தினமும் இரவில்
சீக்கிரம் உறங்க வேண்டும்
என்ற நினைப்பை
சுத்தமாய் துடைத்தெறிந்து விட்டு
என் மூளையில் நிரம்புகிறது
உன்னை பற்றிய சிந்தனைகள்.
பூனைகள் கலவி கொள்ள
அழைப்பு விடுக்கும் சத்தங்கள்
தொல்லை கொடுத்து
உன் நினைவை கலைக்கின்றன.
அவைகளை விரட்டி விட்டு
தலையோடு போர்த்தி
உடல் வளைத்து நெளித்து
மண் புழு போல
மீண்டும் உன் நினைவுகளுக்குள்
புதைந்து கொள்கிறேன்.
மெல்ல நகரும் நிலவு
சொல்லி நகரும் இரவு
நீளும் வானம்
தீரா இரவு.