July 06, 2011

விழிக்கும் இரவுகள்



தினமும் இரவில் 
சீக்கிரம் உறங்க வேண்டும்
என்ற நினைப்பை 
சுத்தமாய் துடைத்தெறிந்து விட்டு 
என் மூளையில் நிரம்புகிறது
உன்னை பற்றிய சிந்தனைகள்.

பூனைகள் கலவி கொள்ள
அழைப்பு விடுக்கும் சத்தங்கள் 
தொல்லை கொடுத்து
உன் நினைவை கலைக்கின்றன.
அவைகளை விரட்டி விட்டு
தலையோடு போர்த்தி 
உடல் வளைத்து நெளித்து 
மண் புழு போல
மீண்டும் உன் நினைவுகளுக்குள்
புதைந்து கொள்கிறேன்.

மெல்ல நகரும் நிலவு
சொல்லி நகரும் இரவு
நீளும் வானம்
தீரா இரவு.




1 Comments:

Niroo said...

மெல்ல நகரும் நிலவு//

wow sweet

Post a Comment