May 4, 2011

ப்ரீத்தி ஜிந்தா தந்த முத்தம் - ஆபாயில்

எனக்கு இரவில் சீக்கிரம் உறங்க செல்வதும் காலையில் சீக்கிரம் எழுவதும் மிக இயலாத காரியம். இங்கு (இந்தியாவில்) நான் தினமும் எழுவதற்கு முன் ஐரோப்பா கண்டமே எழுந்து பரபரப்பாய் வேலை பார்த்து கொண்டு இருக்கும். இரவில் பருவப் பிரச்சனைகளால் என்னால் எளிதில் உறங்க முடிவதில்லை. தப்பாக எண்ண வேண்டாம். இது வாலிப பருவ கோளாறு இல்லை, கோடைப் பருவம். அதிலும் பகலில் சென்னை வெயில் "என் உச்சி மண்டையில சுர்ருங்குது". பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைக்க வேண்டியதில்லை. பஞ்சை மட்டும் வைத்தால் போதும். குபீரென்று பற்றி எரியும்.

தமிழ்நாட்டில் பரவலாக மின்வெட்டு இருப்பதால் மக்களுக்கு எந்நேரமும் வியர்வை குளியல் தான். மிக்சி, கிரைண்டர், ஆடு மாடு பன்றி இவற்றிற்கு பதிலாக எந்த ஒரு கட்சியாவது கடந்த தேர்தல் அறிக்கையில் இலவசமாய் ஏசி கொடுப்பதாய் சொல்லியிருந்தால் மக்களிடம் அது வரவேற்ப்பை பெற்றிருக்கும். ஒருநாள் தற்செயலாய் என் நண்பனிடம் இன்டர்நெட் சாட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, புல்ஷிட்(bullshit) என்று திட்டிவிட்டான். அவனிடம் சொன்னேன் "தயவு செய்து புல்ஷிட் பற்றி கேவலமாய் பேசாதே. ஒருவேளை இந்த தேர்தலில் ஜெயலலிதா வென்று முதல்வராகி, எனக்கு ஒரு பசுமாடு இலவசமாய் கிடைத்தால் அதன் சாணத்தை நான் தான் அள்ளவேண்டும்"





இப்போதெல்லாம் தினமும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதால், கனவிலும் ஐ.பி.எல். வந்து தொலைக்கிறது. அப்படிதான் ஒரு நாளில் மூன்று கனவுகள் தொடர்ச்சியாக வந்தது. முதல் கனவில் நான் பஞ்சாப் அணிக்காக விளையாடுவது போலவும், நான் சிறப்பாய் விளையாடியதற்க்காக ப்ரீத்தி ஜிந்தா அவர்கள் என்னை கட்டி பிடித்து முத்த மழையில் நனைப்பது போலவும் ஒரு அருமையான கனவு (ப்ரீத்தி "ஜிந்தாபாத்"). அதில் சிறந்த ஆட்டகாரருக்கான பரிசாக எனக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கும், அதிக விலையில் விற்பதால், அதில் நிரப்பி ஓட்ட நூறு லிட்டர் பெட்ரோலும் கொடுக்கிறார்கள்.

இரண்டாவது கனவில் நான் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுகிறேன். எதிர்பார்த்ததை போல சிச்சரும் போருமாக விளாசுகிறேன். அரங்கம் அதிர மக்கள் என் பெயரை வாய் பிளந்து கூவி கொண்டு இருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் ஒரு பெண் தன் அண்டர்வேருக்கு சற்று மேலாக என் பெயரை பச்சை குத்தி இருந்ததை டிவி கேமரா போகஸ் பண்ண, அரங்கத்தில் உள்ள பெரிய திரையில் மக்கள் அதை கண்டு மகிழ்ந்தார்கள். ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றதால் ஷில்பா ஷெட்டியும் என்னை முத்த மழையில் முக்கினார். ஆனால் மூன்றாவது கனவு ஆரம்பித்து சிறிது நேரத்திலே திடீரென்று கலைந்து வந்துவிட்டது. அந்த கனவில் மும்பை அணிக்காக அட்டகாசமாய் விளையாடி கொண்டிருந்தேன்.









விழிப்பு வந்து அதற்கு பிறகு தூங்க முடியவில்லை. காலை ஆறு மணி இருக்கும். பல் துலக்கி விட்டு வெளியே வந்து கடையில் தேநீர் அருந்திவிட்டு அப்படியே நடந்தேன் கொஞ்ச தூரம். மக்கள் எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். கடைக் காரர்கள் மார்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி மூட்டையை சுமந்து சென்று கொண்டிருந்தார்கள். பேப்பர் போடும் பையன் ஒருவன் மிதிவண்டியை வேகமாய் மிதித்து சென்று கொண்டிருந்தான். ஒரு ஏழை தாத்தா சாலை ஓரம் உள்ள குப்பையை கலைத்து வேண்டியதை மட்டும் பொறுக்கி கொண்டிருந்தார். குப்பைதானே அது அங்கே தானே கிடக்க போகிறது யார் எடுக்கப் போகிறார்கள்? என்று நினைத்தால், நாம் செல்வதற்குள் வேறு யாரோ பொறுக்கி சென்றிப்பார்கள். காலை நேரம் எவ்வளவு முக்கியமானது என்று இவர்களுக்கு மட்டுமே தெரியும். நடந்து சென்று கொண்டிருக்கும் போது கீழே அடிபட்டு இறந்து கிடந்த ஒரு பெருச்சாளியை பார்த்தேன். அதை பார்த்த போது நாட்டில் நிறைய ஊழல் பெருச்சாளிகள் உயிருடன் உண்டு கொழுத்து சுற்றி வருவது என் நினைவுக்கு வந்தது.

 
னிதர்களாய் பிறப்பது அரிது என்று ஔவையார் பாடியிருக்கிறார். ஆனால் மனிதனாய் வாழ்வது மிக அரிதாய் படுகிறது. ஆளும் வர்க்கமும், பணக்காரர்களும் மட்டுமே தங்களின் அரிதான மானிட பிறப்பை சிறப்பாக பயன்படுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது. நம்மூர் அரசியல்வாதிகள், எப்போதும் பரபரப்பாய் ஊழல் செய்வார்கள் அல்லது அறிக்கை விடுவார்கள். அமைச்சரோ முதல் அமைச்சரோ அவசர அவசரமாய் ஊழல் செய்ய சாலையில் செல்லும் போது நாம் கடுமையான ட்ராபிக்கில் நாம் அவதி பட்டு அவர்கள் செல்ல வழிகொடுக்க வேண்டும். டாக்டர் அன்புமணி அவர்கள் கேப்டன் தோனி இனி மதுபான விளம்பரத்தில் நடிக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகம் காசு கொடுத்தால் தோனி அவர்கள் வைக்கிங் பனியன் ஜட்டி விளம்பரத்திலும் நடிப்பார். மேலும் கலைஞர் விட்டு கொடுத்தால் கலைஞரின் காப்பி கொட்டை (காப்பீட்டு திட்டம்) விளம்பரத்தில் கூட நடிப்பார்.


ழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே நடத்தும் போராட்டத்தை வினவு போன்ற சில கம்யூனிச(?) வலைப்பூக்களும் கம்யூனிச வாதிகளும், இதை நடுத்தர வர்க்கத்தின் நோகாமல் நொங்கு தின்னும் போராட்டம் என்றும், மொன்னையான மெழுகுவர்த்தி போராட்டம் என்றும் தாழ்வாக பேசுகிறார்கள். ஐ.டி கம்பனியில் வேலை செய்யும் மகான்கள் பொழுது போக்காய் இதில் பங்கு கொண்டார்கள் என்று எள்ளல் பேசினார்கள். எதுவுமே ஆரம்பித்தவுடன் மிகச் சரியாய் வந்துவிடாது. தனக்கென்று விளைவுகள் அதிகமானால் மட்டுமே தேச பக்தியும் சரி, விளையாட்டும் சரி தீவிரம் அடையும். கடந்த வாரம் கூட IAC (India Against Corruption) -யின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் மெரீனா கடற்கரையில் நடந்தது. நிறைய சிறுவ சிறுமியர்கள் முதல் அனைத்து வயதினரும் ஆயிர கணக்கில் மக்கள் கலந்து கொண்டார்கள். ஒவ்வொரு போராட்டத்துக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகம் ஆகி கொண்டே போகிறது. சில பேர் அவர்களுக்கு வேலை ஏதும் இல்லாத போதும், தூக்கம் கெடாமல் உள்ள போதும் மட்டுமே இது போன்ற போராட்டங்களில் பங்கு பெற நினைக்கிறார்கள். அது போன்ற சில பேர் என் ரூமிலும் காணப்பட்டார்கள்.

கடற்கரை சாலையில் இன்னும் நிறைய மக்கள் நடந்து கொண்டும் ஓடி கொண்டும் வேடிக்கை பார்த்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இந்த நாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருக்கலாம். அல்லது ஊழலில் பங்கு இருக்கும் அரசியல்வாதியின் குடும்பமாய் இருக்கலாம். நிறைய அங்கிள்களும் ஆண்டிகளும் நாட்டின் பிரச்சினையை விட தங்கள் தொப்பையின் பிரச்சினையையே பெரிதாக எண்ணி அதை தீர்க்க ஓடி கொண்டிருந்தார்கள்.

அதில் சில பணக்கார அங்கிள்கள் விதவிதமான வெளிநாட்டு நாய்களோடு ஓடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு நாய் புசுபுசுவென மயிர்களோடு நாக்கை தொங்கப் போட்டு கொண்டு நிறைய சலவாய் ஊற்றி கொண்டே சென்று கொண்டிருந்தது. அதன் தலையில் மட்டும் ஒரு பக்கெட்டை மாட்டி விட்டிருந்தால், அது சிறிது தூரம் செல்வதற்க்குள்ளே பக்கெட் நிரம்பி வழிந்திருக்கும். ஏன் இவர்கள் நாய்களோடு ஓடுகிறார்கள்? என்று சிந்தித்தேன். ஒருவேளை தனியாக ஓடினால் சோம்பேறித்தனப்பட்டு நின்று விடுவார்கள். அதனால் கட்ட வண்டியை போல அவர்களை நிற்காமல் இழுத்துக் கொண்டு ஓடவே நாய்கள் அவசியம் ஆகிறது. ஆனால் அதில் ஒரு நாய்க்கு கூட தொப்பை இல்லை. 


னக்கு பொதுவாகவே அறிவுரை சொல்லும் "உன்னால் முடியும் தம்பி" (You Can Win, Who Moved My Cheese?) போன்ற மோட்டிவேசன் புத்தகங்களை படிக்கவே பிடிப்பதில்லை. அப்படியே நீங்கள் படித்தாலும் கற்பூரம் மாதிரி கொஞ்ச நேரத்துக்கு தலை முதல் பாதம் வரை உற்சாகம் கொழுந்து விட்டு எரியும். அப்புறம் கொஞ்ச நேரத்தில் அணைந்து விடும். ஆனால் ஊருக்கு உபதேசம் பண்ண எனக்கு நிறைய பிடிக்கும். ;-)


ப்பானில் நிலநடுக்கம் வந்ததிற்கு நம்மில் நிறைய பேர் அனுதாபம் சொல்லியிருப்போம். அவர்கள் அத்துணை கஷ்டத்திலும் யாரிடமும் உதவி கோரவில்லை. அதிகபடியான உழைப்பே, அவர்களுக்கு அதிகமான பணத்தையும் கொடுக்கும். இந்தியா தன்னிடம் எது அதிகம் உள்ளதோ அதை அந்த நாட்டிற்கு தரலாம். அப்படி பார்த்தால் பணம், பொருளை தவிர நம்மால் அவர்களுக்கு கொடுக்க முடிவது எதுவென்றால் மக்கள் தொகை மட்டுமே. அதுபோல நிலநடுக்கம் ஜப்பானிற்கு பதிலாக இந்தியாவில் வந்திருக்கலாம். நிலநடுக்கத்தில் இறந்தாலும் ஜப்பானியனாக இறக்க வேண்டும். ஆனால் டால்பின்கள் கொல்லப்படும் போது மனிதர்கள் இயற்கையால் சாவது தப்பில்லை. உயிர் என்பது பொதுவானது.



கர் புறத்தில் காணப்படும் அப்பார்ட்மென்ட் புறாக்கள் எங்கு போய் முட்டையிடும் என்று வெகு நாளாய் யோசித்திருக்கிறேன். போன மாதம் ஒருநாள் காலையில் எழுந்து பால்கனிக்கு சென்று பார்த்த போது அங்கு பயன்படுத்தப் படாத துடைப்பம் ஒன்றில் ஒரு புறா இரண்டு முட்டையை விட்டு  என் சந்தேகத்தை தீர்த்தது. அதுவும் சென்னை போன்ற மரங்கள் இல்லாத ஊரில் மனிதர்கள் இல்லாத வீடும், அதிகம் புழங்காத பால்கனியும் மட்டுமே அதற்கு குஞ்சு பொரிக்கும் இடங்கள்.



நானும் என் கேமராவில் அந்த புறா முட்டை விட்டதில் இருந்து, குஞ்சு பொரித்து, குஞ்சு பெரிதாகி பறந்து சென்றது வரை சுட்டு தள்ளினேன். ஆனால் அது போன பிறகும் அந்த புறா குஞ்சுகள் என் மனதை விட்டு அகலவே இல்லை. ஏனென்றால் அவைகள் பால்கனி முழுதும் அவ்வளவு அசிங்கம் செய்து விட்டு போயிருந்தது. சரி முடிந்தது இனி ஏதும் பிரச்சனை இல்லை என்று நினைத்திருந்தேன். சரியாக ஒரு வாரம் கழித்து அதே இடத்தில இன்னும் இரண்டு முட்டைகள் உதித்திருந்தது. என்ன கொடுமைடா என்று திரும்பி மறுபுறம் பார்த்தேன். அங்கு ஒரு முட்டை சற்று பெரிய அளவில் புறா முட்டை போல் அல்லாமல் தனியாக அனாதையாக கிடந்தது. அது காக்கா முட்டையோ இல்லை குயில் முட்டையாகவோ இருக்கலாம் என்பது என் சந்தேகம்.  உடனே நான் தனியே கிடந்த பெரிய முட்டையை எடுத்து அந்த இரண்டு சின்ன முட்டையோடு சேர்த்து வைத்தேன்.

இதற்கு முன்னால் முட்டையிட்டு குஞ்சு பொரித்த பெண் புறா, மற்ற கர்ப்பிணி புறாக்களிடம் சொல்லி இருக்கலாம், அந்த வீட்டுகாரர் ரொம்பபபப நல்லவர் என்று. அதற்கு பிறகு அந்த புறா மூன்று முட்டையையும் சேர்த்து அடைகாத்து வந்தது. இப்போது அந்த இரண்டு சின்ன முட்டைகள் உடைந்து குஞ்சு வெளிவந்து விட்டது, அந்த பெரிய முட்டையை தவிர. என் நண்பன் வினோத்துக்கு முட்டை வறுவல் என்றால் மிகவும் இஷ்டம். குளித்து முடித்தவுடன் பால்கனிக்கு சென்று உள்ளாடையை காயப் போடும்போதெல்லாம் அந்த பெரிய முட்டையை ஒற்றை கண்ணாலே பார்ப்பான். நானும் அந்த பெரிய முட்டை எப்போது உடைந்து எந்த குஞ்சு வெளிவரும் என்று மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த பெண் புறாவின் துணையும் கூட அவ்வாறு எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆண்டவா! தேவையில்லாமல் சந்தேகத்தால் ஒரு குடும்பம் பிரிய நான் காரணமாகி விடக் கூடாது.





பாமாவுக்கும் ஒசாமாவுக்கும் நல்ல பெயர் பொருத்தம் இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால் ஒபமா ஆட்சியில் ஒசாமா சாவாரா? ஆனால் ஒசாமாவுக்கு கடந்த சனி பெயர்ச்சி பலன்கள் சரியாக இல்லை என்று கணித்து சொல்லியிருக்க, தமிழ் நாளிதளின் ஆஸ்தான ஜோதிடர் யாரையாவது ஒசாமா அருகில் வைத்திருந்திருக்கலாம். இந்திய பிரதமர் மண் மோகன் சிங்  ஒசாமாவை கொன்ற அமெரிக்காவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இவருக்கு தெரிந்தது பாராட்டு, கண்டனம் மற்றும் கவலை தெரிவிப்பது மட்டுமே. மும்பை தாக்குதலில் சிறையில் உள்ள கசாப்புக்கு இந்திய அரசாங்கம் சிக்கன் பிரியாணி கொடுத்து செல்லம் கொஞ்சி கொண்டிருக்கிறது. சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் குறைவாய் இருக்கிறதென்று கசாப் புகார் சொல்லி இருப்பதாய் நம்பத் தாகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Apr 27, 2011

கோ - நமீதா திரை விமர்சனம்.

சில படங்களை திரை அரங்குகளில் பார்க்க முடியாமல் போனதற்கு மிகவும் வருத்தப்படுவோம். அதே போல் சில படங்களை பார்த்துவிட்டு எதோ ஒரு காரணங்களால் விமர்சனம் எழுத முடியாமல் போனாலும் வேதனையான விஷயம். ஆனால் படத்தை பார்க்கவும் முடியாமல் விமர்சனமும் எழுத முடியாமல் போய் எனக்கு மன கஷ்டத்தை  தந்த சமீபத்திய இரு படங்கள். நமது பாசத்திற்கு உரிய தமிழ் தாத்தா உரைநடை எழுதிய மன்னிக்கவும் கதை வசனம் எழுதிய இளைஞன், பொன்னர் சங்கர்.

சரி இனி கோ.



இந்த படத்தின் கதை?...என்ன என்று கேட்பவர்களுக்கு, ஆஸ்காருக்கு நாமினேட் ஆகி இருக்கும் இந்த படத்தின் கதையை இன்னும் தெரியாமல் உலவி கொண்டு இருக்கிறீர்களா?

ஒரு மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகளாலும் அரசியல் கட்சிகளாலும் பொது மக்களும் ஊடகங்களும் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை மற்ற விசயங்களோடும் சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தில் வரும் அரசியல்வாதியும்,  அரசியல் கட்சியும் தமிழகத்தின் எந்த ஒரு அரசியல்வாதியையோ அரசியல் கட்சியையோ குறிப்பிடுபவன அல்ல என்று மட்டுமே இங்கு நாம் எடுத்து கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் இது போல நடந்து கொண்டு இருக்கலாம்.

பொதுவாக கே.வி. ஆனந்தின் பட ஹீரோக்கள் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் வரும் சூர்யாவை போல ஓவர் ஆக்டிங் செய்து வந்த வழியே திரும்பி ஓட வைப்பார்கள். அயனில் முதலில் வரும் ஏர்போர்ட் காட்சிகளில் சூர்யா காட்டும் ஆக்டிங் பார்த்த பிறகு அந்த படத்தின் கதை எனக்கு என்ன என்று தெரியாமல் போனது. இதிலும் ஜீவா அதை செவ்வனே ஒரு கேமராவோடு செய்கிறார்.

கனாகண்டேன் படம் மட்டும் விதிவிலக்கு. கனாகண்டேன் படம் போல இது ஒரு எதார்த்தமான படமாக இருக்கும் என்று நம்பி போனேன். ஆனால் முதல் சீனில் பேங்கில் கொள்ளைஅடித்து விட்டு செல்லும் நக்சல்களை ஜீவா பைக்கில் வீலிங் செய்து கொண்டே சுற்றி சுற்றி படம் எடுக்கும் காட்சியின் மூலமாக இது எதார்த்த படம் இல்லை, இது ஒரு மசாலா படம் தான் என்று சொல்லி நம் முகத்தில் சாணியை கரைத்து அடிக்கிறார் இயக்குனர்.

ஜீவா தின அஞ்சல் என்ற பத்திரிக்கையின் போட்டோகிராபர். கழுத்தில் கட்டிய சாமி தாயத்து போல எப்போதும் கேமராவை கழுத்தில் இருந்து கழட்டாமலே சுற்றுகிறார். பியாவும், கலை உலகத்திற்கு அர்பணிக்கப்பட்ட ராதாவின் வாரிசு கார்த்திகாவும் அதில் பணியாற்றும் அழகான நிருபர்கள். ஒரு தமிழ் தினசரி பத்திரிக்கை ஆபிசில் இப்படி எல்லாம் அழகாய் மாடர்னாய் நிருபர்கள் இருப்பாங்களா? என்று தினசரி பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை செய்யும் கனவான்கள் பொறாமையில் பாப்கார்னை கொறித்துக் கொண்டே படம் பார்க்கிறார்கள். பத்திரிக்கை ஆபிஸ் செட்டிங் அப்படியே நிறைய ஹாலிவுட் தரம்.

ஜீவாவின் அம்மாவும் அப்பாவாக வரும் பட்டிமன்ற பேச்சாளரான ராஜாவும் அப்படியே சங்கரின் சிவாஜி டைப் பெற்றோர்கள். ராஜா அவர்கள் பட்டிமன்றத்தில் அருமையாக பேசுவார் என எங்க தாத்தா சொல்லுவாரு.

ஜீவா எந்த பெண்ணையும் தொட்டதில்லை என்றாலும் கூட பியா இவரை தொடும் பொது எறும்பை தட்டிவிடுவது போல தட்டிவிட்டு போய்கொண்டே இருக்கிறார் ராமபிரானாக. தமிழ் கலாசாரத்தில் வாழும் இப்படி ஒரு "இளைஞனை பார்ப்பது மிகவும் கஷ்டம்".



கார்த்திகா, நூலை போல சேலை. கண்ணும் இன்ன பிறவும் அழகு. ரஜினி தாத்தாவுக்கும் கமல் தாத்தாவுக்கும் புது இளமொட்டு ரெடி. ஆனால் ரஜினியும் கமலும் பீல்டில் இருக்கிறவரைக்காவது இவர் நிலைத்திருக்க வேண்டும் என்பது எனது அவா. கார்த்திகாவின் மகள் வரும் வரை அவர்கள் பீல்டில் இருப்பார்கள் என்பது வேறு விஷயம்.

பாடல் காட்சிகளில் வரும் மலை பகுதிகளிலும், கார்த்திகாவின் இடுப்பு பிரதேசங்களிலும் மனதை லயிக்க வைக்கிறது கே.வி.யின் கேமரா.

பியா தனக்கு எவ்வளவு ரேட் வரும் என்று ஜீவாவை கேட்கும் காட்சியிலும், ஒரு சின்ன பையனிடம் சட்டையை திறந்து காட்டும் காட்சியிலும் இயக்குனரின் முற்போக்கு சிந்தனையை பாராட்டியே ஆக வேண்டும். எனக்கும் பியாவின் ரேட் இதுவரை தெரியவில்லை. ஆனால் ஜீவாவிடம் பியாவுக்கு "ஐ லவ் யு" சொல்ல மட்டும் முடியாமல் போவதற்கு பியாவின் வெட்கம் மட்டுமே காரணம் என்று இயக்குனர் அடித்து சொல்கிறார்.

பியாவுக்கு வரும் முதல் பாட்டு வரும் இடத்திலும், இரண்டாவது பாதியில் வரும் "வெண்பனியே" பாட்டு வரும் இடத்திலும் புகழ் பெற்ற எடிட்டர் கத்தரிக்கோல் கண்னழகன் ஆண்டனி தூங்கி உள்ளார் என்று தெளிவாக தெரிகிறது. வீணாய் போய்டும்ன்னு பந்தியில வச்சுட்டாங்க.

முதல் பாட்டில் பெண்களின் இடுப்பை கிராபிக்ஸால் மறைத்துவிட்டு, அடுத்த காட்சியில் சில உழைக்கும் வர்க்கத்து பெண்கள் தெருவில் ஆடும் பொது மட்டும் அவர்கள் இடுப்பை தெளிவாக காமிப்பது என்ன ஒரு பாகுபாடு? என்று என் நண்பன் குமுறி கொண்டே படம் பார்த்தான். அதுவே பின்னால் நிறைய பாடல்களில் கார்த்திகாவின் இடுப்பை பார்த்த பின்பு ஒருவாறாக அவனின் குமுறல் அடங்கியது.

இந்த படத்தை வாங்கி வெளியிட்ட ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின் ஒரு உண்மையான பிசினஸ்மேன். இவரின் தொழில் பக்தி உன்னதமானது. பொரிக்கடலை விற்பதில் லாபம் வரும் என்றால் கருணாநிதியின் குடும்பம் பொரிக்கடலை வியாபாரமும் செய்யும் என்று நடிகர் விஜயின் அப்பா கூறியாதாக எங்கேயோ படித்தது உண்மையிலே மிகையல்ல, சிறுமையாகவே தோன்றுகிறது.

ஆனால் கே.வி.ஆனந்த அவர்கள் ஒருவகையில் புத்திசாலி என்பதையும் நாம் ஒப்பு கொள்ள கடமைப் பட்டு இருக்கிறோம்.

நமிதா டச்: கோ - போடாங்கோ!

டிஸ்கி:   ஒருமுறை பார்க்க கூடிய சுமாரான இந்த படத்தின் மீதான என் கோபத்திற்கு காரணம் இயக்குனர் நமீதாவையும், அவர் செந்தமிழையும், சிறு வயதில் சிரமப்பட்டு படித்த கெமிஸ்ட்ரியையும் நக்கல் அடித்ததே.


Apr 20, 2011

நகுலன் என்றொரு அழகன்

என் அக்கா பையனுக்கு,



கன்னி ராசிதான்
இந்த கண்ணனுக்கு
கணக்கில்லை
பின்தொடரும் இளங் கன்னிகளுக்கு.


வேட்டையாடுவதில் மாவீரன்
இவனை கண்டாலே
நடுநடுங்கும்
சிங்கம் புலி கரடி (பொம்மை)கள்.


இவன் கை பட்டு
கவிழவே காத்திருக்கின்றன
சரியாக மூடப்படாத
பலசரக்கு டப்பாக்கள்.

நிற்கவே நேரம் இருக்காது
எந்நேரமும் இவன் பின்னாலேயே
ஓட வைத்துக் கொண்டிருப்பான்
பாட்டியையும் தாத்தாவையும்.

பார்க்கும் அநேக நேரம் 
பூனையை இவன் துரத்திக் கொண்டிருப்பான்.
சில நேரம் பூனை 
இவனை துரத்திக் கொண்டிருக்கும்.





Related post :  The Good Stranger: கார்த்திகா தீபா வாழ்த்துக்கள்

 


Mar 18, 2011

கலைஞரின் கதாநாயகி, ஜெயாவின் கவர்ச்சி நாயகி - ஆபாயில்

என்னுடன் படித்த நண்பர்களில் நிறைய பேருக்கு திருமணம் ஆகி தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இன்னும் சிலருக்கு தப்பிக்க சிறிது கால அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது. நான் இன்னும் எதை பற்றியும் கவலை படாமல் ஒரு நாயை போல தெருக்களில் உலா வந்து கொண்டிருக்கிறேன். கடந்த மாதம் மட்டும் மூவருக்கும் மேலாக தண்டனை உறுதி செய்யப் பட்டு வீட்டு காவலில் வைக்கப் பட்டுள்ளார்கள். நாமும் அப்போது அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு எஞ்சிய நாட்கள் முழுதும் அவர்கள் முடிந்த வரை சந்தோசமாக வாழுமாறு வாழ்த்த வேண்டிய நிர்பந்தம் உள்ளது. தன் கஷ்டங்களில் பங்கு கொள்கிறவன் தான் உண்மையான நண்பன். அவ்வாறு தன்னுடைய திருமணதிற்கு யார் வருகிறார்களோ என்பதை வைத்து தான் உண்மையான நண்பன் யார் என்பதையும் முடிவு செய்யப் படுகிறது. அதனால் நானும் முடிந்தவரை எல்லோருக்கும் உண்மையாகவே இருக்க விரும்புகிறேன்... ;-)

இன்றும் ஒருவனது திருமண வரவேற்பு நிகழ்சிக்காக புறப்படுகிறேன். அவன் பெயர் "பொய் புலவர் பிரகாஷ்". இவனுக்கு அரிச்சந்திரன் யார்? அவர் எப்படி பட்டவர்? என்ற வரலாறு துளியும் தெரியாது. அந்த அளவுக்கு இவனுக்கு உண்மைக்கும் நெருங்க முடியாத தூரம். ஒரு சின்ன உதாரணம். இவனுக்காக காத்திருக்கும் போது, மொபைல் போனில் அழைத்து "மச்சி எங்கேடா வந்துட்டு இருக்க?" என்று கேட்டால், அவங்க வீட்டு பாத்ரூமில் "இருந்து" கொண்டு பத்து நிமிஷத்தில் வந்து விடுவதாக கூச்சப் படாமல் அள்ளி விடுவான்.

ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் "அது, இது, எது?" என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள். அதில் கடைசி சுற்றில், நிகழ்ச்சியில் பங்கேற்பவர் கதை ஒன்று சொல்ல வேண்டும். அதில் மூன்று பொய்களை, கதை சொல்லுபவர் திணித்து சொல்லியாக வேண்டும். இன்னொருவர் அவர் சொன்னதில் மூன்று பொய்யையும் கண்டுபிடித்து கூற வேண்டும். அதை போல இவனை ஒரு கதை சொல்ல சொல்லி, அதில் ஒரு உண்மையை கண்டு பிடிக்க சொன்னால், பெரும் சவாலான விஷயம்.

இவனை பற்றி முன்னரே ஒரு இடுகையில் எழுதி உள்ளேன்.

ஆனால் ஒரு நல்ல விஷயம் இவனிடம் உள்ளது. எந்த ஒரு அரசியல்வாதியிடம் கூட காணப்படாத மதசார்பற்ற தன்மை இவனிடம் மட்டுமே உள்ளது. எவ்வாறு எனில், பொழுது போக்காய் பல பெண்களிடம் பேசுவான். அப்படி புதிதாக ஒரு பெண்ணிடம் பேசும் போது ஏதோ இந்திய ரகசிய உளவு துறையில் வேலை செய்வது போல உண்மையான பெயரை மட்டும் சொல்லவே மாட்டான். அவ்வபோது அவன் கண்களுக்கு தட்டுப் படுகிற பெயரை தன் பெயராக சொல்லி விடுவான்.

சில சமயம் மகேஷ்.
சில சமயம் ஜேம்ஸ்.

ஒரு நாள் நானும் அவனும் பாய் கடையில் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது அவனுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வர, தன் பெயரை காதர் பாய் என்று கடையின் பெயர் பலகையை படித்து அறிமுக படுத்தி கொண்டான். இவனுக்கு மத பாகுபாடு என்பது துளியும் இல்லை என்பதை அந்த மதிய நாளில் லெக் பீசை கடித்துக் கொண்டே உணர்ந்தேன். இவன் கல்யாண அழைப்பிதழ் கொடுக்கும் வரை, நாங்களும் இவன் பெயர் பிரகாஷ் என்ற அனுமானத்தில் மட்டுமே இருந்தோம்.

லெக் பீசை பற்றி பேசும் போது தான் இன்னொன்றும் ஞாபகம் வருகிறது. நம்மில் நிறைய பேர் பெண்களை பற்றி பேசும் போது பிகர் என்று தான் குறிப்பிடுவோம். ஆனால் இவன் "பீஸ்" என்றே குறிப்பிடுவான். அப்போ பிரியாணில இருக்கிறது என்ன பிகரா?

ஒரு நாள் அவனுடன் வழியில் சென்று கொண்டிருக்கும் போது "இந்த பீசு எப்படி இருக்கு?" என்று கை காட்டினான். திரும்பி பார்த்தால் அங்கே ஒரு பெண் சிமெண்ட் காரை சட்டியை தூக்கி கொண்டு சென்று கொண்டிருந்தாள். ஏழை பணக்காரர்கள் பாகு பாடும் இவனுக்கு பார்க்க தெரியவில்லை.

இவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது "குடி பிரகாஷ்". பெயர் காரணம் தேவையில்லை என்று நினைக்கிறேன். நிறைய நண்பர்கள் கூப்பிடும் பெயரும் இதுவே. தினமும் குடிப்பதாய் அவனே சொல்லுவான். ஆனால் அவனுக்கு ஒரு டூவீலர் மட்டும் வாங்க காசே இருந்ததில்லை. ஒரு பன்னிகுட்டி உருவ உண்டியல் வாங்கி தினமும் குடிக்கும் காசை அதில் போட்டு வைத்திருந்தால் எளிதாய் ஒரு டூவீலர் வாங்கியிருக்கலாம்.

இவன் எங்கு பயணம் செய்தாலும் கூடவே ஒரு லேப்டாப் Bag-ம்  வைத்திருப்பான். உள்ளே லேப் டாப் இருக்காது. நிறைய கோக், பெப்சி பாட்டில்களும், தண்ணீர் பாட்டில்களும் இருக்கும். ஆச்சாரம் உள்ளவர்கள் ஒரு அவசரத்துக்கு கூட இவனிடம் தண்ணி வாங்கி குடிக்க முடியாது. ஏனென்றால் எல்லாம் மிக்சிங்கோடு(Mixing) இருக்கும். எவ்வளவு தான் குடித்தாலும் மிகவும் நிதானமாக இருப்பான். சிறிதும் உளறவே மாட்டான். ஆனாலும் குடிக்காத நாட்களில் மட்டும் உளறுவான்.



ந்த உலக கோப்பையை ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் தான் வெல்லும் என்பது என் அனுமானமாக இருந்தது. இப்போது ஆஸ்திரேலியா வெளியேறி விட்டது. பாகிஸ்தானிடம் தான் அரை இறுதியில் இந்தியா தோற்க வேண்டும் என்று எழுதி இருக்கலாம். ஆனால் இந்தியா அவ்வளவு எளிதாக விட்டு விடாது. இந்தியாவின் மேல் நடந்த பாராளுமன்ற தாக்குதல், மும்பை மற்றும் டெல்லி தாக்குதல் இவற்றிற்கு பதிலடியாய் அரை இறுதி போட்டியில் வென்று பலி தீர்க்கும் என்றே இந்திய குடிமக்கள் எல்லோரும் ஆவலாய் உள்ளார்கள். அப்போது தான் மும்பை குண்டு வெடிப்பில் பலியான மக்களின் ஆவிகள் எல்லாம் சாந்தி அடையும். அப்படி இந்தியா பாகிஸ்தானை வென்று உலக கோப்பையையும் வெல்லும் பட்சத்தில், நாடாளு மன்றத்தில் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கசாபையும் விடுதலை செய்வார்கள். இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றத்தை எண்ணி வருத்தப்படுவதை விட கசாப்புக்கு வேறு என்ன தண்டனை மற்றும் அவமானம் இருக்க முடியும்?



து தேர்தல் காலம் என்பதால், தி.மு.க. கலை உலக வாரிசுகள் தங்கள் பட வெளியீட்டை கொஞ்ச காலம் நிறுத்தி வைத்திருந்தாலும், கலைஞர் ஒரு கதாநாயகியையும், ஒரு கதா நாயகனையும் அறிமுகப் படுத்தியிருக்கிறார். கதாநாயகி தேர்தல் அறிக்கை என்று உங்களுக்கு தெரியும். காதாநாயகன் கீழே இருக்கிறார். நடிகர் விஜயகுமார் குடும்பத்தை பின்னுக்கு தள்ளி இப்போது கலைஞரின் குடும்பம் தான் மிகப்பெரும் கலை குடும்பமாக உருவெடுத்துள்ளது. உங்க கலை ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லடா.



இப்போது ஜெயலலிதா கவர்ச்சி நாயகியை வெளியிட்டு விட்டதால் கதாநாயகியை பற்றி ஏதும் சொல்லத் தேவையில்லை. 

பெண்ணை பெற்ற ஏழைகள் எல்லாம் இனி கவலை பட தேவையில்லை. கிரைண்டர், மிச்சி, பேன், நாலு கிராம் தங்கம், ஆடு, மாடு இவைகளோடு ஒரு கட்டில் மெத்தையும் கொடுத்திருந்தால் பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய சீர் ரெடி. கலைஞர் தாத்தாவின் கதாநாயகி, 1970 களில் வந்த கருப்பு வெள்ளை நாயகியை போல, வயது முதிர்ந்தவர்களையும், குடும்ப தலைவிகளையும் மட்டுமே பெரிதளவு கவர்ந்திருந்தது.

ஆனால் கவர்ச்சி நாயகி ஷகிலாவை போல, பள்ளி மாணவர்களில் இருந்து கிழவர்கள் வரை கவர்ந்து இழுத்து இருக்கிறது. இப்போது குடும்ப பெண்கள் கூட கவர்ச்சி நாயகியையே விரும்புகிறார்கள். பத்தாவது படிச்சிட்டு கட்டட வேலைக்கு போற என் பள்ளி பருவத்து நண்பன் கூட, இப்போ பதினொன்னாவது படிக்கலாமன்னு யோசிக்கிறான். தமிழகத்தில் செல்போன்கள் சாதரணமாகிவிட்ட காலகட்டத்தில் லேப்டாப்களும் சாதரணமாக போகின்றன.

போடுங்கம்மா ஒட்டு இரட்டை இலைய பாத்து...





வோடபோனின் சமீபத்திய இந்த விளம்பரம் என்னைய மிகவும் ரசிக்க வைத்தது.




இதோட விளம்பரத்துக்காகவே நான் வோடபோனுக்கு மாறலாமான்னு யோசிக்கிறேன். நானும் இந்த விளம்பரத்தில் வர்ற "சூப்பர்மேன் ஜூ ஜூ" மாதிரி மாறிட்டேன். டேபிள் டென்னிஸ் மட்டைக்கு பதிலாக கொசு அடிக்கும் மட்டை. தினமும் இரவு தூங்க முடியல. பயங்கர கொசு. அதனால இந்த மட்டைய எடுத்து கண்ணை மூடிக்கிட்டு, திரும்பி நின்னு, சிலசமயம் இருட்டுல கூட, எப்படி அடிச்சாலும் கொசு அடிபட்டு சாகுது.




Feb 18, 2011

வடை, பக்கோடா, போண்டா - மினி ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

வடை, பக்கோடா, போண்டா இந்த மூன்றிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு? படியுங்கள், விடை கடைசியில்.


ன்கூட தங்கி இருக்கும் வினோத் என்ற பிரெண்டுக்கும் எங்கள் அபார்ட்மெண்டு ஆண்டிகளுக்கும் "ரொம்ப நாளாக பழக்கம்" இருக்கு. எப்படி என்றால், இவன் தினமும் மெகா சீரியல் பார்க்கும் வழக்கம் கொண்டவன். கலைஞர் டிவி, ஜெயா டிவி என்ற பாகுபாடு எல்லாம் இவனுக்கு பார்க்க தெரியாது. மிகவும் அப்பாவியாய் எல்லா டிவி சீரியலையும் உட்கார்ந்து அமைதியாய் பார்த்து ரசிப்பான். அந்த ஆண்டிகள் ஏதோ ஒரு எபிசொட் பார்க்க தவறினால் இவனிடம் தான் வந்து அன்றைக்கு என்ன நடந்தது என்று கதை கேட்டு போவார்கள். அதனால் எங்கள் வீட்டிற்கு ஆண்டிகளின் படையெடுப்பு அடிக்கடி நடக்கும். "ரொம்ப நாளாக பழக்கம்" என்றதும் நீங்கள் அவனை பற்றி தப்பாக  நினைத்திருந்தால் உங்கள் தலையில் நீங்களே குட்டி கொள்ளவும்.

"ஏன்டா இவ்வளவு விரும்பி பார்க்கறியே பேசாமல் சீரியலில் நடிக்க போய்விட வேண்டியதுதான?" என்றேன் தற்செயலாய் அவனிடம். "இம், நான் ரெடி" என்றான். சீரியல் இயக்குனர்கள் அல்லது தயாரிப்பாளர்கள் யாராவது இதை படித்துக்கொண்டிருந்தால் தயவுசெய்து இவனுக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள். "கொழுக் மொழுக்" என்ற அங்கிள் கேரக்டருக்கு அம்சமாக பொருந்தி வருவான்.


  
நீங்கள் பேச்சுலராக இருந்து கூட படித்த அல்லது வேலை செய்கிற பசங்களோடு தங்கி இருந்தால் "ட்ரீட் (Treat) என்கிற வார்த்தையை அதிகமாக மந்திரம் போல உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். கடந்த வாரம் என் அக்கா பையனுக்கு என் மடியில் வைத்து மொட்டை போட்டு காது குத்தினார்கள்.

அதற்கு ட்ரீட் வைக்க சொல்லி நண்பர்கள் எனக்கு மொட்டை போட பார்த்தார்கள். "இப்போது பணம் இல்லை" என்று அடுத்த மாதம் கொடுப்பதாய் சொல்லி அவர்களுக்கு காது குத்தியுள்ளேன்.



விலைவாசி உயர்வு, ஊழல் நாடகம் இவற்றையெல்லாம் தாண்டி கவலைப்பட இப்போது இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. கிரிக்கெட் உலக கோப்பை, தேர்தல், இலவசம். 

பரம ஏழை சச்சினுக்காக இந்திய அணி உலக கோப்பையை வெல்லுமா? 
அவரின் பட வெளியீட்டு பிரச்சனையையே தீர்க்க முடியாமல் கஷ்டபட்ட காவலன் விஜய்,  போராட்டம் நடத்தி மீனவர்களின் பிரச்சனையை தீர்ப்பாரா?
வல்லரசு விஜயகாந்த் தேர்தலில் வென்று நல்லரசு அமைப்பாரா?

அன்று ஒரு நாள் பஸ்சில் சென்று கொண்டிருந்தேன். அப்போது வெளியே ஒரு சேரி போன்ற குடிசை பகுதியில், விஜயகாந்தின் தே.தி.மு.க. கட்சியின் பெரிய சைஸ் போஸ்டர் ஒன்று ஒரு குடிசை வீட்டின் மேற்கூரையாக வைக்கப் பட்டு அவர்களை கடும் குளிரிலிருந்தும் வெயில், மழையில் இருந்தும் காப்பாற்றி கொண்டிருந்தது.

விஜயகாந்தின் விருத்தகிரி படத்தில் அடிக்கடி ஒரு வசனம் வெவ்வேறு கதா பாத்திரங்களால் பேசப் படும். 

"அரசு அதிகாரியா இருக்கும் போதே பொது மக்களுக்கு இவ்வளவு நல்லது பண்றாரே, இவருக்கு கீழே அரசாங்கம் வந்துச்சுன்னா எவ்வளவு நல்லது பண்ணுவாரு." 

அது மாதிரி, விஜயகாந்தின் கட்சி போஸ்டரே ஏழைகளை காக்கும் பொது விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தார்ன்னா, என்னமா காப்பாத்துவாரு! 


சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பது எனக்கு இதுவரை ஓரளவுக்கு நல்ல அனுபவமாகவே அமைந்துள்ளது. ஆனால் கடந்த வாரம், சில வருடங்களாய் கவிதை என்ற பெயரில் ஏதோ கிறுக்கி வரும் என்னை மிகவும் வெட்கமடைய செய்தது, ரயிலில் கிறுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த கவிதை.


தட்டி போட்டா வடை.
அப்படியே போட்டா பக்கோடா.
உருட்டி போட்டா போண்டா.

எனக்கு ஏன் இப்படி ஒரு கவிதை எழுத தோணவில்லை.

போண்டா போச்சே!.

இந்த கவிதை படித்ததும் வடை, பக்கோடா, போண்டா இந்த மூன்றும் என் கண்முன்னே சிறிது நேரம் வந்து என் பசியை தூண்டியது. மூன்று வரிகளில் ஒரு முத்தான கவிதையை எழுதிய அந்த கவிஞர் ஏனோ கவிதைக்கு கீழே அவர் பெயரை எழுதியிருக்கவில்லை. அவருக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை "பாராட்டு" என்பதாக கூட இருக்கலாம்.

பொதுவாக கழிப்பிட சுவர்களில் உள்ளதை போன்றே ரயிலின் உட்புறத்திலும் Nithyaanantha Loves Ranjitha, Prabudeva Loves Nayan என்பது மாதிரியான கல்வெட்டு வாசகங்கள் தான் நிறைய காணப்படும். ஆனால் இதுபோன்று ஒரு தத்துவ கவிதை எழுதி இவர் அந்த இலக்கணத்தை உடைத்துவிட்டார். Hats Off  to him.

நெடுந்தூர ரயில் நிலையங்களை போல, மெட்ரோ ரயில் நிலையங்கள் அவ்வளவாக துர்நாற்றம் வீசுவதில்லை. கழிப்பிட வசதி இல்லை என்பதால். ஆனால் இன்னுமொரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ரயிலில் ஏறி அமர்ந்தவுடன் பார்த்தேன் ஒரு பெண்  ஐபாட்(ipad) -ல் பாட்டு கேட்டு கொண்டு தலையையும் லேசாக காலையும் ஆட்டிக்கொண்டிருந்தாள். சில பேர் எதையும் கேட்காமல் காலை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் நானும் காலை ஆட்ட தொடங்கி விட்டேன். காரணம். கொசுக்கடி.

ஓடும் ரயிலில் பறந்து பறந்து கடிக்கின்றது. பிகர்களுக்கு எதிரே கடிக்கின்ற கொசுவை அடிக்கவும் அசிங்கமாக உள்ளது. பத்தாம், பனிரெண்டாம் போது தேர்வு வரும் போது தமிழ் தினசரி செய்தித்தாள்களில் போடுவார்கள். "தேர்வுகளில் காப்பி அடிப்பவர்களை பிடிக்க தனி பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளது" என்று. இனிமேல் தயவு செய்து பறக்கும் படை என்ற வார்த்தையை அதற்கு உபயோகப் படுத்தாதிர்கள்.