Jul 1, 2010

பெண்ணாகிய பேனா

 
 
கண்ணுக்கு மையிட்டு
கவிழ்த்துகின்ற பார்வையாலே
கதையொன்று எழுதுகிறாய்
காகிதமாய் நான் மாற.

பார்க்கும் பார்வைகளை
அழுத்தமாய் பார்க்காதே
ஈர்க்கும் உன் (இ)மையால்
என் இதயம் உய்த்து விடும்.

என் வாழ்கையின் அர்த்தங்களை
வரிகளாய் எழுதுகிறாய்
என்று எண்ணிதான்
காற்றில் பட படத்திருந்தேன்.

முழுதாக முடிக்கும் முன்னே
எடுத்து எறிந்தாய்
என்னை
முள்ளை போலே

காரணங்கள் யாது என்றேன்
கதையில் சிறு மாற்றங்கள் என்றாய்.
வலி கொண்டு உணர வைத்தாய்,
அவை கண்கள் அல்ல
முட்கள் என்று.





1 comment:

மதுரை சரவணன் said...

கதை மாற்றம் கற்பனை வளம் . வாழ்த்துக்கள்.