Jan 5, 2018

தியாக தலைவிகள்

அது சென்னையில் வெள்ளம் வந்த சமயம். மக்கள் மின்சாரம் இல்லாமல் இருட்டில் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகினர். மெழுகுவர்த்தி சப்ளையும் போதவில்லை. மக்கள் படும் துன்பத்தை கண்டு, வெகுண்டெழுந்த அம்மா தன் அரசியல் வாழ்க்கையை தியாகம் செய்து விட்டு, சொத்து குவிப்பு வழக்கில் தானே விருப்பத்துடன் சிறைக்கு சென்றார். இரவு பகலாக மெழுகுவர்த்தி தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டார். சிறை நிர்வாகமும் அம்மா விரும்பும் போது, சிறையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி கொள்ளலாம் என்று அறிக்கை விட்டது. அயராது உழைத்ததில் அவரின் உடல்நிலை மோசமாகி அப்பல்லோவில் சேர்ந்து இட்லி கிடைக்காமல் தன் இன்னுயிரை நீத்தது நம் அனைவருக்கும் தெரியும். அம்மா இறந்த பின் அவருடன் உடன்கட்டை ஏற துணிந்த, அவரது உடன்பிறவா தோழியான சின்னம்மாவும் அம்மாவின் வழியே சிறைக்கு சென்று, மெழுகுவர்த்தி உருட்டி கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி அடைந்ததில் அம்மாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. இனி ஒரு கேண்டில் லைட் போராட்டமோ அல்லது கேண்டில் லைட் டின்னரோ உங்களுக்கு அம்மாவின் நியாபகம் கண்டிப்பாக வர வேண்டும். ஒவ்வொரு அரிசியிலும் விவசாயின் பெயர் எப்படி எழுதப் பட்டிருக்கிறதோ அது போல நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு மெழுகுவர்தியிலும் அம்மாவின் பெயர் இருக்கும். அம்மா செய்த மெழுகுவர்த்தியை கொண்டே, அம்மாவின் உண்மை தொண்டர்கள் அம்மாவுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை அனுசரித்த கொடுமையை எப்படி விவரிப்பது? என் நெஞ்சம் வெடித்து விட்டது.
"மக்களால் நான். மக்களுக்காக நான்" என்பதில் எவ்வளவு உண்மை இருக்கிறது!
அம்மாவின் தியாகம், மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு ஒப்பானது. மெழுகுவர்த்திக்கு எக்ஸ்பைரி டேட் இல்லை. அம்மாவுக்கு மறைவு இல்லை. என்றும் தமிழக மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பார்.
அம்மாவை யாரும் கொல்ல வில்லை. மெழுகுவர்த்தி மக்களுக்காக தன்னையே எரித்து கொண்டது.
அம்மா ஒரு மெழுகுவர்த்தி. சின்னம்மா ஒரு மெழுகுவர்த்தி.
அடுத்த தேர்தலுக்கு இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்களித்து நன்றிக்கடன் செலுத்துங்கள்.


No comments: