Nov 18, 2010

மழையும் மழை சார்ந்த இடங்களும் (சென்னை ஸ்பெஷல்)



வறட்சி காலத்தில் 
வற்றிப்போன ஆற்றின் உள்ளே
படகு போல ஒவ்வொன்றாய்
ஆக்கிரமித்து குடியேறிய 
வீடுகளில் வசிக்கும் குழந்தைகள்
ஒவ்வொரு மழை காலத்திலும்
காகித கப்பல் செய்து விளையாட அவசியமில்லை.
அவர்கள் வீடுகளே கப்பலாய் மிதக்கும்
ஆற்றின் பதில் ஆக்கிரமிப்பில்.

------------------------------------------------------------------

காளான் டிஷ் 



மழைவிட்ட பின்
அபார்ட்மென்ட் மொட்டை மாடியில்
சென்று பார்த்தால்
எண்ணற்ற டிஷ் காளான்கள்.

------------------------------------------------------------------

ஒவ்வொரு மழைக்கு பின்னும்
போடப்படும் தார் ரோடுகள்
தார் ஏடுகளாய்
அடுத்த மழையில்.

------------------------------------------------------------------

போகும் வழியெல்லாம்
சாலையெங்கும்
நிரம்பி வழிகிறது 
மாநகராட்சியின் 
மழைநீர் சேகரிப்பு திட்ட குழிகள்.





1 comment:

Anonymous said...

இரண்டு படங்களும் மிக அழகு!

கவிதைகளும் சூப்பர் பாஸ்!