Dec 17, 2010

மந்திர புன்னகை - நமீதா விமர்சனம்



இயக்குனர்கள், நடிகர்களாக மாறுவது தமிழ்நாட்டுல வெரி ஓல்ட் பேஷன். அதை பின்பற்றி திருபழனியப்பன், மன்னிக்கவும். 'கரு'பழனியப்பன் அவர்கள் நடித்த மந்திர புன்னகை படத்தின் போஸ்டர் பார்க்கும் போதெல்லாம் இந்த படத்தை பார்க்கும் எண்ணம் என்னை விட்டு ரொம்ப தூரம் போய் கொண்டு இருந்துச்சு. சரி விடுங்க. சாதாரண மக்கள் நம்மளுக்கே நாம ஒரு ஹீரோ அப்படிங்கற நினைப்பு அடிமனசுல ஆழமா இருக்கும். அப்படிங்கும்போது திரைத் துறைல இருக்கிற ஒரு இயக்குனர் அப்படி நினைக்கிறது தப்பு இல்ல. ஆனா மத்தவங்கள நினைக்க வைக்கருது தான் தப்பு. என்ன சொல்லவர்றேன்னு புரியலையா? (எனக்கும்தான்)

படம் ரிலீஸ் ஆகி நிறைய நாள் ஆனதுனால் படத்தோட கதை நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கும். கதை தெரியாதவர்கள் இங்கே கிளிக் செய்து படிக்கவும்.

படத்தோட ஒரிஜினல் ஹீரோ வசனம் தான். ஒவ்வொன்னும் ரசிக்க கூடியது. ஆனா அதுவே ஓவர் டோஸ் ஆக போயிடுச்சு. படத்துல வர்ற ஒவ்வொரு கேரக்டருமே "நான்  நீன்னு" போட்டி போட்டுக்கிட்டு வசனத்தை பங்கு போட்டு பேசி இருக்காங்க. தான் படத்திற்காக எழுதிய டயலாக் வேஸ்டாக போய்ட கூடாது அப்படிங்கறதுக்காக இயக்குனர் நிறைய இடங்களில் வசனங்களை கதாபத்திரங்களின் வாயில் வலிந்து திணித்து இருக்கிறார்.

படத்தோட ஹீரோ, நம்ம  கருபழனியப்பன் அவருக்கு தண்ணி அடித்து கொண்டு  குட்டியோட ஜாலியாக பொழுதுபோக்கற மாதிரி ஒரு கேரக்டர் என்பதிற்காக, படம் முழுவதும் தாடி வச்சுக்கிட்டு மூஞ்சு கழுவாம நம்ம விஜய டி. ராஜேந்தரின் தவ புதல்வன் மாதிரியே வந்து நமக்கு சரக்கு அடிக்காமலேயே வாந்தி வர்ற மாதிரி பீலிங் உண்டாக்குகிறார். டூயட் கூட தாடியோட தான் பாடுறார். இவருக்கும் ஹீரோயினுக்கும் வர்ற ரெண்டு பாட்டுக்கு பதில் கம்முன்னு ஹீரோயினுக்கு மட்டும் ரெண்டு சோலோ சாங் கொடுத்து இருக்கலாம். இவர் சொல்ற கருத்தெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா கிடைக்கறவங்களை எல்லாம் புடிச்சு கருத்து சொல்லி மிகவும் கஷ்டப் படுத்தறார். கருத்துபழனியப்பன்.

மனசில் பட்ட எதையுமே கூச்சபடாம சத்தம் போட்டு பேசுற கேரக்டர் என்பதாலும் படம் முழுவதும் கருவண்டு மாதிரி பயங்கரமா நம்ம காதுக்குள்ள வந்து கத்தி கத்தியே பேசி வலிக்க வைக்கிறார். இவருக்கு பாரதியார் கவிதை பிடிக்கும் என்பதற்காக, பேச்சு போட்டியில் சொல்கிற மாதிரி எல்லோரையும் சுத்தி உட்கார வச்சு மூச்சு விடாம கவிதைகளை ஒப்பிக்கிறார்.

இவர் நிறைய "ரேட்டு"களோடு என்ஜாய் பண்ணி இருக்கிற மாதிரி சொன்னாலும், படத்துல ஒரே ஒரு ரேட்டத்தான் (சன் மியூசிக் பிகரு) காமிக்கறாங்க. இன்னும் ரெண்டு மூணு ரேட்ட காமிச்சு இருக்கலாம். ஒருவேளை நடிக்க வைக்க ரேட்டு(சம்பளம்) பத்தலையோ என்னவோ?

விஜய் டீ.வி "நீயா? நானா?"வில் பத்து நிமிசத்துக்கு ஒரு தடவை விளம்பரம் போடுற மாதிரி இவரு குவார்ட்டர் அடிக்கறத அடிக்கடி காமிக்கிறாங்க. விஜய் டீ.வில போடுற சைனீஸ் டப்பிங் படத்தில் தண்ணி அடிக்கிற சீன் வரும் போது "மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு" அப்படின்னு கீழே ஓட விடுவாங்க. அதுமாதிரி இந்த படத்துக்கும்  போட்டங்கன்னா, படத்துக்கு வர்ற சப்டைட்டில் விட இது மிஞ்சிடும். குவார்ட்டர் பாட்டில் அல்லது பிஸ்லேரி பாட்டில் இப்படி படம் முழுவது ஏதோ ஒரு பாட்டில கைல வைச்சுகிட்டே சுத்துறாரு. முடியல!

இப்போ இவர் ஹீரோவாகவும் இனி தொடர்ந்து நடிப்பேன்னு ஊர் முழுதும் உரக்க மைக் போட்டு சொல்லிக்கிட்டு இருக்கார். நல்லதோ? கெட்டதோ? நடக்கட்டும்.


"பூனை ஒரு தடவை பாலை ருசி பார்த்துடுசுன்னா, அது மறுபடியும் மறுபடியும் பால் கலசங்களை உருட்ட ஆரம்பிச்சிடும்"



ஹீரோயின் மீனாட்சி, இவங்களுக்கு ஆப்டான ரோல். ஆனா இவங்க முகத்த பார்க்க முயற்சிக்கும் போதெல்லாம் இவங்களோட முன்னழகுதான் முன்னுக்கு வருது. இந்த படத்தின் மூலமாக இவருக்கு இன்னும் நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து சீக்கிரம் முன்னுக்கு  வரவேண்டும் என்று எம்பெருமான் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.

இசை எப்படின்னு, கரிக்டா தெரியல. டவுன்லோட் பண்ணுன பைல் சரியா இல்ல.

தனக்கு ஒரு ஓரளவு ஹிட் படத்தை கொடுத்த இயக்குநருக்காக, கெஸ்ட் ரோல்ல கொஞ்ச நேரமே வந்தாலும், நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் 'அனுபவிச்சு' நடிச்சு இருக்கார். இந்த மாதிரி கெஸ்ட் ரோலுக்கு சம்பளம் வாங்காமலே நடிக்கலாம். அதே மாதிரி சிநேகாவ கூட அந்த "ரேட்டு" ரோல்ல நடிக்க வச்சு இருக்கலாம். டைரக்டர் மிஸ் பண்ணிட்டார்.

சும்மா காமெடிக்காக படத்தை ஒட்டி எழுதி இருக்கேன். ஆனா படத்தை ஒரு தடவை பார்க்கலாம். கருபழனியப்பனோட கருந்தாடி பார்க்க பயமாக இருந்துச்சுன்னா நைட்ல பார்க்காமல், பகல்ல பாருங்க.

நமீதா டச்: மந்திர புன்னகை, மர்ம புன்னகை.


Dec 14, 2010

வளை'வில்' சிக்கிய விழிகள்




அம்பைப் போல
உன் கண்களை நேராய் 
பார்த்து தான் பேசுகிறேன்.
ஆனாலும் என் பார்வைகளை
அனாசயமாக
வில்லாய்
வளைத்து விடுகின்றன
உன் வளைவுகள்.




சிலையான விஜய் - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)


ம்ம தளபதிக்கு (அரசியல் தளபதி அல்ல சினிமா தளபதி) கேரளாவில சிலை வச்சு இருக்காங்களாம். இதற்கு பின்னாளால் கேரள அரசியல்வாதிகளின் பிண்ணனி இருக்க கூடும் என்று யூகிக்க படுகிறது. எப்படியும் நம்ம டாக்டரு தான் தமிழகத்தின் தலைஎழுத்தை மாற்றபோகும் அடுத்த முதலமைச்சராய் வருவார் என்பதை தெரிந்து கொண்டு, பின்னாளில் தமிழகதிற்கு தண்ணீர் திறந்து விடுதல் விவகாரத்திற்கு தளபதியால் எந்த விவகாரமும் வந்துவிட கூடாது என்று அவர்கள் யோசித்து வைத்த பிளான் ஆகவே இருக்க கூடும் இந்த சிலை மேட்டர்.

இல்லையெனில் பத்து கேரக்டரில் பயங்கரமாக மைதாமாவு அப்பி நடித்து, தான்தான் உலகமகா நடிகர் என்று ஊரையே நம்ப வைத்த நடிகரெல்லாம் இருக்க, எங்கே விக் வைத்து நடித்தால் தன் ஹேர் ஸ்டைல் களைந்து விடும் என்று 3 Idiots என்ற படத்தின் பேருக்கு லேட்டாக அர்த்தம் புரிந்து எஸ்கேப் ஆன நம்ம "குருவி" மண்டையருக்கு சிலை வைப்பார்களா? இருந்தாலும் கேரள மக்களே, நீங்க சிலை மட்டும் தான் வைக்க முடியும். ஆனால் நாங்கள் சிலை வைக்காமல் சாதாரண போஸ்டருக்கே பால் அபிசேகம் பண்ணி பால் குடம் எடுத்து அழகு குத்தி சாமியாக நினைத்து வழிபடுவோம் தினந்தோறும்.


னக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு ரொம்ப நாளா சோகமாக சுத்திகிட்டு இருக்கு. வீட்ல என்ன பிரச்சனைன்னு தெரியல. அதனால அந்த பொண்ண மாயாஜால் தியேட்டரில் நாலாவது நாளாக வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் நம்ம தமிழ்நாட்டின் அடுத்த டாக்டர் விஜயகாந்த் நடித்த விருத்தகிரி படத்துக்கு கூட்டிட்டு போய் "குஜால்" படுத்தலாம்ன்னு இருக்கேன். ஏதோ நம்மால முடிஞ்சது.


ந்த மொபைல் போன்ல இருக்கிற டிக்ஸ்னரில, ஆங்கில படத்துல அடிக்கடி யூஸ் பண்ற வார்த்தைகள் எதுவுமே இருக்க மாட்டேன்குது. முக்கியமாக அந்த நாலு எழுத்து வார்த்தை. அத டைப் பண்றதுக்குள்ள வர்ற டென்சன்ல, என்னோட வாயில இருந்து ஏகப்பட்ட செந்தமிழ் வார்த்தைகள் வெளி வந்துடுது (..த்தா). இந்தியால மட்டும் தான் இப்படியா? இல்லை வெளிநாட்டிலும் இந்த பிரச்சனை இருக்கா?


நான் எப்பவுமே ரெகுலரா டீ குடிக்கிற கடைக்கு பிரெண்ட்ஸ்களோடு ஒருநாள் போயிருந்தேன். நாலு டீ போட சொன்னோம். அந்த டீ மாஸ்டரு எல்லோருக்கும் டீ கொடுத்துட்டு எனக்கு மட்டும் பால் கொடுத்தாரு. நான் டீ தான் வேணும்ன்னு கேட்க, அவரு "நீ கொழந்த பையன் தான? பால் குடிக்க மாட்டியா?" அப்படின்னாரு. உடனே நான் டென்சன் ஆகி "நாங்கெல்லாம் பஸ்ட்(First) நைட்ல மட்டும் தான் பால் குடிப்போம்" ன்னு ஒரு பன்ச் விட, அதை கேட்டு அந்த மாஸ்டர் பஸ்ட் நைட்டுக்கு கதவ சாத்திட்டு உள்ள வரும்  பெண்  மாதிரி வெட்கப்பட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டார்.


ஒரு கசப்பான உண்மை மற்றும் தத்துவம்:
"மானே", "தேனே", "தேவதை" அப்படின்னு கவிதை எழுதி சுத்துறவனை விட காண்டம் பாக்கெட் வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு சுத்துறவனுக்கு தான் காதலும் காதலியும் ரொம்ப ஈசியா கிடைக்குது.

அதனால உங்க பாக்கெட்ல கவிதைய வச்சுக்காதிங்க. காண்டத்தை வைத்து கொள்ளுங்கள்.

காண்டம் வச்சு இருக்கறவனெல்லாம் ராவணனும் இல்லை. காண்டம் வச்சகாதவனேல்லாம் ராமனும் இல்லை. -- சுந்தர காண்டத்திலிருந்து (கம்பராமாயணம்)


ரி அடுத்த சமீபத்தில் வெளிவந்த டாப் 4 டப்பா படங்கள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

1. கனிமொழி - நாயகி ஒரு கவிஞராக இருந்தும் பாடல்கள் எதுவும் இல்லாமல்/எழுதாமல் அதிரடியான வசனங்கள் மூலமாக மட்டுமே பரபரப்பை ஏற்படுத்திய படம். குறிப்பாக படத்தில் நாயகிக்கும், நீரா ராடியா என்ற பெண்மணிக்கும் இடையேயான வசனங்கள் நாயகியின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் "எவ்வளோ நல்லவங்க" என்பதை ஒளிவுமறைவு இல்லாமல் காட்டுகிறது . ஒரிஜினாலிடி கருதி படத்தின் வசனங்கள் முழுவதும் ரியல் டைம் ரெகார்ட்டிங் செய்யப்பட்டுள்ளன. சின்னத்திரையில் வெளியான கனிமொழி ஒலிநாடா மிக பெரும் ஹிட் ஆன போதிலும் வெள்ளித்திரையில் வெளியான கனிமொழி திரைப்படம் மிக பெரும் பிளாப் ஆனது மிகப்பெரும் வருத்தமே.

2. உத்தமபுத்திரன் - ஆ. ராஜா அவர்களின்  ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் இந்தியாவின் அனைத்து மக்களையும் "கொள்ளை" கொண்ட படம். இந்த வருட சிறந்த நடிகருக்கான தேசிய விருது இவருக்குதான் என்று பார்லிமெண்டில் பரவலாக கருத்து நிலவுகிறது.

3. நந்தலாலா - தன் பிள்ளை மற்றும் பேரன்களுக்காக அன்னையை தேடி அடிக்கடி டெல்லி போகும் ஒரு கலைஞரின் (பாசத் தலைவனின்) பாசப் போராட்டம்.

4 மைனா - தன் குஞ்சுக்காக போராடும் ஒரு மைனாவின்(வனிதா விஜயகுமார்) வெளியே சொல்லமுடியாத கதை.


Dec 1, 2010

டாக்டரு விஜயகாந்து - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

ந்த வாரம் வெள்ளிகிழமை ஒரு மகத்தான விஷயம் நடக்க உள்ளது. மக்களே அதற்காக உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.  புரட்சி கலைஞர் விஜயகாந்த் இனி டாக்டர் விஜயகாந்த் ஆக உருவெடுக்கிறார்.  இதன் பிறகு நம்ம வல்லரசு மக்கள் நலனில் மேலும் அக்கறை கொல்வார். "டாக்டர்" என்பது இவருக்கு வழங்கப்படும் அடைமொழி பட்டமே ஒழிய பதவி அல்ல. அதனால், தலைவலி என்று தப்பி தவறி அவரிடம் செல்வோருக்கு, சாப்பிட்ட பின் பார்க்க சொல்லி தருமபுரி பட சி.டி இரண்டு வழங்கப்படும். இதனால் நீங்கள் தவறவும் வாய்ப்பு உண்டு.

ஏற்கனவே டாக்டர் விஜய்யின் SMS காமெடியின் மூலமாக கொழுத்த லாபம் சம்பாதித்து வரும் மொபைல் சர்வீஸ் கம்பனிகளுக்கு, "நம்பர் மாற்றாமலே மொபைல் போன் சர்வீஸ் கம்பனிகளை மாற்றலாம்" என்ற திட்டம் பேர் இடியாக விழுந்துள்ள நிலையில்,  டாக்டர் விஜயகாந்த் என்ற சக்தி இந்த கம்பனிகளுக்கு மிகப் பெரும் ஆறுதலாக அமையும். இனி வலையுலக வட்டாரத்திலும், "டாக்டரு விஜய்யும், டாக்டரு விஜயகாந்தும்" என்பது போன்ற தலைப்பில் ஏகப்பட்ட பதிவுகள் வெளிவரும்.










ந்திரனுக்கு அப்புறம் நிறைய படம் ரிலீஸ் ஆகிடுச்சு.

தீபாவளிக்கு வந்த மைனா, உயர உயர பறக்குதாம்.
வ குவார்ட்டர் கட்டிங், ரெண்டு ரவுண்டுக்கு அப்புறம் மட்டை ஆகிடுச்சாம்.
உத்தமபுத்திரன், குடும்பத்தோடு பார்த்து நெகிழ வேண்டிய படமாம். 
வல்லக்கோட்டை, இந்த படத்துக்கு யாருமே விமர்சனம் போடலைன்னு நம்ம ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் ரொம்பவே அமைதியான கிங் ஆக மாறிட்டாராம்.
போன வாரம் ரிலீஸ் ஆன நந்தலாலா, சூப்பரா லாலா பாடி எல்லோரையும் தூங்க வைக்குதாம்.
நகரம், இந்த படம் குஷ்பு மேடத்தின் சொந்த தயாரிப்பு என்பதால், சுந்தர்.சி பக்கத்துலையே உட்கார்ந்து வேலை வாங்கி இருக்கலாம். (சுந்தர்.சி க்கு ஹீரோயினோடு உள்ள அந்த லிப் கிஸ் சீனுக்கு, குஷ்பு பக்கத்துல இருந்து பார்த்தாங்களான்னு தெரியல.) படம்  சுமாராக உள்ளதாம்.
மகிழ்ச்சி, தமிழின தலைவர் சீமான் இந்த படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியே என்றாலும், அவர் இன்னமும் சிறையில் இருப்பது வருத்தமான விஷயம்.
கனிமொழி, படத்துக்கும் இந்த பேருக்கும் சம்பந்தமே இல்லைன்னு நிறைய பேரு சொல்றது உண்மையாக இருக்கும் பட்சத்தில், நீரா ராடியா என்றாவது படத்துக்கு பெயர் வைத்திருக்கலாம். கொஞ்ச நாள் ஓடியிருக்கும். கனிமொழி விமர்சனத்தை படித்து சிரிக்க இங்கே கிளிக்கவும்.

இவ்வளவு படம் ரிலீஸ் ஆகியிருக்க,
இன்னமும் இந்த சன் டீவில எந்திரன் பட டிரைலர் போட்டு கொன்னுகிட்டு இருக்கானுங்க.  நாராயணா! இந்த ரங்கூஸ்கி கொசு தொல்ல தாங்க முடியல!



ன்னோட பிரெண்டிடம் இருந்து ஒரு SMS வந்தது.


There are two great kings who are ruling the world till now. They are
---
---
Smo-King and
Drin-King

அதற்கு என்னுடைய பதில்.


" You have missed a great king who is ruling the world most from the beginning. He is 
---
---
F#%-King"



இந்த வார வீடியோ:




"எப்படி காக்கா இப்படியெல்லாம் மனுஷன் மாதிரி யோசிக்குது" அப்படின்னு நீங்க ரொம்ப யோசிக்காதிங்க. அது சிம்பிள். ஏன்னா, மனிதன்தான் இறந்து காக்கையாக பிறக்கிறான். எப்பூடி?

 



Nov 26, 2010

லிவிங் டுகெதர் - Revisited & பதிவர் விசாவுக்கு விசாரணை கமிஷன்

இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவோ அல்லது மொக்கைக்காகவோ எழுதப்பட்டது.



எந்திரன் படத்துக்கு அடுத்து அதிக வலையுலக வாசிகளால் விமர்சிக்கப் பட்ட படம்  Living Together. சினிமா வியாபாரம் செய்து வரும் பிரபல பதிவரும் இதற்கு கொஞ்சம் லேட்டாக விமர்சனம் எழுதி உள்ளார். போன ஆபாயிலில் லிவிங் டுகெதர் பத்தி நிறைய பிரபலங்களிடம் கருத்து கேட்டோம். கடைசி வரைக்கும் பதில் கிடைக்கவே இல்ல.  முக்கால்வாசி பதிவர்கள் இதை பற்றி எழுதி கருத்து கந்தசாமிகளாக வலையுலகில் வலம்வருகின்ற சூழ்நிலையில், இன்னும் இதை பற்றி எந்த ஒரு பதிவும் போடாமல் தப்பித்து வரும் பதிவர்கள் முறையாக கண்காணிக்க பட்டு பதிவுகள் போட சொல்லி கட்டாயப் படுத்தப்படுவார்கள். இது கீழ்க்கண்ட அனைவருக்கும் பொருந்தும்.

  • மூளையை கசக்கி கதை எழுதுகிறவர்கள்.
  • அமராவதி ஆற்றங்கரைகளிலோ இல்லை காவிரி ஆற்றங்கரைகளிலோ உட்கார்ந்து, இதயத்தை பிழிந்து  கவிதை எழுதுகிறவர்கள்.
  • கவலை படாமல் Right கிளிக் செய்து காப்பி பேஸ்ட் செய்பவர்கள்.
  • மொக்கையில் ஊறி திளைத்து படிப்பவர்களை பதற வைப்பவர்கள்.
  • சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூகத்தின் மீது ஆர்வம் இல்லாதவர்கள்.
  • இட்லிவடை சாப்பிட்டு விட்டு அரசியல் பேசுபவர்கள்.

ஆங்கிலத்தில் எழுதும் பதிவர்களுக்கு மட்டுமே வரிவிலக்கு உண்டு. மன்னிக்கவும், விதிவிலக்கு உண்டு.

அப்படி பதிவு போடாத பதிவர்களின் வலைப்பூ முகவரியை நீங்கள் சீட்டில் எழுதி பின்னூட்டத்தில் கட்டி விட்டு அப்படியே இந்த பதிவுக்கு ஓட்டு போட்டு விட்டு போய் விட்டால், கருத்து கந்தசாமியான நான் சேவல் கெட்டப்பில் வந்து மற்ற கந்தசாமிகளுக்கும் அறை'கூவல்' கொடுத்து, பொதுக்குழு கூட்டி விதிமுறையை மீறியவர்களின் வலைபதிவர்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்து, அவர்களது வலைப்பூவும் ஹேக் (Hack) செய்யப் படும்.

நீங்கள் எழுதும் பதிவுகள் ISI தர சான்றிதழ் பெறக்கூடிய தரத்தில் இருக்க தேவை இல்லை. அரைவேக்காடு தனமாக "ஆபாயில்" மாதிரி இருந்தாலே போதுமானது.



இட்லிய சாப்பிட்டுட்டு நாக்கு வறண்டு அடிக்கடி தண்ணிய குடிச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி, நாம கஷ்டப்பட்டு ஏதோ ஒரு கருத்தை சொல்லி பதிவை இன்ட்லில இணைச்சிட்டு நாக்கு வறண்டு போக ஓட்டு வருமா? கமெண்ட்டு வருமா? ன்னு கண் மூடாம பார்த்துகிட்டு இருக்கோம். ஆனா இப்படி எழுதுற நம்மள மாதிரியான ஆபாயில் பதிவர்களை எல்லாம் சாதாரணமா கிண்டல் பண்ணி, நம்ம பதிவை எல்லாம் கிழிச்சு கிளி ஜோசியம் சீட்டு மாதிரி போட்டுட்டார் விசா என்கிற பதிவர் அவரது டையிங் டுகெதர் என்ற பதிவின் மூலம். "நாளைய கலாசார மாற்றங்களை விட இன்றைய பசி கொடுமையானது." அப்படின்னு இவரு சொல்லறாரு. அதாவது வடையும், சுடுசோறும் தான் முக்கியம் அப்படிங்கறாரு. ம.தி.சுதா கவனிக்கவும் (இவருக்கு மட்டும் எப்படிதான் எங்க போனாலும் சுடுசோறு கிடைக்குதோ தெரியல?).


இதனால் இவரது வன்மையான போக்கை கண்டித்து, விசா அவர்களை எந்த நாட்டின் மூலையில் இருந்தாலும் உடனே விசா எடுத்து சென்னை கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடிக்கு வரவைத்து, மொட்டை வெயிலில் நிறுத்தி விசாரணை கமிஷன் வைத்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சூடான காரமான மிளகாய் பஜ்ஜியோடு அங்கேயே நமது அடுத்த வலை பதிவர்கள் சந்திப்பையும் வைத்து கொள்ளலாம்.  விசாவுக்கு மட்டும் தொட்டு கொள்ள சட்னி கிடையாது. கூடுதலாக, கரு பழனியப்பனின் "மந்திரப் புன்னகை" படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க முடியாமல் வருத்தப் பட்டு கொண்டிருப்பவர்களுக்காகவும், மீண்டும் அண்ணன் உண்மை தமிழனின் உதவியால் மந்திரப் புன்னகை மறுஒளிபரப்பு செய்யப்படும்.


இது வரைக்கும் லிவிங் டுகெதர்க்கு ஆதரவாகவும் எதிர்த்தும் நாம எல்லோரும் எழுதுன பதிவை எல்லாம் தொகுத்து "லிவிங் டுகெதர் ஆச்சாரமா? அ(வி)பச்சாரமா?" அப்படின்னு தனி புத்தகமாக கிழக்கு  பதிப்பகத்தில் வெளியிட்டால், அதை வாங்கி படித்து விட்டு, லிவிங் டுகெதரில் வாழ்பவர்கள் எல்லாம் திருந்தி கல்யாணம் செய்து சந்தோசமாக வாழ்வார்கள். கல்யாணம் ஆனவர்கள் எல்லாம் டைவர்ஸ் செய்துவிட்டு லிவிங் டுகெதராக மனதிற்கு பிடித்த மற்றவர்களோடு சந்தோசமாக வாழ்வார்கள். அப்படியே இதே தலைப்பில் விஜய் டி.வியில் கோபிநாத்துடன் நீயா? நானா? நிகழ்ச்சியை நடத்த சொல்லி, அதில் நாமெல்லாம் கலந்து கொண்டு கூதுகலமாய் பேசி கும்மி எடுக்கலாம் (யாரை?).

கீழே உள்ள காமெடியில் வருகின்ற வடிவேலுக்கும், லிவிங் டுகெதர்க்கும் எந்த ஒரு ரத்த சம்பந்தமும் இல்லை.




 
கடைசியாக ஒரு பன்ச்.


ஒரு சீரியசான மேட்டர் அப்படிங்கறது அழுக்கு துணி மாதிரி. அதை அலசி ஆராயலாம். ஆனா, துவைக்காம அலசி ஆராய கூடாது.

எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும்...