Apr 30, 2012

லீலை - விமர்சனம்

போன வாரம் பார்த்த ஒரு கல் ஒரு கண்ணாடி சுத்தமாய் இம்ப்ரெஸ் செய்யவில்லை. ஆனால் சுத்தமாய் எதிர்பார்க்காமல் சென்ற இப்படம், எனக்கு ஒரு பெரிய சர்பிரைஸ்.

இந்த கதையின் ஒன் லைனரை சொல்லியிருந்தால், எந்த ஒரு தயாரிப்பாளர் மட்டும் அல்ல, நீங்களே என்னடா கதை இது? என்று சொல்லி அடித்து துரத்தி இருப்பீர்கள். ஆனால் அம்சமான திரைக்கதையும், கிளாமரான வசனங்களையும் வைத்து லீலை செய்திருக்கிறார் இயக்குனர் Andrew Louis. நிச்சயமாய் கொரியன் படத்திற்கு இணையான ரொமாண்டிக் காமெடி வகை.

சும்மாவா! இடுப்பை பார்த்ததால் பிரிந்த காதலை ட்விஸ்ட்டாக வைத்து படம் செய்து வெற்றி பெற்ற இயக்குனரிடம் வேலை செய்தவர் ஆயிற்றே! ஆம் லூயிஸ், எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராய் பணி புரிந்திருக்கிறார்.


நாயகி "கருணை மலர்". கல்லூரி படித்துக் கொண்டிருக்கையில், இவர் கருணையுடன் எச்சரித்தும், அவரது தோழிகள் ஒருவனை காதலித்து, அவனால் கழட்டி விடப்படுகிறார்கள்.

அந்த ஒருத்தன் தான், நாயகன் "கார்த்திக்". ஒரு handsome இளைஞன். நல்ல அழகான, அறிவான காதலியை தேடும் முயற்சியில், நாயகியின் தோழிகள் இருவரையும் பெயில் மார்க் போட்டு ரிஜெக்ட் செய்ய, அதனால் நாயகிக்கும் இவருக்கும் பிரச்சினை வர, முகம் தெரியாமலே போனிலியே திட்டி கொண்டு சண்டை போட்டு கொள்கிறார்கள். 

சில வருடத்திற்கு பின், நாயகி HCL சாப்ட்வேர் கம்பெனியில் HR டிபார்ட்மெண்டில் வேலைக்கு சேர, கார்த்திக் அதே கம்பெனியில் Developer ஆக இருக்கிறார். கம்பெனியில் ஒருமுறை கார்த்திக் செய்யும் போன், தவறுதலாய் மலருக்கு போய் விட, இங்கும் போனிலியே அவர்கள் விட்ட சண்டை தொடருகிறது. 

ஒருமுறை கார்த்திக் மலரை நேரில் பார்க்க, "கருணை மலர் என்ற மொக்கை பெயருடைய நாயகியும், மொக்கை பிகராய் தான் இருப்பாள்" என்று எண்ணி வந்த அவரது நினைப்பில் மண் விழ, வேறென்ன? உடனே அவருக்கு "மலர்" மேல் "உண்மையான" லவ் வருகிறது. கருணை மலர் என்ற பெயரும் இப்போது அவருக்கு அழகானதாகவே தோன்றுகிறது. பின், கார்த்திக் என்ற பெயரை மறைத்து, சுந்தர் என்ற பெயரில் நாயகியை காதலிக்கிறார். 

நாயகிக்கு சுந்தரின் உண்மையான பெயர் தெரிந்ததா? அவரது உண்மையான காதல் புரிந்ததா? மிஸ் பண்ணாமல் தியேட்டருக்கு போய் பாருங்கப்பா!



நாயகன் ஷிவ் பண்டிட். உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏர்டெல் விளம்பரத்தில் நடித்தவர்.
இந்த கேரட்டரில் நன்கு பொருந்துகிறார். பெண்களுக்கு அதிகம் பிடிக்கலாம்.




நாயகி மானசி பரேக். இவரையும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். முக்கியமாய் பெண்களுக்கு. இவர் stayfree விளம்பரத்தில் நடித்தவர். மேலும் ஒரு சிங்கர். ரியாலிட்டி ஷோவில் பட்டம் வென்றவர். லேசாய் த்ரிஷா முகஜாடை இருந்தாலும், முதல் படத்திலேயே த்ரிஷாவை விட எக்கசக்க பெர்பார்மன்ஸ். ஒவ்வொருமுறையும் நாயகனிடம் போனில் பேசி சண்டை போடும் போதெல்லாம், ரிசீவரை இரண்டு கையிலும் மாற்றி மாற்றி பேசுவது அழகு. I love her.

சந்தானம் நன்கு சிரிக்க வைக்கிறார். He is also a software engineer. கேட்கவா வேணும்?
நடுநடுவில் இந்திய சினிமாவின் சம்பிராதாயமான புல்வெளியில், கோவில்களில் ஆடும் பாடல்கள், இதெல்லாம் தவிர்த்திருக்கலாம். "ஜில்லென்று ஒரு கலவரம்" பாடல் கொள்ளை கொள்கிறது. ரிங்டோன் ஆக செட் செய்யலாம்.

இயக்குனரின் முதல் படம் நன்றாகவே செய்திருக்கிறார். ரொம்ப நீட்டான லவ் ஸ்டோரி. சின்ன சின்ன, அழகான, சுவாரஸ்யமான் ட்விஸ்ட்கள். 

"என்ன பொறுத்த வரையிலும் பசங்க ஒரு விசயத்தில மட்டும் ஒரே மாதிரி. கண்ணுக்கு அழகா தெரியிற பொண்ணுங்ககிட்ட அவங்கனால ஒரு பிரெண்டா மட்டும் பழக முடியாது. ஒன்னு லவ் பண்ணனும்ன்னு நினைப்பாங்க. இல்ல, கை வைக்கணும்ன்னு நினைப்பாங்க" என்பது போல படம் நெடுகிலும் ரசிக்கக்கூடிய நச் வசனங்கள் மற்றும் நகைச்சுவை.

படம் ஒருமுறை சூப்பராய் பார்க்கலாம். ஒரு கல் ஒரு கண்ணாடியைவிட ரொம்பவே பெட்டர். இன்னும் நன்றாக விளம்பர படுத்தினால், சூப்பர் ஹிட்டாகலாம்.




இதற்கு மேல் எழுத தோணவில்லை. தூக்கம் வருகிறது. மூன்று மணிநேரம் இந்த கோடை வெயிலின் கொடுமையில் சந்தோசமாய் ஏசியில் கரண்ட் கட் பிரச்சினை இல்லாமலும், சிரித்துக் கொண்டும் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்.

இயக்குனரின் பேட்டி:     
 





Apr 25, 2012

ஆன்டி வைரஸ் - ஆபாயில் (18+)


னி நான் மொக்கை பதிவுகளை விடுத்து, இந்த சமூகத்திற்கு பயனுள்ள வகையில் சீரியஸாக எழுதலாம் என்று இருக்கிறேன்.

ப்ளீஸ்!! சிரிக்காதிங்க.



சரி, நான் சீரியஸாக இதுவரை எழுதியதில்லை என்றாலும், அந்த அளவுக்கு அசிங்கமாகவும், அசைவமாகவும் எழுதவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அவ்வபோது சில அதிரடி மச்சான்கள் "ஆன்டியை மடக்குவது எப்படி?" என்பது மாதிரியான ஏடாகூட தலைப்புகளில் கூகுளில் தேடி, நம்ம சைட்டுக்கு விசிட் அடிக்கிறார்கள். நம் போஸ்டில் எங்கேயாவது "ஆன்டி" என்று ஒரு வார்த்தை மேட்ச் ஆனால் கூட, கூகிள் நம்ம சைட்டை தேடல் வரிசையில் காண்பித்து விடுகிறது. நம்ம சைட்டோ, முட்டையை(ஆபாயில்) மட்டுமே சேர்த்து சாப்பிடும் சைவம். 

பாவம்! ஏமாற்றத்தில் கடுப்பாகி, ப்ரௌசரையே மூடி இருப்பான். எனக்கே இப்படி என்றால், கலீஜாக எழுதுபவர்களுக்கு எக்கச்சக்க ஹிட்டு வருமென்று நினைக்கிறேன். என்னுடைய இந்த போஸ்டும் சிவாஜியின் "கர்ணன்" பட அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று நினைக்கிறேன். அதற்கு காரணம் கடைசியாக வரும் ஒரு 'A' மாதிரியான ஜோக்கும் தான்.

 

.blogspot.com -லிருந்து .com -க்கு மாறி விட்டேன். இனி www.iamstranger.com தான் நம்ம சைட். நான் எழுதுவதால் ஐம்பது பைசா கூட கிடைப்பதில்லை. இந்த ஊரில் எழுத்தாளனுக்கு மதிப்பே இல்லை. எங்கு போனாலும், எது செய்தாலும் சொந்த காசையே செலவழிக்க வேண்டியுள்ளது. கேரளாவில் தான் என் எழுத்தை அதிகம் மதிக்கிறார்கள். என்னை கொண்டாடுகிறார்கள். கேரளா பெண்ணை ஒருத்தி திருமணம் செய்து அங்கேயே குடிபெயர போகிறேன். தன் சொந்த காசை செலவு செய்து, இந்த டொமைன் வாங்கி தந்த என் வாசக நண்பன் இ.வா. நடேஷ்குமாருக்கு நன்றிகள் பல.

.com -ற்கு மாற்றும் போது நாம் நினைத்த URL கிடைப்பதில்லை. ப்ளாக் URL, panty -யை போல சின்னதாகவும் பார்ப்பவர்களை Attract செய்வதாகவும் இருக்க வேண்டும். முக்கியமாய் தமிழில் இருக்கக் கூடாது. நினைவில் வைத்துக்கொள்ள, ல(la), ழ(zha) பிரச்சினைகள் வரும்.



ன் உயிரினும் மேலான தமிழ் பிளாகர்ஸ்களே! 
பிட்டு படம் பார்த்தாலும் அதை கண்ணியமாய் புட்டு லாஜிக் பார்த்து விமர்சிக்கும் சிங்கங்களே!
கில்மாவான தலைப்பு வைத்து சமூக விழிப்'புணர்ச்சி' உண்டாக்கும் சீர்திருத்த செம்மல்களே!

நடிகைகளின் செக்சியான இமேஜை உங்க பிளாக்கில் போடாதிங்க மக்களே. ஆபிசில் திறந்து படித்து ரொம்பவே அசிங்க பட வேண்டி இருக்கின்றது. அதிலும் ஒரு பெண் நம் மானிட்டரை பார்த்துவிட்டால், நம்மை "சிம்பு" ரேஞ்சுக்கு "கெட்டவனாக" பார்க்க ஆரம்பித்து விடுவாள். இந்த பதிவால் என்னுடைய பிளாகையே என்னால் கூட ஓபன் பண்ணி எத்தனை கமெண்ட்டு வந்திருக்கு என்று ஆபிசில் செக் பண்ண முடியாது என்பது தான் யதார்த்தம்.

இந்த பிளாக்கை படித்து விட்டு கேவலமாக திட்ட விரும்பினால், உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் மூலமாக அதை செய்தால் நலம். "லைக்" செய்ய வசதியாய் இருக்கும். ஜிமெயில் அக்கௌன்ட் மூலம் ஒவ்வொருவருக்கும் நன்றிகள் சொல்வதில் சோம்பேறித்தனம் தான்.



ப்போதெல்லாம் என்ன எழுதுவதே என்றே தெரியவில்லை. என்னிடம் இருக்கும் சரக்கு தீர்ந்தது போல இருக்கு. இந்த பதிவை முழுதும் படித்தாலே உங்களுக்கு புரியும். எனக்கு ஜெயமோகன், சாருவை போன்ற உலகத்தர இலக்கியவாதிகளை படிக்கவும் அறிவு இல்லை. சமூகத்தை கலாய்த்து எழுதுவதே பிழைப்பாய் மாறிவிட்டது. இந்த பிழைப்பால் யாராவது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

எழுத சரக்கு தீர்ந்து விட்டாலும், இப்போது சரக்கு அடிப்பது மட்டுமே எனக்கு ஆறுதல். சரக்கு அடித்த பின் நிறைய சித்தாந்தங்கள் தோன்றும். ஆனால் சரக்கு அடித்த பின் எழுத மாட்டேன். சரக்கு அடிச்சுட்டு கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை பார்த்தால், 3D கண்ணாடி போடாமல் 3D படம் பார்ப்பது போல இருக்கும்.

நான் வழக்கமாய் தமிழ் புத்தாண்டில் தான் சபதம் போடுவேன். இந்த புத்தாண்டுக்கு, "இனி டாஸ்மாக்கில் சரக்கை வாங்கி குடிப்பதில்லை" என்று தெளிவாக ஒரு சபதம் போட்டுள்ளேன். தமிழ் புத்தாண்டு என்றைக்கு என்பதில் ஆட்சியாளர்களுக்கு பிரச்சினை இருந்தாலும், சராசரி தமிழனுக்கு அது சப்ப மேட்டர். அவனுக்கு தேவை அன்னிக்கு லீவு, ஒரு எழவு புது ரிலீசு படம், ஒரு பாட்டில் சரக்கு. 


 


இந்த நிதியாண்டில் டாஸ்மாக் துறைக்கு அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்று தெரியவில்லை. விலைக்கு ஏற்ற தரம் இருப்பதில்லை. தரத்திற்கு ஏற்ற விலையும் இருப்பதில்லை. ISI மாதிரி சான்றிதழ் ஒன்று கொடுத்தால் தேவலை. அங்கே கொடுக்கின்ற சரக்கு எல்லாம் மட்டமாக இருக்கிறது. கூலிங் சுத்தமாக இல்லை. பாதி பாட்டில் யூரின் நிரப்பி, "அண்ணே புல் பெப்சி"னே என்று சொல்லி விற்றாலும், அங்கே தான் வாங்க வேண்டிய நிலைமை. 



இந்த அநியாயத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் நாக்கை மடித்து கேள்வி கேட்க, கிடைத்த நமக்கான ஒரு தலைவர் தான், கருப்பு எம்.ஜி.யார். சென்னையில் அங்காங்கே தே.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தலை வைத்ததற்கு பதில், நன்கு கூலிங்காக பீர் பந்தல் மலிவு விலையில் வைத்தால், அடுத்த இடை தேர்தலில் குடிமகன்களின் ஓட்டுகளை பெற்று டெபாசிட் இழக்காமல் தப்பிக்கலாம்.

முப்பது ரூபாய் போட்டு மினரல் வாட்டர் வாங்கி குடிக்கும் இந்த ஊரில், அந்த மண் பானையை ஓபன் பண்ணி யார் குடிக்க போகிறார்கள்? கற்களை நிரப்பி காக்காய்கள் குடித்தால் தான் உண்டு.

இந்த போஸ்ட்டுக்கு கமெண்டு யாரும் போட வேண்டாம். அதை வச்சு ஒரு ஊறுகாய் பாக்கெட்டு கூட வாங்க முடியாது. சென்னையில் சுமாரான விலையில் சரக்கு எந்த பாரில் வாங்கலாம் என்று சொன்னால், அந்த கர்த்தரின் அருள் உங்களுக்கு கிட்டும்.

சில பேரை பார்த்தால் அவனுடைய பேருக்கும் அவனுக்கும் சம்பந்தமே இருக்காது. பார்க்க கொக்கி குமாரு மாதிரி இருப்பான். ஆனால் அவன் பெயர் டேனியல் துரை என்று இருக்கும். ஆபிஸ் மீட்டிங்கில் வெள்ளைக்காரன் பேசும் போது ஒன்னும் புரியாமல், நயன்தாரா போல "pardon", "pardon" என்று திரும்ப திரும்ப கேட்டு, வெள்ளைக்காரனை இம்சை செய்வான்.


னக்கு தினமும் மதியம் தான் ஆபிஸ் ஆரம்பம். அன்று நான் வழக்கத்திற்கு மாறாக படு ஸ்மார்ட்டாக டிரஸ் செய்து கொண்டு கிளம்பினேன். சென்னையில் அன்று தான் பூகம்பம் வந்தது. நான் நன்கு டிரஸ் செய்து கொண்டு போனதற்கும், பூகம்பத்திற்கும், எந்த ஒரு பட்டர் பிளை எபெக்ட்டும் காரணம் இல்லையென்று நினைக்கிறேன். 

முதல் முறை அதிரும்போது நான் பைக்கில் வந்து கொண்டிருந்தேன். வழியில் நிறைய பள்ளங்கள் இருந்ததால், அப்போது எனக்கு எந்த அதிர்வும் தெரியவில்லை. சென்னையில் இன்னும் பல ரோடுகள் சரிசெய்ய படாமலே இருக்கின்றன. வேளச்சேரி தண்டீஸ்வரம் வழியாக தரமணி சாலையில் இணையும் ரோடு படு மோசம். இன்னும் மழைக்காலம் முடியவில்லையா? அடிக்கிற வெயிலில் பைக் சீட் சுட்டு, சூ** பழுத்து மருதாணி வைத்தது போல சிவந்து விடுகிறது. மேயர் இந்த பதிவை மேய்ந்து விட்டு நடவடிக்கை எடுப்பாரா? பார்ப்போம்!



இரண்டாம் முறை பூமி அதிரும் போது நான் ஆபிசில் தான் இருந்தேன். அப்போது மும்முரமாய் வேலை செய்து கொண்டிருந்தேன் என்றால் நம்பியே ஆக வேண்டும். அன்றைக்கு முழுவதும் "பில்டிங் ஆடுது" "பில்டிங் ஆடுது" என்று அனைவரும் "அலர்ட்" ஆறுமுகமாய் அடிக்கடி எழுந்து வெளியே ஓடிக் கொண்டிருந்தார்கள். மெதுவாய் பின்னே சென்று லேசாக அவர்கள் உட்கார்ந்திருக்கும் சீட்டை ஆட்டினாலே போதும், திரும்பி பார்க்காமல் பதறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். நானும் வேகமாக கீழே இறங்கி ஓடினேன். உயிருக்கு பயந்து அல்ல. பில்டிங் ஆடாமல் கையால் தாங்கி பிடிக்க. 

பூகம்பத்தை தான் உணர முடியவில்லை, சுனாமியிலாவது ஸ்விம்மிங் போடலாம் என்று மெரினாவுக்கு சென்றேன். அதுவும் ஏமாற்றிவிட்டது. பீடி பாடி தனுசும் ஸ்விம்மிங் சூட்டில் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

ஜாக்கெட் தத்துவம்:

ஜாக்கெட்டின் முதல் கொக்கியை
தவறாய் போட்டால்
பின் வரும் எல்லா கொக்கியும்
தவறாகவே இருக்கும்.

Great lines said by,

முக்கு கடை டெய்லர் "முருகன்" 


பாவாடை ஜோக்:

பாவாடையை தூக்கி 
அவள் அதை 
அவனுக்கு காட்டினாள்.
அவன் அதை பார்த்து மிரண்டு போனான்.

--
--
--
--
--
--
ஒரு பாவாடையின் விலை. Rs. 2599.90




Mar 13, 2012

டாஸ்மாக் உங்களை அன்புடன் வரவேற்கிறது - ஆபாயில்





தமிழ்நாட்டில் அவசரத்திற்கு ஜிப்பை கழட்டி ஒதுங்க, ஒரு பொது கழிப்பிடம் கண்டுபிடிப்பது சிரமம். ஆனால் தெருவுக்கு நான்கு டாஸ்மாக்குகள் உங்களை கை கூப்பி வரவேற்கும். அதன் வாசலில் என்கவுண்டரில் சுட்டு போட்டது போல், எப்போதும் நான்கைந்து பேர் மப்பில் சுயநினைவு இழந்து, உடல்கள் மட்டும் அங்கே கிடக்க, வேறு கிரகத்திற்குள் நுழைந்திருப்பார்கள். அதை கண்டு கொள்ளாமல், பெரிய கூட்டம் ஒன்று கண்ணும் கருத்துமாய் கம்பி கூண்டுக்குள்ளே கையை விட்டுக் கொண்டு, உயிர் போகும் அவசர கதியில் அலைமோதி கொண்டிருக்கும். 

தினமும் வங்கியை விட, அதிக பணம் இங்கே தான் கலெக்சன் ஆகிறது. கொள்ளை அடிப்பவர்கள் அடுத்த முறை டாஸ்மாக்குல கையை வைங்கப்பா! நம்ம கோவிந்து கூட, என்கவுண்டருக்கு  எதிராக பொங்கி ஒரு பதிவு எழுதி நிறைய கமெண்ட்டுகளை கல்லா கட்டிவிட்டான். தமிழ்நாடு காவல் துறை அதை பார்த்து பயந்து, அதற்கு வருத்தம் தெரிவித்து, அது போல் இனி ஏதும் நடக்காது என்று கமென்ட் போட்டுள்ளதை கோவிந்துக்கு கிடைத்த வெற்றியாக கருதலாம். அதனால் மறுபடியும் இன்னொரு என்கவுண்டர் கண்டிப்பாக நடக்காது என்று கோவிந்து உறுதிபட கூறுகிறான்.

தமிழ்நாட்டு பட்ஜெட்டின் வற்றாத நதி மூலமே டாஸ்மாக் தான். "இப்போது உங்கள் வசதிக்காக உங்கள் தெருவில், எங்களது புதிய கிளை ஆரம்பம்" என்று அரசு விளம்பர போர்டு கூட வைக்கலாம்.

டாஸ்மாக்கில் நுழைந்து ஒரு சரக்கு வாங்குவது அவ்வளவு அருவருப்பான விஷயம். அந்த கூட்டத்திற்குள் புகுந்து சரக்கு வாங்கி விட்டு வெளியே வரும் போது, நாம் பன்றியாய் மாறி விட்ட உணர்வு வந்து விடுகிறது. பப்ளிக் டாய்லெட் போல ரொம்ப கலீஜாக இருப்பதால், சரக்கை வாங்கி ஒரு பெக் உள்ளே விட்டால்தான் கொஞ்ச நேரமாவது அங்கு நிற்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை. அந்த ஒரு பெக்கை, கவர்மெண்ட் இலவசமாய் கொடுத்தால் நலம்.

எக்ஸ்ட்ரா பெக்: 
கூகுளில் டாஸ்மாக் என்று கூகுளில் தேடினால், முதல் பக்கத்தில் விஜயகாந்த் போட்டோ வருகிறது. :-D  





புதிய டெக்னாலஜிகள் கடவுளை போன்றது. நாம் வேண்டுவது, நமக்கு வேண்டாதது என அனைத்தையும் தரும். "God is watching you" என்று சொன்னால் கூட பயம் வருவதில்லை. "Google is watching you" என்றால் பயத்தில் டவுசர் நனைந்து விடுகிறது. ஐ.டி யில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, இன்டர்நெட் உபயோகிக்கும் அனைவருக்கும் கூகுள் தான் காட், காட்பாதர் எல்லாமே. சிறுவயதில் தப்பு செய்யும் பொழுது கடவுள் பார்த்துக் கொண்டிருப்பாரே என்று பயந்து கொண்டே தப்பு செய்வோம். கடவுள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறாரோ இல்லையோ, கூகிள் நம்மை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்னென்ன படிக்கிறீர்கள்?, யாருடன் என்னென்ன பேசினீர்கள்? என அனைத்தையும் கண்காணிக்கிறது.

இருட்டில் உட்கார்ந்து கொண்டு நீங்கள் செய்யும் தப்புகளை, சோசியல் நெட்வொர்க்குகள் உலகத்துக்கே வெளிச்சம் போட்டு படம் காட்டுகின்றன. Kumar watched "Poonam pandey's topless video" 12 seconds ago. என்று பேஸ்புக் உடனுக்குடன் உங்கள் நண்பர்களுக்கு மைக் வைத்து அறிவித்து விடும். அப்படி நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ, ஒரு செக்சி விடியோவை பார்த்து, அது உங்கள் பேஸ்புக் Wall -இல் உங்களுக்கே தெரியாமல் போஸ்ட் ஆகி விட்டால், ஒரு உண்மையான நண்பன் அதை பார்த்தால் உங்களுக்கு கால் செய்து "அலர்ட்" செய்வான்.

தன் திறமையால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கிற நபர்களுக்கு தான் "பாரத ரத்னா" விருது வழங்க படுகிறது என்றால், அதை சச்சினை விட, பூனம் பாண்டேவுக்கே கொடுப்பது பொருத்தமாய் இருக்கும். இவர் தான் முழு இந்தியாவையும் திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறார்.

கர்நாடக சட்ட மன்றத்தில் உட்கார்ந்து அமைச்சர்கள் பிட்டு வீடியோ பார்த்தது, எல்லோருக்கும் கோபத்தை வரவழைப்பதை விட, "அது என்ன வீடியோ?" என்ற ஆவலையே அதிக படுத்தியது. கூகிள் தேடலில் அந்நேரம் அதுவே ஹாட் டாப்பிக்காக இருந்திருக்கும். 

துப்பாக்கியை காட்டி மிரட்டினால் கூட பயப்படாதவர்கள், Hidden கேமராவை காட்டி Hands Up என்று சொன்னால், அச்சத்தில் உடனே கைகளை தூக்கி விடுவார்கள். இரண்டுமே shoot செய்யும் என்றாலும், தமிழன் உயிரை விட மானமே பெரிது என்று நினைப்பவன்.


நெட் கபே, எ.டி.எம் ரூம், துணிக்கடை ட்ரையல் ரூம் என இந்த ஹிட்டன் கேமிராக்களின் பிரச்சினை அதிகம். அப்படிதான் ஒரு நாள் நம்ம கொக்கி குமாரு, ஒரு பெரிய ஷோ ரூமுக்கு பேன்ட் எடுக்க போனான். அன்னிக்கு பார்த்து அவன் ஜட்டி போடவில்லை. ஆனால் குமாரு அதை பற்றி கொஞ்சமும் கவலைபடாமல், ட்ரையல் ரூமில் பொறுமையாக போட்டு பார்த்து தான் வாங்கி வந்தான். அன்று மட்டும் யாராவது அங்கு ஹிட்டன் கேமிரா செட் பண்ணி வைத்திருந்தால், பார்த்தவனுக்கு அதை விட வேறு பெரிய தண்டனை கிடைத்திருக்க முடியும்?


"ஒரு கல், ஒரு கண்ணாடி" ஊத்தாமல் ஊத்திக் கொள்ளும் என்றே தோன்றுகிறது. தொடர்ந்து தியேட்டரில் போட்டு சாகடிக்கும் பழைய ட்ரைலரை விட, தற்போது பேஸ்புக்கில் உலவிக் கொண்டிருக்கும் புது ட்ரைலர், சன்டீவி சூப்பர் டென் காமெடியை விட மட்டமாய் இருக்கிறது. நமீதா நம்பர் 2 போல இருக்கும் ஹன்சிகாவிற்கு ஏன் இத்தனை ரசிகர்கள் என்று தெரியவில்லை. 

ஆதித்யா டீவி, சிரிப்பொலி டீவியில் திரும்ப திரும்ப வரும் வடிவேலு கவுண்டமணி காமெடியை பார்த்தால் எனக்கு பீபி எகிறி விடும். ஜெயா டிவியில் இரவு பத்து மணிக்கு பிறகு போடும் அந்த கால பாடல்களில் இருக்கும் காமெடி கூட அதில் இருக்காது. சுமார் ஒரு நிமிடம் ஹீரோயினின் முகத்தையே குளோசப்பில் காட்டுவார்கள். அவளும் புருவத்தை வளைத்து நெளித்து, உதட்டை பிதுக்கி சுழித்து, லேடி சிவாஜி கணேசன் போல நவரசத்தையும் தன் முகத்தில் ஒருங்கே கொண்டு வருவாள். அவர்களது முகபாவனை, நடனம் இவற்றை ஜாலியாய் பார்த்து படுத்து உருண்டு கொண்டே சிரிக்கலாம். 

தற்போதெல்லாம் சில நொடிகள் மட்டும் ஹீரோயின் முகத்தை காண்பித்து விட்டு, கீழே இறக்கி மார்பையும், தொப்புளையும், ஷங்கர் பட பாட்டு போல நான்கைந்து கேமிராவால் சுற்றி சுற்றி காண்பிக்கிறார்கள். "யாரடி நீ மோகினி" யில் வரும் "ஓ பேபி, ஓ பேபி" பாடலின் கடைசி ஒரு நிமிடத்திற்கு, தன் இடுப்பில் நவரசத்தையும் காட்டி தன் நடிப்பால் கவர்ந்த ரகஸியா இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை என்பது காலத்தின் கோலமின்றி வேறென்ன?

ஒரு பழைய சரக்கு ஜோக்:

ஒரு ஆசிரியர், தன் மாணவர்களுக்கு, சரக்கடிப்பதால் என்ன தீமை என்று ஒரு எக்ஸ்பெரிமென்ட் செய்து விளக்குவதற்காக, ஒரு கிளாஸ் தண்ணீர், ஒரு கிளாஸ் சரக்கு, ஒரு புழுவையும் எடுத்துக் கொண்டு,

"ஸ்டூடண்ட்ஸ், கவனமா பாருங்க" என்று சொல்லி அந்த புழுவை எடுத்து தண்ணீர் கிளாசில் போடுகிறார்.  அந்த புழு தண்ணியில் ஜாலியாக நெண்டியபடி இருக்க அதற்கு எதுவும் ஆகவில்லை.

அடுத்து அந்த புழுவை மீண்டும் எடுத்து, இப்போது சரக்கு கிளாசில் போடுகிறார். இப்போது அது எரிச்சலில் துடி துடித்து இறந்து இறைவனடி சேர்ந்து விடுகிறது. 

உடனே ஆசிரியர் "இதிலிருந்து நாம் என்ன கத்துகிட்டோம்?" என்று கேட்கிறார்.

எப்பவுமே கடைசி பெஞ்சுலையே உட்கார்ந்து கவனமாய் கிளாசை (வகுப்பை) கவனிக்கும் நம்ம கொக்கி குமாரு, கையை தூக்கி புத்திசாலிதனமாக பதில் சொன்னான்.

"சரக்கு அடிச்சா, நம்ம வயித்துல இருக்கிற புழு எல்லாம் செத்து போயிடும் சார்"

அதை கேட்டு படு டென்சனான ஆசிரியர், புழுவை தூக்கி எறிந்து விட்டு அந்த சரக்கை ஒரே கல்பில் அடித்து விட்டு மட்டை ஆகிறார்.


Feb 17, 2012

"பவர் கட்" நல்லது - ஆபாயில்


சுஜாதா சுகமில்லை

சுஜாதா இறந்து போனது கலையுலகிற்கு பேரிழப்பு என்றாலும் வளரும் தமிழ் இலக்கியவாதிகளுக்கு ஒரு விதத்தில் நல்லது தான்.

என்னுடைய எழுத்து சுஜாதாவின் எழுத்தை போல் உள்ளதாக என் Die Hard வாசகர்கள் கூறுகின்றனர். சுஜாதாவின் புத்தகங்களை நான் படித்ததில்லை. அவரும் என் எழுத்தை படிக்கவில்லை.

சுஜாதா பரலோகத்தில் "நிம்மதியாய்" இருக்கட்டும்.

என் எழுத்து சுஜாதாவை போல் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? சுஜாதா சிறுவயதில் பள்ளிக்கூடம் படிக்கையில் தன் கைப்பட எழுதிய கோடு போட்ட அறிவியல் நோட்டு கால ஓட்டத்தில் என்னிடம் சேர்ந்தது. அதை பார்த்து அவரை போலவே தொடர்ந்து எழுதி விடாமுயற்சி செய்து விஸ்வரூப வெற்றி கண்டுள்ளேன்.

இந்தியாவில் கல்யாணம் செய்து புள்ளைகளை பெற்று போடுவது போல், யார் பார்த்தாலும் எதோ ஒன்றை கிறுக்கி புத்தகம் போட்டு, புத்தக கண்காட்சியில் கடை விரிக்கிறார்கள்.

அது போல உங்களில் யாருக்காவது உங்களுடைய எழுத்தை புத்தகமாய் பார்க்க வேண்டும் என்ற அல்ப ஆசை இருந்தால்,  இந்த சைட்டுக்கு போய் உங்கள் பிளாக் அட்ரஸ்ஸை கொடுத்து, உங்க புத்தகத்தின் Soft Copy யை பார்த்து பரவசம் அடைந்து, அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம். அதிக பணம் செலவழித்தால் உங்க வீட்டுக்கே Hard Copy அனுப்பி வைப்பார்கள்.


தமிழ் நாடு ஒளிர்கிறது!




சென்னையை தவிர மற்ற ஊர்களில் மின்சார தட்டுபாடு எக்கச்சக்கமாய் அதிகரித்து விட்டது. சொந்தகாரங்க வீட்டுக்கோ, நண்பர்கள் வீட்டுக்கோ போகும் முன் கரண்ட் இருக்கா? என்று கால் செய்து கேட்டு விட்டு தான் செல்ல வேண்டியிருக்கிறது. நம் முன்னோர்கள் குடும்ப கட்டுப்பாடு பண்ணாமல் விளையாடிய வினையால், ஜனத்தொகை அதிகரித்து இப்போது மின்சார தட்டுபாடு உருவாகிவிட்டது.

இதனால் மக்கள் மிகவும் கஷ்டப் படுகிறார்கள். பெண்கள் சீரியல் பார்க்க முடிவதில்லை. அதனால் சும்மாவே இருக்கும் மாமியாரும் மருமகளும் சீரியலின் அடுத்த எபிசோட்டை வீட்டில் தொடரலாம். கரண்ட் கட், கணவர்களுக்கு நிறைய பாதிப்புகளை உண்டாக்கலாம். டைவர்ஸ், கொலை போன்றவை சாதாரணமாய் நடக்கலாம். அதனால் கரண்ட் போய் விட்டால் கணவர்கள் வெளியே சென்று விடுதல் நலம்.

கரண்ட் இல்லாமல் மாணவர்கள் எக்ஸாமுக்கு முன்தினம் கூட படிக்க முடிவதில்லை. அதனால் கண்டிப்பாக பெயில் ஆகி விடுவார்கள். மாணவிகள் தினமும் படிக்க முடியாததால், அவர்களும் பெயிலாகி விடுவார்கள்.




இந்த பிரச்சினை அதிகரித்தால் நிலைமை இன்னும் மோசம் ஆகும். குறிப்பாக, வருகின்ற கோடை மாதங்களில் கல்யாண சீசன் அதிகம் இருப்பதால், திருமணம் செய்யும் ஒவ்வொரு ஜோடியும் முதலிரவு கொண்டாட வேண்டும் என்றால் ஜெனரேட்டர் வாங்கி தான் ஓட்ட வேண்டும். எப்போது கரண்ட் கட் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. பூவெல்லாம் தூவி, புது பொண்டாட்டியை அருகில் உட்கார வைத்து, தட்டு தடுமாறி ஆரம்பித்த பின், பாதியில் திடீரென்று கரண்ட் போனால் எத்தனை கஷ்டமாய் இருக்கும்? எது எங்கிருக்கிறது என்று தெரியாமல் மறுபடியும் கஷ்டப் பட்டு,....யப்பா!! நினைத்து பார்க்கவே முடியவில்லை. மாமனாரிடம் இருந்து வாங்குகின்ற வரதட்சணையில் ஒரு பெரிய பவர் ஜெனரேட்டரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கல்யாணம் செய்யப் போகும் மாப்பிள்ளைகள் கவனம் தேவை.

ஒரு விதத்தில் இந்த பவர் கட் தற்போது ஜனத்தொகை உருவாவதை கட்டுப்படுத்தும் என்பதால், இந்த பவர் கட், பல கஷ்டத்தில் ஒரு நல்லது.

"அம்மாவுக்கு ஒட்டு போட்டால் இப்படிதான்" என்று வலையுலக திமுக கண்மணிகள் வேகமாக ரன்னிங் ரேஸில் ஓடி வர வேண்டாம்.

இந்த வருடம் தாத்தாவே வென்றிருந்தால், இதே நிலைமை தான் இருந்திருக்கும். கூடவே, ஒவ்வொரு மாதமும் என் வீட்டு வாடகையை தாத்தாவிடம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும். இந்நேரம் தமிழ்நாட்டில் எல்லோருடைய நிலம், பெரிய வீடு, "சின்ன வீடு" எல்லாத்தையும் அடித்து பிடுங்கியிருப்பார்கள். மீண்டும் மன்னர் ஆட்சி மலர்ந்திருக்கும். தாத்தா தமிழ் நாட்டை மூன்றாய் பிரித்து சோழநாட்டை ஸ்டாலினுக்கும், பாண்டிய நாட்டை அழகிரிக்கும், சேர நாட்டை கனிமொழிக்கும் கொடுத்து விட்டு, நண்பன் விஜய் போல All izz Well என்று சொல்லியிருப்பார்.


பவர் கட் special தத்துவம்:

விளக்கேற்ற ஒரு பெண்ணை
தேடி அலைவதை விட,
கிடைத்த பெண்ணை வைத்து
விளக்கை அணைப்பதே
சிறந்தது.

- ஜல புல ஜங் சுவாமிகள்.




Feb 9, 2012

உங்களில் யார் அடுத்த நயன்டாரா? - ஆபாயில்

நான் தற்போது அதிகமாக எழுதாதை கண்டித்து என் வீட்டு முன்னால் மா.மு கட்சி ஆர்பாட்டம் நடத்தியது. அதனால் நான் மாதம் ஒரு போஸ்ட் எழுதலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். தினம் ஒரு போஸ்ட் போடலைன்னா உன்னால் அரசியல் செய்ய முடியாது என்று என் அப்பா சொல்கிறார். என்ன எழவோ! எனக்கு அரசியல் வரவே மாட்டேங்குது. தினம் ஒரு அறிக்கை, அரசுக்கு ஒரு கண்டனம், ஒரு புரட்சி என்று எப்படித்தான் பண்றாங்களோ?



சென்னை, திருப்பூர் கண்காட்சியை மிஸ் செய்து விட்டேன். தினமும் புத்தக கண்காட்சிக்கு சென்று போண்டா சாப்பிட்டு விட்டு மகாபாரதம் போர் போல ஒன்றாம் நாள், இரண்டாம் நாள் என்று பதிவு போடலாம் என்று நினைத்தது நடக்கவில்லை. சாரு சாபம் விட்டிருப்பார் என்று நினைக்கிறன்.

சரி, "லவாசாவில் பல ராத்திரிகள்" என்று நான் ஒரு புத்தகம் எழுதினேன். யாராவது என்னுடைய புத்தகத்தை வாங்கினீர்களா? மொத்தம் 116 பாலோவர்ஸ் இருக்கிறீர்கள். ஒருத்தர் ஒரு புத்தகம் வாங்கியிருந்தால் கூட 116 புத்தகம் வியாபாரம் ஆகியிருக்கும். 116 பேரில் எத்தனை பேர் முழிச்சிருக்காங்கன்னு தெரியல. சைடில் ஒரு vote box வச்சு எல்லோரையும் ஒரு attendance போட சொல்லணும்.

நேற்றைக்கு புத்தக பதிப்பகத்தில் இருந்து போன் செய்து அச்சடித்த ஐநூறு புத்தகத்தில் இதுவரை ஐந்து புத்தகம் மட்டும் தான் சேல்ஸ் ஆனது என்று சொன்னார்கள். அதில் இரண்டு புத்தகத்தை என்னை Encourage பண்ண என் நண்பர்கள் வாங்கியது. மிச்சம் மூன்றை கிளுகிளுப்பான தலைப்பை பார்த்து வாங்கியிருப்பார்கள். இன்றைக்கு இன்னொரு பதிப்பகம் போன் செய்து இன்னும் விக்காமல் 200 புத்தகங்கள் இருக்கிறதென்று சொன்னது கூடுதல் செய்தி.

ரஜினி இல்லையென்றாலும் அட்லீஸ்ட் கொலைவெறி நாயகனை வைத்தாவது புத்தகத்தை ரிலீஸ் செய்திருக்கலாம். கொஞ்சமாவது விற்றிருக்கும். யாருக்காவது புத்தகம் வேண்டும் என்றால், no1writter@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள்.

அடுத்த பதிவில் என் புத்தகம் பற்றிய, முந்தைய பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாயின் விமர்சனத்தை எதிர்பார்க்கலாம்.


நான் எவ்வளவு தண்ணி அடிச்சாலும் ரொம்ப ஸ்டெடியாகவே இருப்பேன். வடிவேலு மாதிரி பஸ்ஸில் கூட கம்பியை பிடிக்காமல் தான் நின்று கொண்டு போவேன். தண்ணி அடித்து விட்டு இதுவரை ஆம்லேட் போட்டதே இல்லை என்பதை என் வரலாற்றை புரட்டி பார்த்தால் அறிய முடியும்.

ஆனால் ஒரு வெப்சைட் இருக்கிறது. அதை ஓபன் பண்ணி பார்த்தாலே போதும் அந்த நாற்றத்தில் எனக்கு வாந்தி குபீரென வந்து விடும். நல்லவேளை நான் ஆணாக இருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. இதுவே ஒரு பெண்ணாக இருந்திருந்தால், "யாருக்கிட்ட போய்டி ஏமாந்த?" என்று கேட்டு அம்மா அடித்து துவைத்திருப்பாள்.

அது என்ன சைட்? அந்த "மணம்" என்ன?
அது Blog படிப்பவர்களுக்கு மட்டுமே தெரியலாம். தெரியாதவங்களுக்கு, Sorry... 


சுமார் மசாலா படமான ஒரிஜினல் 3 Idiots -யை நெட்டில் டவுன்லோட் பண்ணி பார்த்தது தப்பு தான். பகிரங்கமாய் ஒப்பு கொள்கிறேன். ஆனால் அதையே சிலவருடம் கழித்து தமிழில் பார்க்க வைத்து தண்டனை கொடுப்பது எவ்விதத்தில் நியாயம் எம்பெருமானே?

ஆனால் இதை விட ஒரு பெரிய தண்டனை இருக்கிறது தெரியுமா? அது நரகத்தில் கூட கிடைக்காது. 

"இந்த படத்தை திருட்டு டி.வி.டி வாங்கி பார்ப்பதுதான்"

தெய்வம் நின்று சாகடிக்கும். ஆனால் விஜய் நடித்து சாகடிக்கறார். முகத்தில் Expression, Syntax என்பது துளியும் இல்லை. இன்னும் நடிப்பில் சங்கவியின் முதுகில் சோப் போடும் லெவலில் தான் இருக்கிறார்.

இதில் சங்கர் படம் என்றால் பிரமாண்டமாய் இருக்குமாம். அடுத்த படத்தில் பெரிய அண்டாவுக்கு பெயின்ட் அடித்து பிரமாண்டமாய் எடுக்க இருக்கிறார்களாம்.

விஜய் சார், சங்கர் சார் எங்கேயாவது ஓடிருங்க சார்.

இவ்வளவு நாளாக நடித்து டான்ஸ் மட்டுமே ஆட வரும் என்றால், அதற்கு "உங்களில் யார் அடுத்த பெரபுதேவா?" நிகழ்ச்சியில் போய் கலந்து கொள்ளலாம். நயன்டாராவால் கழட்டி விடப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் நடன பொயல் பெரபுதேவாவிற்கு எந்த சேனலாவது நல்லது செய்ய விரும்பினால் "உங்களில் யார் அடுத்த நயன்டாரா?" என்ற நிகழ்ச்சி நடத்தி வெற்றி பெறும் மங்கையை அவருடன் வாழ வைக்கலாம். நயனமும் நடனமும் சேராதது கலையுலகின் மிகப் பெரிய இழப்பு.


காலை மற்றும் மாலை வேளைகளில் சென்னையின் சாலை ஓரங்களில் நடந்து செல்வது அசாதாரண காரியம். அதிலும் பெண்கள் தங்கள் மேனி கறுக்காமல் இருக்க ஒரு கையில் குடையையும், இன்னொரு கையில் உயிரையும் பிடித்து கொண்டு செல்ல வேண்டும்.

வாகனங்கள் செல்லும் திசையில் கையை வீசிக் கொண்டு ஹாயாக நடந்து சென்றால் உங்கள் வலது தோள்பட்டையை ஆபரேசன் செய்யாமல் அகற்றிவிடுவார்கள். இதிலிருந்து தப்பிக்க இரண்டு வழிகள் இருக்கிறது.

ஒன்று, வாகனங்கள் வரும் திசைக்கு எதிர் திசையில் நடப்பதுதான். இரண்டாவது, சைடு mirror தலையில் செட் பண்ணி கொள்வது.

பிளாட்பாரத்தில் ஏறி நடந்து சென்றாலும் பைக்கில் பின்னாலே வந்து பின்புறத்தில் இடித்து படுக்க வைத்து, உங்கள் பின்புறத்தை வேகத்தடையாக மாற்றி விடுவார்கள் (படம் கீழே).



அதேபோல் சென்னையில் பைக் ஓட்டுவதும் சவாலான விஷயம். 70 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது ரோட்டின் குறுக்கே ஸ்டைலாக Cat Walk போவார்கள். உங்களுக்கு நேரம் இருந்தால் நின்று பொறுமையாய் அந்த Cat Walk ஷோவை ரசித்து விட்டு செல்லலாம். இன்னும் சில பேர் Planet of the Aps படத்தில் பாலத்தில் இருந்து குதிக்கும் மனித குரங்குகள் போல திடீர் திடீரென ரோட்டின் நடுவே இருக்கும் டிவைடரில் ஏறி குதித்து நம்மை பயமுறுத்துவார்கள். நாமும் மனித குரங்குகள் தானே!

உங்களுக்கு முன்னாள் ஆட்டோ சென்று கொண்டிருந்தால் கவனம் தேவை. அவைகள் சாக்கடையில் இருந்து எழுந்து செல்லும் பன்றிகள் போல. பக்கவாட்டில் ஐந்து அடி distance விட்டு செல்ல வேண்டும். எந்த பக்கம் வேண்டுமானாலும் திடீரென திரும்பி நம்மை மண் சோறு சாப்பிட வைத்து விடுவார்கள்.

எனக்கு ஒரு சந்தேகம் ஆட்டோவுக்கு side indicator இருக்கா?