ஆடி மாசம் காத்தா வந்து அடி மனச சாச்சு புட்டலே. கத்தரிகோல் கண்ணால என் நெஞ்ச பிட்டு துணியா கிழிச்சு புட்டலே. ராத்திரி நீ கனவுல வந்தாலே கொசுக்கடி கூட சுகமாத்தான் இருக்குதுலே. ஒவ்வொரு சேலையையும் நீ வச்சு காமிக்கையில பக்கத்துலையே நின்னு பார்த்து ரசித்திடவே துணிக்கடை பொம்மையா மனசு மாற துடிக்குதுலே. தை, ஐப்பசி மாசம் கணக்கு இல்ல உன்ன பாக்க வர்றதனால வாரா வாரம் எனக்கு பொங்கல் தீபாவளிதான்லே. இந்த கனிய, கனிய வைக்க கால் கடுக்க காத்திருப்பேன்லே எம்புட்டு வருஷம் ஆனாலும்.
டிஸ்கி : "எமிய பத்தி மட்டும் எழுதி புட்டலே, என்ன பத்தியும் எழுதுலே" ன்னு நம்ம கனி நேத்து ராத்திரி கனவுல வந்து கேட்டதால இந்த கவிதை.
தினமும் உன் நினைவுகளை ஏற்றி திரியும் கழுதையாகவே மாறி போனேன். "மறந்துட்டியா" அப்படின்னு நீ சொன்னத என்னால மறக்கவே முடியல. நீ கழுதைய தூக்கி கொஞ்சினதில் இருந்து ரோட்டுல போற கழுதையெல்லாம் ரொம்ப அழகாவே தெரியுது. சில சமயம் என் பழைய காதலியை விட. இரவும் பகலும் நீயே தான் ஆளுகிறாய் என்னை. சுதந்திரத்தை மட்டும் கொடுத்து விடாதே! உனக்கு அடிமையாகவே இருந்து விட்டு போகிறேன் என் காலம் முழுதும்.
ஆபாயில் உதவி: http://oldrecipebook.com/images/eggs-sunnysideup.jpg இப்படியே இருந்தா எப்படி? நம்மளையும் நாலு பேரு பின் தொடர ஆரம்பிச்சுட்டாங்க (ஆட்டோலையா?). ஆரம்பத்துல ஏதோ சில கவிதைய மட்டும் கிறுக்கிக்கிட்டு இருந்த நாம, இப்பதான் கொஞ்சம் காமெடியையும் ஆரம்பிச்சிடுக்கோம். ஆனா கவிதையை மட்டும் வச்சே காலத்தையும், இந்த ப்ளாகையும் ஓட்ட முடியாது. அது ரொம்ப சிரமம். பள்ளிகூடத்துல பண்ணுன காதல வச்சே எவ்வளவு நாள் சமாளிக்கறது?. அதுக்கு கொஞ்ச பேரையாவது இப்ப காதலிக்கணும். இல்ல, அவங்க நம்மள காதலிக்கணும். நாமளும் எவ்வளவு நாள் தான் காதலிக்கற மாதிரியே நடிச்சு கவிதை எழுதறது கதை எழுதினா என்ன? கதையா? அதை எப்படி எழுதறது? சின்ன வயசுல சரோஜா தேவி கதைகள் படிச்சத தவிர வேற எந்த அனுபவமும் இல்லயே. இதுல கதை எழுதறது ரொம்ப கஷ்டம். அப்புறம் எப்படி பிரபல பதிவர் ஆகுறது? இதற்கு இந்த பிரபல பதிவர்கள் எல்லோரும் என்ன பண்றாங்கன்னு பார்த்தா புரியலாம். அப்பத்தான் தெரிஞ்சது ரெகுலரா ஏதாவது ஒன்னு எழுதி பதிவா போடணும். நம்ம ஜெட்லி அண்ணாத்த உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக போட படுகிற மாதிரியான படங்களை எல்லாம் பார்த்து ஜெட்லிய விட்டு பன்ச் விடறாரு. சில நல்ல படங்களுக்கு நடுவே அதிக மொக்கை படங்களை பார்க்கும் வலிமையை ஆண்டவன் ஒருசேர ஜெட்லியிடமே கொடுத்திருக்கிறார். ஜெட்லி அண்ணே! உங்களுக்கு மக்கள் கூட்டம்னா அலர்ஜியா? கூட்டம் இல்லாத படத்துக்கே அதிகமா போறீங்க. ஹாலிவுட் பாலா உலக படத்தையெல்லாம் வுட்டு பிரிக்கிறாரு. பாலா அண்ணே, அதுவும் நீங்க சொல்ற 18 + படத்தையெல்லாம் ஒன்னு விடாம பார்த்துட்டு வரேங்க. ஹி! ஹி! VISA அவர்கள் மிகவும் "உணர்ச்சி"பூர்வமா சூப்பரா கதை எழுதுவாரு. அவரோட கதைக்கு எப்பவுமே நான் ரசிகன். இந்த கேபிள் சங்கர் வாரா வாரம் திங்க கிழமை ஆனா கொத்து பரோட்டா போட்டுர்றாரு. நீங்க கடைசில போடுற "அந்த" ஜோக்கு நிறைய பேருக்கு அது நேயர் விருப்பம். பரிசல்காரன் அப்பப்ப அவியல் போடறாரு. (பிரபல பதிவர்ன்னு சொன்னதுக்கு தயவு செய்து யாரும் என்னை அடிக்க வராதிங்க அண்ணே) அப்ப நாமளும் இது மாதிரி ஏதாவது ஒன்னு போடணும். என்ன போடலாம்?. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. (யோசிக்கிறேன்) ஆப்.. ஆப்..ஆபாயில்... ரைட்டு... இனிமேல் ஆபாயில் போடலாம். இது ஒரு நல்ல முடிவுன்னு தோணுது. ஏன்னா? ஆபாயில்ங்கறது எல்லோரும் அடிக்கடி சாப்பிடறது. நிறைய பேருக்கு புடிக்கும். ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடுவாங்க. இதற்கு எனக்கு நம்முடைய தமிழ் குடிமகன்களின் ஆதரவு 234 சட்ட மன்ற தொகுதிகளிலும் முழுமையாக கிடைக்கும் என நம்புகிறேன். என்னுடைய ஆபாயில் படித்து அளவுக்கு அதிகமாக குடித்து ஆபாயில் போடுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அரசின் டாஸ்மாக் வருவாயும் கணிசமாக உயரும் என்ற காரணத்தால் தற்போதைய அரசின் ஆதரவும் இதன் மூலமாக எனக்கு கிடைக்க பெறுமென உறுதியாக நம்புகிறேன். இதற்கும் மேலாக பல அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், காமெடி நடிகர்கள் ஆகியோரின் ஏகோபித்த ஆதரவு நமக்கு கிடைத்துள்ளது என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். கீழே உள்ள படங்களில் யார் அரசியல்வாதி, யார் நடிகர், யார் காமெடி நடிகர் என்று குழம்பினால் அதற்கு ஆபாயில் கட்சி நிர்வாகம் பொறுப்பல்ல.
(இப்படிதான் நமீதாவுக்கு வணக்கம் வைக்க தெரியும். கண்டுக்காதீர்கள். நமக்கு ஆதரவு மட்டும் தான் முக்கியம். இப்பதான் மக்கள் ஆதரவு கொஞ்சம் கிடைச்சிருக்கு. அதனால் கவர்ச்சி படம் போட கூடாதுங்கறதுக்காக நானே MS Paint யூஸ் பண்ணி கவர்ச்சிய மறைச்சிட்டேன். ஹி! ஹி!. அப்படி செய்யா விட்டாலும் சில பெண்ணியவாதிகள் வந்து கரிய பூசிடுவாங்க. ) ஒரு வேளை ஒரு சில காரணங்களால் என்னுடைய ஆபாயில் யாருக்கும் பிடிக்காமல் போய், மோசமான விமர்சனங்கள் உண்டாகி என் மேல் முட்டை தாக்குதல் ஏற்பட்டால், அதை கொண்டு நிஜ ஆபாயில் சாப்பிட கூடிய சாத்திய கூறுகளும் உண்டாகலாம். ஆகவே என்னுடைய ஆபாயிலுக்கு நாலாபுறமும் உங்களுடைய பேராதரவை தந்து ஆபாயிலை வெற்றி பெற செய்யும்மாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இன்னும் எத்தனை நாள் தான் உன் பேச்சில் நான் உறைந்து போவதாயும் உன் முத்தங்களில் உயிர் கரைந்து போவதாயும் உன் வெட்கங்கள் என்னை கொள்ளை கொண்டதாகவும் கற்பனையாய் எண்ணிக் கொண்டு கவிதைகளை வெளி வரச் சொல்லி கட்டாயப் படுத்துவது? எங்கே இருக்கிறாய்? உனக்காய் எழுதிய கவிதைகளை காண்பிக்கப்பதற்க்காக என்னுடைய கவிதை நோட்டின் தாள்கள் காற்றில் பட படத்து கொண்டிருக்கின்றன. வார இறுதி நாட்களில் கடற்கரைக்கு சென்று உனக்கும் சேர்த்து மணல் வீடு கட்டி வைத்து காத்து கொண்டிருக்கிறேன். பேருந்து நிறுத்தங்களில் திருவிழா கூட்டங்களில் காபி விடுதிகளில் இன்னும் இதர இடங்களில் உன்னை தேடி கொண்டு இருக்கிறேன் திசை காட்டி கருவி இல்லாது சுற்றி கொண்டிருக்கும் ஒரு மாலுமியாக.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுத பட்ட பதிவு இது.
நாங்கள் ஐந்து பேர் ஒரு அப்பார்ட்மென்ல தங்கி இருக்கிறோம். போன வாரம் வெள்ளி கிழமை என் பிரெண்ட் குடிபிரகாஷ் என்னோட வண்டி வேணும்னு கேட்டு எடுத்துட்டு போயிட்டதால், என் இன்னொரு ப்ரெண்டு "மொட்டை"கிட்ட அவனோட வண்டிய கேட்டேன். அவனும் எடுத்துக்கோன்னு சொன்னான். பையன் கணக்கில் பெரிய ஆள். அதுக்காக அவன் maths நல்லா பண்ணுவான்னு அர்த்தம் இல்லை. எல்லாத்துக்கும் அவன் கணக்கு பார்ப்பான். இது வரைக்கும் அவனோட வண்டிய ஒட்டுனதில்லை. போய் வண்டியை பார்த்தால் Egmore Exhibition -இல் வைக்கற ரேஞ்சில் தான் இருந்தது. சரின்னு வண்டிய எடுத்து ஸ்டார்ட் பண்ணினேன். கர கரன்னு ஹெலிகாப்டோர் மாதிரி பயங்கர சவுண்டு. இறக்கை மட்டும் தான் இல்ல. சத்தம் கேட்டு அப்பார்ட்மென்டே வெளிய வந்து எட்டி பார்த்தது. நல்லவேளை வண்டியில் இருந்து வந்த புகை மண்டலத்தால் என்னை யாரும் பார்க்க வில்லை. ஓகே. பரவாயில்லைன்னு வண்டிய கெளப்பிக்கிட்டு போனதுக்கப்புறம் தான் தெரிஞ்சது Hand brake-க்கு ஒன்னு, "நானும் இருக்கேன்னு" வெறும் பெயருக்கு மட்டும் தான் இருக்கிறதென்று.
நானும் என்னோட புது வண்டியை ஓட்டுகிற நினைப்பில் எடுத்தவுடனே முறுக்கிட்டேன். சுத்தமா கண்ட்ரோலே இல்லை. கால் ப்ரேக் மட்டும் என்மேல் பரிதாப்பட்டு கொஞ்சமாக பிடித்தது. நானும் சீட்டை விட்டு எந்திரிச்சு கால் ப்ரேக் மேல ஏறி நின்னு கிட்டே போறேன். ஓரமாக போகிற புல்டவுசர் வண்டிகாரனெல்லாம் என்னை திரும்பி பார்த்துட்டு போனான். அவனோட வண்டியை விட அதிகம் வந்ததால் ஆச்சர்யம் அவனுக்கு. எந்த கார் மேலேயோ, பஸ் மேலேயோ அடிச்சு ஹெலிகாப்டர்ல பறக்கற மாதிரி பறந்துடுவோமான்னு ஒரே பயம் எனக்கு. ஆந்திர முதலமைச்சர் ராஜ சேகர் ரெட்டிக்கு அடுத்து ஹெலிகாப்டர் விபத்துல சாக போறது நான்தானோ என்று நிறைய Daymare ல்லாம் வந்து விட்டு போனது. எதிர்ல வர்ற பல்சர் பைக்கை பார்க்கும் போதெல்லாம் எமதர்ம ராசா எருமைல வர்ற மாதிரியே ஒரு பிரம்மை. "பயணங்களில் எச்சரிக்கை அவசியம். எமன் எந்த வாகனத்திலும் வரலாம்" என்று போன வாரம் ராசி பலன்லயே போட்டு இருந்தது.
கடைசியாக எப்படியோ எந்த அடியும் படாமல் எங்க அபார்ட்மென்ட்ல வந்து ஹெலிகாப்ட்டரை நிறுத்திட்டு சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டேன். "இனிமேல் நம் வாழ்நாளில் இந்த வண்டியை எடுக்க கூடாது"
டேய் மொட்டை! உன் வண்டிய கூட மன்னிச்சுடலாம். ஆனா வண்டிய குடுக்கறதுக்கு முன்னாடி ஒரு வாக்கியம் சொன்னியேடா. அது இன்னிக்கு வீட்டுல இருந்த Sprite பாட்டில் பெப்சி பாட்டில் ரெண்டையும் மாத்தி மாத்தி குடிச்சும் இன்னும் ஜீரணம் ஆகலைடா. அந்த வார்த்தை என்னன்னா? "வண்டிய நீ மட்டும் ஓட்டு. வேற யாருக்கும் கொடுத்துடாத."
அவனை கெட்ட வார்த்தையில் திட்டுறேன் என்றோ, கொடுமையாக அவனை ஓட்டுகிறேன் என்றோ என்மேல் அவன் கோபத்தில் இருந்திருக்கலாம். ஆனால் அதே நேரம், இதை அவன் "செத்தா ஒருத்தன் மட்டும் தான் சாகனும் வேற யாரும் சாக கூடாது" என்ற ஒரு நல்லெண்ணத்தில் கூட சொல்லியிருக்கலாம். அடுத்த நாள் சனி கிழமை "கொஞ்சம் தேனீர், நிறைய வானம்" ன்னு ஒரு கருத்தரங்கு அண்ணா யுனிவர்சிட்டி Alumni கிளப்பில் ஏற்பாடு செய்து இருந்தார்கள். நானும் அதுக்காக ரெடி ஆகி கொண்டிருந்தேன். வெள்ளி கிழமைதான் அந்த கதைன்னா, சனி கிழமை நம்ம பொய் புலவர் குடிபிரகாஷ் வந்து அவனோட கேர்ள் பிரெண்டுடன் ஊர் சுற்ற என்னோடைய வண்டியை வாங்கி கொண்டு, அவனோட பிரெண்டு வண்டின்னு சொல்லிட்டு ஒரு பழைய பைக்கை கொடுத்தான். என்ன இதுல வித்தியாசம்னா, கை பிரேக் கொஞ்சமா இருந்துச்சு. கால் ப்ரேக் கொஞ்சம் கூட இல்ல.
ஆனால் இந்த முறை நான் கொஞ்சம் முன்னாடியே பிரேக் இல்லன்னு தெரிஞ்சு சுதாரிசுக்கிட்டு ரொம்ப மெதுவாவே ஓட்டிட்டு போனேன். ஆனா என்ன, சைக்கிள்ல போறவன்னேல்லாம் சைடு வாங்கிட்டு போய்கிட்டு இருந்தான். நானும் ஏதோ வண்டிய ஓரம்கட்டி நிறுத்தற மாதிரியே பாவ்லா பண்ணிக்கிட்டு நாப்பது கிலோமீட்டர் போய்ட்டு வந்துட்டேன். "கொஞ்சம் பிரேக், நிறைய கிலோ மீட்டர்" இதுல ரெண்டு பேரும் சேர்ந்து சொல்லிவைக்காம என்ன பண்ணுனாங்கன்னா? என்னோட பிறந்த நாளுக்கு ஏதோ சர்பிரைஸா கிப்ட் கொடுக்கற மாதிரி, பைக்க பத்தி எதுவுமே சொல்லாம என்கிட்ட பைக்க கொடுத்துட்டானுன்ங்க. பாவி பசங்க. What a Scary weak end!