Jul 18, 2013

பன்னி - 2 (இது பன்னி டான்ஸ்)


"நான் என்ன குப்பையை எடுத்தாலும் நீ பாக்கணும். உனக்கு இது போதும்" என்ற மனோபாவம் கொடுமையானது. அது எல்லோருக்கும் பொதுவானது.




தமிழக மக்களின் ஆழ்மனதில் வேரூன்றியிருக்கும் மொன்னையான ரசிப்பு தன்மையை, அதிரடியாக வெளிக்கொணர்ந்து வெற்றி பெற்ற 'பன்னி' -யின் முதல் பாகத்தை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் 'பன்னி - 2' வும், அதே பார்முலாவில், மக்களின் அதே மொன்னை ரசிப்பு தன்மையை நம்பி, அதே பன்னி பட்டாளங்களின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது.

இம்முறை சந்தானம் என்ற காமெடி
பன்னியும், ஹன்சிகா என்ற வெள்ளை பன்னியும் மற்றும் ஒரு ஆப்பிரிக்க வில்லன் பன்னியும் நியூ அடிசனாக (addition) சேர்க்கப் பட்டுள்ளன(ர்).

Recap:


முதல் எபிசோடில், நல்லூர் கிராமத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் நாயகன். ஊரில் நடக்கும் அனைத்து சாக்கடை பிரச்சினைகளையும் சுமுகமாக, வன்முறையின்றி தீர்த்து வைக்கிறார். அதனால் நாயகனின் 'பன்னீர் செல்வம்' என்ற பெயரை சுருக்கி
பன்னி என்றே எல்லோரும் செல்லமாக அவரை கூப்பிடுகின்றனர். ஊர் மக்கள் தங்கள் வீடுகளில் பன்னிக்குட்டி உண்டியல் வைத்திருப்பது அவர் மேல் இருக்கும் அன்பின் உச்சக்கட்டம்.

ஒருமுறை அரேபிய குதிரை அனுஷ்காவின் காணாமல் போன சங்கிலியை, "நைட்டியை எப்படி கழட்டினீங்க?" என்று கேட்டு செர்லாக் ஹோம்ஸ் பாணியில் சாதுர்யமாய் கண்டுபிடிக்க, அவருக்கும் நாயகிக்கும் உடனே தமிழ் சினிமா சம்பிரதாய படி காதல் துளிர்க்கிறது. டூயட்டுகளில் தன்னை விட மிகவும் உயரமான குதிரையுடன் ஆடுவது பன்னிக்கு சாவாலான விசயமாய் தோன்றினாலும், ஹைஹீல்ஸ்களின் உதவியோடு அதை செவ்வனே செய்து முடிக்கிறார். அதன் பிறகு அவருக்கு, 'கொலுசு காணாமல் போனது', 'கொடியில் காயபோட்டிருந்த பாவாடை காணாமல் போனது' போன்ற கேசுகளே அதிகம் வருகின்றன. 

இதனால் கடுப்பாகும் பன்னி, அந்த கேசுகளை கான்ஸ்டபிள் எரிமலை ஏகாம்பரத்துக்கு டிரான்ஸ்பர் செய்கிறார். பிறகு கதையில் வில்லன்கள் அறிமுகமாகின்றனர். படத்தில் ஐந்து பைட்டு, எக்கச்சக்க பன்ச்கள் என்று முடிவாகி இருந்ததால், வில்லன்களிடம் பஞ்ச் டயலாக் பேசி முதலில் அவர்கள் காதில் இருந்து ரத்தம் வர வைக்கிறார். பிறகு குற்றுயிராய் இருக்கும் அவர்களை கையால் அடித்து துவம்சம் செய்கிறார்.

கடைசியாக கிளைமாக்சில் அனைத்து வில்லன்களின் காதுகளையும் பஞ்சராக்கி, அவர்களை கொன்ற பின் அனுஷ்காவுடன் வீட்டிற்கு காரில் பயணிக்கிறார். இனி கல்யாணம் செய்து, பஸ்ட் நைட்டு தான் என்று குஜாலாய் யோசித்துக் கொண்டே வரும் போது, இடையில் ஹோம் மினிஸ்டர் விஜய குமார் வண்டியை நிறுத்தி சீக்ரெட் தையல் மிஷன் ஒன்றை தந்து பன்னியை சோகத்தில் ஆழ்த்துகிறார். இருந்தாலும் கடமையை கண்ணாக நினைத்து, Gun-யை எடுத்து கொண்டு கிளம்புகிறார்.

இனி, 

இரண்டாம் பாகத்தில், தூத்துக்குடி வரும் அவர், அந்த தையல் மிஷனை வைத்து பள்ளிக் கூடம் ஒன்றின் அருகில் ஸ்கூல் யூனிபாம் தைத்து கொடுக்கும் தையல் கடை ஒன்றை ஆரம்பிக்கிறார். அளவு எடுக்கும் பையனாக சந்தானத்தை வேலைக்கு அமர்த்தி கொள்கிறார். சூப்பர் பிகர்களுக்கு மட்டுமே சந்தானம் அளவு எடுக்கிறார். சப்பை பிகர்களை அசிங்கமாய் கலாய்த்து வெளியே அனுப்பும் அவரின் பிரமாதமான காமெடி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

தையல் கடை வைத்து கொண்டே, அண்டர் கவர் ஆப்பரேஷனில் ஈடுபடுகிறார் பன்னி. அண்டர் கவர் ஆப்பரேசன் என்பதால், கீழே மட்டும் கவர் செய்து கொண்டு அவ்வப்போது புதர் பின்னல் இருந்து துறைமுகத்தில் நடக்கும் சட்ட விரோத வேலைகளை வேவு பார்க்கிறார். அவருக்கு இயற்கையிலேயே தூரப் பார்வை என்பதால், ஆறு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கப்பலையும் பைனாகுலர் இல்லாமலே நோட்டம் இடுகிறார்.


பள்ளிகூடத்திலும் 'டஸ்டர் காணாமல் போனது', 'சாக்பீஸ் காணமல் போனது' போன்ற கேஸ்கள் வர, வழக்கமான உத்தியில் கண்டு பிடிக்கிறார். 
இதற்கிடையே மார்க்கெட்டில் பூசணிக்காய் விற்று படிக்கும் ஹன்சிகா என்ற பள்ளிமாணவி இவரை ஒருதலையாய் காதல் செய்கிறார். பன்னி தன் ஒரு தலையை அனுஷ்காவுக்கு அல்ரெடி கொடுத்து விட்டதால், அவரது காதலை மறுத்து விடுகிறார்.

அடிக்கடி ரவுடிகளோடு சண்டை போட்டாலும், இரண்டாம் பாகத்தில் பைட் அதிகம் வர வேண்டும் என்ற காரணத்திற்க்காக, பொதுமக்கள் சிலரை பிடித்து பன்ச் டயலாக் பேசி, தங்களை ரவுடி என அவர்களையே நம்ப வைத்த பின் அடிக்கிறார்.

ஒருமுறை வில்லனின் இடத்திற்கு செல்லும் போது துப்பாக்கியை மறந்து விட்டு வந்து விட, பஞ்ச் டயலாக் வைத்தே சமாளித்து திரும்பி வந்து விடுகிறார். அவர் Rivital மருந்து எடுத்து கொள்வதால், மனப் பாடம் செய்து படிக்கும் பஞ்ச் டயலாக மட்டும் மறக்காமல் நியாபகத்தில் இருக்கிறது. ஒரு மிஸ்டேக் கூட வராமல் இருக்க வீட்டில் கண்ணாடி முன் நின்று அதிகம் பேசி ரிகர்சலும் எடுத்து கொள்கிறார். 

கடைசி பைட்டில், தங்கள் குடும்பத்தை கொல்ல வரும் வில்லன்களை வன்முறையில்லாமல் சமாளிக்க, வேண்டுமென்றே துப்பாக்கியை விட்டு விட்டு, வாயை மட்டுமே எடுத்துக் கொண்டு போகிறார். வில்லன்கள் வரும் போது, தன் வீட்டு கேட்டை பூட்டி விட்டு வாயை திறக்கிறார். ஒவ்வொரு பன்ச்சும் புல்லட்டாய் சீற, அறுந்த காதுகளோடு அலறி அடித்து ஓடுகின்றனர் வில்லன்கள். 

சில புத்திசாலி வில்லன்கள், இயர் போனை காதில் மாட்டி தப்பிக்க பார்க்கின்றனர். அப்படி எஸ்கேப் ஆக முயற்சிப்பவர்களின் காதில், தன் பாக்கெட்டில் வைத்திருக்கும் பஞ்சிங் மெசினை வைத்து ஓட்டை போட்டு ரத்தம் வர வைக்கிறார். 

ஹீரோவின் பன்ச்சிலிருந்தும், பஞ்சிங் மெசினில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள, தப்பி ஓடும் தமிழ் அறியா அந்த ஆப்பிரிக்க வில்லனையும், அவன் நாட்டுக்கே சென்று, தனது பன்ச்சால் காதறுத்து கடைசி வரை அவனால் கூலிங் கிளாசே போடமுடியாமல் செய்து விடுகிறார், மிஸ்டர் பன்னி. 

இரண்டு சீனுக்கு ஒருமுறை இவரும், ஹோம் மினிஸ்டர் விஜய குமாரும் போனில் பேசி கொண்டே இருக்கின்றனர். இப்படத்தில் பன்னிக்கு நாயகியுடன் பேசுவதை விட, ஹோம் மினிஸ்டருடன் தான் அதிகம் டயலாக் வருகின்றன. அபீசியல் (Official) விஷயம் பேசி முடித்தவுடனும் "அப்புறம்..." "இம்..." "சொல்லு..." "சாப்டாச்சா?" என்ற அளவுக்கு அன்னியோன்யமாய் பேசுகிறார்கள். கொஞ்சம் பிசகி இருந்தாலும் ஆபத்தாய் போயிருக்கும் அவர்களது அன்பை, லாவகமாய் காட்டி இருக்கிறார் இயக்குனர்.

படத்திற்கு இயக்குனர் கிராபிக்ஸை, Flat 50% டிஸ்கவுன்ட் ரேட்டில் கேட்டு வாங்கியிருக்கலாம். சண்டை காட்சிகளில் அவரின் நகத்தை காண்பிக்கும் போது, ரியல் பன்னியின் நகமாக மாறுகிறது. பஞ்ச் டயலாக் பேசும் போது, பன்னி உறுமுவது போலவும் காட்டுகிறார்கள். அப்போது அவரது வாய், உருண்டை வடிவத்தில் மாறுகிறது.

'ஏம்பா குமாரு' என்று கட்டை குரலில் பேசும், 'நான் கடவுள்' புகழ் வில்லனின் மொட்டை தலையும் ஒரு முறை கிராபிக்ஸில் பளீரென மின்னுகிறது. சில பேர் அரைகிலோ தக்காளி வாங்கும் போது, எடை போட்டவுடன் கடைக்காரரிடம் சண்டை போட்டு எக்ஸ்ட்ரா ஒரு தக்காளி எடுத்து பையில் போட்டு கொள்வார்கள். எடுத்து போட்ட எக்ஸ்ட்ரா தக்காளி தான்,அந்த மொட்டை தலை கிராபிக்ஸ்.

சுமார் ஆறு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, படம் முடிந்து தியேட்டர் விட்டு வெளியே கொண்டு வரப்படும் ஒவ்வொருவரின் நாடியை பிடித்து பார்க்கும் டாக்டர் "பச்" என்று சொல்லி பரிதாபமாய் வாயை அசைக்கிறார். எஞ்சிய சிலரும் "இருக்கிறதா?" என்ற சந்தேகத்தில் தங்கள் காதுகளை பிடித்து பார்த்து செக் செய்த படியே வெளியேறுகின்றனர்.

மக்களின் நாடி துடிப்பை அறிந்து சீக்வல்(Sequel) படம் எடுத்து வெற்றி பெற்றுள்ள இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

"பன்னி, பன்னி ஹி இஸ் மிஸ்டர் பன்னி."




பன்னி 2 - தமிழின் முதல் சீக்குவல் வெற்றி படம்.


Jul 16, 2013

Nonsense Talking - இந்தியா ரேப்புகிறது


"எழுதி தான் பிழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாத வரை, என் எழுத்து எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்" - Katz


 
சை அங்கிங்கெனாதபடி எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கிறது. அது சாதாரண போஸ்டரிலும் கூட இருக்கிறது. 

தட்டி எழுப்ப வேண்டியது நாம் தான்.


அப்போது இரவு 11 மணி ஆக, 11 நிமிடம் இருந்திருக்கலாம். சென்னைக்கு சென்று கொண்டிருந்த SRM ஸ்லீப்பர் பேருந்தில் சுக உறக்கத்தில் இருந்த எனக்கு நம்பர் ஒன் பிரச்சினை தலை தூக்க, சட்டென விழிப்பு வந்தது.

பஸ் எங்கேயாவது நிற்குமா? என ஜன்னல் திரையை விலக்கி பார்த்துக் கொண்டே வந்தேன். டிரைவரிடம் நிறுத்த சொன்னால், அதிகம் ரூல்ஸ் பேசுவான் என பயம். அதை விட்டால், வழக்கமான ஓட்டலில் தான் நிறுத்துவார்கள். அங்கே கட்டண கழிப்பறையில் இரண்டு ரூபாய் கொடுத்து, ஒரு கையில் மூக்கை பிடித்துக் கொண்டு, மற்றொரு கையில்..........பிடித்து  மற்றவர்கள் பக்கத்தில் நின்று அடிக்க சங்கோஜமாய் இருக்கும். திறந்த வெளியில் விடவும் முடியாது. அவ்வாறு விட முயற்சிப்பவர்களை, பெரிய கம்பை வைத்து மிரட்டுவதற்கென்றே, சால்வை போர்த்திக் கொண்டு 'செந்தூர பூவே' விஜயகாந்த் கெட்டபில், ஒரு ஆள் இருப்பான். அது பலனளிக்காத பட்சத்தில் வரிசையாய் கெட்ட வார்த்தை கவிதைகள் வாசிப்பான். அதற்கும் சிலர் அசைந்து கொடுக்காமல், கருமமே கண்ணாய் அடிப்பார்கள்.

ஆனால் ஹோட்டல் வரை என்னால் அடக்க முடியாது என்று என்  அடி மனது சொன்னது. தொலைதூர மற்றும் மலை பகுதிகளில் பயணிக்கும் பேருந்துகளில் ஒரு சின்ன பிளாஸ்டிக் பேக் கொடுப்பார்கள். வாந்தி வந்தால் அதில் எடுத்து விட்டு, ஜன்னல் வழியே டூ வீலர்களில் வருபவர்களின் மீது தூக்கி எறிந்து விடலாம். இங்கு அதற்கும் வழி இல்லை. என்ன செய்வது? என்று அவஸ்தையில் யோசித்து கொண்டிருக்கும் போதே, ஒரு பிரதான சாலையில் பஸ் நின்றது. அவசரமாய் எழுந்து சென்று பேருந்தின் உள் கதவை திறந்தேன். அப்போது கண்டக்டர்,

"என்னப்பா?"...

"அண்ணா, ஒன் பாத்ரூம் போகணும்"...

"இங்கே விடமுடியாதுப்பா"...(இங்க இல்லண்ணா , கீழே இறங்கி போய் விடறேன்)

அப்போது டிரைவர் கண்டக்டரிடம் குறுக்கிட்டு, "லேடிஸா?, ஜென்ஸா?"...

"ஜென்ஸ்"...(இது கண்டக்டர்)


"எறக்கி விடு, போயிட்டு வரட்டும்"... 

"கடவுள் சார்... நீங்க!" என டிரைவரை மனசுக்குள் வாழ்த்தி விட்டு, சந்தோசமாய் இறங்கி சென்றேன்.  


ஜன நடமாட்டம் அதிகம் இல்லை. நாளெல்லாம் பிச்சை எடுத்த அசதியில், பிச்சைக்காரர்கள் கடைகளுக்கு முன் போர்வை விரித்து படுக்க தயாராகி கொண்டிருந்தனர்.

பத்தடி தூரம் நடந்து சென்றேன். மறைவான இடம் கிடைக்கவில்லை. கொஞ்சம் தள்ளி ஓரமாய் என் மானசீக கட்சி தலைவரின் போஸ்டர் சாய்த்து வைக்கப் பட்டிருந்தது. அருகில் சக தொண்டர்கள் யாரும் இருந்து விடக் கூடாது என்று மனதில் வேண்டிய பின், "மடை திறந்து தாவும் நதியலை நான்" என்று சந்தோசமாய் ஹம்மிங் செய்த படியே மெதுவாய் ஆரம்பித்து,  உச்சஸ்தாயி வரை ராகம் இழுத்து இசையுடன் கைகோர்த்து சென்று முடித்தேன். முடித்தவுடன் சிறுத்த நிம்மதி ஏற்பட்டது.

உன்னை வாழ்த்த வயதில்லை தலைவா! வணங்குகிறேன்.

கடவுள் கொடுத்த வசதி என, இப்படி  எங்கு வேண்டுமானாலும் கூச்சமின்றி ஜிப்பை சர்ரென்று இழுத்து, சகஜமாய் போகும் அளவுக்கு சுதந்திரத்தை வகுத்து கொண்ட ஆண்கள், பெண்களுக்கு வழங்கியிருக்கும்  சுதந்திரம், இடை, தொடை, மற்றும் இன்னும் பிற தெரியாமல் கவர் செய்து நடை செய்ய வேண்டும். இன்னும் சில பெண்களுக்கு, வெளியே எட்டி பார்க்க அவர்கள் கண்கள் மட்டுமே விசா வாங்கியுள்ளது.


'முகமூடி' என்ற தமிழ் சினிமாவில், அவ்வாறு பொது வெளியில் உச்சா போகும் ஹீரோவின் லுல்லாவை பார்த்த ஹீரோயினுக்கு உடனே காதல் பற்றி கொள்கிறதாம்.

What a Love!!!... ஆச்சர்யத்தில் ஆழ்த்த வைக்கும் முன்னோக்கிய--> சிந்தனை!!

இங்கு எனக்கு காரணமே இல்லாமல், சந்தானம் ஒரு படத்தில் சொல்லும் வசனம் நியாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. 

"ஏன்டா லூஸ்மோஷன் மாதிரி பின்னாடி போகணும்ன்னு நினைகிறீங்க?. யூரின் மாதிரி  முன்னாடி போகணும்ன்னு நினைங்கடா!"


தொண்ணூறுகளின் சினிமாக்களில் நிறைய ரேப் சீன்கள் இருந்தது. கல்லூரிக்கோ, கடைக்கோ சென்று திரும்பி கொண்டிருக்கும் ஹீரோவின் தங்கச்சியை, வில்லன் ஒரு ஆம்னி வேனுக்குள் தூக்கி சென்று கதற கதற கற்பழிப்பான். சிறு வயதில் அதை கொஞ்சம் பரிதாபத்தோடும், அதிக பரிதவிப்புடனும் பார்த்த நியாபகம். அதற்கு அந்த நடிகைகளின் தத்ரூபமான நடிப்பும் ஒரு காரணம். இப்போது நம் இயல்பு வாழ்க்கையில் ரேப் அதிகமாய் நடந்து கொண்டிருக்கிறது. வானிலை அறிக்கை போல, தினமும் தவறாமல் ரேப் நியுஸ் இடம் பெறுகிறது.

Women raped in moving bus இல் ஆரம்பித்து moving car, moving auto என இந்திய வரலாற்றில், மூவ் ஆகி கொண்டிருக்கும் சகல வாகனங்களிலும் ரேப் அரங்கேறியிருக்கிறது. வழக்கமாய் பரபரப்பான நிகழ்வை மையமாய் வைத்து படமெடுத்து காசு பார்க்கும்,  ராம் கோபால் வர்மா இன்னும் ஏன் டெல்லி ரேப்பை படம் எடுக்கவில்லை? ஒருவேளை அவர் அதற்கு திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கலாம்.

நம் சமூகத்தில் ஆண்களுக்கான உணர்சிகள் மட்டுமே வெளிப்படையாக அங்கீகரிக்கப் படுகிறது. பதின்ம வயது எட்டியவர்கள், செக்ஸை பற்றி அறிந்து கொள்ளவும் தங்கள் உணர்ச்சியை தனித்துக் கொள்ள கொஞ்சமாயேனும் உதவியாய் இருந்த, செக்ஸ் புத்தகங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. ஆண்களுக்கு மட்டுமே சொந்தமாயிருந்த பிட்டு படங்களும், தியேட்டர்களும் கலாச்சார மாற்றத்தில் காணாமல் போய் விட்டன. இப்போது இருக்கும் ஒன்றிரண்டு மோசமான டென்ட்டு கொட்டகைகளில் வரும் படங்களும், கதையம்சம் மட்டுமே உள்ள படங்களாக இருக்கின்றன. மருந்துக்கு கூட பிட்டு இருப்பதில்லை என்பது பெரும் சோகம்.

செக்ஸ் புத்தகங்களும், பலான படங்களும் பரிணாம வளர்ச்சி அடைந்து, செல்போன்களிலும், கம்ப்யூட்டர்களிலும் தங்களை புதுப்பித்து கொண்டு விட்டன. கம்ப்யூட்டரை கொஞ்சம் நோண்ட தெரிந்த பையனுக்கு, பத்து ரூபாயுடன் பிரவ்சிங் செண்டர் சென்றால் போதும். எல்லாமே கிடைக்கிறது. ரியல் லைப் வீடியோவிலிருந்து வகை வகையாக பார்க்கலாம். ஒண்ணுமே தெரியாத படிப்ஸ் பையனையும், வெப்சைட்டின் சைடில் வரும் விளம்பரமே கையை பிடித்து கூட்டி சென்று விடும்.

கம்ப்யூட்டர், செல்போன் போன்ற இத்யாதிகள் இல்லாத காலத்தில் பலான புத்தகம் படிக்காமல், அட்லீஸ்ட் பொம்மையாவது பார்க்காமல் நம் அடல்ட் ஏஜ்ஜை கடந்து வந்திருக்க மாட்டோம். ஆனால் இப்போது இருக்கும் பையன்களிடம் எதையும் பார்க்காதே என்று சொன்னால், நியாயமாரே! 

செல்போன்களில் நியுட் வீடியோக்கள் வைத்திருக்கும் பையன்களை, இன்ஸ்பெக்டர் ரோட்டில் தோப்பு கரணம் போட வைக்கும் சினிமா (வழக்கு எண்) காட்சியை பார்த்து கை கொட்டி சிரிக்கிறோம். இது, ஒரு சின்ன பையனின் டிரவுசரை கழட்டி விட்டு அதை பார்த்து 'ஹேய், அம்மணம்' என்று சொல்லி சிரிப்பதற்கு நிகரான காமெடி. 

எத்தனை firewall வைத்தாலும் இப்போது இருக்கும் பையன்களுக்கும் பெண்களுக்கும் கடிவாளம் போட முடியாது. எட்டாவது படிக்கும் பையனுக்கு கையில் ஸ்மார்ட் போனையும் கொடுத்து, டூ வீலரையும் கொடுத்து 'சும்மா இருடா தங்கம்' என்றால் சும்மா இருப்பானா? இது எதுவுமே பயன்படுத்த முடியாத / தெரியாதவர்களின் பிரச்சினை பற்றி மட்டும் யாரும் கண்டு கொள்வதில்லை. ஒரு சாராருக்கு எல்லாம் கிடைக்கும் போது, எதுவுமே கிடைக்காதவன், மூவ் ஆகி கொண்டிருக்கும் வண்டி நிற்கும் வரை எதையும் செய்யலாம் என்று துணிகிறான்.

என்னதான் நமக்குள் Upper, Middle, Low கிளாஸ் என வித்தியாசம் இருந்தாலும், ஆட்டோ டிரைவர், கால் சென்டர் Cab ஓட்டும் ட்ரைவர் என இயல்பு வாழ்க்கையில் லோ கிளாசை சந்திக்காமல், மிடில், அப்பர் கிளாசால் தப்பிக்கவே முடியாது. ஒரு அப்பர் கிளாசுக்கு, இன்னொரு அப்பர் கிளாஸ் கார் ஒட்டவும் முடியாது.

இயல்பாய் நடக்க வேண்டிய விஷயங்கள் மறுக்கப்படும் போது தான், தவறான விஷயங்கள் நடக்கின்றன. வாட்டர் பைப் உடைந்து விட்டால், வால்வை நிறுத்தாமல் துணியை வைத்து அடைக்கும் வேலையை தான் எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். எது தடுத்தாலும் அதன் விளைவுகளோடு சமூகம் தன்னை தானே தகவமைத்துக் கொண்டே இருக்கும்.

Trivia: இப்போது இலவசமாய் வழங்கப் பட்டிருக்கும் அம்மா மடிக்கணினி, படிப்பில் திக்கு தெரியாமல் திண்டாடும் மாணவர்களுக்கு கல்வியில் கலங்கரை விளக்காய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.


                                                                                                          நான்சென்ஸ் தொடரும்...


Mar 12, 2013

"Life of Pigs" - ஆபாயில்

1.) எது நடந்தாலும் எதுவுமே பேசாமல் (மன்மோகன் சிங் போல) அமைதியாக இருக்கலாம்.    (அல்லது)

2.) எதையாவது பேசிக் கொண்டே இருக்கலாம்.

இதில் முதல் நிலையை கடைபிடிப்பவர் ஞானி ஆகிறார். (சதா பேசி கொண்டே இருக்கும் அந்த பைஜாமா எழுத்தாளர் இல்லை.)

இரண்டாவது, சந்தேகமே இல்லாமல் "நாம்" தான்.

நம்மால் ஞானியாக ஆகவே முடியாது. நமக்கு எதை பற்றியாவது, யாரை பற்றியாவது பேசி கொண்டே இருக்க வேண்டும்.  Breaking News இல்லாத நாட்கள் சிறப்பாய் கழிவதில்லை.
 


                 நம்மள கடுப்பேத்தனும்னே இத்தனை மைக் வச்சிருக்கானுங்க.

ன்னை தொடர்ந்து எழுத சொல்லி, நிறைய கொலை மிரட்டல்களும், தற்கொலை மிரட்டல்களும் வந்த வண்ணம் உள்ளன. கொலை மிரட்டல்களை மட்டும் கருத்தில் கொண்டு, இதோ 2013 ஆம் ஆண்டின் முதல் ஆபாயில்.

கமெண்டுகளும் வருவதில்லை. Like-களும், Share-களும் படிப்படியாய் குறைந்து அலெக்ஸா ரேங் ஆழ் துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இது தமிழின் வளர்ச்சியை பிடிக்காத கர்நாடக அரசியல்வாதிகளின் கைங்கார்யமாக இருக்கலாம். சுப்ரீம் கோர்டில் 'பொது நல' வழக்கு போட உத்தேசம்.

இந்த வருத்தத்தில் இருந்த சமயம் என் நண்பன் சதிஷின் நண்பர் (என் பிளாக்கின் நெடுநாள் வாசகர்... ஹி ஹி...) என்னை முதன் முறை சந்தித்த போது, கட்டி பிடித்து தன் அன்பை வெளிப்படுத்தினார். அது எனக்கு ஆயிரம் கமெண்டுகளை அள்ளி தந்ததை போல இருந்தது. இந்த பிளாகை எழுதுவது நீங்கள் தானா!!??? என்று நம்பவே முடியாமல் கடைசிவரை கேட்டு கொண்டிருந்தார். அது ஆச்சர்ய குறியா? இல்லை கேள்வி குறியா? என்று தெரியவில்லை.

எனக்கும் அதே சந்தேகம் தான். எழுத ஆரம்பிக்கும் போது, திடீரென்று எனக்குள் ஒரு ஆவி புகுந்தது போல் ஆகி, ஒரு ஆத்ம மன நிலைக்கு சென்று விடுவேன். பிறகு என்னை அறியாமல் எனது விரல்கள் கீ-போர்டில் நடனமாட ஆரம்பித்து விடும்.

அவரல்லாமல், கட்டிபிடித்தது ஒரு பெண்ணாய் இருந்திருந்தால், அவளையே கல்யாணம் செய்து குட்டி குட்டியாய் நிறைய பப்ளிஷ் செய்ய வைத்திருப்பேன்.

இனி வண்டி வண்டியாய் எழுத போகிறேன். வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அலெக்ஸாவில் ஆயிரம் ரேங்கிற்குள் எடுப்பதாய் என் என் மேனேஜரிடம் பிராமிஸ் செய்துள்ளேன். ஆதலால், என் மயிருனும் மேலான தமிழக மக்களே தயவு செய்து தங்களது பொன்னான லைக்குகளையும், டைமண்ட் கமெண்டுகளையும், பிளாட்டின ஷேர்களையும் அள்ளி தந்து இந்த தமிழனையும், தமிழையும் வாழ வையுங்கள்.



சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில், இப்போது பேஸ்புக், ட்விட்டர்கள் மூலம் தமிழ் வளர்க்க அரும்பாடு படுகின்றனர். அமெரிக்காவில் இருந்து கொண்டு தமிழ் நாட்டு அரசியலை அலசுவது, இடையிடையே  தமிழ் பற்றிய செய்திகளை ஷேர் செய்வது என பல வகையில் கருத்து சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள்.  இதனால் பலர் சிறைக்கும் செல்ல நேரிடுகிறது.

"இந்த தம்பதியினர் காதல் வயப்பட்டுள்ளனர். ஆனால் இது நீடிக்குமா?" என்று டிஸ்கவரி சேனலை போல, எந்த ஒரு தமிழ் சேனலும் அழகாய் தமிழ் பேசுவதில்லை. அவர்களின் வசன உச்சரிப்பும், குரல் வளமும் கேட்டு கொண்டே இருக்க தோன்றும்.

டிஸ்கவரி தமிழ், கூகிள் பிளாக்கர், கூகிள் தமிழ் Transliteration, தமிழ் Translation, தமிழ் விக்கிபீடியா என வியாபார நோக்கதிற்க்காவது வெள்ளைக்காரன் தான் தமிழை வளர்க்கிறான். நமக்கு, புள்ள குட்டிகளை பெறுவதற்கும் வளர்ப்பதற்க்குமே நேரம் பற்றவில்லை. தமிழை வளர்ப்பது அடுத்த கட்ட பிரச்சனை.



வடக்கிலிருந்து தெற்கு வரை வாய் விரிய பேசும் "நீயா நானா" கப்பிநாத் கூட, "வெல்கம் பேக் டு ஆச்சி மசாலா நீயா நானா தீபாவளி ஸ்பெஷல், பிராட் யு பை எஸ்விஎஸ் சன் பிளவர் ஆயில், பவர்டு பை பட்டர்பிளை நான்-ஸ்டிக் குக்வேர்" என்று பந்தாவாய் கோட் போட்டு கொண்டு தமிழ் வளர்க்கிறார்.

ஒருமுறை "தமிழ் பேசுவது" பற்றிய தலைப்பில் ஒரு பையன் "டமில்" என்று உச்சரிததற்க்காக அவமானப் படுத்தி தன்னை தமிழ் ஆர்வலராய் உலகிற்கு அடையாளப் படுத்திக் கொண்டவர். அந்த நிகழ்ச்சிக்கு போகின்ற கெஸ்ட்களுக்கே சொம்பை கிப்ட் பேப்பரில் சுற்றி பரிசாய் கொடுப்பார்கள். சாரு தன் வீட்டில் நிறைய சொம்புகள் அடுக்கி வைத்து உள்ளதாக அவரது சொம்பு வட்டம் தெரிவிக்கிறது. அப்படியிருக்க நடு இரவுக்கு மேல் காத்திருந்து அபத்தமாய் பேசி அவமானப் படுத்தப் படும் அதீத புத்திசாலி பொது மக்களே! உங்களுக்கு ஒரு கேள்வி,

"டேய், எங்கிருந்துடா வறீங்க நீங்கெல்லாம்?"

(கடைசியில் சிறப்பாய் பேசிய அதீத முட்டாளுக்கு எல்.சி.டி. டிவியை கொடுக்கிறார்கள் என்றாலும், அது மற்ற எல்லா முட்டாள்களுக்கும் கிடைப்பதில்லை என்பது கவனிக்கப் பட வேண்டியது. அதை பார்க்கின்ற நீங்களும் முட்டாள்கள் என்பதை சொன்னால் கோபப் படுவீர்கள்!)

கப்பிநாத் அவர்களால் அவமானப் படுத்தப் பட்டு நிறைய பேர் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் விஜய், சூர்யா போன்ற சினி செலிபரெட்டிகளிடம் கப்பிநாத் குழைவதை பார்த்திருக்கிறீர்களா?

உங்கூட்டு நாய் பொறாமைப் படும்.

தமிழில் உள்ள மிக பெரிய குறையே "ர்", "ற்", "ன்" தான். நமக்கு பிடிக்காதவனை(ரை) பற்றி குறிப்பிடும் போதெல்லாம், நாகரிகமாக எழுத வேண்டிய கட்டாயமாகிறது.




புத்தகம் படிப்பது என்பதே என்னவென்று மறந்து போனதால், இப்போது வெயிலுக்கு கூட புத்தக கண்காட்சி பக்கம் ஒதுங்குவதில்லை.

கடந்த வாரம் என் நண்பன் வீட்டிற்கு சென்றிருந்த போது "புதிரா, புனிதமா?" கண்ணில் பட்டது. பையனுக்கு அடுத்த வாரம் கல்யாணம். அதனால நிறைய சந்தேகங்கள் அவனுக்கு. (காலேஜ் படிக்கும் போது, டீச்சரிடம் அவன் ஒரு டவுட்டு கூட கேட்டதில்லை). பிராக்டிகல் எக்ஸாம் முடித்து VIVA-க்காக காத்திருக்கும் மாணவன் போல படபடப்புடன் இருந்த இவனிற்கு பேருதவியாய் இருக்கிறது இந்த புத்தகம்.

ஊருக்கு செல்லும் போது, நாமும் ட்ரெயினில் படிக்கலாமே என்ற எண்ணத்தில்,

"மச்சி நான் படிச்சிட்டு தரட்டுமா?" என்று கேட்டதற்கு, முடியாது என்று கண்டிப்பாய் மறுத்து விட்டான். ஏற்கனவே முழு புத்தகத்தையும் படித்து முடித்து விட்டாலும், பைபிளை போல தினமும் இரண்டு பக்கமாவது திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இருக்கிறான்.

அப்படி இருந்தும் அவனுக்கு சில சந்தேகங்கள் தீரவில்லை. என்ன செய்வது என்று தீவிரமாய் யோசித்து விட்டு, கடைசியாய் இந்த புத்தகத்தை எழுதிய மாத்ரு பூதம் அவர்களின் ஆவியை, ஆவியிடம் பேசும் நபரை (மீடியத்தை) வைத்து கூப்பிடலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.

மிகவும் கஷ்டப்பட்டு ஆவியிடம் பேசும் நபரை கண்டு பிடித்து அவரிடம் சென்றோம். உள்ளே சென்றவுடன் கொஞ்சம் படபடப்பாகவும், பயமாகவும் இருந்தது. விளக்கை உரசிய கொஞ்ச நேரத்தில் பூதம் வந்தார். அந்த மீடியத்தின் மூலமாக பேச ஆரம்பித்தார்.

"என்னப்பா, இந்த நடு சாமத்துல என்னை கூப்பிட்டு இருக்கீங்களே! உங்களுக்கு என்ன சந்தேகம்?"

 "சார்,......."


 "சார்,.......ஒரு டவுட்டு"


 "என்னப்பா? தயங்காம கேளுங்க"


"........."

"........."

"சார், நீங்க வெறும் தாஸா? இல்ல லாடு லபக்கு தாஸா?"
 

மீடியத்தின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி கொண்டிருந்தது. நாங்கள் ஓட தயாரானோம்.

(இவரது போட்டோவை கூகுளில் தேடினால் ஒரே ஒரு போட்டோ தான் வருகிறது. அவர் புத்தகத்தையாவது "பாதுகாப்பாய்" வைத்திருங்கள். இந்த புத்தகம் வரும் தலைமுறைக்காக காக்கப் பட வேண்டும். பின்னர் 'American Pie'-யில் வருவது போல தேடிக் கொண்டிருக்கும் படி ஆகி விடக் கூடாது)



ன் சிறுவயதில் எனக்கும் டிவிக்கும் பயங்கர கள்ள காதல். வீட்டிற்கு தெரியாமல் பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று அடிக்கடி படம் பார்ப்பேன். அப்பாவிற்கு தெரிந்தால் பிரம்படி விழும் என்று தெரிந்தும், சில சமயம் பொறுமையாய் படம் பார்த்து விட்டு சென்று அடி வாங்கி கொள்வேன்.

ஆனால் இப்போது அதே டிவி தான் என்னை தினமும் எல்லா பொசிஷனிலும் வைத்து ரேப் செய்கிறது.




மக்கள் 72-inch டிவி வாங்கினாலும், பெரிய ஸ்க்ரீனில் குடும்ப தொடர்கள் மட்டுமே பார்த்து கொண்டிருக்கிறார்கள். டெக்னாலஜி மட்டுமே முன்னேறிக் கொண்டுள்ளது. அதை பயன்படுத்துபவர்களின் மூளை, யாருக்கும் பயன்படாமல் அப்படியே பிரெஷாக உள்ளது. எங்கள் ஆபிசில் ஜீன்ஸ் டி-சர்ட்டில் தினம் வரும் ஒரு மாடர்ன் மங்கை, You-tube-இல் அந்த நெடுந் தொடர்களை buffer செய்து பார்த்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு இடுப்பில் மூன்று மடிப்பிருக்கும். அவளை மடிசார் மாமி என்று குறிப்பிடுவோம்.

டிவியில் இருந்து என்னை பாதுகாத்துக் கொள்ள, எங்கே சென்றாலும் முடிந்த வரை டிவி இல்லாத பஸ் பார்த்தே ஏறுவேன். சீரியல் டைம் முடிந்த பின்பு தான் இரவு வீட்டிக்கு வருகிறேன். சனி, ஞாயிறு எங்கேயாவது வெளியே சென்று விடுகிறேன். சீக்கிரம் தனியாய் ரூம் எடுத்து போக வேண்டும்.



'நடுவுல கொஞ்சம் எதையோ காணோம்' படத்திற்கு பிறகு இனி தமிழ் படம் பார்க்க மாட்டேன் என்று எங்கள் வீட்டு பப்பி மேல் செய்த ஆணையை (நாய் மேல் ஆணை) மீறாமல் இருக்கிறேன்.

இனி "நோ" நமீதா விமர்சனம் (இப்ப சந்தோசமா?)

இதனால் என்ன பிரச்சினை என்றால் சினிமாவுக்கு கூப்பிடும் நண்பர்களிடம் 'நான் தமிழ் படம் பாக்கறதில்ல மச்சி' என்று உண்மையை சொன்னால், காண்டாமிருகம் ஆகி விடுகிறார்கள்.

தமிழ் ரசிகர்களின் ரசனை கொண்டாட பட வேண்டியது.. இங்கு துப்பாக்கி தான், ஆக்சன் கம் திரில்லர் படம். கண்ணா லட்டு தின்ன ஆசையா, முழு நீள நகைச்சுவை படம். விஸ்வரூபம், சிறந்த ஹாலிவுட் படம். தமிழ் சினிமா என்பது பெரும்பாலும் முட்டாளுக்காக முட்டாள் எடுக்கும் படமாகவே ஆகி விடுகிறது.

தமிழ் சினிமா பார்க்காமல் இருந்ததால், என் மனம் கொஞ்ச நாள் சாந்தியோடு இருந்தது. அப்புறம் நித்யாவுடன் இருந்தது.

ஆனாலும் விதி வலியது தானே!

போன வருட இறுதியில் நண்பர்களுடன் கோவா சென்றிருந்தோம். அங்கே உண்மையாக சைட் சீயிங் மட்டும் தான் போனோம். பாரின் சரக்கின் பக்கம் கூட நெருங்க வில்லை. பீச்சில் பிகினியுடன் காற்று வாங்கி கொண்டிருந்த ஒரு ரஷ்ய நாட்டு வெள்ளைக்காரியின் இடுப்பில் கை வைத்தேன். அதற்கு மேலோ கீழோ எந்த தப்பும் செய்யவில்லை.

எல்லாம் முடித்து விட்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தோம். பஸ் பெங்களூரை தாண்டி வந்து கொண்டிருந்த போது டிவிடியில், திடீரென துப்பாக்கியை காட்டி மிரள வைத்து விட்டார்கள். தவிர்க்க முடியாத அந்த தருணங்கள், எனக்குள் கடவுள் மற்றும் சாத்தான்கள் நம்பிக்கையை உண்டாக்கின. பஸ் சென்னையை வந்தடைந்த போது, ஏறக்குறைய அனைவரும் இறந்திருந்தார்கள். சப்-டைட்டிலை படித்து படம் பார்த்த இரு ஜப்பானியர்களும் அதில் அடக்கம். அவர்கள் வாயில் இரண்டு புல்லட்கள் இருந்தது. நான் குற்றுயிரும் குலை உயிருமாக கிடந்தேன்.


சாக்கடை நிலையம் 
ரில் இருக்கும் சொந்தக்கார பெருசுகள், "தம்பி எங்கப்பா வேலை செய்ற?" என்று கேட்கும் போது, "சென்னையிலங்க" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு ஓடி விடுவேன். சில பேருக்கு "மெட்ராஸ்" என்று சொல்ல வேண்டும்.

சென்னையை கண்டிறாத அந்த பெரிசுக்கோ, நான் ஒரு பெரிய சிட்டியில் கன்னியர்கள் மடியில் தவழ சொர்க்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாய் நினைப்பு.

சென்னையின் நறுமணம் பற்றி, ஒவ்வொரு வருடமும் மூக்கை பிடித்துக் கொண்டே "ஹேப்பி மெட்ராஸ் டே!" சொல்லி கொண்டாடும் சென்னை வாசிகளுக்கு மட்டும் தான் தெரியும். போன வருடம் இஞ்சினியரிங் கவுன்சலிங்கிற்காக வந்த என் சித்தி பெண், இங்கெல்லாம் எப்படியா இருக்கீங்க? என்பது போல பார்த்த பார்வையில், எனக்கு பன்றியாய் மாறி போன உணர்வு.

ஒவ்வொரு வருடமும் ப(ன்)னிரெண்டாவது வகுப்பு முடித்து, கூட்டமாய் சென்று என்ஜினீயரிங் சேரும் பன்றி குட்டிகள், நாலு வருடம் கழித்து தவறாமல் தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் சென்னையை வந்தடைகின்றன.




வெள்ளிக்கிழமை இரவு ஊருக்கு செல்ல, கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் செல்லும் அனைவருக்கும் தெரியும், அந்த நிலையம் உலக தரம் வாய்ந்தது என்று. மழை பெய்து விட்டால் சாக்கடையும் நாமும் இரண்டற கலந்து விடுவோம். ஐ.டி யில் வேலை செய்யும் நம்மை பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய சொன்னால் கூட, நமக்கெல்லாம் அது CakeWalk.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இடத்தில இருக்கும் (சாக்)கடைகளில் வாங்கும் பொருளுக்கு நான்கைந்து ரூபாய் அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டும். நம் ரயில்வே ஸ்டேசனிலும், பஸ் நிலையங்களிலும் கர்ச்சீப் வைத்து பொத்தாமல் நிற்பது அசாதாரண காரியம். 


சம்பிராதய ஜோக்:

அவருடைய நண்பனின் தந்தை தமிழக அரசை வாழ வைக்கும் பெரிய கருணை உள்ளம் கொண்ட குடிமகன். வாடகை கொடுக்காமல் டாஸ்மாக்கில் குடியிருப்பவர். நினைவு திரும்பினால் தன் சொந்த வீட்டிற்கு விசிட் செய்வார்.

ஒரு நாள் அப்படி விசிட் செய்ய வரும் போது, பாதி வழியிலேயே ரோட்டின் ஓரம் தள்ளாடி கவிழ்ந்து விட்டார். அவரது மகனுக்கு செவி வழி இந்த செய்தி வர, வண்டியை எடுத்துக் கொண்டு போய் போதையில் இருந்த தன் அப்பாவை தூக்கி கொண்டு வந்து வீட்டில் போட்டுள்ளார்.

தான் இருக்கும் இடம் மாறிவிட்டதை உணர்ந்த தந்தை, லேசாய் கண்ணை திறந்து, தன் மகனை பார்த்து,

"தம்பி, யாரு பெத்த பிள்ளையோ நீ. என்னை கொண்டு வந்து என் வீட்டுல சேர்த்துருக்க! நீ நல்லாருக்கோணும்"