Jun 30, 2010

நிறங்களின் அரசி



உன்னை பார்த்து பழகிய நாள் முதலே
பல வண்ணங்களால்
எனது உலகையே  
கலகம் செய்தாய்.

நீல நிறங்களால்
வான் நீலத்தையும் நீர்த்து போக செய்தாய்.
பச்சை நிறங்களில்
பசுமை புரட்சி செய்தாய்.
மஞ்சள் நிறத்தால்
சூரியனையும் சுருங்க வைத்தாய்.
சிவப்பு நிறத்தால்
எரிமலையை குமுற வைத்தாய்.
இன்னும் பல
பெயர் அறியபடாத நிறங்களில்
மலர்களை மதி
மயங்க வைத்தாய்.

இறுதியாக கரிய நிறத்தால்
என்னை முழுதாக
இருளில் மூழ்கடித்தாய்.

நிறங்கள் அற்று  நான். 




4 comments:

Riyas said...

நிறங்களினால் ஒரு மாயாஜாலம்.. அழகு

Riyas said...

நான் தான் முதல் "வட" எனக்குத்தான்

அகல்விளக்கு said...

வாவ்....

சூப்பர் நண்பரே...

ப்ரியமுடன் வசந்த் said...

//இருளில் மூழ்கடித்தாய்.

நிறங்கள் அற்று நான். //

இதுவே தலைமை வரிகள்
சிறப்பான சிந்தனைகள்...