Mar 13, 2012

டாஸ்மாக் உங்களை அன்புடன் வரவேற்கிறது - ஆபாயில்





தமிழ்நாட்டில் அவசரத்திற்கு ஜிப்பை கழட்டி ஒதுங்க, ஒரு பொது கழிப்பிடம் கண்டுபிடிப்பது சிரமம். ஆனால் தெருவுக்கு நான்கு டாஸ்மாக்குகள் உங்களை கை கூப்பி வரவேற்கும். அதன் வாசலில் என்கவுண்டரில் சுட்டு போட்டது போல், எப்போதும் நான்கைந்து பேர் மப்பில் சுயநினைவு இழந்து, உடல்கள் மட்டும் அங்கே கிடக்க, வேறு கிரகத்திற்குள் நுழைந்திருப்பார்கள். அதை கண்டு கொள்ளாமல், பெரிய கூட்டம் ஒன்று கண்ணும் கருத்துமாய் கம்பி கூண்டுக்குள்ளே கையை விட்டுக் கொண்டு, உயிர் போகும் அவசர கதியில் அலைமோதி கொண்டிருக்கும். 

தினமும் வங்கியை விட, அதிக பணம் இங்கே தான் கலெக்சன் ஆகிறது. கொள்ளை அடிப்பவர்கள் அடுத்த முறை டாஸ்மாக்குல கையை வைங்கப்பா! நம்ம கோவிந்து கூட, என்கவுண்டருக்கு  எதிராக பொங்கி ஒரு பதிவு எழுதி நிறைய கமெண்ட்டுகளை கல்லா கட்டிவிட்டான். தமிழ்நாடு காவல் துறை அதை பார்த்து பயந்து, அதற்கு வருத்தம் தெரிவித்து, அது போல் இனி ஏதும் நடக்காது என்று கமென்ட் போட்டுள்ளதை கோவிந்துக்கு கிடைத்த வெற்றியாக கருதலாம். அதனால் மறுபடியும் இன்னொரு என்கவுண்டர் கண்டிப்பாக நடக்காது என்று கோவிந்து உறுதிபட கூறுகிறான்.

தமிழ்நாட்டு பட்ஜெட்டின் வற்றாத நதி மூலமே டாஸ்மாக் தான். "இப்போது உங்கள் வசதிக்காக உங்கள் தெருவில், எங்களது புதிய கிளை ஆரம்பம்" என்று அரசு விளம்பர போர்டு கூட வைக்கலாம்.

டாஸ்மாக்கில் நுழைந்து ஒரு சரக்கு வாங்குவது அவ்வளவு அருவருப்பான விஷயம். அந்த கூட்டத்திற்குள் புகுந்து சரக்கு வாங்கி விட்டு வெளியே வரும் போது, நாம் பன்றியாய் மாறி விட்ட உணர்வு வந்து விடுகிறது. பப்ளிக் டாய்லெட் போல ரொம்ப கலீஜாக இருப்பதால், சரக்கை வாங்கி ஒரு பெக் உள்ளே விட்டால்தான் கொஞ்ச நேரமாவது அங்கு நிற்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை. அந்த ஒரு பெக்கை, கவர்மெண்ட் இலவசமாய் கொடுத்தால் நலம்.

எக்ஸ்ட்ரா பெக்: 
கூகுளில் டாஸ்மாக் என்று கூகுளில் தேடினால், முதல் பக்கத்தில் விஜயகாந்த் போட்டோ வருகிறது. :-D  





புதிய டெக்னாலஜிகள் கடவுளை போன்றது. நாம் வேண்டுவது, நமக்கு வேண்டாதது என அனைத்தையும் தரும். "God is watching you" என்று சொன்னால் கூட பயம் வருவதில்லை. "Google is watching you" என்றால் பயத்தில் டவுசர் நனைந்து விடுகிறது. ஐ.டி யில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, இன்டர்நெட் உபயோகிக்கும் அனைவருக்கும் கூகுள் தான் காட், காட்பாதர் எல்லாமே. சிறுவயதில் தப்பு செய்யும் பொழுது கடவுள் பார்த்துக் கொண்டிருப்பாரே என்று பயந்து கொண்டே தப்பு செய்வோம். கடவுள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறாரோ இல்லையோ, கூகிள் நம்மை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்னென்ன படிக்கிறீர்கள்?, யாருடன் என்னென்ன பேசினீர்கள்? என அனைத்தையும் கண்காணிக்கிறது.

இருட்டில் உட்கார்ந்து கொண்டு நீங்கள் செய்யும் தப்புகளை, சோசியல் நெட்வொர்க்குகள் உலகத்துக்கே வெளிச்சம் போட்டு படம் காட்டுகின்றன. Kumar watched "Poonam pandey's topless video" 12 seconds ago. என்று பேஸ்புக் உடனுக்குடன் உங்கள் நண்பர்களுக்கு மைக் வைத்து அறிவித்து விடும். அப்படி நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ, ஒரு செக்சி விடியோவை பார்த்து, அது உங்கள் பேஸ்புக் Wall -இல் உங்களுக்கே தெரியாமல் போஸ்ட் ஆகி விட்டால், ஒரு உண்மையான நண்பன் அதை பார்த்தால் உங்களுக்கு கால் செய்து "அலர்ட்" செய்வான்.

தன் திறமையால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கிற நபர்களுக்கு தான் "பாரத ரத்னா" விருது வழங்க படுகிறது என்றால், அதை சச்சினை விட, பூனம் பாண்டேவுக்கே கொடுப்பது பொருத்தமாய் இருக்கும். இவர் தான் முழு இந்தியாவையும் திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறார்.

கர்நாடக சட்ட மன்றத்தில் உட்கார்ந்து அமைச்சர்கள் பிட்டு வீடியோ பார்த்தது, எல்லோருக்கும் கோபத்தை வரவழைப்பதை விட, "அது என்ன வீடியோ?" என்ற ஆவலையே அதிக படுத்தியது. கூகிள் தேடலில் அந்நேரம் அதுவே ஹாட் டாப்பிக்காக இருந்திருக்கும். 

துப்பாக்கியை காட்டி மிரட்டினால் கூட பயப்படாதவர்கள், Hidden கேமராவை காட்டி Hands Up என்று சொன்னால், அச்சத்தில் உடனே கைகளை தூக்கி விடுவார்கள். இரண்டுமே shoot செய்யும் என்றாலும், தமிழன் உயிரை விட மானமே பெரிது என்று நினைப்பவன்.


நெட் கபே, எ.டி.எம் ரூம், துணிக்கடை ட்ரையல் ரூம் என இந்த ஹிட்டன் கேமிராக்களின் பிரச்சினை அதிகம். அப்படிதான் ஒரு நாள் நம்ம கொக்கி குமாரு, ஒரு பெரிய ஷோ ரூமுக்கு பேன்ட் எடுக்க போனான். அன்னிக்கு பார்த்து அவன் ஜட்டி போடவில்லை. ஆனால் குமாரு அதை பற்றி கொஞ்சமும் கவலைபடாமல், ட்ரையல் ரூமில் பொறுமையாக போட்டு பார்த்து தான் வாங்கி வந்தான். அன்று மட்டும் யாராவது அங்கு ஹிட்டன் கேமிரா செட் பண்ணி வைத்திருந்தால், பார்த்தவனுக்கு அதை விட வேறு பெரிய தண்டனை கிடைத்திருக்க முடியும்?


"ஒரு கல், ஒரு கண்ணாடி" ஊத்தாமல் ஊத்திக் கொள்ளும் என்றே தோன்றுகிறது. தொடர்ந்து தியேட்டரில் போட்டு சாகடிக்கும் பழைய ட்ரைலரை விட, தற்போது பேஸ்புக்கில் உலவிக் கொண்டிருக்கும் புது ட்ரைலர், சன்டீவி சூப்பர் டென் காமெடியை விட மட்டமாய் இருக்கிறது. நமீதா நம்பர் 2 போல இருக்கும் ஹன்சிகாவிற்கு ஏன் இத்தனை ரசிகர்கள் என்று தெரியவில்லை. 

ஆதித்யா டீவி, சிரிப்பொலி டீவியில் திரும்ப திரும்ப வரும் வடிவேலு கவுண்டமணி காமெடியை பார்த்தால் எனக்கு பீபி எகிறி விடும். ஜெயா டிவியில் இரவு பத்து மணிக்கு பிறகு போடும் அந்த கால பாடல்களில் இருக்கும் காமெடி கூட அதில் இருக்காது. சுமார் ஒரு நிமிடம் ஹீரோயினின் முகத்தையே குளோசப்பில் காட்டுவார்கள். அவளும் புருவத்தை வளைத்து நெளித்து, உதட்டை பிதுக்கி சுழித்து, லேடி சிவாஜி கணேசன் போல நவரசத்தையும் தன் முகத்தில் ஒருங்கே கொண்டு வருவாள். அவர்களது முகபாவனை, நடனம் இவற்றை ஜாலியாய் பார்த்து படுத்து உருண்டு கொண்டே சிரிக்கலாம். 

தற்போதெல்லாம் சில நொடிகள் மட்டும் ஹீரோயின் முகத்தை காண்பித்து விட்டு, கீழே இறக்கி மார்பையும், தொப்புளையும், ஷங்கர் பட பாட்டு போல நான்கைந்து கேமிராவால் சுற்றி சுற்றி காண்பிக்கிறார்கள். "யாரடி நீ மோகினி" யில் வரும் "ஓ பேபி, ஓ பேபி" பாடலின் கடைசி ஒரு நிமிடத்திற்கு, தன் இடுப்பில் நவரசத்தையும் காட்டி தன் நடிப்பால் கவர்ந்த ரகஸியா இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை என்பது காலத்தின் கோலமின்றி வேறென்ன?

ஒரு பழைய சரக்கு ஜோக்:

ஒரு ஆசிரியர், தன் மாணவர்களுக்கு, சரக்கடிப்பதால் என்ன தீமை என்று ஒரு எக்ஸ்பெரிமென்ட் செய்து விளக்குவதற்காக, ஒரு கிளாஸ் தண்ணீர், ஒரு கிளாஸ் சரக்கு, ஒரு புழுவையும் எடுத்துக் கொண்டு,

"ஸ்டூடண்ட்ஸ், கவனமா பாருங்க" என்று சொல்லி அந்த புழுவை எடுத்து தண்ணீர் கிளாசில் போடுகிறார்.  அந்த புழு தண்ணியில் ஜாலியாக நெண்டியபடி இருக்க அதற்கு எதுவும் ஆகவில்லை.

அடுத்து அந்த புழுவை மீண்டும் எடுத்து, இப்போது சரக்கு கிளாசில் போடுகிறார். இப்போது அது எரிச்சலில் துடி துடித்து இறந்து இறைவனடி சேர்ந்து விடுகிறது. 

உடனே ஆசிரியர் "இதிலிருந்து நாம் என்ன கத்துகிட்டோம்?" என்று கேட்கிறார்.

எப்பவுமே கடைசி பெஞ்சுலையே உட்கார்ந்து கவனமாய் கிளாசை (வகுப்பை) கவனிக்கும் நம்ம கொக்கி குமாரு, கையை தூக்கி புத்திசாலிதனமாக பதில் சொன்னான்.

"சரக்கு அடிச்சா, நம்ம வயித்துல இருக்கிற புழு எல்லாம் செத்து போயிடும் சார்"

அதை கேட்டு படு டென்சனான ஆசிரியர், புழுவை தூக்கி எறிந்து விட்டு அந்த சரக்கை ஒரே கல்பில் அடித்து விட்டு மட்டை ஆகிறார்.


Feb 17, 2012

"பவர் கட்" நல்லது - ஆபாயில்


சுஜாதா சுகமில்லை

சுஜாதா இறந்து போனது கலையுலகிற்கு பேரிழப்பு என்றாலும் வளரும் தமிழ் இலக்கியவாதிகளுக்கு ஒரு விதத்தில் நல்லது தான்.

என்னுடைய எழுத்து சுஜாதாவின் எழுத்தை போல் உள்ளதாக என் Die Hard வாசகர்கள் கூறுகின்றனர். சுஜாதாவின் புத்தகங்களை நான் படித்ததில்லை. அவரும் என் எழுத்தை படிக்கவில்லை.

சுஜாதா பரலோகத்தில் "நிம்மதியாய்" இருக்கட்டும்.

என் எழுத்து சுஜாதாவை போல் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? சுஜாதா சிறுவயதில் பள்ளிக்கூடம் படிக்கையில் தன் கைப்பட எழுதிய கோடு போட்ட அறிவியல் நோட்டு கால ஓட்டத்தில் என்னிடம் சேர்ந்தது. அதை பார்த்து அவரை போலவே தொடர்ந்து எழுதி விடாமுயற்சி செய்து விஸ்வரூப வெற்றி கண்டுள்ளேன்.

இந்தியாவில் கல்யாணம் செய்து புள்ளைகளை பெற்று போடுவது போல், யார் பார்த்தாலும் எதோ ஒன்றை கிறுக்கி புத்தகம் போட்டு, புத்தக கண்காட்சியில் கடை விரிக்கிறார்கள்.

அது போல உங்களில் யாருக்காவது உங்களுடைய எழுத்தை புத்தகமாய் பார்க்க வேண்டும் என்ற அல்ப ஆசை இருந்தால்,  இந்த சைட்டுக்கு போய் உங்கள் பிளாக் அட்ரஸ்ஸை கொடுத்து, உங்க புத்தகத்தின் Soft Copy யை பார்த்து பரவசம் அடைந்து, அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம். அதிக பணம் செலவழித்தால் உங்க வீட்டுக்கே Hard Copy அனுப்பி வைப்பார்கள்.


தமிழ் நாடு ஒளிர்கிறது!




சென்னையை தவிர மற்ற ஊர்களில் மின்சார தட்டுபாடு எக்கச்சக்கமாய் அதிகரித்து விட்டது. சொந்தகாரங்க வீட்டுக்கோ, நண்பர்கள் வீட்டுக்கோ போகும் முன் கரண்ட் இருக்கா? என்று கால் செய்து கேட்டு விட்டு தான் செல்ல வேண்டியிருக்கிறது. நம் முன்னோர்கள் குடும்ப கட்டுப்பாடு பண்ணாமல் விளையாடிய வினையால், ஜனத்தொகை அதிகரித்து இப்போது மின்சார தட்டுபாடு உருவாகிவிட்டது.

இதனால் மக்கள் மிகவும் கஷ்டப் படுகிறார்கள். பெண்கள் சீரியல் பார்க்க முடிவதில்லை. அதனால் சும்மாவே இருக்கும் மாமியாரும் மருமகளும் சீரியலின் அடுத்த எபிசோட்டை வீட்டில் தொடரலாம். கரண்ட் கட், கணவர்களுக்கு நிறைய பாதிப்புகளை உண்டாக்கலாம். டைவர்ஸ், கொலை போன்றவை சாதாரணமாய் நடக்கலாம். அதனால் கரண்ட் போய் விட்டால் கணவர்கள் வெளியே சென்று விடுதல் நலம்.

கரண்ட் இல்லாமல் மாணவர்கள் எக்ஸாமுக்கு முன்தினம் கூட படிக்க முடிவதில்லை. அதனால் கண்டிப்பாக பெயில் ஆகி விடுவார்கள். மாணவிகள் தினமும் படிக்க முடியாததால், அவர்களும் பெயிலாகி விடுவார்கள்.




இந்த பிரச்சினை அதிகரித்தால் நிலைமை இன்னும் மோசம் ஆகும். குறிப்பாக, வருகின்ற கோடை மாதங்களில் கல்யாண சீசன் அதிகம் இருப்பதால், திருமணம் செய்யும் ஒவ்வொரு ஜோடியும் முதலிரவு கொண்டாட வேண்டும் என்றால் ஜெனரேட்டர் வாங்கி தான் ஓட்ட வேண்டும். எப்போது கரண்ட் கட் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. பூவெல்லாம் தூவி, புது பொண்டாட்டியை அருகில் உட்கார வைத்து, தட்டு தடுமாறி ஆரம்பித்த பின், பாதியில் திடீரென்று கரண்ட் போனால் எத்தனை கஷ்டமாய் இருக்கும்? எது எங்கிருக்கிறது என்று தெரியாமல் மறுபடியும் கஷ்டப் பட்டு,....யப்பா!! நினைத்து பார்க்கவே முடியவில்லை. மாமனாரிடம் இருந்து வாங்குகின்ற வரதட்சணையில் ஒரு பெரிய பவர் ஜெனரேட்டரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கல்யாணம் செய்யப் போகும் மாப்பிள்ளைகள் கவனம் தேவை.

ஒரு விதத்தில் இந்த பவர் கட் தற்போது ஜனத்தொகை உருவாவதை கட்டுப்படுத்தும் என்பதால், இந்த பவர் கட், பல கஷ்டத்தில் ஒரு நல்லது.

"அம்மாவுக்கு ஒட்டு போட்டால் இப்படிதான்" என்று வலையுலக திமுக கண்மணிகள் வேகமாக ரன்னிங் ரேஸில் ஓடி வர வேண்டாம்.

இந்த வருடம் தாத்தாவே வென்றிருந்தால், இதே நிலைமை தான் இருந்திருக்கும். கூடவே, ஒவ்வொரு மாதமும் என் வீட்டு வாடகையை தாத்தாவிடம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும். இந்நேரம் தமிழ்நாட்டில் எல்லோருடைய நிலம், பெரிய வீடு, "சின்ன வீடு" எல்லாத்தையும் அடித்து பிடுங்கியிருப்பார்கள். மீண்டும் மன்னர் ஆட்சி மலர்ந்திருக்கும். தாத்தா தமிழ் நாட்டை மூன்றாய் பிரித்து சோழநாட்டை ஸ்டாலினுக்கும், பாண்டிய நாட்டை அழகிரிக்கும், சேர நாட்டை கனிமொழிக்கும் கொடுத்து விட்டு, நண்பன் விஜய் போல All izz Well என்று சொல்லியிருப்பார்.


பவர் கட் special தத்துவம்:

விளக்கேற்ற ஒரு பெண்ணை
தேடி அலைவதை விட,
கிடைத்த பெண்ணை வைத்து
விளக்கை அணைப்பதே
சிறந்தது.

- ஜல புல ஜங் சுவாமிகள்.




Feb 9, 2012

உங்களில் யார் அடுத்த நயன்டாரா? - ஆபாயில்

நான் தற்போது அதிகமாக எழுதாதை கண்டித்து என் வீட்டு முன்னால் மா.மு கட்சி ஆர்பாட்டம் நடத்தியது. அதனால் நான் மாதம் ஒரு போஸ்ட் எழுதலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். தினம் ஒரு போஸ்ட் போடலைன்னா உன்னால் அரசியல் செய்ய முடியாது என்று என் அப்பா சொல்கிறார். என்ன எழவோ! எனக்கு அரசியல் வரவே மாட்டேங்குது. தினம் ஒரு அறிக்கை, அரசுக்கு ஒரு கண்டனம், ஒரு புரட்சி என்று எப்படித்தான் பண்றாங்களோ?



சென்னை, திருப்பூர் கண்காட்சியை மிஸ் செய்து விட்டேன். தினமும் புத்தக கண்காட்சிக்கு சென்று போண்டா சாப்பிட்டு விட்டு மகாபாரதம் போர் போல ஒன்றாம் நாள், இரண்டாம் நாள் என்று பதிவு போடலாம் என்று நினைத்தது நடக்கவில்லை. சாரு சாபம் விட்டிருப்பார் என்று நினைக்கிறன்.

சரி, "லவாசாவில் பல ராத்திரிகள்" என்று நான் ஒரு புத்தகம் எழுதினேன். யாராவது என்னுடைய புத்தகத்தை வாங்கினீர்களா? மொத்தம் 116 பாலோவர்ஸ் இருக்கிறீர்கள். ஒருத்தர் ஒரு புத்தகம் வாங்கியிருந்தால் கூட 116 புத்தகம் வியாபாரம் ஆகியிருக்கும். 116 பேரில் எத்தனை பேர் முழிச்சிருக்காங்கன்னு தெரியல. சைடில் ஒரு vote box வச்சு எல்லோரையும் ஒரு attendance போட சொல்லணும்.

நேற்றைக்கு புத்தக பதிப்பகத்தில் இருந்து போன் செய்து அச்சடித்த ஐநூறு புத்தகத்தில் இதுவரை ஐந்து புத்தகம் மட்டும் தான் சேல்ஸ் ஆனது என்று சொன்னார்கள். அதில் இரண்டு புத்தகத்தை என்னை Encourage பண்ண என் நண்பர்கள் வாங்கியது. மிச்சம் மூன்றை கிளுகிளுப்பான தலைப்பை பார்த்து வாங்கியிருப்பார்கள். இன்றைக்கு இன்னொரு பதிப்பகம் போன் செய்து இன்னும் விக்காமல் 200 புத்தகங்கள் இருக்கிறதென்று சொன்னது கூடுதல் செய்தி.

ரஜினி இல்லையென்றாலும் அட்லீஸ்ட் கொலைவெறி நாயகனை வைத்தாவது புத்தகத்தை ரிலீஸ் செய்திருக்கலாம். கொஞ்சமாவது விற்றிருக்கும். யாருக்காவது புத்தகம் வேண்டும் என்றால், no1writter@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள்.

அடுத்த பதிவில் என் புத்தகம் பற்றிய, முந்தைய பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாயின் விமர்சனத்தை எதிர்பார்க்கலாம்.


நான் எவ்வளவு தண்ணி அடிச்சாலும் ரொம்ப ஸ்டெடியாகவே இருப்பேன். வடிவேலு மாதிரி பஸ்ஸில் கூட கம்பியை பிடிக்காமல் தான் நின்று கொண்டு போவேன். தண்ணி அடித்து விட்டு இதுவரை ஆம்லேட் போட்டதே இல்லை என்பதை என் வரலாற்றை புரட்டி பார்த்தால் அறிய முடியும்.

ஆனால் ஒரு வெப்சைட் இருக்கிறது. அதை ஓபன் பண்ணி பார்த்தாலே போதும் அந்த நாற்றத்தில் எனக்கு வாந்தி குபீரென வந்து விடும். நல்லவேளை நான் ஆணாக இருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. இதுவே ஒரு பெண்ணாக இருந்திருந்தால், "யாருக்கிட்ட போய்டி ஏமாந்த?" என்று கேட்டு அம்மா அடித்து துவைத்திருப்பாள்.

அது என்ன சைட்? அந்த "மணம்" என்ன?
அது Blog படிப்பவர்களுக்கு மட்டுமே தெரியலாம். தெரியாதவங்களுக்கு, Sorry... 


சுமார் மசாலா படமான ஒரிஜினல் 3 Idiots -யை நெட்டில் டவுன்லோட் பண்ணி பார்த்தது தப்பு தான். பகிரங்கமாய் ஒப்பு கொள்கிறேன். ஆனால் அதையே சிலவருடம் கழித்து தமிழில் பார்க்க வைத்து தண்டனை கொடுப்பது எவ்விதத்தில் நியாயம் எம்பெருமானே?

ஆனால் இதை விட ஒரு பெரிய தண்டனை இருக்கிறது தெரியுமா? அது நரகத்தில் கூட கிடைக்காது. 

"இந்த படத்தை திருட்டு டி.வி.டி வாங்கி பார்ப்பதுதான்"

தெய்வம் நின்று சாகடிக்கும். ஆனால் விஜய் நடித்து சாகடிக்கறார். முகத்தில் Expression, Syntax என்பது துளியும் இல்லை. இன்னும் நடிப்பில் சங்கவியின் முதுகில் சோப் போடும் லெவலில் தான் இருக்கிறார்.

இதில் சங்கர் படம் என்றால் பிரமாண்டமாய் இருக்குமாம். அடுத்த படத்தில் பெரிய அண்டாவுக்கு பெயின்ட் அடித்து பிரமாண்டமாய் எடுக்க இருக்கிறார்களாம்.

விஜய் சார், சங்கர் சார் எங்கேயாவது ஓடிருங்க சார்.

இவ்வளவு நாளாக நடித்து டான்ஸ் மட்டுமே ஆட வரும் என்றால், அதற்கு "உங்களில் யார் அடுத்த பெரபுதேவா?" நிகழ்ச்சியில் போய் கலந்து கொள்ளலாம். நயன்டாராவால் கழட்டி விடப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் நடன பொயல் பெரபுதேவாவிற்கு எந்த சேனலாவது நல்லது செய்ய விரும்பினால் "உங்களில் யார் அடுத்த நயன்டாரா?" என்ற நிகழ்ச்சி நடத்தி வெற்றி பெறும் மங்கையை அவருடன் வாழ வைக்கலாம். நயனமும் நடனமும் சேராதது கலையுலகின் மிகப் பெரிய இழப்பு.


காலை மற்றும் மாலை வேளைகளில் சென்னையின் சாலை ஓரங்களில் நடந்து செல்வது அசாதாரண காரியம். அதிலும் பெண்கள் தங்கள் மேனி கறுக்காமல் இருக்க ஒரு கையில் குடையையும், இன்னொரு கையில் உயிரையும் பிடித்து கொண்டு செல்ல வேண்டும்.

வாகனங்கள் செல்லும் திசையில் கையை வீசிக் கொண்டு ஹாயாக நடந்து சென்றால் உங்கள் வலது தோள்பட்டையை ஆபரேசன் செய்யாமல் அகற்றிவிடுவார்கள். இதிலிருந்து தப்பிக்க இரண்டு வழிகள் இருக்கிறது.

ஒன்று, வாகனங்கள் வரும் திசைக்கு எதிர் திசையில் நடப்பதுதான். இரண்டாவது, சைடு mirror தலையில் செட் பண்ணி கொள்வது.

பிளாட்பாரத்தில் ஏறி நடந்து சென்றாலும் பைக்கில் பின்னாலே வந்து பின்புறத்தில் இடித்து படுக்க வைத்து, உங்கள் பின்புறத்தை வேகத்தடையாக மாற்றி விடுவார்கள் (படம் கீழே).



அதேபோல் சென்னையில் பைக் ஓட்டுவதும் சவாலான விஷயம். 70 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது ரோட்டின் குறுக்கே ஸ்டைலாக Cat Walk போவார்கள். உங்களுக்கு நேரம் இருந்தால் நின்று பொறுமையாய் அந்த Cat Walk ஷோவை ரசித்து விட்டு செல்லலாம். இன்னும் சில பேர் Planet of the Aps படத்தில் பாலத்தில் இருந்து குதிக்கும் மனித குரங்குகள் போல திடீர் திடீரென ரோட்டின் நடுவே இருக்கும் டிவைடரில் ஏறி குதித்து நம்மை பயமுறுத்துவார்கள். நாமும் மனித குரங்குகள் தானே!

உங்களுக்கு முன்னாள் ஆட்டோ சென்று கொண்டிருந்தால் கவனம் தேவை. அவைகள் சாக்கடையில் இருந்து எழுந்து செல்லும் பன்றிகள் போல. பக்கவாட்டில் ஐந்து அடி distance விட்டு செல்ல வேண்டும். எந்த பக்கம் வேண்டுமானாலும் திடீரென திரும்பி நம்மை மண் சோறு சாப்பிட வைத்து விடுவார்கள்.

எனக்கு ஒரு சந்தேகம் ஆட்டோவுக்கு side indicator இருக்கா?




Jan 4, 2012

திருமணங்கள் கேரளாவில் நிச்சயிக்கப் படுகின்றன


என்னதான் கவிதை, கட்டுரை என்று நிறைய எழுதினாலும் பெண்களிடம் பேசும் போது மட்டும் எனக்கு சரியாக சிக்னல் கிடைக்காத செல்போன் மாதிரி, வார்த்தைகள் கட்டாக ஆரம்பித்து விடும். என்னுடைய எல்லா காதலும் கருமாதியிலே முடிய, கட்டாயப் படுத்தி மனதை பறிக்க நானும் கடைசியாக கல்யாண சந்தையில் தள்ளப்பட்டு விட்டேன்.

இது மாடுகள் விலை பேசப்படும் செவ்வாய் சந்தை.




தண்ணி அடித்து பெண்கள் பின்னால் அலைந்து, ஜாலியாக எதை பற்றியும் வருத்தப் படாமல் ஊர் சுற்றி கொண்டிருக்கும் வாலிப வயசு பையன்களை பார்த்து அவர்களது உறவினர்கள்,

"ஒரு கால்கட்டு கட்டி விட்டால் எல்லாம் சரியாகிடும்"
"மூக்கணாங் கயிறு போட்டால் அடங்கிடுவான்"

என்று மாடுகளையே உதாரணம் சொல்லி பேசுவார்கள். கல்யாணம் ஆவதற்கு முன் நாய் மாதிரி சுற்றி கொண்டிருக்கும் ஆண்கள், கல்யாணம் ஆகி விட்டால் மாடு மாதிரி உழைக்க வேண்டும்.

கேம்பஸ் இன்டர்வியுவிக்கே படிக்காமல் தெனாவட்டாக செல்லும் பையன்கள், பொண்ணு பார்க்க போகும் போது மட்டும் பொண்ணுகிட்ட எப்படி பதில் பேசறது என்று தனிமையில் கண்ணாடி முன் நின்று ஆஸ்கார் விருது வாங்கும் அளவுக்கு நடித்தெல்லாம் பார்ப்பார்கள்.

பெண் வீட்டார்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்கு, அன்லிமிடெட் ஆந்திரா மீல்ஸ் சாப்பிட்டு விட்டு போனால் தான் நம்மால் பதில் சொல்ல முடியும்.

மாடு என்ன படிச்சிருக்கு?
மாடு எவ்வளவு சம்பளம் வாங்குது?
மாடு அமெரிக்கா போயிட்டு வந்திருக்கா? இல்லையா?

டயர்டு ஆகி விட்டால், கொஞ்சம் தண்ணி குடித்து விட்டு பதில் சொல்லலாம்.

இதில் அமெரிக்கா சென்று வந்த மாட்டுக்கு முன்னுரிமை அதிகம்.

இப்போது ஐ.டி துறையில் வேலை செய்யும் பையன்களுக்கு சரியான வயதில் திருமணம் ஆவதே சவாலான விஷயம். அப்படி இருக்க அதிகமாய் படித்திருக்காமல் டிரைவர் மற்றும் இதர வேலைகளை செய்யும் இளம் சிங்கங்களின் நிலைமை இன்னும் மோசம். இதனால் நிறைய பேர் திருமணம் ஆகாமல், "ராமன் தேடிய சீதை" சேரன் போல முகத்தை மூடிக் கொண்டு அழுகின்றனர்.

பெண்களுக்கு Options அதிகமாய் இருக்கின்றன. பையன்களுக்கு?  

They are the Options!.

படித்து முடித்து விட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருக்கும் பசங்களிடம் வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி காசை பிடுங்குவதற்கென்றே சிட்டியில் ஒரு கும்பல் எப்போதும் நடமாடி கொண்டிருக்கும். அதுபோல திருமணம் ஆகாமல் தவித்து கொண்டிருக்கும் பையன் வீட்டார்களை ஏமாற்றி பணம் பிடுங்க ஜோசிகார கும்பல் நாட்டில் பஞ்சமில்லாமல் நிறைந்திருக்கிறது.

அவர்கள் சொல்லும் சில ஏமாற்று சடங்கு வேலைகள்.

1. வாழை மரத்திற்கு தாலி கட்டுவது

பெண்ணின் கால்களை வாழை தண்டு கால்கள் என்று  கவிஞர்கள் வர்ணித்து காதலில் மூழ்கி முத்தெடுப்பர்கள். ஆனால் இங்கு முழு வாழை மரத்தையே பெண்ணாக்கி விடுகிறார்கள். நீங்கள் வாழை மரத்திற்கு தாலிகட்டும் சடங்கை செய்து முடித்தால் உங்கள் திருமண தோஷம் விலகி திருமணம் நடந்து, முதலிரவை பஞ்சு மெத்தையில் குஜாலாய் கொண்டாடலாம் என்பது நம்பிக்கை.

இது கிட்டத்தட்ட ஒரு நிஜ திருமணம் போலவே நடக்கும். ஆற்றோர கோவில் கரையில், ஓம குண்டம் வளர்த்து, அதில் ஒரு கையால் அரிசி மற்றும் இதர வகைகளை போடுவதுடன், மற்றொரு கையில் உங்களது மணமகளை அதாவது இளம் வாழைக் கன்றை பிடித்துக் கொண்டு, அய்யர் சொல்லும் மந்திரங்களை ஒன்றும் புரியாமல் திருப்பி ஓத வேண்டும். மேளதாளம் மட்டும் இருக்காது. மிமிக்ரி தெரிந்த உங்கள் நண்பர் யாராவது இருந்தால் அதையும் அடித்து கொள்ளலாம்.

அந்த வாழை மரத்திற்கு ஒரு பெயரும் வைக்கப் படும். கடைசியில் முகூர்த்த நேரம் வரும் போது அய்யரிடம் இருந்து மஞ்சள் கயிறை வாங்கி வாழை மரத்திற்கு மூன்று முடிச்சு போடவேண்டும். அப்போது அந்த வெட்டிய வாழை மரம் தண்ணீர் (கண்ணீர்) விட்டால் கவலைப் படக் கூடாது. ஆனால் கடைசியாக முதலிரவு கூட முடியாமல் அந்த வாழை பெண்ணின் கழுத்தை அரிவாளால் வெட்டி ஆற்றில் தூக்கி வீசி விடுவார்கள் என்பது வருத்தமான விஷயம்.

இதில் மேலும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் என் வாழ்விலும் இச்சம்பவம் நடந்தேறியது. எனக்கு நடந்த திருமணத்தில் என் பொண்டாட்டியின் பெயர் காவ்யா. காவ்யா செத்து போனதில் கொஞ்ச நாள் நான் தாடி வளர்த்து கஞ்சா அடித்து "அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சல" என்று பாட்டு பாடி புலம்பி கொண்டிருந்தேன். நம்மூரில் தான் கழுதைக்கும், மரத்திற்கும் தாலி கட்டி அவைகளை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றனர்.

2.  திருமணஞ்சேரிக்கு சென்று மாலை வாங்கி வருவது.

திருமணஞ்சேரி என்பது நாகப் பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். கடவுள் சிவன், பார்வதியை இங்கு தான் திருமணம் செய்தாராம். இங்கு வந்து கடவுளை வழிபட்டு பூ மாலையை வாங்கி கொண்டு சென்றால், உங்கள் திருமணம் ஏற்படுவதில் இருக்கும் தோஷம் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. அந்த மாலையை உங்களுக்கு திருமணம் ஆகும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். திருமணம் ஆனவுடன் மணமக்களாக மீண்டும் அங்கு சென்று அந்த மாலையை திருப்பி தர வேண்டும் என்பது சம்பிரதாயம். அங்கிருக்கும் ஐயர்கள் உங்களை கட்டுத்தரையில் அடைத்து வைத்த மாடுகளை போல தான் நடத்துவார்கள்.

நீங்கள் யூகித்தது போலவே, என்னிடமும் அந்த பூ மாலை இருக்கிறது. என் பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் இதை செய்த பின், அற சீற்றம் கொண்டு எழுதிய பதிவு தான் இது. :-(




இப்படியாக ஏமாந்து கடைசி வரை சந்தையில் விலை போகாத மாடுகள் எல்லாம் கடைசியாக கேரளாவுக்கு அனுப்பபட்டு அடிமாட்டு விலைக்கு விற்கப் படும். கேராளாவில் திருமண சம்பந்தம் பிடிப்பதற்கென்றே எங்கள் ஊரில் ஒரு Specialized மேரேஜ் புரோக்கர் இருக்கிறார். நெருங்கிய சொந்தக்காரர் தான். தமிழ் நாட்டிற்கும் கேரளாவிற்கும் நிறைய broadband இணைப்புகள் கொடுத்துள்ளார்.

நம்ம ஊரு கல்யாணங்கள் போல மாப்பிள்ளை வீட்டு அழைப்பு, பெண் வீட்டு அழைப்பு, நிச்சயதார்த்தம் என்பதெல்லாம் தனித்தனியாய் இருக்காது. ஹனிமூன் செல்வது போல ஒரு வாரம், மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் கேரளா சென்று, திருமணம் முடித்து, அதன் பின் "கேரள நாட்டு முல்லை"யை எந்த பிரச்சினையும் இல்லாமல் தமிழ் நாட்டிற்கு கூட்டி வந்து 'அணை'க்கலாம்.

என் ஆபிஸ் கேரள பெண் ஒருத்தியை இளநி என்று குறிப்பிடுவோம். கேரள பெண்கள் அந்த ஊரை போலவே செழுமையாய் இருக்கிறார்கள். அந்த ஊர் இளநி பார்க்க பெரிதாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.

கேரளா சுற்றி பார்க்க அழகான இடம் என்பதால் நீங்கள் திருமணதிற்கு பின் ஹனிமூன் செல்ல அவசியம் இருக்காது.

பெண் வீட்டார்களிடம் இருந்து பெண்ணை தவிர எதையும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. மாப்பிள்ளை வீட்டார்கள் தான் பெண்ணுக்கு நகைகள் போடுவது முதல் திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் செய்து கொள்ள வேண்டியது போல் இருக்கும். அவர்களால் முடிந்தால் நீங்கள் திரும்பும் போது வழிச் செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

ஆந்திராவில் உங்களுக்கு எந்த டிகிரி, எந்த university -யில் வேண்டும் என்றாலும் பணம் கொடுத்தால் போதும் Fake certificate வாங்கி விடலாம். அதே போல் மாப்பிள்ளை வீட்டார்க்கு எந்த ஜாதியில் எந்த குலத்தில் பெண் வேண்டுமென்றாலும், அந்த Fake பெண் வீட்டார்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். உங்கள் உறவு, ஜாதி வட்டங்களுக்குள் ஒரே ஜாதி என்று புளுகி கொள்ளலாம்.

ஆனால் இன்னொரு வகையில், சாதி மத பேதம் அற்ற சமுதாயத்தினை உருவாக்கி நீங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாய் திகழ்வீர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

எனக்கு கேரளா ஜஸ்ட் மிஸ் ஆகி விட்டது. :-(



Jan 3, 2012

கொலைகார வாசகன் - ஆபாயில்


2012 ஆம் வருடம் பிறந்து விட்டது.

ஒரு ரூபாயை மிச்சபடுத்தி உங்களுக்கு ஒரு நாள் முன்பாகவே அட்வான்ஸ்டு புத்தாண்டு வாழ்த்துக்களை, உங்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நண்பர்கள் SMS மூலம் வாழ்த்தி  இருப்பார்கள்.

நீங்களும் அடுத்த நூற்றாண்டின் மாமனிதர் விருது வாங்கி விடுவீர்கள். மக்கள் எல்லோரும் நல்லவர்கள் ஆகி விடுவார்கள். நாடே சுபிட்சம் அடைந்து விடும்.

இவ்வருடம் உலகம் அழிந்து விடும் என்று மாயன்ஸ் மக்கான்ஸ் சொல்லுகிறார்கள். பயமாய் இருக்கிறது. என்னுடைய மொபைலும் Virgin நானும் Virgin.

சரி, ஏன் Virgin மொபைல் என்று பெயர் வைத்தார்கள்?

எல்லா மொபைலும் Virgin ஆக தான் இருக்கின்றன. அதிக நேரம் கொஞ்சி கொஞ்சி பேசி, பின் முத்தம் கொடுத்து அதை சூடேற்றி விட்டு தன் வேலையை பார்க்க போய் விடுகிறார்கள்.



போன வருடம் வந்த மொக்கை படங்களை வரிசை படுத்தி தொலைகாட்சிகள் எல்லாம் இம்சை படுத்த, "எனக்கு பிடித்த பத்து படங்கள்", "எங்க ஆயாவுக்கு பிடித்த பத்து படங்கள்" என ஒவ்வொரு பிலாகர்களும் அதற்கு மேலும் புண்ணை கிளற, புத்தாண்டு எனக்கு இனிமையாய் கழிந்தது.



ரு நாள் காலை எப்போதும் போல முகம் கழுவாமல் என் பிளாக்கை திறந்து பார்த்த போது, என் பிளாக்கில் ஒரு கமெண்ட் போடபட்டிருந்தது. தான் ஒரு கொலைகாரனாக இருந்ததாகவும், என் பிளாகை படித்து திருந்தி விட்டதாகவும் எழுதியிருந்தான். இப்படி திருந்திய வரிசையில் அரசியல்வாதி, ரேப்பிஸ்ட் என நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது சம்பந்தம் இல்லாத விஷயம்.

என் எழுத்தின் மேல் பற்று கொண்டு அவன் நிறைய போலி ப்ரோபைல்கள் உருவாக்கி என் எல்லா பதிவுகளுக்கும் ஒட்டு போட்டு தமிழ் மணத்தின் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகளின் வரிசையின் உள்ளே நுழைத்து, எனக்கு மணி மகுடம் வாங்கி கொடுப்பதில் குறியாக இருக்கிறான்.

அந்த மகுடத்தில் மணி இருக்குமா? இருக்காதா?

தமிழ் தெரியாத என்னுடைய பிரெண்டு ஒருவன் தமிழ்மணம் (Tamilmanam) என்பதை எப்போதும் தமிழ்மானம் என்றே படித்து மானம் வாங்குவான். அவனை சாகடிக்கலாம் என்றிருக்கிறேன்.

1330 குறள் எழுதி வைத்துவிட்டு கடலுக்குள் போய் தனியாக நின்று தவம் செய்து கொண்டிருக்கும் திருவள்ளுவருக்கே தெரியாது எத்தனை பேர் அதை படித்து உத்தமனாய் மாறி இருக்கான் என்று. பத்து குறள் மனப்பாடம் பண்ணுவதற்கே நாக்கு தள்ளும். பனிரெண்டாம் வகுப்பு பப்ளிக் எக்சாமிலே மினி பிட் எடுத்துட்டு போய் தான் நான் பாஸ் ஆனேன்.

கலைஞர் எழுதிய திருக்குறள் உரையை படித்த பின் தான் எனக்கு எல்லா குறளின் பொருளும் புரிய துவங்கியது. அந்த உரையை (தலையணை உறையல்ல) எப்போதும் தலைமாட்டிலே வைத்து தான் தூங்குவது வழக்கம். அதை நான் காசு கொடுத்து வாங்கவில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து தான் சுட்டு வந்தேன்.

நான் வழக்கமாய் செவ்வாய்கிழமை காலை சாப்பிட்ட பின் காக்காய்க்கு சோறு வைத்துவிட்டு  சரியாய் 10:00 மணிக்கெல்லாம் பதிவு போட்டு விடுவேன். அவனும் அதை ஷார்ப்பாய் போட்டவுடன் படித்து விடுவான். அதுவரை உயிரை கையில் பிடித்து வைத்துக் கொண்டு தான் காத்திருப்பான்.

ஆனால் அன்று இரண்டு நிமிடம் தாமதம் ஆகி விட்டது. அதற்கே அவனுக்கு மூச்சு விட சிரமமாக போய் விட்டது.

நல்லவேளை இரண்டு நிமிட தாமதம் அவனை காப்பாற்றி விட்டது. அதனால் அவன் உயிரோடு இருக்கிறான். இன்னும் ரெண்டு நிமிஷம் தாமதித்து போஸ்ட் போட்டிருந்தால் கூட அவன் பிழைத்திருக்க வாய்ப்பு ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும் என டாக்டர் கண்ணாடியை கழட்டி கொண்டே சொன்னார்.

செக்ஸை கலந்து, படிக்கின்றவர்களை கவர்வது போல கதை எழுத விரும்புகிறவர்கள், நேட்டிவிட்டியுடன் எழுத வேண்டும். சும்மா ஒரிஜினாலிட்டி இல்லாமல் மார்பு, உறுப்பு என்று வெறும் வார்த்தைகளை நிரப்பி போரடித்து தூக்கம் வரவைக்க கூடாது.




ழுக்காய் இருந்த என்னுடைய உலகம் Surf Excel போட்டு துவைத்ததை போல புதிதாக மாறிவிட்டது.

"பிகர் ஏதாவது செட் ஆகிடுச்சா?" ன்னு கேட்கறீங்களா?

நோ.

வேலை நேரம் மாறி விட்டது. இதுவரை மதியம் இரண்டு மணிக்கு ஆபிஸ் சென்று கொண்டிருந்த நான், இப்போது காலை ஆறு மணிக்கெல்லாம் சென்று விடுகிறேன்.

எப்பவுமே லேட்டாக எந்திருக்கிறேன் என்று வழக்கமாய் திட்டும் என் அப்பா இனி என்னை திட்ட முடியாது.  "சூரியனே எனக்கு அப்புறம் தான் எந்திரிக்குது" 

ஆனால் அதிகாலை ஐந்து மணிக்கு எழுவது சிரமமாக தான் இருக்கிறது. அதிகாலையில் வந்து மார்பில் கோலம் போடும் அனுஷ்காவையும், கழுத்தை பின்னி கட்டியணைக்கும் மோனிக்கா பெலுசியையும்  வலுகட்டாயமாய் உதறி தள்ளிவிட்டு எழுந்து வரவேண்டியதாய் இருக்கிறது. 

ஒரு சந்தேகம்.

ஏன் இந்த நடிகைகள் எல்லாம் அதிகாலை ஆரம்பித்தவுடன் தான் வருகிறார்கள்?