Jun 25, 2010

கல்லூரி பேருந்து


 
கல்லூரி பேருந்து 
உன் நிறுத்தம் 
வருவதற்கு முன்பே 
ஏறி அழகாய் அமர்ந்து கொள்கிறாய்
என் நினைவில்.

நீ வராத நாட்களில்
கல்லூரி பேருந்து
கரும் புகையை கக்கிக் கொண்டு
என் உடலை ஏற்றி செல்லும்
ஓர் சவ ஊர்தியாய்
உருமாற்றம் கொள்கிறது.

உனை காணும் நோக்கிலே
தினமும் கல்லூரி வருவதால்
வருடா வருடம்
தவறாமல் பெறுகிறேன்
வருகை பதிவேட்டில்
நூறு சதவிகிதம்.

நீ இருக்கும் வரை
கல்லூரி பேருந்தின்
ஜன்னலோர இருக்கைகள்
சிறிதும்
என் கவனம் ஈர்ப்பதில்லை.




8 comments:

அன்புடன் நான் said...

காதல் கலகம் செய்கிறது... உங்க கவிதை.
பாராட்டுக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

ரொமாண்டிக்...

செந்தில்குமார் said...

அம்புட்டும் காதல் காதல் தானே கார்த்திக்

Riyas said...

அழகான கவிதை..

Swengnr said...

கவிதை அருமை !

அன்புடன் மலிக்கா said...

காதல் எல்லாம் செய்யும் அதோடு கவிதையும் செய்யும் இல்லையா!
அருமை..

AkashSankar said...

நல்லதொரு காதல் கவிதை...

AkashSankar said...

நல்லதொரு காதல் கவிதை...