Sep 11, 2008

அடக்கமில்லை என் ஐம்புலன்களுக்கு


 
உன் பார்வைக்கு
அலையும் என் கண்கள்

உன் குரல் வேண்டி
கேளாவிரதம் இருக்கும் என் செவிகள்

உன் வாசத்திற்கு
வசமாகும் என் நாசி

உன் முத்தத்தை
வாய் விட்டுக் கேட்கும் என் இதழ்

உன் தோள் உரசி
நடக்கத் துடிக்கும் என் தோல்

என் செய்வேன்?

என் ஐம்புலன்களுக்கு அடக்கமில்லை.




No comments: