Sep 29, 2011

A Copycat Movie - ஆபாயில் (அப்படியே சாப்பிடுங்க)

ம் வாழ்கையை நினைவு படுத்தும் திரைப்படங்கள் நம்முடன் எளிதாய் ஒன்றி விடுகின்றன. அந்த வகையில் என்னோடு ஒன்றிய திரைப் படங்கள்,

7G ரெயின்போ காலனி.
எம்(டன்)-மகன்
சந்தோஷ் சுப்ரமணியம்.

இந்த படங்களின் நாயகன் கதாப்பாத்திரத்திற்கும் எனக்கும் அதிகமாய் சம்பந்தம் இல்லையென்றாலும், அந்த அப்பா கதாப்பாத்திரங்களுக்கும் என் அப்பாவுக்கும் நிறைய சம்பந்தங்கள் உண்டு.

நாம் சின்ன வயதில் அப்பாவின் மேல் வைத்திருக்கும் பிம்பம், நாம் பெரியவர்கள் ஆகும் போது கொஞ்சம் கொஞ்சமாய் உடைந்து விடுகிறது. பையன்களுக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு, அப்பாவிற்கும் அவர்களுக்குமான தொலைவு அதிகமாகி விடுகிறது.

நாம் பெரிதாக பெரிதாக அவர்கள் சிறுவர்களாக ஆகி விடுகிறார்கள் (அல்லது) நமக்கு அப்படி தோன்றுகிறது.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் ஆரம்பத்தில் தன் அப்பாவை பற்றி ஹீரோ மற்றவர்களிடம் சொல்லும் காட்சிகளில், நிறைய பீப் சவுண்ட்கள் வரும். நான் பேசும் போதும் பீப் சவுண்டுகள் அதிகம் கேட்பதாய் நண்பர்கள் சொல்லுகிறார்கள்.


மிழ் சினிமாவின் இயக்குனர்கள் நிறைய பேர் டைட்டில் கார்டில் இப்படி பந்தாவுக்காக போடுவார்கள்.

A Manirathnam Film.
A Selvaragavan Film.
A Gaudav menan Moive.
A Venkat Prabu Movie

இப்படி நிறைய பேர்.

இவர்கள் அனைவரும் A Copycat Movie என்று பொதுவாய் போட்டு கொள்ளலாம்.

Copycat - என்ற ஒரு படம் பார்த்தேன். அருமையான திரில்லர். எதையை எதையோ காப்பி அடிப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் நாம். ஆனால் கொலை செய்வதை கூட ஒருத்தன் காப்பி அடிக்கிறான்.


அவன் ஒரு சீரியல் கில்லர். ஒவ்வொரு கொலையையும் வெவ்வேறு கொலைகாரர்கள் செய்ததை போல செய்கிறான்.

ஒவ்வொரு கொலையையையும், யாரைப் போல செய்தான் என சீரியல் கொலைகளை பற்றி ஆய்வு செய்யும் ஒரு பெண் டாக்டர் கண்டுபிடிக்கிறார். தமிழ் இயக்குனர்கள் எந்த படத்தை காப்பி அடித்தார்கள் என்று நம் பிளாகர்கள் சூப்பராய் கண்டுபிடிப்பது போல.

டோர்ரன்ட் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்.



தினமும் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களாக இருந்தாலோ அல்லது விடிய விடிய தூக்கம் கெட்டு ப்ளாக் எழுதி உலகத்துக்கு தொண்டு செய்து தியாக செம்மல்களாக வாழ்பவர்களாக இருந்தாலோ, நீங்கள் கம்ப்யுட்டரில் ஓரளவு கீபோர்டை பார்க்காமல் டைப் செய்து பழகி இருப்பீர்கள்.

ஆனால் என் நண்பன் ஆறு வருடம் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஆணி புடுங்கியும் அவனுக்கு கீபோர்டை பார்க்காமல் டைப் செய்ய வராது. அதிகாலை எழுந்து வாசலில் கோலம் போடும் பெண்ணை போல, குனிந்த தலை நிமிராமல் கீபோர்டை பார்த்து அனைத்தையும் டைப் செய்து முடித்த பின் தான், நிமிர்ந்து மானிட்டரை பார்ப்பான்.

ஒரு நாள் அவன் கீழே குனிந்து மும்முரமாய் டைப் செய்து கொண்டிருக்கும் போது, கம்ப்யூட்டர் மானிட்டரை மட்டும் கழட்டி கொண்டு போய்விடலாம் என்றிருக்கிறேன்.


அன்று இரவு நான் அனுஷ்காவை கட்டிபிடித்து முத்தமிட்டு முன்னேறும் போது, திடீரென்று நாய் ஒன்று பயங்கரமாய் கத்தி என் கனவை கலைத்தது. வெகு நாள் கழித்து அனுஷ்கா வந்திருந்தாள். நாயின் சத்தம் தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்தது.

மறுபடியும் கண்ணை மூடி அனுஷ்காவை வரவழைக்க முடியாமல் நொந்து கொண்டே எழுந்து சென்று பால்கனியில் இருந்து கீழே பார்த்தேன். கீழ் பிளாட்டின் உள்ள காம்பவுண்டுக்குள் நாய் ஒன்று வெளியே போக முடியாமல் தவித்து கொண்டிருந்தது.

காம்பவுண்ட் சுவரின் உயரம் அதிகமாய் இருந்ததால் அதனால் வெளியே தாண்ட முடியவில்லை. அதனால் அது பின்னே ரொம்ப தூரம் சென்று, வேகமாய் ஓடி வந்து ஒரு திட்டின் மீது கால் வைத்து தாண்ட முயற்சி செய்ததது. முடியவில்லை. மீண்டும் அதே மாதிரி திரும்ப திரும்ப ஓடி தாண்ட முயற்சி செய்து கொண்டே இருந்தது.

நான் கீழே சென்று பார்த்தேன். கேட் பூட்டி இருந்ததால் நான் ஏதும் செய்ய முடியாமல் திரும்ப வந்து படுத்து விட்டேன்.

கிட்ட தட்ட மனிதனை போலவே யோசித்து தாண்ட முயற்சி செய்து கொண்டிருந்ததை பார்க்கும் போது, அவற்றிற்கும் நாம் பேசுவது போல ஒரு மொழி இருக்கலாம் என்று தோன்றுகிறது. நமக்கு அவைகள் குறைப்பது ஒரு சத்தம் அவ்வளவே. அனால் நாய்களை யார் பெயர் சொல்லி கூப்பிட்டாலும் திரும்பி பார்க்கும். நம் மொழிகளை அவை உணர்ந்து கொள்கின்றனவா?

நாய்களின் வாழ்க்கை சிரமமானது. காலையில் சீக்கிரம் சுறுசுறுப்பாய் எழுந்து, நகர்வலம் சென்று விட்டு, நேரம் தவறாமல் நட்ட நடு ரோட்டில் காலைக் கடனை முடித்து விட்டு திரும்பி வீட்டுக்கு வரும். இரவெல்லாம் மனிதர்களுக்காக எச்சரிக்கையுடன் கண்விழித்து பாதுகாப்பாய் இருக்கிறது.

மார்க்கெட்டிங் வேலை செய்பவர்கள் "என்னடா இது நாய் பொழப்பு?" என்று அலுத்து கொள்வதை பார்க்கலாம்.

You bark harder and you got less/nothing by end of the day.

நாய்களை நாம் மதிப்பதே இல்லை. திட்டுவதற்கு மட்டுமே அதிகமாய் "நாய்" என்ற வார்த்தையை உபயோக படுத்துகிறோம்.

சீய் பொம்பளை பொறுக்கி நாயே!
திருட்டு நாயே!
ஓடுகாலி நாயே!
நன்றி கெட்ட நாயே!

பன்றிகளை விட நாய்களே அதிகம் திட்டு வாங்குகின்றன.

ஹாலிவுட்டில் நாய்களை வைத்து ஏகப்பட்ட படம் எடுத்து இருக்கிறார்கள். மனிதர்களை வைத்தே ஒழுங்காய் படம் எடுக்க தெரியாத, நம் மரியாதைக்குரிய தமிழ் சினிமா இயக்குனர்கள், எங்கே நாய்களை பற்றிய படம் எடுக்க போகிறார்கள்?

ஒரு படத்தில் நாய் குறைப்பதை (பேசுவதை) ஒரு voice converter மெஷின் போல ஒன்றை அதன் கழுத்தில் மாட்டி, அதன் மூலம் அது ஆங்கிலத்தில் மனிதர்களிடம் பேசுவது போன்று காட்டி இருப்பார்கள்.

அப்படி உண்மையாக ஒரு மெஷின் இருந்தால் நினைத்துப் பாருங்கள்.

தெரியாமல் அதன் வாலை மிதித்து விட்டால், "த்தா! பார்த்து போகமாட்ட?" என்று நம்மை அந்த நாய்கள் எல்லோர் முன்னிலையிலும் அசிங்க அசிங்கமாய் திட்டலாம்.

"அடுத்த ஜென்மத்தில் நாயாய் பொறந்து தெரு தெருவாய் அலைய போகிறாய்" என்று உங்களைப் பார்த்து யாரவது சாபம் இட்டாலும், சீனாவில் மட்டும் பிறக்காமல் இருக்க வேண்டும் என நீங்கள் கடவுளிடம் வேண்டி கொள்ளுங்கள்.

நம்மூரில் சொல் பேச்சு கேட்காத ஆடுகளையோ, எருமைகளையோ பார்த்து "இரு, இரு, உனையெல்லாம் கசாப்பு கடைக்கு விட்டாதான் சரி படுவ" என்று அதன் எஜமானர்கள் சொல்லுவதுண்டு. அது போல அந்த ஊரில் நாய்களைப் பார்த்து அவர்கள் இப்படி சொல்லுவார்கள்.

நம் வாழ்வில் பெரும்பாலான நேரங்கள், நாமும் பிகருக்கும், பணத்திற்கும், சாப்பாட்டிற்கும் நாயைவிட அதிகமாக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறோம்.


என்ன மனுஷ பொழப்புடா!

ஒரு ஜோக்:
-----------



மனைவி: இனி காரணம் இல்லாம குடிக்க மாட்டேன்னு சொன்னியே! இப்ப ஏன் குடிச்ச?
கணவன்: ராக்கெட் விட பாட்டில் தேவை பட்டுச்சு. அதான் குடிச்சேன்.

உங்கள் ஆபாயிலின் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.




1 comment:

Philosophy Prabhakaran said...

இவ்வளவு மேட்டரை வச்சி நாலைந்து பதிவாச்சு போட்டிருக்கலாம்... குறிப்பா copycat பற்றி தனி இடுகை போட்டிருக்கலாம்...