Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Sep 29, 2011

A Copycat Movie - ஆபாயில் (அப்படியே சாப்பிடுங்க)

ம் வாழ்கையை நினைவு படுத்தும் திரைப்படங்கள் நம்முடன் எளிதாய் ஒன்றி விடுகின்றன. அந்த வகையில் என்னோடு ஒன்றிய திரைப் படங்கள்,

7G ரெயின்போ காலனி.
எம்(டன்)-மகன்
சந்தோஷ் சுப்ரமணியம்.

இந்த படங்களின் நாயகன் கதாப்பாத்திரத்திற்கும் எனக்கும் அதிகமாய் சம்பந்தம் இல்லையென்றாலும், அந்த அப்பா கதாப்பாத்திரங்களுக்கும் என் அப்பாவுக்கும் நிறைய சம்பந்தங்கள் உண்டு.

நாம் சின்ன வயதில் அப்பாவின் மேல் வைத்திருக்கும் பிம்பம், நாம் பெரியவர்கள் ஆகும் போது கொஞ்சம் கொஞ்சமாய் உடைந்து விடுகிறது. பையன்களுக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு, அப்பாவிற்கும் அவர்களுக்குமான தொலைவு அதிகமாகி விடுகிறது.

நாம் பெரிதாக பெரிதாக அவர்கள் சிறுவர்களாக ஆகி விடுகிறார்கள் (அல்லது) நமக்கு அப்படி தோன்றுகிறது.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் ஆரம்பத்தில் தன் அப்பாவை பற்றி ஹீரோ மற்றவர்களிடம் சொல்லும் காட்சிகளில், நிறைய பீப் சவுண்ட்கள் வரும். நான் பேசும் போதும் பீப் சவுண்டுகள் அதிகம் கேட்பதாய் நண்பர்கள் சொல்லுகிறார்கள்.


மிழ் சினிமாவின் இயக்குனர்கள் நிறைய பேர் டைட்டில் கார்டில் இப்படி பந்தாவுக்காக போடுவார்கள்.

A Manirathnam Film.
A Selvaragavan Film.
A Gaudav menan Moive.
A Venkat Prabu Movie

இப்படி நிறைய பேர்.

இவர்கள் அனைவரும் A Copycat Movie என்று பொதுவாய் போட்டு கொள்ளலாம்.

Copycat - என்ற ஒரு படம் பார்த்தேன். அருமையான திரில்லர். எதையை எதையோ காப்பி அடிப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் நாம். ஆனால் கொலை செய்வதை கூட ஒருத்தன் காப்பி அடிக்கிறான்.


அவன் ஒரு சீரியல் கில்லர். ஒவ்வொரு கொலையையும் வெவ்வேறு கொலைகாரர்கள் செய்ததை போல செய்கிறான்.

ஒவ்வொரு கொலையையையும், யாரைப் போல செய்தான் என சீரியல் கொலைகளை பற்றி ஆய்வு செய்யும் ஒரு பெண் டாக்டர் கண்டுபிடிக்கிறார். தமிழ் இயக்குனர்கள் எந்த படத்தை காப்பி அடித்தார்கள் என்று நம் பிளாகர்கள் சூப்பராய் கண்டுபிடிப்பது போல.

டோர்ரன்ட் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்.



தினமும் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களாக இருந்தாலோ அல்லது விடிய விடிய தூக்கம் கெட்டு ப்ளாக் எழுதி உலகத்துக்கு தொண்டு செய்து தியாக செம்மல்களாக வாழ்பவர்களாக இருந்தாலோ, நீங்கள் கம்ப்யுட்டரில் ஓரளவு கீபோர்டை பார்க்காமல் டைப் செய்து பழகி இருப்பீர்கள்.

ஆனால் என் நண்பன் ஆறு வருடம் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஆணி புடுங்கியும் அவனுக்கு கீபோர்டை பார்க்காமல் டைப் செய்ய வராது. அதிகாலை எழுந்து வாசலில் கோலம் போடும் பெண்ணை போல, குனிந்த தலை நிமிராமல் கீபோர்டை பார்த்து அனைத்தையும் டைப் செய்து முடித்த பின் தான், நிமிர்ந்து மானிட்டரை பார்ப்பான்.

ஒரு நாள் அவன் கீழே குனிந்து மும்முரமாய் டைப் செய்து கொண்டிருக்கும் போது, கம்ப்யூட்டர் மானிட்டரை மட்டும் கழட்டி கொண்டு போய்விடலாம் என்றிருக்கிறேன்.


அன்று இரவு நான் அனுஷ்காவை கட்டிபிடித்து முத்தமிட்டு முன்னேறும் போது, திடீரென்று நாய் ஒன்று பயங்கரமாய் கத்தி என் கனவை கலைத்தது. வெகு நாள் கழித்து அனுஷ்கா வந்திருந்தாள். நாயின் சத்தம் தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்தது.

மறுபடியும் கண்ணை மூடி அனுஷ்காவை வரவழைக்க முடியாமல் நொந்து கொண்டே எழுந்து சென்று பால்கனியில் இருந்து கீழே பார்த்தேன். கீழ் பிளாட்டின் உள்ள காம்பவுண்டுக்குள் நாய் ஒன்று வெளியே போக முடியாமல் தவித்து கொண்டிருந்தது.

காம்பவுண்ட் சுவரின் உயரம் அதிகமாய் இருந்ததால் அதனால் வெளியே தாண்ட முடியவில்லை. அதனால் அது பின்னே ரொம்ப தூரம் சென்று, வேகமாய் ஓடி வந்து ஒரு திட்டின் மீது கால் வைத்து தாண்ட முயற்சி செய்ததது. முடியவில்லை. மீண்டும் அதே மாதிரி திரும்ப திரும்ப ஓடி தாண்ட முயற்சி செய்து கொண்டே இருந்தது.

நான் கீழே சென்று பார்த்தேன். கேட் பூட்டி இருந்ததால் நான் ஏதும் செய்ய முடியாமல் திரும்ப வந்து படுத்து விட்டேன்.

கிட்ட தட்ட மனிதனை போலவே யோசித்து தாண்ட முயற்சி செய்து கொண்டிருந்ததை பார்க்கும் போது, அவற்றிற்கும் நாம் பேசுவது போல ஒரு மொழி இருக்கலாம் என்று தோன்றுகிறது. நமக்கு அவைகள் குறைப்பது ஒரு சத்தம் அவ்வளவே. அனால் நாய்களை யார் பெயர் சொல்லி கூப்பிட்டாலும் திரும்பி பார்க்கும். நம் மொழிகளை அவை உணர்ந்து கொள்கின்றனவா?

நாய்களின் வாழ்க்கை சிரமமானது. காலையில் சீக்கிரம் சுறுசுறுப்பாய் எழுந்து, நகர்வலம் சென்று விட்டு, நேரம் தவறாமல் நட்ட நடு ரோட்டில் காலைக் கடனை முடித்து விட்டு திரும்பி வீட்டுக்கு வரும். இரவெல்லாம் மனிதர்களுக்காக எச்சரிக்கையுடன் கண்விழித்து பாதுகாப்பாய் இருக்கிறது.

மார்க்கெட்டிங் வேலை செய்பவர்கள் "என்னடா இது நாய் பொழப்பு?" என்று அலுத்து கொள்வதை பார்க்கலாம்.

You bark harder and you got less/nothing by end of the day.

நாய்களை நாம் மதிப்பதே இல்லை. திட்டுவதற்கு மட்டுமே அதிகமாய் "நாய்" என்ற வார்த்தையை உபயோக படுத்துகிறோம்.

சீய் பொம்பளை பொறுக்கி நாயே!
திருட்டு நாயே!
ஓடுகாலி நாயே!
நன்றி கெட்ட நாயே!

பன்றிகளை விட நாய்களே அதிகம் திட்டு வாங்குகின்றன.

ஹாலிவுட்டில் நாய்களை வைத்து ஏகப்பட்ட படம் எடுத்து இருக்கிறார்கள். மனிதர்களை வைத்தே ஒழுங்காய் படம் எடுக்க தெரியாத, நம் மரியாதைக்குரிய தமிழ் சினிமா இயக்குனர்கள், எங்கே நாய்களை பற்றிய படம் எடுக்க போகிறார்கள்?

ஒரு படத்தில் நாய் குறைப்பதை (பேசுவதை) ஒரு voice converter மெஷின் போல ஒன்றை அதன் கழுத்தில் மாட்டி, அதன் மூலம் அது ஆங்கிலத்தில் மனிதர்களிடம் பேசுவது போன்று காட்டி இருப்பார்கள்.

அப்படி உண்மையாக ஒரு மெஷின் இருந்தால் நினைத்துப் பாருங்கள்.

தெரியாமல் அதன் வாலை மிதித்து விட்டால், "த்தா! பார்த்து போகமாட்ட?" என்று நம்மை அந்த நாய்கள் எல்லோர் முன்னிலையிலும் அசிங்க அசிங்கமாய் திட்டலாம்.

"அடுத்த ஜென்மத்தில் நாயாய் பொறந்து தெரு தெருவாய் அலைய போகிறாய்" என்று உங்களைப் பார்த்து யாரவது சாபம் இட்டாலும், சீனாவில் மட்டும் பிறக்காமல் இருக்க வேண்டும் என நீங்கள் கடவுளிடம் வேண்டி கொள்ளுங்கள்.

நம்மூரில் சொல் பேச்சு கேட்காத ஆடுகளையோ, எருமைகளையோ பார்த்து "இரு, இரு, உனையெல்லாம் கசாப்பு கடைக்கு விட்டாதான் சரி படுவ" என்று அதன் எஜமானர்கள் சொல்லுவதுண்டு. அது போல அந்த ஊரில் நாய்களைப் பார்த்து அவர்கள் இப்படி சொல்லுவார்கள்.

நம் வாழ்வில் பெரும்பாலான நேரங்கள், நாமும் பிகருக்கும், பணத்திற்கும், சாப்பாட்டிற்கும் நாயைவிட அதிகமாக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறோம்.


என்ன மனுஷ பொழப்புடா!

ஒரு ஜோக்:
-----------



மனைவி: இனி காரணம் இல்லாம குடிக்க மாட்டேன்னு சொன்னியே! இப்ப ஏன் குடிச்ச?
கணவன்: ராக்கெட் விட பாட்டில் தேவை பட்டுச்சு. அதான் குடிச்சேன்.

உங்கள் ஆபாயிலின் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.




Sep 20, 2011

ரயில் பயணங்களில் - ஆபாயில் (அப்படியே சாப்பிடுங்க)

நான் சென்னை வந்த சில காலங்களுக்கு சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வர, தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தையே பயன்படுத்தினேன்.

பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே அமையும் என் பேருந்து பயணங்கள் மிகவும் கொடுமையானது. ரூ 100 -க்குள்ளே தான் சாதாரண பஸ் டிக்கெட் விலை இருக்கும்.

பஸ்ஸில் போடப் படும் மொக்கை படங்களின் இம்சையை மீறி தூக்கம் வரும் போது, முன் சீட்டில் உள்ள கம்பி மீதோ அல்லது ஜன்னல் கம்பி மீதோ தலை வைத்து படுப்பேன். பஸ் குலுங்க குலுங்க கம்பியில் பட்டு அடுத்த நாள் காலையில் தொட்டு பார்க்கும் போது, என் தலை பஸ்சின் ஹாரனை போல வீங்கி காணப்படும். அந்த வீக்கம் குறைய மறுநாள் ஆகும்.




ரு முறை நண்பர்களோடு ரயிலில் ரிசர்வ் செய்து போன பிறகு, ரயில் பயணங்கள் அலாதியான சந்தோசத்தை எனக்கு தந்தன. பேருந்தை போல அதிகம் குலுங்காமல், தலை முதல் கால் வரை போர்த்தி கொண்டு படுத்து செல்வது சுகம்.

இது தவிர, அழகழகான பெண்கள் நமக்கு எதிரிலேயே படுத்து கொண்டு வருவதை பார்க்கின்ற சந்தர்ப்பம் ரயிலில் மட்டுமே கிடைக்க கூடியது. பெண்களின் உடையை போலவே, அவர்கள் போர்த்தும் போர்வையும் அழகான டிசைனில் கலர்புல்லாக இருக்கும். ஆனால் நம் (ஆண்களின்) போர்வை, நம் சட்டையின் டிசைனை போல வெகு சாதாரணமாக இருக்கும்.

முன்பு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நான், மாதத்திற்கு இரு முறை வீட்டிற்கு ரயிலில் புக் செய்து செல்வது, என் அம்மா அப்பாவிற்கு மட்டுமல்ல, பக்கத்துக்கு வீட்டு எல்.கே.ஜி. பையனுக்கும் புதிதாகவே தென்பட்டது.

வீட்டிற்கு செல்லும் அந்த வெள்ளிக்கிழமை இரவு, எனக்கு விடிந்த காலைப் பொழுதாகவே தோன்றும். ரயில் வந்து நின்று, வெளியே பெயர் வரிசை ஒட்டியவுடனே ஓடி சென்று நம் பெர்த்துக்கு அருகில் எத்தனை பெண்கள் பெயர் வருகிறது என்று பார்த்து விடுவேன்.

எந்த பெண்ணும் வராத நாட்களில், இந்த ஆண்கள் முகத்தை பார்ப்பதை வெறுத்து, குப்புறப் படுத்து தூங்கி விடுவேன். என் ராசிக்கு என் பெர்த் பக்கத்தில் ஒரு பெண்ணுக்கு மேல் வருவதே அரிது.

அரிது அரிது பெண் வருவதே அரிது 
சுமாரான பிகராய் இருத்தல் அதனினும் அரிது. 

அப்படியிருக்க ஒரு வெள்ளிகிழமை, பெயர் வரிசையை பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி. வரிசையாய் நாலு பெண்களின் பெயர்.

கிருத்திகா 
அர்ச்சனா 
கயல்விழி 
பிரியதர்ஷினி 

ஆஹா! என் கண்களுக்கு அந்த எழுத்துக்கள் தங்க நிறத்தில் தக தகவென மின்னியது போல இருந்தது. சந்தோஷத்தில் இதயத்தில் லேசாய் ஒரு வலி. நான் சென்று என் சீட்டில் உட்கார்ந்து காத்திருந்தேன் அவர்களின் வருகைக்காக.

"எப்படியோ இன்று ஒரு பெண்ணிடமாவது பேசிடலாம்" என்று மனசுக்குள் றெக்கை பட படத்தது. ரயில் கிளம்ப ஐந்து நிமிடம் தான் இருந்தது. ஒரு வித பரபரப்பு என்னுடன் ஒட்டி கொண்டது. கடைசியாய், ரயில் புறப்படும் சில நிமிடங்கள் முன்பு அவசர அவசரமாய் வந்து சேர்ந்தார்கள் அவர்கள்.

அவர்களை கண்டவுடன் என் கனவெல்லாம் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் போல தண்டவாளத்தை விட்டு எகிறி விழுந்தது.

வந்த அத்தனையும் ஐயர் வீட்டு கிழவிகள்.

அப்போது எனக்குள் அதிதீவிரமாய் சொல்லிக் கொண்டேன்.

"இனி பெயர் பார்க்கும் போது, வயதையும் சேர்த்து பார்க்க வேண்டும்".





டவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று நம்மில் நிறைய பேருக்கு ஒரு குழப்பம் இருக்கலாம். எனக்கு அதை அறிய விருப்பம் இல்லை. ஆனால் நானாய் விரும்பி கோவில் பக்கம் செல்வதில்லை.

போன வாரம், எனக்கு ஜாதகத்தில் சனிபெயர்ச்சி நடக்கிறதென்று என் அப்பா, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு கூட்டி சென்றார். ஆஞ்சநேயருக்கு வடமாலை (வடைமாலை) சாத்தி வழிபட்டால் நல்ல பரிகாரமாய் அமையும் என்பது மக்களின் நம்பிக்கை.

ஆஞ்சநேயர் சிலைக்கு வடையை கோர்த்து, நிறைய மாலைகளாய் செய்து போட்டிருந்தார்கள். புரட்டாசி மாதம் முதல் நாள் என்பதால் நல்ல கூட்டம் அலைமோதியது. நாங்களும் குடும்பத்தோடு கூட்டத்தை முட்டி உள்ளே சென்று, ஆஞ்சநேயரை வழிபட்டு விட்டு வெளியே வந்தோம்.

வெளியே எங்களைப் பார்த்து,

"சாமி", "நாராயணா" என்று கையேந்திய பிச்சைகாரர்களின் குரல்கள்.

அவர்கள் சிம்பாளிக்காக சொல்ல வருவது என்னவென்றால்,

"நீங்கள் தான் கடவுள். உங்கள் மனம் தான் கோவில்" 

இது நம்மில் நிறைய பேருக்கு புரிவதில்லை.

அலங்காரம், பூஜை எல்லாம் முடிந்தவுடன் அந்த வடைமாலையை பிரித்து, நமக்கே அந்த வடைகளை எல்லாம் கொடுத்து விடுகிறார்கள்.

கடவுள் உண்மையாக அந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பார்?

"வடை போச்சே!"

அந்த வடையை தொட்டால் பாறாங்கல்லை தொட்ட உணர்வு. பெவிகால் கலந்து சுட்டிருப்பார்கள் போல. ஒருவேளை நன்றாக மணமாய் சாப்பிடுகிற மாதிரி சுட்டு, மாலையாய் சாமிக்கு போட்டிருந்தால், பக்தர்களுக்கு எல்லாம் பக்தியுணர்வை விட பசியுணர்வே அதிகம் உண்டாகியிருக்கும்.

என் அப்பா என்னிடம் நூறு ரூபாய் கொடுத்து உண்டியலில் போட சொன்னார் . தேங்கா, பழம், வடையை போல, இதுவும் சாமிக்கு போகாது என்று தெரியும். அதனால் எனக்கு அந்த நூறு ரூபாயை உண்டியலுக்குள் போடுவதற்கு சுத்தமாய் மனம் வரவில்லை. என் அப்பா கூடவே இருந்ததால், போடாமல் இருக்கவும் முடியவில்லை. ரோட்டில் போட்டு விட்டு போவதை போன்ற ஒரு உணர்வுடனேயே உண்டியலில் போட்டேன்.

கோவிலின் உள்ளே கூட்டத்தில் சாமியை பார்ப்பதற்கு பயங்கர தள்ளு முள்ளு நடந்து கொண்டிருந்தது. அதில் ஒருவர் தன் குழந்தையை தோளில் தூக்கி வைத்து சாமியை காட்டி கொண்டிருக்க, பின்னால் இருந்து ஒருவர் 

"ஏய்! குழந்தையை கீழே இறக்கி விடுயா! நாங்கெல்லாம் எப்படி சாமிய பாக்கிறது?" 

என்று சண்டை போட்டு கொண்டிருந்தார். 

குழந்தையும் தெய்வமும் வேறு வேறோ?



Sep 15, 2011

Service Unavailable - ஆபாயில்



"Service Unavailable" இந்த மெசேஜ் நம்மில் நிறைய பேருக்கு பரிச்சயமாக இருக்கும். ரயில் டிக்கெட்டை, IRCTC வெப் சைட்டின் மூலம் புக் செய்ய பழகி இருக்கும் எந்த ஒரு தத்தா பாட்டியும், இந்த Error மெசேஜை அவர்கள் வாழ்கையில் பார்த்திராமல் சாக முடியாது.

சரி. ஏன் இந்த மெசேஜ் வருகின்றது? 

"120 கோடி மக்கள் தொகை உள்ள இந்திய திருநாட்டில் வாழும் மக்கள் எல்லாருடைய தேவையையும் பூர்த்தி செய்ய முடியாது" என்று நம்மூர் அரசியல்வாதிகள் சொல்வதை தான், IRCTC சைட்டும் நமக்கு எடுத்துரைக்கிறது.

நான் மாதம் ஒரு முறை ஊருக்கு செல்லும் போதும், பல் விலக்காமல் கண் துடைக்காமல், காலையில் 7 :55 -க்கு அவசர அவசரமாய் எழுந்து, டிக்கெட் Tatkal -லில் ரிசர்வ் செய்ய கணினி முன் உட்கார்ந்தால், என்னை போல ஊருக்கு செல்லும் கணினி துறை கண்மணிகளும், மற்ற ஏனையவர்களும் பல்துலக்கி காலை கடன் முடித்து எக்ஸாமுக்கு செல்வது போல, பயங்கர prepared -ஆக உட்கார்ந்து, IRCTC சைட்டில் Login ஆகி, Refresh பட்டனை அமுக்கி கொண்டு உள்ளார்கள்.

சரியாக எட்டு மணி ஆனதும், பயணம் செய்யும் விபரம் அவசர அவசரமாய் டைப் செய்து, Submit பட்டனை அமுக்கியதும், சர்வருக்கு சென்றடையும் லட்சக் கணக்கான HTTP request -களில், சீக்கிரம் வரும் Requests -களின் தேவைகள் மட்டுமே சர்வர்கள் பூர்த்தி செய்கின்றன. Slow நெட்வொர்க் கனெக்சனில் திருவாரூர் தேர் போல மெதுவாய் ஆடி அசைந்து செல்லும் HTTP requests -கள் அப்படியே வந்த வழியே திருப்பி அனுப்பப் படுகின்றன.


இது என்ன திருப்பதி லட்டா? வருகின்ற எல்லோருக்கும் கொடுப்பதற்கு.

பொறுத்தார் பூமி ஆளலாம். ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாது.

பொங்கல், தீபாவளி நாட்களில் இது இன்னும் பெரும் பிரச்சினை.

டிக்கெட் கிடைத்தால் தீபாவளி.
இல்லையென்றால் முதுகு வலி.

தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், நெடுஞ்சாலை குழியில், "சுறா" "ஏகன்" படங்களை பார்த்து கொண்டே சென்றால், முதுகு வலியோடு "தல" வழியும் சேர்ந்து கொல்லும்.

ஹை ஸ்பீட் நெட்வொர்க் கனெக்சன்களில் இந்த பிரச்சினை மிக குறைவு. கோயில்களில் அதிக காசு கொடுத்து சிறப்பு கட்டண வழியில் சென்று எளிதாய் கடவுள் தரிசனத்தை பெறுவது போலதான்.

அதனால், ஆன் சைட்டில் வேலை செய்யும் நம் நண்பர்களிடம் சொல்லி டிக்கெட் புக் செய்ய சொல்ல வேண்டும். அங்கெல்லாம் நெட் ஸ்பீட், அதி வேகம் தான். அதுவும் சரியான விலையிலே கிடைக்கும்.

அங்கெல்லாம் எப்போதே 3G -யை தாண்டி, 4G -க்கு சென்று விட்டார்கள். 5G -யில் research செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் கொஞ்ச வருடங்களில் வந்து விடும் என்கிறார்கள். ஆனால் இங்கு 3G -க்கே இன்னும் அடிதடி. அதிக விலையில்.

நம் நாட்டில் மொபைல் சர்வீஸ் நிறுவனங்களைப் போல, பிராட் பேண்ட் சர்வீஸ் நிறுவனங்களும் நம்மை வெகுவாய் ஏமாற்றி கொண்டு உள்ளன.




வார இறுதிகளில், ரயிலில் செல்லும் முக்கால்வாசி பேர்கள் இந்த ஐ.டி துறையினர்கள் தான். இவர்கள் விடும் சீன்கள் அளப்பற்றது. எங்கே பார்த்தாலும்,

"பிராஜெக்டில் போட்டுட்டாங்களா இல்லையா?",
"எவ்வளவு pay?"
"அந்த மேனேஜர் அப்படி பண்றார்."
"ஆன் சைட் கிடைச்சிடுச்சா? விசா வாங்கிட்டியா?"

இப்படி தொனந்தொனன்னு கண்டது பேசிகிட்டே வர்றாங்க. என்னாலேயே சகிக்க முடியல. இந்த ரயிலுக்கு கூட இனி "சேரன் எக்ஸ்பிரஸ்", "பாண்டியன் எக்ஸ்பிரஸ்" ங்கறதை மாற்றி, "ஜாவா எக்ஸ்பிரஸ்", "டாட் நெட் எக்ஸ்பிரஸ்" ன்னு வச்சிடுங்கப்பா!


ற்போது ரிலையன்ஸ்  3G -க்கு டிவியில் விளம்பரம் சில போட்டு கொண்டு இருக்கிறார்கள். ரயில் தண்டவாளத்தின் மேல் நின்றிருக்கும் வாகனத்தில் ஒருத்தன் கையிற்றால் கட்டி வைக்கப் பட்டிருப்பான். ரயிலும் தூரத்தில் வந்து கொண்டிருக்கும். பக்கத்தில் ரிலைன்ஸ் நெட் கனேக்சனுடன் ஒரு லேப்டாப் இருக்கும். கட்டப்பட்ட கையுடன், முடிச்சை எப்படி அவிழ்பதென்று, அவர் நெட்டில் ப்ரௌஸ் செய்து கண்டுபிடித்து ரயில் வந்து மோதுவதற்குள் தப்பிப்பாராம்.

என்ன ஒரு மூளை!! இந்த விளம்பரத்தை யோசித்தவனுக்கு. அவனை இதே மாதிரி தண்டவாளத்தில் கட்டிவச்சிட்டு, முடிஞ்சா தப்பிச்சுக்கோ அப்படின்னு சொல்லிட்டு போயிடனும்.

இதே டைப்பில் இன்னும் சில ரிலைன்ஸ் 3G விளம்பரங்கள் உள்ளன.

அந்த வீடியோவை பார்த்து வியப்படையுங்கள்.


  
பிசில் உட்கார்ந்து மிகவும் பயந்து பயந்து, பேஸ்புக் பார்க்க வேண்டி இருக்கா? கவலையே படாதிங்க.

இந்த மாதிரி கஷ்டப் பட்டு, பேஸ்புக் பார்ப்பவர்களின் நலன் கருதி, சில மாதங்களுக்கு முன்பே உங்களுக்காகவே உருவாக்கி, ஒரு வெப்சைட்டை வெளியீட்டு இருக்காங்க .

http://www.hardlywork.in/

வெப்சைட் பெயரே கலக்கலாக இருக்குல்ல. உள்ளே போகும் முன், ஒரு மெசேஜ் காண்பிக்கிறது. 

"Okay hang in there you little corporate warrior you"

இதை விட உங்களை யாராவது கலாய்க்க முடியுமா?

இந்த வசதி தற்போது ட்விட்டருக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.

என்ன, ஒரே ஒரு பிரச்சினை! நீங்கள் எல்லா அப்டேட்களையும், பார்க்க மட்டுமே முடியும். Reply பண்ணவோ, கமெண்ட் பண்ணவோ முடியாது.

கூடிய சீக்கிரம் கூகிள் பிளாகுக்கு இந்த வசதியை கொண்டு வந்து விட்டால் பரவாயில்லை. ஹீ! ஹீ!




ங்காத்தாவை எனக்கு நிஜமாய் பிடிக்கவில்லை. சும்மா வெட்டி பந்தாவுக்காக எல்லாம் சொல்லவில்லை. பிளாக்கிலும் மங்காத்தாவை இதுவரை யாரும் கடுமையாய் விமர்சித்து, நான் பார்க்கவில்லை.

எல்லோருக்கும் அஜீத் ரசிகர்களின் மேல், அவ்வளவு "பய" பக்தியா? எனக்கும்தான்.

படத்தை விட, படத்தில் அஜீத் கெட்டவனாய் நடித்தது பயங்கரமாய் பேசப் படுகிறது. என் ஆபிசில் அருகில் உட்கார்ந்திருக்கிற பெண் "கடைசியில் அட்லீஸ்ட் த்ரிஷாவுடன் சேர்ந்து சந்தோசமாய் வாழ்வது போல யாவது முடித்திருக்கலாம்." என்றார்.

நம் தமிழ் மக்கள் எல்லோரும் அவ்வளவு நல்லவர்களா?
நம்மை சுற்றி நல்லது மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறதா?

நடிகர்களை எல்லாம் தெய்வங்களாக நினைக்கும் நாட்டில், இதை விட வேறு என்ன எதிர் பார்க்க முடியும்? நம் மக்கள் உண்மையை ஏற்று கொள்ளவே மறுக்கிறார்கள். ஹாலிவுட்டை அரைத்து மசாலா போல, மொக்கையாய் பண்ணிய இதுக்கே இப்படி என்றால்? கஷ்டம்! தமிழ் சினிமாவின் எதிர்காலம்.

"மங்காத்தா, ஹாலிவுட்டுகே சவால் விடும் படம்". 
"வெங்கட் பிரபு ஒரு சினிமா மாமேதை" 

அப்படின்னு சும்மா ஹிட்ஸ் வர்றதுக்காக, என்னாலும் அட்டகாசமாய் ஒரு விமர்சனம் எழுத முடியும்.

அதிலும் இந்த வெங்கட் பிரபுவும், வெற்றி மாறனும், எதோ ரொம்ப நாளாய் கஷ்டப் பட்டு சாப்பிடாமல் சிலை செதுக்கியது போல், தாடி வளர்த்து கொண்டு விடும் சீன்கள் ஓவர். அடிக்கடி தாடியை வேற, தடவிகிட்டே பேசுறது அலம்பலின் உச்சக்கட்டம்.

நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது!!!


Jun 28, 2011

கறை நல்லது - ஆபாயில்



மீப காலத்தில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் முழு நிர்வாணத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். இது தமிழ் சினிமா உலகத்தரத்தை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளமே!

தன் வாழ்வில் ஒரு உலகப்படம் எடுத்து விட வேண்டும் என முக்கும் உலகநாயகன் இதை முயற்சி செய்யலாம். இது வரவேற்க கூடியது தான் என்றாலும், பெரிசுகளின் நிர்வாணங்களை பார்க்க சகிக்க வில்லை. குடும்பத்தோடு இதை பார்க்கும் ஒவ்வொருவருடைய மனநிலையும் எப்படி இருக்கும்? என எண்ணிப் பார்க்கிறேன்.

சில மாதங்கள் முன்பு விஜய் டிவியில் "கறை நல்லது" என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான குறும்பட போட்டியை நடத்தியது சர்ப் எக்சல் (Surf Excel) நிறுவனம். விஜய் டிவி (ஊழல்) கறையில் படுத்து புரளும் இந்திய அரசியல்வாதிகளுக்காக, இதே தலைப்பில் தேசிய அளவில் ஒரு போட்டியை நடத்தினால் மட்டுமே சரியானதாக இருக்கும். அதே சமயம் அவர்களது திறமைக்கும் சவாலாக இருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.


நீங்கள் ஆங்கில சீரியல் டிராமா "Prison Break" இன் ரசிகராய் இருந்தால், இதை படிங்க. சூப்பராய் கலாய்த்து இருக்காங்க.



நான் கொஞ்ச காலமாய் பிளாக்கில் எழுதி கொண்டிருக்கிறேன். ஷூவுக்குள் மாட்டிகொண்ட சிறு கல், நம் காலை குத்திக்கொண்டே இருப்பது போல, எதற்கும் உபயோகமாய் இதுவரை எழுதியதில்லை என்ற குற்ற உணர்வு என் மனதை காயப்படுத்திக் கொண்டிருக்கிறது. நானும் அவ்வபோது ஆபாயில், நமீதா விமர்சனம், கவிதை என்று எழுதி ஒப்பேத்தி வருகிறேன். 

ஆனால் இப்போதெல்லாம் கவிதை எழுதவே பயமாய் இருக்கிறது. இணையத்தில் இருக்கும் சிலர் கவிதை எழுதுவதற்கு இலக்கணம், விதிமுறைகள் எல்லாம் இருக்கிறது என்று சொல்லி பயமுறுத்துகிறார்கள். கவிதை எழுத கோனார் நோட்ஸ் எழுதி விற்றாலும் விற்பார்கள். கவிதை எழுதி அவர்களிடம் அனுப்பி, அனுமதி வாங்கித்தான் பப்ளிஷ் பண்ண வேண்டும் என்கிறார்கள். அப்படியில்லாமல் நீங்கலாக எதோ ஒன்று எழுதி வெளியிட்டால், அதற்கு சொற்குற்றம், பொருள் குற்றம், 2G குற்றம் என்று நிறைய குற்றங்கள் கண்டு பிடித்து சொல்வார்கள்.

ஆனால் ஒரு பிரபல பதிவர் நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் பயன்படக்கூடிய நல்ல விஷயங்கள் பற்றி எழுதுகிறார். அவர் சமுத்ரா. நான் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படும் பதிவர்களில் இவரும் ஒருவர். இவரை நான் இங்கு அறிமுகப் படுத்தவில்லை என்பதே உண்மை. ஆனால் அவர் என்னை அறிமுகப் படுத்தினார் அறிவியலுக்கு.

அறிவியலையும், ஆன்மிகத்தையும் கலந்து கட்டி இவர் எழுதும் "அணு, அண்டம், அறிவியல்" மூலம் நான் சின்ன வயதில் மனப்பாடம் செய்து படித்த விசயங்களை எளிதில் புரிய வைக்கிறார். கலைடாஸ்கோப் என்ற அருமையான தலைப்பில், சுவாரஸ்யமான நிறைய விசயங்களைப் பற்றி எழுதுகிறார். சங்கீதம், சங்க கால இலக்கியம் என பல விசயங்களில் இவரது புலமை என்னை புல்லரிக்க வைக்கிறது.

இவரது ஒரு பதிவில் சம்பந்தம் இல்லாத சில வார்த்தைகளை கொடுத்து, அதை ஒரு வாக்கியமாக மாற்றும் போட்டியை வைத்தார். அவர் கொடுத்த வார்த்தைகள்

யானை, ஜோதிகா, இன்ஸ்பெக்டர், கொசுவர்த்தி, கப்பல்.

இவைகளை நான் உபயோகித்து, நான் எழுதிய வாக்கியம்.

கப்பல் கண்ணழகி, 
யானை தொடையழகி, 
ஜோதிகாவை 
இன்ஸ்பெக்டர் அணைத்த அணைப்பில் 
கொசுவர்த்தி புகைந்தது
பொறாமை தீயில்.



ணையத்தில் அவ்வப்போது பதிவர்கள் அடித்து கொள்வதற்காகவே எதோ ஒரு விஷயம் கிடைத்து விடுகிறது. முன்பு லிவிங் டுகெதர். இப்போது சாரு சாட்டிங். இது 2G சர்ச்சையை விட பெரிதாய் உருவெடுக்கும் என வலையுலக வல்லுனர்கள் கணிப்பு தெரிவிக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் சர்ச்சை என்று புத்தகம் வெளியிட்டதை போல சாரு சாட்டிங் சர்ச்சை என்று இதை ஒரு புத்தகமாக கூட முன்னணி பதிப்பகம் வெளியிடலாம். வெளியில் மாட்டாதவரை நீங்களும் உத்தம புத்திரர்களே!. "த்தா! மாட்டிட்டானா?" என்று நம்முள் நிறைய பேர் கைத்தட்டி சந்தோசப் பட்டிருப்போம். இந்த பதிவிற்கு "சாரு சாட்டிங்" என்று தலைப்பிட்டு நானும் பப்ளிஷ் செய்து இருக்கலாம். ஆனால் இப்போதைக்கு நல்லவன் என்றே காட்டிக்கொள்ள விரும்புகிறேன். இவர்கள் அடித்து கொள்வதை படிக்க கண்கோடி வேண்டும். சாவுங்கடா!


என் ட்வீட்ஸ் (kathirnk):


1. துணிக்கடையில் எனக்கு பிடித்தமான ஒரு துணியை செலக்ட் செய்து கொண்டிருந்தேன். அப்போது பின்னாலிருந்து ஒரு குரல். "சார், இது கிட்ஸ் செக்சன்"

2. நீங்கள் ஒரு பிரபல டிவிட்டராக இருக்கும் போது, உங்கள் தேசிய மற்றும் உலக பாலோயர்சை திருப்திபடுத்த தமிழ், ஆங்கிலத்தில் டிவிட்டுவது அவசியமாகிறது

3. Twitter says "Your tweet was over 140 characters. You'll have to be more clever". What is the connection? Can anybody tell? 

ஒரு ஜோக்

ஒரு இன்டர்வியுவில் ஒரே காரணத்திற்க்காக, ஒரு பையன் ரிஜெக்ட்டும், ஒரு பொண்ணு செலக்ட்டும் ஆனார்கள்.

அந்த காரணம்: ரெண்டு பெரும் இன்டர்வியு எடுப்பவர் முன்னால், சட்டையின் முதல் பட்டனை திறந்து வச்சிருந்தாங்க.




May 24, 2011

20 Minutes to Heaven (ஆபாயில்)

எனக்கு வாழ்க்கைல பிடிக்காதது இரண்டு. பணமும், புகழும். நூறு பாலோவர்ஸ் கடந்து விட்டேன் என்று சொல்வது எனக்கு பெருமையாய் இல்லை. 

ஏனென்றால் வெட்டியாய் எழுதி பொழுதை கழிக்கிறேன் என்று மற்றவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதுதான். சச்சினை எனக்கு பிடிக்காது என்றாலும் சச்சினைப் போல, தொண்ணூறில் இருந்து நூறு பாலோவர்ஸ் வருவதற்குள் நிறைய காலம் ஆகி விட்டன. 



பிளாக் எழுதுவது மதுவை போல அதிக போதை தரக்கூடியது. அதிலும் பின்னூட்ட ஊறுகாய் தொடர்ந்து கிடைத்தால் நீங்கள் காலி. இட்லிவடை மாதிரி, பிரேக் நியூஸ்சை கூட தனி போஸ்டாய் போடா வேண்டி வரும். 

உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்களும் ஒரு பிளாக் எழுதுங்கள். ஆனால் பிளாக் எழுதி பெண்களை மடக்கி விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதிர்கள். இன்டர்நெட் கபேக்கு போறவங்கல்லாம் உங்க ப்ளாக் தான் படிப்பாங்க என்று தயவு செய்து தப்பு கணக்கு போட வேண்டாம்.

வெட்டியாய் வீட்டில் உட்கார்ந்து பிளாக் எழுதுவதை விட ஒரு பெண் பின்னால் வெட்டியாய் சுற்றலாம். ஆங்கிலோ இந்தியன் பொண்ணு பின்னால பன்னாடை மாதிரி சுத்திய பையனுக்கு எல்லாம் தேசிய விருது கொடுத்துட்டாங்க. ஆனால் ஆஸ்திரேலியா போய் தீவிரவாதியை மடக்கி பிடித்த கேப்டனுக்கு மாநில விருது கூட கிடைக்காதது அசிங்கம்.



பொண்ணுங்க கிடைக்கிறாங்களோ இல்லையோ, போஸ்ட்ல மேட்டர் எழுதறதுக்கு நம்ம பசங்க தான் மாட்றாங்க. இப்படி தான் நான் ஒவ்வொருத்தனையும் மிரட்டி கொண்டு உள்ளேன்.



திகாலை சரியாக மூன்று மணி இரண்டு நிமிடம் இருக்கலாம். என் அலைபேசி "அய்யய்யோ என் நெஞ்சு அலையுதடி" என்று அலறியது. இன்டர்நேஷனல் நம்பர். கனடாவில் இருந்து ஒரு பெண் வாசகர். தேர்தல் முடிந்து ரொம்ப நாள் ஆகுது. ஆனால் இன்னும் தேர்தலைப் பற்றி என்னோட கருத்தை ஏதும் ஏன் சொல்லவில்லை என்றும் மிகவும் வருத்தப்பட்டார். என் கருத்தை அறியாமல் அவர் உறங்க முடியவில்லை எனவும் கூறினார். காலையில் எழுந்து பல் துலக்கி விட்டு என் கருத்தை பதிவு செய்வதாக வாக்குறுதி கொடுத்தேன்.

மே 13-ம் தேதி அதிமுக கொளுத்திய வெடிச் சத்தம் என்னைப் போலவே பொது மக்கள் பலரையும், தீபாவளிக்கு மீதமான பட்டாசுகளை முழுதும் புத்தாண்டிற்கு வெடித்திருக்காமல் மே 13-ம் தேதி வரை வைத்திருந்திருக்கலாம் என எண்ண வைத்தது. ஜெயலலிதாவையே ரொம்ப நல்லவங்க அப்படின்னு சொல்ல வைத்தவர் தன்னலமற்ற பெருந்தலைவர் கலைஞர்.


கனிமொழி ஜெயிலுக்கு போய் ரொட்டி சாப்பிடறது மகிழ்ச்சியா இருந்தாலும், ரஜினி வீட்டுக்கு போய் சூப் குடிக்காதது தமிழ் குடிமக்களுக்கு ரொம்பவே கஷ்டமாய் இருக்கிறது. ஆனால் கலைஞருக்கு அதுவே தலைகீழாய் இருக்கலாம். 

விஜயகாந்த் மட்டும் இப்போது "தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு" என்ற பஞ்ச டயலாக்கை தள்ளி வைத்துவிட்டு, வடிவேலுவை மன்னித்து அவர் கூட ஒரு படம் நடித்தால் அடுத்த தேர்தலில் அவர் கட்சி இன்னும் அதிக தொகுதிகளில் வெற்றி பெரும். கொஞ்ச நஞ்சம் இருக்கிற திமுக ஓட்டும் விஜயகாந்துக்கு தான்.

தேர்தல் முடிவுக்கு பிறகு நம்ம டாக்டர் விஜய் ஒரு பேட்டி கொடுத்தார்.


"நான் சொன்னதுக்காக ஒட்டு போட்டு அதிமுகவை வெற்றி பெற வாய்த்த அத்தனை பொதுமக்களுக்கும் நன்றி"

இதனால யாருக்கு கேவலம்? மக்களுக்கா? இல்லை ஜெயலலிதாவுக்கா? இல்லை டமில் கலைஞருக்கா?

நல்லவேளை நான் அதிமுகவுக்கு ஒட்டு போடவில்லை.


அம்மா ஆட்சிக்கு பிறகு, தமிழ் நாட்டு ரவுடிகள் எல்லோரும் "திருட்டு ரயில்" பிடித்து ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்களாம். பேரரசு படங்களில் ரவுடிகளாய் நடித்தவர்களும் அவர்களுடன் சேர்ந்து ஓடியது தான் இங்கே பிரச்சினையே. தற்போது தன் படத்தில் வில்லனாய் நடிக்க ஆள் இல்லாமல் பேரரசு கோடம்பாக்கத்தில் அலைந்து வருகிறார். அதனால் வில்லன் கேரக்டரில் தானே நடிப்பதாய் தனக்கு "நெருக்கமான" நடிகைகளிடம் சொல்லி வருகிறாராம். அந்த படத்தில் அவரே ஹீரோவாய் நடிப்பதாயும் வதந்திகள் வலம் வருகின்றன.

அப்புறம் இன்னொரு ஆள் கூட தமிழ் நாட்டை விட்டு ஓடி டெல்லியில் டென்ட் அடித்து தங்கி வருகிறார். அவர்






ரு இளமையின் நீரூற்றை (Fountain of youth) தேடி போவதுதான் பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் நான்காவது பாகத்தின் கதை. அதில் நாயகி, சாகப் போகின்ற அவருடைய அப்பாவை (வில்லன்) காப்பாற்ற அதை தேடி போவார். அவர்களுக்கு இரண்டு வெள்ளி கிண்ணங்கள் கிடைக்கும். அதில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், அடுத்த கிண்ணத்தில் தண்ணீரோடு கடற்கன்னியின் கண்ணீரும் கலந்து இருக்க வேண்டும். இரண்டாவது கிண்ணத்தில் (கண்ணீர் உள்ளது)  இருப்பவற்றை குடிப்பவர்க்கு, முதல் கிண்ணத்தில் இருக்கும் (தண்ணீர் உள்ளது) குடிப்பவறது மீதி ஆயுளும் கிடைக்கும். படத்தின் இறுதியில் நாயகியும் அவருடைய அப்பாவும், இருவருமே சாகும் தருவாயில் இருப்பார்கள். அப்போது அவர்களில் இருவரில் ஒருவர் தான் இரண்டாவது கிண்ணத்தில் உள்ளதை குடித்து உயிரோடு இருக்க முடியும். கடைசியில் யார் தன் உயிரை விட்டு கொடுத்தார்கள் என்பது தான் கதை.

அது போல ஒரு சமயத்தில் கனிமொழியும் கருணாநிதியும் இருந்தால் என்ன செய்வார்கள். யார் விட்டு கொடுப்பார்கள்?

ஒரு க்ளு. தற்போது உள்ள நிலைமையில் ஒருவர் மட்டுமே தன் உயிரை தியாகம் செய்ய முன் வருவார்.

அவர் யார்?


ரு நாள் தொலைக்காட்சியில் "மதராசப்பட்டினம்" திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். கிளைமாக்ஸ் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. அதில் வயதான நாயகி, நாயகனின் கல்லறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார். அப்போது தன் பேத்தி வந்து அவரது தோளை தொட அப்படியே சரிந்து விழுவார். அவசர அவசரமாய் ஹாஸ்பிட்டல் எடுத்து செல்வார்கள். பரிசோதித்த டாக்டர் சொல்லுவார் "அவர் இறந்து 20 நிமிடம் ஆகிறது". உடனே அடுத்த காட்சியில் சொர்க்கத்தில் இருக்கும் நாயகனோடு நாயகி ஓடி சென்று கட்டி பிடிப்பார். 

இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது?

இன்னுமா பதில் தெரியாமல் கொட்ட கொட்ட முழித்து கொண்டு இருக்கிறீர்கள்?

சொர்க்கத்திற்கு செல்ல 20 நிமிடம் தான் ஆகும்.





ண்பர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்றால் இப்போதெல்லாம் பேச்சுலர் பார்ட்டி ஒன்றை கொடுத்தாக வேண்டும். அப்படிதான் கடந்த வாரம் என் நண்பன் பிரகாஷ் ஒரு ரெஸ்டாரென்ட்டில் டின்னர் பார்ட்டி வைத்தான். நாங்கள் பனிரெண்டு பேருக்கு மேல் இருந்தோம். பொதுவாக கல்லூரி தேர்வில் தெரியாத கேள்வியை கண்டும் காணாமல் பழைய காதலியை போல விட்டுவிடும் நம் மக்கள் மெனு கார்டில் தெரியாத அயிட்டங்கள் அனைத்தையும் ஆர்டர் செய்து சாப்பிட அளவிலா ஆர்வம் கொண்டுள்ளனர்.

பக்கத்துக்கு டேபிளில் இரு நவ யுவதிகள் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் கவனத்தை பெற ஒருவன் தட்டில் ஸ்பூன் வைத்து சத்தம் எழுப்பி கொண்டிருந்தான். இன்னொருவன் நாகரிகம் கருதி தந்தூரி சிக்கனை கூட சாப்டாக பிய்த்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.

சாப்பிட்டு முடித்து ஆறாயிரத்துக்கு மேல் பில் வந்தது. எங்கள் வயிறு நிறைந்தது.


"மன்மதன்" சொம்பு நடித்த வானம் படம் தவறுதலாய் பார்க்க நேர்ந்தது. ஹீரோயிச படங்களை விடுத்தது அவர் ஆஸ்கார் அவார்டுக்கு தகுதியான படங்களில் தற்போது தொடர்ந்து அவர் நடித்து வருவதாக மக்கள் ஆரவாரப் படுகிறார்கள். பன்றி சாக்கடை விட்டு வெளியே வந்து சாலையில் நடந்தாலும் பன்றிக்கு பெயர் மாறாது. படம், நிறைய சமுதாயப் பிரச்சினைகளை அலசுகிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கு நடக்கும் வெவ்வேறு பிரச்சனை, அதனால் ஏற்படும் விளைவுகளால் எப்படி பாதிக்கிறார்கள்?

மனிதனுக்கு மட்டுமே பிறந்தவுடனே பிரச்சனைகள் ஆரம்பித்து விடுகின்றன. வாழ்க்கை எவ்வளவு அசிங்கமானது என்பதை சொல்ல, அனுஷ்கா விபச்சாரி வேடத்தில் நடிப்பதை பார்க்கின்ற மனக்கஷ்டம் ஒன்றே போதுமானது. ஆனால் நம் நடிகர்கள் எப்படி மனநலம் குன்றிய வேடங்களில் நடித்து தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிறார்களோ, அது போல நடிகைகளும் விபச்சாரி வேடங்களில் உண்மையாக வாழ்ந்து காட்டுகிறார்கள்.





   என்ன வாழ்க்கைடா இது?


ரத்தச்சரித்திரம் போன்ற படங்களில் சூர்யா நடிக்கும் போது, அந்த கதையின் கேரக்டர் ஆனா தாதாவை நேரில் சந்தித்து அவரிடம் டிப்ஸ் கேட்டு அதன்படி தத்ரூபமாய் நடித்ததாகவும், படம் வெளிவந்த பிறகும் அந்த கேரக்டரில் வாழ்வதாகவும் உணர்ச்சி பொங்க பேட்டி கொடுப்பார்கள். அது போல இந்த படத்துக்கும் விபச்சாரிகளை சந்தித்து டிப்ஸ் வாங்கி இருப்பார்களோ? இதைப் பற்றி பேட்டியில் ஏன் யாரும் வாய் திறப்பதில்லை? நம் நாட்டில் தாதாவுக்கு இருக்கும் மரியாதை கூட விபச்சாரிக்கு இல்லை என்பது வருத்தமான விஷயம். தாதாவை விட விபச்சாரியாய் இருப்பது கேவலம். கொலை செய்வதை விட விபச்சாரம் செய்வது மிகப் பெரும் குற்றம்.


சாதி மதங்கள் அணிந்து ஏன் மக்கள் அவதிப் படுகிறார்கள்? சாதி, மதம் என்பது ஆடையைப் போல தான். அணிந்தால் வேறுபாடு தெரியும். அவிழ்த்து எறியும் போது தான் நிர்வாணத்தைப் போல அழகாய் இருக்கும்.

பொன்மொழி:

ரேப் செய்பவனை விட ரேப் செய்துவிட்டு கொலை செய்பவன் மிக கொடூரமானவன்.

எவ்வளவு சுயநலம்!!!



May 4, 2011

நாளை கண்டிப்பாக ஒரு முத்தம்




 
இந்த ஐ.பி.எல். போட்டிகளில் பத்து அணிகள் மற்றும் குறைந்த பட்சம் தினம் ஒரு போட்டி இருப்பது சற்றே பார்ப்பவர்களை சோர்வு அடைய செய்தாலும்,  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலன்ஜர் அணிகள் விளையாடும் போட்டிகள் மட்டும் வெகு சுவாரஸ்யமாக இருக்கின்றன. ஷேன் வார்னேவும், சித்தார்த் மல்லையாவும் தங்கள் அணிகள் வெற்றி பெற்றவுடன் தத்தம் காதலிகளுக்கு கொடுக்கும் ஆவேச முத்தம் தான் காரணம். இது தான் உண்மையான Post Match Presentation. அதனால் Post Match Presentation இல் சிறந்த முத்தம் கொடுப்பவர்களுக்கு, Kisser of the Match அவார்ட் ஒன்று கொடுப்பது சரியானதே. என்ன ஒரு கொடுமை இந்தியாவில்? பணக்கார சித்தார்த் மல்லையாவுக்கு கூட தன் காதலிக்கு பொது இடத்தில் முத்தம் கொடுக்க ஒரு காரணம் வேண்டி உள்ளது. அப்போ, ஏழை காதலர்கள் எம்மாத்திரம்? இங்கே நான் பொது இடம் என்று குறிப்பிடுவது உதட்டை அல்ல. என்னதான் இவர்களின் அணி வீரர்கள் ஒற்றுமையாய் விளையாடி வெற்றி பெற்றாலும், இவர்கள் இதழ்கள் மட்டும் அவ்வப்போது ஆவேசமாய் சண்டை போட்டு கொள்கின்றன.



நாளை நடைபெறும் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு நீங்கள் சென்றால், டிக்கெட் வாங்கிய காசுக்கு கண்டிப்பாக ஒரு முத்தம் பார்க்கலாம். இரு அணிகளும் Points Table இல் முறையே ஐந்து மற்றும் ஆறாவதாக இருக்கின்றன காரணத்தால் நாளை ஏதோ இரு உதடுகளுக்கு கடும் சண்டை நடை பெறும் என பலத்த எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.




Feb 18, 2011

வடை, பக்கோடா, போண்டா - மினி ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

வடை, பக்கோடா, போண்டா இந்த மூன்றிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு? படியுங்கள், விடை கடைசியில்.


ன்கூட தங்கி இருக்கும் வினோத் என்ற பிரெண்டுக்கும் எங்கள் அபார்ட்மெண்டு ஆண்டிகளுக்கும் "ரொம்ப நாளாக பழக்கம்" இருக்கு. எப்படி என்றால், இவன் தினமும் மெகா சீரியல் பார்க்கும் வழக்கம் கொண்டவன். கலைஞர் டிவி, ஜெயா டிவி என்ற பாகுபாடு எல்லாம் இவனுக்கு பார்க்க தெரியாது. மிகவும் அப்பாவியாய் எல்லா டிவி சீரியலையும் உட்கார்ந்து அமைதியாய் பார்த்து ரசிப்பான். அந்த ஆண்டிகள் ஏதோ ஒரு எபிசொட் பார்க்க தவறினால் இவனிடம் தான் வந்து அன்றைக்கு என்ன நடந்தது என்று கதை கேட்டு போவார்கள். அதனால் எங்கள் வீட்டிற்கு ஆண்டிகளின் படையெடுப்பு அடிக்கடி நடக்கும். "ரொம்ப நாளாக பழக்கம்" என்றதும் நீங்கள் அவனை பற்றி தப்பாக  நினைத்திருந்தால் உங்கள் தலையில் நீங்களே குட்டி கொள்ளவும்.

"ஏன்டா இவ்வளவு விரும்பி பார்க்கறியே பேசாமல் சீரியலில் நடிக்க போய்விட வேண்டியதுதான?" என்றேன் தற்செயலாய் அவனிடம். "இம், நான் ரெடி" என்றான். சீரியல் இயக்குனர்கள் அல்லது தயாரிப்பாளர்கள் யாராவது இதை படித்துக்கொண்டிருந்தால் தயவுசெய்து இவனுக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள். "கொழுக் மொழுக்" என்ற அங்கிள் கேரக்டருக்கு அம்சமாக பொருந்தி வருவான்.


  
நீங்கள் பேச்சுலராக இருந்து கூட படித்த அல்லது வேலை செய்கிற பசங்களோடு தங்கி இருந்தால் "ட்ரீட் (Treat) என்கிற வார்த்தையை அதிகமாக மந்திரம் போல உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். கடந்த வாரம் என் அக்கா பையனுக்கு என் மடியில் வைத்து மொட்டை போட்டு காது குத்தினார்கள்.

அதற்கு ட்ரீட் வைக்க சொல்லி நண்பர்கள் எனக்கு மொட்டை போட பார்த்தார்கள். "இப்போது பணம் இல்லை" என்று அடுத்த மாதம் கொடுப்பதாய் சொல்லி அவர்களுக்கு காது குத்தியுள்ளேன்.



விலைவாசி உயர்வு, ஊழல் நாடகம் இவற்றையெல்லாம் தாண்டி கவலைப்பட இப்போது இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. கிரிக்கெட் உலக கோப்பை, தேர்தல், இலவசம். 

பரம ஏழை சச்சினுக்காக இந்திய அணி உலக கோப்பையை வெல்லுமா? 
அவரின் பட வெளியீட்டு பிரச்சனையையே தீர்க்க முடியாமல் கஷ்டபட்ட காவலன் விஜய்,  போராட்டம் நடத்தி மீனவர்களின் பிரச்சனையை தீர்ப்பாரா?
வல்லரசு விஜயகாந்த் தேர்தலில் வென்று நல்லரசு அமைப்பாரா?

அன்று ஒரு நாள் பஸ்சில் சென்று கொண்டிருந்தேன். அப்போது வெளியே ஒரு சேரி போன்ற குடிசை பகுதியில், விஜயகாந்தின் தே.தி.மு.க. கட்சியின் பெரிய சைஸ் போஸ்டர் ஒன்று ஒரு குடிசை வீட்டின் மேற்கூரையாக வைக்கப் பட்டு அவர்களை கடும் குளிரிலிருந்தும் வெயில், மழையில் இருந்தும் காப்பாற்றி கொண்டிருந்தது.

விஜயகாந்தின் விருத்தகிரி படத்தில் அடிக்கடி ஒரு வசனம் வெவ்வேறு கதா பாத்திரங்களால் பேசப் படும். 

"அரசு அதிகாரியா இருக்கும் போதே பொது மக்களுக்கு இவ்வளவு நல்லது பண்றாரே, இவருக்கு கீழே அரசாங்கம் வந்துச்சுன்னா எவ்வளவு நல்லது பண்ணுவாரு." 

அது மாதிரி, விஜயகாந்தின் கட்சி போஸ்டரே ஏழைகளை காக்கும் பொது விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தார்ன்னா, என்னமா காப்பாத்துவாரு! 


சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பது எனக்கு இதுவரை ஓரளவுக்கு நல்ல அனுபவமாகவே அமைந்துள்ளது. ஆனால் கடந்த வாரம், சில வருடங்களாய் கவிதை என்ற பெயரில் ஏதோ கிறுக்கி வரும் என்னை மிகவும் வெட்கமடைய செய்தது, ரயிலில் கிறுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த கவிதை.


தட்டி போட்டா வடை.
அப்படியே போட்டா பக்கோடா.
உருட்டி போட்டா போண்டா.

எனக்கு ஏன் இப்படி ஒரு கவிதை எழுத தோணவில்லை.

போண்டா போச்சே!.

இந்த கவிதை படித்ததும் வடை, பக்கோடா, போண்டா இந்த மூன்றும் என் கண்முன்னே சிறிது நேரம் வந்து என் பசியை தூண்டியது. மூன்று வரிகளில் ஒரு முத்தான கவிதையை எழுதிய அந்த கவிஞர் ஏனோ கவிதைக்கு கீழே அவர் பெயரை எழுதியிருக்கவில்லை. அவருக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை "பாராட்டு" என்பதாக கூட இருக்கலாம்.

பொதுவாக கழிப்பிட சுவர்களில் உள்ளதை போன்றே ரயிலின் உட்புறத்திலும் Nithyaanantha Loves Ranjitha, Prabudeva Loves Nayan என்பது மாதிரியான கல்வெட்டு வாசகங்கள் தான் நிறைய காணப்படும். ஆனால் இதுபோன்று ஒரு தத்துவ கவிதை எழுதி இவர் அந்த இலக்கணத்தை உடைத்துவிட்டார். Hats Off  to him.

நெடுந்தூர ரயில் நிலையங்களை போல, மெட்ரோ ரயில் நிலையங்கள் அவ்வளவாக துர்நாற்றம் வீசுவதில்லை. கழிப்பிட வசதி இல்லை என்பதால். ஆனால் இன்னுமொரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ரயிலில் ஏறி அமர்ந்தவுடன் பார்த்தேன் ஒரு பெண்  ஐபாட்(ipad) -ல் பாட்டு கேட்டு கொண்டு தலையையும் லேசாக காலையும் ஆட்டிக்கொண்டிருந்தாள். சில பேர் எதையும் கேட்காமல் காலை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் நானும் காலை ஆட்ட தொடங்கி விட்டேன். காரணம். கொசுக்கடி.

ஓடும் ரயிலில் பறந்து பறந்து கடிக்கின்றது. பிகர்களுக்கு எதிரே கடிக்கின்ற கொசுவை அடிக்கவும் அசிங்கமாக உள்ளது. பத்தாம், பனிரெண்டாம் போது தேர்வு வரும் போது தமிழ் தினசரி செய்தித்தாள்களில் போடுவார்கள். "தேர்வுகளில் காப்பி அடிப்பவர்களை பிடிக்க தனி பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளது" என்று. இனிமேல் தயவு செய்து பறக்கும் படை என்ற வார்த்தையை அதற்கு உபயோகப் படுத்தாதிர்கள்.



Jan 16, 2011

போகி, பொங்கல், இளைஞன்,ஆடுகளம் - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)


துவரை நான் போகி பண்டிகையை கொண்டாடியதே இல்லை. ஆனால் இந்த வருடம் அதை நான் கொண்டாட தூண்டியது ரொம்ப நாளாக துவைக்காமல் பத்திரமாய் சேமிக்கப்பட்டு வைத்திருந்த என் நண்பனின் அழுக்கு துணிதான். அவன் பதினோராம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே அமீபாவும் பாக்டீரியாவும் தான் அவனுக்கு மிகவும் பிடித்தமான செல்ல பிராணிகள். பதினோராம் வகுப்பில் பயாலாஜி க்ரூப் எடுத்து படித்தது ஒரு காரணமாய் இருக்கலாம். நீங்களும் அடுத்த தீபாவளிக்கு அடுத்த வீட்டு கம்பி கொடியில் காயும் பழைய அல்லது நீங்கள் விரும்பினால் புதிய துணிமணிகளை எடுத்து கொளுத்தி பாருங்கள் தெரியும் மனதிற்கு எவ்வளவு மகிழ்ச்சி கிட்டும் என்று. எங்கள் வீட்டில் போகி கொண்டாடிவிட்டு அதிகாலை பைக்கில் சென்னையில் இருந்து சேலம் வரை நெடுந்தூர பயணம் மேற்கொண்டோம் நானும் என் சகோதரனும். வழியில் எல்லாம் மக்கள் போகி கொண்டாடி கொண்டிருந்தார்கள். நாங்களும் நடுநடுவில் இறங்கி குளிர்காய்ந்து விட்டு வந்தோம்.

பொங்கல் பண்டிகைக்கு முன்தினம் வெள்ளியன்று இசைஅருவி தொலைக்காட்சியில் "இளைஞன்" படத்தின் பாடல் காட்சிகளை எடுத்த விதம் நிகழ்ச்சியை பார்த்தவுடனே முடிவு பண்ணினேன். இந்த படத்தை "எப்பாடு" பட்டாவது பார்த்து விடவேண்டும் என்று. எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர் "வம்சம்" அல்லவா நாங்கள்.

அடுத்த நாள் பொங்கல் அன்று பொங்கல் சாப்பிட்டவுடன் நண்பர்களை கூட்டிக்கொண்டு இளைஞன் வெளியான திரையரங்கை (ஈரோடு V.S.P) சென்றடைந்தேன். வீதிவரை நெருக்கி கொண்டு நின்ற மக்கள் கூட்டத்தை விலக்கி கொண்டு சென்று உள்ளே பார்த்தால் ஹவுஸ்புல் போர்டு. சரி முன்வைத்த காலை பின்வைக்க கூடாது என்று அடுத்த காட்சிக்கு டிக்கெட் இருக்கா? என்று கவுண்டரில் கேட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு புல்லாம். இதை கேட்டவுடன் எனக்கு ஒரு புல் அடிக்கவேண்டும் என்ற அளவிற்கு மனவருத்தம் ஏற்பட்டது. கலைஞரின் கன்னித்தமிழை கேட்க இன்னும் எவ்வளவு நாள் பொறுப்பது? இந்த கொடுமையை தட்டி கேட்க கண்டிப்பாக கலை(லி)யுலக மன்னன் கலைஞரிடம் சென்று முறையிடுவேன். எனக்காக இல்லையெனினும் நமீதாவுக்கு ஆவது (ஐ மீன் நமீதா விமர்சனம்) அவர் உதவி செய்ய முன்வரலாம். ;-)
இந்த படத்திருக்கு நமீதாவை கலைஞர் ரெக்கமென்ட் செய்துள்ளார் என்று இச்செய்தி கூறுகிறது.

ன் பிக்சர்ஸ் இந்த வருட கணக்கை துவங்கி விட்டார்கள். ஆடுகளம் படத்தின் பாதியிலே எழுந்து வந்த நானும் என் நண்பனும் அப்படியே ஈரோடு இரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே நுழைந்தோம். நம்மூரில் எல்லா இரயில் நிலைய பிளாட்பாரங்கள் பெரும்பாலும் பொது கழிப்பிடத்தின் உள்ளே போகின்ற பிரமையையே ஏற்படுத்துகின்றன. நான் ஒவ்வொரு மாதமும் ஊருக்கு செல்கையில் பிளாட்பாரத்திற்கு போய் இரயில் வரும்/கிளம்பும் வரை உட்காந்திருப்பது மிகவும் சிரமமான விஷயம். பன்றிக்காய்ச்சல் முகமூடி இருந்தால் நலம். அல்லது தமிழ் சினிமா கிளைமாக்ஸ் காட்சிகளில் வருவதை போல, இரயில் புறப்பட்டு சென்று கொண்டிருக்கும். ஹீரோ தூரமாய் ஓடி வந்து கொண்டிருப்பார். ஏறுவாரா? மாட்டாரா? என்று நம் மனதை பதைபதைக்க வைத்து விட்டு  கடைசியாக இரயில் ஏறி ஹீரோயினை கட்டிபிடித்து சந்தோசப்படுத்தி நம்மையும் சந்தோச படுத்துவார். நாமும் இது போல இரயில் புறப்பட ஆரம்பித்தவுடன் ஓடி சென்று ஏறலாம்.

கொஞ்ச நேரம் இரயில் நிலையத்தை சுற்றிவிட்டு வெளியே வந்தால் வழியில் ஒரு ஆங்கிலோ-இந்தியன் மாதிரியான ஒரு பிகரை இரண்டு பன்னாடை பயலுகள் பின்னே நடந்து பாலோவ் செய்து கொண்டு போய் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் ஒல்லிபிச்சான் நடிகர் தனுஷை போன்ற சாயலில் உள்ளதாய் என் நண்பன் சொன்னான். மனசு கேட்கவில்லை. எதற்கு என்பதை உங்கள் யூகத்திற்க்கே விட்டு விடுகிறேன். சிறிது தூரம் தள்ளி ஒரு ட்ராபிக் போலீஸ் Wrong way இல் வந்த இருவரை மடக்கி பிடித்து பொங்கல் போனஸ் கேட்டு கொண்டிருந்தார்.

ஆடுகளம் படத்தில் வரும் ஹீரோவின் கோழியையும் வில்லனின் கோழியையும் இரண்டு அக்சார் பெயிண்டு டப்பாகளில் முக்க வைத்தாவது சண்டை போட வைத்திருக்கலாம். எந்த கோழி யாருடையதுன்னு ஹீரோ மற்றும் வில்லனோட மூஞ்சிய பார்த்துதான் கண்டுபிடிக்க முடிகிறது. ஆடுகளம், "டப்பா டான்ஸ் ஆடுது"

கொஞ்சநாளா நாமளும் எழுதிக்கிட்டு இருக்கோம். ஆனா நமக்கு யாரும் கடிதம் எழுத வில்லையே என்று ஏக்கம் அடைந்ததுண்டு. ஆனால் தற்போது தினமும் குறைந்தது பத்து கடிதங்கள் ஆவது வந்து விடுகிறது. வருவதை எல்லாம் படிப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. (பின்ன, நானே எழுதியதை நானே படிக்கறது ரொம்ப கஷ்டம் இல்லையா?)

பொதுவாக எனக்கு சுயவிளம்பரம் பிடிக்காது. இருந்தாலும் எனக்கு யாரும் கடிதம் எழுதுவதில்லை என்று நீங்கள் தவறாய் நினைத்து விடக்கூடாது அல்லவா? அதனால் ஒரே ஒரு கடிதம் உங்கள் பார்வைக்கு.

Mr Katz Sir,
உங்கள் பதிவுகளை தொன்று தொட்டே படித்து வருகிறேன். மிகவும் அருமையாய் எழுத்துகிறீர்கள். மனசு சரியில்லை என்றால் உங்கள் பதிவுகளை படித்து உற்சாகம் அடைவேன். சில சமயம் வயிறு சரியில்லை என்றால் கூட உங்கள் பதிவுகள் தான் படிப்பேன். 

பின்குறிப்பு: எனக்கு அடிக்கடி அதாவது தினமும் காலையில் வயிறு சரி இருக்காது. 

என்னுடைய பின்குறிப்பு (டிஸ்கி):
இது யாருடைய மனதையும் அல்லது வயிறையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.

இனி வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: கடிதம் எழுதி பாராட்டினாலோ இல்லை பின்னூட்டம் இட்டு பாராட்டினாலோ, மிகவும் சப்பையாக "அருமை", "சூப்பர்" என்று எழுதாதிர்கள். புதிது புதிதாக வார்த்தை பிரயோகம் செய்து உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள். உதவி தேவைப்பட்டால் வாலி வைரமுத்துவின் உதவியை நாடுங்கள். என்னை பாராட்ட வார்த்தைகளே இல்லையெனில் வெறும் ஸ்மைலீயை ( :-) ) மட்டும் போடுங்கள். புரிந்து கொள்வேன்.


பொங்கல் ட்வீட்ஸ்: 



பீர் சாப்பிடறவிங்க எல்லாம் பொங்க வைத்து குடிங்க. மற்றவர்கள் எல்லாம் பொங்கல் வைத்து சாப்பிடுங்க. # ஹாப்பி பொங்கல்.