Sep 10, 2010

பாஸ் (எ) பாஸ்கரன் - நமீதா திரை விமர்சனம்

என்னன்னே தெரியல இப்ப நான் போய் பார்க்கிற படமெல்லாம் ஓரளவுக்கு நல்லா இருக்கு. தமிழ் சினிமா இப்போ சிரிப்பு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமீப காலமாக நிறைய நகைச்சுவை படங்களாக வர துவங்கி இருக்கு. அந்த வரிசையில் சிவா மனசுல சக்தி படத்தோட இயக்குனரோட அடுத்த படம் "பாஸ் என்கிற பாஸ்கரன்."



ஹீரோ ஆர்யா, இவரை "பாஸ்" என்று எல்லோரும் கூப்பிட்டாலும், அரசு கலை கல்லூரில படிச்சப்ப எழுதுன நிறைய பரிட்சையில் "பாஸ்" ஆகாததனால் ஏகப்பட்ட அரியர்ஸ் வச்சுக்கிட்டு ஒவ்வொரு வருசமும் கஷ்ட(பிட்டு வச்சு) பெயிலாகி பெயிலாகி எழுதறார். (பெயில் என்கிற பெயில்கரன்).
இப்படியே எந்த வேலைக்கும் போகாம வேலை வெட்டி இல்லாம ஊரை சுத்திகிட்டு இருந்தாலும், சலூன் கடை வச்சு மத்தவங்களுக்கு முடி வெட்டி வேலை செய்து கிட்டு இருக்கிற தன்னோட நண்பன் சந்தானத்தை டார்ச்சர் பண்ணி படுத்தி எடுக்கிறார். ஆர்யாவோட அண்ணனுக்கு கல்யாணம் ஆக, அவருக்கு வர்ற பொண்டாட்டியோட தங்கையான ஹீரோயின் நயன்தாரா மேல இவருக்கு காதல் பச்சக்குன்னு வந்துடுது.

உடனே போய் தன்னோட அண்ணிகிட்ட நயனதாராவ பொண்ணு கேட்க, தண்டச்சோறா இருக்கிற உனக்கு எப்படி பொண்ணு கொடுக்க முடியும்ன்னு சொல்லி மூஞ்சில காரி துப்பாம அசிங்க படுத்திடறாங்க. தன்னோட அண்ணன், நயன்தாராவோட அப்பா, இப்படி எல்லோருமா சேர்ந்து மேலும் அவமான படுத்த, இவரும் ஆவேசத்தோட வீட்டை விட்டு வெளிய போய் அண்ணாமலை ரஜினி மாதிரி சீக்கிரம் பணக்காரனாகும் 'முடி'வோடு சந்தானதோட சலூன்ல செட்டில் ஆகிறார். என்ன பண்ணி பெரிய ஆள் ஆகலாம் அப்படின்னு யோசிக்கும் போது, தன்னை மாதிரி பிட்டு வச்சு பெயில் ஆன பத்தாம் வகுப்பு பசங்களுக்கு எல்லாம் டுடோரியல் சென்டர் ஆரம்பிச்சு அவர்களை பாஸாக்கி தானும் எப்படி வாழ்க்கைல முன்னேறுகிறார் என்பது தான் கதை.

ஆர்யா நடிப்பில் அசத்துகிறார். காமெடியும் இயல்பாய் வருகிறது. ஆனாலும் கிளைமாக்ஸ்ல வர்ற ஜீவா காமெடில இவரையும் மிஞ்சி விடுகிறார். ஹீரோயின் நயன்தாரா எப்பவும் போல ஏதோ ஒரு பவுடர மூஞ்சில பூசிகிட்டு ஏதோ நடிக்கிறார். இவங்கள பார்த்தாலும் ஏதும் மூடு வரல. இவங்கள பத்தி எழுதவும் மூடு வரல.ஆனா படத்துல ஆர்யாவில் இருந்து ஜீவா வரைக்கும் சூப்பர் பிகருன்னு அடிக்கடி சொல்றாங்க. ஒருவேளை அவங்க பிகருன்னு சொல்றது முகத்தை பார்த்து இல்லையோ?



"தலதளபதி" சந்தானத்துக்கு போஸ்டர் விளம்பரத்துல அதிகமாக முக்கியத்துவம் கொடுத்த மாதிரி படத்துலயும் ஹீரோயின விட அதிகமான காட்சிகளில் வருகிறார். நன்கு வயிறு வலிக்க  சிரிக்கவும் வைக்கிறார். கூட நடிக்கிற ஹீரோவையே பயங்கரமாக கிண்டல் பண்றது கவுண்டமணிக்கு அப்புறம் சந்தானம் தான். இவர் வர்ற சீன் எல்லாமே கைதட்டல் தான். படத்துல வர்ற அந்த கடன்காரனோட மகனா வர்ற குண்டு பையனும் நல்ல நடிச்சிருந்தான். கமல், பரத், விஜய் இப்படி படத்தில் நிறைய நடிகர்களை கிண்டல் பண்ணி இருக்காங்க.

இசை யுவன். "யார் அந்த பெண் தான்" பாட்டு மற்றும் பின்னணி ஓசை ஓகே. மத்தபடி பெரிய அளவுக்கு ஏதும் இல்ல. இது இயக்குனருக்கு ஒரு நல்ல படமாக அமைந்திருக்கலாம். யுவனுக்கு அல்ல.

படத்தோட ஆரம்பத்துல ஆர்யா அரிவால எடுத்துகிட்டு வில்லன தொறத்துவார். அதுக்கு கடைசில ஏன்னு காமிச்சு இருப்பாங்க. சான்சே இல்ல.
கண்டிப்பாக சந்தோசமா குடும்பத்தோடு போய் பார்க்கலாம்.

நமீதா டச் : பாஸ், Pass ஆகிட்டான்.




Sep 6, 2010

கடவுளின் ஆசை - தண்டர் கவிதைகள் 1.



சிட்டியெங்கும் அடுக்கடுக்காய்
ஆடம்பர மால்கள்.
கலர்கலராய் ஆடைகள், ஆபரணங்கள்.
வெள்ளையில் போதாது 
வாங்குவதற்கு தேவை
கறுப்பில் பணங்கள்.

எந்திரன் பட ரிலீஸ் ஆனா
டிக்கெட் கிடைக்குமா? 
எதிர்பார்ப்பில் தமிழ் குடிமக்கள்.
தியேட்டர் கிடைக்குமா?
கலக்கத்தில் மற்ற பட தயாரிப்பாளர்களும்,
பிட்டு பட தயாரிப்பாளர்களும்.
இனியாவது கற்று கொள்ளுங்கள்
மடையர்களே 
கழக தயாரிப்பில் இணைந்து வெளியிட.

பார்கிங் கொறைஞ்சது
பத்து ரூபா.
டிக்கெட்டு வித்த விலையில
பாப்கார்ன் பாக்கெட்டு.
குடும்பத்தோடு தியேட்டர்
போன போஸ்டர் பாத்துட்டு
திரும்பி வந்துடலாம்.


இருட்டாய் கிடந்த
ஏழைகளின் குடிசைகளை
வண்ண தொலைகாட்சிகளால்
மிளிர வைத்த
தமிழக அரசு,
இன்னும் ஒளி சேர்க்க
டி.வி.டி பிளேயர்
இலவசமாய் தர முன் வருமா?

ஆட்சியை பிடிக்க கவலையில்லை
கொடுத்த காசுக்கு
வஞ்சகமில்லாமல் 
ஓட்டு போட
நாட்டில் உண்டு
பல கோடி சத்திய சீலர்கள்.

அடுத்த தேர்தல்ல
ஐம்பது காசுக்கு
அரை கிலோ பருப்பு
வழங்கும் திட்டம் வந்தால் போதும்
ஒரு ரூபா அரிசி வாங்கி
சாதம் வடிச்சு
சாப்பிட
சாம்பாரும் ரெடி.

ஏழை எளியவர்கள் உட்பட
எல்லோருடைய வாழ்க்கையும்
செம்மையாக இருக்க,
தமிழ் மட்டும் தான் மிச்சமாய் இருந்தது.
அதற்கும்
மாநாடு நடத்தி
மகிழ்வித்தாயிற்று.

மானாட மயிலாட
பார்க்க முடியல
கரண்டு  அடிக்கடி கட்டாகி போகுது.
விலைவாசி எகிறி போச்சு.
மாசமாசம் குடும்பம் நடத்த
கடன் வாங்க
எது கட்டுபடியாகும்?
அதுக்கு 
ஆக்டோபசதான் கேட்கணும் 
கந்து வட்டியா? மீட்டர் வட்டியா?
இப்போ 
நமக்கு மட்டுமில்ல
தமிழ்நாட்டுக்கே ஏழரைதான்.

சகல விதமான
ஆசைகளும் நிறைவேறி
சுக போகமாய் வாழ்ந்திட
இறைவனை தேடி போய்
கும்பிட்டால்,
கடவுளுக்கே
கலைஞரின் பேரனாகதான்
ஆசையாம்!!!







Sep 5, 2010

பலே பாண்டியா - நமீதா திரை விமர்சனம்



சரி இந்த படத்தோட விமர்சனம் பார்த்துட்டு போலாம்ன்னு பார்த்தா, நிறைய பேர் சிந்து சமவெளி படத்துக்கு தான் அதிகமா விமர்சனம் போட்டு இருந்தாங்க. நீங்க பள்ளிகூடத்துல சிந்து சமவெளி நாகரிகத்த பத்தி படிச்சு இருக்கலாம் (படிக்காதவங்க இங்க படிச்சு மனப்பாடம் பண்ணுங்க). ஆனா இந்த சினிமா சமவெளி ஒரு அநாகரிகம் என்று பரவலாக சொல்றாங்க (இந்த மாதிரி எல்லாம் படம் எடுத்து, சின்ன புள்ளைங்க மனசுல சாரி, பெரியவங்க மனசுல நஞ்சை விதைக்காதிங்க). அதனால நானும் அநாகரிகம் கருதி பலே பாண்டியா படத்துக்கு வண்டிய கிளப்பினேன்.

சரி படத்தோட ரிசல்ட் என்ன? இவரு பலே பாண்டியனா? இல்ல, பல்பு கொடுக்குற பாண்டியனா?

ஹீரோ பாண்டியன் (விஸ்ணு) எது செஞ்சாலும், துரதிஷ்டம் Vodafone dog மாதிரியே கூட பாலோவ் பண்ணிகிட்டே வருது. ஒரு கட்டத்துல வெறுத்து போய் நிறைய தடவ சாக முயற்சி பண்ணி, அதுவும் துரதிஷ்ட வசமாக முடியாம போகிறது. இதனால இவர் ஒரு பெரிய தாதாகிட்ட பத்தாயிரம் ரூபாய் கொடுத்து தன்னை கொல்ல சொல்லி வற்புறுத்துகிறார். அவரும் அதுக்கு சம்மதிச்சு பாண்டிய கொல்ல ஜாதகம் பார்த்து ஒரு நல்ல நாள் குறிச்சிடறார். இதுக்கு நடுவுல இவர் ஹீரோயின் பியாவ சந்திச்சு இவரது வாழ்க்கை மாற, இவர் செத்தாரா? இல்லையா? கடைசியா என்ன நடக்குது அப்படிங்கறத ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் காமெடியா  சொல்லி இருக்காங்க. கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்.
 

ஹீரோ விஸ்ணு இந்த கதைக்கு சரியான தேர்வு. இவ்வொரு முறையும் லக் இல்லாம இவருக்கு நடக்கிற விஷயம் எல்லாமே சிரிப்பு சர வெடிகள்.




பியா, அழகான சுருட்டை முடி குட்டி பிசாசு. குட்டி பொண்ணுக்கு குட்டை பாவாடை தான் அப்படின்னு இயக்குனர் சொல்லி இருப்பார் போல. கலைவாணர் விவேக் ஆங்கிலோ தமிழர் கேரக்டர்ல வந்து, அவர் பங்குக்கு அதகள படுத்தறார். அதுவும் அந்த ஒரு ரூபா அரிசி காமெடிக்கு தியேட்டரே அதிர்ந்தது.

ரவுடிகளாக வர்ற எல்லோருமே நல்லா பண்ணி இருந்தாங்க. படத்தில் வர்ற  அரசியல்வாதி ஒரு தடவ ஜாலியா குட்டிங்களோடு இருக்கும் போது அதை வீடியோ எடுத்து ஹீரோயினோட அப்பா வெளியிடபோறேன்னு சொல்லி மிரட்டுவாரு. அதுக்கு அந்த அரசியல்வாதி சொல்லுவாரு "பிரிண்ட் நல்லா இருந்துச்சுன்னா பார்த்துட்டு திருப்பி அனுப்பிச்சிடு. மிரட்டாத".

இசை பாடகர் தேவன் ஏகாம்பரம். மிகவும் சுமார் ரகம். என் பக்கத்துல உட்காந்திருந்த பெரியவர் ஒவ்வொரு தடவ பாட்டு போடும் போதும் என்னை பார்த்து "தம்பி பாட்டு முடிச்சவுடனே என்னை எழுப்பி விடு" அப்படின்னு சொல்லிட்டு தூங்கிகிட்டே இருந்தாரு. உண்மையாலும் பாட்டு மட்டும் இல்லைனா படம் நல்லா இருந்திருக்கும். இவர் பாடகர் அப்படிங்கறதனாலயோ என்னவோ இசையை விட பாடல் வரிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்.

இன்னும் இந்த தமிழ் சினிமால எத்தனை நாளைக்கு தான் இந்த பாட்டு வைக்கற கலாச்சாரம் இருக்குமோ தெரியல. என் பையன் பொறக்கறதுக்குள்ள பண்ணலைனாலும் பரவாயில்லை எனக்கு பேரன் பேத்தி பொறக்கறதுக்குள்ளவாவது இத நிப்பாட்டிகோங்க.

இயக்குனர் சித்தார்த் முதல் படத்துலையே நல்லா பண்ணி இருக்கார். வசனமும்
அருமை. வாழ்த்துக்கள் சித்தார்த்.

மதராசப்பட்டினம் படத்திற்கு அடுத்து, கல்பாத்தி அகோரம் சகோதரர்களின் இன்னுமொரு சிறந்த படைப்பு "பலே பாண்டியா".

நமீதா டச் : பலே பாண்டியா, கலக்கிட்ட.





Sep 3, 2010

ஹாய் கலைஞர் - கேள்வி பதில் பகுதி - 1

இது நகைச்சுவைக்காக மட்டுமே. யார் மனதையும் புண்படுத்துவதற்கு  இல்லை. (அப்பாடி தப்பிக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு.)




தமிழ்ல பிடித்த சில வார்த்தைகள்?

பாராட்டுகள், பத்திரங்கள். ( எல்லாமே பன்மைகளில் (more than one) இருந்தால் தான் விரும்புவீர்கள் போல.)

மிகவும் எளிதாக செய்ய முடியற காரியம்?

கடிதம் எழுதறது. (உங்க ஊரு தபால்காரருக்கு ஏகப்பட்ட வேலை. தண்ணியில்லா காடு மாதிரி, உங்க ஊரு போஸ்ட் மேன் ஆக வரவே எல்லோரும் பயந்து கிடப்பாங்க.)

அடுத்த தேர்தல்ல எல்லோருக்கும் இலவச டி.வி.டி பிளேயர் கொடுப்பிங்களா?

இல்லை. அத கொடுத்துட்டா நம்ம பேர புள்ளைக எடுக்கிற, நடிக்கற படத்தையெல்லாம் மக்கள் திருட்டு வி.சி.டி வாங்கி பார்த்துடுவாங்களே!. (நீங்க அறிவாலயத்துல இருக்கிறது கரெக்ட்டு தான்.)

திரைத் துறைக்கு இலவசமாக அரசு நிலங்கள் ஒதுக்கிய திட்டம் பற்றி?

எல்லாம் ஒரு முன்னோக்கிய பார்வை தான். (அது சரி. திரைத்துறையே இப்ப நம்மளோடதுதான.)

தொடர்ந்து திரைப்படங்களுக்கு வசனம் எழுத காரணம்?

என் வசனம் சிறப்பா இருக்கறதால தான். ( அதனால்தான்  சீக்கிரமாகவே சிறப்பு திரைப்  படமா கலைஞர் டிவில போட்டுடறாங்களா?)

அடுத்த டெல்லி பயணம்?

கூடிய சீக்கிரம். மக்களுக்காக. (யார் பெற்ற மக்களுக்கு? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.)

வரும் தேர்தலில் தி.மு.க வுக்கு ஓட்டு வாய்ப்புகள் எப்படி இருக்கு?

முதல்ல உன்னோட இந்த பதிவுக்கு எத்தனை ஓட்டு விழுதுன்னு பாரு. (மக்களே பார்த்து குத்துங்க. உங்களோட ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு "இன்க் ரப்பர்" இலவசமாக வழங்க படும். இன்க் ரப்பர் எங்களுக்கு எதுக்குன்னு கேட்கறிங்களா? ஏதோ என்னால முடிஞ்சது. உங்க வீட்டு குழந்தைங்களுக்கு இல்ல பக்கத்துக்கு வீட்டு குழந்தைங்களுக்கு கொடுங்க.)


Sep 1, 2010

நான் மகான் அல்ல - நமீதா திரை விமர்சனம்

இந்த வாரம் முழுதும் எதுவுமே எழுத யோசிக்க முடியல. சின்ன வயசுல கடவுள் கிட்ட நல்லா படிக்கணும்ன்னு வேண்டுகிற மாதிரி, இப்ப பதிவு எழுத ஏதாவது தீம் கிடைக்கணும்ன்னு வேண்டணும் போல.




படத்தோட தலைப்பை பார்த்து முதலில் ஒரு வித்தியாசமான கதை அம்சம் உள்ள படமாக இருக்கும் என நினைத்தேன். ஆனா படத்துல நினைத்த மாதிரி கதை அம்சம் இல்லைனாலும், திரைக்கதை அம்சமாக இருந்துச்சு.

தன்னோட பிரெண்டோட கல்யாணத்துல காஜல் அகர்வால பார்த்து சைட் அடிச்சு, லவ் பண்ணறாரு ஹீரோ கார்த்தி. இதற்கு இடையில கஞ்சா அடிச்சிகிட்டு காலேஜ் படிக்கிற ஒரு நாலு பசங்க, நிறைய பொண்ணுங்கள ரேப் பண்ணி கொன்னுகிட்டு இருக்காங்க. அந்த மாதிரி ஆகுற ஒரு கொலைக்கு, கால் டாக்சி டிரைவர் ஆக வேலை செய்யுற கார்த்தியோட அப்பா சாட்சி ஆக மாற, அவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிடறாங்க. உடனே இதை எல்லாம் மன்னிக்க நான் மகான் அல்ல ( படத்தோட தலைப்புக்கு சம்பந்தம் வந்துடுச்சா? )  என சொல்லி கார்த்தி, கத்தி இல்லாம புறப்பட்டு போய் அந்த பசங்க எல்லோருக்கும் பாடை கட்டறது தான் கதை.


தெலுங்குல "மகதீரா"வும், "ஆர்யா 2"  படமும் பார்த்ததில் இருந்து, காஜல எனக்கு நிறையவே பிடிச்சிருச்சு.  மிகவும் அழகான, அவ்வளவு பெரிய கண்ணு (கீழ இருக்கிற படத்த பாத்துட்டு கண்ணு மட்டும் தானா அப்படின்னு கேட்க கூடாது). "கோலிகுண்டு கண்ணு, கோவப்பழ உதடு" பாட்டு இவங்களுக்கு மிகவும் பொருத்தமா இருக்கும். இப்பவெல்லாம் காஜல் தான் தினமும் என் கனவுல வந்து கஜல் பாடறாங்க. ஹி! ஹி!







கார்த்தி துரு துருன்னு ஜாலியான கேரக்டர். காமெடி பண்றதுல விஜய்க்கு போட்டியா ( ;-) வர நிறைய சான்ஸ். இவருக்கு நல்ல நல்ல படமா அமையுது. காதல், சண்டைன்னு கலக்குறாரு. அதுவும் அவங்க அப்பா செத்ததுக்கு அப்புறம் பழிவாங்க புறப்பட்டு போகும் போது, அவரோட அண்ணன் மாதிரி இவரும் சிங்கம்ன்னு நிரூபிக்கிறார்.

யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. யுவன் பாடுன "கண்ணோடு காதல் வந்தால்" பாட்டு அசத்தல். "ஒரு மாலை நேரம்" பாட்டு படத்துல வரல. நானும் எங்கடா இடைவேளைக்கு அப்புறம் ஹீரோயினோட முகத்த ஒரு தடவ காமிச்சு, இந்த பாட்ட போட்டுருவான்களோ அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன். பரவால்ல அந்த மாதிரி டைரக்டர் ஏதும் think பண்ணலை.

படத்தோட முதல் பாதி காதல் ரொமான்ஸ், காமெடின்னு சூப்பரா போகுது. இரண்டாவது பாதி முழுதும் பழி வாங்கும் படலம். அதிக வன்முறை. அந்த பசங்க வர்ற சீன் எல்லாமே படு பயங்கரமா இருக்கு. பிரெண்டோட காதல், அவனோட காதலியையே கற்பழித்து கொல்றது, இது எல்லாமே இப்போ நம்ம நாட்டுல நடக்கிறத வெளிப்படுத்துற காட்சிகள்.

அதனால் குழந்தை குட்டிகளோட படம் பார்க்க போனிங்கன்னா, இடை வேளைக்கு அப்புறம் உங்க குழந்தைகளுக்கு ரெண்டு பாப்கார்ன் பாக்கெட் வாங்கி கொடுத்து கூட்டி கிட்டு வந்துருங்க.

இந்த படம் படு மொக்கையாக போய்ட்டா, இந்த மாதிரி படத்த பார்க்க நானும் மகான் அல்ல என்று நமீதா டச் கொடுக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா படம் எஸ்கேப் ஆகிடுச்சு. அதனால,

நமீதா டச் : நான் மகான் அல்ல, இனிது இனிது இடைவேளை வரை.



டிஸ்கி: நமீதா பெயரை ஹிட்ஸ்க்காக மட்டுமே உபயோக படுத்தியுள்ளேன். இதை தவிர, சத்தியமாக எனக்கும் நமீதாவுக்கும் வேறு எந்த விதமான தொடர்பும் இல்லை.