Jul 5, 2010

கள்வாணி - நமீதா திரை விமர்சனம்




துபாய்ல இருந்து அப்பா (இளவரசு) அனுப்புகின்ற பணத்தில் ஊரில் வெட்டியாக சுற்றிக்கொண்டு செலவு செய்து கொண்டிருக்கிற நம்ம ஹீரோ 'பசங்க' பட விமல். பக்கத்து ஊர்ல இருந்து ஸ்கூல் படிக்க வர்ற வில்லனோட தங்கை புது முக ஹீரோயின் ஓவியா. இந்த ரெண்டு ஊருக்கும் எப்புவும் காய்தான் (சண்டை). இதற்கு இடையில் ஹீரோவிற்கு ஹீரோயின் மேல லவ்வு வந்து கடைசியில் 
எப்படி தாலி கட்டுகிறார் என்பது தான் கதை. உண்மையாகவே படு வித்தியாசமாக யாரும் நினைச்சி பார்க்காத வகையில் தாலி கட்டுவார் (ஹீரோயினே நினைச்சு பார்க்கலை).

படம் நெடுக காமெடியை கலந்து திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர். படம் முழுதும்
மக்கள் சிரிச்சிகிட்டே தான் இருக்கிறார்கள். இடைவேளைக்கு பிறகு கதை பயங்கர விறுவிறுப்பாக நித்தி மேட்டர் மாதிரி சர்ர்ன்னு பத்திகிட்டு போகுது. நாமளும் பக்கத்துக்கு சீட்டு பருவ சிட்டோடு சேர்ந்து கதையோடு ஒன்றி விடுவது நிஜம்.

முதல் தடவை பார்க்கும் பொழுது சில சீரியஸ் ஆன சீன்கள் வந்தால் கூட கொஞ்ச நேரத்துலையே எதாவது காமெடியை போட்டு சிரிக்க வச்சுடறாங்கப்பா. 


ஹீரோவோட அம்மா சரண்யா ('நாயகன்' நாயகி), ஓவ்வொரு தடவையும் தன் மகன் தப்பு பண்ணும்போது "அவனோட நேரம் தான் அவன் அப்படி பண்ணிக்கிட்டு இருக்கான். இந்த ஆவணி போய் ஆவடி வந்தா, டாப்ல வந்துருவான்னு பட்டிகாட்டு ஜோசியர் சொன்னார்" என்று வசனம் பேசிக்கொண்டே இருப்பார்.


ஆனால், படம் ஆரம்பித்தில் இருந்து கடைசி வரைக்கும் விமல் டாப்லேயே இருக்கிறார். தெனாவெட்டான பேச்சு, பரட்டை தலைன்னு RX100 பைக்கை எடுத்துக்கிட்டு சுத்துவதுமாக பட்டையை கிளப்பியிருக்கிறார். புது முகம் ஹீரோயின் நடிப்பு ஓகே.

"பஞ்சாயத்து"ங்கர கேரக்டர்ல வர்ற கஞ்சா கருப்பு, நீண்ட நாளுக்கு அப்புறம் அவரு அழுது நம்மை சிரிக்க வைக்கிறார். மொத்த களவாணி பசங்களும் சேர்ந்து அவரை தொல்லை பண்ணி சாக அடிக்கறாங்க. அவரு செத்துட்டார்ன்னு ஊர் முழுதும் காரில் ரேடியோ வைத்து அறிவிப்பது நல்ல காமெடி.

E=mc2 மாதிரி ஐன்ஸ்டீன்க்கு போட்டியாக ஒரு சமன்பாட்டை டைரக்டர் கண்டுபிடித்து அதை சமனும்(derive) செய்கிறார். இனி பள்ளிக்கூட பசங்க எல்லாம் இதை யூஸ் பண்ணாம இருந்தால் சரி. 


ஒயின் ஷாப்ல மெனு எடுக்கறது, 
மினி பஸ்ல சைக்கிள தூக்கி வச்சுக்கிட்டு தப்பிக்கறது,
ஹீரோயினுக்கு வீட்டு பாடம் எழுதாதிலிருந்து தப்பிக்க ஐடியா கொடுக்கறது


என சின்ன சின்ன விஷயங்கள் நிறைய நன்றாக பண்ணியிருக்கார் இயக்குனர்.

பாட்டெல்லாம் சம்மர்ல வர்ற மழை மாதிரி வர்றதும் தெரியாம போறதும் தெரியாம லேசாக நனைச்சிட்டு போகுது. டம்ம டும்மா பாட்டு கதாபாத்திரங்களோடு சேர்ந்து நம்மளையும் தட்ட வைக்கின்றது. 


கிளைமாக்ஸ் ஜாலி கொண்டாட்டம். மக்கள் end டைட்டில் முடிஞ்சு ஸ்க்ரீன் மூடுகின்ற வரைக்கும் பார்த்துவிட்டு தான் கிளம்பறாங்க. கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம். உங்க சின்ன வீடு, பெரிய வீடு எல்லாத்தையும் கூட்டிட்டு போங்க.

நமீதா டச்: கள்வாணி மச்சான் மனச கள்வாண்டுட்டான்.

டிஸ்கி: கடைசி வரைக்கும் தலைப்பை தவிர எங்கடா நமீதாவொட ஒரிஜினாலிட்டி காணோம்ன்னு பார்க்கறீங்களா?. நிறைய பேர் ஹிட்ஸ் வர்றதுக்காக சாரு பேர யூஸ் பண்ணுவது போல, நான் நமீதா பெயரை யூஸ் பண்ணியுள்ளேன். இதற்கு நமீதாவிடம் இருந்து ஹிட்ஸ் வராமல் இருந்தால் சரி.



3 comments:

ஜில்தண்ணி said...

நமிதா சொல்றத பாத்தா படம் பாக்கனும் போலயே இருக்கே,விமர்சனம் நல்லாத்தான் இருக்கு தொடந்து எழுதுங்கள்

சரி பாத்துடுறேன்

Katz said...

நன்றி! ஜில்தண்ணி
- நமிதா

Anonymous said...

super vali pokkan irukaratha irukara matheria vimarsananam pantregga pogga,na pathute, but innoru time pakkanumpola