Oct 24, 2010

சுந்தர் சி in பில்லா 2 - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க) - 24 Oct 2010

தற்போது பெரிய படம் ஏதும் ரிலீஸ் ஆகாததனால் சினிமா ரசிகர்களும், வலைபதிவர்களும் ரொம்பவே கஷ்ட படுகிறார்கள். தீபாவளிக்காவது ரிலீஸ் பண்ண விடுவீங்களா? அய்யா, கலாநிதி மாறன் அவர்களே! என்னோட பிரெண்டு ஒருத்தன் எந்திரன் படத்த நிறைய தடவ பார்த்து சலிச்சு போய், இப்ப "தொட்டு பார்" படத்தை அஞ்சு தடவையும், கொசுவர்த்தி சுருள் தலையர் சுந்தர்.சி படம் "வாடா" - வை ஆறு தடவையும் தியேட்டர்லயே போய் பார்த்து  விட்டான். கடைசி தடவை பார்க்கும் போது கூட்டம் இல்லாத காரணத்தினால், ஆபரேட்டர் படத்தை ஓட்ட மறுக்க, இவனே படத்தை ஒட்டி பார்த்துள்ளான்.

தற்போது எனக்கும் பதிவு போட எந்த மேட்டரும் கிடைக்கவில்லை என்றாலும் இந்த மாதிரியான படங்களை பார்த்து நமீதா விமர்சனமாக போட்டால், அது நமீதாவின் பெயருக்கு களங்கமாக அமைந்து விடும் என்கிற காரணத்தால், அது அப்படியே நிராகரிக்க பட்டது.



மேலே உள்ள இந்த ஸ்டில்லை தற்செயலாக ஒருமுறை பார்த்த விஷ்ணுவர்த்தன், சுந்தர்.சி யின் Gun பிடித்திருக்கும் ஸ்டைலையும், கோட் போட்டிருக்கும் அழகையும் பார்த்து பில்லாவின் அடுத்த பார்ட்டில் இவரை போடலாம் என்று முடிவு எடுத்திருப்பதாக நம்ப தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தல அவர்களுக்கு புதிய தலவலியாக சுந்தர்.சி அவர்கள் உருவெடுத்துள்ளார்.



ஜினிய நிறைய பேரு கடவுள் என்கிற ரேஞ்சுக்கும் அவரு படம் ஓடுற தியேட்டர கோவில் ஆகவும் பாவித்து பாலபிசேகம் செய்து வணங்கி வருகிறார்கள். இந்தியா முழுதும் ஊர்வலத்த முடிச்சுட்டு, சாமி இப்போ மலை ஏறிடுச்சு, இமய மலை. அதனால பக்த கோடிகள் எல்லோரும் உங்கள் பால் கலசங்களை எல்லாம் எடுத்து கொண்டு, தியேட்டரை விட்டுவிட்டு இமயமலைக்கு நடை பயணத்தை மேற்கொள்ளுங்கள். வைகோவை வேண்டுமானால் கேட்டுபாருங்கள். நடை பயணம் என்றால், அவர் துணைக்கு வந்தாலும் வருவார்.
                                              

ன்னோட ஆபிசுல புதுசா சேர்ந்து இருக்கிற ஒரு ஹிந்தி பிகரு என்னை பார்த்து அடிக்கடி லுக்கு விட்டு லேசா சிரிக்குது. நாமளும் எத்தனை நாளைக்கு அச்சா அச்சான்னு சொல்லியே சமாளிக்கறது. அதனால நானும் அந்த பிகர கணக்கு பண்ணலாம்ன்னு கணக்கு டியூசன் சாரி, ஹிந்தி டியூசன்க்கு வேளச்சேரில இருக்கிற ஒரு டீச்சர் வீட்டுக்கு போய் கத்துக்கிட்டு இருக்கேன். இப்பதான் உயிர் எழுத்து மெய் எழுத்துன்னு கொஞ்சம் கொஞ்சம் எழுத ஆரம்பிச்சிருக்கேன். ஒரு நாள் அவங்க வீட்டுக்கு போய் காலிங் பெல் அடிச்சிட்டு உள்ள போனேன். அப்போது மேடம் "கிளாஸ் ரூம்ல போய் வெயிட் பண்ணுங்க வந்துடறேன்னு" சொல்வதற்கு பதிலாக "பெட் ரூம்ல போய் உட்காருங்க வந்துடறேன்" ன்னு வாய் தவறி சொல்லிட்டாங்க. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!. இருந்தாலும் என் மனசுல எந்த தப்பான எண்ணமும் இல்லாததால் நான் நேராக போய் கிளாஸ் ரூமில் உட்காந்துட்டேன். ஆனா இந்த கவனிக்க பட கூடாத விஷயத்தை, அந்த டீச்சரோட புருஷன் கவனிச்சுட்டார்.





Oct 14, 2010

எமியும், அக்டோபசும்





அடுத்த ஜென்மத்திலாவது
நீ என்னை காதலிப்பாய் என்று
ஆக்டோபஸ் பால்(Paul)
ஆருடம் சொன்னால்
சற்றும் நேரம் தாழ்த்தாமல் 
இப்போதே தற்கொலை செய்து கொள்வேன்
அவசர அவசரமாய்.



Sep 29, 2010

காமன் வெல்த் காமெடி ஷோ - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

ஆபாயில் போட்டு ரொம்ப நாள் ஆச்சு. என்ன காரணம்ன்னு கேட்டிங்கன்னா? அவனவனுக்கு பிகர் கிடைக்காம வாழ்க்கைல ரொம்ப குஷ்டமா இருக்கு. இதுல ஆபாயிலாம், ஆம்லேட்டாம்.





This month going to be ENTHIRAN month not Octobar. எந்திரன் 1ம்  தேதி, எந்திரன் படம் ரிலீஸ்.
 தமிழர்களே! பெருமை கொள்ளுங்கள். நம் பெருமைகளை எத்திக்கும்  பரப்புவான் எந்திரன். தீபாவளி ரயில் டிக்கெட்ட விட எந்திரன் பட டிக்கெட் மிகவும் வேகமா விற்று தீர்ந்திருச்சாம். படம் வெளிவர்றதுக்கு முன்னாடியே சன் பிக்சர்ஸ் போட்ட பணத்துக்கு அதிகமாகவே எடுத்து விட்டார்கள் என்று statistics சொல்லுது. மக்களே, சீக்கிரமே எந்திரன் படத்த போய் பார்த்தறாதிங்க! அப்புறம் இன்னும் ரெண்டு மாசத்துக்கு வேற எந்த படமும் பார்க்க முடியாது. முதல் வாரத்தில் போய் படம் பார்த்தால், ரசிக கண்மணிகளின் காட்டு கத்தலில் ஒளியும் ஒளியும் மட்டும் தான் பார்க்க முடியும். அதே மாதிரி, சன் நெட்வொர்க் சேனல்களில் எல்லாமே எந்திரன் விளம்பரகளுக்கு நடுவில் மத்த நிகழ்ச்சி போடுவாங்க. ஆனால் எந்திரன் பாட்டோ, இல்ல படத்தின் வேற எந்த சீனோ அவ்வளவு சீக்கிரம் போட மாட்டாங்க. அப்புறம் தியேட்டர் எல்லாம் என்ன $%?&!# கட்டி வச்சிருக்காங்க?

சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கும் போது ஜுராசிக் பார்க், அனகோண்டா மாதிரி படங்களை எல்லாம் அஞ்சு ரூபாவோ இல்ல ரெண்டு ரூபாவோ தர சொல்லி எல்லோரையும் ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு போய் படம் காமிப்பாங்க. அதுபோல எந்திரன் படத்துக்கும் குறைஞ்சது 50 ரூபாயில் பள்ளி மாணவர்களுக்கு காமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?




காமன் வெல்த் காமெடி ஷோ, சாரி!!! விளையாட்டு போட்டி ஒரே இடி முழக்கத்தோடு களை கட்டத் தொடங்கிடுச்சு. ஹி! ஹி! கூரைல இருந்து பாலம் வரைக்கும் எல்லாமே வரிசையா இடிஞ்சு விழுகுது. இதனால பளு தூக்கும் வீரர்களுக்கு எல்லாம் நிறைய வேலை இருக்கு. இடியறத எல்லாம் அப்புறப் படுத்தனும் இல்லையா?. இந்தியன் நியூஸ் மீடியாக்கள் எல்லாம் அடுத்து என்ன இடிஞ்சு விழும்ன்னு கேமரா வச்சுக்கிட்டு பரபரப்பா கண்காணிச்சு கிட்டு இருக்காங்க. கல்மாடி பற்றிய ஜோக்குகள் சர்தார்ஜி ஜோக்குகுளை விட மிகவும் பிரபலம் ஆகிடுச்சு.

காமன் வெல்த் போட்டி நடத்தவே இவ்வளவு கஷ்டபடுற இந்தியாவுக்கு, இனி ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டி நடத்துவதற்கான வாய்ப்பு கூட கண்டிப்பா கிடைக்காது. ஒருவேளை அதிகமாக காசு கொடுத்து ஒலிம்பிக்ஸ் போட்டி நடத்துவதற்கான வாய்ப்பை இந்தியா பெற்றாலும், அப்போதும் காமன்வெல்த் போட்டியை போன்றே ஊழல்கள் நடைபெற்று, பங்கு பேரும் வீரர்கள் மீது கட்டிடம் எல்லாம் இடிந்து விழுந்து அதுவே ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியாக மாற வாய்ப்பும் அதிகமாக உள்ளது. விளையாடரதுலையும், விளையாட்டு நடத்துவதிலும், சீனாவோடு நாம போட்டி போட முடியாது. சரி, சீனாவுல கம்யுனிசம் ஆட்சி நடக்குது, அதை இந்தியாவுலயும் கொண்டு வாங்க. பார்க்கலாம்.



தமிழ்நாட்டுல விலைவாசி எக்கசக்கமா எகிறி போச்சு. நான் ரெகுலரா சாப்பிடற ஆந்திரா மெஸ்ல தான், தின கூலி வாங்கற ஆட்களும் சாப்பிடறாங்க. எப்படி இவங்க வாழ்க்கைய நடத்துறாங்க?. கலைஞர் ஆட்சியில மிடில் கிளாஸ் மக்களும் ரேசன் அரிசி வாங்கி சாப்பிடற கொடுமையான நிலைமைக்கு வந்துட்டதா எல்லோரும் புலம்பறாங்க. கருப்பு எம்ஜியார் ஆட்சிக்கு வந்தால் விலைவாசிய கட்டு படுத்துவாரான்னு தெரியாது. ஆனா, யாருக்கும் தெரியாம ஒவ்வொரு வீட்டுலயும் வந்து காதும் காதும் வச்ச மாதிரி ரேசன் பொருட்களை எல்லாம் டெலிவரி பண்ணிட்டு போய்டுவாரு. நாமளும் "எனக்கு வலிக்கலையே! வலிக்கலையே!" அப்படிங்கற மாதிரி, சீச்சீ நாங்கலாம் ரேசன் கடை பக்கமே போறதுல்ல அப்படின்னு வெளிய சொல்லிகிட்டு ரேசன் அரிசிய பொங்க வச்சு மகிழ்ச்சி பொங்க தின்னலாம்.



இது திரைப்பட துறையில் 3-D புரட்சி காலம். சென்னை சத்யம் தியேட்டர்க்கு போனால் ஆறு ஏழு படங்கள் 3-D படங்களாகவே இருக்கு. அனிமேஷன் படம் மட்டும் அல்லாமல் Narnia, Residence Evil போன்ற படங்களும் 3-D யிலே வெளிவருகின்றன. சத்யம் தியேட்டரில் பார்த்தால் ஒவ்வொரு தடவையும் 3-டி கிளாஸ் வாங்கவே தேவை இல்லாம இருபது ரூபா செலவாகுது. போன வாரம் தான் Step Up 3 படம்  3-D யில் பார்த்தேன். முதல் இரண்டு பார்ட் பார்த்து இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு படம் பிடிக்கலாம்.





Sep 28, 2010

"வாழும் நகரம்' டில்லி - நாட்டுக்கு தேவையான செய்திகள்



டில்லி, காமன்வெல்த் போட்டி நடக்கவிருக்கும், டென்னிஸ் மைதானம் அருகே பிடிபட்ட நான்கு அடி நீள நாகப்பாம்பு



அந்த பாம்பு எந்த பத்திரிக்கைன்னு கேட்டிங்களா?
இடிச்சு விழுகின்றதை எல்லாம் நாலு ஸ்டில்லு எடுத்து நியூஸ் போடலாமுன்னு வந்து இருக்கும். ஆனா அதுவே நியூஸ்ல வந்திருச்சு.


என் தலை'மையை' ஏற்கும் கட்சியிடம் மட்டுமே கூட்டணி - விஜயகாந்த்

உங்க தலைக்கு என்ன மை (dye) யூஸ் பண்றீங்க? அது நல்ல மையா இருந்துச்சுன்னா, எல்லா கட்சிகாரர்களுமே யூஸ் பண்ணுவாங்க.


"வாழும் நகரம்' டில்லி பிரதமர் வர்ணனை

ஆனா மத்த நாட்டுக்காரர்கள் இங்க வர்றதுக்கே பயந்து சாகறான்களே?



இளைஞர் காங்கிரசில் கோஷ்டி மோதல் தீவிரம்

கங்கிராட்ஸ்! வாழ்த்துக்கள். காங்கிரஸ்ல கோஷ்டி மோதல் வர்றது வேஷ்டி உருவுவது மாதிரி. ஈசியா வரும்.



மாட்டு கொட்டகையில் தங்க வைத்ததாக கணவன் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

மாட்டு பொண்ணுங்கறத வேற மாதிரி புரிஞ்சுகிட்டான்களோ?



த்ரிஷாவின் லிப் டூ லிப் முத்தத்தை மறுத்த நடிகர்!

ஹிப் டு ஹிப் வேணுமுன்னு கேட்டு இருப்பாரோ?



டாப்சிலிப்பில் யானை தாக்கி பாகன் 'உதவியாளர்' பலி

எவ்வளவு நாள் தான் பாகனே செத்துக்கிட்டு இருக்கிறது?





Sep 10, 2010

பாஸ் (எ) பாஸ்கரன் - நமீதா திரை விமர்சனம்

என்னன்னே தெரியல இப்ப நான் போய் பார்க்கிற படமெல்லாம் ஓரளவுக்கு நல்லா இருக்கு. தமிழ் சினிமா இப்போ சிரிப்பு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமீப காலமாக நிறைய நகைச்சுவை படங்களாக வர துவங்கி இருக்கு. அந்த வரிசையில் சிவா மனசுல சக்தி படத்தோட இயக்குனரோட அடுத்த படம் "பாஸ் என்கிற பாஸ்கரன்."



ஹீரோ ஆர்யா, இவரை "பாஸ்" என்று எல்லோரும் கூப்பிட்டாலும், அரசு கலை கல்லூரில படிச்சப்ப எழுதுன நிறைய பரிட்சையில் "பாஸ்" ஆகாததனால் ஏகப்பட்ட அரியர்ஸ் வச்சுக்கிட்டு ஒவ்வொரு வருசமும் கஷ்ட(பிட்டு வச்சு) பெயிலாகி பெயிலாகி எழுதறார். (பெயில் என்கிற பெயில்கரன்).
இப்படியே எந்த வேலைக்கும் போகாம வேலை வெட்டி இல்லாம ஊரை சுத்திகிட்டு இருந்தாலும், சலூன் கடை வச்சு மத்தவங்களுக்கு முடி வெட்டி வேலை செய்து கிட்டு இருக்கிற தன்னோட நண்பன் சந்தானத்தை டார்ச்சர் பண்ணி படுத்தி எடுக்கிறார். ஆர்யாவோட அண்ணனுக்கு கல்யாணம் ஆக, அவருக்கு வர்ற பொண்டாட்டியோட தங்கையான ஹீரோயின் நயன்தாரா மேல இவருக்கு காதல் பச்சக்குன்னு வந்துடுது.

உடனே போய் தன்னோட அண்ணிகிட்ட நயனதாராவ பொண்ணு கேட்க, தண்டச்சோறா இருக்கிற உனக்கு எப்படி பொண்ணு கொடுக்க முடியும்ன்னு சொல்லி மூஞ்சில காரி துப்பாம அசிங்க படுத்திடறாங்க. தன்னோட அண்ணன், நயன்தாராவோட அப்பா, இப்படி எல்லோருமா சேர்ந்து மேலும் அவமான படுத்த, இவரும் ஆவேசத்தோட வீட்டை விட்டு வெளிய போய் அண்ணாமலை ரஜினி மாதிரி சீக்கிரம் பணக்காரனாகும் 'முடி'வோடு சந்தானதோட சலூன்ல செட்டில் ஆகிறார். என்ன பண்ணி பெரிய ஆள் ஆகலாம் அப்படின்னு யோசிக்கும் போது, தன்னை மாதிரி பிட்டு வச்சு பெயில் ஆன பத்தாம் வகுப்பு பசங்களுக்கு எல்லாம் டுடோரியல் சென்டர் ஆரம்பிச்சு அவர்களை பாஸாக்கி தானும் எப்படி வாழ்க்கைல முன்னேறுகிறார் என்பது தான் கதை.

ஆர்யா நடிப்பில் அசத்துகிறார். காமெடியும் இயல்பாய் வருகிறது. ஆனாலும் கிளைமாக்ஸ்ல வர்ற ஜீவா காமெடில இவரையும் மிஞ்சி விடுகிறார். ஹீரோயின் நயன்தாரா எப்பவும் போல ஏதோ ஒரு பவுடர மூஞ்சில பூசிகிட்டு ஏதோ நடிக்கிறார். இவங்கள பார்த்தாலும் ஏதும் மூடு வரல. இவங்கள பத்தி எழுதவும் மூடு வரல.ஆனா படத்துல ஆர்யாவில் இருந்து ஜீவா வரைக்கும் சூப்பர் பிகருன்னு அடிக்கடி சொல்றாங்க. ஒருவேளை அவங்க பிகருன்னு சொல்றது முகத்தை பார்த்து இல்லையோ?



"தலதளபதி" சந்தானத்துக்கு போஸ்டர் விளம்பரத்துல அதிகமாக முக்கியத்துவம் கொடுத்த மாதிரி படத்துலயும் ஹீரோயின விட அதிகமான காட்சிகளில் வருகிறார். நன்கு வயிறு வலிக்க  சிரிக்கவும் வைக்கிறார். கூட நடிக்கிற ஹீரோவையே பயங்கரமாக கிண்டல் பண்றது கவுண்டமணிக்கு அப்புறம் சந்தானம் தான். இவர் வர்ற சீன் எல்லாமே கைதட்டல் தான். படத்துல வர்ற அந்த கடன்காரனோட மகனா வர்ற குண்டு பையனும் நல்ல நடிச்சிருந்தான். கமல், பரத், விஜய் இப்படி படத்தில் நிறைய நடிகர்களை கிண்டல் பண்ணி இருக்காங்க.

இசை யுவன். "யார் அந்த பெண் தான்" பாட்டு மற்றும் பின்னணி ஓசை ஓகே. மத்தபடி பெரிய அளவுக்கு ஏதும் இல்ல. இது இயக்குனருக்கு ஒரு நல்ல படமாக அமைந்திருக்கலாம். யுவனுக்கு அல்ல.

படத்தோட ஆரம்பத்துல ஆர்யா அரிவால எடுத்துகிட்டு வில்லன தொறத்துவார். அதுக்கு கடைசில ஏன்னு காமிச்சு இருப்பாங்க. சான்சே இல்ல.
கண்டிப்பாக சந்தோசமா குடும்பத்தோடு போய் பார்க்கலாம்.

நமீதா டச் : பாஸ், Pass ஆகிட்டான்.