Aug 31, 2012

பெண் பொம்மையின் கற்பை காப்பாற்றிய நாயகன் - Non Sense Talking

99.99 மில்லியன் ஹிட்சுகளை என் மேல் வாரி இறைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அடாசு பதிவுலக பெருமக்களுக்கும், மண்வெட்டி வாசகர்களுக்கும் கோடானு கோடி தாங்க்ஸ்!

This Post is strictly for Matured. தயவு செய்து படித்து விட்டு என்னுடன் யாரும் சண்டைக்கு வராதீர்கள்.


நேற்று இரவு, ஷாங்காய் என்ற சீட்டுக்கட்டு விளையாட்டை நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சமயத்தில், தற்செயலாய் கே.டிவி. யின் இரவு கொண்டாட்டத்தில் ஒரு தமிழ் சினிமா காட்சியை பார்க்க நேர்ந்தது. அது "கோ"மகன் ஜீவா அவர்கள் "ஆசை ஆசையாய்" நடித்த முதல் படம் (தேங்க்ஸ் டு விக்கிபீடியா).

நாயகி, ஒரு லேடிஸ் துணிக்கடையில் வேலை செய்கிறார். அப்போது அங்கு வரும் ஒரு ஆள், ஒரு பெண் பொம்மைக்கு அணிவித்திருக்கும் ஆடையை பார்த்து, அது பிடித்து போய் அதை எடுத்து கொடுக்க வேண்டி, நாயகியிடம் கேட்கிறார்.

அதற்கு, இந்திய கலாச்சாரத்தை கட்டி காக்கும் நம் நாயகி, பொம்மையின் ஆடையை அங்கேயே வைத்து கழட்டினால் பொம்மையின் கற்பும், அந்த ஆணின் மனமும் கெட்டு போய் விடும் என்ற காரணத்தால், "ஓகே. சார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. பொம்மையை மேல் மாடிக்கு எடுத்து கொண்டு போய், அதன் ஆடையை கழட்டி உங்களுக்கு பேக் செய்து தருகிறேன்" என சொல்ல,

வில்லனாக காட்டப்படும் அந்த ஆள், "இல்லை இங்கேயே வைத்து கழட்டி கொடுங்கள்" என வம்பிழுத்து அந்த பொம்மையின் ஆடையை பற்றி கிழிக்க முயற்சிக்க,

இதையெல்லாம் அங்கு ஒரு நாற்காலியில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த நம் ஆதர்ச நாயகன் ஜீவா, பொம்மைக்கு ஏற்பட போகும் அவமானத்தை தடுக்க பொங்கி எழ, அங்கே ஒரு பைட் சீன் ஆரம்பமாகிறது.

அதற்கு பிறகு கதையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான் ஷாக் ஆகி, அடுத்த சேனலுக்கு பயந்து ஓடி விட்டேன்.

அந்த சீனை தவிர, நான் படத்தை பார்த்தது இல்லை. நான் சொல்வது கொஞ்சம் மாறி இருக்கலாம். அதற்கு வருந்துகிறேன்.

அந்த பைட் சீனுக்கு பிறகு, நாயகனுக்கு நாயகியுடன் ஒரு டூயட் பாட்டு வந்திருந்திருக்கலாம். அதில் நாயகன் நாயகியின் இடுப்பில் ஊர்ந்து வாசம் பிடித்து, மேலேறி மார்பின் மேல் மையம் கொண்டிருந்திருக்கலாம்.

ஆனால் பொது ஜனத்துக்கு, ஒரு பொம்மையின் நிர்வாணத்தை பார்க்க கூட கட்டுப்பாடு உள்ளது.

இயல்பை கொஞ்சம் கூட பிரதிபலிக்காமல், அத்துமீறி காட்டப் படும் சினிமாக்கள் எல்லாமே நம்மை ஏமாற்றவே எடுக்கப் படுகின்றன. சினிமா எடுப்பவர்களுக்கு, "கவர்ச்சி", "மார்பு", "தொப்புள்" என்பவைகள் தான் பிரதானமாய் சோறு போட உதவும் விஷயங்கள்.

சுதந்திரமாய் செக்ஸ் செய்ய வழி இல்லாமல், எல்லைமீறி போய் கன்று குட்டியையும் கழுதையையும் புணர்ந்து கொண்டிருக்கும் நிலைமையில், திரையில் நடிகையின் ஒரு சாதாரண கிளிவேஜ் சீனை பார்த்தாலே, பக்கெட் பக்கெட்டாய் சலவாய் விட்டு ஏங்கி கொண்டிருக்கும் பரிதாபமான நிலைக்கு தள்ளப் படுகிறான் காமன்மேன்.

நம்மால் பண்ண முடியாததை நாயகன் பண்ணுகிறானே என்று அதை பார்த்து நாம் வியந்து கைதட்டி சந்தோசப்பட்டு கொள்கிறோம்.

மட்டன், சிக்கன் என வகை வகையாய் தின்றுவிட்டு, மிச்சமிருக்கும் எலும்பை நாய்களுக்கு போட்டு அவைகளை குதூகலப் படுத்துகிறவர்கள் தான் நம் சினிமாக்காரர்கள்.

மற்ற மீடியாக்களும் இவைகளை செய்தே, காசு பார்க்கின்றன.

தியானம் பற்றிய ஒரு செய்திக்கு, உள்ளாடையுடன் படு கவர்ச்சியாய் ஒரு பெண் உட்கார்ந்து தியானம் செய்வது போல படம் போட்டு வியாபாரம் செய்யும் "கவர்ச்சி ஆப் இந்தியா" நாளிதழ்

காசுக்காக ஒரு பெண் பல பேரை ஏமாற்றி திருமணம் செய்ததை, "செக்ஸ் வெறியில் பல பேரை ஏமாற்றி திருமணம் செய்த கேரளா பெண்" என்று மாற்றி தலைப்பு போட்டு ஆர்வத்தை தூண்டும் டினமலர்.

நமக்கெல்லாம் ஒரு சந்தோசமான செய்தி. என்னவென்றால்,

இன்னும் கொஞ்ச நாளில் ஸ்ரேயாவின் தொப்புளை, 3D-யில் பார்க்க போகிறோம்.

நடிகனுக்கு நிற்கவே முடியவில்லை என்றாலும்......

முப்பது வயது வரை ஒரு ஆண், பெண்ணை பற்றியும் செக்ஸ்சை பற்றியுமே கனவு கண்டு கொண்டிருக்கிறான். பிறகு அவனுக்கு திருமணம் ஆனவுடன், தூக்கமே வருவதில்லை. அதனால் அப்துல்கலாம் சொன்ன கனவு அவனுக்கு வர சாத்தியமே இல்லை.

நாம் இன்னும் மது அருந்தலாமா? வேண்டாமா? என்றே அடித்துக் கொண்டிருக்கிறோம். உங்களையெல்லாம் நூறு பூனம் பாண்டே வந்தாலும் திருத்த முடியாது. இந்த பழமையான கலாச்சார இந்தியாவில், பூனம் ஒரு அதிரடியான மாடர்ன் புரட்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை.

நமது  கலாச்சாரம் மாறி, செக்ஸ் என்பது சாதாரணமானவனுக்கு சாதாரணம் ஆகும் போது, அரசியல்வாதிகளோ சினிமாகாரர்களோ நம்மை அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது.

அப்போது, தொப்புள் காட்சியையும் கிளிவேஜ் சீனையும் தமிழன் துச்சமென மதித்து, தூக்கி எறிந்து விடுவான். அஞ்சலியையும், ஒவியாவையும் அரைகுறை ஆடையில் நிற்க வைத்து போட்டோ ஷூட் செய்து ஏமாற்றிய, கலகலப்பு போன்ற Third ரேட் காமெடி படங்களும் செல்லுபடியாகாது.

"உயிரின் உயிரே" பாட்டில் சில மைக்ரோ நொடிகள் மட்டும் மங்கலாய் தெரியும் ஜோதிகாவின் நிப்பிள் சிலிப்பை கூர்ந்து பார்த்து கண்டுபிடிக்காமல், புதிதாய் அறிவியலில் ஏதாவது கண்டுபிடித்து வரலாற்றில் இடம் பிடிப்பான் இந்தியன்.


No comments: