Feb 24, 2016

கேப்டனும், கஜேந்திராவும்

(picture courtesy: tamil hindu)

ஒரு டிவி சேனலில் ரமணா படத்தின் காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. மூச்சு விடாமல் லஞ்சம் வாங்கியவர்களின் புள்ளி விவரங்களை துல்லியமாக நிமிட கணக்கில் வசனங்களாய் பேசி தள்ளுகிறார்.

அந்த ரமணாவையும், கோர்வையாக இரண்டு வார்த்தையை சேர்த்து பேசவே தடுமாறும் தற்போதைய ரமணாவையும் நினைத்து பார்க்கும் போது, அவருடைய பிந்தைய படங்களுக்கெல்லாம் விஜயகாந்தை போலவே பேசும் மிமிக்ரி கலைஞர்களை வைத்து டப்பிங் கொடுத்திருப்பார்களோ? என்று நினைக்க தோன்றுகிறது. என்னதான் பீல்ட் அவுட் ஆனாலும், எல்லா பந்துகளுக்குமா டக் அவுட் ஆவது?

கேப்டனை சந்தேகிப்பதாக சக ரசிக வெறியர்கள் கண்ணை சிவக்க வேண்டாம்.

கொச்சடையான் படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகளை எடுப்பதற்கு தலைவரை போலவே இமிடேட் செய்யும் கலைஞர்களை வைத்து நடிக்க வைத்தார்கள் என்ற வதந்தி பரவியதும், என் எண்ணத்திற்கு வலு சேர்க்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கியை தூர எறிந்து விட்டு, பாகிஸ்தான் தீவிரவாதிக்கே தமிழில் ஆக்ரோஷ்யமாய் அறிவுரை கூறி திருத்திய கேப்டனின் படங்களை எல்லாம் விடாமல் பார்த்த, Hard Core விசிறி என்ற முறையில், தற்போதை கேப்டனின் நிலைமையையும், அதை அசிங்கபடுத்தி அவமானப்படுத்தி மீம் (meme) செய்து கேலி செய்யப் படுவதையும் பார்க்கையில், என் கண்கள் வேர்க்கிறது.

நீ திரும்ப சினிமாவுக்கே, வந்திடு கஜேந்திரா!

கபாலியே கத்தி பிடிக்கும் போது, உனக்கென்ன? உன் கஜாயுதத்தை எடுத்து கொண்டு புறப்படு! பிறகு நீ தான் கிங்!

அது நடந்தால் தமிழ் நாடு இல்ல, இந்தியா இல்ல, உலகமே உங்களை ரசிக்கும்.

தூக்கியடி தலைவா! ஜெய்கிந்த்!


No comments: