Dec 23, 2010

இளைய தளபதி விஜயின் மாஸ் - ஆபாயில்


ற்போது நாட்டில் பருப்பை விட வெங்காயத்தின் விலை அதிகம் ஆகிடுச்சு.
டேய் தக்காளி! இனிமேல் எவனாவது "நீ என்ன பெரிய பருப்பா?" கேட்டிங்கின்னா டென்ஷன் ஆகிடுவேன். வேணுமுன்னா "நீ என்ன பெரிய வெங்காயமா?" அப்படின்னு திட்டிக்கோங்க. 

இந்த வாரம் ஒரு கடைல சாப்பிட போயிருக்கான் என் பிரெண்டு. சப்ளையரிடம் "வெங்காயம் கொஞ்சம் அதிகமா போட்டு ஒரு அம்லேட் கொடுங்க" அப்படின்னு ஆர்டர் பண்ண,  அதுக்கு அந்த சப்ளையர், "தம்பி, ஒரு முட்டை வேணும்னாலும் எக்ஸ்ட்ராவா போட சொல்றேன். ஆனா வெங்காயம் மட்டும் கேட்காதிங்க".

அதனால் இனி கடைகளில் (வலைகளில்) கொத்து பரோட்டா, (சாண்ட்விட்ச் அண்ட்) நான்வெஜ் அயிட்டம்ஸ், ஆம்லேட் இதுமாதிரி எல்லாம் சாப்பிடாமல் நம்ம ஆபாயில் மட்டும் சாப்பிடுங்க. ஒரு "வெங்காய" பிரச்சனையும் வராது. ஹி! ஹி!




வ்வொரு வருசமும் ஆங்கில புத்தாண்டுக்கு எங்க அபார்ட்மென்ட்ல பங்ஷன் நடத்துவாங்க. விளையாட்டு போட்டி, பாட்டு மற்றும் டான்ஸ் இது மாதிரி நிறைய நடக்கும். "இந்த வருஷம் விளையாட்டு போட்டி எதிலாவது கலந்துகிறீன்களாப்பா?" அப்படின்னு கேட்டாங்க. உங்க லிஸ்ட்ல "அம்மா அப்பா விளையாட்டு போட்டி இருக்கா?"



ரசியல்வாதி ஆகணும்ன்னா பரபரப்பா எதாவது பண்ணிகிட்டே இருக்கணும்.  நம்ம டாக்டர் விஜய் அதிமுகவில் சேர போறதா நியூஸ் கெளப்பி பரபரப்ப உண்டாக்கி இருக்கார். இதற்கு பின்னால் உள்ள பிண்ணனி காரணம் என்னவென்று பார்த்தால்.  "எத்தனை நாளைக்கு தான் அப்பா பேச்சையே கேட்டுக்கொண்டு இருப்பது? கொஞ்சம் நாளைக்கு அம்மா பேச்சையும் கேட்கலாமேன்னு தான்".

ஆனா நம்ம தளபதியோட மாஸ் என்னன்னு என்னோட முந்திய ஆபாயிலின் (சிலையான விஜய்) ஹிட்ஸ் பார்க்கும் போது தான் தெரிஞ்சது. அதனாலதான் இந்த ஆபாயிலுக்கும் தளபதியே தலைப்புல வந்துட்டாரு. ஆனா தளபதி தேர்தல்ல நின்னா கண்டிப்பா என் ஓட்டு அவருக்கு தான். ;-)



போன வாரம் எங்க மாமா வீட்டுக்கு அவங்களோட ஆறு வயது குட்டி பையன பார்க்கலாம்ன்னு போயிருந்தேன். வீட்டுல அத்தை மட்டும் தான் இருந்தாங்க. எங்க மாமான்னு கேட்டேன். "எத்தனை நாளைக்கு தான் திரும்ப திரும்ப வடிவேலு, விவேக்கின் பழைய காமெடியவே பார்த்துக்கிட்டு இருக்கிறது" அப்படின்னு பையன் புதுசா காமெடி பார்க்கணும்ன்னு கேட்டு இருக்கான். மாமாவும் "கொஞ்சம் பொறு. அடுத்த மாசம் காவலன் ரிலீஸ் ஆகுது." அப்படின்னு சொல்லி இருக்கார். பையனும் காவலன் ரிலீஸ் ஆகும்ன்னு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாமல் இப்பவே ஏதாவது காமெடி படம் பார்த்தாகனும்ன்னு அடம் புடிச்சு இருக்கான். உடனே மாமாவும் வேறு வழி இல்லாமல் "புது டாக்டர்" நடித்த விருத்தகிரி படத்துக்கு பையனை கூட்டிகிட்டு போயிருக்கார்.



ங்க வீட்டுல எனக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பிச்சிடுச்சு. போன வாரம் வீட்டுக்கு போன போது, எங்க அப்பா, நாலைந்து பெண்களோட ஜாதகத்த காமிச்சு ஒவ்வொரு பொண்ணும் என்னென்ன படிச்சு இருக்கு, அவங்களோட சொத்து பத்து எல்லாத்தையும் வரிசையா சொன்னாரு. கடைசியா ஒரு ஜாதகத்த காமிச்சு "இந்த பொண்ணு டீச்சர் ஆக வொர்க் பண்ணுது. 10 ஏக்கர்ல மாந்தோட்டம் இருக்கு" அப்படின்னு சொன்னார். நானும் கொஞ்சம் காமெடியா "அவங்க வீட்டு மாங்கா நல்லா ருசியா இருக்குமா?"ன்னு கேட்டேன். உடனே பக்கத்தில இருந்த என் சொந்தகார பையன் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டான். ஏன்டா, இப்படி தப்பு தாப்பா யோசிக்கிறீங்க?




நான் ஒரு மிக பெரிய பணக்காரனா ஆனா கூட, இந்த விஜய் மல்லையா மாதிரி ஆகணும். இந்த ஆள பாருங்க சமீரா குட்டிய, மன்னிக்கவும் ரெட்டிய எப்படி கட்டிப் புடிச்சு ரொட்டி மாதிரி சாப்பிடறான். இந்த அம்பானி, டாட்டா, சச்சின் எவ்வளவுதான் காசு வச்சிருந்தாலும்? பப்ளிக்ல......................... ஹும்........... பெரும் மூச்சு.




Last week tweets.

  • ஒரு சராசரி இந்திய கிரிக்கெட் ரசிகனைப் போல இன்னிக்கும் ஹர்பஜன் சதம் அடித்து இந்தியாவை மீட்பார் என்று எதிர் பார்த்தேன். (First test with SA) 
  • I'd rather stay with a Ghost (female) than be alone... ;-)
  • My colleague had a packet of chocolates in her desk.
    I asked "Do you like chocolates more?" She nodded negatively.
    "Or the chocolates like you more?". Now she smiled positively.
     


Dec 17, 2010

மந்திர புன்னகை - நமீதா விமர்சனம்



இயக்குனர்கள், நடிகர்களாக மாறுவது தமிழ்நாட்டுல வெரி ஓல்ட் பேஷன். அதை பின்பற்றி திருபழனியப்பன், மன்னிக்கவும். 'கரு'பழனியப்பன் அவர்கள் நடித்த மந்திர புன்னகை படத்தின் போஸ்டர் பார்க்கும் போதெல்லாம் இந்த படத்தை பார்க்கும் எண்ணம் என்னை விட்டு ரொம்ப தூரம் போய் கொண்டு இருந்துச்சு. சரி விடுங்க. சாதாரண மக்கள் நம்மளுக்கே நாம ஒரு ஹீரோ அப்படிங்கற நினைப்பு அடிமனசுல ஆழமா இருக்கும். அப்படிங்கும்போது திரைத் துறைல இருக்கிற ஒரு இயக்குனர் அப்படி நினைக்கிறது தப்பு இல்ல. ஆனா மத்தவங்கள நினைக்க வைக்கருது தான் தப்பு. என்ன சொல்லவர்றேன்னு புரியலையா? (எனக்கும்தான்)

படம் ரிலீஸ் ஆகி நிறைய நாள் ஆனதுனால் படத்தோட கதை நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கும். கதை தெரியாதவர்கள் இங்கே கிளிக் செய்து படிக்கவும்.

படத்தோட ஒரிஜினல் ஹீரோ வசனம் தான். ஒவ்வொன்னும் ரசிக்க கூடியது. ஆனா அதுவே ஓவர் டோஸ் ஆக போயிடுச்சு. படத்துல வர்ற ஒவ்வொரு கேரக்டருமே "நான்  நீன்னு" போட்டி போட்டுக்கிட்டு வசனத்தை பங்கு போட்டு பேசி இருக்காங்க. தான் படத்திற்காக எழுதிய டயலாக் வேஸ்டாக போய்ட கூடாது அப்படிங்கறதுக்காக இயக்குனர் நிறைய இடங்களில் வசனங்களை கதாபத்திரங்களின் வாயில் வலிந்து திணித்து இருக்கிறார்.

படத்தோட ஹீரோ, நம்ம  கருபழனியப்பன் அவருக்கு தண்ணி அடித்து கொண்டு  குட்டியோட ஜாலியாக பொழுதுபோக்கற மாதிரி ஒரு கேரக்டர் என்பதிற்காக, படம் முழுவதும் தாடி வச்சுக்கிட்டு மூஞ்சு கழுவாம நம்ம விஜய டி. ராஜேந்தரின் தவ புதல்வன் மாதிரியே வந்து நமக்கு சரக்கு அடிக்காமலேயே வாந்தி வர்ற மாதிரி பீலிங் உண்டாக்குகிறார். டூயட் கூட தாடியோட தான் பாடுறார். இவருக்கும் ஹீரோயினுக்கும் வர்ற ரெண்டு பாட்டுக்கு பதில் கம்முன்னு ஹீரோயினுக்கு மட்டும் ரெண்டு சோலோ சாங் கொடுத்து இருக்கலாம். இவர் சொல்ற கருத்தெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா கிடைக்கறவங்களை எல்லாம் புடிச்சு கருத்து சொல்லி மிகவும் கஷ்டப் படுத்தறார். கருத்துபழனியப்பன்.

மனசில் பட்ட எதையுமே கூச்சபடாம சத்தம் போட்டு பேசுற கேரக்டர் என்பதாலும் படம் முழுவதும் கருவண்டு மாதிரி பயங்கரமா நம்ம காதுக்குள்ள வந்து கத்தி கத்தியே பேசி வலிக்க வைக்கிறார். இவருக்கு பாரதியார் கவிதை பிடிக்கும் என்பதற்காக, பேச்சு போட்டியில் சொல்கிற மாதிரி எல்லோரையும் சுத்தி உட்கார வச்சு மூச்சு விடாம கவிதைகளை ஒப்பிக்கிறார்.

இவர் நிறைய "ரேட்டு"களோடு என்ஜாய் பண்ணி இருக்கிற மாதிரி சொன்னாலும், படத்துல ஒரே ஒரு ரேட்டத்தான் (சன் மியூசிக் பிகரு) காமிக்கறாங்க. இன்னும் ரெண்டு மூணு ரேட்ட காமிச்சு இருக்கலாம். ஒருவேளை நடிக்க வைக்க ரேட்டு(சம்பளம்) பத்தலையோ என்னவோ?

விஜய் டீ.வி "நீயா? நானா?"வில் பத்து நிமிசத்துக்கு ஒரு தடவை விளம்பரம் போடுற மாதிரி இவரு குவார்ட்டர் அடிக்கறத அடிக்கடி காமிக்கிறாங்க. விஜய் டீ.வில போடுற சைனீஸ் டப்பிங் படத்தில் தண்ணி அடிக்கிற சீன் வரும் போது "மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு" அப்படின்னு கீழே ஓட விடுவாங்க. அதுமாதிரி இந்த படத்துக்கும்  போட்டங்கன்னா, படத்துக்கு வர்ற சப்டைட்டில் விட இது மிஞ்சிடும். குவார்ட்டர் பாட்டில் அல்லது பிஸ்லேரி பாட்டில் இப்படி படம் முழுவது ஏதோ ஒரு பாட்டில கைல வைச்சுகிட்டே சுத்துறாரு. முடியல!

இப்போ இவர் ஹீரோவாகவும் இனி தொடர்ந்து நடிப்பேன்னு ஊர் முழுதும் உரக்க மைக் போட்டு சொல்லிக்கிட்டு இருக்கார். நல்லதோ? கெட்டதோ? நடக்கட்டும்.


"பூனை ஒரு தடவை பாலை ருசி பார்த்துடுசுன்னா, அது மறுபடியும் மறுபடியும் பால் கலசங்களை உருட்ட ஆரம்பிச்சிடும்"



ஹீரோயின் மீனாட்சி, இவங்களுக்கு ஆப்டான ரோல். ஆனா இவங்க முகத்த பார்க்க முயற்சிக்கும் போதெல்லாம் இவங்களோட முன்னழகுதான் முன்னுக்கு வருது. இந்த படத்தின் மூலமாக இவருக்கு இன்னும் நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து சீக்கிரம் முன்னுக்கு  வரவேண்டும் என்று எம்பெருமான் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.

இசை எப்படின்னு, கரிக்டா தெரியல. டவுன்லோட் பண்ணுன பைல் சரியா இல்ல.

தனக்கு ஒரு ஓரளவு ஹிட் படத்தை கொடுத்த இயக்குநருக்காக, கெஸ்ட் ரோல்ல கொஞ்ச நேரமே வந்தாலும், நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் 'அனுபவிச்சு' நடிச்சு இருக்கார். இந்த மாதிரி கெஸ்ட் ரோலுக்கு சம்பளம் வாங்காமலே நடிக்கலாம். அதே மாதிரி சிநேகாவ கூட அந்த "ரேட்டு" ரோல்ல நடிக்க வச்சு இருக்கலாம். டைரக்டர் மிஸ் பண்ணிட்டார்.

சும்மா காமெடிக்காக படத்தை ஒட்டி எழுதி இருக்கேன். ஆனா படத்தை ஒரு தடவை பார்க்கலாம். கருபழனியப்பனோட கருந்தாடி பார்க்க பயமாக இருந்துச்சுன்னா நைட்ல பார்க்காமல், பகல்ல பாருங்க.

நமீதா டச்: மந்திர புன்னகை, மர்ம புன்னகை.


Dec 14, 2010

வளை'வில்' சிக்கிய விழிகள்




அம்பைப் போல
உன் கண்களை நேராய் 
பார்த்து தான் பேசுகிறேன்.
ஆனாலும் என் பார்வைகளை
அனாசயமாக
வில்லாய்
வளைத்து விடுகின்றன
உன் வளைவுகள்.




சிலையான விஜய் - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)


ம்ம தளபதிக்கு (அரசியல் தளபதி அல்ல சினிமா தளபதி) கேரளாவில சிலை வச்சு இருக்காங்களாம். இதற்கு பின்னாளால் கேரள அரசியல்வாதிகளின் பிண்ணனி இருக்க கூடும் என்று யூகிக்க படுகிறது. எப்படியும் நம்ம டாக்டரு தான் தமிழகத்தின் தலைஎழுத்தை மாற்றபோகும் அடுத்த முதலமைச்சராய் வருவார் என்பதை தெரிந்து கொண்டு, பின்னாளில் தமிழகதிற்கு தண்ணீர் திறந்து விடுதல் விவகாரத்திற்கு தளபதியால் எந்த விவகாரமும் வந்துவிட கூடாது என்று அவர்கள் யோசித்து வைத்த பிளான் ஆகவே இருக்க கூடும் இந்த சிலை மேட்டர்.

இல்லையெனில் பத்து கேரக்டரில் பயங்கரமாக மைதாமாவு அப்பி நடித்து, தான்தான் உலகமகா நடிகர் என்று ஊரையே நம்ப வைத்த நடிகரெல்லாம் இருக்க, எங்கே விக் வைத்து நடித்தால் தன் ஹேர் ஸ்டைல் களைந்து விடும் என்று 3 Idiots என்ற படத்தின் பேருக்கு லேட்டாக அர்த்தம் புரிந்து எஸ்கேப் ஆன நம்ம "குருவி" மண்டையருக்கு சிலை வைப்பார்களா? இருந்தாலும் கேரள மக்களே, நீங்க சிலை மட்டும் தான் வைக்க முடியும். ஆனால் நாங்கள் சிலை வைக்காமல் சாதாரண போஸ்டருக்கே பால் அபிசேகம் பண்ணி பால் குடம் எடுத்து அழகு குத்தி சாமியாக நினைத்து வழிபடுவோம் தினந்தோறும்.


னக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு ரொம்ப நாளா சோகமாக சுத்திகிட்டு இருக்கு. வீட்ல என்ன பிரச்சனைன்னு தெரியல. அதனால அந்த பொண்ண மாயாஜால் தியேட்டரில் நாலாவது நாளாக வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் நம்ம தமிழ்நாட்டின் அடுத்த டாக்டர் விஜயகாந்த் நடித்த விருத்தகிரி படத்துக்கு கூட்டிட்டு போய் "குஜால்" படுத்தலாம்ன்னு இருக்கேன். ஏதோ நம்மால முடிஞ்சது.


ந்த மொபைல் போன்ல இருக்கிற டிக்ஸ்னரில, ஆங்கில படத்துல அடிக்கடி யூஸ் பண்ற வார்த்தைகள் எதுவுமே இருக்க மாட்டேன்குது. முக்கியமாக அந்த நாலு எழுத்து வார்த்தை. அத டைப் பண்றதுக்குள்ள வர்ற டென்சன்ல, என்னோட வாயில இருந்து ஏகப்பட்ட செந்தமிழ் வார்த்தைகள் வெளி வந்துடுது (..த்தா). இந்தியால மட்டும் தான் இப்படியா? இல்லை வெளிநாட்டிலும் இந்த பிரச்சனை இருக்கா?


நான் எப்பவுமே ரெகுலரா டீ குடிக்கிற கடைக்கு பிரெண்ட்ஸ்களோடு ஒருநாள் போயிருந்தேன். நாலு டீ போட சொன்னோம். அந்த டீ மாஸ்டரு எல்லோருக்கும் டீ கொடுத்துட்டு எனக்கு மட்டும் பால் கொடுத்தாரு. நான் டீ தான் வேணும்ன்னு கேட்க, அவரு "நீ கொழந்த பையன் தான? பால் குடிக்க மாட்டியா?" அப்படின்னாரு. உடனே நான் டென்சன் ஆகி "நாங்கெல்லாம் பஸ்ட்(First) நைட்ல மட்டும் தான் பால் குடிப்போம்" ன்னு ஒரு பன்ச் விட, அதை கேட்டு அந்த மாஸ்டர் பஸ்ட் நைட்டுக்கு கதவ சாத்திட்டு உள்ள வரும்  பெண்  மாதிரி வெட்கப்பட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டார்.


ஒரு கசப்பான உண்மை மற்றும் தத்துவம்:
"மானே", "தேனே", "தேவதை" அப்படின்னு கவிதை எழுதி சுத்துறவனை விட காண்டம் பாக்கெட் வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு சுத்துறவனுக்கு தான் காதலும் காதலியும் ரொம்ப ஈசியா கிடைக்குது.

அதனால உங்க பாக்கெட்ல கவிதைய வச்சுக்காதிங்க. காண்டத்தை வைத்து கொள்ளுங்கள்.

காண்டம் வச்சு இருக்கறவனெல்லாம் ராவணனும் இல்லை. காண்டம் வச்சகாதவனேல்லாம் ராமனும் இல்லை. -- சுந்தர காண்டத்திலிருந்து (கம்பராமாயணம்)


ரி அடுத்த சமீபத்தில் வெளிவந்த டாப் 4 டப்பா படங்கள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

1. கனிமொழி - நாயகி ஒரு கவிஞராக இருந்தும் பாடல்கள் எதுவும் இல்லாமல்/எழுதாமல் அதிரடியான வசனங்கள் மூலமாக மட்டுமே பரபரப்பை ஏற்படுத்திய படம். குறிப்பாக படத்தில் நாயகிக்கும், நீரா ராடியா என்ற பெண்மணிக்கும் இடையேயான வசனங்கள் நாயகியின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் "எவ்வளோ நல்லவங்க" என்பதை ஒளிவுமறைவு இல்லாமல் காட்டுகிறது . ஒரிஜினாலிடி கருதி படத்தின் வசனங்கள் முழுவதும் ரியல் டைம் ரெகார்ட்டிங் செய்யப்பட்டுள்ளன. சின்னத்திரையில் வெளியான கனிமொழி ஒலிநாடா மிக பெரும் ஹிட் ஆன போதிலும் வெள்ளித்திரையில் வெளியான கனிமொழி திரைப்படம் மிக பெரும் பிளாப் ஆனது மிகப்பெரும் வருத்தமே.

2. உத்தமபுத்திரன் - ஆ. ராஜா அவர்களின்  ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் இந்தியாவின் அனைத்து மக்களையும் "கொள்ளை" கொண்ட படம். இந்த வருட சிறந்த நடிகருக்கான தேசிய விருது இவருக்குதான் என்று பார்லிமெண்டில் பரவலாக கருத்து நிலவுகிறது.

3. நந்தலாலா - தன் பிள்ளை மற்றும் பேரன்களுக்காக அன்னையை தேடி அடிக்கடி டெல்லி போகும் ஒரு கலைஞரின் (பாசத் தலைவனின்) பாசப் போராட்டம்.

4 மைனா - தன் குஞ்சுக்காக போராடும் ஒரு மைனாவின்(வனிதா விஜயகுமார்) வெளியே சொல்லமுடியாத கதை.


Dec 1, 2010

டாக்டரு விஜயகாந்து - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

ந்த வாரம் வெள்ளிகிழமை ஒரு மகத்தான விஷயம் நடக்க உள்ளது. மக்களே அதற்காக உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.  புரட்சி கலைஞர் விஜயகாந்த் இனி டாக்டர் விஜயகாந்த் ஆக உருவெடுக்கிறார்.  இதன் பிறகு நம்ம வல்லரசு மக்கள் நலனில் மேலும் அக்கறை கொல்வார். "டாக்டர்" என்பது இவருக்கு வழங்கப்படும் அடைமொழி பட்டமே ஒழிய பதவி அல்ல. அதனால், தலைவலி என்று தப்பி தவறி அவரிடம் செல்வோருக்கு, சாப்பிட்ட பின் பார்க்க சொல்லி தருமபுரி பட சி.டி இரண்டு வழங்கப்படும். இதனால் நீங்கள் தவறவும் வாய்ப்பு உண்டு.

ஏற்கனவே டாக்டர் விஜய்யின் SMS காமெடியின் மூலமாக கொழுத்த லாபம் சம்பாதித்து வரும் மொபைல் சர்வீஸ் கம்பனிகளுக்கு, "நம்பர் மாற்றாமலே மொபைல் போன் சர்வீஸ் கம்பனிகளை மாற்றலாம்" என்ற திட்டம் பேர் இடியாக விழுந்துள்ள நிலையில்,  டாக்டர் விஜயகாந்த் என்ற சக்தி இந்த கம்பனிகளுக்கு மிகப் பெரும் ஆறுதலாக அமையும். இனி வலையுலக வட்டாரத்திலும், "டாக்டரு விஜய்யும், டாக்டரு விஜயகாந்தும்" என்பது போன்ற தலைப்பில் ஏகப்பட்ட பதிவுகள் வெளிவரும்.










ந்திரனுக்கு அப்புறம் நிறைய படம் ரிலீஸ் ஆகிடுச்சு.

தீபாவளிக்கு வந்த மைனா, உயர உயர பறக்குதாம்.
வ குவார்ட்டர் கட்டிங், ரெண்டு ரவுண்டுக்கு அப்புறம் மட்டை ஆகிடுச்சாம்.
உத்தமபுத்திரன், குடும்பத்தோடு பார்த்து நெகிழ வேண்டிய படமாம். 
வல்லக்கோட்டை, இந்த படத்துக்கு யாருமே விமர்சனம் போடலைன்னு நம்ம ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் ரொம்பவே அமைதியான கிங் ஆக மாறிட்டாராம்.
போன வாரம் ரிலீஸ் ஆன நந்தலாலா, சூப்பரா லாலா பாடி எல்லோரையும் தூங்க வைக்குதாம்.
நகரம், இந்த படம் குஷ்பு மேடத்தின் சொந்த தயாரிப்பு என்பதால், சுந்தர்.சி பக்கத்துலையே உட்கார்ந்து வேலை வாங்கி இருக்கலாம். (சுந்தர்.சி க்கு ஹீரோயினோடு உள்ள அந்த லிப் கிஸ் சீனுக்கு, குஷ்பு பக்கத்துல இருந்து பார்த்தாங்களான்னு தெரியல.) படம்  சுமாராக உள்ளதாம்.
மகிழ்ச்சி, தமிழின தலைவர் சீமான் இந்த படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியே என்றாலும், அவர் இன்னமும் சிறையில் இருப்பது வருத்தமான விஷயம்.
கனிமொழி, படத்துக்கும் இந்த பேருக்கும் சம்பந்தமே இல்லைன்னு நிறைய பேரு சொல்றது உண்மையாக இருக்கும் பட்சத்தில், நீரா ராடியா என்றாவது படத்துக்கு பெயர் வைத்திருக்கலாம். கொஞ்ச நாள் ஓடியிருக்கும். கனிமொழி விமர்சனத்தை படித்து சிரிக்க இங்கே கிளிக்கவும்.

இவ்வளவு படம் ரிலீஸ் ஆகியிருக்க,
இன்னமும் இந்த சன் டீவில எந்திரன் பட டிரைலர் போட்டு கொன்னுகிட்டு இருக்கானுங்க.  நாராயணா! இந்த ரங்கூஸ்கி கொசு தொல்ல தாங்க முடியல!



ன்னோட பிரெண்டிடம் இருந்து ஒரு SMS வந்தது.


There are two great kings who are ruling the world till now. They are
---
---
Smo-King and
Drin-King

அதற்கு என்னுடைய பதில்.


" You have missed a great king who is ruling the world most from the beginning. He is 
---
---
F#%-King"



இந்த வார வீடியோ:




"எப்படி காக்கா இப்படியெல்லாம் மனுஷன் மாதிரி யோசிக்குது" அப்படின்னு நீங்க ரொம்ப யோசிக்காதிங்க. அது சிம்பிள். ஏன்னா, மனிதன்தான் இறந்து காக்கையாக பிறக்கிறான். எப்பூடி?

 



Nov 26, 2010

லிவிங் டுகெதர் - Revisited & பதிவர் விசாவுக்கு விசாரணை கமிஷன்

இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவோ அல்லது மொக்கைக்காகவோ எழுதப்பட்டது.



எந்திரன் படத்துக்கு அடுத்து அதிக வலையுலக வாசிகளால் விமர்சிக்கப் பட்ட படம்  Living Together. சினிமா வியாபாரம் செய்து வரும் பிரபல பதிவரும் இதற்கு கொஞ்சம் லேட்டாக விமர்சனம் எழுதி உள்ளார். போன ஆபாயிலில் லிவிங் டுகெதர் பத்தி நிறைய பிரபலங்களிடம் கருத்து கேட்டோம். கடைசி வரைக்கும் பதில் கிடைக்கவே இல்ல.  முக்கால்வாசி பதிவர்கள் இதை பற்றி எழுதி கருத்து கந்தசாமிகளாக வலையுலகில் வலம்வருகின்ற சூழ்நிலையில், இன்னும் இதை பற்றி எந்த ஒரு பதிவும் போடாமல் தப்பித்து வரும் பதிவர்கள் முறையாக கண்காணிக்க பட்டு பதிவுகள் போட சொல்லி கட்டாயப் படுத்தப்படுவார்கள். இது கீழ்க்கண்ட அனைவருக்கும் பொருந்தும்.

  • மூளையை கசக்கி கதை எழுதுகிறவர்கள்.
  • அமராவதி ஆற்றங்கரைகளிலோ இல்லை காவிரி ஆற்றங்கரைகளிலோ உட்கார்ந்து, இதயத்தை பிழிந்து  கவிதை எழுதுகிறவர்கள்.
  • கவலை படாமல் Right கிளிக் செய்து காப்பி பேஸ்ட் செய்பவர்கள்.
  • மொக்கையில் ஊறி திளைத்து படிப்பவர்களை பதற வைப்பவர்கள்.
  • சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூகத்தின் மீது ஆர்வம் இல்லாதவர்கள்.
  • இட்லிவடை சாப்பிட்டு விட்டு அரசியல் பேசுபவர்கள்.

ஆங்கிலத்தில் எழுதும் பதிவர்களுக்கு மட்டுமே வரிவிலக்கு உண்டு. மன்னிக்கவும், விதிவிலக்கு உண்டு.

அப்படி பதிவு போடாத பதிவர்களின் வலைப்பூ முகவரியை நீங்கள் சீட்டில் எழுதி பின்னூட்டத்தில் கட்டி விட்டு அப்படியே இந்த பதிவுக்கு ஓட்டு போட்டு விட்டு போய் விட்டால், கருத்து கந்தசாமியான நான் சேவல் கெட்டப்பில் வந்து மற்ற கந்தசாமிகளுக்கும் அறை'கூவல்' கொடுத்து, பொதுக்குழு கூட்டி விதிமுறையை மீறியவர்களின் வலைபதிவர்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்து, அவர்களது வலைப்பூவும் ஹேக் (Hack) செய்யப் படும்.

நீங்கள் எழுதும் பதிவுகள் ISI தர சான்றிதழ் பெறக்கூடிய தரத்தில் இருக்க தேவை இல்லை. அரைவேக்காடு தனமாக "ஆபாயில்" மாதிரி இருந்தாலே போதுமானது.



இட்லிய சாப்பிட்டுட்டு நாக்கு வறண்டு அடிக்கடி தண்ணிய குடிச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி, நாம கஷ்டப்பட்டு ஏதோ ஒரு கருத்தை சொல்லி பதிவை இன்ட்லில இணைச்சிட்டு நாக்கு வறண்டு போக ஓட்டு வருமா? கமெண்ட்டு வருமா? ன்னு கண் மூடாம பார்த்துகிட்டு இருக்கோம். ஆனா இப்படி எழுதுற நம்மள மாதிரியான ஆபாயில் பதிவர்களை எல்லாம் சாதாரணமா கிண்டல் பண்ணி, நம்ம பதிவை எல்லாம் கிழிச்சு கிளி ஜோசியம் சீட்டு மாதிரி போட்டுட்டார் விசா என்கிற பதிவர் அவரது டையிங் டுகெதர் என்ற பதிவின் மூலம். "நாளைய கலாசார மாற்றங்களை விட இன்றைய பசி கொடுமையானது." அப்படின்னு இவரு சொல்லறாரு. அதாவது வடையும், சுடுசோறும் தான் முக்கியம் அப்படிங்கறாரு. ம.தி.சுதா கவனிக்கவும் (இவருக்கு மட்டும் எப்படிதான் எங்க போனாலும் சுடுசோறு கிடைக்குதோ தெரியல?).


இதனால் இவரது வன்மையான போக்கை கண்டித்து, விசா அவர்களை எந்த நாட்டின் மூலையில் இருந்தாலும் உடனே விசா எடுத்து சென்னை கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடிக்கு வரவைத்து, மொட்டை வெயிலில் நிறுத்தி விசாரணை கமிஷன் வைத்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சூடான காரமான மிளகாய் பஜ்ஜியோடு அங்கேயே நமது அடுத்த வலை பதிவர்கள் சந்திப்பையும் வைத்து கொள்ளலாம்.  விசாவுக்கு மட்டும் தொட்டு கொள்ள சட்னி கிடையாது. கூடுதலாக, கரு பழனியப்பனின் "மந்திரப் புன்னகை" படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க முடியாமல் வருத்தப் பட்டு கொண்டிருப்பவர்களுக்காகவும், மீண்டும் அண்ணன் உண்மை தமிழனின் உதவியால் மந்திரப் புன்னகை மறுஒளிபரப்பு செய்யப்படும்.


இது வரைக்கும் லிவிங் டுகெதர்க்கு ஆதரவாகவும் எதிர்த்தும் நாம எல்லோரும் எழுதுன பதிவை எல்லாம் தொகுத்து "லிவிங் டுகெதர் ஆச்சாரமா? அ(வி)பச்சாரமா?" அப்படின்னு தனி புத்தகமாக கிழக்கு  பதிப்பகத்தில் வெளியிட்டால், அதை வாங்கி படித்து விட்டு, லிவிங் டுகெதரில் வாழ்பவர்கள் எல்லாம் திருந்தி கல்யாணம் செய்து சந்தோசமாக வாழ்வார்கள். கல்யாணம் ஆனவர்கள் எல்லாம் டைவர்ஸ் செய்துவிட்டு லிவிங் டுகெதராக மனதிற்கு பிடித்த மற்றவர்களோடு சந்தோசமாக வாழ்வார்கள். அப்படியே இதே தலைப்பில் விஜய் டி.வியில் கோபிநாத்துடன் நீயா? நானா? நிகழ்ச்சியை நடத்த சொல்லி, அதில் நாமெல்லாம் கலந்து கொண்டு கூதுகலமாய் பேசி கும்மி எடுக்கலாம் (யாரை?).

கீழே உள்ள காமெடியில் வருகின்ற வடிவேலுக்கும், லிவிங் டுகெதர்க்கும் எந்த ஒரு ரத்த சம்பந்தமும் இல்லை.




 
கடைசியாக ஒரு பன்ச்.


ஒரு சீரியசான மேட்டர் அப்படிங்கறது அழுக்கு துணி மாதிரி. அதை அலசி ஆராயலாம். ஆனா, துவைக்காம அலசி ஆராய கூடாது.

எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும்...




Nov 23, 2010

Living Together, குவார்ட்டர், பேஸ்புக் - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க) - 23 Nov 2010



வலையுலகில் ஏகப்பட்ட பேரு கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. என்கவுண்டர், லிவிங் டுகெதர் போன்ற சீரியஸ் ஆன செய்திகளை பற்றி சூடான வார்த்தைகளை உபயோகித்து அவங்கவங்க கருத்துகளை சொல்றாங்க. ஆனா, அப்படி எழுதும் போது 15 மார்க் கொஸ்டினுக்கு 2 மார்க் மட்டுமே போடுற அளவுக்கு சின்னதா, கடனுக்கு அதை பத்தி கொஞ்சம் எழுதிட்டு, அந்த பதிவ போஸ்ட் பண்ணி அதுக்கு வர்ற பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல, நன்றாக நான்வெஜ் சாப்டுட்டு ரெடி ஆகிடறாங்க. எனக்கு ஏன் இது மாதிரி எல்லாம் தோண மாட்டேங்குது?


சரி, நம்ம பிரபலங்களை கேட்போம்.


கமல் சார், இந்த Living Together நல்லதா? கெட்டதா?


நல்லவேளை நாயகன் கமல்ங்கிறதனால, தெரியலன்னு ஒரு வார்த்தைல சொல்லிட்டரு. ஆனா விருமாண்டி கமல்கிட்ட கேட்டிருந்தால், புரியாதமாதிரி பதில் சொல்லி நாம கேட்ட கேள்வியவே குழப்பி இருப்பாரு.


வடிவேலு சார், இந்த Living Together நல்லதா? கெட்டதா? 
 
 
சார், இது கரெக்டா? தப்பா?
 ரைட்டு...

நாட்டாமை சார், நீங்க பதில் சொல்லுங்க.



சுகாசினி மேடம், நீங்களாவது சொல்லுங்க.

காய்கறி கடை வச்சுக்கிட்டு இருக்கிறவ கிட்டே எல்லாம் கருத்து கேட்டா இப்படிதான்.




ன்னுடன் கூட வேலை செய்த தோழி ஒருத்தர், ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தாங்க.

We know Taj Mahal as a symbol of love.
But do you know ..
1. Mumtaz was Shahjahan's 4th Wife, out of his 7 wives.
2. Shahjahan killed Mumtaz's husband to marry her.
3. Mumtaz died in her 14th Delivery.
4. He then married Mumtaz's sister.
Now my question is, What is LOVE?


I replied her, " LOVE  is PLURAL".


நான் போன மாசம் நிறைய அயிட்டங்கள் (பொருள்கள்) பிராண்டேடு அயிட்டம் ஆக வாங்கினேன். "Peter England" சர்ட், "Lee" ஜீன்ஸ், "Jocky" ஜட்டி, "Nike" செருப்பு. உடனே கூட இருக்கிற பிரெண்ட்ஸ் எல்லாம் "பிராட் மேன்" மாதிரி, என்னை "பிராண்ட் மேன்" ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.


இந்த பசங்க, எங்க பார்த்தாலும் அந்த சங்கம் இந்த சங்கம் ன்னு ஒவ்வொருத்தரும் ஒரு சங்கம் வளர்க்கரானுங்க.

கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கருத்தாய் படிப்போர் சங்கம்.
குப்புற படுத்துக்கொண்டு யோசிப்போர் சங்கம்.
உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்.


இப்படி ஏகப்பட்ட சங்கங்கள். நாமளும் சும்மா இருந்தா சரிபடாது. அதனால நானும் ஒரு சங்க வளர்க்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். இப்ப யார் யாரு என்னோட சங்கத்துக்கு ஆதரவு தரப் போறிங்கன்னு கைதூக்குங்க பார்க்கலாம். ஆனா ஒன்னு என்னோட சங்கத்துல சேர்றதுக்கு, இப்ப கை தூக்கின எல்லோரும் உங்க ரெண்டு காலையும் கொஞ்சம் தூக்கணும். புரியல? நம்ம சங்கம் "ஜாக்கி ஜட்டி போடுவோர்கள் சங்கம்".




நான் ரசித்த ஒரு ஜோக்:


Height of Addiction:
Just before Hanging,
Judge asked the prisoner "Any last Wish?"
Prisoner: Yes, I want to update my FACEBOOK status as "DEAD"

இப்படிதான் சில பேரு கண் முழிக்கிறதும் சரி, மூடறதும் சரி பேஸ்புக்ல தான்.

புதுசா ரிலீஸ் ஆகி உள்ள மந்திர புன்னகை படத்துல இப்படி ஒரு டயலாக் வருதாம். உடம்ப கெடுக்கிற குவார்ட்டர நல்லா சத்தம் போட்டு வாங்கறோம். ஆனா பாதுகாப்பா இருக்கிற காண்டத்த கூச்சபட்டுகிட்டு வாங்குறோம். இவரு என்ன சொல்ல வர்றாருன்னா? காண்டம் வாங்கும் போது கம்பீரமா, கம்பீரம் சரத்குமார் மாதிரி நெஞ்ச வெடைச்சுகிட்டு தைரியமா சத்தம் போட்டு கேட்கணும். புரிஞ்சுதா?... ( மச்சி, ஒரு காண்டம் சொல்லேன்! )




ந்தியன் கிரிக்கெட் டீம் நியூஸ்லாந்து கூட விளையாண்ட ரெண்டு டெஸ்ட் மேட்ச்சையும் பஜ்ஜியின் புண்ணியத்தில் டிரா பண்ணிடுச்சு. இதுக்கு என்ன காரணம்ன்னு பார்த்தால், 'வ குவார்ட்டர் கட்டிங்' படத்துல வர்ற காமெடி மாதிரி "நம்மகிட்ட இருக்கிறது மொக்க பௌலேர்ஸ், அவங்ககிட்ட இருக்கிறது நம்மளவிட மொக்க பௌலேர்ஸ்"



எனது இந்த வார ட்வீட்ஸ்:

1. Newly joined colleague asked me " Can I open Face-book in Office? ". I Replied her " Open FaceBook, FaceProblem "

 2. இந்திய வல்லரசு ஆகுறதுக்குள்ளேயாவது நம்ம வல்லரசு (விஜயகாந்த்)  தமிழ் நாட்டுல ஆட்சிய பிடிப்பாரா?


3. நம்ம வல்லரசு ஆட்சிய பிடித்தால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், வல்லரசு போக்குவரத்து கழகம் என்று பெயர் மாறுமா?




Nov 18, 2010

மழையும் மழை சார்ந்த இடங்களும் (சென்னை ஸ்பெஷல்)



வறட்சி காலத்தில் 
வற்றிப்போன ஆற்றின் உள்ளே
படகு போல ஒவ்வொன்றாய்
ஆக்கிரமித்து குடியேறிய 
வீடுகளில் வசிக்கும் குழந்தைகள்
ஒவ்வொரு மழை காலத்திலும்
காகித கப்பல் செய்து விளையாட அவசியமில்லை.
அவர்கள் வீடுகளே கப்பலாய் மிதக்கும்
ஆற்றின் பதில் ஆக்கிரமிப்பில்.

------------------------------------------------------------------

காளான் டிஷ் 



மழைவிட்ட பின்
அபார்ட்மென்ட் மொட்டை மாடியில்
சென்று பார்த்தால்
எண்ணற்ற டிஷ் காளான்கள்.

------------------------------------------------------------------

ஒவ்வொரு மழைக்கு பின்னும்
போடப்படும் தார் ரோடுகள்
தார் ஏடுகளாய்
அடுத்த மழையில்.

------------------------------------------------------------------

போகும் வழியெல்லாம்
சாலையெங்கும்
நிரம்பி வழிகிறது 
மாநகராட்சியின் 
மழைநீர் சேகரிப்பு திட்ட குழிகள்.





Nov 16, 2010

என் தூரத்து காதலி



அழகான ஆண்களே
உன் அருகில் நிற்கத் தயங்கி
தள்ளி நிற்க,
பல அடி தூரத்தில் நான்.

தூரத்தில் இருந்தாலும்   
குறி தவறாமல்
உன் கண்கள் நடத்தும்
இரட்டை ஏவுகணை தாக்குதல்.

விலகவும் முடியவில்லை
நெருங்கவும் திரணியில்லை 
சிக்கித் தவிக்கிறேன்
தப்ப முடியாத  மாய வலையில்.



Nov 14, 2010

ஒபாமா, அஜீத், த்ரிஷா - மினி ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க) 14 Nov 2010

ஆபாயிலே சின்னதாத்தான் இருக்கும் இதுல என்ன மினி ஆபாயில் அப்படின்னு கேள்வி கேட்காம படிங்க. ஏன்னா, இருக்கறதே அவ்வளவு தான்.



ஒபாமா புயல் இந்தியாவில் மூன்று நாட்களாக மையம் கொண்டுவிட்டு இந்தோனேசியாவில் கரை ஒதுங்கி விட்டது. இனி துரத்தி அடிக்கப்பட்ட பிச்சைகாரர்கள் நிம்மதியாக மீண்டும் தலைநகர் திரும்புவார்கள். அவர் இந்தியாவுக்கு வந்த நாள்ல இருந்து நியூஸ் பேப்பர், டீ.வி எதுல பார்த்தாலும் ஒரே  ஒபாமா மந்திரம் தான். அவர் ஒன்னுக்கு போனத தவிர்த்து எல்லாமே நியூஸ் ஆக வந்திடுச்சு. ஓம் ஒபாமா யாம நமக.


இந்த புயலுக்கேலாம் எவன் பேரு வெக்கறான்? 'ஜல்'லு ஜில்லுன்னு சூப்பரா வெக்கராங்கப்பா. பொறந்து அஞ்சு மாசம் ஆன என் தங்கச்சி பையனுக்கு பேரு செலக்ட் பண்ண முடியாம என் மாமா ரொம்ப கஷ்ட படுறாரு. இவனுங்க பேஸ்புக் அட்ரஸ் அல்லது போன் நம்பர் உங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன். கொஞ்சம் கஷ்டப் பட்டாதான் நல்ல பேரு வாங்கமுடியும். அது மாதிரி நல்ல பேரு வைக்கறதுக்கும் கொஞ்சம் கஷ்டப் படனும் போல.





Strictly no moves...

 



Nov 2, 2010

ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க) - தீபாவளி ஸ்பெஷல் 18+



போனவாரம் ஞாயிற்று கிழமை வாரமலர் நடுப்பக்க செய்தியை புரட்டி பார்த்த என்னை அப்படியே கீழே புரட்டி போட்டது அந்த துணுக்கு. நம்ம தலைவி நமீதா "இ.பி.கோ., 376" என்ற படத்தின் மூலமாக புலன் ஆய்வு செய்யும் கடமை மற்றும் "உடை"மை தவறாத  ஸ்ட்ரிக்ட் ஆன சி.ஐ.டி போலீஸாக நடிக்கிறாராம். இதற்காக தனது பெருத்த உடற்கட்டை சீக்கிரம் குறைக்க பில்லாவிடம் ஐடியா கேட்டுவருகிறாராம். இதை தயாரிப்பது டூயட் மூவிஸ் தான் என்றாலும் இதில் நமீதாவுக்கு டூயட் ஏதும் இல்லையாம்.



மக்கள் எல்லோருக்கும் தீபாவளி வரப்போகுது அப்படிங்கறத விட  எந்திரன் படம் முக்கால் வாசி(?) தியேட்டர விட்டு போக போகுது அப்படிங்கரதுதல தான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். இருந்தாலும் வரலாற்று படமான இப்படத்தை பார்த்து ஜென்ம சாப விமோசனம் அடைந்து விடுங்கள் அல்லது அவர்கள் விமோசனம் கொடுத்து விடுவார்கள். புது படம் எப்படா வரும்? எப்போ நமீதாவ போடலாம், சாரி எப்போ நமீதா விமர்சனத்தை போடலாம் அப்படின்னு என்னை மாதிரி நிறைய பேரு காத்துகிட்டு இருக்காங்க. சரி எந்திரனுக்கு அடுத்து இந்த தீபாவளிக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிற படம் எதுன்னு பார்த்தால், அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெற போகும் தொட்டுப்பார் படத்தின் ஹீரோவும், சமூக விழிப்புணர்வு படமான சிந்து சமவெளி ஹீரோயினும் இணைந்து கத்தும் மைனா!





அமெரிக்க எஜமான் ஒபாமா மும்பை வரப்போறதை அடுத்து மும்பை மாநகராட்சி பரபரப்பா மும்பையோட சாலை, தெருக்களை எல்லாம் சுத்தம் செய்து, பிச்சைகாரர்களை எல்லாம் அப்புறபடுத்தி, அழகாய் பராமரிப்பு செய்து வருகிறார்களாம். நல்லதுதான். ஆனால் ஒபாமாவை அப்படியே சென்னைக்கு வர சொல்லி அடையாறு, திருவான்மியூர்,  தரமணி to தாம்பரம் சாலை வழியாக வேளச்சேரியில் கட் எடுத்து அப்படியே சைதாபேட்டை டாஸ்மாக்கில் ஒரு ரவுண்டு சரக்கை ஏத்திவிட்டு இன்னும் எந்தெந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதோ அந்த வழியெல்லாம் சுறாவளி பயணத்தை மேற்கொள்ள செய்து  கூவத்தையும் சிறிது பார்வையிட சொல்லுங்கள். தமிழ் செம்மையாகுதோ இல்லையோ சென்னை கொஞ்சம் செம்மையாக வாய்ப்பு உள்ளது. ஓரம்போ... ஓரம்போ...ஒபாமா வண்டி வருது.
 

வேளச்சேரில இருக்கிற ஹோண்டா ஷோரூம்ல இருந்து புது Shine பைக் வாங்கி இருக்கான்  என் பிரெண்டு. ஆனா அந்த ஷோரூம்ல கஸ்டமர் சர்வீஸ் சரி இல்லையாமாப்பாம். பயங்கர டென்சன் ஆகி அத பத்தி என்னோட ப்ளாக்குல போட சொன்னான். தினமும் ஒரு ஆயிரம் பேரு வந்து நம்ம ப்ளாக் படிக்க, நாம என்ன பெரிய கேபிள் சங்கரா? இருந்தாலும் என்னோட பிளாக்கையும் மதிச்சு அதை போட சொன்னான் பார்த்திங்கல்ல? நண்பேண்டா!




ஒருநாள் காலைல வீட்டுல குளிச்சிட்டு, கொடியில ஜட்டி காய போடும் போது பார்த்தால், பக்கத்துல காய்ந்து கொண்டு இருந்த என் பிரெண்டோட ஜட்டியில ஓசோன் படலம் மாதிரி ஏகப்பட்ட ஓட்டைகள். காலை சூரியனோட ஒளி அப்படியே எல்லா ஓட்டைகளின் வழியாகவும் புகுந்து லேசர் லைட் ஷோ மாதிரி அப்படி ஒரு பிரமாண்டம். என்னடா காரணம்ன்னு கேட்டால், அதிகபடியான நச்சுத்தன்மை கலந்த காற்றும், இரு புவி கோளங்களின் மிகுந்த வெப்பமும் தானாம்.


இந்தவார சோக செய்தி : உலக கோப்பைல எந்தெந்த நாடு ஜெயிக்கும் அப்படின்னு சரியா ஆருடம் சொல்லி கால்பந்து ரசிகர்கள் வயித்துல பால் வார்த்த ஆக்டோபஸ் Paul-க்கு பால் ஊத்திடாங்க. இந்த ஆக்டோபச வச்சு நானும் ஒன்னு ரெண்டு கவிதை எழுதி பொழப்ப ஓட்டியாச்சு.


அனைவருக்கும் ஆபாயிலின் சார்பாகவும், நமீதா விமர்சனத்தின் சார்பாகவும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.





Oct 29, 2010

புறாவை புறக்கணிப்போம்

"புறாவை புறக்கணிப்போம்" என்பதை யாரும் தூக்கத்துலயோ, மப்புலையோ "பிராவை புறக்கணிப்போம்" ன்னு தப்பா படிச்சுறாதிங்க. அதுவும் பெண்கள்.



அபார்ட்மென்ட்ல வசித்து கொண்டிருக்கும் எல்லோரும் எதிர்கொள்ளும்  ஒரு சாதாரண பிரச்சனை தான் இது.  வேலைக்கு போயிட்டு வந்து வண்டிய வெளிய விட்டுட்டு காலையில் வந்து பார்த்தால் நமது பைக், கார்களின் மீது தங்களது காலைக்கடனை கச்சிதமாய் முடித்துவிட்டு போயிருக்கும் அபார்ட்மென்ட் புறாக்கள். இந்த பிரச்சனை எனக்கும், என்னோட பைக்குக்கும் ரொம்பவே பழகி போச்சு.


ஆனா, போன வாரம் என்னோட தங்கி இருக்கிற பிரெண்டு புதுசா ஒரு "ஹோண்டா சைன்" பைக் வாங்கி சீட் கவர், டேங்க்  கவர் எல்லாம் போட்டு அழகா நிறுத்தி வச்சிருந்தான். முதல் நாள் மதியம் ஆபிஸ் போறதுக்காக வண்டிய எடுக்க போனாவன், கொளுத்துற வெயில்ல அப்படியே ப்ரீஜ் (Freeze) ஆகி நின்னுட்டான். அப்பொழுது தான் ஒரு புறா தன் காலைக்கடனை ரொம்ப லேட்டா முடிச்சிட்டு போயிருக்கு. சாதாரணமா அவன் சீட்டுல, தான் உட்காரும் இடத்தை மட்டும் தான் துடைப்பான். அன்னிக்கு முழு சீட்டையும் தண்ணி போட்டு மெதுவா ரொம்ப பொறுமையா துடைச்சுக்கிட்டு இருந்தான்


அடுத்த நாள் ஒரு அரை டஜன் புறாக்கள் சீட் கவர், டேங்க்  கவர் எல்லாத்தையும் சேர்த்து முழு வண்டியையும் கவர் பண்ணிட்டு போயிருந்தது. "மச்சான் இங்க வாங்கடா, இங்க ஒரு புது பைக் நிக்குது" அப்படின்னு ஒரு புறா கால் பண்ணி மத்த எல்லா புறாவையும் கூப்பிட்டிருக்கும்ன்னு நினைக்கிறேன்.


வண்டிய வாங்குறதுக்கு முன்னாடி "புது வண்டிய வாங்குனதுக்கு அப்புறம் உங்க எவனையுமே பின்னால வச்சு ஓட்ட மாட்டேன். ஏதாவது ஒரு அழகான பெண் புறாவ (பிகரு) வச்சு ஒட்டுனதுக்கு அப்புறம் தான் உங்களை வண்டியில த்துவேன்" அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தான். ஆனா கடவுள் உண்மையான பெண் புறாவையே உட்கார வச்சு அவன் ஆசைப்பட்டதை நிறைவேத்திட்டார்.

என் ப்ரெண்டுக்காக நான் எழுதிய சிச்சுவேசன் கவிதை.

வண்ண வண்ணமாய் 
அழகிய  நிறங்களில்
எங்கள் அபார்ட்மென்ட்டில்
வசிக்கும் புறாக்கள் 
அதன் அத்துணை வண்ணங்களையும்(shit)
கொட்டி விட்டு சென்றிருந்தது 
என் புது பைக் சீட்டில்.


ஒவ்வொரு அபார்ட்மென்ட்லயும் மாசாமாசம் மீட்டிங் போடுற மாதிரி, சில சமயம் எல்லா புறாவும் ஒரே பைக் மேல மீட்டிங் போட்டு சமோசா சாப்பிட்டுட்டு, பீட்சா டெலிவரி பண்ற மாதிரி மேட்டர டெலிவரி பண்ணிட்டு போய்டும். அதுவும் ஏதோ ஒரு நாள் மறந்து வீட்டு ஜன்னல் கதவை சாத்தாமல் விட்டு விட்டால், உள்ளே புகுந்து கிச்சன் இருக்கிற பாத்திரங்களை எல்லாம் தள்ளி புட்பால் மேட்ச் ஆடிட்டு போய்டுது.


சென்னை சிட்டியில் காக்காக்களை விட புறாக்கள் தான் அதிகமாய் இருக்கும் போல. பக்கத்துல இருக்கிற வேடந்தாங்கல்ல இருந்து வழி மாறி வந்திருக்கலாம். சரி இதெல்லாம்  எப்படி சாப்பிட்டு உயிர் வாழ்கிறது என்று பார்த்தால்,  இங்கிருக்கும் மக்கள் காக்காவுக்கு பதில் புறாவுக்கு தான் சோறு வைக்கிறார்கள். ஒருவேளை சிட்டியில் இருக்கிறவங்க தங்கள் இறந்து போன சொந்தக்காரர்கள் புறாக்களாய் தான் பிறக்கிறார்கள் என்று நம்புகிறார்களோ என்னவோ?


நாம இப்படி வண்டிய அசிங்கம் பண்ற புறாக்களை புறக்கணிக்கிறதை பத்தி பேசிகிட்டு இருக்கும் போது, புறாக்கள் அடுத்த லெவலுக்கு யோசிக்க ஆரம்பிச்சிடுச்சு. எப்படி நம்ம மேலயே ஷிட் பண்றதுன்னு புக் வாங்கி படிக்குதுங்க.


படிச்சுட்டு ஒன்னு உடனே பிராக்டிகலா செய்தும் பார்த்திடுச்சு.


இன்னொன்னு ஒரு படி மேலே போய், சாவகாசமா தலையில உட்காந்து வேலைய முடிச்சு Distinction -ல பாஸ் ஆகிடுச்சு.




இரண்டு  நாட்டுக்கு இடையில் உள்ள பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர சமாதான புறாவை பறக்க விடுவாங்க. ஆனா இங்க புறாவே சமாதானத்துக்கு பிரச்சனையா இருக்கு. அதுக்கு ரெண்டு வழி தான் இருக்கு. சிட்டியில சுத்துற எல்லா புறாக்களையும் புடிச்சு, சமைச்சு சாப்பிடலாம் (அல்லது) ஜட்டி போட்டு விடலாம்.






Oct 27, 2010

ரங்கூஸ்கியுடன் ஒரு ராத்திரி - ஒரு இனிய அனுபவம்



ரங்கூஸ்கியுடன் ஒரு ராத்திரி அப்படிங்கற தலைப்ப பார்த்த உடனே நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கும். அப்படி தெரியாம அவசர அவசரமா லிங்க்க கிளிக் பண்ணி உள்ள வந்திருந்திங்கன்னா, நீங்க

  • உலக படமான எந்திரனை இன்னும் பார்க்கவில்லை. (இது மட்டும் கலாநிதி மாறனுக்கு தெரிஞ்சுது, இதுக்கு தனியா உங்க மேல கேசு போட்டு லீகலா நடவடிக்கை எடுப்பார்)
(அல்லது)
  • ஆறாவது படிக்கும் போதே செக்ஸ் புக்கை தமிழ் புக்குக்கு நடுவுல வச்சு படிச்சு சங்க தமிழ் வளர்த்த சங்க பிரபுவாக இருக்கலாம். (எந்திரன் படத்தை பார்த்தும் உலக அழகி ஐஸ்வர்யாவை கடித்த ரங்கூஸ்கியையும் சுத்தமாய் மறந்து, குஜாலான மேட்டருன்னு நினைச்சு தெரியாம உள்ள பூந்துட்டிங்க)

இது ரெண்டுல எது உண்மைன்னு பின்னூட்டத்துல மரியாதையா சொல்லிடுங்க. இல்ல நானா கண்டு பிடிச்சேன், அப்புறம் ரங்கூஸ்கிய ஏவி விட்டு, கடிச்சு கடிச்சு விளையாட சொல்லுவேன்.

சரி மேட்டருக்கு வர்றேன். (ஹைய்! உண்மையாலுமே மேட்டரு தானா?)

நைட்டு ஆனா, படுத்து கண்ணா மூடினாலும் தூங்க முடியல. முழிச்சி இருந்தாலும் தூக்கம் வரல. என்னது, யாருமேலாவது லவ்வு வந்திருச்சான்னு கேட்கிறிங்களா? அதுதான் நமக்கு காலைல எந்திருச்சா வர்ற உச்சா மாதிரி அடிக்கடி வருதே. அப்புறம் வேறென்ன?

சென்னைல இந்த ரங்கூஸ்கிகளின் தொல்லை தாங்க முடியல. உலக அழகிய கடிச்சுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான. அத விட்டுட்டு நீயும் ஒரு உலக அழகன்தான் அப்படின்னு என் காதுல வந்து கொய்யுன்னு கத்திகிட்டே கடிச்சு டார்ச்சர் பண்ணுதுங்க. இதுல அடிக்கடி நீங்க ரொம்ப நல்லவர்ன்னு வேற பாராட்டு. சரி, நானும் என்னை உலக அழகன்னு சொன்னதுக்காக எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது?

பொருத்தது போதும்ன்னு பொங்கி எழுந்து போர்த்தினாலும், "சந்தோஷ் சுப்ரமணியம்" படத்துல ஜெனிலியாவுக்கு போடுறமாதிரி ஒரு பெரிய ஊசியா போட்டு மறுபடியும் ஒரே பாராட்டு தான். நானும் கலைஞர் வீட்டுக்கு வழி காமிச்சு, "அவுர போய் பாராட்டுங்க. உங்க கூட்டத்துக்குன்னு தனியா ஒரு இடம் பரிசா கொடுத்து, பட்டாவும் போட்டு கொடுப்பாரு" அப்படின்னு சொன்னாலும் காதுலையே வாங்க மாட்டேன்குதுங்க. மார்கழி மாசமே இன்னும் வரல அதுக்குள்ள தினமும் காதுல ஏகப்பட்ட பஜனை. இனிமேல் கொசுக்கடிய பத்தி இந்த மாதிரி கவிதை எல்லாம் சத்தியமா எழுத மாட்டேன்.

சரி மேல மொட்டை மாடில போய் தூங்கலாமன்னு யோசிக்கும் போது, வீட்டுல படுத்தாவே ஜன்னல் வழியா தூக்கி கீழ போட்டு கொன்னுரும். மொட்டை மாடின்னா சும்மா விடுமா? அழகா தூக்கிட்டு போய் கீழ தள்ளி முட்டைய உடைச்சு ஆபாயில் போடுற மாதிரி, மண்டைய உடைச்சு இருக்கிற எல்லா ரத்தத்தையும் குடிச்சிட்டு போயிடும்.

பகல்ல கடிக்கிற கொசுவினால் தான் சிக்கன் குனியா வருது அப்படின்னுட்டு  (அப்போ, சிக்கன் அதிகமா சாப்பிடரதனால இல்லையா?) நீ என்னை நல்லா கடிச்சுக்கோ சொல்லி காலை விரிச்சு படுக்க முடியுமா என்ன?

சென்னைல இது மழை சீசன்னு சொல்லாம, ரங்கூஸ்கி சீசன்னு சொல்லலாம். பல்லி, பாம்புன்னு வச்சு அனகோண்டா மாதிரி பெரிய பெரிய ஹாலிவுட் படமெல்லாம் எடுக்கறாங்களே, இந்த கொசுவ வச்சு யாரும் படம் எடுக்க மாட்டாங்களா? ரங்கூஸ்கி மாதிரி பெரிய சைஸ் கொசுவெல்லாம் சேர்ந்து மனுசங்கள கடிச்சு நிமிசத்துல கொல்ற மாதிரியும், கடைசியா ஹீரோ வந்து காட்ஸிலா படத்துல வர்ற மாதிரி, கொசு முட்டை இடற இடத்தை கண்டு பிடிச்சு எல்லா கொசுவையும் குட்டியோடு சேர்த்து கொல்ற மாதிரி படம் எடுத்தாலாவது நமக்கெல்லாம் கொஞ்சமாவது சந்தோசமா இருக்கும்.

அப்படி ஒரு படம் கொசுவ வச்சு மிகவும் பிருமாண்டமா கொஞ்சம் காமெடி கலந்து எடுக்க, நம்ம சங்கர தவிர எனக்கு யாரும் தெரியல. எந்திரன்ல வந்த அந்த சின்ன கொசு சீனை பார்த்த, பக்கத்துல இருந்த ஒரு மூணு வயசு குழந்தை சிரிச்சு சிரிச்சு அதுக்கு கண்ணுல தண்ணியே வந்திடுச்சு (ஒருவேளை அது அழுதுகிட்டு இருந்ததோ?).


டிஸ்கி: 
இந்த பதிவு ரங்கூஸ்கிகளின் தொல்லை தாங்காமல் இரவு இரண்டு மணிக்கு எழுந்து எழுதப்பட்டு, அனைத்து ரங்கூஸ்கிகளுக்காகவும் டெடிகேட் செய்யப்பட்டது.
இந்த பதிவு எழுதிகிட்டு இருக்கும் போது பக்கத்துல படுத்திருந்த என் பிரெண்டு கேட்டார் "ஏசி இருந்தா கொசு வராதுல?" ஆமாய்யா, கொசுக்கு குளிர் அடிச்சு போய் போர்வை போர்த்தி படுத்து தூங்கிடும். போய்யா யோய்!