Sep 20, 2011

ரயில் பயணங்களில் - ஆபாயில் (அப்படியே சாப்பிடுங்க)

நான் சென்னை வந்த சில காலங்களுக்கு சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வர, தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தையே பயன்படுத்தினேன்.

பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே அமையும் என் பேருந்து பயணங்கள் மிகவும் கொடுமையானது. ரூ 100 -க்குள்ளே தான் சாதாரண பஸ் டிக்கெட் விலை இருக்கும்.

பஸ்ஸில் போடப் படும் மொக்கை படங்களின் இம்சையை மீறி தூக்கம் வரும் போது, முன் சீட்டில் உள்ள கம்பி மீதோ அல்லது ஜன்னல் கம்பி மீதோ தலை வைத்து படுப்பேன். பஸ் குலுங்க குலுங்க கம்பியில் பட்டு அடுத்த நாள் காலையில் தொட்டு பார்க்கும் போது, என் தலை பஸ்சின் ஹாரனை போல வீங்கி காணப்படும். அந்த வீக்கம் குறைய மறுநாள் ஆகும்.




ரு முறை நண்பர்களோடு ரயிலில் ரிசர்வ் செய்து போன பிறகு, ரயில் பயணங்கள் அலாதியான சந்தோசத்தை எனக்கு தந்தன. பேருந்தை போல அதிகம் குலுங்காமல், தலை முதல் கால் வரை போர்த்தி கொண்டு படுத்து செல்வது சுகம்.

இது தவிர, அழகழகான பெண்கள் நமக்கு எதிரிலேயே படுத்து கொண்டு வருவதை பார்க்கின்ற சந்தர்ப்பம் ரயிலில் மட்டுமே கிடைக்க கூடியது. பெண்களின் உடையை போலவே, அவர்கள் போர்த்தும் போர்வையும் அழகான டிசைனில் கலர்புல்லாக இருக்கும். ஆனால் நம் (ஆண்களின்) போர்வை, நம் சட்டையின் டிசைனை போல வெகு சாதாரணமாக இருக்கும்.

முன்பு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நான், மாதத்திற்கு இரு முறை வீட்டிற்கு ரயிலில் புக் செய்து செல்வது, என் அம்மா அப்பாவிற்கு மட்டுமல்ல, பக்கத்துக்கு வீட்டு எல்.கே.ஜி. பையனுக்கும் புதிதாகவே தென்பட்டது.

வீட்டிற்கு செல்லும் அந்த வெள்ளிக்கிழமை இரவு, எனக்கு விடிந்த காலைப் பொழுதாகவே தோன்றும். ரயில் வந்து நின்று, வெளியே பெயர் வரிசை ஒட்டியவுடனே ஓடி சென்று நம் பெர்த்துக்கு அருகில் எத்தனை பெண்கள் பெயர் வருகிறது என்று பார்த்து விடுவேன்.

எந்த பெண்ணும் வராத நாட்களில், இந்த ஆண்கள் முகத்தை பார்ப்பதை வெறுத்து, குப்புறப் படுத்து தூங்கி விடுவேன். என் ராசிக்கு என் பெர்த் பக்கத்தில் ஒரு பெண்ணுக்கு மேல் வருவதே அரிது.

அரிது அரிது பெண் வருவதே அரிது 
சுமாரான பிகராய் இருத்தல் அதனினும் அரிது. 

அப்படியிருக்க ஒரு வெள்ளிகிழமை, பெயர் வரிசையை பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி. வரிசையாய் நாலு பெண்களின் பெயர்.

கிருத்திகா 
அர்ச்சனா 
கயல்விழி 
பிரியதர்ஷினி 

ஆஹா! என் கண்களுக்கு அந்த எழுத்துக்கள் தங்க நிறத்தில் தக தகவென மின்னியது போல இருந்தது. சந்தோஷத்தில் இதயத்தில் லேசாய் ஒரு வலி. நான் சென்று என் சீட்டில் உட்கார்ந்து காத்திருந்தேன் அவர்களின் வருகைக்காக.

"எப்படியோ இன்று ஒரு பெண்ணிடமாவது பேசிடலாம்" என்று மனசுக்குள் றெக்கை பட படத்தது. ரயில் கிளம்ப ஐந்து நிமிடம் தான் இருந்தது. ஒரு வித பரபரப்பு என்னுடன் ஒட்டி கொண்டது. கடைசியாய், ரயில் புறப்படும் சில நிமிடங்கள் முன்பு அவசர அவசரமாய் வந்து சேர்ந்தார்கள் அவர்கள்.

அவர்களை கண்டவுடன் என் கனவெல்லாம் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் போல தண்டவாளத்தை விட்டு எகிறி விழுந்தது.

வந்த அத்தனையும் ஐயர் வீட்டு கிழவிகள்.

அப்போது எனக்குள் அதிதீவிரமாய் சொல்லிக் கொண்டேன்.

"இனி பெயர் பார்க்கும் போது, வயதையும் சேர்த்து பார்க்க வேண்டும்".





டவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று நம்மில் நிறைய பேருக்கு ஒரு குழப்பம் இருக்கலாம். எனக்கு அதை அறிய விருப்பம் இல்லை. ஆனால் நானாய் விரும்பி கோவில் பக்கம் செல்வதில்லை.

போன வாரம், எனக்கு ஜாதகத்தில் சனிபெயர்ச்சி நடக்கிறதென்று என் அப்பா, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு கூட்டி சென்றார். ஆஞ்சநேயருக்கு வடமாலை (வடைமாலை) சாத்தி வழிபட்டால் நல்ல பரிகாரமாய் அமையும் என்பது மக்களின் நம்பிக்கை.

ஆஞ்சநேயர் சிலைக்கு வடையை கோர்த்து, நிறைய மாலைகளாய் செய்து போட்டிருந்தார்கள். புரட்டாசி மாதம் முதல் நாள் என்பதால் நல்ல கூட்டம் அலைமோதியது. நாங்களும் குடும்பத்தோடு கூட்டத்தை முட்டி உள்ளே சென்று, ஆஞ்சநேயரை வழிபட்டு விட்டு வெளியே வந்தோம்.

வெளியே எங்களைப் பார்த்து,

"சாமி", "நாராயணா" என்று கையேந்திய பிச்சைகாரர்களின் குரல்கள்.

அவர்கள் சிம்பாளிக்காக சொல்ல வருவது என்னவென்றால்,

"நீங்கள் தான் கடவுள். உங்கள் மனம் தான் கோவில்" 

இது நம்மில் நிறைய பேருக்கு புரிவதில்லை.

அலங்காரம், பூஜை எல்லாம் முடிந்தவுடன் அந்த வடைமாலையை பிரித்து, நமக்கே அந்த வடைகளை எல்லாம் கொடுத்து விடுகிறார்கள்.

கடவுள் உண்மையாக அந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பார்?

"வடை போச்சே!"

அந்த வடையை தொட்டால் பாறாங்கல்லை தொட்ட உணர்வு. பெவிகால் கலந்து சுட்டிருப்பார்கள் போல. ஒருவேளை நன்றாக மணமாய் சாப்பிடுகிற மாதிரி சுட்டு, மாலையாய் சாமிக்கு போட்டிருந்தால், பக்தர்களுக்கு எல்லாம் பக்தியுணர்வை விட பசியுணர்வே அதிகம் உண்டாகியிருக்கும்.

என் அப்பா என்னிடம் நூறு ரூபாய் கொடுத்து உண்டியலில் போட சொன்னார் . தேங்கா, பழம், வடையை போல, இதுவும் சாமிக்கு போகாது என்று தெரியும். அதனால் எனக்கு அந்த நூறு ரூபாயை உண்டியலுக்குள் போடுவதற்கு சுத்தமாய் மனம் வரவில்லை. என் அப்பா கூடவே இருந்ததால், போடாமல் இருக்கவும் முடியவில்லை. ரோட்டில் போட்டு விட்டு போவதை போன்ற ஒரு உணர்வுடனேயே உண்டியலில் போட்டேன்.

கோவிலின் உள்ளே கூட்டத்தில் சாமியை பார்ப்பதற்கு பயங்கர தள்ளு முள்ளு நடந்து கொண்டிருந்தது. அதில் ஒருவர் தன் குழந்தையை தோளில் தூக்கி வைத்து சாமியை காட்டி கொண்டிருக்க, பின்னால் இருந்து ஒருவர் 

"ஏய்! குழந்தையை கீழே இறக்கி விடுயா! நாங்கெல்லாம் எப்படி சாமிய பாக்கிறது?" 

என்று சண்டை போட்டு கொண்டிருந்தார். 

குழந்தையும் தெய்வமும் வேறு வேறோ?



Sep 15, 2011

Service Unavailable - ஆபாயில்



"Service Unavailable" இந்த மெசேஜ் நம்மில் நிறைய பேருக்கு பரிச்சயமாக இருக்கும். ரயில் டிக்கெட்டை, IRCTC வெப் சைட்டின் மூலம் புக் செய்ய பழகி இருக்கும் எந்த ஒரு தத்தா பாட்டியும், இந்த Error மெசேஜை அவர்கள் வாழ்கையில் பார்த்திராமல் சாக முடியாது.

சரி. ஏன் இந்த மெசேஜ் வருகின்றது? 

"120 கோடி மக்கள் தொகை உள்ள இந்திய திருநாட்டில் வாழும் மக்கள் எல்லாருடைய தேவையையும் பூர்த்தி செய்ய முடியாது" என்று நம்மூர் அரசியல்வாதிகள் சொல்வதை தான், IRCTC சைட்டும் நமக்கு எடுத்துரைக்கிறது.

நான் மாதம் ஒரு முறை ஊருக்கு செல்லும் போதும், பல் விலக்காமல் கண் துடைக்காமல், காலையில் 7 :55 -க்கு அவசர அவசரமாய் எழுந்து, டிக்கெட் Tatkal -லில் ரிசர்வ் செய்ய கணினி முன் உட்கார்ந்தால், என்னை போல ஊருக்கு செல்லும் கணினி துறை கண்மணிகளும், மற்ற ஏனையவர்களும் பல்துலக்கி காலை கடன் முடித்து எக்ஸாமுக்கு செல்வது போல, பயங்கர prepared -ஆக உட்கார்ந்து, IRCTC சைட்டில் Login ஆகி, Refresh பட்டனை அமுக்கி கொண்டு உள்ளார்கள்.

சரியாக எட்டு மணி ஆனதும், பயணம் செய்யும் விபரம் அவசர அவசரமாய் டைப் செய்து, Submit பட்டனை அமுக்கியதும், சர்வருக்கு சென்றடையும் லட்சக் கணக்கான HTTP request -களில், சீக்கிரம் வரும் Requests -களின் தேவைகள் மட்டுமே சர்வர்கள் பூர்த்தி செய்கின்றன. Slow நெட்வொர்க் கனெக்சனில் திருவாரூர் தேர் போல மெதுவாய் ஆடி அசைந்து செல்லும் HTTP requests -கள் அப்படியே வந்த வழியே திருப்பி அனுப்பப் படுகின்றன.


இது என்ன திருப்பதி லட்டா? வருகின்ற எல்லோருக்கும் கொடுப்பதற்கு.

பொறுத்தார் பூமி ஆளலாம். ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாது.

பொங்கல், தீபாவளி நாட்களில் இது இன்னும் பெரும் பிரச்சினை.

டிக்கெட் கிடைத்தால் தீபாவளி.
இல்லையென்றால் முதுகு வலி.

தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், நெடுஞ்சாலை குழியில், "சுறா" "ஏகன்" படங்களை பார்த்து கொண்டே சென்றால், முதுகு வலியோடு "தல" வழியும் சேர்ந்து கொல்லும்.

ஹை ஸ்பீட் நெட்வொர்க் கனெக்சன்களில் இந்த பிரச்சினை மிக குறைவு. கோயில்களில் அதிக காசு கொடுத்து சிறப்பு கட்டண வழியில் சென்று எளிதாய் கடவுள் தரிசனத்தை பெறுவது போலதான்.

அதனால், ஆன் சைட்டில் வேலை செய்யும் நம் நண்பர்களிடம் சொல்லி டிக்கெட் புக் செய்ய சொல்ல வேண்டும். அங்கெல்லாம் நெட் ஸ்பீட், அதி வேகம் தான். அதுவும் சரியான விலையிலே கிடைக்கும்.

அங்கெல்லாம் எப்போதே 3G -யை தாண்டி, 4G -க்கு சென்று விட்டார்கள். 5G -யில் research செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் கொஞ்ச வருடங்களில் வந்து விடும் என்கிறார்கள். ஆனால் இங்கு 3G -க்கே இன்னும் அடிதடி. அதிக விலையில்.

நம் நாட்டில் மொபைல் சர்வீஸ் நிறுவனங்களைப் போல, பிராட் பேண்ட் சர்வீஸ் நிறுவனங்களும் நம்மை வெகுவாய் ஏமாற்றி கொண்டு உள்ளன.




வார இறுதிகளில், ரயிலில் செல்லும் முக்கால்வாசி பேர்கள் இந்த ஐ.டி துறையினர்கள் தான். இவர்கள் விடும் சீன்கள் அளப்பற்றது. எங்கே பார்த்தாலும்,

"பிராஜெக்டில் போட்டுட்டாங்களா இல்லையா?",
"எவ்வளவு pay?"
"அந்த மேனேஜர் அப்படி பண்றார்."
"ஆன் சைட் கிடைச்சிடுச்சா? விசா வாங்கிட்டியா?"

இப்படி தொனந்தொனன்னு கண்டது பேசிகிட்டே வர்றாங்க. என்னாலேயே சகிக்க முடியல. இந்த ரயிலுக்கு கூட இனி "சேரன் எக்ஸ்பிரஸ்", "பாண்டியன் எக்ஸ்பிரஸ்" ங்கறதை மாற்றி, "ஜாவா எக்ஸ்பிரஸ்", "டாட் நெட் எக்ஸ்பிரஸ்" ன்னு வச்சிடுங்கப்பா!


ற்போது ரிலையன்ஸ்  3G -க்கு டிவியில் விளம்பரம் சில போட்டு கொண்டு இருக்கிறார்கள். ரயில் தண்டவாளத்தின் மேல் நின்றிருக்கும் வாகனத்தில் ஒருத்தன் கையிற்றால் கட்டி வைக்கப் பட்டிருப்பான். ரயிலும் தூரத்தில் வந்து கொண்டிருக்கும். பக்கத்தில் ரிலைன்ஸ் நெட் கனேக்சனுடன் ஒரு லேப்டாப் இருக்கும். கட்டப்பட்ட கையுடன், முடிச்சை எப்படி அவிழ்பதென்று, அவர் நெட்டில் ப்ரௌஸ் செய்து கண்டுபிடித்து ரயில் வந்து மோதுவதற்குள் தப்பிப்பாராம்.

என்ன ஒரு மூளை!! இந்த விளம்பரத்தை யோசித்தவனுக்கு. அவனை இதே மாதிரி தண்டவாளத்தில் கட்டிவச்சிட்டு, முடிஞ்சா தப்பிச்சுக்கோ அப்படின்னு சொல்லிட்டு போயிடனும்.

இதே டைப்பில் இன்னும் சில ரிலைன்ஸ் 3G விளம்பரங்கள் உள்ளன.

அந்த வீடியோவை பார்த்து வியப்படையுங்கள்.


  
பிசில் உட்கார்ந்து மிகவும் பயந்து பயந்து, பேஸ்புக் பார்க்க வேண்டி இருக்கா? கவலையே படாதிங்க.

இந்த மாதிரி கஷ்டப் பட்டு, பேஸ்புக் பார்ப்பவர்களின் நலன் கருதி, சில மாதங்களுக்கு முன்பே உங்களுக்காகவே உருவாக்கி, ஒரு வெப்சைட்டை வெளியீட்டு இருக்காங்க .

http://www.hardlywork.in/

வெப்சைட் பெயரே கலக்கலாக இருக்குல்ல. உள்ளே போகும் முன், ஒரு மெசேஜ் காண்பிக்கிறது. 

"Okay hang in there you little corporate warrior you"

இதை விட உங்களை யாராவது கலாய்க்க முடியுமா?

இந்த வசதி தற்போது ட்விட்டருக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.

என்ன, ஒரே ஒரு பிரச்சினை! நீங்கள் எல்லா அப்டேட்களையும், பார்க்க மட்டுமே முடியும். Reply பண்ணவோ, கமெண்ட் பண்ணவோ முடியாது.

கூடிய சீக்கிரம் கூகிள் பிளாகுக்கு இந்த வசதியை கொண்டு வந்து விட்டால் பரவாயில்லை. ஹீ! ஹீ!




ங்காத்தாவை எனக்கு நிஜமாய் பிடிக்கவில்லை. சும்மா வெட்டி பந்தாவுக்காக எல்லாம் சொல்லவில்லை. பிளாக்கிலும் மங்காத்தாவை இதுவரை யாரும் கடுமையாய் விமர்சித்து, நான் பார்க்கவில்லை.

எல்லோருக்கும் அஜீத் ரசிகர்களின் மேல், அவ்வளவு "பய" பக்தியா? எனக்கும்தான்.

படத்தை விட, படத்தில் அஜீத் கெட்டவனாய் நடித்தது பயங்கரமாய் பேசப் படுகிறது. என் ஆபிசில் அருகில் உட்கார்ந்திருக்கிற பெண் "கடைசியில் அட்லீஸ்ட் த்ரிஷாவுடன் சேர்ந்து சந்தோசமாய் வாழ்வது போல யாவது முடித்திருக்கலாம்." என்றார்.

நம் தமிழ் மக்கள் எல்லோரும் அவ்வளவு நல்லவர்களா?
நம்மை சுற்றி நல்லது மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறதா?

நடிகர்களை எல்லாம் தெய்வங்களாக நினைக்கும் நாட்டில், இதை விட வேறு என்ன எதிர் பார்க்க முடியும்? நம் மக்கள் உண்மையை ஏற்று கொள்ளவே மறுக்கிறார்கள். ஹாலிவுட்டை அரைத்து மசாலா போல, மொக்கையாய் பண்ணிய இதுக்கே இப்படி என்றால்? கஷ்டம்! தமிழ் சினிமாவின் எதிர்காலம்.

"மங்காத்தா, ஹாலிவுட்டுகே சவால் விடும் படம்". 
"வெங்கட் பிரபு ஒரு சினிமா மாமேதை" 

அப்படின்னு சும்மா ஹிட்ஸ் வர்றதுக்காக, என்னாலும் அட்டகாசமாய் ஒரு விமர்சனம் எழுத முடியும்.

அதிலும் இந்த வெங்கட் பிரபுவும், வெற்றி மாறனும், எதோ ரொம்ப நாளாய் கஷ்டப் பட்டு சாப்பிடாமல் சிலை செதுக்கியது போல், தாடி வளர்த்து கொண்டு விடும் சீன்கள் ஓவர். அடிக்கடி தாடியை வேற, தடவிகிட்டே பேசுறது அலம்பலின் உச்சக்கட்டம்.

நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது!!!


Jul 13, 2011

தெய்வீக காதல்



அவள் எனக்கு இல்லை என்று
தெரிந்த பின்னும்
தினம் தினம் அவளை பார்க்கும்
மரண அவஸ்தை
தாங்க முடியவில்லை.

எங்கேயாவது அடிபட்டு
செத்தொழியட்டும் அவள்.





Jul 6, 2011

விழிக்கும் இரவுகள்



தினமும் இரவில் 
சீக்கிரம் உறங்க வேண்டும்
என்ற நினைப்பை 
சுத்தமாய் துடைத்தெறிந்து விட்டு 
என் மூளையில் நிரம்புகிறது
உன்னை பற்றிய சிந்தனைகள்.

பூனைகள் கலவி கொள்ள
அழைப்பு விடுக்கும் சத்தங்கள் 
தொல்லை கொடுத்து
உன் நினைவை கலைக்கின்றன.
அவைகளை விரட்டி விட்டு
தலையோடு போர்த்தி 
உடல் வளைத்து நெளித்து 
மண் புழு போல
மீண்டும் உன் நினைவுகளுக்குள்
புதைந்து கொள்கிறேன்.

மெல்ல நகரும் நிலவு
சொல்லி நகரும் இரவு
நீளும் வானம்
தீரா இரவு.




Jul 5, 2011

டிவிட்டரில் திருவள்ளுவர்



  • முன்பெல்லாம் இரவில் கண்விழித்து ப்ளாக் எழுதி கொண்டிருந்த நான் இப்போதெல்லாம் கண்விழித்து ட்வீட் எழுதுகிறேன்.

  • ஆண்கள் அதிகம் இருக்கும் லிப்டில் ஏற மாட்டாள் ஒரு உண்மையான பெண்ணியவாதி.  #ஆணாதிக்க எதிர்ப்பு

  • இக்காலத்தில் பிறந்திருந்தால் வால்மீகி கூகுள் பிளாகையும், திருவள்ளுவர் ட்விட்டரையும் பயன்படுத்தியிருக்கலாம்.

  • தமிழ் ஆர்வலர்கள் யாராவது, திருவள்ளுவர் என்ற பெயரில் அக்கௌன்ட் ஆரம்பித்து 1330 குறளையும் ட்வீட்டாய் மாற்றலாமே!

  •  சிரிப்பே வராமல் சிரிப்பதை விட, அழுகையே வராமல் அழுவது தான் மிக கஷ்டம். 

  • பூ மொட்டுக்கள் விழிக்கும் நேரத்திலும், கொட்ட கொட்ட முழித்து ட்வீட்டிலக்கியம் எழுதி கொண்டிருக்கிறேன்.

  • ராஜாவுக்கும் கனிமொழிக்கும் திகார் பழகிபோனதால்,நமக்கும் அவர்களைப்பற்றிய செய்திகள் பழகிவிட்டது.இம்ம் அனுப்புங்கள் அடுத்த ஆளை தி.மு.கவிலிருந்து.

  • தன் பெயருக்கு முன்னே தன் மனைவியின் பெயரை போட்ட ஆண்கள், பேஸ்புக்கில் அதிகம் மதிக்கப் படுகிறார்கள்.
  • இனி பெண்ணின் சிறிய இடையை, ட்விட்டர் இடை என்றும் கவிஞர்கள் வர்ணிக்கலாம்.

  • தமிழக சிறைகளில் இன்னும் களி உணவாய் கொடுக்கப் படுகிறதா? சாரு சென்றால் விடை தெரியலாம்.

  • புத்தகம் எழுதினால் மட்டும் பிரபலம் ஆக முடியாது. அதை படிக்க சொல்லி அனுப்பி வைத்தால் மட்டுமே பிரபலம் ஆக முடியும்.

  • Rahulji was an eligible bachelor. Now he is an eligible prime minister.

  • "ஸ்வீட் எடு! கொண்டாடு!" அமிதாப் பச்சன் # ஐஸ்வர்யாராய் கர்ப்பம்.

  • அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுடன் சேர்த்து, இனி சிறை கைதிகளுக்கும் நிறைய சலுகைகள் இடம் பெறலாம். #முற்போக்கு சிந்தனை.

  • Petrol and Diesel hikes saves more money for the public. Walk and Talk, Walk and Talk, Walk and Talk........ WHAT an IDEA Manmohanji!

  • "ராகுல் காந்தி பிரதமரானால்" என்ற தலைப்பில் காமெடி கலக்காமல் சீரியஸாக ஒரு சிறந்த கட்டுரை எழுதுக.

  • தங்களைப் போல தன் பிள்ளையும் கஷ்டப் படுவான் என தெரிந்தே நம் பெற்றோர்கள் செய்ய சொல்லும் தவறான காரியம் தான், கல்யாணம்.

  • தமிழக மீனவர்களையும் தமிழக அரசியல்வாதிகளையும் பிடித்து சிறை வைப்பதில் இலங்கையும் இந்தியாவும் தமிழர்களுக்கு எதிரான போக்கையே கடைபிடிக்கின்றன - கலைஞர்.

  • This weekend my newly married friend invited me for a COSTLY Lunch. I have to travel to Bangalore from Chennai.

  • It doesn't a matter, How badly India is playing. Bcoz, West Indies will always do worse than that.

http://twitter.com/kathirnk