Jul 30, 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன் ? அட்டு தகவல்கள்.



இந்த தொடர் பதிவ என்னை எழுத அழைத்த திரு வழிப்போக்கன் அவர்களுக்கு நன்றி. இது யாருடா இன்னொரு வழிபோக்கன்னான்னு யோசிக்காதிங்க. நானே என்னைய கூப்பிட்டு கிட்டேன். ஹி! ஹி!, இதெல்லாம் அசிங்கம்ன்னு நினைச்சா blog நடத்த முடியுமா?

ரெண்டு மூணு நாலா உடம்பு வேற ரொம்ப சரி இல்லாம போச்சு. அதனால பதிவு எதுமே போட முடியல. பிரெண்டு கூட கேட்டான் ஏன்டா ப்ளாக்ல போஸ்ட்டு போடலைன்னு. ஆமா இன்னும் ரெண்டு நாலு இப்படியே இருந்தா என்னை போஸ்ட்மார்டம் பண்ணிடுவாங்க. இதுல எங்க போஸ்ட் போடுறது.

சரி, கொஸ்டினுக்கு போலாமா?

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

இதுக்கு மேலயும் அத உங்களுக்கு சொல்லித்தான் தெரியனுமா என்ன? (யாருப்பா இந்த மாதிரி ஒன்னாம் கிளாஸ் கேள்வி எல்லாம் கேட்கறது?) ஓகே நெக்ஸ்ட்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மை பெயர், கதிர்வேல்.  என்னடா பழைய பேரு மாதிரி இருக்குன்னு பாக்காதிங்க. இந்த பேருல அஜ்மல் நடிச்ச ஒரு புது படமே வெளி வரபோகுது.

வழிபோக்கன்னு பேரு வச்ச காரணம்? எல்லோரும் திரும்பி பார்ப்பாங்க அப்படிங்கறதுகாகத்தான்.  (முக்கியமா பொண்ணுங்க)


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

வலை உலகத்துல இன்னும் கால் அடி கூட எடுத்து வைக்கல. ஆனா என் காதலி கவிதாவுக்கு தான் நன்றி சொல்லோனும். கவிதாகுள்ள இருந்து தான் என்னோட கரு எல்லாம் உண்டாகுது. நீங்க நினைக்கிற கரு இல்ல. இது கவிதைக்கான பொருள்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்? 

இன்னும்  பிரபலம் ஆகலைங்க. பிரபலமாகத்தான் ஆபாயில் போட ஆரம்பிச்சுருக்கேன்.  நீங்களும் படிச்சு உங்க ஆதரவ கொடுங்க. திரட்டியின் தயவால் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா ரவுடி (பிரபலம்) ஆக ட்ரை பண்ணறேன்.


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

இல்லைங்க. நம்ம இமேஜ நாமலே டேமேஜ் பண்ண கூடாதுங்கற முன் எச்சரிக்கைதான். ஆனால் கூட இருக்கிற நண்பர்கள் பத்தி கொஞ்சம் எழுதி இருக்கேன் (புட்பால் கிரேசி இருபத்தி நான்காம் புலிகேசி , கொஞ்சம் பிரேக், நிறைய கிலோ மீட்டர்).  அதனால இப்பல்லாம் பசங்க எங்க அவங்கள பத்தி எழுதிடுவேனோன்னுட்டு பயந்துகிட்டே எனக்கு வோட்டு  போட்டுடறாங்க. எப்படி? என் ஐடியா.
என்ன பொறுத்த வர, விளைவுங்கறது நல்லதாத்தான் இருக்கனும். ஹி ஹி.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஆமாங்க ஆபீஸ்ல வேலையே இல்லாம எப்படி பொழுத போக்கறதுன்னு தெரியாம முழிச்சு கிட்டு இருக்கும் போது தான் வலைப்பூவோட அறிமுகம் கிடைச்சுது (இதை எங்க மேனேஜர் படிக்காம இருந்தா சரி). காசு பணம் யாருக்கு வேணும். உங்க அன்பும், பின்னூட்டமும் இருந்தா அதுவே மனசுக்கு தெம்பா இருக்கும்ங்க.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்.  என்னோட இடுப்புல மூணு தாங்க இருக்கு. அதுல ஒன்னு இங்கிலிபீசு.  அப்புறம் நான் அழகா போட்டோ எடுப்பேன் (மத்தவங்க சொன்னாங்க). குறிப்பா வயசு பொண்ணுங்கள (டிரஸ் இல்லாம). அதுக்கொரு வலைப்பூ வச்சிருக்கேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாம படர மாதிரி எனக்கு தெரிஞ்சு யாருமே இங்க எழுதறதில்ல. இப்படி சொன்னாலாவது நம்ம மேல யாராவது கோபப் படுவாங்கலான்னு பார்க்கலாம். (கேள்விய கவர் பண்ணியாச்சு)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
  
LK  அப்படிங்கறவரு என்னை அவரோட வலைப்பூல அறிமுக படுத்தினார்.  எனக்கு நானே எதிர்கவிதை எழுதனத பாராட்டி அறிமுக படுத்தி இருந்தார். அவருக்கு என் நன்றி. மக்கா நீங்களும் அவர பார்த்து புத்திசாலிதனமா நடந்துகோங்க.


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

சாக போற தூக்கு தண்டனை கைதிகிட்ட கேட்கற மாதிரியே இருக்கு. இன்னும் இந்த பதிவுலகத்துல எத்தனையோ சாதிக்க வேண்டி இருக்கு. 
சரி, எனக்கு வீட்டுல பொண்ணு பார்க்கறாங்க. அதனால உங்களுக்கு தெரிஞ்ச நல்ல பொண்ணா பார்த்து சொல்லுங்க. கல்யாணம் ஆச்சுன்னா சொல்றேன் வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு போங்க. மொய் மறக்காம வைக்கோணும் ஆமா.







Jul 26, 2010

காதல் அரக்கி



காதல் அரக்கி
உன் கனவுகள் பொறுக்கி
கவிதைகள் கோர்க்கிறேன்...
காலையில் எழுந்து  

நிலவை தின்னும்
சூரியன் வெறுக்கிறேன்...


சூரியன் எண்ணம்
வெயிலாய் கருக
பகலில் நிலவாய்
பவனி வந்தாய்...


சினம் கொண்ட சூரியனின் 
புற ஊதா கதிர்கள் 
உன் புறங்கள் ஊடுருவ 
அம்மை போட்டு 
நிலவில் களங்கம்...

இனி கவலை வேண்டாம்.
நிழல் மேகமாய் உனை
பின் தொடர்வேன் 
உன் பாதையெங்கும்.
உனக்கு வியர்க்கும் பொழுது
மழையாய் பொழிவேன்
உன் மேனி எங்கும்...



Jul 25, 2010

தில்லாலங்கடி - நமீதா திரை விமர்சனம்.




படத்துக்கு போறதுக்கு போறதுக்கு முன்னாடியே, அரசு டாஸ்மாக்ல போய் ஒரு கட்டிங் போட்டுட்டு ஒரு கிக்கோடா போனிங்கன்னா நலம். நீங்க அடிச்ச சரக்குல ஏதும் கிக்கு ஏறலைனாலும் கவலை படாதிங்க. சில ஆங்கில படத்துல F ..K ங்குற வார்த்தைய அடிக்கடி யூஸ் பண்ற மாதிரி, படம் பூரா கிக்கு கிக்குன்னு சொல்லியே உங்களுக்கு கிக்கு வரவச்சுடுவாங்க. சில பேருக்கு ஏறுன கிக்கு இறங்க கூட வாய்புகள் உண்டு. அதற்கு ஜெயம் கம்பெனி தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஆபீஸ்ல இருக்கற தெலுங்கு பிரெண்டு சொன்னான்னு தெலுங்கு கிக் படத்த டவுன்லோட் பண்ணினேன். ஆனா ஹீரோ ரவி தேஜாவ பார்த்த வுடனே டெர்ரர் ஆகி பிளேயர கூட close பண்ணாம நேரடியா UPS-இன் பவர் ஆப் பண்ணிட்டேன். ஏற்கனவே M குமரன் சன் ஆப் மகாலக்ஸ்மி படத்தோட தெலுங்கு ஒரிஜினல் படத்துல இவர் நடித்த சில காட்சிகள் பார்த்து இருந்தனால வந்த பயம் தான் காரணம். அதிகமாக தென் இந்திய படங்களில் மட்டும் தான், எவ்வளவு வயசாயிருந்தாலும் சரி ஹீரோவா இளவயசு பையனாவே நினைச்சு படத்த பாருங்க என்று மக்களை டார்ச்சர் பண்ணுவாங்க (எ.க சிவாஜி). பாவம் மக்கள்!!!.

Back to தில்லாலங்கடி.

படத்தோட ஹீரோ கிக்குகாக என்ன வேணா பண்ற கேரக்டர். அந்த கிக்குகாக அவர் நாயகியையும் மத்தவங்களையும் எப்படி வதைக்கிறார் அப்படிங்கறத பயங்கர காமெடியா சொல்லியிருக்காங்க.

படம் ஆரம்பிக்கும் போது எல்லாரும் கொஞ்சம் ஓவர் அக்டிங் பண்ணி காமெடில மொக்க போட்டாலும் வடிவேல், மன்சூர் அலிகான் வந்ததுக்கபுறம் படம் பயங்கர காமெடிய போகுது. சந்தானம் வந்தாலே சரவெடி தான்.

இத்தனை நாளா இலியானவுட இடுப்ப பத்தி ஏன் எல்லோரும் ரொம்ப பேசிக்கிட்டு இருக்காங்க அப்படின்னு யோசிச்சிருக்கேன். ஆனா இலியானா இடுப்ப பார்த்துட்டு தமனா இடுப்ப பார்க்கும் போது தான் வித்தியாசம் தெரியுது. இலியானாவுடது சூப்பர் (ஹி! ஹி!). தமனா அழகாதான் இருக்காங்க. ஆனா நிறைய படத்துல பார்த்து போரடிச்சுடுச்சு. தமனா என்னதான் எக்ஸ்ப்ரசன் கொடுத்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கு. தங்கச்சியா வர்ற பொண்ணு கொஞ்சூண்டு டிரஸ் போட்டுட்டு நடிச்சு இருந்தாலும் அதிகமாகவே நல்லா நடிச்ச மாதிரி இருந்துச்சு.


யுவனோட பாட்டு படத்துக்கு விடற இன்டர்வெல் அப்படின்னே சொல்லலாம். மியூசிக்கும் பெரிய அளவுல இல்ல. வார்த்தையும் ஒன்னும் கேட்கல. யுவன் தான் அடுத்த A R ரகுமான் அப்படின்னு சில பேர் சொல்றாங்க. ரகுமான் பாட்டு மாதிரி கேட்க கேட்க தான் புடிக்குமோ? அப்படின்னுட்டு படம் பார்த்துட்டு வீட்டுல போய் கேட்டாலும், சுத்தம். இலங்கைல எப்ப குண்டு போடுவாங்களோ மக்கள் பயந்து கிட்டே வாழ்ந்த மாதிரி, எப்ப பாட்ட போடுவாங்கன்னு மக்கள் பயந்து கொண்டே படம் பார்த்தாங்க.

டைரக்டர்? எப்பவுமே பரிட்சையில் காப்பி அடிச்சு எழுதுற பையன என்னிக்காவது அவன் காப்பி அடிச்சு எழுதாத இருக்கும் போது தான் விமர்சிக்க முடியும்.
ஆனால், டைரக்டர்க்கு ஒரு வேண்டுகோள். கொரியன் மொழில நிறைய நல்லா படம் இருக்கு. அதை கொஞ்சம் ரீமேக் பண்ணுங்களேன். உங்களால மட்டும் தான் scene by scene நல்லா காப்பி அடிக்க முடியும்.


மக்களே, உங்க லாஜிக் எல்லாம் கழட்டி எங்கியாவது தொங்க விட்டுட்டு, பாட்டுக்கு மட்டும் பக்கத்துல இருக்கிற பிகர நோட்டம் விட்டுகிட்டு, படத்த பார்த்திங்கன்னா கண்டிப்பா ஒரு ஜாலியான படத்த குடும்பத்தோட பார்க்கலாம்.

படம் பார்த்துட்டு கிளம்பும் போது என் பைக்கு கூட நிறைய கிக்கு இருந்தாதான் ஸ்டார்ட் ஆகுவேன்னு சொல்லிடுச்சு.

நானும் திங்க கிழமை ஆபீஸ்க்கு போய் வேலைய resign பண்ணலாம்னு இருக்கேன். வாழ்க்கைல ஒரு கிக் வேணும்ல.
நீங்களும் படம் பார்த்துட்டு உங்க வேலைய resign பண்ணிடுங்க.

நமீதா டச் : தில்லாலங்கடி, சரக்கு அடிச்சுட்டு கிக்கோடா போறவங்களுக்கு மட்டும்.


டிஸ்கி: நமீதா பெயரை ஹிட்ஸ்க்காக மட்டுமே உபயோக படுத்தியுள்ளேன். நமீதான்னு பேரை கேட்டாலே சும்மா கிக்கு ஏறுதுல்ல!


 


Jul 23, 2010

I love Amy Jackson - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க) - 23 Jul 2010

ஆபாயிலுக்கு ஆதரவளித்த அனைத்து குடி மக்களுக்கும், இனி ஆதரவு தர போகும் நல்லுள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நான் தமிழ் நாட்டுல இருக்கிற 234 தொகுதியில மட்டும் தான் ஆதரவு கேட்டேன். ஆனா ஹாலிவுட் பாலா அமெரிக்கால இருக்கிற டூவால் கவுண்டி தொகுதியோட ஆதரவும் எனக்குதான்னு சொல்லி அசர வச்சுட்டாரு. உங்கள் பேராதரவுடன் இதோ என் முதல் ஆபாயில்.

ஆபாயில்ன்னு அழகா பேரு எல்லாம் வச்சு ஆதரவெல்லாம் திரட்டியாச்சு. ஆனா என்னத்த எழுதி நிரப்பறது?
நாம ரசித்த எதாவது ஒரு You Tube வீடியோ. அப்புறம் ஒரு ஏ ஜோக். ம்..ம்..ம்.. என்ன பண்ணலாம்?
சரி, தோணுறத எழுதி பார்ப்போம் வொர்க் அவுட் ஆகுதான்னு. இப்பல்லாம் பதிவு எழுதறதுக்கு யோசிக்கவே தனியா சாப்பிடனும் போல.

மதராசபட்டணம் படம் பார்த்ததுக்கு அப்புறம் எமி பத்தி பயங்கரமா ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். விக்கி பீடியால போய், எமிய பத்தின முழு விவரத்தை படிச்சு மனப்பாடம் பண்ணிட்டேன் . எமி ஒரு lingerie மாடல்ன்னு தெரிஞ்சவுடனே எமியோட Official site -ல இருக்கிற gallery-ய ஓபன் பண்ணி ஒன்னு விடாம பார்த்துட்டேன் (ஹி! ஹி!). எச்சரிக்கை! தெரியாத்தனமா யாரும் ஆபீஸ்ல இந்த சைட்ட திறந்து பார்த்துடாதிங்க. ஏன்னா, நம்ம எமி திறந்த வெளியில் அட்டகாசமான போஸ்ல அம்சமா படுத்து கிடப்பாங்க.
அப்புறம் உங்க பக்கத்துல இருக்கறவங்க, நீங்க அசிங்கமான படத்த  பார்க்குறத பார்த்துட்டு உங்கள அசிங்கமா பார்ப்பாங்க. உண்மையா சொன்னா, அது ரொம்பவே அழகான படம்தான். ஹி! ஹி!



அப்படியே நான் எமியோட வலைப்பூவையும் பின்தொடர ஆரம்பிச்சாச்சு (உம்!..எமிய தான் பின்தொடர முடியல..). நீங்களும் போய் பாருங்க. பொண்ணு கலைஞர் டிவி இன்டெர்வியுவ் பத்தியும், சென்னை பத்தியும் நிறைய சிலாகித்து சொல்லியிருக்கா. அம்மணி மிஸ் இங்கிலாந்து பட்டத்துக்காக போட்டி போடறாங்க. நம்மால ஓட்டு போட முடியுமான்னு தெரியல. முடிஞ்சா முயற்சி பண்ணுங்க எமி ரசிகர்களே!.
இப்பவெல்லாம் தூக்கத்துல கூட எமி எமின்னு தான் உளறிகிட்டு இருக்கேன். பக்கத்துல படுத்து இருக்கிற தெலுங்கு பிரெண்டு எட்டி உதைச்சு ஏமி ரா? ன்னு கேட்கிறான். நான் 'எமி'ங்க, அவன் 'ஏமி'ங்க ஒரே ரவுசுதான். சீக்கிரம் மதராசபட்டணத்த தெலுங்குல டப் பண்ணுங்கப்பா!



ங்க வீட்டுல என்னைய கல்யாணம் பண்ன சொல்லி ரொம்ப தொந்தரவு பண்றாங்க. (எமி ஓகே சொன்னா உடனே சம்மதம் தான்..). எதுக்கெடுத்தாலும் எங்க அம்மா களவாணில வர்ற சரண்யா மாதிரி, "உனக்கு இப்ப கல்யாணம் பண்ணா தான் life சூப்பரா இருக்கும்ன்னு ஜாதகத்துல போட்டிருக்கு" அப்படின்னு அதையே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
சரி நான் வேற கம்பெனி மாறணும்ன்னு சொன்னா, அதுக்கும் உனக்கு கல்யாணம் ஆனா தான் வேலையும் அடுத்தது நல்லதா கிடைக்கும்ன்னு ஜாதகத்துல சொல்லி இருக்கு அப்படிங்கறாங்க. சரி, இப்ப இருக்கற வீடு சின்னதா இருக்கு, ஒரு புது வீடு கட்டிட்டு கல்யாணம் பண்ணலாம்ன்னு சொன்னா, அதுக்கும் அதே பதில் தான். ஓகே அதெல்லாம் சரி, ஒரு பொண்ணும் என்னை லவ் பண்ண மாட்டேன்கிறாங்க. இதுக்கும் கல்யாணம் ஆன அப்புறம் தான் யாரவது லவ் பண்ணுவாங்கன்னு ஜாதகத்துல போட்டு இருக்கா?


போன வாரம் எங்க ரூமுக்கு என்னோட காலேஜ் பிரெண்டு ஒருத்தன் வந்தான். எவ்வளவு நேரம் தான் மொக்க போடுறது?. சரி, கேரம் போர்டு விளையாடலாமேன்னு எடுத்து வச்சு ஆரம்பிச்சோம். எனக்கு கருப்பு காயின். அவனுக்கு வெள்ளை. ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலையே கேரம் போர்டு ஆப்பிரிக்கா நாடு மாதிரி ஆயிடுச்சு. கருப்பு காயின் மட்டும் தான் உள்ள இருக்கு. எப்படிடா இவ்வளவு சூப்பரா விளையாடரன்னு கேட்டா? சின்ன வயசுல இருந்தே சாப்பிடறது, படிக்கறது, தூங்கறது எல்லாமே கேரம் போர்டுல தானாம். பள்ளி கூடத்துக்கு போறப்ப கூட கேரம் போர்டுல இருக்கற பவுடர்தான் பூசிகிட்டு போவானாம். அந்த அளவு கேரம் போர்டுல பைத்தியமாம். ரைட்டு.

இதை வைத்து ஒரு கவிதை.

வெள்ளையர்கள்
வெளியேறி விட்டார்கள்
ஆனாலும்
கறுப்பர்களுக்கு தோல்விதான்



இந்த வார பதிவுலக தத்துவம்.

"பதிவை போடு பின்னூட்டம் எதிர்பார்க்காதே"

(ஆண்டவா! இந்த பதிவுக்கு மட்டும் பின்னூட்டம் குறைஞ்சது நூறு வரணும். ஹி! ஹி!)





Jul 20, 2010

அங்காடிதெரு அஞ்சலிக்கு



ஆடி மாசம் காத்தா வந்து 
அடி மனச சாச்சு புட்டலே.

கத்தரிகோல் கண்ணால
என் நெஞ்ச
பிட்டு துணியா கிழிச்சு புட்டலே.

ராத்திரி நீ கனவுல வந்தாலே
கொசுக்கடி கூட
சுகமாத்தான் இருக்குதுலே.

ஒவ்வொரு சேலையையும்
நீ வச்சு காமிக்கையில
பக்கத்துலையே நின்னு 
பார்த்து ரசித்திடவே
துணிக்கடை பொம்மையா
மனசு மாற துடிக்குதுலே.

தை, ஐப்பசி மாசம் கணக்கு இல்ல
உன்ன பாக்க வர்றதனால
வாரா வாரம்
எனக்கு பொங்கல் தீபாவளிதான்லே.

இந்த கனிய, கனிய வைக்க
கால் கடுக்க காத்திருப்பேன்லே
எம்புட்டு வருஷம் ஆனாலும்.



டிஸ்கி : "எமிய பத்தி மட்டும் எழுதி புட்டலே, என்ன பத்தியும் எழுதுலே" ன்னு நம்ம கனி நேத்து ராத்திரி கனவுல வந்து கேட்டதால இந்த கவிதை.




Jul 16, 2010

எமியின் ஏக்கத்தில் (மதராசிபட்டினம் ஸ்பெஷல்)



தினமும் உன் நினைவுகளை ஏற்றி
திரியும் கழுதையாகவே மாறி போனேன்.

"மறந்துட்டியா" அப்படின்னு நீ சொன்னத
என்னால மறக்கவே முடியல.

நீ  கழுதைய தூக்கி கொஞ்சினதில் இருந்து
ரோட்டுல போற கழுதையெல்லாம் 
ரொம்ப அழகாவே தெரியுது.
சில சமயம் என் பழைய காதலியை விட.

இரவும் பகலும்
நீயே தான் ஆளுகிறாய் என்னை.
சுதந்திரத்தை மட்டும் கொடுத்து விடாதே!
உனக்கு அடிமையாகவே இருந்து விட்டு போகிறேன்
என் காலம் முழுதும். 






Jul 15, 2010

ஆபாயிலுக்கு ஆதரவு கொடுங்கள்.


                         ஆபாயில் உதவி: http://oldrecipebook.com/images/eggs-sunnysideup.jpg


இப்படியே இருந்தா எப்படி? நம்மளையும் நாலு பேரு பின் தொடர ஆரம்பிச்சுட்டாங்க (ஆட்டோலையா?). ஆரம்பத்துல ஏதோ சில கவிதைய மட்டும் கிறுக்கிக்கிட்டு இருந்த நாம, இப்பதான் கொஞ்சம் காமெடியையும் ஆரம்பிச்சிடுக்கோம். ஆனா கவிதையை மட்டும் வச்சே காலத்தையும், இந்த ப்ளாகையும் ஓட்ட முடியாது. அது ரொம்ப சிரமம். பள்ளிகூடத்துல பண்ணுன காதல வச்சே எவ்வளவு நாள் சமாளிக்கறது?. அதுக்கு கொஞ்ச பேரையாவது இப்ப காதலிக்கணும். இல்ல, அவங்க நம்மள காதலிக்கணும். நாமளும் எவ்வளவு நாள் தான் காதலிக்கற மாதிரியே நடிச்சு கவிதை எழுதறது

கதை எழுதினா என்ன?
கதையா? அதை எப்படி எழுதறது? சின்ன வயசுல சரோஜா தேவி கதைகள் படிச்சத தவிர வேற எந்த அனுபவமும் இல்லயே. இதுல கதை எழுதறது ரொம்ப கஷ்டம்.

அப்புறம் எப்படி பிரபல பதிவர் ஆகுறது? இதற்கு இந்த பிரபல பதிவர்கள் எல்லோரும் என்ன பண்றாங்கன்னு பார்த்தா புரியலாம். அப்பத்தான் தெரிஞ்சது ரெகுலரா ஏதாவது ஒன்னு எழுதி பதிவா போடணும். 

நம்ம ஜெட்லி அண்ணாத்த உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக போட படுகிற மாதிரியான படங்களை எல்லாம் பார்த்து ஜெட்லிய விட்டு பன்ச் விடறாரு. சில நல்ல படங்களுக்கு நடுவே அதிக மொக்கை படங்களை பார்க்கும் வலிமையை ஆண்டவன் ஒருசேர ஜெட்லியிடமே கொடுத்திருக்கிறார். ஜெட்லி அண்ணே! உங்களுக்கு மக்கள் கூட்டம்னா அலர்ஜியா? கூட்டம் இல்லாத படத்துக்கே அதிகமா போறீங்க.

ஹாலிவுட் பாலா உலக படத்தையெல்லாம் வுட்டு பிரிக்கிறாரு. பாலா அண்ணே, அதுவும் நீங்க சொல்ற 18 + படத்தையெல்லாம் ஒன்னு விடாம பார்த்துட்டு வரேங்க. ஹி! ஹி!
VISA அவர்கள் மிகவும் "உணர்ச்சி"பூர்வமா சூப்பரா கதை எழுதுவாரு. அவரோட கதைக்கு எப்பவுமே நான் ரசிகன்.

இந்த கேபிள் சங்கர் வாரா வாரம் திங்க கிழமை ஆனா கொத்து பரோட்டா போட்டுர்றாரு. நீங்க கடைசில போடுற "அந்த" ஜோக்கு நிறைய பேருக்கு அது நேயர் விருப்பம்.
பரிசல்காரன் அப்பப்ப அவியல் போடறாரு. (பிரபல பதிவர்ன்னு சொன்னதுக்கு தயவு செய்து யாரும் என்னை அடிக்க வராதிங்க அண்ணே)

அப்ப நாமளும் இது மாதிரி ஏதாவது ஒன்னு போடணும். என்ன போடலாம்?. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. (யோசிக்கிறேன்)
ஆப்.. ஆப்..ஆபாயில்...
ரைட்டு... இனிமேல் ஆபாயில் போடலாம்.
இது ஒரு நல்ல முடிவுன்னு தோணுது. ஏன்னா? ஆபாயில்ங்கறது எல்லோரும் அடிக்கடி சாப்பிடறது. நிறைய பேருக்கு புடிக்கும். ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடுவாங்க.

இதற்கு எனக்கு நம்முடைய தமிழ் குடிமகன்களின் ஆதரவு 234 சட்ட மன்ற தொகுதிகளிலும் முழுமையாக கிடைக்கும் என நம்புகிறேன். என்னுடைய ஆபாயில் படித்து அளவுக்கு அதிகமாக குடித்து ஆபாயில் போடுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அரசின் டாஸ்மாக் வருவாயும் கணிசமாக உயரும் என்ற காரணத்தால் தற்போதைய அரசின் ஆதரவும் இதன் மூலமாக எனக்கு கிடைக்க பெறுமென உறுதியாக நம்புகிறேன்.

இதற்கும் மேலாக பல அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், காமெடி நடிகர்கள் ஆகியோரின் ஏகோபித்த ஆதரவு நமக்கு கிடைத்துள்ளது என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
கீழே உள்ள படங்களில் யார் அரசியல்வாதி, யார் நடிகர், யார் காமெடி நடிகர் என்று குழம்பினால் அதற்கு ஆபாயில் கட்சி நிர்வாகம் பொறுப்பல்ல.











(இப்படிதான் நமீதாவுக்கு வணக்கம் வைக்க தெரியும். கண்டுக்காதீர்கள். நமக்கு ஆதரவு மட்டும் தான் முக்கியம். இப்பதான் மக்கள் ஆதரவு கொஞ்சம் கிடைச்சிருக்கு. அதனால் கவர்ச்சி படம் போட கூடாதுங்கறதுக்காக நானே MS Paint யூஸ் பண்ணி கவர்ச்சிய மறைச்சிட்டேன். ஹி! ஹி!. அப்படி செய்யா விட்டாலும் சில பெண்ணியவாதிகள் வந்து கரிய பூசிடுவாங்க. )


ஒரு வேளை ஒரு சில காரணங்களால் என்னுடைய ஆபாயில் யாருக்கும் பிடிக்காமல் போய், மோசமான விமர்சனங்கள் உண்டாகி என் மேல் முட்டை தாக்குதல் ஏற்பட்டால், அதை கொண்டு நிஜ ஆபாயில் சாப்பிட கூடிய சாத்திய கூறுகளும் உண்டாகலாம்.

ஆகவே என்னுடைய ஆபாயிலுக்கு நாலாபுறமும் உங்களுடைய பேராதரவை தந்து ஆபாயிலை வெற்றி பெற செய்யும்மாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.



                  டேய்! ஒழுங்கா படிங்க ஆபாயில்               
                      இல்ல குறைச்சிடுவேன் உனக்கு Half ஆயுள்.  




                       ஆபாயில் சாப்பிடு கண்ணு! 


அசின் : இதற்கு மேலும் யாராவது ஆதரவு கொடுக்கல, அப்புறம் மிராண்டா குடிச்சிட்டு வந்து மெர்சலாக்கிடுவேன். ஜாக்கிரதை!





Jul 13, 2010

கண்டுபிடித்து தாருங்கள் என் காதலியை

 

இன்னும் எத்தனை நாள் தான்
உன் பேச்சில்
நான் உறைந்து போவதாயும் 
உன் முத்தங்களில்
உயிர் கரைந்து போவதாயும்
உன் வெட்கங்கள்
என்னை கொள்ளை கொண்டதாகவும் 
கற்பனையாய் எண்ணிக் கொண்டு
கவிதைகளை வெளி வரச் சொல்லி
கட்டாயப் படுத்துவது?

எங்கே இருக்கிறாய்?
உனக்காய் எழுதிய கவிதைகளை
காண்பிக்கப்பதற்க்காக என்னுடைய
கவிதை நோட்டின் தாள்கள்
காற்றில்
பட படத்து கொண்டிருக்கின்றன. 

வார இறுதி நாட்களில்
கடற்கரைக்கு சென்று
உனக்கும் சேர்த்து
மணல் வீடு கட்டி வைத்து
காத்து கொண்டிருக்கிறேன்.

பேருந்து நிறுத்தங்களில்
திருவிழா கூட்டங்களில்
காபி விடுதிகளில்
இன்னும் இதர இடங்களில்
உன்னை தேடி கொண்டு இருக்கிறேன்
திசை காட்டி கருவி இல்லாது
சுற்றி கொண்டிருக்கும்
ஒரு மாலுமியாக.





கொஞ்சம் பிரேக், நிறைய கிலோ மீட்டர்





உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுத பட்ட பதிவு இது.
நாங்கள் ஐந்து பேர் ஒரு அப்பார்ட்மென்ல தங்கி இருக்கிறோம். 


போன வாரம் வெள்ளி கிழமை என் பிரெண்ட் குடிபிரகாஷ் என்னோட வண்டி வேணும்னு கேட்டு எடுத்துட்டு போயிட்டதால், என் இன்னொரு ப்ரெண்டு "மொட்டை"கிட்ட அவனோட வண்டிய கேட்டேன். 

அவனும் எடுத்துக்கோன்னு சொன்னான். பையன் கணக்கில் பெரிய ஆள். அதுக்காக அவன் maths நல்லா பண்ணுவான்னு அர்த்தம் இல்லை. எல்லாத்துக்கும் அவன் கணக்கு பார்ப்பான்.

இது வரைக்கும் அவனோட வண்டிய ஒட்டுனதில்லை.
போய் வண்டியை பார்த்தால் Egmore Exhibition -இல் வைக்கற ரேஞ்சில் தான் இருந்தது. சரின்னு வண்டிய எடுத்து ஸ்டார்ட் பண்ணினேன். கர கரன்னு ஹெலிகாப்டோர் மாதிரி பயங்கர சவுண்டு. இறக்கை மட்டும் தான் இல்ல. சத்தம் கேட்டு அப்பார்ட்மென்டே வெளிய வந்து எட்டி பார்த்தது. நல்லவேளை வண்டியில் இருந்து வந்த புகை மண்டலத்தால் என்னை யாரும் பார்க்க வில்லை.

ஓகே. பரவாயில்லைன்னு வண்டிய கெளப்பிக்கிட்டு போனதுக்கப்புறம் தான் தெரிஞ்சது Hand brake-க்கு ஒன்னு, "நானும் இருக்கேன்னு" வெறும் பெயருக்கு மட்டும் தான் இருக்கிறதென்று. 


நானும் என்னோட புது வண்டியை ஓட்டுகிற நினைப்பில் எடுத்தவுடனே முறுக்கிட்டேன். சுத்தமா கண்ட்ரோலே இல்லை. கால் ப்ரேக் மட்டும் என்மேல் பரிதாப்பட்டு கொஞ்சமாக பிடித்தது. நானும் சீட்டை விட்டு எந்திரிச்சு கால் ப்ரேக் மேல ஏறி நின்னு கிட்டே போறேன். ஓரமாக போகிற புல்டவுசர் வண்டிகாரனெல்லாம் என்னை திரும்பி பார்த்துட்டு போனான். அவனோட வண்டியை விட அதிகம் வந்ததால் ஆச்சர்யம் அவனுக்கு.

எந்த கார் மேலேயோ, பஸ் மேலேயோ அடிச்சு ஹெலிகாப்டர்ல பறக்கற மாதிரி பறந்துடுவோமான்னு ஒரே பயம் எனக்கு. ஆந்திர முதலமைச்சர் ராஜ சேகர் ரெட்டிக்கு அடுத்து ஹெலிகாப்டர் விபத்துல சாக போறது நான்தானோ என்று நிறைய Daymare ல்லாம் வந்து விட்டு போனது. 

எதிர்ல வர்ற பல்சர் பைக்கை பார்க்கும் போதெல்லாம் எமதர்ம ராசா எருமைல வர்ற மாதிரியே ஒரு பிரம்மை. "பயணங்களில் எச்சரிக்கை அவசியம். எமன் எந்த வாகனத்திலும் வரலாம்"  என்று போன வாரம் ராசி பலன்லயே போட்டு இருந்தது.


கடைசியாக எப்படியோ எந்த அடியும் படாமல் எங்க அபார்ட்மென்ட்ல வந்து ஹெலிகாப்ட்டரை நிறுத்திட்டு சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டேன். "இனிமேல் நம் வாழ்நாளில் இந்த வண்டியை எடுக்க கூடாது"

டேய் மொட்டை! உன் வண்டிய கூட மன்னிச்சுடலாம். ஆனா வண்டிய குடுக்கறதுக்கு முன்னாடி ஒரு வாக்கியம் சொன்னியேடா. அது இன்னிக்கு வீட்டுல இருந்த Sprite பாட்டில் பெப்சி பாட்டில் ரெண்டையும் மாத்தி மாத்தி குடிச்சும் இன்னும் ஜீரணம் ஆகலைடா. அந்த வார்த்தை என்னன்னா?


"வண்டிய நீ மட்டும் ஓட்டு. வேற யாருக்கும் கொடுத்துடாத."

 
அவனை கெட்ட வார்த்தையில் திட்டுறேன் என்றோ, கொடுமையாக அவனை ஓட்டுகிறேன் என்றோ என்மேல் அவன் கோபத்தில் இருந்திருக்கலாம். ஆனால் அதே நேரம், இதை அவன் "செத்தா ஒருத்தன் மட்டும் தான் சாகனும் வேற யாரும் சாக கூடாது" என்ற ஒரு நல்லெண்ணத்தில் கூட சொல்லியிருக்கலாம்.



அடுத்த நாள் சனி கிழமை "கொஞ்சம் தேனீர், நிறைய வானம்" ன்னு ஒரு கருத்தரங்கு அண்ணா யுனிவர்சிட்டி Alumni கிளப்பில் ஏற்பாடு செய்து இருந்தார்கள். நானும் அதுக்காக ரெடி ஆகி கொண்டிருந்தேன். வெள்ளி கிழமைதான் அந்த கதைன்னா, சனி கிழமை நம்ம பொய் புலவர் குடிபிரகாஷ் வந்து அவனோட கேர்ள் பிரெண்டுடன் ஊர் சுற்ற என்னோடைய வண்டியை வாங்கி கொண்டு, அவனோட பிரெண்டு வண்டின்னு சொல்லிட்டு ஒரு பழைய பைக்கை கொடுத்தான். என்ன இதுல வித்தியாசம்னா, கை பிரேக் கொஞ்சமா இருந்துச்சு. கால் ப்ரேக் கொஞ்சம் கூட இல்ல. 

ஆனால் இந்த முறை நான் கொஞ்சம் முன்னாடியே பிரேக் இல்லன்னு தெரிஞ்சு சுதாரிசுக்கிட்டு ரொம்ப மெதுவாவே ஓட்டிட்டு போனேன். ஆனா என்ன, சைக்கிள்ல போறவன்னேல்லாம் சைடு வாங்கிட்டு போய்கிட்டு இருந்தான். நானும் ஏதோ வண்டிய ஓரம்கட்டி நிறுத்தற மாதிரியே பாவ்லா பண்ணிக்கிட்டு நாப்பது கிலோமீட்டர் போய்ட்டு வந்துட்டேன். 


"கொஞ்சம் பிரேக், நிறைய கிலோ மீட்டர்" 

இதுல ரெண்டு பேரும் சேர்ந்து சொல்லிவைக்காம என்ன பண்ணுனாங்கன்னா? என்னோட பிறந்த நாளுக்கு ஏதோ சர்பிரைஸா கிப்ட் கொடுக்கற மாதிரி, பைக்க பத்தி எதுவுமே சொல்லாம என்கிட்ட பைக்க கொடுத்துட்டானுன்ங்க. பாவி பசங்க.

What a Scary weak end!




 


Jul 8, 2010

கிரெடிட் கார்டு Vs டெபிட் கார்டு (Real life Comparison)



இந்த கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுக்கும், நம்முடைய வாழ்க்கைக்கும் நிறையவே சம்பந்தங்கள் இருக்கிறது.


கிரெடிட் கார்டு வச்சிருகிறதுங்கறது, ஒரு பொண்டாட்டியை கட்டி குடும்பம் நடத்துவது மாதிரி. ஒன்றே ஒன்று இருந்தால் மட்டும் தான் வாழ்க்கையை கஷ்டப்படாமல் ஓட்ட முடியும். டெபிட் கார்டு மட்டும் வைத்துக் கொள்வது கல்யாணமாகாத பேச்சுலர் வாழ்க்கை மாதிரி. வாழ்க்கைய மிக சந்தோசமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் நம்முடைய தேவைக்கேத்த மாதிரி வாழலாம்.

கிரெடிட் கார்டாக இருந்தாலும், பொண்டாட்டியாக இருந்தாலும் ஒன்றுக்கு மேல் போனால், நீங்கள் கோடிஸ்வரனாக இருந்தாலும் அது உங்களை தெருக்கோடி பிச்சைக்காரன் ஆக்கி விடும். எங்கே?, எப்போது?, எதற்க்காக?, யாருக்காக? கடன் வாங்கினோம் என்றே தெரியாமல் போய்விடும். அதே போல் ஒரு பொண்டாட்டிய திருப்தி படுத்தறதே பெரிய விஷயம் (கேட்கறத வாங்கி கொடுத்து. ஹி! ஹி! ). ஆனா டெபிட் கார்ட்டில் எவ்வளவு பணம் இருக்கின்றதோ அதை பார்த்து, யாருக்கும் பயப்படாமல், செலவு செய்யலாம். "பெண் சிங்கம்", "வெளுத்து கட்டு" போன்றஅரிய படங்களை கூட பிளாக்கில் டிக்கெட் வாங்கி சிரிச்சுகிட்டே பாக்கலாம்.

வெளியே கடைகளில் ஷாப்பிங் போகும் போதோ, சாப்பிட ரெஸ்டாரென்ட்க்கு போகையிலோ, கிரெடிட் கார்டு உள்ள மதிப்பே தனி தான். அதேதான், சொந்தகாரங்க வீட்டிற்கு போகும் போதோ, அப்பார்ட்மென்ட்ல வாடகைக்கு வீடு கேட்கும் போதோ, கல்யாணம் ஆகி பேமலியோட போனால் தான் மரியாதை கிடைக்கும். "சார் கார்டுல பேலன்ஸ் இல்ல", "இங்க டெபிட் கார்டெல்லாம் Accept பண்ன மாட்டோம்"ன்னு அசால்ட்டா சொல்லி அசிங்க படுத்திடுவாங்க. பேச்சுலர் ஒருத்தன் வாடைகைக்கு வீடு கேட்க போகும் போது, பிச்சைக்காரனும் அங்கே வந்தான் என்றால், முதலில் நம்மளை துரத்திவிட்டு அப்புறம் தான் பிச்சைகாரனை துரத்துவார்கள். (எங்க அப்பார்ட்மென்ட்ல இருக்கிற புறா கூட என்னோட பைக்க தேடி புடிச்சு அசிங்கம் பண்ணிட்டு போய்டுதுங்க).

கையில் சுத்தமாக காசு இல்லை என்றால் கூட, கிரெடிட் கார்டு யூஸ் பண்ணி, அப்போதைக்கு ATM -ல் பணம் எடுத்து கொள்ளலாம். பொண்டாட்டிக்கிட்டேயோ அல்லது அவள் அப்பன்கிட்டேயோ பணத்தை வாங்கி விட்டு "அப்புறம் குடுக்கிறேன்னு" அல்வா குடுக்கற மாதிரி. ஆனால் காசே இல்லாமல் டெபிட் கார்டு மூலம் ATM -ல் பணம் எடுக்க போனீங்க என்றால், ATM மெசினே மூஞ்சில எச்சில் துப்பிடும். வேலை இல்லாமல் பேச்சுலராக சுற்றி கொண்டு இருந்தீங்க என்றால் பிரெண்ட்ஸ், சொந்தகாரங்க ஒருத்தனும் பைசா குடுக்க மாட்டாங்க.

சாப்ட்வேர் கம்பெனியில் வொர்க் பண்ணி மாதா மாதம் அக்கௌன்ட் நிறைய சம்பளம் வாங்கி கொண்டு இருந்தீங்கன்னா Golden, Platinum ன்னு சும்மாவே கூப்பிட்டு கிரெடிட் கார்டு கொடுப்பது போல, கிலோ கணக்குல தங்கத்தொடும் அவங்க பொண்ணையும் போட்டி போட்டுக்கிட்டு கொடுப்பாங்க. ஆனா வேலை இல்லாம வெட்டிபயலாக சுற்றிக்கொண்டு இருந்தீங்கனா, டெபிட் கார்டுக்கு அக்கௌன்ட் ஓபன் பண்ணறதுக்கே 500, 1000 ரூபாய் இருந்தால் தான் பண்ன முடியும். பொண்ணு கூட நாமளாக தான் கேராளாவில் இருந்து காசு போட்டு கட்டிகிட்டு வரணும். 

நீங்க குடும்பஸ்தரா?

கிரெடிட் கார்டு வைத்திருந்தீங்கன்னா தூக்கி எறிஞ்சுடுங்க. அப்படி நீங்களும், ரெண்டுமே வச்சு இருக்கணும்ன்னு ஆசை பட்டால், கிரெடிட் கார்டு தூக்கி எறிந்த இடத்தை உங்கள் மனைவிக்கு காண்பித்து விடுங்க. அப்புறம் அவங்களுக்கு தெரியும் என்னென்ன வாங்கனும்னு (அவங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும்).

சமையல் பாத்திரத்தியே அப்படி கை வலிக்க தேய்த்து கழுவறவங்களுக்கு, கிரெடிட் கார்டு தேய்க்கறது எல்லாம் சப்ப மேட்டரு. அதன் பின் தினமும் உங்க வீட்டில் பாச கணவனுக்கு பாராட்டு விழா நடக்கும்.  கலைஞர் தாத்தா மாதிரி உட்கார்ந்து கொண்டு சிரிக்காமல் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்.

இதை படித்து விட்டீர்களா?

இப்போ உங்க கிரெடிட் கார்டு எங்கே இருக்குன்னு பாருங்க. அப்புறம் உங்க மனைவி வீட்டில் இருக்காங்களான்னு செக் பண்ணுங்க. இரண்டுமே இல்லையா? கவலை படாதிங்க. அப்படியே உங்க ப்ரவுசர்ல இன்னொரு Tab ஓபன் பண்ணி கிரெடிட் கார்டு வெப் சைட்ல Login ஆகி எவ்வளவு பில் வந்திருக்குன்னு மட்டும் பாருங்க. வேற எதுவும் உங்களால பண்ண முடியாது.


நீங்க பேச்சுலரா? 

உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணுச்சுன்னா, கிரெடிட் கார்டு வச்சுகாதிங்க.  கிரெடிட் கார்டு வச்சுக்கனும்ன்னா கல்யாணம் பண்ணிக்காதிங்க. இரண்டில் எதாவது ஒன்றை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். அதையும் மீறி கல்யாணம் பண்ணுணீங்கனா, அந்த கிரெடிட் கார்டை தூக்கி உங்க பொண்டாட்டி கையில் கொடுத்து விடாதிர்கள்.


Jul 7, 2010

அந்நியாய ஆசைகள்

 
மிகவும் பிடித்தமான
கவிதை ஒன்றை
வாசிக்கும் போதெல்லாம்,
அதன் சொந்தகாரனாக
நானே
இருக்க ஆசை படுகிறேன்.

அதுவே
அழகான ஆன்டிகளை பார்க்கும் போதும்.





Jul 6, 2010

புட்பால் கிரேசி இருபத்தி நான்காம் புலிகேசி



என் பிரெண்டு முருகன் ஒரு பயங்கரமான புட்பால் பைத்தியம். அவனையும் சேர்த்து நாங்க ஆறு பேர் ஒரே வீட்ல தங்கி இருக்கோம். புட்பால் அவனோட வாழ்க்கைல ஒரு அங்கமாகவே ஆயிடுச்சு. எப்படி எல்லாம் அது அவனோட வாழ்க்கைலயும், எங்க வாழ்க்கைலயும் விளையாடுதுன்னு பாக்கலாம். 

  • தினமும் நைட் தூங்கும் போது, புட்பால்ல கொஞ்சம் காத்த புடுங்கி விட்டு தலைகாணிக்கு பதிலா, அதை தலைக்கு வச்சுதான் தூங்குவான்.
  • வெளிய போயிட்டு வந்து கழட்டிபோடுற துணிய கூட, புட்பால் மாதிரி சுருட்டி தான் மூலையில் போடுவான்.
  • பைக் வச்சிக்கிட்டு ட்ராபிக்ல நின்னுகிட்டு இருக்கும் போது கூட சிக்னல் லைட்ட பார்த்து " டேய்! ரெட் கார்டு காமிச்சிட்டாங்க, எல்லோ கார்டு போட்டுட்டாங்க "  அப்படின்னு தான் சொல்லுவான்.
  • ஏதாவது ஒரு பொண்ண பாத்து சைட் அடிக்கும் போது, அவளுக்கு பார்றா புட்பால் மாதிரி கும்முன்னு இருக்கு என்பான்.
  • இவனுக்கு பிடிச்ச ஹாலிவுட் நடிகை Bay Watch புகழ்  பமீலா ஆண்டர்சன். சின்ன வயசுல இருந்தே Bay Watch யும் புட்பால் மேட்ச்யும் டிவில,  ரிமோட்ட வச்சு swap பண்ணி  swap பண்ணி பார்த்துட்டு இருப்பான். வீட்டுக்குள்ள யாரவது வந்தா புட்பால் மேட்ச். யாரும் இல்லைனா Bay Watch. இப்படி அவனுக்கு புட்பால் தற்செயலாதான் புடிக்க ஆரம்பிச்சுது.
  • எதாவது சொந்தக்காரங்க கல்யாணமாய் இருந்தாலும் சரி, இல்ல பக்கத்துக்கு தெருல ஏதோ ஒரு பாட்டி செத்திருந்தாலும் சரி, "ரொனால்டோ" இல்ல "ரூனி" ன்னு பேரு போட்டு இருக்குற புட்பால் டீ ஷர்ட் தான் போட்டுட்டு போவான். வீட்டுல அம்மா கரண்டு பில் கட்டிட்டு வர சொன்ன கூட, Nike shoe தான் போட்டுட்டு போவான்.
  • காலேஜ்ல  படிக்கறப்ப எல்லா எக்ஸாம்லயும்  எக்ஸ்ட்ரா டைம் கேட்டு அந்த ஹாலுக்கு வர்ற சூப்பர்வைசர்ற வேணும்னே எரிச்சல் படுத்துவான்.பரீட்சையில் எந்த சப்ஜெக்டா இருந்தாலும் சரி, "Heading" மட்டும் படிச்சிட்டு போயே எழுதி பாஸ் ஆகிடுவான்.  Maths எக்ஸாம்ல மட்டும் அதனால பெயில் ஆயிடுவான்.
  • அதுவும் இந்த புட்பால் உலக கோப்பை ஆரம்பிச்சதுக்கு அப்புறம், அடிக்கடி ஆபிஸ்க்கு மட்டம் போட்ருவான். லீவ் சொல்லுறதுக்கு மேனஜர்க்கு மெயில் அனுப்பும் போது கூட Suffering  from football fever அப்படின்னு தான் அனுப்புவான்.
  • தூங்கும் போது கூட புட்பால் விளையாடுற மாதிரி கனவு கண்டு, பக்கத்துல படுத்திருக்கிற பசங்கள உதைச்சு கிட்டு தூங்க விட மாட்டான்.
  • கிரவுண்ட்ல போய் விளையாடற அளவுக்கு உடம்பு Fit இல்லைனாலும், புட்பால் கேம் கம்ப்யூட்டர்ல install பண்ணி குடுத்துட்டா போதும், கீ போர்ட உதைச்சுக்கிட்டே அவ்வளவு  அருமையா விளையாடுவான்.
  • ஸ்கூல்ல படிக்கும் போது ஸ்போர்ட்ஸ் பீரியட்ல, புட்பால் விளையாடும் போது, வேற யாராவது அடிச்சு இவனோட கால்ல பந்து பட்டா கூட, அவன்தான் பந்த டச் பண்ணதா நாலு நாளைக்கு பேசிக்கிட்டு இருப்பான். இப்படி ஒரு தடவ யாரோ அடிச்சதுல இவன் மூக்குல பட்டு சிலி மூக்கு உடைஞ்சதுல இருந்து, கீ போர்டு தவிர வேறு எதையும் தொடுறது இல்ல.
  • விளையாண்டு கோல் போட தெரியலைனாலும், மத்தவங்கள பத்தி கோல் மூட்டுறது இவனுக்கு கை வந்த கலை.
  • ஆபீஸ் மீடிங்ல பேசும் போது கூட, heading பண்ற மாதிரி தலைய ஆட்டி ஆட்டி தான் பேசுவான். புடிச்ச தமிழ் நடிகர் தல அஜித். அவர் தலைய ஆட்டி ஆட்டி டான்ஸ் ஆடுறத பாத்து (அவரால இடுப்ப ஆட்ட முடியாது) மெய் மறந்து பாக்க ஆரம்பிச்சுடுவான்.
  • அன்னிக்கு பாக்கற மேட்சுல அவனோட கிளப் டீம் தோர்த்திடுசுன்னா, அப்பவே சிஸ்டத்த ஆன் பண்ணி, FIFA கேமில் எதிர் டீமை படு கேவலமா தோற்கடிச்சுட்டு தான் சாந்தமாவான்.
  • போலியோ வந்து அட்டாக் ஆன கோழி மாதிரி இருந்தாலும், அவனோட  போர்ட்போலியோல,  extra skills பகுதியில் Football Player ன்னு தான் போட்டு இருப்பான்.
  • புட்பால் தவிர இந்த புட்பால் மண்டயனுக்கு புடிச்ச இன்னொரு கேம், கேரம் போர்டு தான். காரணம் என்னன்னு கேட்டா, அதுல Striker இருக்காம்.
  • பக்கத்துல யாராவது கொஞ்சம் பெரிய பின்புறத்தோடு படுத்திருந்தால் போதும், நைட்டு தூக்கத்துல உதைச்சு கிட்டே தான் தூங்குவான்.

சரி படிச்சுடீங்க!. ஒரு கோல் போட்டுட்டு போங்க. சாரி, ஒரு Like போட்டுட்டு போங்க. பாருங்க, பய புள்ள என்னையும் மாத்திபுட்டான். Oh! God, Save Me.




    Jul 5, 2010

    கள்வாணி - நமீதா திரை விமர்சனம்




    துபாய்ல இருந்து அப்பா (இளவரசு) அனுப்புகின்ற பணத்தில் ஊரில் வெட்டியாக சுற்றிக்கொண்டு செலவு செய்து கொண்டிருக்கிற நம்ம ஹீரோ 'பசங்க' பட விமல். பக்கத்து ஊர்ல இருந்து ஸ்கூல் படிக்க வர்ற வில்லனோட தங்கை புது முக ஹீரோயின் ஓவியா. இந்த ரெண்டு ஊருக்கும் எப்புவும் காய்தான் (சண்டை). இதற்கு இடையில் ஹீரோவிற்கு ஹீரோயின் மேல லவ்வு வந்து கடைசியில் 
    எப்படி தாலி கட்டுகிறார் என்பது தான் கதை. உண்மையாகவே படு வித்தியாசமாக யாரும் நினைச்சி பார்க்காத வகையில் தாலி கட்டுவார் (ஹீரோயினே நினைச்சு பார்க்கலை).

    படம் நெடுக காமெடியை கலந்து திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர். படம் முழுதும்
    மக்கள் சிரிச்சிகிட்டே தான் இருக்கிறார்கள். இடைவேளைக்கு பிறகு கதை பயங்கர விறுவிறுப்பாக நித்தி மேட்டர் மாதிரி சர்ர்ன்னு பத்திகிட்டு போகுது. நாமளும் பக்கத்துக்கு சீட்டு பருவ சிட்டோடு சேர்ந்து கதையோடு ஒன்றி விடுவது நிஜம்.

    முதல் தடவை பார்க்கும் பொழுது சில சீரியஸ் ஆன சீன்கள் வந்தால் கூட கொஞ்ச நேரத்துலையே எதாவது காமெடியை போட்டு சிரிக்க வச்சுடறாங்கப்பா. 


    ஹீரோவோட அம்மா சரண்யா ('நாயகன்' நாயகி), ஓவ்வொரு தடவையும் தன் மகன் தப்பு பண்ணும்போது "அவனோட நேரம் தான் அவன் அப்படி பண்ணிக்கிட்டு இருக்கான். இந்த ஆவணி போய் ஆவடி வந்தா, டாப்ல வந்துருவான்னு பட்டிகாட்டு ஜோசியர் சொன்னார்" என்று வசனம் பேசிக்கொண்டே இருப்பார்.


    ஆனால், படம் ஆரம்பித்தில் இருந்து கடைசி வரைக்கும் விமல் டாப்லேயே இருக்கிறார். தெனாவெட்டான பேச்சு, பரட்டை தலைன்னு RX100 பைக்கை எடுத்துக்கிட்டு சுத்துவதுமாக பட்டையை கிளப்பியிருக்கிறார். புது முகம் ஹீரோயின் நடிப்பு ஓகே.

    "பஞ்சாயத்து"ங்கர கேரக்டர்ல வர்ற கஞ்சா கருப்பு, நீண்ட நாளுக்கு அப்புறம் அவரு அழுது நம்மை சிரிக்க வைக்கிறார். மொத்த களவாணி பசங்களும் சேர்ந்து அவரை தொல்லை பண்ணி சாக அடிக்கறாங்க. அவரு செத்துட்டார்ன்னு ஊர் முழுதும் காரில் ரேடியோ வைத்து அறிவிப்பது நல்ல காமெடி.

    E=mc2 மாதிரி ஐன்ஸ்டீன்க்கு போட்டியாக ஒரு சமன்பாட்டை டைரக்டர் கண்டுபிடித்து அதை சமனும்(derive) செய்கிறார். இனி பள்ளிக்கூட பசங்க எல்லாம் இதை யூஸ் பண்ணாம இருந்தால் சரி. 


    ஒயின் ஷாப்ல மெனு எடுக்கறது, 
    மினி பஸ்ல சைக்கிள தூக்கி வச்சுக்கிட்டு தப்பிக்கறது,
    ஹீரோயினுக்கு வீட்டு பாடம் எழுதாதிலிருந்து தப்பிக்க ஐடியா கொடுக்கறது


    என சின்ன சின்ன விஷயங்கள் நிறைய நன்றாக பண்ணியிருக்கார் இயக்குனர்.

    பாட்டெல்லாம் சம்மர்ல வர்ற மழை மாதிரி வர்றதும் தெரியாம போறதும் தெரியாம லேசாக நனைச்சிட்டு போகுது. டம்ம டும்மா பாட்டு கதாபாத்திரங்களோடு சேர்ந்து நம்மளையும் தட்ட வைக்கின்றது. 


    கிளைமாக்ஸ் ஜாலி கொண்டாட்டம். மக்கள் end டைட்டில் முடிஞ்சு ஸ்க்ரீன் மூடுகின்ற வரைக்கும் பார்த்துவிட்டு தான் கிளம்பறாங்க. கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம். உங்க சின்ன வீடு, பெரிய வீடு எல்லாத்தையும் கூட்டிட்டு போங்க.

    நமீதா டச்: கள்வாணி மச்சான் மனச கள்வாண்டுட்டான்.

    டிஸ்கி: கடைசி வரைக்கும் தலைப்பை தவிர எங்கடா நமீதாவொட ஒரிஜினாலிட்டி காணோம்ன்னு பார்க்கறீங்களா?. நிறைய பேர் ஹிட்ஸ் வர்றதுக்காக சாரு பேர யூஸ் பண்ணுவது போல, நான் நமீதா பெயரை யூஸ் பண்ணியுள்ளேன். இதற்கு நமீதாவிடம் இருந்து ஹிட்ஸ் வராமல் இருந்தால் சரி.



    Jul 1, 2010

    பெண்ணாகிய பேனா

     
     
    கண்ணுக்கு மையிட்டு
    கவிழ்த்துகின்ற பார்வையாலே
    கதையொன்று எழுதுகிறாய்
    காகிதமாய் நான் மாற.

    பார்க்கும் பார்வைகளை
    அழுத்தமாய் பார்க்காதே
    ஈர்க்கும் உன் (இ)மையால்
    என் இதயம் உய்த்து விடும்.

    என் வாழ்கையின் அர்த்தங்களை
    வரிகளாய் எழுதுகிறாய்
    என்று எண்ணிதான்
    காற்றில் பட படத்திருந்தேன்.

    முழுதாக முடிக்கும் முன்னே
    எடுத்து எறிந்தாய்
    என்னை
    முள்ளை போலே

    காரணங்கள் யாது என்றேன்
    கதையில் சிறு மாற்றங்கள் என்றாய்.
    வலி கொண்டு உணர வைத்தாய்,
    அவை கண்கள் அல்ல
    முட்கள் என்று.





    எனக்கு ஒரு முடி(வு) தெரிஞ்சாகனும்



    பொதுவாக நீண்ட தலைமுடியை வைத்துக் கொண்டு இருக்கும் பையன்களை பார்த்தாலே எனக்கு அவர்களிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டுமென்று தோன்றும்.

    எப்படி அவர்களால் இப்படி வளர்க்க முடிகிறது?
    கஷ்டமாக இருக்காதா?

    இப்படி நிறைய.

    • தினமும் நீங்கள் காலையில் குளித்தவுடன், உங்கள் அம்மா தான் தலை துவட்டி விடுவாங்களா? இல்ல, நீங்களே பொண்ணுங்க மாதிரி தோள் மேல முடியை எடுத்து போட்டு துவட்டி கொள்வீர்களா? துவட்டிய பின், முடியை அள்ளி முடிந்து விட்டு, வாசலில் போய் கோலம் போடுவீர்களா?
    • ரொம்ப குறைச்சலாக முடியை கட் (வட்டு கிராப்) பண்ணி கொள்கிற எனக்கே ஏகப்பட்ட பொடுகு தொல்லை இருக்கிறது. நீங்கள் எப்படி சமாளிக்கிறீங்க? சன் மியூசிக்கோ அல்லது இசை அருவிக்கோ போன் பண்ணி கூந்தல் பராமரிப்பு பற்றி குறிப்புகள் சொல்லுவீங்களா? (சொன்னா இதை படிக்கிற பிகருங்களுக்கு எல்லாம் கொஞ்சம் உபயோகமா இருக்கும்)
    • வாரம் ஆனா, சனிகிழமை சீகைக்காய் போட்டு உங்கள் அம்மா உங்கள் தலையை தேய்ச்சு விடுவாங்களா? உலர வைக்க முடிக்கு சாம்பராணி புகை எல்லாம் பிடிப்பிங்களா?
    • இந்த பேன் தொல்லையை எப்படி சமாளிக்கீரிங்க? நடு வாசப்படியில் உட்காரவைத்து உங்களுக்கு யார் பேன் பார்ப்பாங்க?
    • பச்சை, சிவப்பு மாதிரி கலர்கலரா ஒரு டீ சர்ட் போட்டுக்கிட்டு  போகும் போகையில், உங்களை பிகர் என்று தவறாய் நினைத்து யாராவது பாலோவ் செய்து வந்து, உங்களின் பின்புறத்தை தட்டி ஏமாந்து போய் இருக்கார்களா? நீங்கள் வேண்டுமென்றே யாரையாவது விளையாட்டுக்காக ஏமாற்றி இருக்கீங்களா?
    • வராவாரம் பியூட்டி பார்லர் போய் முடி பராமரிப்பு செய்வீர்களா? எத்தனை நாளுக்கு ஒரு முறை சலூனுக்கு செல்வீர்கள்? மாசம் பட்ஜெட் சமாளிக்க முடியுதா?
    • உங்களுக்கு கேர்ள் பிரெண்ட் இருந்துச்சுன்னா, நீங்களும் உங்க கேர்ள் ப்ரெண்டும் மாற்றி மாற்றி தலை வாரி  கொள்வீர்களா? மற்ற பொண்ணுங்க எப்போதாவது உங்கள் முடியை பார்த்து பொறாமை கொண்டு அலைந்து இருக்காங்களா?
    • உங்கள் அக்கா தங்கச்சியோடு, முடியை பிடித்து சண்டை போட்ட அனுபவம் இருக்கா? அப்படி யாரும் இல்லாத பட்சத்தில், தண்ணி பிடிக்க போகும் போது, குழாய் அடியிலாவது சண்டை போட்டதுண்டா?
    • உங்க வீட்டில் யாராவது டூர் போனால், வரும் போது உங்களுக்கு ஹேர் பின், பேண்ட்(Band), கிளிப் இதெல்லாம் வாங்கிட்டு வருவாங்களா?
    • கிரிக்கெட் விளையாடும் போது, தலை முடி டிஸ்டர்ப் பண்ணாதா?  அப்போது மட்டும் Band மாட்டிக் கொள்வீர்களா?
    • நீங்கள் blog வைத்திருந்தால், Hair Care பற்றி Post போடுவீங்களா?
    • உங்க கூந்தல் பற்றி எந்த பெண்ணாவது கவிதை எழுதி, காதலித்து பைத்தியமாய் அலைந்து இருக்காங்களா?


    "இத பத்தி என்ன மயித்துக்குடா கேட்கற?" என்று கோபித்து கொள்ளாதிர்கள்.

    யாராவது தெரிந்தால் பதில் கேட்டு சொல்லுங்களேன்.




    அத்தனைக்கும் ஆசை படு



    அத்தனைக்கும் ஆசை படு 
    ஜத்குரு ஜாக்கி வாசுதேவ் சொன்னார்.

    ஒன்றுக்கு தான் ஆசை பட்டேன்
    எதிர் வீட்டு அங்கிள் 
    அடிக்க வருகிறார்.