Jul 30, 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன் ? அட்டு தகவல்கள்.



இந்த தொடர் பதிவ என்னை எழுத அழைத்த திரு வழிப்போக்கன் அவர்களுக்கு நன்றி. இது யாருடா இன்னொரு வழிபோக்கன்னான்னு யோசிக்காதிங்க. நானே என்னைய கூப்பிட்டு கிட்டேன். ஹி! ஹி!, இதெல்லாம் அசிங்கம்ன்னு நினைச்சா blog நடத்த முடியுமா?

ரெண்டு மூணு நாலா உடம்பு வேற ரொம்ப சரி இல்லாம போச்சு. அதனால பதிவு எதுமே போட முடியல. பிரெண்டு கூட கேட்டான் ஏன்டா ப்ளாக்ல போஸ்ட்டு போடலைன்னு. ஆமா இன்னும் ரெண்டு நாலு இப்படியே இருந்தா என்னை போஸ்ட்மார்டம் பண்ணிடுவாங்க. இதுல எங்க போஸ்ட் போடுறது.

சரி, கொஸ்டினுக்கு போலாமா?

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

இதுக்கு மேலயும் அத உங்களுக்கு சொல்லித்தான் தெரியனுமா என்ன? (யாருப்பா இந்த மாதிரி ஒன்னாம் கிளாஸ் கேள்வி எல்லாம் கேட்கறது?) ஓகே நெக்ஸ்ட்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மை பெயர், கதிர்வேல்.  என்னடா பழைய பேரு மாதிரி இருக்குன்னு பாக்காதிங்க. இந்த பேருல அஜ்மல் நடிச்ச ஒரு புது படமே வெளி வரபோகுது.

வழிபோக்கன்னு பேரு வச்ச காரணம்? எல்லோரும் திரும்பி பார்ப்பாங்க அப்படிங்கறதுகாகத்தான்.  (முக்கியமா பொண்ணுங்க)


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

வலை உலகத்துல இன்னும் கால் அடி கூட எடுத்து வைக்கல. ஆனா என் காதலி கவிதாவுக்கு தான் நன்றி சொல்லோனும். கவிதாகுள்ள இருந்து தான் என்னோட கரு எல்லாம் உண்டாகுது. நீங்க நினைக்கிற கரு இல்ல. இது கவிதைக்கான பொருள்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்? 

இன்னும்  பிரபலம் ஆகலைங்க. பிரபலமாகத்தான் ஆபாயில் போட ஆரம்பிச்சுருக்கேன்.  நீங்களும் படிச்சு உங்க ஆதரவ கொடுங்க. திரட்டியின் தயவால் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா ரவுடி (பிரபலம்) ஆக ட்ரை பண்ணறேன்.


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

இல்லைங்க. நம்ம இமேஜ நாமலே டேமேஜ் பண்ண கூடாதுங்கற முன் எச்சரிக்கைதான். ஆனால் கூட இருக்கிற நண்பர்கள் பத்தி கொஞ்சம் எழுதி இருக்கேன் (புட்பால் கிரேசி இருபத்தி நான்காம் புலிகேசி , கொஞ்சம் பிரேக், நிறைய கிலோ மீட்டர்).  அதனால இப்பல்லாம் பசங்க எங்க அவங்கள பத்தி எழுதிடுவேனோன்னுட்டு பயந்துகிட்டே எனக்கு வோட்டு  போட்டுடறாங்க. எப்படி? என் ஐடியா.
என்ன பொறுத்த வர, விளைவுங்கறது நல்லதாத்தான் இருக்கனும். ஹி ஹி.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஆமாங்க ஆபீஸ்ல வேலையே இல்லாம எப்படி பொழுத போக்கறதுன்னு தெரியாம முழிச்சு கிட்டு இருக்கும் போது தான் வலைப்பூவோட அறிமுகம் கிடைச்சுது (இதை எங்க மேனேஜர் படிக்காம இருந்தா சரி). காசு பணம் யாருக்கு வேணும். உங்க அன்பும், பின்னூட்டமும் இருந்தா அதுவே மனசுக்கு தெம்பா இருக்கும்ங்க.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்.  என்னோட இடுப்புல மூணு தாங்க இருக்கு. அதுல ஒன்னு இங்கிலிபீசு.  அப்புறம் நான் அழகா போட்டோ எடுப்பேன் (மத்தவங்க சொன்னாங்க). குறிப்பா வயசு பொண்ணுங்கள (டிரஸ் இல்லாம). அதுக்கொரு வலைப்பூ வச்சிருக்கேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாம படர மாதிரி எனக்கு தெரிஞ்சு யாருமே இங்க எழுதறதில்ல. இப்படி சொன்னாலாவது நம்ம மேல யாராவது கோபப் படுவாங்கலான்னு பார்க்கலாம். (கேள்விய கவர் பண்ணியாச்சு)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
  
LK  அப்படிங்கறவரு என்னை அவரோட வலைப்பூல அறிமுக படுத்தினார்.  எனக்கு நானே எதிர்கவிதை எழுதனத பாராட்டி அறிமுக படுத்தி இருந்தார். அவருக்கு என் நன்றி. மக்கா நீங்களும் அவர பார்த்து புத்திசாலிதனமா நடந்துகோங்க.


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

சாக போற தூக்கு தண்டனை கைதிகிட்ட கேட்கற மாதிரியே இருக்கு. இன்னும் இந்த பதிவுலகத்துல எத்தனையோ சாதிக்க வேண்டி இருக்கு. 
சரி, எனக்கு வீட்டுல பொண்ணு பார்க்கறாங்க. அதனால உங்களுக்கு தெரிஞ்ச நல்ல பொண்ணா பார்த்து சொல்லுங்க. கல்யாணம் ஆச்சுன்னா சொல்றேன் வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு போங்க. மொய் மறக்காம வைக்கோணும் ஆமா.







5 comments:

Jey said...

ஓட்டு போடாச்சு, ஃபாலோவர் ஆயாச்சு....பணத்த என்னோட அக்கவுண்ட்ல போட்ருங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை நண்பரே..
தொடர்ந்து கலக்குங்கள்..

பழமைபேசி said...

இஃகிஃகி

Anonymous said...

சீக்கிரம் ரவுடி ஆக வாழ்த்துக்கள்! :)

Jey said...

thala time iruntha padingka

http://pattikattaan.blogspot.com/2010/08/blog-post.html