Aug 7, 2016

~ இது தங்கமான உறவு ~ (18+) - ஆபாயில்

பேஸ்புக்கில் எழுதுவது என்பது செக்ஸை போல தான்.

எழுதியது கொஞ்சம் சுமாராக இருப்பது போல் தோன்றியவுடனே, இன்ஸ்டன்ட் லைக்கிற்கு ஆசைப்பட்டு, அவசரத்துடன் பதிவிட்டு விடுவது ஒருவகை. நிறைய பேருக்கு இந்த ப்ரீ எஜாகுலேஷன் (pre-ejaculation) பிரச்சனை இருக்கிறது. தினமும் ஐந்து முதல் பத்து பதிவுகள் எழுதினாலும் நமக்கும், படிப்பவர்களுக்கும் திருப்தி இருக்காது. நம் மேல் இருக்கும் அபிப்பிராயம் போய் விடும். கஸ்டமர்களையும் இழக்க வேண்டி வரும். இவர்கள் ஒரு நல்ல பேஸ்புக் எழுத்தாளரை பார்த்து சிகிச்சை பெற்று கொள்வது நல்லது.

எழுத ஆரம்பிப்பதற்கு முன் எதை பற்றி எழுத போகிறோம் என்பதை, சிறிது நேரம் செலவழித்து 'போர் பிளே' (fore play) செய்ய வேண்டும். போர் பிளேயுடன் தான் எழுதவே செல்ல வேண்டும். முக்கியமாய் விரலை கீ போர்டில் நிலை நிறுத்தவும். கீபோர்டில் வேலை செய்யும் பொழுது மவுஸின் அருகில் கை செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் விரல் 'Post' யை அமுக்கி விடும்.

எழுதிய பின் எடுத்தோம் அவிழ்த்தோம் என்று செயல் படாமல், மலையாள படங்களில் வருவது போல 'கீழிருந்து மேலும்', 'மேலிருந்து கீழும்' சிலமுறை படித்து எழுத்து பிழை, இலக்கண பிழைகளை சரி பார்த்துக் கொள்ளவும். வெளியிடும் ஆசையை அடக்கி, தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு  Stop and Start விதிகளை பயன்படுத்தி இன்னும் மெருகேற்றினால் 'கை' Image result for like icon smallமேல் அமோக பலன் கிடைக்கும்.

எழுதியது உங்களுக்கு திருப்தி இல்லாத பட்சத்தில் வரும் "ஆஹா அருமை", "சூப்பர் தல" போன்ற பொய் (Fake) பாராட்டுகளில் ஆறுதல் அடையாமல் அதை தவிர்க்க தீயாய் வேலை செய்யவும். சைஸ் முக்கியமில்லை என்று பொதுவாக சொல்லப் பட்டாலும், ஆவரேஜ் இந்தியன் சைஸாக (ஆறு  வரிகளுக்கு குறையாமல்) இருப்பது இருவருக்குமே நல்ல சுகானுபவமாக இருக்கும். இரண்டு மூன்று வரிகளில் எழுதுவது குயிக் செக்ஸ் போல. திருப்தி இருக்காது.

பதிவு எவ்வளவு பெரிதாய் இருந்தாலும், கன்டென்ட் சிறப்பாய் இருந்தால் வரவேற்பு இருக்கும். தமிழ் பிரபாவுக்கும், முரளி கண்ணனுக்கும் இருக்கும் ரசிக பட்டாளங்களை பார்த்தால் புரியும். 'நுனி' புல் மேய்ந்துவிட்டு எஸ்கேப் ஆகிறவர்களை புறந்தள்ளி விடலாம். எவ்வளவு 'பெரிதாய்' இருந்தாலும், பயப்படாமல் படிப்பவர்கள் தான் நமது இலக்கு.

அதிகபட்சமாக வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் வெளியிடுவது ஆரோக்கியமான உறவுக்கு வழி வகுக்கும். கவனித்து பாருங்கள் நல்ல திறமையான எழுத்தாளர்கள் அவ்வளவு தான் எழுதுவார்கள். வாசகர்களுக்கும் அந்த இடைவெளி தேவை. அடிக்கடி செய்தால் சர்பிரைஸ் இருக்காது.

யாருமே படிக்காமல் லைக்கே வராமல் சுயஇன்பம் செய்வது போல, நீங்கள் எழுதி நீங்கள் மட்டுமே படித்து கொண்டிருந்தாலும், அதை விடாமல் தொடருங்கள். தற்போது பலன் இல்லையென்றாலும், பின்னாளில் கண்டிப்பாக பெரிய பலன் இருக்கும். கொஞ்சம் பிடித்து விட்டால், புதையல் தோண்டி படிப்பார்கள்.

எழுது கோலை எடுங்கள், உறவை பலப் படுத்துங்கள்



பாலி படத்தின் கதை  (பாயிலர் அலர்ட்)

தங்கள் ஆதர்ச கதாநாயகன் நடித்த படத்தின் டிக்கெட் கொள்ளை விலையில் விற்க படுவதால், தலித்துகள் அப்படத்தை பார்க்க முடியாமல் கஷ்டப் படுகின்றனர். ஐ.டி துறை அரை டவுசர் பையன்களும், லெக்கின்ஸ் லேடிகளுமே முக்கால் வாசி டிக்கெட்டுக்களை புக் செய்து விடுகிறார்கள். வேறு வழியின்றி படம் பார்க்க சில நிஜ கபாலிகள், ஏடிஎம் மெஷினை உடைத்து திருடுகிறார்கள். அதை செய்ய முடியாத மற்ற கபாலிகள், ஏடிஎம் கார்டு வைத்திருப்புவர்களை மிரட்டி கொள்ளை அடிக்கின்றனர். அப்பாவிகள் சிலர், அம்மாவின் தாலியையும் பொண்டாட்டியின் தாலியையும் திருடி சென்று விற்கின்றனர்.

இந்த அநியாயத்தை எல்லாம் எதிர்த்து போராட வருகிறான், தலித் நாயகன் கபாலி. டிக்கெட் விலையை குறைக்க சொல்லி தியேட்டர் முன் தீக்குளிப்பு போராட்டம் நடத்துகிறார். பெட்ரோலை தன் மேல் ஊற்றி விட்டு தீப்பெட்டியை கையில் வைத்து கொண்டு பூச்சாண்டி காட்டுகிறார். அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் சங்க கூட்டத்தில் இருந்து ஒரு தீக்குச்சி பறந்து வருகிறது. அப்போது கபாலி கப கபவென பற்றி எரிய, "நெருப்புடா, நெருங்குடா பார்ப்போம்" பாடல் துவங்குகிறது.

பாடல் முடிந்த பின், பாதி கருகிய பாடியை ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி செல்கின்றனர். அந்த நிலைமையிலும் "வருவேன்னு சொல்லு, திரும்பி வருவேன்னு சொல்லு" என்று பன்ச் டயலாக் பேசுகிறார். கடைசியில் உயிர் பிழைத்த கபாலி, திரும்பி வந்து மீண்டும் தீக்குளிக்க பெட்ரோல் வாங்க செல்கிறார். அதற்குள் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை அதிரடியாய் ஏற்றியிருக்கிறது கண்டு, வந்த வழியே திரும்பி விடுகிறார். எதுவும் செய்ய முடியாமல் கடைசியில் "அம்மா தியேட்டருக்கு" அனைவரையும் கூட்டி சென்று படம் பார்க்க வைக்கிறான். அதன் பின் மக்களை அடுத்த தேர்தலில், அம்மாவுக்கே ஓட்டும் போட சொல்லி விட்டு இமயமலைக்கு பயணம் செய்கிறான்.



Mar 2, 2016

இளைய தளபதி டிகாஃப்ரியோ



டிகாஃப்ரியோவுக்கு ஆஸ்கார் கெடைச்சிடுச்சு பாத்தியாடா? என்று குதுகலித்த நண்பன், எனக்கு தெரிந்து கடைசியாய் ரசித்து பார்த்தது டைட்டானிக்.

இன்றும் அவனது பேஸ்புக் புரபைலில், பார்த்த ஆங்கில பட வரிசையில் ஜுராசிக் பார்க், அனகோண்டாவுக்கு அடுத்து டைட்டனிக் மட்டும் தான்.

அதிலும் ஹீரோ, கேட் வின்ச்லேட்டை அரை நிர்வாணமாய் வரையும் காட்சியை pause செய்து அவள் முலைகளை பார்த்து, பல மணிநேரம் பரவசம் அடைந்திருக்கிறான். அதை ஸ்க்ரீன் சாட் எடுத்து வால் பேப்பராக வைத்து தினமும் பயபக்தியுடன் வழிப்பட்டு வந்தான்.

கனவில் கேட் வின்ஸ்லெட் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு தினமும் மானிட்டரை பார்த்து கொண்டே படுத்தாலும், டைனோசர்களும் அனகோண்டாக்களுமே வந்து அவனை விடாது பயமுறுத்தின.

தன் காதலி ஆசைப்பட்ட காரணத்தால், தன் காதலை தியாகம் செய்து, வேறு ஒருவருடன் அவளை சேர்த்து வைத்த "பூவே உனக்காக" படம் பார்த்து  விஜய்க்கு Die Hard பேனாக மாறியிருந்த சமயம், அடுத்த வருடத்தில் வெளியான டைட்டானிக்கிலும் காதலியை காப்பாற்ற  குளிர் நீரில் விதைப்பை விறைத்து செத்து போன டிகாஃப்ரியோவும் அவன் நெஞ்சில் இடம் பிடித்து அவனுக்கு இன்னொரு தளபதியாய் மாறினார்.

இவனிடம் லவ் பெயிலியர் கேஸ்கள் மாட்டினால்,

"மச்சி, காதல்ன்றது பனிக்கட்டி பாற மாதிரி, எவ்ளோ பெரிய கப்பலா இருந்தாலும் தொப்பலா நனைய வச்சு முழுக்கிடும்."

என்று பன்ச்சு சொல்லி அவர்களை தற்கொலைக்கு தூண்டுவான்.

அதிலிருந்து ஒரு தளபதிக்காவது ஆஸ்கார் கிடைத்துவிடாதா? என்று வருடா வருடம் எதிர்ப்பார்த்து கிடந்தான். பிரண்ட்ஸ் பட கிளைமேக்சில் தலைவனின் நடிப்பை பார்த்து மிரண்டு, கண்டிப்பாக ஆஸ்கார் கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்த போது அதை ஆஸ்கருக்கு பரிந்துரைக்காமல் வஞ்சம் செய்த இந்திய அரசை எதிர்த்து அப்போதே தேசிய கொடியை எரித்தவன்.

லோக்கல் தளபதி கரும்புலியிடம் கடி வாங்கி கஷ்டப்பட்டு சண்டை போட்ட புலி படம் வழக்கம் போல ஆஸ்காருக்கு போகா விட்டாலும், பாரின் தளபதி கரடியுடன் சண்டை போட்டு ஆஸ்கர் வாங்கியதில் அவனுக்கு ஆத்ம திருப்தி.

"ஆமா மச்சி, தல க்கு எப்ப ஆஸ்கார் கெடைக்கும்?" என்று கொஞ்சம் சொரிந்து விட்டால், நக்கலாய் சொல்வான்,

"அவரு ரேஸ்கார் வேணா வாங்கலாம், ஆஸ்கார்லாம் வாங்க முடியாது"


Feb 24, 2016

கேப்டனும், கஜேந்திராவும்

(picture courtesy: tamil hindu)

ஒரு டிவி சேனலில் ரமணா படத்தின் காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. மூச்சு விடாமல் லஞ்சம் வாங்கியவர்களின் புள்ளி விவரங்களை துல்லியமாக நிமிட கணக்கில் வசனங்களாய் பேசி தள்ளுகிறார்.

அந்த ரமணாவையும், கோர்வையாக இரண்டு வார்த்தையை சேர்த்து பேசவே தடுமாறும் தற்போதைய ரமணாவையும் நினைத்து பார்க்கும் போது, அவருடைய பிந்தைய படங்களுக்கெல்லாம் விஜயகாந்தை போலவே பேசும் மிமிக்ரி கலைஞர்களை வைத்து டப்பிங் கொடுத்திருப்பார்களோ? என்று நினைக்க தோன்றுகிறது. என்னதான் பீல்ட் அவுட் ஆனாலும், எல்லா பந்துகளுக்குமா டக் அவுட் ஆவது?

கேப்டனை சந்தேகிப்பதாக சக ரசிக வெறியர்கள் கண்ணை சிவக்க வேண்டாம்.

கொச்சடையான் படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகளை எடுப்பதற்கு தலைவரை போலவே இமிடேட் செய்யும் கலைஞர்களை வைத்து நடிக்க வைத்தார்கள் என்ற வதந்தி பரவியதும், என் எண்ணத்திற்கு வலு சேர்க்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கியை தூர எறிந்து விட்டு, பாகிஸ்தான் தீவிரவாதிக்கே தமிழில் ஆக்ரோஷ்யமாய் அறிவுரை கூறி திருத்திய கேப்டனின் படங்களை எல்லாம் விடாமல் பார்த்த, Hard Core விசிறி என்ற முறையில், தற்போதை கேப்டனின் நிலைமையையும், அதை அசிங்கபடுத்தி அவமானப்படுத்தி மீம் (meme) செய்து கேலி செய்யப் படுவதையும் பார்க்கையில், என் கண்கள் வேர்க்கிறது.

நீ திரும்ப சினிமாவுக்கே, வந்திடு கஜேந்திரா!

கபாலியே கத்தி பிடிக்கும் போது, உனக்கென்ன? உன் கஜாயுதத்தை எடுத்து கொண்டு புறப்படு! பிறகு நீ தான் கிங்!

அது நடந்தால் தமிழ் நாடு இல்ல, இந்தியா இல்ல, உலகமே உங்களை ரசிக்கும்.

தூக்கியடி தலைவா! ஜெய்கிந்த்!


Feb 12, 2016

இறுதிச் சுற்று (இது விமர்சனம் அல்ல சொந்த கதை)

"காக்கா முட்டை"க்கு பிறகு, குடும்ப உறவுகளுக்காக "உப்பு கருவாடு" பார்த்து ராதா மோகனிடம் உப்பு கண்டமாகி போனாலும், இந்த படத்திற்கு போக முக்கிய காரணம், 
"பொண்டாட்டிய படத்துக்கே கூட்டி போகாம கொடும படுத்தறான், பாவி பய!. பாவம் அந்த பொண்ணு" என்று பேசி என்னை வில்லனாய் உருவக படுத்தி கொண்டிருந்த ஊர் வாயை, கொஞ்ச நாளைக்காவது அடைச்சி வைக்க தான். இன்னும் எத்தன காலத்துக்கு தான் பொண்டாட்டிய படத்துக்கு கூட்டிட்டு போகாததையே புருசனோட ஆக பெரிய குற்றம்ன்னு சொல்லிகிட்டு இருப்பீங்க கைய்ஸ்! காம்ப்ளான் குடிச்சு வளருங்கப்பா. 



இறுதிச் சுற்று - தமிழில் இப்படியெல்லாம் ஒரு ஸ்போர்ட்ஸ் (குத்து சண்டை) படம் எடுக்கிறார்கள் என்பதே ஆச்சர்யம் தான். ஆஹா ஓஹோன்னு இல்லைனாலும் "பரவாலப்பா" என்று முதுகில் தட்டி கொடுக்கும் அளவுக்கு இருக்கிறது.

குத்துசண்டை மேடையை சுத்தி ஒப்பாரி வைத்து ஓவென்று அழுது, பின் ஹீரோ தங்கச்சிக்காக விட்டு கொடுத்து, நெஞ்சை லிக் செய்து நெகிழ வைத்த "எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி" கிளைமாக்ஸ் காட்சியை எல்லாம் நினைத்து பார்த்தால், இந்த பட இயக்குனருக்கு கோவில் கூட கட்டலாம்.

ஹீரோயின் ரித்திகா சிங்கை பார்த்து இன்ஸ்பைர் ஆகி, வீட்டிற்க்கு வந்ததும் நான் ஒற்றை கையில் புஸ்-அப் (push-up) எடுக்க முயற்சித்ததே இந்த படத்திற்கு பெரும் வெற்றி எனலாம். பாடல்கள் நன்றாக இருந்தாலும், எல்லாமே தேவையில்லாத ஆணிகள் தான்.



படம் பார்த்த அன்னைய நைட்ல இருந்து, தூங்கும் போது அடுத்த ரூம்ல இருந்து "டொம் டொம்" ன்னு சத்தம் வந்து கொண்டிருந்தது. பக்கத்துல இருந்த என் பொண்டாட்டியும் காணாம போயிடறா. அடுத்த நாள் காலைல எழுந்து பார்த்தா, அழுக்கு மூட்டையில் இருந்த துணி எல்லாம் வெளியே பிதுங்கிட்டு இருக்கு, என்னோட தம்புள்ஸ் ரெண்டும் எடம் மாறி கெடக்கு.
படம் பார்த்த இன்னொருத்தரும், ஹீரோயினை பார்த்து இன்ஸ்பைர் ஆகி இருக்காங்கறது தான் இந்த கதையில பெரிய ட்விஸ்ட்டு. ஆனால் படம் பார்த்த நாலு நாள்லயே முழு ரித்திகா சிங்கா மாறியிருக்கிற என் பொண்டாட்டிய பார்த்தா தான் அல்லு கிளம்புகிறது. "படத்துக்கு கூட்டிட்டு போக மாட்டியா? படத்துக்கு கூட்டிட்டு போக மாட்டியா?" என்று சொல்லி இந்த வேட்டையனை தெனமும் நாக்-அவுட் செய்றா. இனி எல்லா படத்துக்கும் விமர்சனம் எழுதணும் போலயே!

எப்படி இந்த சந்திரமுகியை வெளிய ஓட்றது? :-( frown emoticon


Jul 18, 2013

பன்னி - 2 (இது பன்னி டான்ஸ்)


"நான் என்ன குப்பையை எடுத்தாலும் நீ பாக்கணும். உனக்கு இது போதும்" என்ற மனோபாவம் கொடுமையானது. அது எல்லோருக்கும் பொதுவானது.




தமிழக மக்களின் ஆழ்மனதில் வேரூன்றியிருக்கும் மொன்னையான ரசிப்பு தன்மையை, அதிரடியாக வெளிக்கொணர்ந்து வெற்றி பெற்ற 'பன்னி' -யின் முதல் பாகத்தை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் 'பன்னி - 2' வும், அதே பார்முலாவில், மக்களின் அதே மொன்னை ரசிப்பு தன்மையை நம்பி, அதே பன்னி பட்டாளங்களின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது.

இம்முறை சந்தானம் என்ற காமெடி
பன்னியும், ஹன்சிகா என்ற வெள்ளை பன்னியும் மற்றும் ஒரு ஆப்பிரிக்க வில்லன் பன்னியும் நியூ அடிசனாக (addition) சேர்க்கப் பட்டுள்ளன(ர்).

Recap:


முதல் எபிசோடில், நல்லூர் கிராமத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் நாயகன். ஊரில் நடக்கும் அனைத்து சாக்கடை பிரச்சினைகளையும் சுமுகமாக, வன்முறையின்றி தீர்த்து வைக்கிறார். அதனால் நாயகனின் 'பன்னீர் செல்வம்' என்ற பெயரை சுருக்கி
பன்னி என்றே எல்லோரும் செல்லமாக அவரை கூப்பிடுகின்றனர். ஊர் மக்கள் தங்கள் வீடுகளில் பன்னிக்குட்டி உண்டியல் வைத்திருப்பது அவர் மேல் இருக்கும் அன்பின் உச்சக்கட்டம்.

ஒருமுறை அரேபிய குதிரை அனுஷ்காவின் காணாமல் போன சங்கிலியை, "நைட்டியை எப்படி கழட்டினீங்க?" என்று கேட்டு செர்லாக் ஹோம்ஸ் பாணியில் சாதுர்யமாய் கண்டுபிடிக்க, அவருக்கும் நாயகிக்கும் உடனே தமிழ் சினிமா சம்பிரதாய படி காதல் துளிர்க்கிறது. டூயட்டுகளில் தன்னை விட மிகவும் உயரமான குதிரையுடன் ஆடுவது பன்னிக்கு சாவாலான விசயமாய் தோன்றினாலும், ஹைஹீல்ஸ்களின் உதவியோடு அதை செவ்வனே செய்து முடிக்கிறார். அதன் பிறகு அவருக்கு, 'கொலுசு காணாமல் போனது', 'கொடியில் காயபோட்டிருந்த பாவாடை காணாமல் போனது' போன்ற கேசுகளே அதிகம் வருகின்றன. 

இதனால் கடுப்பாகும் பன்னி, அந்த கேசுகளை கான்ஸ்டபிள் எரிமலை ஏகாம்பரத்துக்கு டிரான்ஸ்பர் செய்கிறார். பிறகு கதையில் வில்லன்கள் அறிமுகமாகின்றனர். படத்தில் ஐந்து பைட்டு, எக்கச்சக்க பன்ச்கள் என்று முடிவாகி இருந்ததால், வில்லன்களிடம் பஞ்ச் டயலாக் பேசி முதலில் அவர்கள் காதில் இருந்து ரத்தம் வர வைக்கிறார். பிறகு குற்றுயிராய் இருக்கும் அவர்களை கையால் அடித்து துவம்சம் செய்கிறார்.

கடைசியாக கிளைமாக்சில் அனைத்து வில்லன்களின் காதுகளையும் பஞ்சராக்கி, அவர்களை கொன்ற பின் அனுஷ்காவுடன் வீட்டிற்கு காரில் பயணிக்கிறார். இனி கல்யாணம் செய்து, பஸ்ட் நைட்டு தான் என்று குஜாலாய் யோசித்துக் கொண்டே வரும் போது, இடையில் ஹோம் மினிஸ்டர் விஜய குமார் வண்டியை நிறுத்தி சீக்ரெட் தையல் மிஷன் ஒன்றை தந்து பன்னியை சோகத்தில் ஆழ்த்துகிறார். இருந்தாலும் கடமையை கண்ணாக நினைத்து, Gun-யை எடுத்து கொண்டு கிளம்புகிறார்.

இனி, 

இரண்டாம் பாகத்தில், தூத்துக்குடி வரும் அவர், அந்த தையல் மிஷனை வைத்து பள்ளிக் கூடம் ஒன்றின் அருகில் ஸ்கூல் யூனிபாம் தைத்து கொடுக்கும் தையல் கடை ஒன்றை ஆரம்பிக்கிறார். அளவு எடுக்கும் பையனாக சந்தானத்தை வேலைக்கு அமர்த்தி கொள்கிறார். சூப்பர் பிகர்களுக்கு மட்டுமே சந்தானம் அளவு எடுக்கிறார். சப்பை பிகர்களை அசிங்கமாய் கலாய்த்து வெளியே அனுப்பும் அவரின் பிரமாதமான காமெடி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

தையல் கடை வைத்து கொண்டே, அண்டர் கவர் ஆப்பரேஷனில் ஈடுபடுகிறார் பன்னி. அண்டர் கவர் ஆப்பரேசன் என்பதால், கீழே மட்டும் கவர் செய்து கொண்டு அவ்வப்போது புதர் பின்னல் இருந்து துறைமுகத்தில் நடக்கும் சட்ட விரோத வேலைகளை வேவு பார்க்கிறார். அவருக்கு இயற்கையிலேயே தூரப் பார்வை என்பதால், ஆறு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கப்பலையும் பைனாகுலர் இல்லாமலே நோட்டம் இடுகிறார்.


பள்ளிகூடத்திலும் 'டஸ்டர் காணாமல் போனது', 'சாக்பீஸ் காணமல் போனது' போன்ற கேஸ்கள் வர, வழக்கமான உத்தியில் கண்டு பிடிக்கிறார். 
இதற்கிடையே மார்க்கெட்டில் பூசணிக்காய் விற்று படிக்கும் ஹன்சிகா என்ற பள்ளிமாணவி இவரை ஒருதலையாய் காதல் செய்கிறார். பன்னி தன் ஒரு தலையை அனுஷ்காவுக்கு அல்ரெடி கொடுத்து விட்டதால், அவரது காதலை மறுத்து விடுகிறார்.

அடிக்கடி ரவுடிகளோடு சண்டை போட்டாலும், இரண்டாம் பாகத்தில் பைட் அதிகம் வர வேண்டும் என்ற காரணத்திற்க்காக, பொதுமக்கள் சிலரை பிடித்து பன்ச் டயலாக் பேசி, தங்களை ரவுடி என அவர்களையே நம்ப வைத்த பின் அடிக்கிறார்.

ஒருமுறை வில்லனின் இடத்திற்கு செல்லும் போது துப்பாக்கியை மறந்து விட்டு வந்து விட, பஞ்ச் டயலாக் வைத்தே சமாளித்து திரும்பி வந்து விடுகிறார். அவர் Rivital மருந்து எடுத்து கொள்வதால், மனப் பாடம் செய்து படிக்கும் பஞ்ச் டயலாக மட்டும் மறக்காமல் நியாபகத்தில் இருக்கிறது. ஒரு மிஸ்டேக் கூட வராமல் இருக்க வீட்டில் கண்ணாடி முன் நின்று அதிகம் பேசி ரிகர்சலும் எடுத்து கொள்கிறார். 

கடைசி பைட்டில், தங்கள் குடும்பத்தை கொல்ல வரும் வில்லன்களை வன்முறையில்லாமல் சமாளிக்க, வேண்டுமென்றே துப்பாக்கியை விட்டு விட்டு, வாயை மட்டுமே எடுத்துக் கொண்டு போகிறார். வில்லன்கள் வரும் போது, தன் வீட்டு கேட்டை பூட்டி விட்டு வாயை திறக்கிறார். ஒவ்வொரு பன்ச்சும் புல்லட்டாய் சீற, அறுந்த காதுகளோடு அலறி அடித்து ஓடுகின்றனர் வில்லன்கள். 

சில புத்திசாலி வில்லன்கள், இயர் போனை காதில் மாட்டி தப்பிக்க பார்க்கின்றனர். அப்படி எஸ்கேப் ஆக முயற்சிப்பவர்களின் காதில், தன் பாக்கெட்டில் வைத்திருக்கும் பஞ்சிங் மெசினை வைத்து ஓட்டை போட்டு ரத்தம் வர வைக்கிறார். 

ஹீரோவின் பன்ச்சிலிருந்தும், பஞ்சிங் மெசினில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள, தப்பி ஓடும் தமிழ் அறியா அந்த ஆப்பிரிக்க வில்லனையும், அவன் நாட்டுக்கே சென்று, தனது பன்ச்சால் காதறுத்து கடைசி வரை அவனால் கூலிங் கிளாசே போடமுடியாமல் செய்து விடுகிறார், மிஸ்டர் பன்னி. 

இரண்டு சீனுக்கு ஒருமுறை இவரும், ஹோம் மினிஸ்டர் விஜய குமாரும் போனில் பேசி கொண்டே இருக்கின்றனர். இப்படத்தில் பன்னிக்கு நாயகியுடன் பேசுவதை விட, ஹோம் மினிஸ்டருடன் தான் அதிகம் டயலாக் வருகின்றன. அபீசியல் (Official) விஷயம் பேசி முடித்தவுடனும் "அப்புறம்..." "இம்..." "சொல்லு..." "சாப்டாச்சா?" என்ற அளவுக்கு அன்னியோன்யமாய் பேசுகிறார்கள். கொஞ்சம் பிசகி இருந்தாலும் ஆபத்தாய் போயிருக்கும் அவர்களது அன்பை, லாவகமாய் காட்டி இருக்கிறார் இயக்குனர்.

படத்திற்கு இயக்குனர் கிராபிக்ஸை, Flat 50% டிஸ்கவுன்ட் ரேட்டில் கேட்டு வாங்கியிருக்கலாம். சண்டை காட்சிகளில் அவரின் நகத்தை காண்பிக்கும் போது, ரியல் பன்னியின் நகமாக மாறுகிறது. பஞ்ச் டயலாக் பேசும் போது, பன்னி உறுமுவது போலவும் காட்டுகிறார்கள். அப்போது அவரது வாய், உருண்டை வடிவத்தில் மாறுகிறது.

'ஏம்பா குமாரு' என்று கட்டை குரலில் பேசும், 'நான் கடவுள்' புகழ் வில்லனின் மொட்டை தலையும் ஒரு முறை கிராபிக்ஸில் பளீரென மின்னுகிறது. சில பேர் அரைகிலோ தக்காளி வாங்கும் போது, எடை போட்டவுடன் கடைக்காரரிடம் சண்டை போட்டு எக்ஸ்ட்ரா ஒரு தக்காளி எடுத்து பையில் போட்டு கொள்வார்கள். எடுத்து போட்ட எக்ஸ்ட்ரா தக்காளி தான்,அந்த மொட்டை தலை கிராபிக்ஸ்.

சுமார் ஆறு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, படம் முடிந்து தியேட்டர் விட்டு வெளியே கொண்டு வரப்படும் ஒவ்வொருவரின் நாடியை பிடித்து பார்க்கும் டாக்டர் "பச்" என்று சொல்லி பரிதாபமாய் வாயை அசைக்கிறார். எஞ்சிய சிலரும் "இருக்கிறதா?" என்ற சந்தேகத்தில் தங்கள் காதுகளை பிடித்து பார்த்து செக் செய்த படியே வெளியேறுகின்றனர்.

மக்களின் நாடி துடிப்பை அறிந்து சீக்வல்(Sequel) படம் எடுத்து வெற்றி பெற்றுள்ள இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

"பன்னி, பன்னி ஹி இஸ் மிஸ்டர் பன்னி."




பன்னி 2 - தமிழின் முதல் சீக்குவல் வெற்றி படம்.