Dec 23, 2010

இளைய தளபதி விஜயின் மாஸ் - ஆபாயில்


ற்போது நாட்டில் பருப்பை விட வெங்காயத்தின் விலை அதிகம் ஆகிடுச்சு.
டேய் தக்காளி! இனிமேல் எவனாவது "நீ என்ன பெரிய பருப்பா?" கேட்டிங்கின்னா டென்ஷன் ஆகிடுவேன். வேணுமுன்னா "நீ என்ன பெரிய வெங்காயமா?" அப்படின்னு திட்டிக்கோங்க. 

இந்த வாரம் ஒரு கடைல சாப்பிட போயிருக்கான் என் பிரெண்டு. சப்ளையரிடம் "வெங்காயம் கொஞ்சம் அதிகமா போட்டு ஒரு அம்லேட் கொடுங்க" அப்படின்னு ஆர்டர் பண்ண,  அதுக்கு அந்த சப்ளையர், "தம்பி, ஒரு முட்டை வேணும்னாலும் எக்ஸ்ட்ராவா போட சொல்றேன். ஆனா வெங்காயம் மட்டும் கேட்காதிங்க".

அதனால் இனி கடைகளில் (வலைகளில்) கொத்து பரோட்டா, (சாண்ட்விட்ச் அண்ட்) நான்வெஜ் அயிட்டம்ஸ், ஆம்லேட் இதுமாதிரி எல்லாம் சாப்பிடாமல் நம்ம ஆபாயில் மட்டும் சாப்பிடுங்க. ஒரு "வெங்காய" பிரச்சனையும் வராது. ஹி! ஹி!




வ்வொரு வருசமும் ஆங்கில புத்தாண்டுக்கு எங்க அபார்ட்மென்ட்ல பங்ஷன் நடத்துவாங்க. விளையாட்டு போட்டி, பாட்டு மற்றும் டான்ஸ் இது மாதிரி நிறைய நடக்கும். "இந்த வருஷம் விளையாட்டு போட்டி எதிலாவது கலந்துகிறீன்களாப்பா?" அப்படின்னு கேட்டாங்க. உங்க லிஸ்ட்ல "அம்மா அப்பா விளையாட்டு போட்டி இருக்கா?"



ரசியல்வாதி ஆகணும்ன்னா பரபரப்பா எதாவது பண்ணிகிட்டே இருக்கணும்.  நம்ம டாக்டர் விஜய் அதிமுகவில் சேர போறதா நியூஸ் கெளப்பி பரபரப்ப உண்டாக்கி இருக்கார். இதற்கு பின்னால் உள்ள பிண்ணனி காரணம் என்னவென்று பார்த்தால்.  "எத்தனை நாளைக்கு தான் அப்பா பேச்சையே கேட்டுக்கொண்டு இருப்பது? கொஞ்சம் நாளைக்கு அம்மா பேச்சையும் கேட்கலாமேன்னு தான்".

ஆனா நம்ம தளபதியோட மாஸ் என்னன்னு என்னோட முந்திய ஆபாயிலின் (சிலையான விஜய்) ஹிட்ஸ் பார்க்கும் போது தான் தெரிஞ்சது. அதனாலதான் இந்த ஆபாயிலுக்கும் தளபதியே தலைப்புல வந்துட்டாரு. ஆனா தளபதி தேர்தல்ல நின்னா கண்டிப்பா என் ஓட்டு அவருக்கு தான். ;-)



போன வாரம் எங்க மாமா வீட்டுக்கு அவங்களோட ஆறு வயது குட்டி பையன பார்க்கலாம்ன்னு போயிருந்தேன். வீட்டுல அத்தை மட்டும் தான் இருந்தாங்க. எங்க மாமான்னு கேட்டேன். "எத்தனை நாளைக்கு தான் திரும்ப திரும்ப வடிவேலு, விவேக்கின் பழைய காமெடியவே பார்த்துக்கிட்டு இருக்கிறது" அப்படின்னு பையன் புதுசா காமெடி பார்க்கணும்ன்னு கேட்டு இருக்கான். மாமாவும் "கொஞ்சம் பொறு. அடுத்த மாசம் காவலன் ரிலீஸ் ஆகுது." அப்படின்னு சொல்லி இருக்கார். பையனும் காவலன் ரிலீஸ் ஆகும்ன்னு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாமல் இப்பவே ஏதாவது காமெடி படம் பார்த்தாகனும்ன்னு அடம் புடிச்சு இருக்கான். உடனே மாமாவும் வேறு வழி இல்லாமல் "புது டாக்டர்" நடித்த விருத்தகிரி படத்துக்கு பையனை கூட்டிகிட்டு போயிருக்கார்.



ங்க வீட்டுல எனக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பிச்சிடுச்சு. போன வாரம் வீட்டுக்கு போன போது, எங்க அப்பா, நாலைந்து பெண்களோட ஜாதகத்த காமிச்சு ஒவ்வொரு பொண்ணும் என்னென்ன படிச்சு இருக்கு, அவங்களோட சொத்து பத்து எல்லாத்தையும் வரிசையா சொன்னாரு. கடைசியா ஒரு ஜாதகத்த காமிச்சு "இந்த பொண்ணு டீச்சர் ஆக வொர்க் பண்ணுது. 10 ஏக்கர்ல மாந்தோட்டம் இருக்கு" அப்படின்னு சொன்னார். நானும் கொஞ்சம் காமெடியா "அவங்க வீட்டு மாங்கா நல்லா ருசியா இருக்குமா?"ன்னு கேட்டேன். உடனே பக்கத்தில இருந்த என் சொந்தகார பையன் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டான். ஏன்டா, இப்படி தப்பு தாப்பா யோசிக்கிறீங்க?




நான் ஒரு மிக பெரிய பணக்காரனா ஆனா கூட, இந்த விஜய் மல்லையா மாதிரி ஆகணும். இந்த ஆள பாருங்க சமீரா குட்டிய, மன்னிக்கவும் ரெட்டிய எப்படி கட்டிப் புடிச்சு ரொட்டி மாதிரி சாப்பிடறான். இந்த அம்பானி, டாட்டா, சச்சின் எவ்வளவுதான் காசு வச்சிருந்தாலும்? பப்ளிக்ல......................... ஹும்........... பெரும் மூச்சு.




Last week tweets.

  • ஒரு சராசரி இந்திய கிரிக்கெட் ரசிகனைப் போல இன்னிக்கும் ஹர்பஜன் சதம் அடித்து இந்தியாவை மீட்பார் என்று எதிர் பார்த்தேன். (First test with SA) 
  • I'd rather stay with a Ghost (female) than be alone... ;-)
  • My colleague had a packet of chocolates in her desk.
    I asked "Do you like chocolates more?" She nodded negatively.
    "Or the chocolates like you more?". Now she smiled positively.
     


Dec 17, 2010

மந்திர புன்னகை - நமீதா விமர்சனம்



இயக்குனர்கள், நடிகர்களாக மாறுவது தமிழ்நாட்டுல வெரி ஓல்ட் பேஷன். அதை பின்பற்றி திருபழனியப்பன், மன்னிக்கவும். 'கரு'பழனியப்பன் அவர்கள் நடித்த மந்திர புன்னகை படத்தின் போஸ்டர் பார்க்கும் போதெல்லாம் இந்த படத்தை பார்க்கும் எண்ணம் என்னை விட்டு ரொம்ப தூரம் போய் கொண்டு இருந்துச்சு. சரி விடுங்க. சாதாரண மக்கள் நம்மளுக்கே நாம ஒரு ஹீரோ அப்படிங்கற நினைப்பு அடிமனசுல ஆழமா இருக்கும். அப்படிங்கும்போது திரைத் துறைல இருக்கிற ஒரு இயக்குனர் அப்படி நினைக்கிறது தப்பு இல்ல. ஆனா மத்தவங்கள நினைக்க வைக்கருது தான் தப்பு. என்ன சொல்லவர்றேன்னு புரியலையா? (எனக்கும்தான்)

படம் ரிலீஸ் ஆகி நிறைய நாள் ஆனதுனால் படத்தோட கதை நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கும். கதை தெரியாதவர்கள் இங்கே கிளிக் செய்து படிக்கவும்.

படத்தோட ஒரிஜினல் ஹீரோ வசனம் தான். ஒவ்வொன்னும் ரசிக்க கூடியது. ஆனா அதுவே ஓவர் டோஸ் ஆக போயிடுச்சு. படத்துல வர்ற ஒவ்வொரு கேரக்டருமே "நான்  நீன்னு" போட்டி போட்டுக்கிட்டு வசனத்தை பங்கு போட்டு பேசி இருக்காங்க. தான் படத்திற்காக எழுதிய டயலாக் வேஸ்டாக போய்ட கூடாது அப்படிங்கறதுக்காக இயக்குனர் நிறைய இடங்களில் வசனங்களை கதாபத்திரங்களின் வாயில் வலிந்து திணித்து இருக்கிறார்.

படத்தோட ஹீரோ, நம்ம  கருபழனியப்பன் அவருக்கு தண்ணி அடித்து கொண்டு  குட்டியோட ஜாலியாக பொழுதுபோக்கற மாதிரி ஒரு கேரக்டர் என்பதிற்காக, படம் முழுவதும் தாடி வச்சுக்கிட்டு மூஞ்சு கழுவாம நம்ம விஜய டி. ராஜேந்தரின் தவ புதல்வன் மாதிரியே வந்து நமக்கு சரக்கு அடிக்காமலேயே வாந்தி வர்ற மாதிரி பீலிங் உண்டாக்குகிறார். டூயட் கூட தாடியோட தான் பாடுறார். இவருக்கும் ஹீரோயினுக்கும் வர்ற ரெண்டு பாட்டுக்கு பதில் கம்முன்னு ஹீரோயினுக்கு மட்டும் ரெண்டு சோலோ சாங் கொடுத்து இருக்கலாம். இவர் சொல்ற கருத்தெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா கிடைக்கறவங்களை எல்லாம் புடிச்சு கருத்து சொல்லி மிகவும் கஷ்டப் படுத்தறார். கருத்துபழனியப்பன்.

மனசில் பட்ட எதையுமே கூச்சபடாம சத்தம் போட்டு பேசுற கேரக்டர் என்பதாலும் படம் முழுவதும் கருவண்டு மாதிரி பயங்கரமா நம்ம காதுக்குள்ள வந்து கத்தி கத்தியே பேசி வலிக்க வைக்கிறார். இவருக்கு பாரதியார் கவிதை பிடிக்கும் என்பதற்காக, பேச்சு போட்டியில் சொல்கிற மாதிரி எல்லோரையும் சுத்தி உட்கார வச்சு மூச்சு விடாம கவிதைகளை ஒப்பிக்கிறார்.

இவர் நிறைய "ரேட்டு"களோடு என்ஜாய் பண்ணி இருக்கிற மாதிரி சொன்னாலும், படத்துல ஒரே ஒரு ரேட்டத்தான் (சன் மியூசிக் பிகரு) காமிக்கறாங்க. இன்னும் ரெண்டு மூணு ரேட்ட காமிச்சு இருக்கலாம். ஒருவேளை நடிக்க வைக்க ரேட்டு(சம்பளம்) பத்தலையோ என்னவோ?

விஜய் டீ.வி "நீயா? நானா?"வில் பத்து நிமிசத்துக்கு ஒரு தடவை விளம்பரம் போடுற மாதிரி இவரு குவார்ட்டர் அடிக்கறத அடிக்கடி காமிக்கிறாங்க. விஜய் டீ.வில போடுற சைனீஸ் டப்பிங் படத்தில் தண்ணி அடிக்கிற சீன் வரும் போது "மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு" அப்படின்னு கீழே ஓட விடுவாங்க. அதுமாதிரி இந்த படத்துக்கும்  போட்டங்கன்னா, படத்துக்கு வர்ற சப்டைட்டில் விட இது மிஞ்சிடும். குவார்ட்டர் பாட்டில் அல்லது பிஸ்லேரி பாட்டில் இப்படி படம் முழுவது ஏதோ ஒரு பாட்டில கைல வைச்சுகிட்டே சுத்துறாரு. முடியல!

இப்போ இவர் ஹீரோவாகவும் இனி தொடர்ந்து நடிப்பேன்னு ஊர் முழுதும் உரக்க மைக் போட்டு சொல்லிக்கிட்டு இருக்கார். நல்லதோ? கெட்டதோ? நடக்கட்டும்.


"பூனை ஒரு தடவை பாலை ருசி பார்த்துடுசுன்னா, அது மறுபடியும் மறுபடியும் பால் கலசங்களை உருட்ட ஆரம்பிச்சிடும்"



ஹீரோயின் மீனாட்சி, இவங்களுக்கு ஆப்டான ரோல். ஆனா இவங்க முகத்த பார்க்க முயற்சிக்கும் போதெல்லாம் இவங்களோட முன்னழகுதான் முன்னுக்கு வருது. இந்த படத்தின் மூலமாக இவருக்கு இன்னும் நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து சீக்கிரம் முன்னுக்கு  வரவேண்டும் என்று எம்பெருமான் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.

இசை எப்படின்னு, கரிக்டா தெரியல. டவுன்லோட் பண்ணுன பைல் சரியா இல்ல.

தனக்கு ஒரு ஓரளவு ஹிட் படத்தை கொடுத்த இயக்குநருக்காக, கெஸ்ட் ரோல்ல கொஞ்ச நேரமே வந்தாலும், நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் 'அனுபவிச்சு' நடிச்சு இருக்கார். இந்த மாதிரி கெஸ்ட் ரோலுக்கு சம்பளம் வாங்காமலே நடிக்கலாம். அதே மாதிரி சிநேகாவ கூட அந்த "ரேட்டு" ரோல்ல நடிக்க வச்சு இருக்கலாம். டைரக்டர் மிஸ் பண்ணிட்டார்.

சும்மா காமெடிக்காக படத்தை ஒட்டி எழுதி இருக்கேன். ஆனா படத்தை ஒரு தடவை பார்க்கலாம். கருபழனியப்பனோட கருந்தாடி பார்க்க பயமாக இருந்துச்சுன்னா நைட்ல பார்க்காமல், பகல்ல பாருங்க.

நமீதா டச்: மந்திர புன்னகை, மர்ம புன்னகை.


Dec 14, 2010

வளை'வில்' சிக்கிய விழிகள்




அம்பைப் போல
உன் கண்களை நேராய் 
பார்த்து தான் பேசுகிறேன்.
ஆனாலும் என் பார்வைகளை
அனாசயமாக
வில்லாய்
வளைத்து விடுகின்றன
உன் வளைவுகள்.




சிலையான விஜய் - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)


ம்ம தளபதிக்கு (அரசியல் தளபதி அல்ல சினிமா தளபதி) கேரளாவில சிலை வச்சு இருக்காங்களாம். இதற்கு பின்னாளால் கேரள அரசியல்வாதிகளின் பிண்ணனி இருக்க கூடும் என்று யூகிக்க படுகிறது. எப்படியும் நம்ம டாக்டரு தான் தமிழகத்தின் தலைஎழுத்தை மாற்றபோகும் அடுத்த முதலமைச்சராய் வருவார் என்பதை தெரிந்து கொண்டு, பின்னாளில் தமிழகதிற்கு தண்ணீர் திறந்து விடுதல் விவகாரத்திற்கு தளபதியால் எந்த விவகாரமும் வந்துவிட கூடாது என்று அவர்கள் யோசித்து வைத்த பிளான் ஆகவே இருக்க கூடும் இந்த சிலை மேட்டர்.

இல்லையெனில் பத்து கேரக்டரில் பயங்கரமாக மைதாமாவு அப்பி நடித்து, தான்தான் உலகமகா நடிகர் என்று ஊரையே நம்ப வைத்த நடிகரெல்லாம் இருக்க, எங்கே விக் வைத்து நடித்தால் தன் ஹேர் ஸ்டைல் களைந்து விடும் என்று 3 Idiots என்ற படத்தின் பேருக்கு லேட்டாக அர்த்தம் புரிந்து எஸ்கேப் ஆன நம்ம "குருவி" மண்டையருக்கு சிலை வைப்பார்களா? இருந்தாலும் கேரள மக்களே, நீங்க சிலை மட்டும் தான் வைக்க முடியும். ஆனால் நாங்கள் சிலை வைக்காமல் சாதாரண போஸ்டருக்கே பால் அபிசேகம் பண்ணி பால் குடம் எடுத்து அழகு குத்தி சாமியாக நினைத்து வழிபடுவோம் தினந்தோறும்.


னக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு ரொம்ப நாளா சோகமாக சுத்திகிட்டு இருக்கு. வீட்ல என்ன பிரச்சனைன்னு தெரியல. அதனால அந்த பொண்ண மாயாஜால் தியேட்டரில் நாலாவது நாளாக வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் நம்ம தமிழ்நாட்டின் அடுத்த டாக்டர் விஜயகாந்த் நடித்த விருத்தகிரி படத்துக்கு கூட்டிட்டு போய் "குஜால்" படுத்தலாம்ன்னு இருக்கேன். ஏதோ நம்மால முடிஞ்சது.


ந்த மொபைல் போன்ல இருக்கிற டிக்ஸ்னரில, ஆங்கில படத்துல அடிக்கடி யூஸ் பண்ற வார்த்தைகள் எதுவுமே இருக்க மாட்டேன்குது. முக்கியமாக அந்த நாலு எழுத்து வார்த்தை. அத டைப் பண்றதுக்குள்ள வர்ற டென்சன்ல, என்னோட வாயில இருந்து ஏகப்பட்ட செந்தமிழ் வார்த்தைகள் வெளி வந்துடுது (..த்தா). இந்தியால மட்டும் தான் இப்படியா? இல்லை வெளிநாட்டிலும் இந்த பிரச்சனை இருக்கா?


நான் எப்பவுமே ரெகுலரா டீ குடிக்கிற கடைக்கு பிரெண்ட்ஸ்களோடு ஒருநாள் போயிருந்தேன். நாலு டீ போட சொன்னோம். அந்த டீ மாஸ்டரு எல்லோருக்கும் டீ கொடுத்துட்டு எனக்கு மட்டும் பால் கொடுத்தாரு. நான் டீ தான் வேணும்ன்னு கேட்க, அவரு "நீ கொழந்த பையன் தான? பால் குடிக்க மாட்டியா?" அப்படின்னாரு. உடனே நான் டென்சன் ஆகி "நாங்கெல்லாம் பஸ்ட்(First) நைட்ல மட்டும் தான் பால் குடிப்போம்" ன்னு ஒரு பன்ச் விட, அதை கேட்டு அந்த மாஸ்டர் பஸ்ட் நைட்டுக்கு கதவ சாத்திட்டு உள்ள வரும்  பெண்  மாதிரி வெட்கப்பட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டார்.


ஒரு கசப்பான உண்மை மற்றும் தத்துவம்:
"மானே", "தேனே", "தேவதை" அப்படின்னு கவிதை எழுதி சுத்துறவனை விட காண்டம் பாக்கெட் வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு சுத்துறவனுக்கு தான் காதலும் காதலியும் ரொம்ப ஈசியா கிடைக்குது.

அதனால உங்க பாக்கெட்ல கவிதைய வச்சுக்காதிங்க. காண்டத்தை வைத்து கொள்ளுங்கள்.

காண்டம் வச்சு இருக்கறவனெல்லாம் ராவணனும் இல்லை. காண்டம் வச்சகாதவனேல்லாம் ராமனும் இல்லை. -- சுந்தர காண்டத்திலிருந்து (கம்பராமாயணம்)


ரி அடுத்த சமீபத்தில் வெளிவந்த டாப் 4 டப்பா படங்கள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

1. கனிமொழி - நாயகி ஒரு கவிஞராக இருந்தும் பாடல்கள் எதுவும் இல்லாமல்/எழுதாமல் அதிரடியான வசனங்கள் மூலமாக மட்டுமே பரபரப்பை ஏற்படுத்திய படம். குறிப்பாக படத்தில் நாயகிக்கும், நீரா ராடியா என்ற பெண்மணிக்கும் இடையேயான வசனங்கள் நாயகியின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் "எவ்வளோ நல்லவங்க" என்பதை ஒளிவுமறைவு இல்லாமல் காட்டுகிறது . ஒரிஜினாலிடி கருதி படத்தின் வசனங்கள் முழுவதும் ரியல் டைம் ரெகார்ட்டிங் செய்யப்பட்டுள்ளன. சின்னத்திரையில் வெளியான கனிமொழி ஒலிநாடா மிக பெரும் ஹிட் ஆன போதிலும் வெள்ளித்திரையில் வெளியான கனிமொழி திரைப்படம் மிக பெரும் பிளாப் ஆனது மிகப்பெரும் வருத்தமே.

2. உத்தமபுத்திரன் - ஆ. ராஜா அவர்களின்  ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் இந்தியாவின் அனைத்து மக்களையும் "கொள்ளை" கொண்ட படம். இந்த வருட சிறந்த நடிகருக்கான தேசிய விருது இவருக்குதான் என்று பார்லிமெண்டில் பரவலாக கருத்து நிலவுகிறது.

3. நந்தலாலா - தன் பிள்ளை மற்றும் பேரன்களுக்காக அன்னையை தேடி அடிக்கடி டெல்லி போகும் ஒரு கலைஞரின் (பாசத் தலைவனின்) பாசப் போராட்டம்.

4 மைனா - தன் குஞ்சுக்காக போராடும் ஒரு மைனாவின்(வனிதா விஜயகுமார்) வெளியே சொல்லமுடியாத கதை.


Dec 1, 2010

டாக்டரு விஜயகாந்து - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

ந்த வாரம் வெள்ளிகிழமை ஒரு மகத்தான விஷயம் நடக்க உள்ளது. மக்களே அதற்காக உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.  புரட்சி கலைஞர் விஜயகாந்த் இனி டாக்டர் விஜயகாந்த் ஆக உருவெடுக்கிறார்.  இதன் பிறகு நம்ம வல்லரசு மக்கள் நலனில் மேலும் அக்கறை கொல்வார். "டாக்டர்" என்பது இவருக்கு வழங்கப்படும் அடைமொழி பட்டமே ஒழிய பதவி அல்ல. அதனால், தலைவலி என்று தப்பி தவறி அவரிடம் செல்வோருக்கு, சாப்பிட்ட பின் பார்க்க சொல்லி தருமபுரி பட சி.டி இரண்டு வழங்கப்படும். இதனால் நீங்கள் தவறவும் வாய்ப்பு உண்டு.

ஏற்கனவே டாக்டர் விஜய்யின் SMS காமெடியின் மூலமாக கொழுத்த லாபம் சம்பாதித்து வரும் மொபைல் சர்வீஸ் கம்பனிகளுக்கு, "நம்பர் மாற்றாமலே மொபைல் போன் சர்வீஸ் கம்பனிகளை மாற்றலாம்" என்ற திட்டம் பேர் இடியாக விழுந்துள்ள நிலையில்,  டாக்டர் விஜயகாந்த் என்ற சக்தி இந்த கம்பனிகளுக்கு மிகப் பெரும் ஆறுதலாக அமையும். இனி வலையுலக வட்டாரத்திலும், "டாக்டரு விஜய்யும், டாக்டரு விஜயகாந்தும்" என்பது போன்ற தலைப்பில் ஏகப்பட்ட பதிவுகள் வெளிவரும்.










ந்திரனுக்கு அப்புறம் நிறைய படம் ரிலீஸ் ஆகிடுச்சு.

தீபாவளிக்கு வந்த மைனா, உயர உயர பறக்குதாம்.
வ குவார்ட்டர் கட்டிங், ரெண்டு ரவுண்டுக்கு அப்புறம் மட்டை ஆகிடுச்சாம்.
உத்தமபுத்திரன், குடும்பத்தோடு பார்த்து நெகிழ வேண்டிய படமாம். 
வல்லக்கோட்டை, இந்த படத்துக்கு யாருமே விமர்சனம் போடலைன்னு நம்ம ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் ரொம்பவே அமைதியான கிங் ஆக மாறிட்டாராம்.
போன வாரம் ரிலீஸ் ஆன நந்தலாலா, சூப்பரா லாலா பாடி எல்லோரையும் தூங்க வைக்குதாம்.
நகரம், இந்த படம் குஷ்பு மேடத்தின் சொந்த தயாரிப்பு என்பதால், சுந்தர்.சி பக்கத்துலையே உட்கார்ந்து வேலை வாங்கி இருக்கலாம். (சுந்தர்.சி க்கு ஹீரோயினோடு உள்ள அந்த லிப் கிஸ் சீனுக்கு, குஷ்பு பக்கத்துல இருந்து பார்த்தாங்களான்னு தெரியல.) படம்  சுமாராக உள்ளதாம்.
மகிழ்ச்சி, தமிழின தலைவர் சீமான் இந்த படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியே என்றாலும், அவர் இன்னமும் சிறையில் இருப்பது வருத்தமான விஷயம்.
கனிமொழி, படத்துக்கும் இந்த பேருக்கும் சம்பந்தமே இல்லைன்னு நிறைய பேரு சொல்றது உண்மையாக இருக்கும் பட்சத்தில், நீரா ராடியா என்றாவது படத்துக்கு பெயர் வைத்திருக்கலாம். கொஞ்ச நாள் ஓடியிருக்கும். கனிமொழி விமர்சனத்தை படித்து சிரிக்க இங்கே கிளிக்கவும்.

இவ்வளவு படம் ரிலீஸ் ஆகியிருக்க,
இன்னமும் இந்த சன் டீவில எந்திரன் பட டிரைலர் போட்டு கொன்னுகிட்டு இருக்கானுங்க.  நாராயணா! இந்த ரங்கூஸ்கி கொசு தொல்ல தாங்க முடியல!



ன்னோட பிரெண்டிடம் இருந்து ஒரு SMS வந்தது.


There are two great kings who are ruling the world till now. They are
---
---
Smo-King and
Drin-King

அதற்கு என்னுடைய பதில்.


" You have missed a great king who is ruling the world most from the beginning. He is 
---
---
F#%-King"



இந்த வார வீடியோ:




"எப்படி காக்கா இப்படியெல்லாம் மனுஷன் மாதிரி யோசிக்குது" அப்படின்னு நீங்க ரொம்ப யோசிக்காதிங்க. அது சிம்பிள். ஏன்னா, மனிதன்தான் இறந்து காக்கையாக பிறக்கிறான். எப்பூடி?