Sep 21, 2012

Dirty Rain



ரோட்டின் ஓரமாய்
ஒதுங்கி நின்று
லேசாய் தூக்கி பிடித்து
அடர் மஞ்சள் நிறத்தில்
சிறு-நீர் துளிகளை
சட சடவென்று தரையில்
பரவலாய் சிதறடித்துக் கொண்டிருந்தன
சோடியம் விளக்கு கம்பங்கள்,
நள்ளிரவு கன மழையில்.

******************************

ட்டென்று பிடித்த
கன மழையில்
ஒதுங்க இடமில்லாமல்
நனைந்து விட்டிருந்த
அவள் சுடிதாருக்குள்
அப்பட்டமாய் தெரிந்தன,
முழுக்க நனைந்து விட்ட அவள் முலைகள்
பிராவினால் போட்டிருந்த முக்காடு.

******************************

ஜோடியாய்
தொடர் மழையில்
தொப்பலாய் நனைந்து,
யாரும் பார்க்காத போது
கை தொட்டு உரசி
சல்லாபித்து கொண்டிருந்தன,
கொடியில் கிடந்த
அவள் ரவிக்கையும்
என் சட்டையும்.

*******************************

டு சாமம்
காட்டு வழி பாதையை
தனியே கடக்கையில்,
திடீரென வந்து என்னை பிடித்த
பேய் மழையில்
நடுங்கி போனேன்.
அடுத்த நாள் காலை எனக்கு
'பயங்கர' குளிர் ஜுரம்.


பின் குறிப்பு:

இந்த கவிதைகளை நான் எழுதியதிற்கு, நேற்றிரவு பெய்த மழையை தான் நீங்கள் திட்ட வேண்டும். Don't Blame me!!




No comments: