Apr 30, 2010

முதலை கண்ணி



என் காதலை சொல்ல
ஒவ்வொரு முறையும்
கண்ணாடியின் முன் நின்று
மனதிற்குள்ளும்
சத்தம் போட்டும்
பேசி சரி பார்த்த
வார்த்தைகளை எல்லாம்
அப்படியே விழுங்கி
கொன்று தீர்க்கின்றன
உன் முதலை கண்கள்.

நீ
அழகில் அகலிகையாய்
பக்கம் நெருங்கையில்
அகழியாய்!





3 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை .....

மதுரை சரவணன் said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள். பார்த்து காதல் முதலி கண்ணீர் விடப்போகிறது.

ப்ரியமுடன் வசந்த் said...

இதோடா....