Jun 28, 2011

கறை நல்லது - ஆபாயில்



மீப காலத்தில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் முழு நிர்வாணத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். இது தமிழ் சினிமா உலகத்தரத்தை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளமே!

தன் வாழ்வில் ஒரு உலகப்படம் எடுத்து விட வேண்டும் என முக்கும் உலகநாயகன் இதை முயற்சி செய்யலாம். இது வரவேற்க கூடியது தான் என்றாலும், பெரிசுகளின் நிர்வாணங்களை பார்க்க சகிக்க வில்லை. குடும்பத்தோடு இதை பார்க்கும் ஒவ்வொருவருடைய மனநிலையும் எப்படி இருக்கும்? என எண்ணிப் பார்க்கிறேன்.

சில மாதங்கள் முன்பு விஜய் டிவியில் "கறை நல்லது" என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான குறும்பட போட்டியை நடத்தியது சர்ப் எக்சல் (Surf Excel) நிறுவனம். விஜய் டிவி (ஊழல்) கறையில் படுத்து புரளும் இந்திய அரசியல்வாதிகளுக்காக, இதே தலைப்பில் தேசிய அளவில் ஒரு போட்டியை நடத்தினால் மட்டுமே சரியானதாக இருக்கும். அதே சமயம் அவர்களது திறமைக்கும் சவாலாக இருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.


நீங்கள் ஆங்கில சீரியல் டிராமா "Prison Break" இன் ரசிகராய் இருந்தால், இதை படிங்க. சூப்பராய் கலாய்த்து இருக்காங்க.



நான் கொஞ்ச காலமாய் பிளாக்கில் எழுதி கொண்டிருக்கிறேன். ஷூவுக்குள் மாட்டிகொண்ட சிறு கல், நம் காலை குத்திக்கொண்டே இருப்பது போல, எதற்கும் உபயோகமாய் இதுவரை எழுதியதில்லை என்ற குற்ற உணர்வு என் மனதை காயப்படுத்திக் கொண்டிருக்கிறது. நானும் அவ்வபோது ஆபாயில், நமீதா விமர்சனம், கவிதை என்று எழுதி ஒப்பேத்தி வருகிறேன். 

ஆனால் இப்போதெல்லாம் கவிதை எழுதவே பயமாய் இருக்கிறது. இணையத்தில் இருக்கும் சிலர் கவிதை எழுதுவதற்கு இலக்கணம், விதிமுறைகள் எல்லாம் இருக்கிறது என்று சொல்லி பயமுறுத்துகிறார்கள். கவிதை எழுத கோனார் நோட்ஸ் எழுதி விற்றாலும் விற்பார்கள். கவிதை எழுதி அவர்களிடம் அனுப்பி, அனுமதி வாங்கித்தான் பப்ளிஷ் பண்ண வேண்டும் என்கிறார்கள். அப்படியில்லாமல் நீங்கலாக எதோ ஒன்று எழுதி வெளியிட்டால், அதற்கு சொற்குற்றம், பொருள் குற்றம், 2G குற்றம் என்று நிறைய குற்றங்கள் கண்டு பிடித்து சொல்வார்கள்.

ஆனால் ஒரு பிரபல பதிவர் நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் பயன்படக்கூடிய நல்ல விஷயங்கள் பற்றி எழுதுகிறார். அவர் சமுத்ரா. நான் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படும் பதிவர்களில் இவரும் ஒருவர். இவரை நான் இங்கு அறிமுகப் படுத்தவில்லை என்பதே உண்மை. ஆனால் அவர் என்னை அறிமுகப் படுத்தினார் அறிவியலுக்கு.

அறிவியலையும், ஆன்மிகத்தையும் கலந்து கட்டி இவர் எழுதும் "அணு, அண்டம், அறிவியல்" மூலம் நான் சின்ன வயதில் மனப்பாடம் செய்து படித்த விசயங்களை எளிதில் புரிய வைக்கிறார். கலைடாஸ்கோப் என்ற அருமையான தலைப்பில், சுவாரஸ்யமான நிறைய விசயங்களைப் பற்றி எழுதுகிறார். சங்கீதம், சங்க கால இலக்கியம் என பல விசயங்களில் இவரது புலமை என்னை புல்லரிக்க வைக்கிறது.

இவரது ஒரு பதிவில் சம்பந்தம் இல்லாத சில வார்த்தைகளை கொடுத்து, அதை ஒரு வாக்கியமாக மாற்றும் போட்டியை வைத்தார். அவர் கொடுத்த வார்த்தைகள்

யானை, ஜோதிகா, இன்ஸ்பெக்டர், கொசுவர்த்தி, கப்பல்.

இவைகளை நான் உபயோகித்து, நான் எழுதிய வாக்கியம்.

கப்பல் கண்ணழகி, 
யானை தொடையழகி, 
ஜோதிகாவை 
இன்ஸ்பெக்டர் அணைத்த அணைப்பில் 
கொசுவர்த்தி புகைந்தது
பொறாமை தீயில்.



ணையத்தில் அவ்வப்போது பதிவர்கள் அடித்து கொள்வதற்காகவே எதோ ஒரு விஷயம் கிடைத்து விடுகிறது. முன்பு லிவிங் டுகெதர். இப்போது சாரு சாட்டிங். இது 2G சர்ச்சையை விட பெரிதாய் உருவெடுக்கும் என வலையுலக வல்லுனர்கள் கணிப்பு தெரிவிக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் சர்ச்சை என்று புத்தகம் வெளியிட்டதை போல சாரு சாட்டிங் சர்ச்சை என்று இதை ஒரு புத்தகமாக கூட முன்னணி பதிப்பகம் வெளியிடலாம். வெளியில் மாட்டாதவரை நீங்களும் உத்தம புத்திரர்களே!. "த்தா! மாட்டிட்டானா?" என்று நம்முள் நிறைய பேர் கைத்தட்டி சந்தோசப் பட்டிருப்போம். இந்த பதிவிற்கு "சாரு சாட்டிங்" என்று தலைப்பிட்டு நானும் பப்ளிஷ் செய்து இருக்கலாம். ஆனால் இப்போதைக்கு நல்லவன் என்றே காட்டிக்கொள்ள விரும்புகிறேன். இவர்கள் அடித்து கொள்வதை படிக்க கண்கோடி வேண்டும். சாவுங்கடா!


என் ட்வீட்ஸ் (kathirnk):


1. துணிக்கடையில் எனக்கு பிடித்தமான ஒரு துணியை செலக்ட் செய்து கொண்டிருந்தேன். அப்போது பின்னாலிருந்து ஒரு குரல். "சார், இது கிட்ஸ் செக்சன்"

2. நீங்கள் ஒரு பிரபல டிவிட்டராக இருக்கும் போது, உங்கள் தேசிய மற்றும் உலக பாலோயர்சை திருப்திபடுத்த தமிழ், ஆங்கிலத்தில் டிவிட்டுவது அவசியமாகிறது

3. Twitter says "Your tweet was over 140 characters. You'll have to be more clever". What is the connection? Can anybody tell? 

ஒரு ஜோக்

ஒரு இன்டர்வியுவில் ஒரே காரணத்திற்க்காக, ஒரு பையன் ரிஜெக்ட்டும், ஒரு பொண்ணு செலக்ட்டும் ஆனார்கள்.

அந்த காரணம்: ரெண்டு பெரும் இன்டர்வியு எடுப்பவர் முன்னால், சட்டையின் முதல் பட்டனை திறந்து வச்சிருந்தாங்க.




Jun 24, 2011

உயிர் தின்னும் தேவதை




உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு.
கிளைகளை விரிக்கும்  
ஒற்றையடி பாதைகள் 

எனக்கு பின்னே அவள் வந்து கொண்டிருக்கிறாள்.

உருண்டு திரண்ட அனகோண்டா விழிகள்.
உயிருடன் விழுங்கப்பட்டு
விடும் அச்சத்தில்
மூச்சிரைக்க வேகமாய் நடக்கிறேன்.

இருளின் பயத்தை கொடுக்கிறது
அவள் கண் மையின் கருமை.

காற்றை கிழிக்கும் அவள் பேய் சிரிப்பில்
கரைபுரண்டோடும் நீரோடையின் 
சப்த நாடியும் அடங்கி போகிறது.

நடுநிசி இரவை விட, நடுபகலே 
அடுத்த அடி நகர விடாமல் 
பயமுறுத்துகிறது.

எந்தவொரு இடத்தை பார்த்தாலும் 
அவள் அங்கு நின்று கொண்டிருப்பதாய் 
ஒரு மாயை.

நீரில் விரல் எரியும் குளிரில்  
இழுத்து போர்த்திய போர்வைக்குள்
அனல் அலையாய் பரவுகிறது.

ஒரு நேரத்தில் 
மரணமும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு
என நம்ப தொடங்குகிறேன்.
ஆபத்தை நோக்கி என் கால்கள்
மெதுவாய் முன்னேறுகின்றன

என்னுடன் வந்த நிறைய பேர் இறந்திருக்க கூடும்.
நான் இறந்துவிட்டேனா?
இன்னும் தெரியவில்லை.



Jun 17, 2011

God must not be Crazy (என் ட்ரெக்கிங் அனுபவம்)

ஜூன் மாதத்தில் இமயமலை பிரதேசத்தின் குழு மணாலியின் கிழக்கே அமைந்துள்ள கசோல்(Kasol) என்ற பகுதியில் பத்து நாள்  ட்ரெக்கிங் போயிருந்தேன். என் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வாக அது அமைந்தது ஆச்சர்யமே. அது போல ஒரு அனுபவத்தை பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. 

அங்கு இருந்த பத்து நாட்களில் பேஸ் கேம்ப்பை தவிர, மற்ற இடங்களில் செல்போன் நெட்வொர்க் அதிகம் கிடைக்கததால் எல்லா நாட்களும் மகிழ்ச்சியாக கழிக்க முடிந்தது. ஒரு சில நெட்வொர்க்குகள் மட்டுமே அங்கங்கு கிடைத்தது. அந்த நாட்களில் தமிழ் நாட்டை பற்றிய எந்த ஒரு செய்தியும் தெரியவில்லை.

ரஜினி இன்னும் உயிரோடு இருக்காரா?
கனிமொழியின் கதி என்ன ஆச்சு? ஜாமீன் கிடைத்ததா?
சினிமாகாரங்க யாருக்காவது பாராட்டு விழா எடுத்தாங்களா?
தமிழ் தாத்தா கருணா லூசுத்தனமாய் ஏதாவது அறிக்கை விட்டாரா?
ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு சொர்க்கபுரியா ஆகிடுச்சா?

இப்படி எதை பற்றியும் தெரியாமலே சுற்றி கொண்டிருந்தேன்.

என் முதல் விமானப் பயணமும் அதில் தான் அமைந்தது. ஜன்னல் ஓர இருக்கை வேறு. ஏர் இந்தியா பனி பெண்கள் பனியை போன்றே வெள்ளை வெள்ளையாய் அவ்வளவு அழகாய், கண்களுக்கு காண குளிர்ச்சியாய் இருக்கிறார்கள். இந்திய காலாச்சார உடையான சேலைதான் அவர்கள் டிரஸ் கோடு. ஜன்னலுக்கு வெளியே வெள்ளை மேகங்கள். உள்ளே வெள்ளை இடுப்பு. எனக்கு எதை பார்ப்பது என்ற மிக பெரிய தடுமாற்றம் ஏற்பட்டது. இதற்கு மேல் நான் விவரித்தால் நன்றாக இருக்காது.

http://www.yhaindia.org/ என்ற அமைப்பின் மூலமாகத்தான் இந்த ட்ரெக்கிங்கிற்கு சென்றோம் நானும் என் நண்பன் தமிழ் அரசனும். அரைகுறையாய் சில ஹிந்தி வார்த்தைகள் மட்டும் தெரிந்து கொண்டு சலோ(Chalo) என்று கிளம்பிவிட்டோம். ஆட்டோகாரன் முதல், எங்களிடம் பேசும் எவரிடமும் "ஹிந்தி நஹி மாலும்" என்று சொல்லிவிட்டு தான் அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்கே தயாராவோம். நாங்கள் டெல்லியில் ஹிந்தி தெரியாமல் கஷ்டப் படுவதற்கு காரணமான தமிழக அரசியல்வாதிகளும் அதே தலைநகரில் துன்பம் அனுபவித்து கொண்டிருந்தார்கள் வேறுவகையில்.




 காலையில் டெல்லியில் தரை இறங்கியவுடன், குதுப்மினாருக்கு சென்று கோபுரத்தை மல்லாக்கப் படுத்து ஒரு போட்டோவும், அடுத்து போய் செங்கோட்டைக்கு முன்னால் கம்பீரமாய் நின்று போஸ் கொடுத்து ஒரு போட்டோவும் எடுத்து கொண்டு அன்றைய சாயுங்காலம் கசோலுக்கு பஸ் பயணம் தயாரானோம். அடுத்தநாள் காலை பேருந்து கசோலை நெருங்க மழை லேசாய் தூறியது. பார்வதி ஆற்றின் கரை ஒட்டியே சாலை பயணம். இயற்கையின் அட்டகாசங்கள் அங்கிருந்தே ஆரம்பமானது. 

முதல் நாள்:
கசோலில் உள்ள YHAI Base Camp -க்கு வந்து சேர்ந்தோம். நான் பசி தாங்கமாட்டேன் என்று தெரிந்து உடனே கூப்பிட்டு நூடுல்ஸ் சாப்பிட கொடுத்தார்கள் கேம்ப் சமையல்காரர்கள். தெய்வங்கள் அவர்கள். முதல் நாள் நம் பெயரை மெடிக்கல் சான்றிதழ் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அடுத்த இரண்டு நாள் பயிற்சிகள். நான்காவது நாள் தான் ட்ரெக்கிங்-க்கு கிளம்ப முடியும்.

நாங்கள் தமிழில் பேசி கொண்டிருக்கும் போது, நீங்கள் தமிழா? என்று கேட்டு  என்று அறிமுகம் ஆனார்கள் இரண்டு தமிழர்கள். வரிஷ்டாவும், மகியும். அப்புறம் மொத்தமாய் பத்து தமிழர்கள் சேர்ந்தோம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுதும் நடைபெறும் SARPASS எனப்படும் இந்த ட்ரெக்கிங் ப்ரோக்ராமுக்கு, ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு குழு வந்திறங்கும். ஒவ்வொரு குழுவிலும் அதிக பட்சமாய் ஐம்பது பேர் இருக்கலாம். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, கல்கத்தா, நாக்பூர் ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்தார்கள். என் இன்னொரு நண்பன் வரமுடியாததால் எங்கள் குழுவில் 49 பேர் மட்டுமே. 



முதல் நாள் பெயர் பதிவு செய்த உடன் உங்களுக்கு ஒரு கூடாரம்(Tent) ஒதுக்கி விடுவார்கள். ஒரு கூடாரத்தில் பத்து முதல் பனிரெண்டு பேர் வரை தங்க வைப்பார்கள். மாடிவீட்டு மகான்களும் வசதி பாராமல் இங்கு தான் தங்க வேண்டும். யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. அதற்கு அப்புறம் ஷாப்பிங், சாப்பிட என்று நாய் மாதிரி எங்கு வேண்டுமானாலும் சுற்றி விட்டு சாயுங்காலம் திரும்பி விட வேண்டும். இந்த பகுதியில் வெளிநாட்டுகாரர்கள் அதிகமாய் சுற்றுகிறார்கள். குறிப்பாய் இஸ்ரேல்காரர்கள் இரண்டு மூன்று மாதங்கள் இருந்து குடித்து கும்மாளம் அடித்து பின்பு நாடு திரும்புகிறார்கள்.

சாயுங்கலாம் டீ நேரம் முடிந்தவுடன்,  இரவு விரித்து, போர்த்தி தூங்க கம்பளி போர்வை இரண்டும், மலை ஏறுவதற்கு உபயோக படுத்த ஒரு BAG ஒன்றும் கொடுப்பார்கள். அந்த கம்பளியின் எடை உங்களுக்கு அடுத்த நாள் காலையில் தான் முழுமையாக தெரியும்.

இரவு டின்னர் முடிந்ததும், கேம்ப் பயர் நிகழ்ச்சி. அன்றைய தினம் SARPASS முடித்த குழு மெம்பர்களுக்கு சான்றிதழ் வழங்குவார்கள். பிறகு கலை நிகழ்ச்சிகள் நடக்கும். பாட தெரிந்தவர்கள் பாடலாம். டான்ஸ், மிமிக்க்ரி என்று எது உங்களுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் செய்யலாம். அங்கே "நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்" என்று சொல்லிக்கொண்டு இரண்டு கேம்ப் லீடர்கள் இருக்கிறார்கள். நிறைய கண்டிசன் சொல்லி பயமுறுத்துவார்கள்.

நோ ஸ்மோகிங். 
நோ டிரிங்கிங். 
அப்புறம் பசங்க டெண்டுக்குள்ள  பொண்ணுங்க ஆரும் போககூடாது. பொண்ணுங்க டெண்டுக்குள்ள பசங்க ஆரும் போக கூடாது

என்று நாட்டாமை விஜயகுமார் மாதிரி மிகவும் கண்டிப்புடன் சொன்னார் ஒருவர். முக்கிய விஷயமான சாப்பாட்டை பற்றி சொல்ல வேண்டும்.

  1. காலை எழுந்தவுடன் காபி வித் பிஸ்கட். 
  2. எட்டு மணிக்கு பிரேக் பாஸ்ட். 
  3. மதியம் ஒரு மணிக்கு லஞ்ச். 
  4. சாயுங்காலம் ஐந்து மணிக்கு டீ வித் பிஸ்கட். 
  5. இரவு 7:30 க்கு டின்னர். 
  6. படுக்க போகும் முன் போன்விட்டா.
 சாப்பாட்டை சேர்த்து மொத்தமாய் பதினோரு நாளைக்கும் சேர்த்து அவர்கள் வாங்கும் கட்டணம் வெறும் மூவாயிரத்து இருநூறு மட்டுமே.

இந்த ட்ரிப் முடித்து வந்ததும் என் நண்பன் என்னிடம் கேட்டான்,

ஏன்டா? பசங்களையும் பொண்ணுங்களையும் அவங்க ஒரே டெண்டல தங்க வைக்கல?

நான்: "அப்புறம் டென்ட் உடைஞ்சு விழுந்துடும் கண்ணா!"

இரண்டாம் நாள்:

"அடடே! இந்த ட்ரிப் ரொம்ப ஜாலியா இருக்கே!" என்று சந்தோஷத்தில் தலையோடு இழுத்து போர்த்தி குப்புறப் படுத்து குறட்டை விட்டு தூங்கி விடாதிர்கள். அடுத்த நாள் காலை காபி குடித்தவுடன் உடற்பயிற்சி செய்யும் இடத்துக்கு ஓட விடுவார்கள். ஷு வைத்திருக்காத காரணத்தால் சிலரை YHAI உள்ளே உள்ள இடத்திலே மூன்று ரவுண்டு ஓட விட்டார்கள். ஓடி போனதிலே குளிர் எல்லாம் போய் வியர்வை வழிய ஆரம்பித்து விடும். கஷ்டப்படட்டு உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் கடைசியில் ஹா! ஹா! ஹா! என்று சத்தம் போட்டு அந்த வலியிலும் சிரிக்க வேறு சொல்வார்கள்.

எல்லாம் முடிந்து காலை சாப்பிட்டவுடன் அன்றைக்கு (பனி) போருக்கு, ஐ மீன் ட்ரெக்கிங் செல்லும் குழுவை வழியனுப்பி வைக்க வேண்டும். அடுத்து உங்களது இரண்டு மொத்த கம்பளி போர்வையை எடுத்து அவர்கள் கொடுத்த Bag இல் அடைத்து மாட்டி கொண்டு அருகில் உள்ள மலை பகுதியில் ஏற வேண்டும். இது உங்கள் எடையுள்ள பையை தூக்கி கொண்டு மலை மீது ஏறி நடக்க பழகும் ஒரு பயிற்சிதான்.





மூன்றாம் நாள்:

அடுத்த நாள் காலை உடற்பயிற்சி, உணவு எல்லாம் முடிந்த பின், பாறை ஏறுதல் பயிற்சி. இது பார்க்க நல்ல காமெடியான நிகழ்ச்சியும் கூட. உங்கள் இடுப்பில் கயிறை கட்டி விடுவார்கள். மறுமுனை பாறையின் மேலே உள்ள மரத்தில் கட்டி வைக்கப்படும். சின்ன சின்ன இடுக்குகளில் காலை வைத்து கஷ்டப்பட்டு ஏற வேண்டும். சில பேர் வெகு நேரம் பாறைகளை கட்டிபிடித்து கொண்டு ஆனந்தத்தில் திளைத்திருப்பார்கள். சிலர் மேலே இருக்கும் மரம் ஒடிந்து விடும் என்ற நல்ல எண்ணத்தில் ஏறாமலும் விட்டு விடுவார்கள்.

நான்காம் நாள்:

அன்றைக்கு நாம் ட்ரெக்கிங் செல்லவதற்கு மற்றவர்கள் கைதட்டி வழியனுப்பி வைப்பார்கள். மதிய உணவு லஞ்ச் பாக்ஸ்சில் போட்டு கொடுத்து விடுவார்கள்.


அன்றைக்கு ஆரம்பித்து ஆறு நாட்கள் ஆறு கேம்பிற்க்கும் மலைமலையாய் ஏறி இறங்க வேண்டும். ஒவ்வொரு கேம்பிற்க்கும் ஏழு கிலோமீட்டர்கள் முதல் பத்து கிலோமீட்டர்கள் வரை ஏறி இறங்கி நடக்க வேண்டும். ஒவ்வொன்றும் புதிது புதிதான அனுபவத்தை தந்தது. ஏழாவது நாள் பேஸ் கேம்பிற்கு வந்து விட வேண்டும்.

போகும் வழியில் எல்லாம் எம்ஜியார், இளையராஜா பாட்டிலிருந்து இன்றைய பாட்டு வரை எல்லா பாடல்களையும் பாடி கிழித்து காட்டாற்றில் ஓட விட்டோம். வெகு தூரம் நடந்து கால் வலிக்கும் போது "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" சரணம் பாடினோம். சாமியே சரணம் ஐயப்பா!

நடு நடுவே நமக்கென்று வாங்கி சாப்பிட கடைகள் போட்டிருப்பார்கள். டீ முதல் நூடுல்ஸ், ஆம்லேட், ஸ்நாக்ஸ் வகைகள் எல்லாம் கிடைக்கும். விலையும் நீங்கள் ஏறி வந்த உயரத்தை போல அதிகமாகவே இருக்கும். உயரம் ஏற ஏற விலையும் நேர் விகித்தில் ஏறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக இங்கே ஐந்து ருபாய் மேகி நூடுல்ஸ் விலை அங்கு 10, 20,30,40,50 வரை சென்றது.

அழகிய இடத்தில் அமைந்திருக்கும் பத்ரி கேம்பிற்கு சென்ற சில நிமிடத்தில் பனி கட்டி மழை பொழிய ஆரம்பித்தது. விவரிக்க முடியாத மகிழ்ச்சி. அப்போதே எனக்கு அனுபவித்து போதும் வீட்டிக்கு செல்லலாம் என்ற மன நிறைவு வந்தது.


ஒவ்வொரு கேம்பிற்க்கும் ஒரு கேம்ப் லீடர் இருப்பார். ஒரு கேம்பை சென்றடைந்ததும், 
சாப்பாடு நேரம் என்ன?, 
குடிக்க தண்ணி எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும்?, 
புழங்குவதற்கு தண்ணி எங்கு பயன்படுத்த வேண்டும்? 
என பின்பற்ற வேண்டிய அனைத்து விதிமுறைகளையும் சொல்லிவிடுவார். 

அவற்றில் முக்கியமானது சாப்பிட்ட பின் செல்ல வேண்டிய இடம். எல்லாம் திறந்தவெளி பல்கலை கழகம் தான். இந்த நிலப்பரப்பு ஆண்களுக்கு, இந்த நிலப்பரப்பு பெண்களுக்கு என்று ஏரியா பிரித்து கொடுத்து விடுவார்கள். டாய்லெட் பேப்பர் நீங்கள் வைத்திருக்க வேண்டியது அவசியம். டாய்லெட் பேப்பர் யூஸ் செய்வதா? இல்லை குளிர் தண்ணி யூஸ் செய்வதா? என்பது உங்கள் விருப்பம். பொதுவாக நீரோடை ஓரமாய் தான் கேம்ப் அமைந்திருக்கும். கை கழுவுவதற்கு குளிர் நீரை தொட்டால் விரல் எரியும். மக்கள் தண்ணியை வாட்டர் பாட்டிலில் பிடித்து கொண்டு அவ்வபோது காட்டுப் பகுதியில் மறைந்து விடுவர். பனிமலையில் அதற்கு போகும் போது ஒரு குழி தோண்டி அதில் காரியத்தை முடித்து மூடிவிட்டு வந்து விட வேண்டும். ஏற்கனவே மூடிய குழிகளை மிதிக்காமல் செல்வது உங்கள் சாமர்த்தியம்.



நகாரு என்ற கேம்ப் தான் மிக உயரமான கேம்ப் (13,800 ft). பனிமலையில் அமைந்துள்ளது. இங்கு பனிக்குள் ஒரு பைப்பை செருகி சூரியன் மறையும் வரை உருகி வழியும் நீரை பிடித்து சேமிக்கிறார்கள். எந்த ஒரு கேம்பிலும் சாப்பாட்டுக்கு குறை ஏதும் வைக்க மாட்டார்கள். நீங்கள் சுறுசுறுப்பாகவும் வலிமையுடனும் ஏறுவதற்காக சத்தான உணவுகளை தருவார்கள். ரொட்டியுடன் உருளை கிழங்கு கூட்டு அதிகம் கொடுப்பார்கள். அவர்கள் தருகிறார்கள் என்று இஷ்டத்திற்கு உருளை கிழங்கை சாப்பிட்டால், அப்புறம் உங்களுக்கு வாயால் பிரச்னை இருக்காது. வாயை கட்டு படுத்த வேண்டும் அல்லது மற்றதை கட்டு படுத்த வேண்டும்.





பேஸ் கேம்ப்பை தவிர வேறு எந்த கேம்பிலும் மின்சாரம் கிடையாது. அதனால் மாலை சூரியன் மறைவதற்குள் டின்னர் முடித்தாக வேண்டும். நகாரு கேம்பில் இருந்து கிளம்பும் போது காலை 2:30 மணிக்கெல்லாம் எழுந்து, காலை உணவு சாப்பிட்டு விட்டு 4 மணிக்கு SARPASS எனப்படும் பனிமலைப் பகுதியை கடக்க வேண்டும். அதிகம் வெயில் வந்து விட்டால் பனி உருகி நடக்கையில் வழுக்க ஆரம்பித்து விடும். பனி மலையில் இருந்து கீழே இறங்கும் போது, படுக்க வைத்து தள்ளி விடுவார்கள். அப்படியே சறுக்கி கொண்டு கீழே வரலாம். அருமையான அனுபவம். என்ஜாய் பண்ணுவதற்கு இயற்கையை இவ்வளவு அழகாய் படைத்த இறைவன் கண்டிப்பாய் முட்டாளாய் இருக்க முடியாது.



அங்கே உங்கள் சுமைகளை தூக்கி கொண்டு நடக்க சிரமப் பட்டால், போர்டர்கள்(Porter) இருக்கிறார்கள். எங்கள் குழுவில் மூன்று போர்டர் பெண்கள் வந்தார்கள்.



அவர்கள் அனாயசமாக இரண்டு பைகளை(bags) தூக்கி கொண்டு ஏறுகிறார்கள். மேலே படத்தில் உள்ள இந்த பெண் ஒருமுறை என்னிடம் எதோ கேட்க, நான் "ஹிந்தி நஹி மாலும்"  என்று சொல்ல, அவள் வேண்டுமென்றே

"ஆப் கா நாம் கியா ஹே?" என்று கேட்டாள்.
"கதிர்வேல்" என்று பதில் சொன்னேன்.
நான் தப்பாய் பதில் சொல்லிவிட்டேனா என்று மறுபடியும் ஆங்கிலத்தில்
What is your name?" என்று கேட்டாள்.
"கதிர்வேல்" என்று மறுபடியும் சொன்னதை கேட்டு சிரித்து விட்டாள்.

பத்து நாட்களில் எங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். எங்கள் எல்லோருக்கும் இருந்த ஒரே ஒரு குறை என்னவென்றால், பத்து நாட்களுக்கு குளிக்க முடியவில்லை. குளிக்கவும் கூடாது.

ஆனால் இந்த காரணம் தான் என் நெருங்கிய நண்பன் முருகன் அடுத்த ஆண்டு SARPASS செல்லுவதற்கு ஆர்வமாய் அமைந்தது என்று சொன்னால் அது மிகைஅல்ல. பையன் சென்னையிலே அதிகம் குளிக்க மாட்டான்.

இதை தவிர எனக்கு இருந்த மிக பெரிய வருத்தம், ஒரு நல்ல SLR கேமராவும், எக்ஸ்ட்ரா பேட்டரிகளும் இல்லாததுதான்.

கடைசி நாள் திரும்பி வரும்போது மணிக்கரன் என்ற ஊரில் வரும் இயற்கை வெந்நீர் ஊற்றில் குளித்துவிட்டு, அருகில் உள்ள குருத்வார் சீக்கியர்கள் கோவிலில் இலவச சாப்பாடு கொடுக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், அங்கே சென்று சாப்பிட்டுவிட்டு வந்தோம்.


எல்லாம் முடித்து சான்றிதல்கள் எல்லாம் வாங்கிவிட்டு டெல்லி வந்து சேர்ந்தோம். மெட்ரோ ரயில் மூலமாக ஏர்போர்ட் செல்ல, அங்குள்ள கஸ்டமர் கேர் பெண்மணியிடம் விவரம் கேட்டால், அவள் என்னுடைய காதலி போல ஹஸ்கி வாய்சில் பதில் சொன்னாள். மறுபடியும் புரியவில்லை என்று காதை  உள்ளே நுழைத்து கேட்டேன். மறுபடியும் ஒன்னும் புரியவில்லை. நான் டென்ஷன் ஆக வேண்டியதிற்கு பதிலாக அவள் டென்ஷன் ஆகி பேப்பரில் எழுதி கொடுத்தாள்.

ஒருவேளை நமக்கு தான் காது கேட்கவில்லையோ என்று "ஆர்குட்" என்ற நண்பனிடம் இதை சொன்னால், அவனும் அவள் மேல் மிக கோபத்தில்  இருந்தான். மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி வாய்பேச தெரியாதவள் எல்லாம் எதுக்கு கஸ்டமர் கேரில் இருக்கிறாள் என்பது தெரியவில்லை.

அடுத்த நாள் காலை மீண்டும்,
அதே ஏர்இந்தியா விமானம்.
அதே வெள்ளை மேகங்கள்.
அதே மனக் குழப்பம்.


பின் குறிப்பு: 
அடுத்த வருடம் இந்த ட்ரெக்கிங் செல்ல விரும்புவோர் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கமென்ட்டில் உங்கள் கேள்விகளை கேட்கலாம்.


May 24, 2011

20 Minutes to Heaven (ஆபாயில்)

எனக்கு வாழ்க்கைல பிடிக்காதது இரண்டு. பணமும், புகழும். நூறு பாலோவர்ஸ் கடந்து விட்டேன் என்று சொல்வது எனக்கு பெருமையாய் இல்லை. 

ஏனென்றால் வெட்டியாய் எழுதி பொழுதை கழிக்கிறேன் என்று மற்றவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதுதான். சச்சினை எனக்கு பிடிக்காது என்றாலும் சச்சினைப் போல, தொண்ணூறில் இருந்து நூறு பாலோவர்ஸ் வருவதற்குள் நிறைய காலம் ஆகி விட்டன. 



பிளாக் எழுதுவது மதுவை போல அதிக போதை தரக்கூடியது. அதிலும் பின்னூட்ட ஊறுகாய் தொடர்ந்து கிடைத்தால் நீங்கள் காலி. இட்லிவடை மாதிரி, பிரேக் நியூஸ்சை கூட தனி போஸ்டாய் போடா வேண்டி வரும். 

உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்களும் ஒரு பிளாக் எழுதுங்கள். ஆனால் பிளாக் எழுதி பெண்களை மடக்கி விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதிர்கள். இன்டர்நெட் கபேக்கு போறவங்கல்லாம் உங்க ப்ளாக் தான் படிப்பாங்க என்று தயவு செய்து தப்பு கணக்கு போட வேண்டாம்.

வெட்டியாய் வீட்டில் உட்கார்ந்து பிளாக் எழுதுவதை விட ஒரு பெண் பின்னால் வெட்டியாய் சுற்றலாம். ஆங்கிலோ இந்தியன் பொண்ணு பின்னால பன்னாடை மாதிரி சுத்திய பையனுக்கு எல்லாம் தேசிய விருது கொடுத்துட்டாங்க. ஆனால் ஆஸ்திரேலியா போய் தீவிரவாதியை மடக்கி பிடித்த கேப்டனுக்கு மாநில விருது கூட கிடைக்காதது அசிங்கம்.



பொண்ணுங்க கிடைக்கிறாங்களோ இல்லையோ, போஸ்ட்ல மேட்டர் எழுதறதுக்கு நம்ம பசங்க தான் மாட்றாங்க. இப்படி தான் நான் ஒவ்வொருத்தனையும் மிரட்டி கொண்டு உள்ளேன்.



திகாலை சரியாக மூன்று மணி இரண்டு நிமிடம் இருக்கலாம். என் அலைபேசி "அய்யய்யோ என் நெஞ்சு அலையுதடி" என்று அலறியது. இன்டர்நேஷனல் நம்பர். கனடாவில் இருந்து ஒரு பெண் வாசகர். தேர்தல் முடிந்து ரொம்ப நாள் ஆகுது. ஆனால் இன்னும் தேர்தலைப் பற்றி என்னோட கருத்தை ஏதும் ஏன் சொல்லவில்லை என்றும் மிகவும் வருத்தப்பட்டார். என் கருத்தை அறியாமல் அவர் உறங்க முடியவில்லை எனவும் கூறினார். காலையில் எழுந்து பல் துலக்கி விட்டு என் கருத்தை பதிவு செய்வதாக வாக்குறுதி கொடுத்தேன்.

மே 13-ம் தேதி அதிமுக கொளுத்திய வெடிச் சத்தம் என்னைப் போலவே பொது மக்கள் பலரையும், தீபாவளிக்கு மீதமான பட்டாசுகளை முழுதும் புத்தாண்டிற்கு வெடித்திருக்காமல் மே 13-ம் தேதி வரை வைத்திருந்திருக்கலாம் என எண்ண வைத்தது. ஜெயலலிதாவையே ரொம்ப நல்லவங்க அப்படின்னு சொல்ல வைத்தவர் தன்னலமற்ற பெருந்தலைவர் கலைஞர்.


கனிமொழி ஜெயிலுக்கு போய் ரொட்டி சாப்பிடறது மகிழ்ச்சியா இருந்தாலும், ரஜினி வீட்டுக்கு போய் சூப் குடிக்காதது தமிழ் குடிமக்களுக்கு ரொம்பவே கஷ்டமாய் இருக்கிறது. ஆனால் கலைஞருக்கு அதுவே தலைகீழாய் இருக்கலாம். 

விஜயகாந்த் மட்டும் இப்போது "தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு" என்ற பஞ்ச டயலாக்கை தள்ளி வைத்துவிட்டு, வடிவேலுவை மன்னித்து அவர் கூட ஒரு படம் நடித்தால் அடுத்த தேர்தலில் அவர் கட்சி இன்னும் அதிக தொகுதிகளில் வெற்றி பெரும். கொஞ்ச நஞ்சம் இருக்கிற திமுக ஓட்டும் விஜயகாந்துக்கு தான்.

தேர்தல் முடிவுக்கு பிறகு நம்ம டாக்டர் விஜய் ஒரு பேட்டி கொடுத்தார்.


"நான் சொன்னதுக்காக ஒட்டு போட்டு அதிமுகவை வெற்றி பெற வாய்த்த அத்தனை பொதுமக்களுக்கும் நன்றி"

இதனால யாருக்கு கேவலம்? மக்களுக்கா? இல்லை ஜெயலலிதாவுக்கா? இல்லை டமில் கலைஞருக்கா?

நல்லவேளை நான் அதிமுகவுக்கு ஒட்டு போடவில்லை.


அம்மா ஆட்சிக்கு பிறகு, தமிழ் நாட்டு ரவுடிகள் எல்லோரும் "திருட்டு ரயில்" பிடித்து ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்களாம். பேரரசு படங்களில் ரவுடிகளாய் நடித்தவர்களும் அவர்களுடன் சேர்ந்து ஓடியது தான் இங்கே பிரச்சினையே. தற்போது தன் படத்தில் வில்லனாய் நடிக்க ஆள் இல்லாமல் பேரரசு கோடம்பாக்கத்தில் அலைந்து வருகிறார். அதனால் வில்லன் கேரக்டரில் தானே நடிப்பதாய் தனக்கு "நெருக்கமான" நடிகைகளிடம் சொல்லி வருகிறாராம். அந்த படத்தில் அவரே ஹீரோவாய் நடிப்பதாயும் வதந்திகள் வலம் வருகின்றன.

அப்புறம் இன்னொரு ஆள் கூட தமிழ் நாட்டை விட்டு ஓடி டெல்லியில் டென்ட் அடித்து தங்கி வருகிறார். அவர்






ரு இளமையின் நீரூற்றை (Fountain of youth) தேடி போவதுதான் பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் நான்காவது பாகத்தின் கதை. அதில் நாயகி, சாகப் போகின்ற அவருடைய அப்பாவை (வில்லன்) காப்பாற்ற அதை தேடி போவார். அவர்களுக்கு இரண்டு வெள்ளி கிண்ணங்கள் கிடைக்கும். அதில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், அடுத்த கிண்ணத்தில் தண்ணீரோடு கடற்கன்னியின் கண்ணீரும் கலந்து இருக்க வேண்டும். இரண்டாவது கிண்ணத்தில் (கண்ணீர் உள்ளது)  இருப்பவற்றை குடிப்பவர்க்கு, முதல் கிண்ணத்தில் இருக்கும் (தண்ணீர் உள்ளது) குடிப்பவறது மீதி ஆயுளும் கிடைக்கும். படத்தின் இறுதியில் நாயகியும் அவருடைய அப்பாவும், இருவருமே சாகும் தருவாயில் இருப்பார்கள். அப்போது அவர்களில் இருவரில் ஒருவர் தான் இரண்டாவது கிண்ணத்தில் உள்ளதை குடித்து உயிரோடு இருக்க முடியும். கடைசியில் யார் தன் உயிரை விட்டு கொடுத்தார்கள் என்பது தான் கதை.

அது போல ஒரு சமயத்தில் கனிமொழியும் கருணாநிதியும் இருந்தால் என்ன செய்வார்கள். யார் விட்டு கொடுப்பார்கள்?

ஒரு க்ளு. தற்போது உள்ள நிலைமையில் ஒருவர் மட்டுமே தன் உயிரை தியாகம் செய்ய முன் வருவார்.

அவர் யார்?


ரு நாள் தொலைக்காட்சியில் "மதராசப்பட்டினம்" திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். கிளைமாக்ஸ் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. அதில் வயதான நாயகி, நாயகனின் கல்லறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார். அப்போது தன் பேத்தி வந்து அவரது தோளை தொட அப்படியே சரிந்து விழுவார். அவசர அவசரமாய் ஹாஸ்பிட்டல் எடுத்து செல்வார்கள். பரிசோதித்த டாக்டர் சொல்லுவார் "அவர் இறந்து 20 நிமிடம் ஆகிறது". உடனே அடுத்த காட்சியில் சொர்க்கத்தில் இருக்கும் நாயகனோடு நாயகி ஓடி சென்று கட்டி பிடிப்பார். 

இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது?

இன்னுமா பதில் தெரியாமல் கொட்ட கொட்ட முழித்து கொண்டு இருக்கிறீர்கள்?

சொர்க்கத்திற்கு செல்ல 20 நிமிடம் தான் ஆகும்.





ண்பர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்றால் இப்போதெல்லாம் பேச்சுலர் பார்ட்டி ஒன்றை கொடுத்தாக வேண்டும். அப்படிதான் கடந்த வாரம் என் நண்பன் பிரகாஷ் ஒரு ரெஸ்டாரென்ட்டில் டின்னர் பார்ட்டி வைத்தான். நாங்கள் பனிரெண்டு பேருக்கு மேல் இருந்தோம். பொதுவாக கல்லூரி தேர்வில் தெரியாத கேள்வியை கண்டும் காணாமல் பழைய காதலியை போல விட்டுவிடும் நம் மக்கள் மெனு கார்டில் தெரியாத அயிட்டங்கள் அனைத்தையும் ஆர்டர் செய்து சாப்பிட அளவிலா ஆர்வம் கொண்டுள்ளனர்.

பக்கத்துக்கு டேபிளில் இரு நவ யுவதிகள் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் கவனத்தை பெற ஒருவன் தட்டில் ஸ்பூன் வைத்து சத்தம் எழுப்பி கொண்டிருந்தான். இன்னொருவன் நாகரிகம் கருதி தந்தூரி சிக்கனை கூட சாப்டாக பிய்த்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.

சாப்பிட்டு முடித்து ஆறாயிரத்துக்கு மேல் பில் வந்தது. எங்கள் வயிறு நிறைந்தது.


"மன்மதன்" சொம்பு நடித்த வானம் படம் தவறுதலாய் பார்க்க நேர்ந்தது. ஹீரோயிச படங்களை விடுத்தது அவர் ஆஸ்கார் அவார்டுக்கு தகுதியான படங்களில் தற்போது தொடர்ந்து அவர் நடித்து வருவதாக மக்கள் ஆரவாரப் படுகிறார்கள். பன்றி சாக்கடை விட்டு வெளியே வந்து சாலையில் நடந்தாலும் பன்றிக்கு பெயர் மாறாது. படம், நிறைய சமுதாயப் பிரச்சினைகளை அலசுகிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கு நடக்கும் வெவ்வேறு பிரச்சனை, அதனால் ஏற்படும் விளைவுகளால் எப்படி பாதிக்கிறார்கள்?

மனிதனுக்கு மட்டுமே பிறந்தவுடனே பிரச்சனைகள் ஆரம்பித்து விடுகின்றன. வாழ்க்கை எவ்வளவு அசிங்கமானது என்பதை சொல்ல, அனுஷ்கா விபச்சாரி வேடத்தில் நடிப்பதை பார்க்கின்ற மனக்கஷ்டம் ஒன்றே போதுமானது. ஆனால் நம் நடிகர்கள் எப்படி மனநலம் குன்றிய வேடங்களில் நடித்து தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிறார்களோ, அது போல நடிகைகளும் விபச்சாரி வேடங்களில் உண்மையாக வாழ்ந்து காட்டுகிறார்கள்.





   என்ன வாழ்க்கைடா இது?


ரத்தச்சரித்திரம் போன்ற படங்களில் சூர்யா நடிக்கும் போது, அந்த கதையின் கேரக்டர் ஆனா தாதாவை நேரில் சந்தித்து அவரிடம் டிப்ஸ் கேட்டு அதன்படி தத்ரூபமாய் நடித்ததாகவும், படம் வெளிவந்த பிறகும் அந்த கேரக்டரில் வாழ்வதாகவும் உணர்ச்சி பொங்க பேட்டி கொடுப்பார்கள். அது போல இந்த படத்துக்கும் விபச்சாரிகளை சந்தித்து டிப்ஸ் வாங்கி இருப்பார்களோ? இதைப் பற்றி பேட்டியில் ஏன் யாரும் வாய் திறப்பதில்லை? நம் நாட்டில் தாதாவுக்கு இருக்கும் மரியாதை கூட விபச்சாரிக்கு இல்லை என்பது வருத்தமான விஷயம். தாதாவை விட விபச்சாரியாய் இருப்பது கேவலம். கொலை செய்வதை விட விபச்சாரம் செய்வது மிகப் பெரும் குற்றம்.


சாதி மதங்கள் அணிந்து ஏன் மக்கள் அவதிப் படுகிறார்கள்? சாதி, மதம் என்பது ஆடையைப் போல தான். அணிந்தால் வேறுபாடு தெரியும். அவிழ்த்து எறியும் போது தான் நிர்வாணத்தைப் போல அழகாய் இருக்கும்.

பொன்மொழி:

ரேப் செய்பவனை விட ரேப் செய்துவிட்டு கொலை செய்பவன் மிக கொடூரமானவன்.

எவ்வளவு சுயநலம்!!!



May 17, 2011

பஞ்ச பாண்டவர்களுக்கு உதவிடுங்கள்

வீட்டு ஓனர்களும், வீட்டு புரோக்கர்களும், எனது ரூம் நண்பர்களும், மற்ற ஏனையவர்களும் மன்னிக்கவும். இது முழுதும் நகைச்சுவைக்கே.


நியூ ஏஜ் பாண்டவர்கள் ஆகிய நாங்கள் ஐந்து பெரும் ஐ.டி துறையில் அமெரிக்கர்களுக்கு அடிமை வேலை சொகுசாய் செய்கிறோம். இந்த பாண்டவர்களில்,

தருமன் Onsite -இல் தாய்நாட்டை விட்டு வனவாசம் இருக்கிறார்.
அர்ஜுனன் எப்போதும் அடுத்த வீட்டு ஆண்டிக்கு அம்பு விட்டு கொண்டிருப்பார். தினமும் செல்லும் ஜிம்மிலும் அம்புகளின் அட்டகாசம் தானாம்.
பீமருக்கு பீட்சா என்றால் பெரும் இஷ்டம். உருளை கிழங்கில் பண்ணிய அயிட்டம் என்றால் சாப்பிட்டு உருண்டு கிடப்பார்.
நகுலன் அனுஷ்காவின் இடுப்பை பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பார். "சுத்தம் சோறு போடும்" என்ற பழமொழியில் அவருக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.
சகாதேவன் சனிக்கிழமை ஆனால் டாஸ்மாக்கில் சரக்கடித்து விட்டு குப்புறப் படுத்து விடுவார்.



தன் மகளின் குடும்பம் குடித்தனம் வரப்போகிறது என்று வீட்டு ஓனர் இணங்கி கேட்டு கொண்டதால் இப்போது இருக்கும் வீட்டை காலி பண்ண சம்மதித்து விட்டோம்.

வாடகைக்கு அடுத்த வீடு தேடும் போது தான் தெரிந்தது சென்னையில் காலி வீடுகளை விட, வீட்டு புரோக்கர்கள் அதிகம் என்று. நாங்கள் சுலேகா போன்ற வெப் சைட்டுகளில் உலவி புரோக்கர் உதவி நாடாமல் வீட்டை பிடிக்க முயற்சி செய்தோம். Owner என்று search செய்து பொன் பண்ணினால், மறுமுனையில்

"சொல்லுங்க சார் நான் வீட்டு புரோக்கர் பேசறேன்".

"அட நீங்களா?" நயன்தாராவிடம் பேசியது போல் ஒரே இன்ப அதிர்ச்சியில் நான்.

போங்கடா! பொறம்போக்குகளா!

நிறைய ப்ரோக்கர்கள் Owner என்ற பெயரில் ரெஜிஸ்டர் செய்து வைத்திருக்கிறார்கள். வீடு பார்த்து கொடுப்பதற்கு அவர்கள் சுலபமாய் கேட்பது ஒரு மாத வாடகை. நானும் புரோக்கர் வேலையை பகுதி நேரமாக செய்யலாமா என்று தீவிரமாக யோசித்து வருகிறேன்.

டூவீலர் எடுத்துச் சென்று வீடு வீடாக Tolet போர்டு பார்த்து தேடலாம் என்றால், ஒவ்வொரு வீட்டின் கேட்டிலும் எண்ணற்ற "No Parking" மற்றும் "Contact for Plumper Service" விளம்பர பலகைகள் அடித்துபிடித்துக் கொண்டு இடம் பிடித்துள்ளன. இதற்குள் Tolet போர்டை தேடி கண்டு பிடிப்பது, பத்து வருடத்திருக்கு முன் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை தமிழ் நாளிதழில் கண்டு பிடிப்பது போல வெகு சிரமமான விசயமாய் இருக்கிறது.

எப்படியாவது வீடு மாற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் ஆசை ஆசையாய் புரோக்கர்களையும் நாடினோம். மாமுல் போலீஸ்காரர்கள் போல ப்ரோக்கர்கள் ஒவ்வொருவருக்கும் தனி தனி ஏரியா இருக்கின்றது. நாம் ஒருவரிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டால், அவர் நம்மை இன்னொருவரிடம் அழைத்து செல்கிறார். அந்த இன்னொருவர், இன்னொருவரிடம் பேசி (குழப்பமா இருக்கா?) கடைசியாக வீட்டையும் ஓனரையும் கண்ணில் காண்பிக்கிறார்கள். அது கிட்டதட்ட கேங்க்ஸ்டர் படங்களில் ஒவ்வொரு அல்லக்கையையும் பார்த்து, பேசி முன்னேறி கடைசியில் வில்லன் தாதாவை சந்திப்பது போல் உள்ளது.

வீட்டு ஓனர்களும் வில்லன்களை போன்றே பேசியும், கேள்வி கேட்டும் பயமுறுத்துகிறார்கள். நானெல்லாம் என்ஜீனியரிங் நுழைவு தேர்வில் கூட ஆப்சன் (Option) உள்ள கேள்விக்கு மட்டுமே பதில் எழுதினேன். அதுவும் கணிதத்தில் உள்ள Probability என்பதை உபயோகித்துதான். Probability எனக்கு அருமையாக வரும் என்று நினைத்து விடாதிர்கள். Probability -க்கும் பென்சில் ரப்பர் தான் (dice) பேருதவியாய் இருந்தது. குழப்பம் வேண்டாம், நான் தருமனில்லை.


ஒரு வீட்டை வைத்திருந்தால், என்ன ஒரு ஆணவம்?
அதிலும் பேச்சுலர்கள் என்றால் மரியாதை அதிகம் கொடுத்து பேசுகிறார்கள்.

"எத்தனை பேரு?" (நாங்க என்ன அதுக்கா(சாப்பிடறதுக்கு) வர்றோம்?

"எந்த கம்பனில வேலை செய்றீங்க?" (மன்னாரன் கம்பனின்னு சொன்னா ஒத்துக்குவீங்களா? அதிலும் MNC கம்பனி என்று சொன்னால் தான் மதிப்பு.)

"நான்வெஜ் சாப்பிடுவீங்களா?" (இல்லைங்க சார்! நான்வெஜ் ஜோக் மட்டும் சொல்லுவேன்)

எல்லாத்துக்கும் பதில் சொல்லிவிட்டு வாடகை எவ்வளவு என்று கேட்டால், ஏலம் விடுவது போல பனிரெண்டாயிரம், பதினைந்தாயிரம், இருபதாயிரம். வாரணம் ஆயிரம் அளவுக்கு பயமுறுத்துகிறார்கள். வேலை இல்லாதவர்கள் தங்க வீடு தேட வேண்டும் என்றால், ஹோம் லோன் மாதிரி "Home Rent Loan" என்ற ஒன்றை வங்கிகள் அறிமுகப் படுத்த வேண்டும்.




இங்கு எனக்கு வேறு ஒரு சிந்தனையும் அடிமனதில் இருந்தது. இந்த பசங்களோடு எத்தனை நாள் தான் தங்குவது?

Sharing with Girls!

அமெரிக்காவில் உள்ளது போல் பெண்களோடு ரூம் ஷேர் பண்ணி தங்க முடியுமா என்றொரு நப்பாசை. வெப் சைட்டுகளில் தேடி பார்த்தால், "We need two female roommates to share our room" என்று அண்டர்லைன் செய்து விளம்பரம் கொடுத்து இருந்தார்கள் இந்திய கலாச்சாரம் கடைபிடிக்கும் பெண்கள். இந்த ஜென்மத்தில் கனவில் கூட இது நடக்காது. அடுத்த ஜென்மத்துல நாயாய் பிறக்க வைத்தாலும் அமெரிக்காவில் பிறக்க வை கடவுளே!

புரோக்கரை கூட்டிட்டு போய் வீட்டை பார்த்தாலும், ஆளாளுக்கு சொல்லும் ஒரு காரணத்தால் அந்த வீடு பிடிப்பதில்லை.

"தண்ணி சரி இல்லை" (ரெகுலரா டாஸ்மாக் போகிற நானே அமைதியா இருக்கேன்)

"நடக்க ரொம்ப தூரமா இருக்கு" (காண்டாமிருகம் பின்னாடி துரத்திட்டு வருதுன்னு நினைச்சிட்டு ஓடுங்க. தூரம் தெரியாது.)

"ஏரியா பசுமையாவே இல்லை" (சென்னையில் சுற்றி கொண்டிருக்கிற எருமை மாடே இதை பற்றி கவலை படுவதில்லை என்று சொன்னால், பசுமை=பிகர்கள் என்று அர்த்தம் சொல்கிறான் அவன்)

"வீட்டு ஓனருக்கு வயசுக்கு வந்த பொண்ணு இல்லை" (வயசுக்கு வந்தா நீ குடிசை கட்ட போறியா? வீட்டு ஓனருக்கு பொண்ணு இருந்தா, கரெக்ட் பண்ணி வீட்டோட செட்டில் ஆகிடலாம் என்கிற அல்ப கனவு.)


மொத்தத்தில் ஐந்து பேருக்கும் ஒத்து போகிற பாஞ்சாலி மாதிரி ஒரு வீடு வேணும். அது போல ஒரு வீடு கிடைக்க பொறுமை மிக அவசியம். சத்ய ஜித்ரே 1957 -இல் இயக்கிய "பதர் பாஞ்சாலி" (Pathar Panchali) என்ற பெங்காலி படத்தை உட்கார்ந்து நான்கு முறை பார்த்தால் அந்த பொறுமை நமக்கு கிட்டலாம்.