Jan 16, 2011

போகி, பொங்கல், இளைஞன்,ஆடுகளம் - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)


துவரை நான் போகி பண்டிகையை கொண்டாடியதே இல்லை. ஆனால் இந்த வருடம் அதை நான் கொண்டாட தூண்டியது ரொம்ப நாளாக துவைக்காமல் பத்திரமாய் சேமிக்கப்பட்டு வைத்திருந்த என் நண்பனின் அழுக்கு துணிதான். அவன் பதினோராம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே அமீபாவும் பாக்டீரியாவும் தான் அவனுக்கு மிகவும் பிடித்தமான செல்ல பிராணிகள். பதினோராம் வகுப்பில் பயாலாஜி க்ரூப் எடுத்து படித்தது ஒரு காரணமாய் இருக்கலாம். நீங்களும் அடுத்த தீபாவளிக்கு அடுத்த வீட்டு கம்பி கொடியில் காயும் பழைய அல்லது நீங்கள் விரும்பினால் புதிய துணிமணிகளை எடுத்து கொளுத்தி பாருங்கள் தெரியும் மனதிற்கு எவ்வளவு மகிழ்ச்சி கிட்டும் என்று. எங்கள் வீட்டில் போகி கொண்டாடிவிட்டு அதிகாலை பைக்கில் சென்னையில் இருந்து சேலம் வரை நெடுந்தூர பயணம் மேற்கொண்டோம் நானும் என் சகோதரனும். வழியில் எல்லாம் மக்கள் போகி கொண்டாடி கொண்டிருந்தார்கள். நாங்களும் நடுநடுவில் இறங்கி குளிர்காய்ந்து விட்டு வந்தோம்.

பொங்கல் பண்டிகைக்கு முன்தினம் வெள்ளியன்று இசைஅருவி தொலைக்காட்சியில் "இளைஞன்" படத்தின் பாடல் காட்சிகளை எடுத்த விதம் நிகழ்ச்சியை பார்த்தவுடனே முடிவு பண்ணினேன். இந்த படத்தை "எப்பாடு" பட்டாவது பார்த்து விடவேண்டும் என்று. எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர் "வம்சம்" அல்லவா நாங்கள்.

அடுத்த நாள் பொங்கல் அன்று பொங்கல் சாப்பிட்டவுடன் நண்பர்களை கூட்டிக்கொண்டு இளைஞன் வெளியான திரையரங்கை (ஈரோடு V.S.P) சென்றடைந்தேன். வீதிவரை நெருக்கி கொண்டு நின்ற மக்கள் கூட்டத்தை விலக்கி கொண்டு சென்று உள்ளே பார்த்தால் ஹவுஸ்புல் போர்டு. சரி முன்வைத்த காலை பின்வைக்க கூடாது என்று அடுத்த காட்சிக்கு டிக்கெட் இருக்கா? என்று கவுண்டரில் கேட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு புல்லாம். இதை கேட்டவுடன் எனக்கு ஒரு புல் அடிக்கவேண்டும் என்ற அளவிற்கு மனவருத்தம் ஏற்பட்டது. கலைஞரின் கன்னித்தமிழை கேட்க இன்னும் எவ்வளவு நாள் பொறுப்பது? இந்த கொடுமையை தட்டி கேட்க கண்டிப்பாக கலை(லி)யுலக மன்னன் கலைஞரிடம் சென்று முறையிடுவேன். எனக்காக இல்லையெனினும் நமீதாவுக்கு ஆவது (ஐ மீன் நமீதா விமர்சனம்) அவர் உதவி செய்ய முன்வரலாம். ;-)
இந்த படத்திருக்கு நமீதாவை கலைஞர் ரெக்கமென்ட் செய்துள்ளார் என்று இச்செய்தி கூறுகிறது.

ன் பிக்சர்ஸ் இந்த வருட கணக்கை துவங்கி விட்டார்கள். ஆடுகளம் படத்தின் பாதியிலே எழுந்து வந்த நானும் என் நண்பனும் அப்படியே ஈரோடு இரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே நுழைந்தோம். நம்மூரில் எல்லா இரயில் நிலைய பிளாட்பாரங்கள் பெரும்பாலும் பொது கழிப்பிடத்தின் உள்ளே போகின்ற பிரமையையே ஏற்படுத்துகின்றன. நான் ஒவ்வொரு மாதமும் ஊருக்கு செல்கையில் பிளாட்பாரத்திற்கு போய் இரயில் வரும்/கிளம்பும் வரை உட்காந்திருப்பது மிகவும் சிரமமான விஷயம். பன்றிக்காய்ச்சல் முகமூடி இருந்தால் நலம். அல்லது தமிழ் சினிமா கிளைமாக்ஸ் காட்சிகளில் வருவதை போல, இரயில் புறப்பட்டு சென்று கொண்டிருக்கும். ஹீரோ தூரமாய் ஓடி வந்து கொண்டிருப்பார். ஏறுவாரா? மாட்டாரா? என்று நம் மனதை பதைபதைக்க வைத்து விட்டு  கடைசியாக இரயில் ஏறி ஹீரோயினை கட்டிபிடித்து சந்தோசப்படுத்தி நம்மையும் சந்தோச படுத்துவார். நாமும் இது போல இரயில் புறப்பட ஆரம்பித்தவுடன் ஓடி சென்று ஏறலாம்.

கொஞ்ச நேரம் இரயில் நிலையத்தை சுற்றிவிட்டு வெளியே வந்தால் வழியில் ஒரு ஆங்கிலோ-இந்தியன் மாதிரியான ஒரு பிகரை இரண்டு பன்னாடை பயலுகள் பின்னே நடந்து பாலோவ் செய்து கொண்டு போய் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் ஒல்லிபிச்சான் நடிகர் தனுஷை போன்ற சாயலில் உள்ளதாய் என் நண்பன் சொன்னான். மனசு கேட்கவில்லை. எதற்கு என்பதை உங்கள் யூகத்திற்க்கே விட்டு விடுகிறேன். சிறிது தூரம் தள்ளி ஒரு ட்ராபிக் போலீஸ் Wrong way இல் வந்த இருவரை மடக்கி பிடித்து பொங்கல் போனஸ் கேட்டு கொண்டிருந்தார்.

ஆடுகளம் படத்தில் வரும் ஹீரோவின் கோழியையும் வில்லனின் கோழியையும் இரண்டு அக்சார் பெயிண்டு டப்பாகளில் முக்க வைத்தாவது சண்டை போட வைத்திருக்கலாம். எந்த கோழி யாருடையதுன்னு ஹீரோ மற்றும் வில்லனோட மூஞ்சிய பார்த்துதான் கண்டுபிடிக்க முடிகிறது. ஆடுகளம், "டப்பா டான்ஸ் ஆடுது"

கொஞ்சநாளா நாமளும் எழுதிக்கிட்டு இருக்கோம். ஆனா நமக்கு யாரும் கடிதம் எழுத வில்லையே என்று ஏக்கம் அடைந்ததுண்டு. ஆனால் தற்போது தினமும் குறைந்தது பத்து கடிதங்கள் ஆவது வந்து விடுகிறது. வருவதை எல்லாம் படிப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. (பின்ன, நானே எழுதியதை நானே படிக்கறது ரொம்ப கஷ்டம் இல்லையா?)

பொதுவாக எனக்கு சுயவிளம்பரம் பிடிக்காது. இருந்தாலும் எனக்கு யாரும் கடிதம் எழுதுவதில்லை என்று நீங்கள் தவறாய் நினைத்து விடக்கூடாது அல்லவா? அதனால் ஒரே ஒரு கடிதம் உங்கள் பார்வைக்கு.

Mr Katz Sir,
உங்கள் பதிவுகளை தொன்று தொட்டே படித்து வருகிறேன். மிகவும் அருமையாய் எழுத்துகிறீர்கள். மனசு சரியில்லை என்றால் உங்கள் பதிவுகளை படித்து உற்சாகம் அடைவேன். சில சமயம் வயிறு சரியில்லை என்றால் கூட உங்கள் பதிவுகள் தான் படிப்பேன். 

பின்குறிப்பு: எனக்கு அடிக்கடி அதாவது தினமும் காலையில் வயிறு சரி இருக்காது. 

என்னுடைய பின்குறிப்பு (டிஸ்கி):
இது யாருடைய மனதையும் அல்லது வயிறையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.

இனி வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: கடிதம் எழுதி பாராட்டினாலோ இல்லை பின்னூட்டம் இட்டு பாராட்டினாலோ, மிகவும் சப்பையாக "அருமை", "சூப்பர்" என்று எழுதாதிர்கள். புதிது புதிதாக வார்த்தை பிரயோகம் செய்து உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள். உதவி தேவைப்பட்டால் வாலி வைரமுத்துவின் உதவியை நாடுங்கள். என்னை பாராட்ட வார்த்தைகளே இல்லையெனில் வெறும் ஸ்மைலீயை ( :-) ) மட்டும் போடுங்கள். புரிந்து கொள்வேன்.


பொங்கல் ட்வீட்ஸ்: 



பீர் சாப்பிடறவிங்க எல்லாம் பொங்க வைத்து குடிங்க. மற்றவர்கள் எல்லாம் பொங்கல் வைத்து சாப்பிடுங்க. # ஹாப்பி பொங்கல்.


3 comments:

Rafeek said...

என்னது ஆடுகளம் படத்திலிருந்து பாதில வந்துட்டிங்களா? சரக்கடிச்சுட்டு படம் பார்த்து பதிவு எழுதுனா இப்படிதான்.

Katz said...

@ Rafeek,
இல்லைங்க. படம் பார்த்துட்டு தான் போய் சரக்கு அடிச்சோம்.

யோகா.எஸ் said...

வெறும் மூணே பேரு தான் கமண்டியிருக்காங்களேன்னுட்டு வந்தேன்!என்ன சொல்லுறதுன்னே தெரியல.சும்மா தான் உக்காந்திருக்கமே,தமிழ்மணம் படிக்கலாமுன்னு வந்தா,ஐய்யய்யோ))))))))))))))))))))))))))))))))!