Jul 5, 2010

கள்வாணி - நமீதா திரை விமர்சனம்




துபாய்ல இருந்து அப்பா (இளவரசு) அனுப்புகின்ற பணத்தில் ஊரில் வெட்டியாக சுற்றிக்கொண்டு செலவு செய்து கொண்டிருக்கிற நம்ம ஹீரோ 'பசங்க' பட விமல். பக்கத்து ஊர்ல இருந்து ஸ்கூல் படிக்க வர்ற வில்லனோட தங்கை புது முக ஹீரோயின் ஓவியா. இந்த ரெண்டு ஊருக்கும் எப்புவும் காய்தான் (சண்டை). இதற்கு இடையில் ஹீரோவிற்கு ஹீரோயின் மேல லவ்வு வந்து கடைசியில் 
எப்படி தாலி கட்டுகிறார் என்பது தான் கதை. உண்மையாகவே படு வித்தியாசமாக யாரும் நினைச்சி பார்க்காத வகையில் தாலி கட்டுவார் (ஹீரோயினே நினைச்சு பார்க்கலை).

படம் நெடுக காமெடியை கலந்து திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர். படம் முழுதும்
மக்கள் சிரிச்சிகிட்டே தான் இருக்கிறார்கள். இடைவேளைக்கு பிறகு கதை பயங்கர விறுவிறுப்பாக நித்தி மேட்டர் மாதிரி சர்ர்ன்னு பத்திகிட்டு போகுது. நாமளும் பக்கத்துக்கு சீட்டு பருவ சிட்டோடு சேர்ந்து கதையோடு ஒன்றி விடுவது நிஜம்.

முதல் தடவை பார்க்கும் பொழுது சில சீரியஸ் ஆன சீன்கள் வந்தால் கூட கொஞ்ச நேரத்துலையே எதாவது காமெடியை போட்டு சிரிக்க வச்சுடறாங்கப்பா. 


ஹீரோவோட அம்மா சரண்யா ('நாயகன்' நாயகி), ஓவ்வொரு தடவையும் தன் மகன் தப்பு பண்ணும்போது "அவனோட நேரம் தான் அவன் அப்படி பண்ணிக்கிட்டு இருக்கான். இந்த ஆவணி போய் ஆவடி வந்தா, டாப்ல வந்துருவான்னு பட்டிகாட்டு ஜோசியர் சொன்னார்" என்று வசனம் பேசிக்கொண்டே இருப்பார்.


ஆனால், படம் ஆரம்பித்தில் இருந்து கடைசி வரைக்கும் விமல் டாப்லேயே இருக்கிறார். தெனாவெட்டான பேச்சு, பரட்டை தலைன்னு RX100 பைக்கை எடுத்துக்கிட்டு சுத்துவதுமாக பட்டையை கிளப்பியிருக்கிறார். புது முகம் ஹீரோயின் நடிப்பு ஓகே.

"பஞ்சாயத்து"ங்கர கேரக்டர்ல வர்ற கஞ்சா கருப்பு, நீண்ட நாளுக்கு அப்புறம் அவரு அழுது நம்மை சிரிக்க வைக்கிறார். மொத்த களவாணி பசங்களும் சேர்ந்து அவரை தொல்லை பண்ணி சாக அடிக்கறாங்க. அவரு செத்துட்டார்ன்னு ஊர் முழுதும் காரில் ரேடியோ வைத்து அறிவிப்பது நல்ல காமெடி.

E=mc2 மாதிரி ஐன்ஸ்டீன்க்கு போட்டியாக ஒரு சமன்பாட்டை டைரக்டர் கண்டுபிடித்து அதை சமனும்(derive) செய்கிறார். இனி பள்ளிக்கூட பசங்க எல்லாம் இதை யூஸ் பண்ணாம இருந்தால் சரி. 


ஒயின் ஷாப்ல மெனு எடுக்கறது, 
மினி பஸ்ல சைக்கிள தூக்கி வச்சுக்கிட்டு தப்பிக்கறது,
ஹீரோயினுக்கு வீட்டு பாடம் எழுதாதிலிருந்து தப்பிக்க ஐடியா கொடுக்கறது


என சின்ன சின்ன விஷயங்கள் நிறைய நன்றாக பண்ணியிருக்கார் இயக்குனர்.

பாட்டெல்லாம் சம்மர்ல வர்ற மழை மாதிரி வர்றதும் தெரியாம போறதும் தெரியாம லேசாக நனைச்சிட்டு போகுது. டம்ம டும்மா பாட்டு கதாபாத்திரங்களோடு சேர்ந்து நம்மளையும் தட்ட வைக்கின்றது. 


கிளைமாக்ஸ் ஜாலி கொண்டாட்டம். மக்கள் end டைட்டில் முடிஞ்சு ஸ்க்ரீன் மூடுகின்ற வரைக்கும் பார்த்துவிட்டு தான் கிளம்பறாங்க. கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம். உங்க சின்ன வீடு, பெரிய வீடு எல்லாத்தையும் கூட்டிட்டு போங்க.

நமீதா டச்: கள்வாணி மச்சான் மனச கள்வாண்டுட்டான்.

டிஸ்கி: கடைசி வரைக்கும் தலைப்பை தவிர எங்கடா நமீதாவொட ஒரிஜினாலிட்டி காணோம்ன்னு பார்க்கறீங்களா?. நிறைய பேர் ஹிட்ஸ் வர்றதுக்காக சாரு பேர யூஸ் பண்ணுவது போல, நான் நமீதா பெயரை யூஸ் பண்ணியுள்ளேன். இதற்கு நமீதாவிடம் இருந்து ஹிட்ஸ் வராமல் இருந்தால் சரி.



Jul 1, 2010

பெண்ணாகிய பேனா

 
 
கண்ணுக்கு மையிட்டு
கவிழ்த்துகின்ற பார்வையாலே
கதையொன்று எழுதுகிறாய்
காகிதமாய் நான் மாற.

பார்க்கும் பார்வைகளை
அழுத்தமாய் பார்க்காதே
ஈர்க்கும் உன் (இ)மையால்
என் இதயம் உய்த்து விடும்.

என் வாழ்கையின் அர்த்தங்களை
வரிகளாய் எழுதுகிறாய்
என்று எண்ணிதான்
காற்றில் பட படத்திருந்தேன்.

முழுதாக முடிக்கும் முன்னே
எடுத்து எறிந்தாய்
என்னை
முள்ளை போலே

காரணங்கள் யாது என்றேன்
கதையில் சிறு மாற்றங்கள் என்றாய்.
வலி கொண்டு உணர வைத்தாய்,
அவை கண்கள் அல்ல
முட்கள் என்று.





எனக்கு ஒரு முடி(வு) தெரிஞ்சாகனும்



பொதுவாக நீண்ட தலைமுடியை வைத்துக் கொண்டு இருக்கும் பையன்களை பார்த்தாலே எனக்கு அவர்களிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டுமென்று தோன்றும்.

எப்படி அவர்களால் இப்படி வளர்க்க முடிகிறது?
கஷ்டமாக இருக்காதா?

இப்படி நிறைய.

  • தினமும் நீங்கள் காலையில் குளித்தவுடன், உங்கள் அம்மா தான் தலை துவட்டி விடுவாங்களா? இல்ல, நீங்களே பொண்ணுங்க மாதிரி தோள் மேல முடியை எடுத்து போட்டு துவட்டி கொள்வீர்களா? துவட்டிய பின், முடியை அள்ளி முடிந்து விட்டு, வாசலில் போய் கோலம் போடுவீர்களா?
  • ரொம்ப குறைச்சலாக முடியை கட் (வட்டு கிராப்) பண்ணி கொள்கிற எனக்கே ஏகப்பட்ட பொடுகு தொல்லை இருக்கிறது. நீங்கள் எப்படி சமாளிக்கிறீங்க? சன் மியூசிக்கோ அல்லது இசை அருவிக்கோ போன் பண்ணி கூந்தல் பராமரிப்பு பற்றி குறிப்புகள் சொல்லுவீங்களா? (சொன்னா இதை படிக்கிற பிகருங்களுக்கு எல்லாம் கொஞ்சம் உபயோகமா இருக்கும்)
  • வாரம் ஆனா, சனிகிழமை சீகைக்காய் போட்டு உங்கள் அம்மா உங்கள் தலையை தேய்ச்சு விடுவாங்களா? உலர வைக்க முடிக்கு சாம்பராணி புகை எல்லாம் பிடிப்பிங்களா?
  • இந்த பேன் தொல்லையை எப்படி சமாளிக்கீரிங்க? நடு வாசப்படியில் உட்காரவைத்து உங்களுக்கு யார் பேன் பார்ப்பாங்க?
  • பச்சை, சிவப்பு மாதிரி கலர்கலரா ஒரு டீ சர்ட் போட்டுக்கிட்டு  போகும் போகையில், உங்களை பிகர் என்று தவறாய் நினைத்து யாராவது பாலோவ் செய்து வந்து, உங்களின் பின்புறத்தை தட்டி ஏமாந்து போய் இருக்கார்களா? நீங்கள் வேண்டுமென்றே யாரையாவது விளையாட்டுக்காக ஏமாற்றி இருக்கீங்களா?
  • வராவாரம் பியூட்டி பார்லர் போய் முடி பராமரிப்பு செய்வீர்களா? எத்தனை நாளுக்கு ஒரு முறை சலூனுக்கு செல்வீர்கள்? மாசம் பட்ஜெட் சமாளிக்க முடியுதா?
  • உங்களுக்கு கேர்ள் பிரெண்ட் இருந்துச்சுன்னா, நீங்களும் உங்க கேர்ள் ப்ரெண்டும் மாற்றி மாற்றி தலை வாரி  கொள்வீர்களா? மற்ற பொண்ணுங்க எப்போதாவது உங்கள் முடியை பார்த்து பொறாமை கொண்டு அலைந்து இருக்காங்களா?
  • உங்கள் அக்கா தங்கச்சியோடு, முடியை பிடித்து சண்டை போட்ட அனுபவம் இருக்கா? அப்படி யாரும் இல்லாத பட்சத்தில், தண்ணி பிடிக்க போகும் போது, குழாய் அடியிலாவது சண்டை போட்டதுண்டா?
  • உங்க வீட்டில் யாராவது டூர் போனால், வரும் போது உங்களுக்கு ஹேர் பின், பேண்ட்(Band), கிளிப் இதெல்லாம் வாங்கிட்டு வருவாங்களா?
  • கிரிக்கெட் விளையாடும் போது, தலை முடி டிஸ்டர்ப் பண்ணாதா?  அப்போது மட்டும் Band மாட்டிக் கொள்வீர்களா?
  • நீங்கள் blog வைத்திருந்தால், Hair Care பற்றி Post போடுவீங்களா?
  • உங்க கூந்தல் பற்றி எந்த பெண்ணாவது கவிதை எழுதி, காதலித்து பைத்தியமாய் அலைந்து இருக்காங்களா?


"இத பத்தி என்ன மயித்துக்குடா கேட்கற?" என்று கோபித்து கொள்ளாதிர்கள்.

யாராவது தெரிந்தால் பதில் கேட்டு சொல்லுங்களேன்.




அத்தனைக்கும் ஆசை படு



அத்தனைக்கும் ஆசை படு 
ஜத்குரு ஜாக்கி வாசுதேவ் சொன்னார்.

ஒன்றுக்கு தான் ஆசை பட்டேன்
எதிர் வீட்டு அங்கிள் 
அடிக்க வருகிறார்.



Jun 30, 2010

நிறங்களின் அரசி



உன்னை பார்த்து பழகிய நாள் முதலே
பல வண்ணங்களால்
எனது உலகையே  
கலகம் செய்தாய்.

நீல நிறங்களால்
வான் நீலத்தையும் நீர்த்து போக செய்தாய்.
பச்சை நிறங்களில்
பசுமை புரட்சி செய்தாய்.
மஞ்சள் நிறத்தால்
சூரியனையும் சுருங்க வைத்தாய்.
சிவப்பு நிறத்தால்
எரிமலையை குமுற வைத்தாய்.
இன்னும் பல
பெயர் அறியபடாத நிறங்களில்
மலர்களை மதி
மயங்க வைத்தாய்.

இறுதியாக கரிய நிறத்தால்
என்னை முழுதாக
இருளில் மூழ்கடித்தாய்.

நிறங்கள் அற்று  நான்.