Nov 7, 2012

I Blog for World Peace - ஆபாயில்




னி தமிழ் படமே பார்க்க கூடாது என்று கடைபிடித்து வந்த Week end விரதத்தை பீட்சாவுக்காக சற்று தளர்த்தி விட்டு பார்த்தேன். இயக்குனரின் முதல் முயற்சியை பாராட்டலாம். சினிமா கலை இவருக்கு நன்கு கைவசப் படுகிறது. 

பேயோட்டுவதற்க்காக மலையாளத்தில் இருந்து வரவழைக்கப் பட்ட மந்திரவாதி நடிகை ரம்யா நம்பூதரி படத்தின் ஆரம்பத்தில் திகிலாய் பேசி ஹீரோவையும் நம்மையும் பயமுறுத்துகிறார். பீட்சாவை அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டு வளர்ந்ததை போல கொழுத்து  காணபடுகிறார் நம்பீசன்.

இதற்கு முன் தாண்டவம், மாற்றான் என யுனிவர்சல் வெற்றி படங்களை பார்த்து தூக்கமின்மை, மன உளைச்சல், மன பிராந்தி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படும் ரசிகர்களின் உபத்திரம் தீர சரியான மருந்து "பீட்சா".






னந்த விகடனின் வலையோசை பகுதியில் எனது பிளாக்கை ஒளிபரப்ப சொல்லி, சாரி அறிமுகப் படுத்த வேண்டி எனது வலைப்பூ, ஊர், பெயர் தகவல்களை அனுப்பிவிட்டு சோறு தண்ணி இல்லாமல் உண்ணாவிரதம் இருந்து பயங்கர எதிர்பார்ப்போடு காத்திருந்தேன்.

நான் சிறுவயதில் ஆனந்த விகடனை படித்துதான் தமிழ் கற்று கொண்டேன். படிக்கும் போது பசிக்க ஆரம்பித்தால், ஆனந்த விகடனின் பக்கங்களை கிழித்து தான் சாப்பிடுவேன். எனது நண்பர்கள் எல்லாம் செக்ஸ் புத்தகத்தை பாட புத்தகத்தில் வைத்து படித்துக் கொண்டிருக்கும் போது நான் ஆ.வி-யை உள்ளே வைத்து படித்து  இன்பமுருவேன்.

என் படுக்கையில் கூட எப்போதும் நான்கைந்து ஆ.வி புத்தகங்கள் இருக்கும். அதை கட்டியணைத்தே உறங்குவேன். மனைவியை கூட அருகில் வைத்துக் கொண்டதில்லை. ஆ.வி-யுடனான என்னுடைய பந்தத்தை பற்றி "நானும் விகடனும்" என்ற தலைப்பில் பதிவெல்லாம் எழுதி Draft-இல் வைத்திருக்கிறேன். நான் பிரபலமானவுடன் Publish செய்யலாம் என்றிருக்கிறேன்.

இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் என்னிடம், "உங்களது மட்டமான blog-யை எங்களால் அறிமுகப் படுத்த முடியாது" என திட்டவட்டமாய் கூறி மெயில் அனுப்பிவிட்டார்கள்.

வாழ்க்கைக்கு பயன்படும் நடிகைகளின் கருத்தாழமிக்க  பேட்டிகள், படிப்பவருக்கு புரியாத கவிதைகள், paid விளம்பரங்கள் போன்ற தரமான படைப்புகளை மட்டுமே தாங்கள் பிரசுரிப்பார்களாம்.


வெகு நாள் கழித்து எனது போஸ்டை படிக்கும் உங்களுக்கு தீபாவளிக்கு பம்பர் பரிசு அடித்த மகிழ்ச்சி உண்டாகியிருக்கலாம். செத்தது சனியன் என நிம்மதியாய் இருந்தவர்கள், தற்கொலைக்கு கூட முயற்சி செய்திருக்கலாம்.

ஒரு மாதம் எழுதாமல் விட்டால் உலகம் எப்படியிருக்கிறது என்று பார்க்க விரும்பினேன். Neelam, Sandy ஆகிய புயல் மற்றும் சூறாவளிகளின் சீற்றத்தால் உலகம் அவதி பட்டுவிட்டது. இனி உலகம் அமைதியாய் இயங்க வேண்டியேனும், நான் தொடர்ந்து எழுத வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டுள்ளேன். இந்த வருடம் உலக அமைதிக்கான நோபல் பரிசை ஐரோப்பிய யூனியனுக்கு கொடுத்து விட்டார்கள். அடுத்த வருடமாவது எனக்கு கொடுப்பார்களா?...

Lets Write and See...

ஒரு மாதம் எங்கே சென்றீர்கள் என்று யாரும் என்னை கேட்க வில்லையென்றால் கூட தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது.

ஒபாமா ISD போட்டு கேட்டு கொண்டதால், அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய அமெரிக்கா சென்றிருந்தேன். தினம் சோறு போடும் அமெரிக்க தேசத்திற்காக, என்னாலான ஒரு சிறு உதவி. தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியாவிற்கு அவுட் சோர்சிங் அதிகமாய் பண்ணுவதாய் வாக்குறுதி அளித்தார் என்பதும் ஒரு காரணம்.

உண்மையில் நான் எழுதாமல் இருந்ததிற்கு வேலை பளு தான் காரணம். என்னுடைய வேலை, 50 Kg, 100 Kg எடையுள்ள கம்ப்யுட்டர்களையும், மெகா சைஸ் சர்வர்களையும் ஒரு இடத்தில இருந்து, இன்னொரு இடத்தில் கொண்டு போய் வைப்பது தான். இந்த வேலையை நான் திறம்பட செய்யும் பட்சத்தில், எடையை இறக்கி வைத்த இடத்திற்கே வந்து, Spot Excellency Award எல்லாம் கொடுப்பார்கள். இதனால் நான் எனது புஜங்களை வலுவாய் வைத்துக் கொள்ள தினமும் ஜிம்மிற்கு போய், அதிக எடைகளை போட்டு Chest, Wings, Squat, Bench Press, Wrist, Abs என வரிசையாய் எல்லா எக்ஸ்சைஸ்களையும் செய்ய வேண்டியதாய் உள்ளது. இப்போதே வயிற்றில் மூன்று pack கிரியேட் ஆகிவிட்டது. நான்காவது லேசாய் உப்பி கொண்டு தெரிகிறது. அடுத்த மாதம் டெலிவரி ஆகிவிடும். அதிக பளுவை தூக்கியதால் கை தசைகள் சுளுக்கி, அதனால் ஏற்பட்ட வலியால் கீ போர்டில் டைப் செய்ய முடியவில்லை.

இதையும் நீங்கள் நம்பவில்லையெனில்,

மறுபடியும் உண்மையை சொல்கிறேன் My lord.

போன மாதம் சப்போர்ட் ப்ராஜெக்டில் இருந்து Development project-ற்கு மாற்றி விட்டார்கள். இது எனது வளர்ச்சியை பிடிக்காத பிரபல பதிவர்களின் திட்டமிட்ட சதியாய் இருக்கலாம். தற்போது Code அடிப்பதற்கே நேரம் பற்றாமல் இருப்பதால், பிளாக் எழுதுவது என்பது Mission Impossible ஆகி விட்டது. யாராவது டாலர் கணக்கில் காசு கொடுத்தால் மட்டுமே, பிளாக் எழுத உத்தேசம்.



அதனால் தினந்தினம்  பிளாகிற்கு வந்து ஏமாந்து போகாதிர்கள். நான் மறுபடியும் எழுத ஆரம்பித்தால், கண்டிப்பாக ஹிந்து ஆங்கில நாளிதழின் Front Page-இல் முழு பக்க விளம்பரம் கொடுப்பேன். அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பிரிவு எனக்கே வருத்தமாய் தான் இருக்கிறது. என்னை விட அதிகமாய் வருத்தப் படும் உங்களுக்கு, நான் எப்படி ஆறுதல் சொல்வது?

"ட்விட்டரில் ஆவது எழுதுவீர்களா?" என இந்த இக்கட்டான தருணத்தில் கேட்டால்,

இப்பதான் ரெண்டு பேரு ஜாமின்ல வெளி வந்திருக்காங்க.

ஏன் அவசரம்??

ஆனால் இந்த கைது பிரச்சனையின் பின்னணியில் இருப்பது அமெரிக்கா தான் என விக்கி லீக்சின் ஓனர், ஜூலியன் அசாஞ்சே அவர்கள் BBC-க்கு அளித்த பேட்டியில் கருத்து கூறியுள்ளார்.

நம்மை காப்பாற்ற கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்.

அல்லேலுயா!!


Sep 25, 2012

Happy Accidents (2000) - எதிர்காலத்தில் இருந்து வந்த மனிதன்

இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் நம் தமிழ் படங்களின் தரம் மற்றும் தமிழ் உலக நடிகர்களின் நடிப்பை பற்றிய கேவலமான உணர்வு உண்டானால், அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.

நான் இந்த படத்தை பார்த்தது ஒரு வகையில் சந்தோசமான் விபத்து.



நாயகி ரூபி-க்கு ஆண்களுனுடன் ஆனா உறவு தொடர்ந்து தோல்வியையே தர, தற்செயலாய் பார்க்கில், சாம் என்பவனுடன் பழக்கம் ஏற்பட அவர்கள் இருவருக்குள்ளும் காதல் பிறக்கிறது.

ஆனால் சில நாட்களில் அவளுக்கு சாமின் செயல்கள் சந்தேகத்தை உண்டாக்க, அவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்குமோ என சந்தகப் பட்டு கேட்கும் பொழுது,

தான் 2470 ஆம் ஆண்டிலிருந்து டைம் ட்ராவல் செய்து நிகழ்காலத்திற்கு வந்ததாக கூறுகிறான்.

"ஏன் வந்தாய்? எதற்கு வந்தாய்?" என அவள் விடாமல் கேட்கும் கேள்விக்கெல்லாம், அவன் எதோ ஒரு பதிலை பாக்கெட்டில் வைத்திருக்க, அவனை நம்பாமலும் நம்பியும் அவள் பாடாய் படுகிறாள்.


அவன் மன நலம் பாதிக்க பட்டு இருப்பானோ என்று அவள் சந்தேகப் படுகிறாள்.

வரும் வெள்ளிகிழமை அவள் இறக்க போவதாயும் சொல்லுகிறான்.

அவன் சொல்வது உண்மையா? இல்லையா? என நீங்களே டவுன்லோடி பாருங்கள்.





படத்தை பார்க்க கீழே உள்ள டோர்ரன்ட்டை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

http://thepiratebay.se/torrent/4014023/


Sep 21, 2012

Dirty Rain



ரோட்டின் ஓரமாய்
ஒதுங்கி நின்று
லேசாய் தூக்கி பிடித்து
அடர் மஞ்சள் நிறத்தில்
சிறு-நீர் துளிகளை
சட சடவென்று தரையில்
பரவலாய் சிதறடித்துக் கொண்டிருந்தன
சோடியம் விளக்கு கம்பங்கள்,
நள்ளிரவு கன மழையில்.

******************************

ட்டென்று பிடித்த
கன மழையில்
ஒதுங்க இடமில்லாமல்
நனைந்து விட்டிருந்த
அவள் சுடிதாருக்குள்
அப்பட்டமாய் தெரிந்தன,
முழுக்க நனைந்து விட்ட அவள் முலைகள்
பிராவினால் போட்டிருந்த முக்காடு.

******************************

ஜோடியாய்
தொடர் மழையில்
தொப்பலாய் நனைந்து,
யாரும் பார்க்காத போது
கை தொட்டு உரசி
சல்லாபித்து கொண்டிருந்தன,
கொடியில் கிடந்த
அவள் ரவிக்கையும்
என் சட்டையும்.

*******************************

டு சாமம்
காட்டு வழி பாதையை
தனியே கடக்கையில்,
திடீரென வந்து என்னை பிடித்த
பேய் மழையில்
நடுங்கி போனேன்.
அடுத்த நாள் காலை எனக்கு
'பயங்கர' குளிர் ஜுரம்.


பின் குறிப்பு:

இந்த கவிதைகளை நான் எழுதியதிற்கு, நேற்றிரவு பெய்த மழையை தான் நீங்கள் திட்ட வேண்டும். Don't Blame me!!




Sep 5, 2012

Dictator (2012) - வயது வந்தோருக்கு மட்டும்




இது ஒரு சர்வாதிகாரியின் உண்மை வாழ்க்கை வரலாற்றை பற்றி சொல்லும் படம் இல்லை. மாறாக ஒரு சர்வாதிகாரியின் செயல்களை காமெடியாக்கி வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் Satire வகை படம். You'll die laughing!!

இவரின் உண்மை பெயர் Sacha Baren Cohen. இதற்கு முன் இவர் நடித்த Ali G Indahouse, Borat, Brüno என அனைத்தும் இதே வகை படங்களே! இவரது படங்களில் அமெரிககா, ஐரோப்பியா, அரபு நாடுகள், ஹாலிவுட் நடிகர், நடிகைகள், gays என அனைத்தையும் கலாய்த்திருப்பார். Vulgar காமெடி அதிகமாய் இருக்கும். இவரது படங்களை பெண்கள் பார்க்காமல் இருக்க அறிவுறுத்துகிறேன்.

இந்த படத்தை, ஹிட்லரை போன்ற எந்த சர்வதிகாரி தன்னை கட்டுபடுத்திக் கொண்டு பார்த்தாலும் அசால்ட்டாய் சிரிக்க வைத்து விடும். ஆனால் இது லிபியா அதிபர் கடாபியை மையப் படுத்தி எடுத்ததாக சொல்லப் படுகிறது.

அலாதீன் என்ற சர்வதிகாரி "Wadia" என்ற நாட்டை சர்வதிகார ஆட்சி செய்து வருகிறார். அவருடைய பாதுகாப்புக்கு 30 பேர் கொண்ட பெண்கள் படை இருக்கிறது. அவர்கள் எல்லோரும் Virgins.

அவர் என்னவெல்லாம் செய்கிறார்?
  • அவரே சொந்தமாய் ஒரு ஒலிம்பிக்ஸ் விளையாட்டை நடத்துகிறார்.
  • வாடியா-வின் மொழியில் உள்ள சுமார் 300 வார்த்தைகளை, "அலாதீன்" என்று மாற்றுகிறார். அவற்றுள் Positive மற்றும் Negative வார்த்தைகளும் அடக்கம்.
  • மற்ற நாடுகள் தன் நாட்டின் மீது போர் செய்து ஆயில் வளங்களை கொள்ளையடிக்காமல் இருக்க Nuclear Weapon-களை உருவாக்குகிறார்.
  • சயின்டிஸ்ட் முதல் சாதாரண ஆள் வரை எதற்கெடுத்தாலும் execute செய்கிறார். 
  • ஒரு அமெரிக்க பெண்ணை லவ் செய்கிறார்.
  • ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார்.
  • உலக நாடுகளுக்கு சர்வதிகாரத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கிறார்.
  • இருந்தாலும், கடைசியில் Democracy-யை கொண்டு வருகிறார்.

ஏன் இதெல்லாம் செய்கிறார்? என்ன நடந்தது?




டவுன்லோட் லிங்க்:

 http://www.ahashare.com/torrents-details.php?id=263579

இந்த படத்திற்கு கலக்கலாய் ஒரு விமர்சனம் எழுதலாம் என நினைத்தேன் ஆனால் ரிசல்ட்= மொக்கை 

whatever, நேற்று நான் Shirin Farhad என்ற ஹிந்தி ரொமாண்டிக் காமெடி படத்தை பார்க்க நேர்ந்தது.

பாதியிலேயே நான்...

உர்ர்ர்...
உர்ர்ர்....
உர்ர்ர்...


வெகு சுமாரான ஸ்கிரிப்ட்.... வெகு சுமாரான நடிப்பு... நான் பார்த்ததும் சுமாரான பிரிண்ட்.

Totally Unrelated to comedy: 


BTW, What is Democracy?

Democracy is a hairy armpit.


Aug 31, 2012

பெண் பொம்மையின் கற்பை காப்பாற்றிய நாயகன் - Non Sense Talking

99.99 மில்லியன் ஹிட்சுகளை என் மேல் வாரி இறைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அடாசு பதிவுலக பெருமக்களுக்கும், மண்வெட்டி வாசகர்களுக்கும் கோடானு கோடி தாங்க்ஸ்!

This Post is strictly for Matured. தயவு செய்து படித்து விட்டு என்னுடன் யாரும் சண்டைக்கு வராதீர்கள்.


நேற்று இரவு, ஷாங்காய் என்ற சீட்டுக்கட்டு விளையாட்டை நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சமயத்தில், தற்செயலாய் கே.டிவி. யின் இரவு கொண்டாட்டத்தில் ஒரு தமிழ் சினிமா காட்சியை பார்க்க நேர்ந்தது. அது "கோ"மகன் ஜீவா அவர்கள் "ஆசை ஆசையாய்" நடித்த முதல் படம் (தேங்க்ஸ் டு விக்கிபீடியா).

நாயகி, ஒரு லேடிஸ் துணிக்கடையில் வேலை செய்கிறார். அப்போது அங்கு வரும் ஒரு ஆள், ஒரு பெண் பொம்மைக்கு அணிவித்திருக்கும் ஆடையை பார்த்து, அது பிடித்து போய் அதை எடுத்து கொடுக்க வேண்டி, நாயகியிடம் கேட்கிறார்.

அதற்கு, இந்திய கலாச்சாரத்தை கட்டி காக்கும் நம் நாயகி, பொம்மையின் ஆடையை அங்கேயே வைத்து கழட்டினால் பொம்மையின் கற்பும், அந்த ஆணின் மனமும் கெட்டு போய் விடும் என்ற காரணத்தால், "ஓகே. சார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. பொம்மையை மேல் மாடிக்கு எடுத்து கொண்டு போய், அதன் ஆடையை கழட்டி உங்களுக்கு பேக் செய்து தருகிறேன்" என சொல்ல,

வில்லனாக காட்டப்படும் அந்த ஆள், "இல்லை இங்கேயே வைத்து கழட்டி கொடுங்கள்" என வம்பிழுத்து அந்த பொம்மையின் ஆடையை பற்றி கிழிக்க முயற்சிக்க,

இதையெல்லாம் அங்கு ஒரு நாற்காலியில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த நம் ஆதர்ச நாயகன் ஜீவா, பொம்மைக்கு ஏற்பட போகும் அவமானத்தை தடுக்க பொங்கி எழ, அங்கே ஒரு பைட் சீன் ஆரம்பமாகிறது.

அதற்கு பிறகு கதையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான் ஷாக் ஆகி, அடுத்த சேனலுக்கு பயந்து ஓடி விட்டேன்.

அந்த சீனை தவிர, நான் படத்தை பார்த்தது இல்லை. நான் சொல்வது கொஞ்சம் மாறி இருக்கலாம். அதற்கு வருந்துகிறேன்.

அந்த பைட் சீனுக்கு பிறகு, நாயகனுக்கு நாயகியுடன் ஒரு டூயட் பாட்டு வந்திருந்திருக்கலாம். அதில் நாயகன் நாயகியின் இடுப்பில் ஊர்ந்து வாசம் பிடித்து, மேலேறி மார்பின் மேல் மையம் கொண்டிருந்திருக்கலாம்.

ஆனால் பொது ஜனத்துக்கு, ஒரு பொம்மையின் நிர்வாணத்தை பார்க்க கூட கட்டுப்பாடு உள்ளது.

இயல்பை கொஞ்சம் கூட பிரதிபலிக்காமல், அத்துமீறி காட்டப் படும் சினிமாக்கள் எல்லாமே நம்மை ஏமாற்றவே எடுக்கப் படுகின்றன. சினிமா எடுப்பவர்களுக்கு, "கவர்ச்சி", "மார்பு", "தொப்புள்" என்பவைகள் தான் பிரதானமாய் சோறு போட உதவும் விஷயங்கள்.

சுதந்திரமாய் செக்ஸ் செய்ய வழி இல்லாமல், எல்லைமீறி போய் கன்று குட்டியையும் கழுதையையும் புணர்ந்து கொண்டிருக்கும் நிலைமையில், திரையில் நடிகையின் ஒரு சாதாரண கிளிவேஜ் சீனை பார்த்தாலே, பக்கெட் பக்கெட்டாய் சலவாய் விட்டு ஏங்கி கொண்டிருக்கும் பரிதாபமான நிலைக்கு தள்ளப் படுகிறான் காமன்மேன்.

நம்மால் பண்ண முடியாததை நாயகன் பண்ணுகிறானே என்று அதை பார்த்து நாம் வியந்து கைதட்டி சந்தோசப்பட்டு கொள்கிறோம்.

மட்டன், சிக்கன் என வகை வகையாய் தின்றுவிட்டு, மிச்சமிருக்கும் எலும்பை நாய்களுக்கு போட்டு அவைகளை குதூகலப் படுத்துகிறவர்கள் தான் நம் சினிமாக்காரர்கள்.

மற்ற மீடியாக்களும் இவைகளை செய்தே, காசு பார்க்கின்றன.

தியானம் பற்றிய ஒரு செய்திக்கு, உள்ளாடையுடன் படு கவர்ச்சியாய் ஒரு பெண் உட்கார்ந்து தியானம் செய்வது போல படம் போட்டு வியாபாரம் செய்யும் "கவர்ச்சி ஆப் இந்தியா" நாளிதழ்

காசுக்காக ஒரு பெண் பல பேரை ஏமாற்றி திருமணம் செய்ததை, "செக்ஸ் வெறியில் பல பேரை ஏமாற்றி திருமணம் செய்த கேரளா பெண்" என்று மாற்றி தலைப்பு போட்டு ஆர்வத்தை தூண்டும் டினமலர்.

நமக்கெல்லாம் ஒரு சந்தோசமான செய்தி. என்னவென்றால்,

இன்னும் கொஞ்ச நாளில் ஸ்ரேயாவின் தொப்புளை, 3D-யில் பார்க்க போகிறோம்.

நடிகனுக்கு நிற்கவே முடியவில்லை என்றாலும்......

முப்பது வயது வரை ஒரு ஆண், பெண்ணை பற்றியும் செக்ஸ்சை பற்றியுமே கனவு கண்டு கொண்டிருக்கிறான். பிறகு அவனுக்கு திருமணம் ஆனவுடன், தூக்கமே வருவதில்லை. அதனால் அப்துல்கலாம் சொன்ன கனவு அவனுக்கு வர சாத்தியமே இல்லை.

நாம் இன்னும் மது அருந்தலாமா? வேண்டாமா? என்றே அடித்துக் கொண்டிருக்கிறோம். உங்களையெல்லாம் நூறு பூனம் பாண்டே வந்தாலும் திருத்த முடியாது. இந்த பழமையான கலாச்சார இந்தியாவில், பூனம் ஒரு அதிரடியான மாடர்ன் புரட்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை.

நமது  கலாச்சாரம் மாறி, செக்ஸ் என்பது சாதாரணமானவனுக்கு சாதாரணம் ஆகும் போது, அரசியல்வாதிகளோ சினிமாகாரர்களோ நம்மை அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது.

அப்போது, தொப்புள் காட்சியையும் கிளிவேஜ் சீனையும் தமிழன் துச்சமென மதித்து, தூக்கி எறிந்து விடுவான். அஞ்சலியையும், ஒவியாவையும் அரைகுறை ஆடையில் நிற்க வைத்து போட்டோ ஷூட் செய்து ஏமாற்றிய, கலகலப்பு போன்ற Third ரேட் காமெடி படங்களும் செல்லுபடியாகாது.

"உயிரின் உயிரே" பாட்டில் சில மைக்ரோ நொடிகள் மட்டும் மங்கலாய் தெரியும் ஜோதிகாவின் நிப்பிள் சிலிப்பை கூர்ந்து பார்த்து கண்டுபிடிக்காமல், புதிதாய் அறிவியலில் ஏதாவது கண்டுபிடித்து வரலாற்றில் இடம் பிடிப்பான் இந்தியன்.