். மறுமுனை பாறையின் மேலே உள்ள மரத்தில் கட்டி வைக்கப்படும். சின்ன சின்ன இடுக்குகளில் காலை வைத்து கஷ்டப்பட்டு ஏற வேண்டும். சில பேர் வெகு நேரம் பாறைகளை கட்டிபிடித்து கொண்டு ஆனந்தத்தில் திளைத்திருப்பார்கள். சிலர் மேலே இருக்கும் மரம் ஒடிந்து விடும் என்ற நல்ல எண்ணத்தில் ஏறாமலும் விட்டு விடுவார்கள்.

நான்காம் நாள்:

அன்றைக்கு நாம் ட்ரெக்கிங் செல்லவதற்கு மற்றவர்கள் கைதட்டி வழியனுப்பி வைப்பார்கள். மதிய உணவு லஞ்ச் பாக்ஸ்சில் போட்டு கொடுத்து விடுவார்கள்.


அன்றைக்கு ஆரம்பித்து ஆறு நாட்கள் ஆறு கேம்பிற்க்கும் மலைமலையாய் ஏறி இறங்க வேண்டும். ஒவ்வொரு கேம்பிற்க்கும் ஏழு கிலோமீட்டர்கள் முதல் பத்து கிலோமீட்டர்கள் வரை ஏறி இறங்கி நடக்க வேண்டும். ஒவ்வொன்றும் புதிது புதிதான அனுபவத்தை தந்தது. ஏழாவது நாள் பேஸ் கேம்பிற்கு வந்து விட வேண்டும்.

போகும் வழியில் எல்லாம் எம்ஜியார், இளையராஜா பாட்டிலிருந்து இன்றைய பாட்டு வரை எல்லா பாடல்களையும் பாடி கிழித்து காட்டாற்றில் ஓட விட்டோம். வெகு தூரம் நடந்து கால் வலிக்கும் போது "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" சரணம் பாடினோம். சாமியே சரணம் ஐயப்பா!

நடு நடுவே நமக்கென்று வாங்கி சாப்பிட கடைகள் போட்டிருப்பார்கள். டீ முதல் நூடுல்ஸ், ஆம்லேட், ஸ்நாக்ஸ் வகைகள் எல்லாம் கிடைக்கும். விலையும் நீங்கள் ஏறி வந்த உயரத்தை போல அதிகமாகவே இருக்கும். உயரம் ஏற ஏற விலையும் நேர் விகித்தில் ஏறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக இங்கே ஐந்து ருபாய் மேகி நூடுல்ஸ் விலை அங்கு 10, 20,30,40,50 வரை சென்றது.

அழகிய இடத்தில் அமைந்திருக்கும் பத்ரி கேம்பிற்கு சென்ற சில நிமிடத்தில் பனி கட்டி மழை பொழிய ஆரம்பித்தது. விவரிக்க முடியாத மகிழ்ச்சி. அப்போதே எனக்கு அனுபவித்து போதும் வீட்டிக்கு செல்லலாம் என்ற மன நிறைவு வந்தது.


ஒவ்வொரு கேம்பிற்க்கும் ஒரு கேம்ப் லீடர் இருப்பார். ஒரு கேம்பை சென்றடைந்ததும், 
சாப்பாடு நேரம் என்ன?, 
குடிக்க தண்ணி எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும்?, 
புழங்குவதற்கு தண்ணி எங்கு பயன்படுத்த வேண்டும்? 
என பின்பற்ற வேண்டிய அனைத்து விதிமுறைகளையும் சொல்லிவிடுவார். 

அவற்றில் முக்கியமானது சாப்பிட்ட பின் செல்ல வேண்டிய இடம். எல்லாம் திறந்தவெளி பல்கலை கழகம் தான். இந்த நிலப்பரப்பு ஆண்களுக்கு, இந்த நிலப்பரப்பு பெண்களுக்கு என்று ஏரியா பிரித்து கொடுத்து விடுவார்கள். டாய்லெட் பேப்பர் நீங்கள் வைத்திருக்க வேண்டியது அவசியம். டாய்லெட் பேப்பர் யூஸ் செய்வதா? இல்லை குளிர் தண்ணி யூஸ் செய்வதா? என்பது உங்கள் விருப்பம். பொதுவாக நீரோடை ஓரமாய் தான் கேம்ப் அமைந்திருக்கும். கை கழுவுவதற்கு குளிர் நீரை தொட்டால் விரல் எரியும். மக்கள் தண்ணியை வாட்டர் பாட்டிலில் பிடித்து கொண்டு அவ்வபோது காட்டுப் பகுதியில் மறைந்து விடுவர். பனிமலையில் அதற்கு போகும் போது ஒரு குழி தோண்டி அதில் காரியத்தை முடித்து மூடிவிட்டு வந்து விட வேண்டும். ஏற்கனவே மூடிய குழிகளை மிதிக்காமல் செல்வது உங்கள் சாமர்த்தியம்.



நகாரு என்ற கேம்ப் தான் மிக உயரமான கேம்ப் (13,800 ft). பனிமலையில் அமைந்துள்ளது. இங்கு பனிக்குள் ஒரு பைப்பை செருகி சூரியன் மறையும் வரை உருகி வழியும் நீரை பிடித்து சேமிக்கிறார்கள். எந்த ஒரு கேம்பிலும் சாப்பாட்டுக்கு குறை ஏதும் வைக்க மாட்டார்கள். நீங்கள் சுறுசுறுப்பாகவும் வலிமையுடனும் ஏறுவதற்காக சத்தான உணவுகளை தருவார்கள். ரொட்டியுடன் உருளை கிழங்கு கூட்டு அதிகம் கொடுப்பார்கள். அவர்கள் தருகிறார்கள் என்று இஷ்டத்திற்கு உருளை கிழங்கை சாப்பிட்டால், அப்புறம் உங்களுக்கு வாயால் பிரச்னை இருக்காது. வாயை கட்டு படுத்த வேண்டும் அல்லது மற்றதை கட்டு படுத்த வேண்டும்.





பேஸ் கேம்ப்பை தவிர வேறு எந்த கேம்பிலும் மின்சாரம் கிடையாது. அதனால் மாலை சூரியன் மறைவதற்குள் டின்னர் முடித்தாக வேண்டும். நகாரு கேம்பில் இருந்து கிளம்பும் போது காலை 2:30 மணிக்கெல்லாம் எழுந்து, காலை உணவு சாப்பிட்டு விட்டு 4 மணிக்கு SARPASS எனப்படும் பனிமலைப் பகுதியை கடக்க வேண்டும். அதிகம் வெயில் வந்து விட்டால் பனி உருகி நடக்கையில் வழுக்க ஆரம்பித்து விடும். பனி மலையில் இருந்து கீழே இறங்கும் போது, படுக்க வைத்து தள்ளி விடுவார்கள். அப்படியே சறுக்கி கொண்டு கீழே வரலாம். அருமையான அனுபவம். என்ஜாய் பண்ணுவதற்கு இயற்கையை இவ்வளவு அழகாய் படைத்த இறைவன் கண்டிப்பாய் முட்டாளாய் இருக்க முடியாது.



அங்கே உங்கள் சுமைகளை தூக்கி கொண்டு நடக்க சிரமப் பட்டால், போர்டர்கள்(Porter) இருக்கிறார்கள். எங்கள் குழுவில் மூன்று போர்டர் பெண்கள் வந்தார்கள்.



அவர்கள் அனாயசமாக இரண்டு பைகளை(bags) தூக்கி கொண்டு ஏறுகிறார்கள். மேலே படத்தில் உள்ள இந்த பெண் ஒருமுறை என்னிடம் எதோ கேட்க, நான் "ஹிந்தி நஹி மாலும்"  என்று சொல்ல, அவள் வேண்டுமென்றே

"ஆப் கா நாம் கியா ஹே?" என்று கேட்டாள்.
"கதிர்வேல்" என்று பதில் சொன்னேன்.
நான் தப்பாய் பதில் சொல்லிவிட்டேனா என்று மறுபடியும் ஆங்கிலத்தில்
What is your name?" என்று கேட்டாள்.
"கதிர்வேல்" என்று மறுபடியும் சொன்னதை கேட்டு சிரித்து விட்டாள்.

பத்து நாட்களில் எங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். எங்கள் எல்லோருக்கும் இருந்த ஒரே ஒரு குறை என்னவென்றால், பத்து நாட்களுக்கு குளிக்க முடியவில்லை. குளிக்கவும் கூடாது.

ஆனால் இந்த காரணம் தான் என் நெருங்கிய நண்பன் முருகன் அடுத்த ஆண்டு SARPASS செல்லுவதற்கு ஆர்வமாய் அமைந்தது என்று சொன்னால் அது மிகைஅல்ல. பையன் சென்னையிலே அதிகம் குளிக்க மாட்டான்.

இதை தவிர எனக்கு இருந்த மிக பெரிய வருத்தம், ஒரு நல்ல SLR கேமராவும், எக்ஸ்ட்ரா பேட்டரிகளும் இல்லாததுதான்.

கடைசி நாள் திரும்பி வரும்போது மணிக்கரன் என்ற ஊரில் வரும் இயற்கை வெந்நீர் ஊற்றில் குளித்துவிட்டு, அருகில் உள்ள குருத்வார் சீக்கியர்கள் கோவிலில் இலவச சாப்பாடு கொடுக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், அங்கே சென்று சாப்பிட்டுவிட்டு வந்தோம்.


எல்லாம் முடித்து சான்றிதல்கள் எல்லாம் வாங்கிவிட்டு டெல்லி வந்து சேர்ந்தோம். மெட்ரோ ரயில் மூலமாக ஏர்போர்ட் செல்ல, அங்குள்ள கஸ்டமர் கேர் பெண்மணியிடம் விவரம் கேட்டால், அவள் என்னுடைய காதலி போல ஹஸ்கி வாய்சில் பதில் சொன்னாள். மறுபடியும் புரியவில்லை என்று காதை  உள்ளே நுழைத்து கேட்டேன். மறுபடியும் ஒன்னும் புரியவில்லை. நான் டென்ஷன் ஆக வேண்டியதிற்கு பதிலாக அவள் டென்ஷன் ஆகி பேப்பரில் எழுதி கொடுத்தாள்.

ஒருவேளை நமக்கு தான் காது கேட்கவில்லையோ என்று "ஆர்குட்" என்ற நண்பனிடம் இதை சொன்னால், அவனும் அவள் மேல் மிக கோபத்தில்  இருந்தான். மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி வாய்பேச தெரியாதவள் எல்லாம் எதுக்கு கஸ்டமர் கேரில் இருக்கிறாள் என்பது தெரியவில்லை.

அடுத்த நாள் காலை மீண்டும்,
அதே ஏர்இந்தியா விமானம்.
அதே வெள்ளை மேகங்கள்.
அதே மனக் குழப்பம்.


பின் குறிப்பு: 
அடுத்த வருடம் இந்த ட்ரெக்கிங் செல்ல விரும்புவோர் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கமென்ட்டில் உங்கள் கேள்விகளை கேட்கலாம்.


May 17, 2011

பஞ்ச பாண்டவர்களுக்கு உதவிடுங்கள்

வீட்டு ஓனர்களும், வீட்டு புரோக்கர்களும், எனது ரூம் நண்பர்களும், மற்ற ஏனையவர்களும் மன்னிக்கவும். இது முழுதும் நகைச்சுவைக்கே.


நியூ ஏஜ் பாண்டவர்கள் ஆகிய நாங்கள் ஐந்து பெரும் ஐ.டி துறையில் அமெரிக்கர்களுக்கு அடிமை வேலை சொகுசாய் செய்கிறோம். இந்த பாண்டவர்களில்,

தருமன் Onsite -இல் தாய்நாட்டை விட்டு வனவாசம் இருக்கிறார்.
அர்ஜுனன் எப்போதும் அடுத்த வீட்டு ஆண்டிக்கு அம்பு விட்டு கொண்டிருப்பார். தினமும் செல்லும் ஜிம்மிலும் அம்புகளின் அட்டகாசம் தானாம்.
பீமருக்கு பீட்சா என்றால் பெரும் இஷ்டம். உருளை கிழங்கில் பண்ணிய அயிட்டம் என்றால் சாப்பிட்டு உருண்டு கிடப்பார்.
நகுலன் அனுஷ்காவின் இடுப்பை பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பார். "சுத்தம் சோறு போடும்" என்ற பழமொழியில் அவருக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.
சகாதேவன் சனிக்கிழமை ஆனால் டாஸ்மாக்கில் சரக்கடித்து விட்டு குப்புறப் படுத்து விடுவார்.



தன் மகளின் குடும்பம் குடித்தனம் வரப்போகிறது என்று வீட்டு ஓனர் இணங்கி கேட்டு கொண்டதால் இப்போது இருக்கும் வீட்டை காலி பண்ண சம்மதித்து விட்டோம்.

வாடகைக்கு அடுத்த வீடு தேடும் போது தான் தெரிந்தது சென்னையில் காலி வீடுகளை விட, வீட்டு புரோக்கர்கள் அதிகம் என்று. நாங்கள் சுலேகா போன்ற வெப் சைட்டுகளில் உலவி புரோக்கர் உதவி நாடாமல் வீட்டை பிடிக்க முயற்சி செய்தோம். Owner என்று search செய்து பொன் பண்ணினால், மறுமுனையில்

"சொல்லுங்க சார் நான் வீட்டு புரோக்கர் பேசறேன்".

"அட நீங்களா?" நயன்தாராவிடம் பேசியது போல் ஒரே இன்ப அதிர்ச்சியில் நான்.

போங்கடா! பொறம்போக்குகளா!

நிறைய ப்ரோக்கர்கள் Owner என்ற பெயரில் ரெஜிஸ்டர் செய்து வைத்திருக்கிறார்கள். வீடு பார்த்து கொடுப்பதற்கு அவர்கள் சுலபமாய் கேட்பது ஒரு மாத வாடகை. நானும் புரோக்கர் வேலையை பகுதி நேரமாக செய்யலாமா என்று தீவிரமாக யோசித்து வருகிறேன்.

டூவீலர் எடுத்துச் சென்று வீடு வீடாக Tolet போர்டு பார்த்து தேடலாம் என்றால், ஒவ்வொரு வீட்டின் கேட்டிலும் எண்ணற்ற "No Parking" மற்றும் "Contact for Plumper Service" விளம்பர பலகைகள் அடித்துபிடித்துக் கொண்டு இடம் பிடித்துள்ளன. இதற்குள் Tolet போர்டை தேடி கண்டு பிடிப்பது, பத்து வருடத்திருக்கு முன் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை தமிழ் நாளிதழில் கண்டு பிடிப்பது போல வெகு சிரமமான விசயமாய் இருக்கிறது.

எப்படியாவது வீடு மாற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் ஆசை ஆசையாய் புரோக்கர்களையும் நாடினோம். மாமுல் போலீஸ்காரர்கள் போல ப்ரோக்கர்கள் ஒவ்வொருவருக்கும் தனி தனி ஏரியா இருக்கின்றது. நாம் ஒருவரிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டால், அவர் நம்மை இன்னொருவரிடம் அழைத்து செல்கிறார். அந்த இன்னொருவர், இன்னொருவரிடம் பேசி (குழப்பமா இருக்கா?) கடைசியாக வீட்டையும் ஓனரையும் கண்ணில் காண்பிக்கிறார்கள். அது கிட்டதட்ட கேங்க்ஸ்டர் படங்களில் ஒவ்வொரு அல்லக்கையையும் பார்த்து, பேசி முன்னேறி கடைசியில் வில்லன் தாதாவை சந்திப்பது போல் உள்ளது.

வீட்டு ஓனர்களும் வில்லன்களை போன்றே பேசியும், கேள்வி கேட்டும் பயமுறுத்துகிறார்கள். நானெல்லாம் என்ஜீனியரிங் நுழைவு தேர்வில் கூட ஆப்சன் (Option) உள்ள கேள்விக்கு மட்டுமே பதில் எழுதினேன். அதுவும் கணிதத்தில் உள்ள Probability என்பதை உபயோகித்துதான். Probability எனக்கு அருமையாக வரும் என்று நினைத்து விடாதிர்கள். Probability -க்கும் பென்சில் ரப்பர் தான் (dice) பேருதவியாய் இருந்தது. குழப்பம் வேண்டாம், நான் தருமனில்லை.


ஒரு வீட்டை வைத்திருந்தால், என்ன ஒரு ஆணவம்?
அதிலும் பேச்சுலர்கள் என்றால் மரியாதை அதிகம் கொடுத்து பேசுகிறார்கள்.

"எத்தனை பேரு?" (நாங்க என்ன அதுக்கா(சாப்பிடறதுக்கு) வர்றோம்?

"எந்த கம்பனில வேலை செய்றீங்க?" (மன்னாரன் கம்பனின்னு சொன்னா ஒத்துக்குவீங்களா? அதிலும் MNC கம்பனி என்று சொன்னால் தான் மதிப்பு.)

"நான்வெஜ் சாப்பிடுவீங்களா?" (இல்லைங்க சார்! நான்வெஜ் ஜோக் மட்டும் சொல்லுவேன்)

எல்லாத்துக்கும் பதில் சொல்லிவிட்டு வாடகை எவ்வளவு என்று கேட்டால், ஏலம் விடுவது போல பனிரெண்டாயிரம், பதினைந்தாயிரம், இருபதாயிரம். வாரணம் ஆயிரம் அளவுக்கு பயமுறுத்துகிறார்கள். வேலை இல்லாதவர்கள் தங்க வீடு தேட வேண்டும் என்றால், ஹோம் லோன் மாதிரி "Home Rent Loan" என்ற ஒன்றை வங்கிகள் அறிமுகப் படுத்த வேண்டும்.




இங்கு எனக்கு வேறு ஒரு சிந்தனையும் அடிமனதில் இருந்தது. இந்த பசங்களோடு எத்தனை நாள் தான் தங்குவது?

Sharing with Girls!

அமெரிக்காவில் உள்ளது போல் பெண்களோடு ரூம் ஷேர் பண்ணி தங்க முடியுமா என்றொரு நப்பாசை. வெப் சைட்டுகளில் தேடி பார்த்தால், "We need two female roommates to share our room" என்று அண்டர்லைன் செய்து விளம்பரம் கொடுத்து இருந்தார்கள் இந்திய கலாச்சாரம் கடைபிடிக்கும் பெண்கள். இந்த ஜென்மத்தில் கனவில் கூட இது நடக்காது. அடுத்த ஜென்மத்துல நாயாய் பிறக்க வைத்தாலும் அமெரிக்காவில் பிறக்க வை கடவுளே!

புரோக்கரை கூட்டிட்டு போய் வீட்டை பார்த்தாலும், ஆளாளுக்கு சொல்லும் ஒரு காரணத்தால் அந்த வீடு பிடிப்பதில்லை.

"தண்ணி சரி இல்லை" (ரெகுலரா டாஸ்மாக் போகிற நானே அமைதியா இருக்கேன்)

"நடக்க ரொம்ப தூரமா இருக்கு" (காண்டாமிருகம் பின்னாடி துரத்திட்டு வருதுன்னு நினைச்சிட்டு ஓடுங்க. தூரம் தெரியாது.)

"ஏரியா பசுமையாவே இல்லை" (சென்னையில் சுற்றி கொண்டிருக்கிற எருமை மாடே இதை பற்றி கவலை படுவதில்லை என்று சொன்னால், பசுமை=பிகர்கள் என்று அர்த்தம் சொல்கிறான் அவன்)

"வீட்டு ஓனருக்கு வயசுக்கு வந்த பொண்ணு இல்லை" (வயசுக்கு வந்தா நீ குடிசை கட்ட போறியா? வீட்டு ஓனருக்கு பொண்ணு இருந்தா, கரெக்ட் பண்ணி வீட்டோட செட்டில் ஆகிடலாம் என்கிற அல்ப கனவு.)


மொத்தத்தில் ஐந்து பேருக்கும் ஒத்து போகிற பாஞ்சாலி மாதிரி ஒரு வீடு வேணும். அது போல ஒரு வீடு கிடைக்க பொறுமை மிக அவசியம். சத்ய ஜித்ரே 1957 -இல் இயக்கிய "பதர் பாஞ்சாலி" (Pathar Panchali) என்ற பெங்காலி படத்தை உட்கார்ந்து நான்கு முறை பார்த்தால் அந்த பொறுமை நமக்கு கிட்டலாம்.



Oct 29, 2010

புறாவை புறக்கணிப்போம்

"புறாவை புறக்கணிப்போம்" என்பதை யாரும் தூக்கத்துலயோ, மப்புலையோ "பிராவை புறக்கணிப்போம்" ன்னு தப்பா படிச்சுறாதிங்க. அதுவும் பெண்கள்.



அபார்ட்மென்ட்ல வசித்து கொண்டிருக்கும் எல்லோரும் எதிர்கொள்ளும்  ஒரு சாதாரண பிரச்சனை தான் இது.  வேலைக்கு போயிட்டு வந்து வண்டிய வெளிய விட்டுட்டு காலையில் வந்து பார்த்தால் நமது பைக், கார்களின் மீது தங்களது காலைக்கடனை கச்சிதமாய் முடித்துவிட்டு போயிருக்கும் அபார்ட்மென்ட் புறாக்கள். இந்த பிரச்சனை எனக்கும், என்னோட பைக்குக்கும் ரொம்பவே பழகி போச்சு.


ஆனா, போன வாரம் என்னோட தங்கி இருக்கிற பிரெண்டு புதுசா ஒரு "ஹோண்டா சைன்" பைக் வாங்கி சீட் கவர், டேங்க்  கவர் எல்லாம் போட்டு அழகா நிறுத்தி வச்சிருந்தான். முதல் நாள் மதியம் ஆபிஸ் போறதுக்காக வண்டிய எடுக்க போனாவன், கொளுத்துற வெயில்ல அப்படியே ப்ரீஜ் (Freeze) ஆகி நின்னுட்டான். அப்பொழுது தான் ஒரு புறா தன் காலைக்கடனை ரொம்ப லேட்டா முடிச்சிட்டு போயிருக்கு. சாதாரணமா அவன் சீட்டுல, தான் உட்காரும் இடத்தை மட்டும் தான் துடைப்பான். அன்னிக்கு முழு சீட்டையும் தண்ணி போட்டு மெதுவா ரொம்ப பொறுமையா துடைச்சுக்கிட்டு இருந்தான்


அடுத்த நாள் ஒரு அரை டஜன் புறாக்கள் சீட் கவர், டேங்க்  கவர் எல்லாத்தையும் சேர்த்து முழு வண்டியையும் கவர் பண்ணிட்டு போயிருந்தது. "மச்சான் இங்க வாங்கடா, இங்க ஒரு புது பைக் நிக்குது" அப்படின்னு ஒரு புறா கால் பண்ணி மத்த எல்லா புறாவையும் கூப்பிட்டிருக்கும்ன்னு நினைக்கிறேன்.


வண்டிய வாங்குறதுக்கு முன்னாடி "புது வண்டிய வாங்குனதுக்கு அப்புறம் உங்க எவனையுமே பின்னால வச்சு ஓட்ட மாட்டேன். ஏதாவது ஒரு அழகான பெண் புறாவ (பிகரு) வச்சு ஒட்டுனதுக்கு அப்புறம் தான் உங்களை வண்டியில த்துவேன்" அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தான். ஆனா கடவுள் உண்மையான பெண் புறாவையே உட்கார வச்சு அவன் ஆசைப்பட்டதை நிறைவேத்திட்டார்.

என் ப்ரெண்டுக்காக நான் எழுதிய சிச்சுவேசன் கவிதை.

வண்ண வண்ணமாய் 
அழகிய  நிறங்களில்
எங்கள் அபார்ட்மென்ட்டில்
வசிக்கும் புறாக்கள் 
அதன் அத்துணை வண்ணங்களையும்(shit)
கொட்டி விட்டு சென்றிருந்தது 
என் புது பைக் சீட்டில்.


ஒவ்வொரு அபார்ட்மென்ட்லயும் மாசாமாசம் மீட்டிங் போடுற மாதிரி, சில சமயம் எல்லா புறாவும் ஒரே பைக் மேல மீட்டிங் போட்டு சமோசா சாப்பிட்டுட்டு, பீட்சா டெலிவரி பண்ற மாதிரி மேட்டர டெலிவரி பண்ணிட்டு போய்டும். அதுவும் ஏதோ ஒரு நாள் மறந்து வீட்டு ஜன்னல் கதவை சாத்தாமல் விட்டு விட்டால், உள்ளே புகுந்து கிச்சன் இருக்கிற பாத்திரங்களை எல்லாம் தள்ளி புட்பால் மேட்ச் ஆடிட்டு போய்டுது.


சென்னை சிட்டியில் காக்காக்களை விட புறாக்கள் தான் அதிகமாய் இருக்கும் போல. பக்கத்துல இருக்கிற வேடந்தாங்கல்ல இருந்து வழி மாறி வந்திருக்கலாம். சரி இதெல்லாம்  எப்படி சாப்பிட்டு உயிர் வாழ்கிறது என்று பார்த்தால்,  இங்கிருக்கும் மக்கள் காக்காவுக்கு பதில் புறாவுக்கு தான் சோறு வைக்கிறார்கள். ஒருவேளை சிட்டியில் இருக்கிறவங்க தங்கள் இறந்து போன சொந்தக்காரர்கள் புறாக்களாய் தான் பிறக்கிறார்கள் என்று நம்புகிறார்களோ என்னவோ?


நாம இப்படி வண்டிய அசிங்கம் பண்ற புறாக்களை புறக்கணிக்கிறதை பத்தி பேசிகிட்டு இருக்கும் போது, புறாக்கள் அடுத்த லெவலுக்கு யோசிக்க ஆரம்பிச்சிடுச்சு. எப்படி நம்ம மேலயே ஷிட் பண்றதுன்னு புக் வாங்கி படிக்குதுங்க.


படிச்சுட்டு ஒன்னு உடனே பிராக்டிகலா செய்தும் பார்த்திடுச்சு.


இன்னொன்னு ஒரு படி மேலே போய், சாவகாசமா தலையில உட்காந்து வேலைய முடிச்சு Distinction -ல பாஸ் ஆகிடுச்சு.




இரண்டு  நாட்டுக்கு இடையில் உள்ள பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர சமாதான புறாவை பறக்க விடுவாங்க. ஆனா இங்க புறாவே சமாதானத்துக்கு பிரச்சனையா இருக்கு. அதுக்கு ரெண்டு வழி தான் இருக்கு. சிட்டியில சுத்துற எல்லா புறாக்களையும் புடிச்சு, சமைச்சு சாப்பிடலாம் (அல்லது) ஜட்டி போட்டு விடலாம்.






Jul 8, 2010

கிரெடிட் கார்டு Vs டெபிட் கார்டு (Real life Comparison)



இந்த கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுக்கும், நம்முடைய வாழ்க்கைக்கும் நிறையவே சம்பந்தங்கள் இருக்கிறது.


கிரெடிட் கார்டு வச்சிருகிறதுங்கறது, ஒரு பொண்டாட்டியை கட்டி குடும்பம் நடத்துவது மாதிரி. ஒன்றே ஒன்று இருந்தால் மட்டும் தான் வாழ்க்கையை கஷ்டப்படாமல் ஓட்ட முடியும். டெபிட் கார்டு மட்டும் வைத்துக் கொள்வது கல்யாணமாகாத பேச்சுலர் வாழ்க்கை மாதிரி. வாழ்க்கைய மிக சந்தோசமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் நம்முடைய தேவைக்கேத்த மாதிரி வாழலாம்.

கிரெடிட் கார்டாக இருந்தாலும், பொண்டாட்டியாக இருந்தாலும் ஒன்றுக்கு மேல் போனால், நீங்கள் கோடிஸ்வரனாக இருந்தாலும் அது உங்களை தெருக்கோடி பிச்சைக்காரன் ஆக்கி விடும். எங்கே?, எப்போது?, எதற்க்காக?, யாருக்காக? கடன் வாங்கினோம் என்றே தெரியாமல் போய்விடும். அதே போல் ஒரு பொண்டாட்டிய திருப்தி படுத்தறதே பெரிய விஷயம் (கேட்கறத வாங்கி கொடுத்து. ஹி! ஹி! ). ஆனா டெபிட் கார்ட்டில் எவ்வளவு பணம் இருக்கின்றதோ அதை பார்த்து, யாருக்கும் பயப்படாமல், செலவு செய்யலாம். "பெண் சிங்கம்", "வெளுத்து கட்டு" போன்றஅரிய படங்களை கூட பிளாக்கில் டிக்கெட் வாங்கி சிரிச்சுகிட்டே பாக்கலாம்.

வெளியே கடைகளில் ஷாப்பிங் போகும் போதோ, சாப்பிட ரெஸ்டாரென்ட்க்கு போகையிலோ, கிரெடிட் கார்டு உள்ள மதிப்பே தனி தான். அதேதான், சொந்தகாரங்க வீட்டிற்கு போகும் போதோ, அப்பார்ட்மென்ட்ல வாடகைக்கு வீடு கேட்கும் போதோ, கல்யாணம் ஆகி பேமலியோட போனால் தான் மரியாதை கிடைக்கும். "சார் கார்டுல பேலன்ஸ் இல்ல", "இங்க டெபிட் கார்டெல்லாம் Accept பண்ன மாட்டோம்"ன்னு அசால்ட்டா சொல்லி அசிங்க படுத்திடுவாங்க. பேச்சுலர் ஒருத்தன் வாடைகைக்கு வீடு கேட்க போகும் போது, பிச்சைக்காரனும் அங்கே வந்தான் என்றால், முதலில் நம்மளை துரத்திவிட்டு அப்புறம் தான் பிச்சைகாரனை துரத்துவார்கள். (எங்க அப்பார்ட்மென்ட்ல இருக்கிற புறா கூட என்னோட பைக்க தேடி புடிச்சு அசிங்கம் பண்ணிட்டு போய்டுதுங்க).

கையில் சுத்தமாக காசு இல்லை என்றால் கூட, கிரெடிட் கார்டு யூஸ் பண்ணி, அப்போதைக்கு ATM -ல் பணம் எடுத்து கொள்ளலாம். பொண்டாட்டிக்கிட்டேயோ அல்லது அவள் அப்பன்கிட்டேயோ பணத்தை வாங்கி விட்டு "அப்புறம் குடுக்கிறேன்னு" அல்வா குடுக்கற மாதிரி. ஆனால் காசே இல்லாமல் டெபிட் கார்டு மூலம் ATM -ல் பணம் எடுக்க போனீங்க என்றால், ATM மெசினே மூஞ்சில எச்சில் துப்பிடும். வேலை இல்லாமல் பேச்சுலராக சுற்றி கொண்டு இருந்தீங்க என்றால் பிரெண்ட்ஸ், சொந்தகாரங்க ஒருத்தனும் பைசா குடுக்க மாட்டாங்க.

சாப்ட்வேர் கம்பெனியில் வொர்க் பண்ணி மாதா மாதம் அக்கௌன்ட் நிறைய சம்பளம் வாங்கி கொண்டு இருந்தீங்கன்னா Golden, Platinum ன்னு சும்மாவே கூப்பிட்டு கிரெடிட் கார்டு கொடுப்பது போல, கிலோ கணக்குல தங்கத்தொடும் அவங்க பொண்ணையும் போட்டி போட்டுக்கிட்டு கொடுப்பாங்க. ஆனா வேலை இல்லாம வெட்டிபயலாக சுற்றிக்கொண்டு இருந்தீங்கனா, டெபிட் கார்டுக்கு அக்கௌன்ட் ஓபன் பண்ணறதுக்கே 500, 1000 ரூபாய் இருந்தால் தான் பண்ன முடியும். பொண்ணு கூட நாமளாக தான் கேராளாவில் இருந்து காசு போட்டு கட்டிகிட்டு வரணும். 

நீங்க குடும்பஸ்தரா?

கிரெடிட் கார்டு வைத்திருந்தீங்கன்னா தூக்கி எறிஞ்சுடுங்க. அப்படி நீங்களும், ரெண்டுமே வச்சு இருக்கணும்ன்னு ஆசை பட்டால், கிரெடிட் கார்டு தூக்கி எறிந்த இடத்தை உங்கள் மனைவிக்கு காண்பித்து விடுங்க. அப்புறம் அவங்களுக்கு தெரியும் என்னென்ன வாங்கனும்னு (அவங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும்).

சமையல் பாத்திரத்தியே அப்படி கை வலிக்க தேய்த்து கழுவறவங்களுக்கு, கிரெடிட் கார்டு தேய்க்கறது எல்லாம் சப்ப மேட்டரு. அதன் பின் தினமும் உங்க வீட்டில் பாச கணவனுக்கு பாராட்டு விழா நடக்கும்.  கலைஞர் தாத்தா மாதிரி உட்கார்ந்து கொண்டு சிரிக்காமல் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்.

இதை படித்து விட்டீர்களா?

இப்போ உங்க கிரெடிட் கார்டு எங்கே இருக்குன்னு பாருங்க. அப்புறம் உங்க மனைவி வீட்டில் இருக்காங்களான்னு செக் பண்ணுங்க. இரண்டுமே இல்லையா? கவலை படாதிங்க. அப்படியே உங்க ப்ரவுசர்ல இன்னொரு Tab ஓபன் பண்ணி கிரெடிட் கார்டு வெப் சைட்ல Login ஆகி எவ்வளவு பில் வந்திருக்குன்னு மட்டும் பாருங்க. வேற எதுவும் உங்களால பண்ண முடியாது.


நீங்க பேச்சுலரா? 

உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணுச்சுன்னா, கிரெடிட் கார்டு வச்சுகாதிங்க.  கிரெடிட் கார்டு வச்சுக்கனும்ன்னா கல்யாணம் பண்ணிக்காதிங்க. இரண்டில் எதாவது ஒன்றை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். அதையும் மீறி கல்யாணம் பண்ணுணீங்கனா, அந்த கிரெடிட் கார்டை தூக்கி உங்க பொண்டாட்டி கையில் கொடுத்து விடாதிர்கள்.


Jul 6, 2010

புட்பால் கிரேசி இருபத்தி நான்காம் புலிகேசி



என் பிரெண்டு முருகன் ஒரு பயங்கரமான புட்பால் பைத்தியம். அவனையும் சேர்த்து நாங்க ஆறு பேர் ஒரே வீட்ல தங்கி இருக்கோம். புட்பால் அவனோட வாழ்க்கைல ஒரு அங்கமாகவே ஆயிடுச்சு. எப்படி எல்லாம் அது அவனோட வாழ்க்கைலயும், எங்க வாழ்க்கைலயும் விளையாடுதுன்னு பாக்கலாம். 

  • தினமும் நைட் தூங்கும் போது, புட்பால்ல கொஞ்சம் காத்த புடுங்கி விட்டு தலைகாணிக்கு பதிலா, அதை தலைக்கு வச்சுதான் தூங்குவான்.
  • வெளிய போயிட்டு வந்து கழட்டிபோடுற துணிய கூட, புட்பால் மாதிரி சுருட்டி தான் மூலையில் போடுவான்.
  • பைக் வச்சிக்கிட்டு ட்ராபிக்ல நின்னுகிட்டு இருக்கும் போது கூட சிக்னல் லைட்ட பார்த்து " டேய்! ரெட் கார்டு காமிச்சிட்டாங்க, எல்லோ கார்டு போட்டுட்டாங்க "  அப்படின்னு தான் சொல்லுவான்.
  • ஏதாவது ஒரு பொண்ண பாத்து சைட் அடிக்கும் போது, அவளுக்கு பார்றா புட்பால் மாதிரி கும்முன்னு இருக்கு என்பான்.
  • இவனுக்கு பிடிச்ச ஹாலிவுட் நடிகை Bay Watch புகழ்  பமீலா ஆண்டர்சன். சின்ன வயசுல இருந்தே Bay Watch யும் புட்பால் மேட்ச்யும் டிவில,  ரிமோட்ட வச்சு swap பண்ணி  swap பண்ணி பார்த்துட்டு இருப்பான். வீட்டுக்குள்ள யாரவது வந்தா புட்பால் மேட்ச். யாரும் இல்லைனா Bay Watch. இப்படி அவனுக்கு புட்பால் தற்செயலாதான் புடிக்க ஆரம்பிச்சுது.
  • எதாவது சொந்தக்காரங்க கல்யாணமாய் இருந்தாலும் சரி, இல்ல பக்கத்துக்கு தெருல ஏதோ ஒரு பாட்டி செத்திருந்தாலும் சரி, "ரொனால்டோ" இல்ல "ரூனி" ன்னு பேரு போட்டு இருக்குற புட்பால் டீ ஷர்ட் தான் போட்டுட்டு போவான். வீட்டுல அம்மா கரண்டு பில் கட்டிட்டு வர சொன்ன கூட, Nike shoe தான் போட்டுட்டு போவான்.
  • காலேஜ்ல  படிக்கறப்ப எல்லா எக்ஸாம்லயும்  எக்ஸ்ட்ரா டைம் கேட்டு அந்த ஹாலுக்கு வர்ற சூப்பர்வைசர்ற வேணும்னே எரிச்சல் படுத்துவான்.பரீட்சையில் எந்த சப்ஜெக்டா இருந்தாலும் சரி, "Heading" மட்டும் படிச்சிட்டு போயே எழுதி பாஸ் ஆகிடுவான்.  Maths எக்ஸாம்ல மட்டும் அதனால பெயில் ஆயிடுவான்.
  • அதுவும் இந்த புட்பால் உலக கோப்பை ஆரம்பிச்சதுக்கு அப்புறம், அடிக்கடி ஆபிஸ்க்கு மட்டம் போட்ருவான். லீவ் சொல்லுறதுக்கு மேனஜர்க்கு மெயில் அனுப்பும் போது கூட Suffering  from football fever அப்படின்னு தான் அனுப்புவான்.
  • தூங்கும் போது கூட புட்பால் விளையாடுற மாதிரி கனவு கண்டு, பக்கத்துல படுத்திருக்கிற பசங்கள உதைச்சு கிட்டு தூங்க விட மாட்டான்.
  • கிரவுண்ட்ல போய் விளையாடற அளவுக்கு உடம்பு Fit இல்லைனாலும், புட்பால் கேம் கம்ப்யூட்டர்ல install பண்ணி குடுத்துட்டா போதும், கீ போர்ட உதைச்சுக்கிட்டே அவ்வளவு  அருமையா விளையாடுவான்.
  • ஸ்கூல்ல படிக்கும் போது ஸ்போர்ட்ஸ் பீரியட்ல, புட்பால் விளையாடும் போது, வேற யாராவது அடிச்சு இவனோட கால்ல பந்து பட்டா கூட, அவன்தான் பந்த டச் பண்ணதா நாலு நாளைக்கு பேசிக்கிட்டு இருப்பான். இப்படி ஒரு தடவ யாரோ அடிச்சதுல இவன் மூக்குல பட்டு சிலி மூக்கு உடைஞ்சதுல இருந்து, கீ போர்டு தவிர வேறு எதையும் தொடுறது இல்ல.
  • விளையாண்டு கோல் போட தெரியலைனாலும், மத்தவங்கள பத்தி கோல் மூட்டுறது இவனுக்கு கை வந்த கலை.
  • ஆபீஸ் மீடிங்ல பேசும் போது கூட, heading பண்ற மாதிரி தலைய ஆட்டி ஆட்டி தான் பேசுவான். புடிச்ச தமிழ் நடிகர் தல அஜித். அவர் தலைய ஆட்டி ஆட்டி டான்ஸ் ஆடுறத பாத்து (அவரால இடுப்ப ஆட்ட முடியாது) மெய் மறந்து பாக்க ஆரம்பிச்சுடுவான்.
  • அன்னிக்கு பாக்கற மேட்சுல அவனோட கிளப் டீம் தோர்த்திடுசுன்னா, அப்பவே சிஸ்டத்த ஆன் பண்ணி, FIFA கேமில் எதிர் டீமை படு கேவலமா தோற்கடிச்சுட்டு தான் சாந்தமாவான்.
  • போலியோ வந்து அட்டாக் ஆன கோழி மாதிரி இருந்தாலும், அவனோட  போர்ட்போலியோல,  extra skills பகுதியில் Football Player ன்னு தான் போட்டு இருப்பான்.
  • புட்பால் தவிர இந்த புட்பால் மண்டயனுக்கு புடிச்ச இன்னொரு கேம், கேரம் போர்டு தான். காரணம் என்னன்னு கேட்டா, அதுல Striker இருக்காம்.
  • பக்கத்துல யாராவது கொஞ்சம் பெரிய பின்புறத்தோடு படுத்திருந்தால் போதும், நைட்டு தூக்கத்துல உதைச்சு கிட்டே தான் தூங்குவான்.

சரி படிச்சுடீங்க!. ஒரு கோல் போட்டுட்டு போங்க. சாரி, ஒரு Like போட்டுட்டு போங்க. பாருங்க, பய புள்ள என்னையும் மாத்திபுட்டான். Oh! God, Save Me.




    Jul 1, 2010

    எனக்கு ஒரு முடி(வு) தெரிஞ்சாகனும்



    பொதுவாக நீண்ட தலைமுடியை வைத்துக் கொண்டு இருக்கும் பையன்களை பார்த்தாலே எனக்கு அவர்களிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டுமென்று தோன்றும்.

    எப்படி அவர்களால் இப்படி வளர்க்க முடிகிறது?
    கஷ்டமாக இருக்காதா?

    இப்படி நிறைய.

    • தினமும் நீங்கள் காலையில் குளித்தவுடன், உங்கள் அம்மா தான் தலை துவட்டி விடுவாங்களா? இல்ல, நீங்களே பொண்ணுங்க மாதிரி தோள் மேல முடியை எடுத்து போட்டு துவட்டி கொள்வீர்களா? துவட்டிய பின், முடியை அள்ளி முடிந்து விட்டு, வாசலில் போய் கோலம் போடுவீர்களா?
    • ரொம்ப குறைச்சலாக முடியை கட் (வட்டு கிராப்) பண்ணி கொள்கிற எனக்கே ஏகப்பட்ட பொடுகு தொல்லை இருக்கிறது. நீங்கள் எப்படி சமாளிக்கிறீங்க? சன் மியூசிக்கோ அல்லது இசை அருவிக்கோ போன் பண்ணி கூந்தல் பராமரிப்பு பற்றி குறிப்புகள் சொல்லுவீங்களா? (சொன்னா இதை படிக்கிற பிகருங்களுக்கு எல்லாம் கொஞ்சம் உபயோகமா இருக்கும்)
    • வாரம் ஆனா, சனிகிழமை சீகைக்காய் போட்டு உங்கள் அம்மா உங்கள் தலையை தேய்ச்சு விடுவாங்களா? உலர வைக்க முடிக்கு சாம்பராணி புகை எல்லாம் பிடிப்பிங்களா?
    • இந்த பேன் தொல்லையை எப்படி சமாளிக்கீரிங்க? நடு வாசப்படியில் உட்காரவைத்து உங்களுக்கு யார் பேன் பார்ப்பாங்க?
    • பச்சை, சிவப்பு மாதிரி கலர்கலரா ஒரு டீ சர்ட் போட்டுக்கிட்டு  போகும் போகையில், உங்களை பிகர் என்று தவறாய் நினைத்து யாராவது பாலோவ் செய்து வந்து, உங்களின் பின்புறத்தை தட்டி ஏமாந்து போய் இருக்கார்களா? நீங்கள் வேண்டுமென்றே யாரையாவது விளையாட்டுக்காக ஏமாற்றி இருக்கீங்களா?
    • வராவாரம் பியூட்டி பார்லர் போய் முடி பராமரிப்பு செய்வீர்களா? எத்தனை நாளுக்கு ஒரு முறை சலூனுக்கு செல்வீர்கள்? மாசம் பட்ஜெட் சமாளிக்க முடியுதா?
    • உங்களுக்கு கேர்ள் பிரெண்ட் இருந்துச்சுன்னா, நீங்களும் உங்க கேர்ள் ப்ரெண்டும் மாற்றி மாற்றி தலை வாரி  கொள்வீர்களா? மற்ற பொண்ணுங்க எப்போதாவது உங்கள் முடியை பார்த்து பொறாமை கொண்டு அலைந்து இருக்காங்களா?
    • உங்கள் அக்கா தங்கச்சியோடு, முடியை பிடித்து சண்டை போட்ட அனுபவம் இருக்கா? அப்படி யாரும் இல்லாத பட்சத்தில், தண்ணி பிடிக்க போகும் போது, குழாய் அடியிலாவது சண்டை போட்டதுண்டா?
    • உங்க வீட்டில் யாராவது டூர் போனால், வரும் போது உங்களுக்கு ஹேர் பின், பேண்ட்(Band), கிளிப் இதெல்லாம் வாங்கிட்டு வருவாங்களா?
    • கிரிக்கெட் விளையாடும் போது, தலை முடி டிஸ்டர்ப் பண்ணாதா?  அப்போது மட்டும் Band மாட்டிக் கொள்வீர்களா?
    • நீங்கள் blog வைத்திருந்தால், Hair Care பற்றி Post போடுவீங்களா?
    • உங்க கூந்தல் பற்றி எந்த பெண்ணாவது கவிதை எழுதி, காதலித்து பைத்தியமாய் அலைந்து இருக்காங்களா?


    "இத பத்தி என்ன மயித்துக்குடா கேட்கற?" என்று கோபித்து கொள்ளாதிர்கள்.

    யாராவது தெரிந்தால் பதில் கேட்டு சொல்லுங்களேன்.