Jan 4, 2012

திருமணங்கள் கேரளாவில் நிச்சயிக்கப் படுகின்றன


என்னதான் கவிதை, கட்டுரை என்று நிறைய எழுதினாலும் பெண்களிடம் பேசும் போது மட்டும் எனக்கு சரியாக சிக்னல் கிடைக்காத செல்போன் மாதிரி, வார்த்தைகள் கட்டாக ஆரம்பித்து விடும். என்னுடைய எல்லா காதலும் கருமாதியிலே முடிய, கட்டாயப் படுத்தி மனதை பறிக்க நானும் கடைசியாக கல்யாண சந்தையில் தள்ளப்பட்டு விட்டேன்.

இது மாடுகள் விலை பேசப்படும் செவ்வாய் சந்தை.




தண்ணி அடித்து பெண்கள் பின்னால் அலைந்து, ஜாலியாக எதை பற்றியும் வருத்தப் படாமல் ஊர் சுற்றி கொண்டிருக்கும் வாலிப வயசு பையன்களை பார்த்து அவர்களது உறவினர்கள்,

"ஒரு கால்கட்டு கட்டி விட்டால் எல்லாம் சரியாகிடும்"
"மூக்கணாங் கயிறு போட்டால் அடங்கிடுவான்"

என்று மாடுகளையே உதாரணம் சொல்லி பேசுவார்கள். கல்யாணம் ஆவதற்கு முன் நாய் மாதிரி சுற்றி கொண்டிருக்கும் ஆண்கள், கல்யாணம் ஆகி விட்டால் மாடு மாதிரி உழைக்க வேண்டும்.

கேம்பஸ் இன்டர்வியுவிக்கே படிக்காமல் தெனாவட்டாக செல்லும் பையன்கள், பொண்ணு பார்க்க போகும் போது மட்டும் பொண்ணுகிட்ட எப்படி பதில் பேசறது என்று தனிமையில் கண்ணாடி முன் நின்று ஆஸ்கார் விருது வாங்கும் அளவுக்கு நடித்தெல்லாம் பார்ப்பார்கள்.

பெண் வீட்டார்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்கு, அன்லிமிடெட் ஆந்திரா மீல்ஸ் சாப்பிட்டு விட்டு போனால் தான் நம்மால் பதில் சொல்ல முடியும்.

மாடு என்ன படிச்சிருக்கு?
மாடு எவ்வளவு சம்பளம் வாங்குது?
மாடு அமெரிக்கா போயிட்டு வந்திருக்கா? இல்லையா?

டயர்டு ஆகி விட்டால், கொஞ்சம் தண்ணி குடித்து விட்டு பதில் சொல்லலாம்.

இதில் அமெரிக்கா சென்று வந்த மாட்டுக்கு முன்னுரிமை அதிகம்.

இப்போது ஐ.டி துறையில் வேலை செய்யும் பையன்களுக்கு சரியான வயதில் திருமணம் ஆவதே சவாலான விஷயம். அப்படி இருக்க அதிகமாய் படித்திருக்காமல் டிரைவர் மற்றும் இதர வேலைகளை செய்யும் இளம் சிங்கங்களின் நிலைமை இன்னும் மோசம். இதனால் நிறைய பேர் திருமணம் ஆகாமல், "ராமன் தேடிய சீதை" சேரன் போல முகத்தை மூடிக் கொண்டு அழுகின்றனர்.

பெண்களுக்கு Options அதிகமாய் இருக்கின்றன. பையன்களுக்கு?  

They are the Options!.

படித்து முடித்து விட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருக்கும் பசங்களிடம் வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி காசை பிடுங்குவதற்கென்றே சிட்டியில் ஒரு கும்பல் எப்போதும் நடமாடி கொண்டிருக்கும். அதுபோல திருமணம் ஆகாமல் தவித்து கொண்டிருக்கும் பையன் வீட்டார்களை ஏமாற்றி பணம் பிடுங்க ஜோசிகார கும்பல் நாட்டில் பஞ்சமில்லாமல் நிறைந்திருக்கிறது.

அவர்கள் சொல்லும் சில ஏமாற்று சடங்கு வேலைகள்.

1. வாழை மரத்திற்கு தாலி கட்டுவது

பெண்ணின் கால்களை வாழை தண்டு கால்கள் என்று  கவிஞர்கள் வர்ணித்து காதலில் மூழ்கி முத்தெடுப்பர்கள். ஆனால் இங்கு முழு வாழை மரத்தையே பெண்ணாக்கி விடுகிறார்கள். நீங்கள் வாழை மரத்திற்கு தாலிகட்டும் சடங்கை செய்து முடித்தால் உங்கள் திருமண தோஷம் விலகி திருமணம் நடந்து, முதலிரவை பஞ்சு மெத்தையில் குஜாலாய் கொண்டாடலாம் என்பது நம்பிக்கை.

இது கிட்டத்தட்ட ஒரு நிஜ திருமணம் போலவே நடக்கும். ஆற்றோர கோவில் கரையில், ஓம குண்டம் வளர்த்து, அதில் ஒரு கையால் அரிசி மற்றும் இதர வகைகளை போடுவதுடன், மற்றொரு கையில் உங்களது மணமகளை அதாவது இளம் வாழைக் கன்றை பிடித்துக் கொண்டு, அய்யர் சொல்லும் மந்திரங்களை ஒன்றும் புரியாமல் திருப்பி ஓத வேண்டும். மேளதாளம் மட்டும் இருக்காது. மிமிக்ரி தெரிந்த உங்கள் நண்பர் யாராவது இருந்தால் அதையும் அடித்து கொள்ளலாம்.

அந்த வாழை மரத்திற்கு ஒரு பெயரும் வைக்கப் படும். கடைசியில் முகூர்த்த நேரம் வரும் போது அய்யரிடம் இருந்து மஞ்சள் கயிறை வாங்கி வாழை மரத்திற்கு மூன்று முடிச்சு போடவேண்டும். அப்போது அந்த வெட்டிய வாழை மரம் தண்ணீர் (கண்ணீர்) விட்டால் கவலைப் படக் கூடாது. ஆனால் கடைசியாக முதலிரவு கூட முடியாமல் அந்த வாழை பெண்ணின் கழுத்தை அரிவாளால் வெட்டி ஆற்றில் தூக்கி வீசி விடுவார்கள் என்பது வருத்தமான விஷயம்.

இதில் மேலும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் என் வாழ்விலும் இச்சம்பவம் நடந்தேறியது. எனக்கு நடந்த திருமணத்தில் என் பொண்டாட்டியின் பெயர் காவ்யா. காவ்யா செத்து போனதில் கொஞ்ச நாள் நான் தாடி வளர்த்து கஞ்சா அடித்து "அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சல" என்று பாட்டு பாடி புலம்பி கொண்டிருந்தேன். நம்மூரில் தான் கழுதைக்கும், மரத்திற்கும் தாலி கட்டி அவைகளை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றனர்.

2.  திருமணஞ்சேரிக்கு சென்று மாலை வாங்கி வருவது.

திருமணஞ்சேரி என்பது நாகப் பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். கடவுள் சிவன், பார்வதியை இங்கு தான் திருமணம் செய்தாராம். இங்கு வந்து கடவுளை வழிபட்டு பூ மாலையை வாங்கி கொண்டு சென்றால், உங்கள் திருமணம் ஏற்படுவதில் இருக்கும் தோஷம் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. அந்த மாலையை உங்களுக்கு திருமணம் ஆகும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். திருமணம் ஆனவுடன் மணமக்களாக மீண்டும் அங்கு சென்று அந்த மாலையை திருப்பி தர வேண்டும் என்பது சம்பிரதாயம். அங்கிருக்கும் ஐயர்கள் உங்களை கட்டுத்தரையில் அடைத்து வைத்த மாடுகளை போல தான் நடத்துவார்கள்.

நீங்கள் யூகித்தது போலவே, என்னிடமும் அந்த பூ மாலை இருக்கிறது. என் பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் இதை செய்த பின், அற சீற்றம் கொண்டு எழுதிய பதிவு தான் இது. :-(




இப்படியாக ஏமாந்து கடைசி வரை சந்தையில் விலை போகாத மாடுகள் எல்லாம் கடைசியாக கேரளாவுக்கு அனுப்பபட்டு அடிமாட்டு விலைக்கு விற்கப் படும். கேராளாவில் திருமண சம்பந்தம் பிடிப்பதற்கென்றே எங்கள் ஊரில் ஒரு Specialized மேரேஜ் புரோக்கர் இருக்கிறார். நெருங்கிய சொந்தக்காரர் தான். தமிழ் நாட்டிற்கும் கேரளாவிற்கும் நிறைய broadband இணைப்புகள் கொடுத்துள்ளார்.

நம்ம ஊரு கல்யாணங்கள் போல மாப்பிள்ளை வீட்டு அழைப்பு, பெண் வீட்டு அழைப்பு, நிச்சயதார்த்தம் என்பதெல்லாம் தனித்தனியாய் இருக்காது. ஹனிமூன் செல்வது போல ஒரு வாரம், மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் கேரளா சென்று, திருமணம் முடித்து, அதன் பின் "கேரள நாட்டு முல்லை"யை எந்த பிரச்சினையும் இல்லாமல் தமிழ் நாட்டிற்கு கூட்டி வந்து 'அணை'க்கலாம்.

என் ஆபிஸ் கேரள பெண் ஒருத்தியை இளநி என்று குறிப்பிடுவோம். கேரள பெண்கள் அந்த ஊரை போலவே செழுமையாய் இருக்கிறார்கள். அந்த ஊர் இளநி பார்க்க பெரிதாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.

கேரளா சுற்றி பார்க்க அழகான இடம் என்பதால் நீங்கள் திருமணதிற்கு பின் ஹனிமூன் செல்ல அவசியம் இருக்காது.

பெண் வீட்டார்களிடம் இருந்து பெண்ணை தவிர எதையும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. மாப்பிள்ளை வீட்டார்கள் தான் பெண்ணுக்கு நகைகள் போடுவது முதல் திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் செய்து கொள்ள வேண்டியது போல் இருக்கும். அவர்களால் முடிந்தால் நீங்கள் திரும்பும் போது வழிச் செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

ஆந்திராவில் உங்களுக்கு எந்த டிகிரி, எந்த university -யில் வேண்டும் என்றாலும் பணம் கொடுத்தால் போதும் Fake certificate வாங்கி விடலாம். அதே போல் மாப்பிள்ளை வீட்டார்க்கு எந்த ஜாதியில் எந்த குலத்தில் பெண் வேண்டுமென்றாலும், அந்த Fake பெண் வீட்டார்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். உங்கள் உறவு, ஜாதி வட்டங்களுக்குள் ஒரே ஜாதி என்று புளுகி கொள்ளலாம்.

ஆனால் இன்னொரு வகையில், சாதி மத பேதம் அற்ற சமுதாயத்தினை உருவாக்கி நீங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாய் திகழ்வீர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

எனக்கு கேரளா ஜஸ்ட் மிஸ் ஆகி விட்டது. :-(



Jan 3, 2012

கொலைகார வாசகன் - ஆபாயில்


2012 ஆம் வருடம் பிறந்து விட்டது.

ஒரு ரூபாயை மிச்சபடுத்தி உங்களுக்கு ஒரு நாள் முன்பாகவே அட்வான்ஸ்டு புத்தாண்டு வாழ்த்துக்களை, உங்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நண்பர்கள் SMS மூலம் வாழ்த்தி  இருப்பார்கள்.

நீங்களும் அடுத்த நூற்றாண்டின் மாமனிதர் விருது வாங்கி விடுவீர்கள். மக்கள் எல்லோரும் நல்லவர்கள் ஆகி விடுவார்கள். நாடே சுபிட்சம் அடைந்து விடும்.

இவ்வருடம் உலகம் அழிந்து விடும் என்று மாயன்ஸ் மக்கான்ஸ் சொல்லுகிறார்கள். பயமாய் இருக்கிறது. என்னுடைய மொபைலும் Virgin நானும் Virgin.

சரி, ஏன் Virgin மொபைல் என்று பெயர் வைத்தார்கள்?

எல்லா மொபைலும் Virgin ஆக தான் இருக்கின்றன. அதிக நேரம் கொஞ்சி கொஞ்சி பேசி, பின் முத்தம் கொடுத்து அதை சூடேற்றி விட்டு தன் வேலையை பார்க்க போய் விடுகிறார்கள்.



போன வருடம் வந்த மொக்கை படங்களை வரிசை படுத்தி தொலைகாட்சிகள் எல்லாம் இம்சை படுத்த, "எனக்கு பிடித்த பத்து படங்கள்", "எங்க ஆயாவுக்கு பிடித்த பத்து படங்கள்" என ஒவ்வொரு பிலாகர்களும் அதற்கு மேலும் புண்ணை கிளற, புத்தாண்டு எனக்கு இனிமையாய் கழிந்தது.



ரு நாள் காலை எப்போதும் போல முகம் கழுவாமல் என் பிளாக்கை திறந்து பார்த்த போது, என் பிளாக்கில் ஒரு கமெண்ட் போடபட்டிருந்தது. தான் ஒரு கொலைகாரனாக இருந்ததாகவும், என் பிளாகை படித்து திருந்தி விட்டதாகவும் எழுதியிருந்தான். இப்படி திருந்திய வரிசையில் அரசியல்வாதி, ரேப்பிஸ்ட் என நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது சம்பந்தம் இல்லாத விஷயம்.

என் எழுத்தின் மேல் பற்று கொண்டு அவன் நிறைய போலி ப்ரோபைல்கள் உருவாக்கி என் எல்லா பதிவுகளுக்கும் ஒட்டு போட்டு தமிழ் மணத்தின் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகளின் வரிசையின் உள்ளே நுழைத்து, எனக்கு மணி மகுடம் வாங்கி கொடுப்பதில் குறியாக இருக்கிறான்.

அந்த மகுடத்தில் மணி இருக்குமா? இருக்காதா?

தமிழ் தெரியாத என்னுடைய பிரெண்டு ஒருவன் தமிழ்மணம் (Tamilmanam) என்பதை எப்போதும் தமிழ்மானம் என்றே படித்து மானம் வாங்குவான். அவனை சாகடிக்கலாம் என்றிருக்கிறேன்.

1330 குறள் எழுதி வைத்துவிட்டு கடலுக்குள் போய் தனியாக நின்று தவம் செய்து கொண்டிருக்கும் திருவள்ளுவருக்கே தெரியாது எத்தனை பேர் அதை படித்து உத்தமனாய் மாறி இருக்கான் என்று. பத்து குறள் மனப்பாடம் பண்ணுவதற்கே நாக்கு தள்ளும். பனிரெண்டாம் வகுப்பு பப்ளிக் எக்சாமிலே மினி பிட் எடுத்துட்டு போய் தான் நான் பாஸ் ஆனேன்.

கலைஞர் எழுதிய திருக்குறள் உரையை படித்த பின் தான் எனக்கு எல்லா குறளின் பொருளும் புரிய துவங்கியது. அந்த உரையை (தலையணை உறையல்ல) எப்போதும் தலைமாட்டிலே வைத்து தான் தூங்குவது வழக்கம். அதை நான் காசு கொடுத்து வாங்கவில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து தான் சுட்டு வந்தேன்.

நான் வழக்கமாய் செவ்வாய்கிழமை காலை சாப்பிட்ட பின் காக்காய்க்கு சோறு வைத்துவிட்டு  சரியாய் 10:00 மணிக்கெல்லாம் பதிவு போட்டு விடுவேன். அவனும் அதை ஷார்ப்பாய் போட்டவுடன் படித்து விடுவான். அதுவரை உயிரை கையில் பிடித்து வைத்துக் கொண்டு தான் காத்திருப்பான்.

ஆனால் அன்று இரண்டு நிமிடம் தாமதம் ஆகி விட்டது. அதற்கே அவனுக்கு மூச்சு விட சிரமமாக போய் விட்டது.

நல்லவேளை இரண்டு நிமிட தாமதம் அவனை காப்பாற்றி விட்டது. அதனால் அவன் உயிரோடு இருக்கிறான். இன்னும் ரெண்டு நிமிஷம் தாமதித்து போஸ்ட் போட்டிருந்தால் கூட அவன் பிழைத்திருக்க வாய்ப்பு ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும் என டாக்டர் கண்ணாடியை கழட்டி கொண்டே சொன்னார்.

செக்ஸை கலந்து, படிக்கின்றவர்களை கவர்வது போல கதை எழுத விரும்புகிறவர்கள், நேட்டிவிட்டியுடன் எழுத வேண்டும். சும்மா ஒரிஜினாலிட்டி இல்லாமல் மார்பு, உறுப்பு என்று வெறும் வார்த்தைகளை நிரப்பி போரடித்து தூக்கம் வரவைக்க கூடாது.




ழுக்காய் இருந்த என்னுடைய உலகம் Surf Excel போட்டு துவைத்ததை போல புதிதாக மாறிவிட்டது.

"பிகர் ஏதாவது செட் ஆகிடுச்சா?" ன்னு கேட்கறீங்களா?

நோ.

வேலை நேரம் மாறி விட்டது. இதுவரை மதியம் இரண்டு மணிக்கு ஆபிஸ் சென்று கொண்டிருந்த நான், இப்போது காலை ஆறு மணிக்கெல்லாம் சென்று விடுகிறேன்.

எப்பவுமே லேட்டாக எந்திருக்கிறேன் என்று வழக்கமாய் திட்டும் என் அப்பா இனி என்னை திட்ட முடியாது.  "சூரியனே எனக்கு அப்புறம் தான் எந்திரிக்குது" 

ஆனால் அதிகாலை ஐந்து மணிக்கு எழுவது சிரமமாக தான் இருக்கிறது. அதிகாலையில் வந்து மார்பில் கோலம் போடும் அனுஷ்காவையும், கழுத்தை பின்னி கட்டியணைக்கும் மோனிக்கா பெலுசியையும்  வலுகட்டாயமாய் உதறி தள்ளிவிட்டு எழுந்து வரவேண்டியதாய் இருக்கிறது. 

ஒரு சந்தேகம்.

ஏன் இந்த நடிகைகள் எல்லாம் அதிகாலை ஆரம்பித்தவுடன் தான் வருகிறார்கள்?




Jan 1, 2012

ஒளியோவியம்

அறையில் வண்ண மயமான
ஆடம்பர மின்விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.
தலையை இருபுறமும் ஆட்டி ஆட்டி
காற்றில் தள்ளாடும் மெழுகுவர்த்தியை போல
எதிரில் அமர்ந்து அழகாய் பேசி கொண்டிருக்கிறாள்.
அவளை பார்த்து கொண்டு
எரியாமல் உருகி கொண்டிருக்கிறேன் நான்.

மின்சாரம் நின்று போய்
விளக்கு அணைந்து விட்டது.

இப்போது
இன்னும் பிரமாண்டமாய்
ஒளிர்கிறது
அவள் முகம்.




Dec 20, 2011

Nonsense Talking 1

நீங்கள் இந்தியாவின் இன்றைய இளைய தலைமுறையினரா?

இந்த நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் என்ன செய்யலாம்?

  • அப்துல் கலாம் சொன்னது போல் கனவு கண்டு புதிதாக ஏதாவது கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்கி நாட்டிற்கு பெருமை சேர்க்கலாம்.
  • ஏழை, அநாதை மக்களுக்கு உதவி செய்து அவர்கள் வாழ்வை வளம்பெற செய்யலாம்.
  • ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்க்காக உயிரை கொடுக்காலாம்.  




இப்படி எல்லாம் மிகவும் கஷ்டப் பட்டு யோசித்து காமெடி பண்ணாதிர்கள்.

உங்களால் மிக எளிதாய் செய்ய முடிகிற, நாட்டிற்கு பயன்படக் கூடிய காரியம் என்னவென்றால், நீங்கள் திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ளாமல் இருப்பதே!

எதுவும் தெரியாத, சரியாக பேசி கூட பழகாத குழந்தையிடம் போய்
"உனக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சி பாப்பா வேணுமா?" என்று கேட்பார்கள்.

பாவம் அந்த குழந்தை.

எந்த ஒரு குழந்தையும் தனக்கு தம்பி பாப்பாவோ, தங்கச்சி பாப்பாவோ வேண்டுமென்று கேட்பதில்லை. அதற்கு தேவை விளையாட தேவையான பொம்மைகள் மட்டுமே.

Pollution, Corruption போன்ற நாட்டை பாதிக்கும் எந்த ஒரு பிரச்சினைக்கும் மக்கள் தொகை மட்டுமே மூலக் காரணம். அதை கட்டுபடுத்தாமல் "Save Plastic Bags", "Save Water" "Save Petrol" "Save Paper Save Tree" என்பது போன்ற வெட்டி campaign கள் உண்மையில் உருப்படியானது அல்ல.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல ஆயிரம் பேர் சேர்ந்து சேமிக்கும் பிளாஸ்டிக், தண்ணீர், பெட்ரோல் போன்றவற்றை பயன்படுத்துகிறான்.
 

பிச்சைக்காரர்களுக்கு இரண்டு ரூபாய்க்கு குறைவாக பிச்சை போட கூச்சப்படும் நாம், ஒரு ரூபாய் போட்டு பிளாஸ்டிக் பையை கூச்சப் படாமல் வாங்குவோம். இருக்கும் மரங்களை வெட்டி ஐ.டி. பார்க் போன்ற பெரிய கட்டிடங்களை கட்டிவிட்டு ஆபிசில் Go Green Day நிகழ்ச்சி நடத்துவோம்.

ஜனத்தொகையை கட்டுபடுத்த ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள் எதுவும் செய்ய மாட்டார்கள். நாம் கட்டுகடாங்கா எண்ணிக்கையில் இருக்கும் வரையில் தான் அவர்களுக்கு நல்லது. அரசின் "நாமிருவர் நமக்கொருவர்" எனும் விழிப்புணர்வு பலகைகளை கூட எங்கேயும் பார்க்க முடிவதில்லை.

சிலர் ஆண் குழந்தைகளுக்காக முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் என்ன மன்னர் குடும்பமா? உங்கள் வம்சம் தொடர்ந்து வர வேண்டும் என்பதற்கு.

மனிதர்கள் Waste bags போன்றவர்கள். அவர்களால் எதுவும் இந்த உலகிற்கு பிரயோஜனம் இல்லை. மனித விலங்கு மட்டும் இல்லாமல் இருந்தால் இந்த உலகம் நன்றாக இருக்கும். இயற்கை பேரழிவுகள் அவ்வப்போது  நிகழ்வது எப்போதும் நன்மையே. இந்த 2012 மாயன் காலண்டர் படி உலகம் அழிந்தால் நன்றாக இருக்கும். 

Save Waste bags.



நான் ஏன் ப்ளாக் எழுதி கொண்டிருக்கிறேன்? எழுதுவது சிலசமயம் அசிங்கமாய் தோன்றுகிறது. ஐ.டி துறையில் வேலை செய்யும் எல்லோரும் வெளிநாடு சென்று அதிகம் பணம் சம்பாதிக்கும் போது நான் வெட்டியாய் இங்கே பொழுதை கழிக்கிறேன்.

எனக்கு இலக்கியம், இலக்கியவாதிகள், இலக்கிய கூட்டங்கள் என்றாலே மிக அலர்ஜி. அதிகம் எழுதி எழுதி நானும் எழுத்தாளர் ஆகி விடுவேனோ என்று பயம்.

எழுத்தாளர்களின் வாழ்க்கை அவ்வளவு நார்மல் ஆக இருக்காது. ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு தனி வட்டத்தில் வாழ்வார்கள். கிட்டதட்ட நம்முடைய பிளாகர்களை போலத்தான். எனக்கு எழுத்தாளர்களின் பெயர்கள் தெரியும். யாரையும் அதிகம் படித்ததில்லை. படிப்பதிலும் விருப்பம் இல்லை. எழுத்தாளன் ஆக வேண்டும் என்றால் அதிகம் படிக்க வேண்டும் அல்லது அதிகம் ஊர் சுற்ற வேண்டும்.

எவன் ஒருவன் தன்னுடைய எழுத்துக்கு புகழ் தேடாதவனாக, தன் எழுத்தின் மேல் கர்வம்/விருப்பம் கொள்ளாதவனாக இருக்கிறானோ அவனுக்கு தான் நன்றாய் எழுத வரும் என்று எங்கேயோ படித்தது. நம்மால் அதுபோல இருப்பது கஷ்டம்.

இணையத்தில் நன்றாய் எழுதுபவர்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாய் இருக்கிறது. அதிகம் அறியப்படாமல் அருமையாய் எழுதிகொண்டிருக்கும் பிளாகர்களை எனக்கு யாராவது அறிமுகம் செய்யுங்கள் ப்ளீஸ்.

நான் தமிழ் Aggregator சைட்டுகளில் இனி எனது பதிவுகளை இணைக்கப் போவதில்லை. சினிமா பதிவுகள் விதிவிலக்கு ஆகலாம். தனியாய் எழுதும் போது எந்த கட்டுப்பாடும் இல்லாமல், எதைப் பற்றியும் கவலை இல்லாமல் சுதந்திரமாய் எழுதலாம். என் எழுத்து இனி எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நான் எழுதுவது உங்களுக்கு பிடித்திருந்தால் படியுங்கள். நான் பிரபலமாக விரும்பவில்லை. இப்படி எழுதுவதால் நான் உருப்படி இல்லாமல் தான் போய்க் கொண்டிருக்கிறேன்.
 


நீங்கள் புத்திசாலிதனமாய் யோசிப்பவர் என்று உலகுக்கு காட்ட வேண்டுமா?

சிறந்த ஒரு வழி.

ஊழலுக்கு எதிராய் போராடும் அன்னாஹசாரேவைப் பற்றியோ அல்லது  கூடங்குளம் பிரச்சினையில் தன் நீண்ட மூக்கை நுழைத்த அப்துல்கலாமை பற்றியோ அவர்கள் சாகும் வரை திட்டி எழுதிக் கொண்டே இருங்கள். ஆனால் இருவருக்கும் அதிகம் வயசாகி விட்டது. அதனால் சீக்கிரம் உங்கள் பிரதிக்கு(பதிவுக்கு) முந்துங்கள்.

மாதிரி தலைப்புக்கள்.

முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரே!
படித்த முட்டாள் அப்துல்கலாம்!

ஆனா பாருங்கள் இந்த ரெண்டு பேருமே, குழந்தை குட்டின்னு ஏதும் வைத்துக் கொள்ளாமல், இந்த நாட்டு மக்களை ஏமாற்றி தங்களை இந்த உலகை காக்க வந்த கடவுள்களாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். என்ன ஒரு அந்நியாயம்?

பிகர் பின்னாடி சுற்றி, சைட் அடித்து, (கல்யாணம் பண்ணி) ஜாலியாய் மேட்டர் செய்து, குடும்பமாய் வாழும் நம்மை அவர்கள் இருவரும் அவ்வளவு எளிதாய் ஏமாற்ற முடியுமா என்ன? Bloody Bachelors.

குற்றம் சொல்வதற்கென்றே சிலர் வாழ்கிறார்கள். நக்கீரர்களாம். பிடரி கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சொல்லுபவர்கள்.



Dec 8, 2011

லிட்டில் Mark Zuckerberg - ஆபாயில் (அப்படியே சாப்பிடுங்க)




ற்போதைய ஜெனரேசனில் பிறக்கும் குழந்தைகள் எளிதாய் டெக்னாலஜிகளை கற்றுக் கொள்கின்றனர். முன்பெல்லாம் கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் தங்கள் குழந்தைகள் நல்ல புத்திசாலியாய் பிறக்க நல்ல விசயங்களை பற்றி படித்துக் கொண்டோ, கேட்டுக் கொண்டோ இருப்பார்கள்.

"அர்ஜூனனின் மகன் அபிமன்யூ, அவரது தாயின் வயிற்றில் இருந்தபோது அர்ஜூனன் அவரது தாய் சுபத்ராவிற்கு சக்கரவியூகம் ஏற்பாடுகளைப் பற்றிக் கூறியபோது கேட்டதால், அவனுக்கு சக்கரவியூகம் பற்றி பகுதியளவு தெரியும். சுபத்ரா முதல் பகுதிய விளக்கங்களைக் கூறும்போது மட்டுமே விழிப்புடன் இருந்தார் அதன் பின்னர் அவர் தூங்கிவிட்டார். எனவே அபிமன்யூவிற்கு அந்த அமைப்பிற்குள் நுழைவது எவ்வாறு என்பது மட்டுமே தெரியும். ஆனால் அதிலிருந்து தான் எவ்வாறு வெளிவருவது என்பது தெரியாது. " Read full story here.


தாய் சாப்பிடும் உணவு தன் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு கடத்தப்படுவது போல அவர்களுடைய செயல்பாடுகளின் நுணுக்கங்களும் கடத்தப் படலாம்.

என் அக்கா கர்ப்பமாய் இருந்த நேரத்தில், சீனாவில் இருக்கும் என் மாமாவுடன் தினமும் போனிலும் Skype சாட்டிலும் பேசிக்கொண்டிருப்பாள். என் அக்கா மகன் நகுலன் அவனுக்கு இரண்டு, இரண்டரை வயதான போதே, அவனாகவே இந்தியாவில் இருக்கும் எனக்கு மொபைல் மூலம் போன் செய்து விடுவான். கம்ப்யுட்டரை ஆன் செய்து உள்ளே சென்று தனக்கு பிடித்த பாடல்களை கேட்பது முதல், தன் அப்பாவுக்கு ஆன்லைன் மூலம் போன் செய்வது முதல் எல்லாம் அத்துபடி.

இத்தனைக்கும் அவனுக்கு ABCD கொஞ்சம் கொஞ்சம் சொல்ல தெரிந்தாலும், எழுத்தை recognize பண்ண சுத்தமாக தெரியாது. தமிழில் பேசச் சொன்னால் வேற்று கிரகவாசி போல ஏதோ உளறுவான். அவனை கேமராவில் போட்டோ எடுக்கும் போதெல்லாம் ஒன், டூ, த்ரீ cheese என்று அழகாய் சீன மொழியில் சொல்லுவான். இரண்டு வருடம் சீனாவில் இருந்ததால் அங்கிருக்கும் சீன மக்களோடு பேசி பேசி என் அக்காவை விட அதிகம் சீன மொழியில் புலமை பெற்று விட்டான்.

சிலநாள் நான் ஆபிசில் வேலை செய்து கொண்டிருக்கும் போது டொய்ங் டொய்ங்கென்று சத்தத்துடன், ஜிமெயில் சாட் பாக்ஸில் மெசேஜ் Blink ஆகும். 

sfsdflksjdslkfsdfddddddd[]dddddddddddddsdgnldfgdfgggggg
3333333333sdfsnfgoiurtnyrtyrty34343446343erereeyeeertekrt;erke;
erbmvmbpmmmmmmmmmmmmerttttttttttttttdvfghgdnoiyldfkds kiiiiiiiiiiiiiiiiiidfgdfdnflknkljoooooooooooooefdsfgdfgdfdfsdfsd[]w
4r34534sdf678979 /*dfgsgdfhdghdsghdfsgsdfgrt65ergefgdfgdfg

அவன் அனுப்பிய இந்த Encrypted மெசேஜ்ஜை யாராவது Decrypt பண்ணி கொடுத்தால் நல்லது. டெக்னிகல் ப்ளாக் வைத்திருக்கும் ப்ளாகர்களுக்கு கடுமையான சவால்.


நகுலன் என்றொரு அழகன்


மார்க் ஜுகர்பெர்க்கின் வாழ்கையை பற்றிய திரைப் படமான The Social Network படம் போரடிக்காமல் விறுவிறுப்பாகவே சென்றது. அந்த படம் பார்த்தப் பிறகு எனக்கு பேஸ்புக் தளத்தை Hack செய்யும் ஆசை வந்தது. சைபர் க்ரைமில் மாட்டிக் கொள்வேன் என்று பயந்து விட்டு விட்டேன். ;-)





புது டெக்னாலஜிகள் எல்லாம் நமக்கு ஒரு வகையில் பயனுள்ளதாக இருந்தாலும், மற்றொரு வகையில் நம்மை சோம்பேறிகளாகவும், முட்டாள்களாகவும் வளர்க்க போட்டி போட்டுக் கொண்டு கண்டுபிடிக்கப் படுகின்றன.

நான் என்னுடைய மொபைல் நம்பரை தவிர யாருடைய நம்பரையும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டேன். எத்தனை நம்பர் மாத்தினாலும் கடைசி நம்பர் மட்டுமே நினைவில் இருக்கும். ஒவ்வொரு முறையும் நம்பர் மாற்றும் போதும், 

"6969696969 இனி என் நம்பர்"

என்று Uninor விளம்பரத்தில் வருவது போல நான் பெருமையாக பிறரிடம் சொல்லி கொள்வேன்.

தினசரியிலோ, புத்தகத்திலோ ஒரு வார்த்தையை தேட வேண்டிய சந்தர்பம் வரும் போது, Ctrl + F -இன் ஞாபகம் வந்து தொலைக்கிறது.

எங்கள் ரூமில் நான் நுழைந்தாலே டிவியில் சன், கே, விஜய், அல்லது ஒரு இசை சேனலோ, காமெடி சேனலோ தான் ஓடி கொண்டிருக்கும். ஒரு செய்தி சேனலுக்கோ, டிஸ்கவரி சேனலுக்கோ தப்பி தவறி கூட போக மாட்டார்கள். அப்படியே சேனல் தவறி சென்று விட்டாலும், "சாமி தெரியாம பண்ணிபுட்டோம். எங்கள மன்னிச்சுடு" என்று உடனே கடவுளிடம் மன்னிப்பு கேட்டு தோப்பு கரணம் போட்டு விடுவார்கள்.

ஒரு மணிநேரம் செல்போன் சார்ஜ் இல்லை என்றால் நம் உடலில் ரத்தம் ஓடுவது நின்று பிணமாகி விட்டது போல ஒரு உணர்வு வந்து விடுகிறது.

செயற்கை கருவிகள் நம் உடலில் தங்கத்தை போன்று ஒரு அங்கமாக மாறி விட்டது. நம் உடலிலே நட்டு, போல்டு, செயற்கை இதயம் எல்லாம் வைக்க ஆரம்பித்து வெகு ஆண்டுகள் ஆகிவிட்டது.  A-,AB+ போன்ற அரிய ரத்த வகை ஆபரேசன்கள் செய்வதற்கு பயன்படுத்த செயற்கை ரத்தத்தையும் கண்டுபிடித்து விட்டார்களாம்.

இன்னும் சில வருடங்களில் உங்கள் மூளையை கழட்டி விட்டு இன்டெல் Processor வைத்து தேவையான அனைத்து சாப்ட்வேர்களையும் load செய்து விடுவார்கள். சயின்டிஸ்டுகள், சிந்திக்கும் ரோபட்களை கண்டுபிடிப்பதற்கு பதிலாக நம்மையே ரோபட்டாக மாற்றி விடவும் வாய்ப்புண்டு. ஒவ்வொரு முறை processor அல்லது சாப்ட்வேர் அப்கிரேட் (Upgrade) செய்யும் பொழுது எந்திரன் சிட்டி ரஜினி போல, ஐ ஆம் நாராயணசாமி  Upgraded வெர்சன் 2.0 என்று சொல்லி கொள்ளலாம்.

மூன்று வருடங்கள் வேளச்சேரியின் சகதியில் படுத்து உருண்டு விட்டு (வசித்துவிட்டு), பரங்கிமலை பகுதியில் என் நண்பன் ரூமுக்கு மாறியுள்ளேன். வேளச்சேரியை விட்டு வரும் போது பெரும் நிம்மதி ஏற்படுகிறது. சுற்றி சுற்றி ஏரிகள் அதிகம் இருந்தாலும் ரொம்பவும் வறட்சியான ஏரியா. ஏரி இருப்பதால் வேளச்சேரி என்று பெயர் வந்ததா? என்று தெரியவில்லை.

மழைகாலத்தில் மட்டும் வேளச்சேரி சாக்கடையால் நிரம்பி வழியும். பொதுவாக வெள்ளப் பகுதிகளை பெரிய பூட்ஸ் போட்டு கொண்டு பார்வை இட  வரும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வேளச்சேரியில் மட்டும் தங்கள் பொற்பாதங்களை வைப்பதில்லை.

நாம் பேருந்தில் செல்லும் போது சாக்கடையோரம் வசிக்கும் குடிசை வாழ் மக்களை பார்த்து பரிதாப்பட்டு விட்டு கடந்து செல்லுவோம். ஆனால் மழைக்காலம் வந்து விட்டால், நம்மை பார்த்து நாமே பரிதாப்பட்டுக் கொள்ள வேண்டும்.

மடிப்பாக்கம் பக்கம் வீடு பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் மடிப்பாக்கம் ரோட்டின் நடுவில் நின்று வாலை நீட்டி, பைக்கில் செல்லும் நம்மிடம்  லிப்ட் கேட்கும் மாடுகளை நினைத்ததும் அந்த எண்ணம் கைவிடப் பட்டது. மடிப்பாக்கத்திற்கு மாடுப்பாக்கம் என்றே பெயர் வைத்திருக்கலாம். ஜெயலலிதாவிடம் சொன்னால் ஒரு Flow வில் அதையும் மாற்றி இருப்பார்.

பரங்கி மலையில் உள்ள சர்ச்சில் இருந்தோ, மசூதியில் இருந்தோ எதோ ஒரு பாட்டு பாடிக் கொண்டிருக்கும். நான் கூடிய சீக்கிரம் மதம் மாற வாய்ப்புண்டு.

ஹாலிவுட் படங்களில் மூச்சு விடாமல் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்க்கையில் நம் காதில் புகை வரும். அதேபோல் புது ரூமில் உள்ள ஒரு நண்பன் தமிழை மூச்சு விடாமல் பேசுகிறான். நான்கைந்து தடவை திரும்ப திரும்ப கேட்க வேண்டி உள்ளது. தமிழ் மொழி மற்றும் அதன் காலாச்சாரம் மீது காதல் கொண்டு தமிழை கற்க விரும்பும் வெளிநாட்டு பெண் எவளாவது இவன் பேசுவதை கேட்டால், Why This Kolaveri? என்று கேட்டுவிட்டு தன் நாட்டிற்கு அடுத்த பிளைட் பிடித்து விடுவாள்.

தென் இந்தியாவின் புகழ் மிக்க திரையரங்கான பரங்கிமலை ஜோதியை இன்னும் சென்று பார்வையிடவில்லை. பிட்டுக்கு பெயர்போன இத்திரையரங்கில், பிட்டு துணி அணிந்து நடிப்பதற்கு பெயர்போன ஷகிலா ஆண்டியின் படங்கள் போடுவது எப்போதோ நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது ஆபாசம் இல்லாத (??) சுத்தமான தமிழ் படங்கள் மட்டுமே திரையிடப் படுகின்றன.

அதனால் தற்போது ஐயப்ப சாமி பக்தர்கள் சபரி மலை ஜோதியை கண்டு பக்தியில் பரவசம் அடைவது போல, நான் இந்த பரங்கிமலை ஜோதிக்கு சென்று பரவசம் அடையமுடியாதது மிகப் பெரிய துரதிஷ்டம்.




மிழ் நாட்டின் அடுத்த முதல்வர்..
தமிழ்நாட்டின் ஜான்சி ராணி..
தமிழ்நாட்டின் விடிவெள்ளி..
தமிழ்நாட்டின் கவிமங்கை..
தமிழ்நாட்டின் தியாகச் செம்மல்

ஸ்ஸ்... மூச்சு வாங்குது.

திருமதி. கனிமொழி அவர்கள் திகாரில் களி தின்னதை மறக்கடிக்க சென்னை ஏர்போர்ட்டில் கொடுத்த வரவேற்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த வரவேற்ப்பை திகாரிலிருந்து டெல்லி ஏர்போர்ட் வரை ஏன் கொடுக்கவில்லை? ஆங்கில நியூஸ் சேனல்கள் கவர் ஸ்டோரி போட்டு அலங்கரித்து விடுவார்கள்.

ஆனால் இதே வரவேற்ப்பை கனிமொழி டெல்லி செல்லும் போது கொடுத்திருந்தால், தமிழ்நாட்டிற்கு இன்னும் நிறைய செல்வங்களை அள்ளி வந்திருப்பார்.
 
கனிமொழி சென்னை திரும்பிய பிறகு, திமுக வின் பழைய ரத்தம் எல்லாம் எடுக்கப் பட்டு புது ரத்தம் பாய்ச்சப்பட்டதால் அதன் தலைவர்களும் உறுப்பினர்களும் தெம்பாக கட்சி வேலைகளை செய்கின்றதாக தகவல். வலையுலக தி.மு.க அனுதாபிகளும் சுறுசுறுப்பாக ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் போடுவதாக தெரிகிறது.


ற்போது ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் படு மொக்கையாக இருப்பது கடும் அயர்ச்சியை தருகிறது. போராளி சூப்பராக இருக்கிறது என்ற விமர்சனத்தை படித்து விட்டு போய் பார்த்தால் சன்டிவியின் காமெடி சீரியல் போல் படு அமெச்சூர் (amateur)  தனமாய் இருக்கிறது. இசையும் பாடலும் காதுக்குள் வண்டு புகுந்த பீலிங்கை ஏற்படுத்துகின்றன.

மந்திரப் புன்னகை கரு பழனியப்பனுக்கு அடுத்து சசிகுமார் தான் ரொம்ப புத்திசாலிதனமாய் வசனம் பேசுகிறார். இவரும் நாயகியும் சித்தப்பாவும் மகளும் போல இருப்பது படத்திற்கு பலம்.